கமல்- கிரேசி கூட்டணியில் 'நண்பர்களும் 40 திருடர்களும்....'


பம்மல் கே. சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல்ராஜா படங்களுக்குப் பிறகு கமலும் கிரேசி மோகனும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

கமலுக்கு எப்போதுமே ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெரிய படத்தை முடித்தவுடன் ரிலாக்ஸ்டாக ஒரு காமெடி படத்தில் நடிப்பார். அந்தப் படம் முடிவதற்குள் அடுத்து தசாவதாரம் போன்ற பெரிய முயற்சிக்கான திரைக்கதையையும் எழுதி முடித்து விடுவார். ஆளவந்தானுக்கு பிறகு பம்மல் கே.சம்பந்தம், விருமாண்டிக்கு பிறகு மும்பை எக்ஸ்பிரஸ், தசாவதாரத்துக்கு பிறகு மன்மதன் அம்பு… என்று இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். இவரது இந்த சூப்பர் பார்முலாவை விக்ரம், சூர்யாவும் கூட சத்தமில்லாமல் பின்பற்றி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கரும் இதனை சமீபகாலமாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். முதல்வனுக்கு பின் பாய்ஸ்… எந்திரனுக்கு பிறகு நண்பன்… உதாரணங்கள்.

தற்போது கமல் விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பை பல தடைகளுக்கு பிறகு துவக்கிவிட்டார். பெரிய பட்ஜெட்டில் வெளிநாட்டு லொகேஷன்களில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு பிறகு அவர், கிரேசி மோகன் கதை, வசனத்தில் நண்பர்களும் 40 திருடர்களும் என்ற முழு நீள காமெடி படத்தில் நடிக்கப்போவதாக உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் கூறுகின்றன.

 

தமன்னாவுடன் கைகோர்க்கும் லாரன்ஸ்!


காஞ்சனாவின் கலக்கல் வெற்றி ராகவா லாரன்சை முன்னிலும் பிஸியான இயக்குநர் ஆக்கிவிட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பாய்ந்துவரும் அழைப்புகளால் உற்சாக மனிதராய் உலவுகிறார் அவர். அதேநேரம் தனது அடுத்த படம் தெலுங்கில்தான் என்பதில் தெளிவாக உள்ளார் லாரன்ஸ்.

பிரபாஸ் நடிப்பில் ‘ரிபெல்’ என்ற தெலுங்கு படத்தின் வேலைகளை ஜரூராகத் தொடங்கிவிட்டார் ராகவா. இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதில்தான் அவருக்கு இப்போது சிக்கல். காஞ்சனாவை போலவே இந்தப் படத்திற்கும் அனுஷ்காவைத்தான் அவர் முதலில் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில் காஞ்சனாவில் முதலில் அனுஷ்காதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் தொடக்கத்திலேயே அவர் கழண்டுகொண்டார். பின்புதான் அவரது இடத்தில் லக்ஷ்மிராயை நடிக்க வைத்தார் லாரன்ஸ்.

தற்போது காஞ்சனாவின் வெற்றி லக்ஷ்மியின் இத்தனை வருட திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையையே ஏற்படுத்தி இருக்கிறது. அனுஷ்கா மீதான அந்த வருத்தத்தில்தான் காஞ்சனாவின் போஸ்டர்களில் அருந்ததியை மிஞ்சிய வெற்றி என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தினார்போல லாரன்ஸ்!

தற்போது ரிபெல் படத்தில் தமன்னாவை நாயகியாக்க முடிவு செய்துள்ளாராம் ராகவா. அதற்கான பேச்சுவார்த்தைகளும் சுமூகமாகவே போய்க்கொண்டிருக்கிறதாம். தமன்னாவுக்கு தமிழில் மார்க்கெட் ஆட்டம் கண்டிருந்தாலும் தெலுங்கில் நன்றாகவே இருக்கிறது. கார்த்தியின் பையா, ஆவாரா என்ற பெயரில் அங்கே ஹிட் அடித்ததும், அல்லு அர்ஜுனுடன் நடித்த பத்ரிநாத் நன்றாகப் போனதும் தமன்னா மார்கெட்டை தெலுங்கில் தூக்கி நிறுத்தியிருக்கிறது. காஞ்சனா வெற்றியால் ராகவாவின் ரிபெலில் தமன்னாவும் நடிக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறாராம்!

