சரத்குமார் வேணும்னே விடியலை இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் புகார்

சென்னை: நடிகர் சரத்குமார் வேண்டுமென்றே விடியல் படத்தை இழுத்தடிப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சரத்குமார் - சினேகா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய படம் விடியல். இதுவும் சரித்திர கால படம்தான். கேஎஸ் செல்வராஜ் இயக்கத்தில் அவ்வப்போது தொடர்பதும், பாதியில் நிற்பதுமாக கிடப்பில் உள்ளது இந்தப் படம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் குதிரையிலிருந்து விழுந்து இடுப்பெலும் உடைந்து சிகிச்சைப் பெற்றார் சரத்குமார். அதன் பிறகு படம் குறித்த தகவலேதுமில்லை.

சரத்குமார் வேணும்னே விடியலை இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் புகார்  

இந்த நிலையில் படத்தின் நாயகி சினேகாவுக்கு திருமணமாகிவிட்டது. சரத்குமார் வேறு படங்களைத் தயாரிப்பது, மலையாளத்தில் நடிப்பது, அரசியல் என பிஸியாகிவிட்டார்.

இப்போது படம் ஆரம்பித்து நான்காண்டுகள் ஆகியும் முடியாத கடுப்பில் சரத்குமார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் தயாரிப்பாளர் சுந்தரராஜன்.

அதில், ரூ நாலேகால் கோடிக்கு விடியல் படத்தைத் தயாரித்துத் தருவதாக சரத் கூறியதால், முதல் கட்டமாக ரூ 91 லட்சம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்தோம். ஆனால் எங்கள் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, தன் சொந்தப் படமான சென்னையில் ஒரு நாளை வெளியிட்டுள்ளார்.

எனவே அவரிடம் நாங்கள் கொடுத்த பணத்தை வட்டியும் முதலுமாகத் திருப்பித் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

கவிஞர் வாலி எழுதிய கடைசிப்பாட்டு என்ன தெரியுமா...?

கவிஞர் வாலி எழுதிய கடைசிப்பாட்டு என்ன தெரியுமா...?

சென்னை: சமீபத்தில் மறைந்த கவிஞர் வாலி எழுதிய கடைசித் தமிழ் திரைப்படப் பாடல் வசந்த பாலனின் ‘காவியத்தலைவன்'க்குத் தான்.

கிட்டத்தட்ட பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதிய கவிஞர் வாலி சென்ற வாரம் காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர், வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்கான பாடல்களை இயற்றும் பணியில் பிசியாக இருந்தார் வாலி.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது கூட, விரைவில் குணமாகி காவியத்தலைவன் படப்பாடல்களை விரைவில் முடித்துத் தருகிறேன் என உறுதி அளித்தாராம் வாலி.

ஆனால், காலம் அவரை அதற்குள் அழைத்துக் கொண்டான். ஆனால், உடல் நலம் குன்றுவதற்கு முன்னரே, காவியத்தலைவனுக்காக ‘கோடாலி முடிச்சு போட்டு...' என ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார் வாலி. இது ஒரு காதல் பாடலாம்.

இதன் மூலம், காவியத்தலைவன் படம் திரைக்கு வந்து வெற்றி பெறுகிறதோ இல்லையோ, வாலி கடைசியாக பாடல் எழுதிய படம் என்ற சிறப்பை இப்போதே பெற்றுவிட்டது காவியத்தலைவன்.

மேலும், ஒரு வந்தனப் பாடலையும் காவியத்தலைவனுக்காக வாலி எழுதிக் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார் வசந்தபாலன்.

 

சரத்குமார் வேணும்னே விடியலை இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் புகார்

சென்னை: நடிகர் சரத்குமார் வேண்டுமென்றே விடியல் படத்தை இழுத்தடிப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சரத்குமார் - சினேகா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய படம் விடியல். இதுவும் சரித்திர கால படம்தான். கேஎஸ் செல்வராஜ் இயக்கத்தில் அவ்வப்போது தொடர்பதும், பாதியில் நிற்பதுமாக கிடப்பில் உள்ளது இந்தப் படம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் குதிரையிலிருந்து விழுந்து இடுப்பெலும் உடைந்து சிகிச்சைப் பெற்றார் சரத்குமார். அதன் பிறகு படம் குறித்த தகவலேதுமில்லை.

சரத்குமார் வேணும்னே விடியலை இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் புகார்  

இந்த நிலையில் படத்தின் நாயகி சினேகாவுக்கு திருமணமாகிவிட்டது. சரத்குமார் வேறு படங்களைத் தயாரிப்பது, மலையாளத்தில் நடிப்பது, அரசியல் என பிஸியாகிவிட்டார்.

இப்போது படம் ஆரம்பித்து நான்காண்டுகள் ஆகியும் முடியாத கடுப்பில் சரத்குமார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் தயாரிப்பாளர் சுந்தரராஜன்.

அதில், ரூ நாலேகால் கோடிக்கு விடியல் படத்தைத் தயாரித்துத் தருவதாக சரத் கூறியதால், முதல் கட்டமாக ரூ 91 லட்சம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்தோம். ஆனால் எங்கள் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, தன் சொந்தப் படமான சென்னையில் ஒரு நாளை வெளியிட்டுள்ளார்.

எனவே அவரிடம் நாங்கள் கொடுத்த பணத்தை வட்டியும் முதலுமாகத் திருப்பித் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

வேட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி!- கவிஞர் வாலிக்கு பா விஜய் கவிதாஞ்சலி

எஞ்ஞான்றும் கண்டதில்லை
உன்போல்
எவர் குளிரிவிப்பார்
செழுந்தமிழால் எம்
செவியை?

ஜூலை 18
‘அடக்கம்' இன்றுதான்
அடக்கம் ஆனது!
‘இயக்கம்' இன்றுதான்
இயக்கம் நின்றது!

வேட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி!- கவிஞர் வாலிக்கு பா விஜய் கவிதாஞ்சலி

சிகரம் போலுயர்ந்தும்-நாங்கள்
கைத்தொடும் தூரமிறங்கிய
அடிவாரமே

அவதார காவியத்தின்
அவதாரமே
நுண்மான் நுழைப்புலம்
நுகர்த்த சீர்நீ!

தமிழ்ப்பால்
தடையறச் சுரந்த
மார்நீ!

அவணி நெடுக-எழுத்தால்
அடைமழை பெய்வித்த
கார்நீ!

ஒருவரல்ல அய்யன்மீர்-நீர்
ஒருவன் எனும் ஒருமைக்குள்
ஆயிரம் புலவராய் வாழ்ந்த ஊர்நீ!

அமிர்தம் மட்டுமல்ல
வெய்யிலில் கருத்த உழைப்பாளியின்
நாவறட்சிக்கு ஈந்த நற்றமிழ்
மோர்நீ!

அனிச்சம் போல் மடல்விடும்
அடுத்த தலைமுறை கவிஞர்களின்
வேர்நீ!

யார் தெரியுமா
கவிஞர்களின் தலைவாநீ!

புடவைக் கட்டியது
போதுமென்று
வேட்டி கட்டி வாழ்ந்த
கலைவாணி!

"நேற்றிரவு
சுவாசம்-மிக மோசம்"
இது நீ மரணப் படுக்கையில்
யாத்த கடைசி சாசனம்!

அது எப்படி அய்யா
ஆவி தீரும் அந்தகாரத்திலும்
எதுகையும் மோனையும் உன்னுள்
ஆகிக்கொண்டிருக்கிறது பாசனம்?

காலப் பேழைக்குள்
கடு மருந்து பூச்சுப் பூசி
உன் பூதவுடலையும் வைத்திருக்கலாம்
அழுகாது!

வைத்திருந்தால்-உன்
விழி முடங்கி கிடந்திருக்கும்
விரல் மடங்கி கிடந்திருக்குமா
எழுதாது?

ஆன்மீகம் உன் அரண்!
ஹரனைச் சேவித்த வரனே
உன்னுள் எத்தனை
அழகிய முரண்? அழகிய முரண்?

வைஷ்ணவத் திலகம்-உன்
சிந்தைச் சிகையைச் சுற்றி
சிலிர்ப்பிப் பார்த்தால்-அதில்
பெரியாரின் கலகம்

எம்.ஜி.ஆரின் பாட்டுப் படைக்கு
நீதான் நிரந்தர தளபதி!
கலைஞரின்
கவிரங்கில் நீ கணபதி!