 

கர்ப்பகாலத்தில் நடித்தால் பணத்தாசை பிடித்தவளா? ஐஸ் ஆவேசம்


கர்ப்ப காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்தால் பணத்தாசை பிடித்தவள் எனக் கூறுவதா என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கடுப்பாகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இருப்பினும் அவர் வழக்கம் போல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். தான் கர்ப்பமானதால் மதுர் பந்தர்கரின் ஹீரோயின் என்ற படத்தில் இருந்து விலகினார். படங்களில் தான் நடிக்கவில்லை விளம்பரப் படங்களிலாவது நடிக்கலாமே என்று நினைத்து நடித்து வருகிறார்.

அன்மையில் லக்ஸ் விளம்பரப் படத்திற்காக லண்டன் சென்று வந்தார். இதைப் பார்க்கும் பாலிவுட் மக்கள் பாரு ஐஸ்வர்யா ராயை, கர்ப்பமா இருக்கும்போது கூட ஓய்வு எடுக்காமல் விளம்பரப் படங்களில் நடிக்கிறார். இருந்தாலும் இவருக்கு இவ்வளவு பணத்தாசை கூடாது என்று கிசுகிசுக்கின்றனர்.

அது காத்து வழியாக ஐஸ்வர்யா காதுகளை எட்டியது. கர்ப்பமானா நடிக்கக் கூடாதா என்ன? அதுக்காகப் போய் என்னை பணத்தாசை பிடிச்சவன்னு பேசுறாங்களே என்று கடு்பபாகிவி்ட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கர்ப்பம் என்பது ஒன்று நோயன்று. சினிமாவில் நடிக்க ஆரோக்கியமாக இருந்ந்தால் போதும். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், அதனால் நடிக்கிறேன் என்றார்.

மதுர் பந்தர்கரிடம் ஹீரோயின் படத்திற்காக வாங்கிய அட்வான்சைக் கூட ஐஸ்வர்யா திருப்பி கொடு்ததுவிட்டார்.

ஐஸ்வர்யாவுக்கு நான் கொடுத்த காசோலையை திருப்பி கொடுத்துவிட்டார். அவர் கொடு்ககாவிட்டாலும் நான் கேட்டிருக்க மாட்டேன். இதில் இருந்தே அவருக்கு பணத்தாசை இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார் மதுர் பந்தர்கர்.
 

ஷகீலாவுக்கு மூன்று, புவனேஸ்வரிக்கு ஒன்று!


கவர்ச்சிப் பிரளயம் ஷகீலாவும், விபச்சார வழக்கில் சிக்கி கைதாகி பெரும் புயலைக் கிளப்பிய புவனேஸ்வரியும் இணைந்து ஒரு படத்தில் திறமை காட்டவுள்ளனர். இந்தப் படத்தில் பலான காட்சிகளும் நீக்கமற நிறைந்திருக்கிறதாம்.

ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகை தனது கவர்ச்சியின் பிடியில் கட்டுண்டு போக வைத்திருந்தவர் ஷகீலா. இவரது படம் ரிலீஸானால் மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு கிலி ஏற்படும். காரணம், இவரது படத்தின் வசூல் அவர்களின் வசூலை தாறுமாறாக சிதறடித்து விடும் என்பதால்.

இப்படியாக மலையாள திரையுலகை ஆட்டிப் படைத்து வந்த ஷகீலாவுக்கு ஒரு வழியாக அங்கிருந்து விஆர்எஸ் கொடுத்து அனுப்பி விட்டனர். மலையாளப் பட வாய்ப்புகள் மங்கிப் போனதாலும், தனது உடலுக்கு மவுசு குறைந்ததாலும் அங்கிருந்து தமிழுக்கு வந்தார் ஷகீலா.

கவர்ச்சி கலந்த காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சந்தானம் படங்களில் அதிகமாக இவரைக் காண முடிகிறது. இந்த நிலையில் இவரும் புவனேஸ்வரியும் இணைந்து பச்சை நிறமே ரோஜாக்கள் என்ற படத்தில் நடிக்கின்றனராம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விபச்சாரம் செய்ததாக கைதாகி சிறைக்குப் போய் பின்னர் திரும்பி வந்தவர் புவனேஸ்வரி. வந்த பின்னர் அவர் தெலுங்குக்கு ஷிப்ட் ஆகி அங்கு நடித்து வந்தார். தற்போது பச்சை நிறமே ரோஜாக்கள் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தின் பன்ச் லைனாக காதல் நெருப்பு பத்திக்கிச்சு என்று வைத்துள்ளனர்.

ஷகீலாவும், புவனேஸ்வரியும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் பலான காட்சிகளும் நிறையவே உள்ளதாம். இருப்பினும் ஷகீலாவுக்குத்தான் திறமை காட்ட நிறைய வாய்ப்பாம். புவனேஸ்வரிக்கும் திருப்திகரமான முறையில் வைத்துள்ளனராம்- அவரது ரசிகர்களின் திருப்தியை ஏமாற்றாமல். ஒரு காட்சியில் புவனேஸ்வரியை தாராளமாக காட்டியுள்ள இயக்குநர், ஷகீலாவுக்கு அதேபோல மூன்று காட்சிகளை வைத்துள்ளாராம்.

படத்தைப் பார்த்து சென்சார் போர்டு என்ன சொல்லப் போகிறதோ, என்ன செய்யப் போகிறதா, 'எப்படி' வெட்டப் போகிறதோ?
 

இந்திக்குப் போகிறது ஊழலுக்கு எதிரான 'ரமணா'!


விஜய்காந்த் நடித்த ரமணா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் ஆமீர் கான் நடிக்கிறார்.

2003ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தி்ல விஜயகாந்த் நடித்த படம் ரமணா. ஊழலை எதிர்த்து போராடுபவராய் நடித்திருப்பார் கேப்டன். தற்போது நிஜ வாழ்க்கையில் ஊழலை எதிர்த்த அன்னா மக்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார். இதையடு்தது ஆளாளுக்கு ஊழல் எதிர்ப்பு படங்கள் எடுப்பதில் தான் குறியாய் உள்ளனர்.

இந்நிலையில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ரமணா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான உரிமையை இந்தி கஜினி பட தயாரிப்பாளர் மான்டேனா ரூ. 20 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். அவர் கூறுகையில், என்க்கு இந்த படத்தின் தலைப்பு பிடித்துள்ளது, அதன் கருத்து பிடித்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தாலும் அது இன்றைய சூழலுக்கு ஏற்றதாக உள்ளது என்றார்.

இந்த படத்தி்ல ஹீரோவாக நடிப்பது வேறு யாருமில்லை அன்னாவை சந்தி்த்து நீங்க தான் உண்மையான ஹீரோ என்ற ஆமீர் கான் தான் என்று கூறப்படுகிறது.

ரமணா ஏற்கனவே தாகூர் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
 

மருத்துவமனையில் பணம் நினைவுக்கு வரவில்லை- ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்


மருத்துவமனையில் பணம் நினைவுக்கு வரவில்லை; உடலும் உயிரும் மட்டுமே நினைவுக்கு வந்தது - ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்

மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைப் பெற்று வந்தபோது எனக்கு பணமோ புகழோ நினைவுக்கு வரவில்லை. உயிரும் உடலும்தான் நினைவுக்கு வந்தது என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

கோவையில், நேற்று நடந்த 'ஓர் அன்னையின் கனவு' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, தனது சிறப்புரையில், "வெளிநாட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினிகந்த் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன், "உண்மையை சொல்லுங்கள், நீங்கள் மருத்துவமனையில் இருந்த 'அந்த நிமிடத்தில்' என்ன நினைத்தீர்கள்" என்று கேட்டேன்.

அதற்க்கு ரஜினி அவர்கள், "நான் ரஜினிகாந்த் என்பதையே மறந்துவிட்டேன். பணம், புகழ், உற்றார், உறவினர்கள் யாரும் நினைவுக்கு வரவில்லை. என் உடல், உயிர் என இரண்டு மட்டுமே நினைவுக்கு வந்தது.

பிறகுதான், நாம் யார் யாருக்கு என்ன செய்தோம், யார் யாருக்கு உதவி செய்யாமல் மறந்து விட்டோம் என்று எண்ணத்தோன்றியது," என்று கூறினார்.

அவர் யார் யாருக்கு என்று குறிப்பிட்டு கூறியது, நம்மை சுற்றியிருக்கும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களைத்தான். நம் உடம்பில் தெம்பிருக்கும் போதே நம்மால் முடிந்த உதவிகளையும், நன்மைகளையும் அவர்களுக்கு செய்து விடவேண்டும். ஒழுக்கம், நேர்மை, உழைப்பு மூன்று மட்டுமே மனித குல மேம்பாட்டுக்கு ஏற்ற மிகமுக்கியமான பண்புகள் ஆகும் என்பது ரஜினி அவர்கள் கூறிய உண்மை," என்றார் வைரமுத்து.