ஆச்சார அனுஷ்டானம்
நோக்காது நோன்பு நீ
நோற்றதில்லை - ஆனாலும்

அயிரை மீன் குழம்பிடம் - உன்
அடிநாவு என்றுமே
தோற்றதில்லை

யாதெனச் சொல்லுவேம்-உனை
தமிழ்
நாதெனச் சொல்லுவேன்

யாப்புக்குள் மூழ்கி
குற்றியலிகரம் கொத்தி
கட்டளை கலித்துறையும் மிளிற்றும்
உன்பேனா


ஷாப்புக்குள்ளும் மூழ்கி
டிவிட்டரில் சொல்பொறுக்கி
திரைக்கும் பாட்டியற்றும்
ஐ-டியூனா

காவிரி-உந்தூள் மலர்சூழ
களிநடைப் புரிந்தர
திருவரங்கம்-உன்
கருவரங்கம்

ஆழிமேல் அனந்தசயனமிடும்
அரங்கராஜன் குடைநிழலில்
அரங்கநாதனாய் நடந்தாய்!-இன்று
கோடம்பாக்க கோபுரத்தில்
குலவிளக்காய்க் கலந்தாய்!

மனசொப்பக் கண்டால்-நீ
நியூரான்ஸ் எல்லாம்
நித்தம் இளமைச் சொரிய
புதுப்புது சொல் கண்டெடுக்கும்
நியூட்டன்

வயசொப்பக் கண்டால்
வாலிபக் கவியே-நீ
பாட்டுப் பேரன்களுக்கெல்லாம்
பாட்டன்

அகவையில் தான்நீ
எண்பத்திரெண்டு!-ஆனால்
கொஞ்சிச் சிரித்துப் பேசும் எண்ணத்தில் ‘ரெண்டு'

நீரே முற்பிறவியில்
ஏழிசைத் தாண்டி
தாழிசைக் கண்ட
திருநாவுக்கரசர்!

இப்பிறவியில்
சொன்ன சொல் பொய்க்காது
கொடுத்த வாக்குத் தவறாது-வாழ்ந்த
ஒருநாவுக்கு அரசர்!

கையும் மலரடியும்
கண்ணும் கனிவாயும்
உண்ணும் தீ எனத் தெரிந்தும்
விட்டுவந்தோம்!

தமிழா-இதுவரை
நீ வாசித்த கவிதையை
தீ வாசிக்கட்டும் என்று-இன்று!

பிரபஞ்சமே பிரமிக்கிறது
பேராசானே!
பதினைந்தாயிரம் பாடல் எனும்
கணக்கைக் கேட்டு!

ஓ!இறைவா-எமது
தமிழ்ப்பெருங் கவிஞன்-உனை
நேரில் பாட வந்துவிட்டான்

அந்த அமர ஜோதி அமர-உன்
அகத்தின் அருகாமையில் ஓர்
இடத்தைக் காட்டு!

- பா.விஜய்

 

'சம்பாதிச்ச பணத்தை சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் கருணாஸும் கருப்பும்தான்!'

சென்னை: தமிழ் சினிமாவிலேயே, சம்பாதிச்ச பணத்தை மீண்டும் சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் கருணாஸும் கஞ்சா கருப்பும்தான் என்றார் நடிகர் மயில்சாமி.

நகைச்சுவை நடிகர் கருணாஸ் ரகளபுரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்துமுள்ளார்.

'சம்பாதிச்ச பணத்தை சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் கருணாஸும் கருப்பும்தான்!'

இதன் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி தாணு, இயக்குநர் நாராயணசாமி, நடிகர்கள் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலரும் பங்கேற்றனர்.

விழாவில் மயில்சாமி பேசுகையில், "கருணாசையும், கஞ்சா கருப்பையும் நான் பாராட்டுகிறேன். சினிமாவில் சம்பாதிச்ச பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து படங்கள் தயாரிக்கிற இரண்டே இரண்டு காமெடி நடிகர்கள் இந்த ரெண்டு பேரும்தான். இந்த காமெடி நடிகர்களால் திரையுலகில் உள்ள நூறு குடும்பங்கள் சந்தோஷமாக வாழ்கிறது. மற்றவர்கள் செலவழிக்காமல் பதுக்குகின்றனர்.

ஒரு குட்டிக்கதை சொல்றேன். ஒருத்தன் கோடி கோடியா சம்பாதித்து தானம் தர்மம் செய்யாமல் குழி தோண்டி பணத்தை புதைத்து வைத்தான். அப்பப்பப அந்த பணத்தை பார்த்துவிட்டு மூடி விடுவான். இதை கவனித்த ஒருவன் அந்த பணத்தை திருடிக் கொண்டு போய்விட்டான். பணத்தை காணாமல் அவன் வாயில் வயிற்றில் அடித்து அழுதான். அந்த வழியாக வந்த ஒருவர் அவனிடம் கேட்டார். ஏண்டா இந்த பணத்தை நீ யாருக்காவது கொடுத்திருப்பியா? இல்லை இல்லை கொடுக்க மாட்டேன்னான் அவன்.