 

50 ஆண்டுகளுக்கு முன் ரஜினி படித்த பள்ளியை சீரமைக்கும் நண்பர்களும் ரசிகர்களும்!


பெங்களூர் கவிபுரத்தில் கங்காதீஸ்வரா சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ளது அந்த அரசு உதவி பெறும் மாதிரி தொடக்கப் பள்ளி. இங்குதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து படித்தார்.

அவரோடு இந்தப் பள்ளியில் படித்த பல நண்பர்கள் இன்று வெவ்வேறு துறைகளில் உள்ளனர். சிலர் ரஜினியை நீண்ட வருடங்களாக பார்க்கக் கூட இல்லை. சிலர் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் ரஜினியுடன் படித்த அந்த நாட்களின் நினைவுகளை பொக்கிஷமாய் சுமந்து வருபவர்கள்.

ரஜினியுடன் பணியாற்றி, அவரது சினிமா வாழ்க்கைக்கே முதல் சுழி போட்ட அவரது உயிர் நண்பர் ராஜ் பகதூர் தலைமையில் ரஜினியின் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல விஷயத்தை ஆரம்பித்துள்ளனர்.

ரஜினி படித்த இந்த கவிபுரம் அரசு உதவிபெறும் மாதிரி தொடக்கப் பள்ளியை அனைத்துவிதங்களிலும் முன் மாதிரிப் பள்ளியாக உயர்த்த இந்த நண்பர்களும் சில ரஜினி ரசிகர்களும் கரம் கோர்த்துள்ளனர்.

பள்ளிக் கட்டடங்களை சீரமைத்தல், கம்ப்யூட்டர் பற்றி பெரிதாக தெரியாத அந்தப் பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வாங்கித் தருதல் என பெரிய அளவில் இப்பள்ளியைப் புணரமைக்கிறார்கள்.

பள்ளி சீரமைப்பு பணிகளை நேற்று கவிபுரம் மாதிரிப் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

"வெவ்வேறு இடங்கள், துறைகளில் உள்ள ரஜினியின் நண்பர்களும் அவரது ரசிகர்களும் மேற்கொண்டுள்ள ஒரு அரிய முயற்சி இது. கண்ணுக்கு தெரியாமல், விளம்பரமில்லாமல் ரஜினி செய்யும் பல்வேறு நற்பணிகளை, உதவிகளைச் சிறப்பிக்கும் பொருட்டு, அவரது நண்பர்கள் இந்த முயற்சியை தொடங்கியுள்ளனர். இந்தப் பள்ளி பெங்களூரின் முதன்மைப் பள்ளியாகத் திகழும்," என்றார் ராஜ்பகதூர்.

இதில் ரஜினியின் பங்களிப்பு என்ன என்பது குறித்து ராஜ் பகதூரிடம் கேட்டபோது, அதுகுறித்து எதுவும் இப்போது சொல்வதற்கில்லை என்றார் அவர்.
 

நான் ஒரு முறை முடிவு செஞ்சா... - விஜய்


நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது, என்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

அந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், "மற்ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட, அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல குணம் கொண்டவர்கள்.

பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது ஏலே ஏலே என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து இருக்கும்.

இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பாவும் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம் கொடுத்தது மதுரை மக்கள்தான்,"
 

எஸ்ஜே சூர்யா ரசிகர் மன்ற தலைவர் மர்ம சாவு


கரூர்: கரூர் மாவட்ட எஸ்ஜே சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் அருண்குமார் மர்ம முறையில் ஆற்றில் இறந்து கிடந்தது அந்தப் பகுதுயில் பரபரப்பை ஏற்படுபத்தியுள்ளது.

கரூர் பண்டரிநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது29). இவர் நடிகர் - இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ரசிகர் மன்ற கரூர் மாவட்ட தலைவராக இருந்தார்.

இவர் கரூர் தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் நேற்று அந்த பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் கிடா விருந்து கொடுத்தார். இதில் அருண்குமார் மற்றும் அவருடன் பணிபுரியும் கார்த்தி, மதன், சசிகுமார், பிரசன்னா, லோகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிறகு ஆற்றில் அவர்கள் குளித்தனர். அப்போது தண்ணீரில் மூழ்கி அருண்குமார் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அருண்குமாரின் பிணத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்து அவரது வீட்டில் போட்டுவிட்டு மற்றவர்கள் சென்றுவிட்டனர்.