'சம்பாதிச்ச பணத்தை சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் கருணாஸும் கருப்பும்தான்!'

தானதர்மம் பண்ணுவியா-ன்னு கேட்டார். இல்ல மாட்டவே மாட்டேன் என்றான் அவன். இதை எடுத்து உனக்கு தேவையானதை வாங்க செலவாவது செய்வியா? ன்னார். அதையும் செய்யமாட்டேன்னான்.

கடைசியா சொன்னார். செலவே செய்யாம இந்த பணத்தை வச்சிக்கிறதுக்கு இந்த பணம் காணாம போச்சுன்னு ஏன் நினைக்கிற இங்கதான் இருக்குன்னு நினைச்சுக்க வேண்டியது தானே என்றார். அப்படி பணத்தை வெட்டியா புதைச்சு வைக்காமல் சினிமாவுல முதலீடு செய்து குடும்பங்களை வாழ வைக்கும் கருணாசையும், கஞ்சா கருப்பையும் வாழ்த்துகிறேன்," என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே.

 

நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

சென்னை: மறைந்த நடிகை மஞ்சுளாவின் உடலுக்கு நேற்று சென்னையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

நேற்று தன் ஆலப்பாக்கம் வீட்டில் கீழே விழுந்ததில் கட்டில் கால் குத்தி வயிற்றில் அவருக்கு பலமாக அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மஞ்சுளா, சிகிச்சை பலனின்று இறந்தார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

சூப்பர் ஸ்டார் ரஜினி செவ்வாய்க்கிழமை மாலை மஞ்சுளாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் சௌந்தர்யாவும் வந்திருந்தார். ரஜினியைப் பார்த்ததும் விஜயகுமார் கதறி அழ, ரஜினியும் அவரைக் கட்டிப்பிடித்து கண் கலங்கினார்.

விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள்கள் ரஜினியிடம் வந்து கதறி அழுதனர். அவர்களுக்கு ரஜினி ஆறுதல் கூறினார்.

ரஜினி வருவதற்கு முன்பே ஐஸ்வர்யா தனுஷ் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நேற்று மருத்துவமனையில் மஞ்சுளா சேர்க்கப்பட்டபோதே, நேரில் போய் அருகிலிருந்து பார்த்துக் கொண்டார் லதா ரஜினி.

நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் விஜயகுமார் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்று பிற்பகல் போரூர் மின் மயானத்தில் மஞ்சுளா உடல் தகனம் செய்யப்படுகிறது.

 

நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

சென்னை: மறைந்த நடிகை மஞ்சுளாவின் உடலுக்கு நேற்று சென்னையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

நேற்று தன் ஆலப்பாக்கம் வீட்டில் கீழே விழுந்ததில் கட்டில் கால் குத்தி வயிற்றில் அவருக்கு பலமாக அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மஞ்சுளா, சிகிச்சை பலனின்று இறந்தார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

சூப்பர் ஸ்டார் ரஜினி செவ்வாய்க்கிழமை மாலை மஞ்சுளாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் சௌந்தர்யாவும் வந்திருந்தார். ரஜினியைப் பார்த்ததும் விஜயகுமார் கதறி அழ, ரஜினியும் அவரைக் கட்டிப்பிடித்து கண் கலங்கினார்.

விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள்கள் ரஜினியிடம் வந்து கதறி அழுதனர். அவர்களுக்கு ரஜினி ஆறுதல் கூறினார்.

ரஜினி வருவதற்கு முன்பே ஐஸ்வர்யா தனுஷ் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நேற்று மருத்துவமனையில் மஞ்சுளா சேர்க்கப்பட்டபோதே, நேரில் போய் அருகிலிருந்து பார்த்துக் கொண்டார் லதா ரஜினி.

நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் விஜயகுமார் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்று பிற்பகல் போரூர் மின் மயானத்தில் மஞ்சுளா உடல் தகனம் செய்யப்படுகிறது.

 

வேட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி!- கவிஞர் வாலிக்கு பா விஜய் கவிதாஞ்சலி

எஞ்ஞான்றும் கண்டதில்லை
உன்போல்
எவர் குளிரிவிப்பார்
செழுந்தமிழால் எம்
செவியை?