தனது மகன் ஆற்றில் மூழ்கி சாகவில்லை. அவனது சாவில் மர்மம் உள்ளது. இதில் தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். சீனிவாசனுக்கு தனது மகன் ரூ.1 லட்சம் கடன் கொடுத்திருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் அருண்குமார் எழுதிய ஒரு கடிதம் அவரது வீட்டில் இருந்து கண்டு எடுக்கப்பட்டது. கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகவரியிட்ட அந்த கடிதத்தில் அருண்குமார் பல திடுக்கிடும் தகவல்களை எழுதி உள்ளார். சீனிவாசனுக்கு தான் கடன் கொடுத்ததாகவும் தனக்கோ, தனது குடும்பத்துக்கோ, ஏதாவது நேர்ந்தால் அதற்கு சீனிவாசன்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தின் பின்புறம் தான் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்துள்ளேன் என்ற விவரத்தையும் எழுதி உள்ளார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கரூர் போலீசார் அங்கு சென்று அருண்குமார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன், மதன் ஆகியோர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி: எஸ்.ஏ. சந்திரசேகரன் அறிவிப்பு


மதுரை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அதற்காக அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது விஜய் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் போட்டியிடவில்லை.

இந்நிலையில், இது குறித்து நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். நேர்மையான ஆட்சி என்பதே மக்கள் இயக்கத்தின் நோக்கம்.

மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதை விஜய் ஏற்றுள்ளார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது.

எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அடிதட்டு மக்களும் சேவை செய்யவே மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என்றார்.
 

தூத்துக்குடியில் விஷாலின் 'வெடி!'


விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில், நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இயக்கிவரும் வெடி என்ற புதிய படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தூத்துக்குடி நகரில் நடந்து வருகிறது.

விஷால் - சமீரா ரெட்டி நடித்து வரும் இந்த படத்தின் திரைக்கதை தூத்துக்குடியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

வெடி படிப்பிடிப்பு நேற்று காலை தூத்துக்குடி ஏ.வி.எம். மருத்துவமனை முன்பு நடந்தது. படப்பிடிப்பைக் காண ஏராளமான மக்கள் திரண்டு வந்ததால், படப்பிடிப்பு நடப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து தூத்துக்குடி பீச் ரோட்டில் சாயாஷி சிண்டே, அனுமோகன், பாண்டு உள்ளிட்ட நடிகர்கள் நடித்த நகைச்சுவை காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து தூத்துக்குடி நகருக்குள்ளேயே வெடி படப்பிடிப்பு நடக்கும் என இயக்குநர் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
 

வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் விஜய்!


மதுரை: மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த வேலாயுதம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

விழாவில் நடிகர் விஜய் 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்ïட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான உதவிகளை வழங்கினார்.

பின்னர் நடிகர் விஜய் கூட்டத்தில் இருந்து ரசிகர்-ரசிகையை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி வேலாயுதம் பட ஆடியோ சிட்யை வெளியிட, அதனை தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வேலாயுதம் படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

சினிமாவாகும் ஹஸாரே உண்ணாவிரத போராட்டம்


வெறும் வாயை மெல்லுவதிலேயே கில்லாடிகளான தமிழ் சினிமாக்காரர்கள், அவலும் பொர்ியும் கிடைத்தால் சும்மா இருப்பார்களா?

நல்ல பரபரப்பான கதை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு அன்னா ஹஸாரே சூழ்ச்சிகள், திருப்பங்கள், சதிகள் நிறைந்த ஒரு நல்ல கதையைக் கொடுத்துவிட்டார். அதை வைத்து படம் காட்டத் தயாராகிவிட்டார்கள்.

பிரபல மராத்தி இயக்குநர்கள் சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் ஆகியோர் ஹஸாரேயின் போராட்டத்தை மராத்தி சினிமாவாக தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு 'அந்தோலன் ஆக் தாஹா திவாஸ்' (பத்து நாள் போராட்டம்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் கூறும் போது, "நாடு கண்ட, அரசியல் சார்பற்ற முதலாவது போராட்டம் இது. லஞ்ச ஊழலுக்கு எதிராக பல போராட்டங்களைச் சந்திக்கிற ஒரு மத்தியதர குடும்பத்தினை சுற்றி இந்தப் படம் செல்கிறது. ஆத்ம பரிசோதனையையும், தனி மனித வாழ்வின் ஒழுக்கத்தினையும் இந்தப் படம் மையப்படுத்திக்காட்டும்'' என்றனர்.