ஜூலை 18
‘அடக்கம்' இன்றுதான்
அடக்கம் ஆனது!
‘இயக்கம்' இன்றுதான்
இயக்கம் நின்றது!

வேட்டி கட்டி வாழ்ந்த கலைவாணி!- கவிஞர் வாலிக்கு பா விஜய் கவிதாஞ்சலி

சிகரம் போலுயர்ந்தும்-நாங்கள்
கைத்தொடும் தூரமிறங்கிய
அடிவாரமே

அவதார காவியத்தின்
அவதாரமே
நுண்மான் நுழைப்புலம்
நுகர்த்த சீர்நீ!

தமிழ்ப்பால்
தடையறச் சுரந்த
மார்நீ!

அவணி நெடுக-எழுத்தால்
அடைமழை பெய்வித்த
கார்நீ!

ஒருவரல்ல அய்யன்மீர்-நீர்
ஒருவன் எனும் ஒருமைக்குள்
ஆயிரம் புலவராய் வாழ்ந்த ஊர்நீ!

அமிர்தம் மட்டுமல்ல
வெய்யிலில் கருத்த உழைப்பாளியின்
நாவறட்சிக்கு ஈந்த நற்றமிழ்
மோர்நீ!

அனிச்சம் போல் மடல்விடும்
அடுத்த தலைமுறை கவிஞர்களின்
வேர்நீ!

யார் தெரியுமா
கவிஞர்களின் தலைவாநீ!

புடவைக் கட்டியது
போதுமென்று
வேட்டி கட்டி வாழ்ந்த
கலைவாணி!

"நேற்றிரவு
சுவாசம்-மிக மோசம்"
இது நீ மரணப் படுக்கையில்
யாத்த கடைசி சாசனம்!

அது எப்படி அய்யா
ஆவி தீரும் அந்தகாரத்திலும்
எதுகையும் மோனையும் உன்னுள்
ஆகிக்கொண்டிருக்கிறது பாசனம்?

காலப் பேழைக்குள்
கடு மருந்து பூச்சுப் பூசி
உன் பூதவுடலையும் வைத்திருக்கலாம்
அழுகாது!

வைத்திருந்தால்-உன்
விழி முடங்கி கிடந்திருக்கும்
விரல் மடங்கி கிடந்திருக்குமா
எழுதாது?

ஆன்மீகம் உன் அரண்!
ஹரனைச் சேவித்த வரனே
உன்னுள் எத்தனை
அழகிய முரண்? அழகிய முரண்?

வைஷ்ணவத் திலகம்-உன்
சிந்தைச் சிகையைச் சுற்றி
சிலிர்ப்பிப் பார்த்தால்-அதில்
பெரியாரின் கலகம்

எம்.ஜி.ஆரின் பாட்டுப் படைக்கு
நீதான் நிரந்தர தளபதி!
கலைஞரின்
கவிரங்கில் நீ கணபதி!

ஆச்சார அனுஷ்டானம்
நோக்காது நோன்பு நீ
நோற்றதில்லை - ஆனாலும்

அயிரை மீன் குழம்பிடம் - உன்
அடிநாவு என்றுமே
தோற்றதில்லை

யாதெனச் சொல்லுவேம்-உனை
தமிழ்
நாதெனச் சொல்லுவேன்

யாப்புக்குள் மூழ்கி
குற்றியலிகரம் கொத்தி
கட்டளை கலித்துறையும் மிளிற்றும்
உன்பேனா


ஷாப்புக்குள்ளும் மூழ்கி
டிவிட்டரில் சொல்பொறுக்கி
திரைக்கும் பாட்டியற்றும்
ஐ-டியூனா

காவிரி-உந்தூள் மலர்சூழ
களிநடைப் புரிந்தர
திருவரங்கம்-உன்
கருவரங்கம்

ஆழிமேல் அனந்தசயனமிடும்
அரங்கராஜன் குடைநிழலில்
அரங்கநாதனாய் நடந்தாய்!-இன்று
கோடம்பாக்க கோபுரத்தில்
குலவிளக்காய்க் கலந்தாய்!

மனசொப்பக் கண்டால்-நீ
நியூரான்ஸ் எல்லாம்
நித்தம் இளமைச் சொரிய
புதுப்புது சொல் கண்டெடுக்கும்
நியூட்டன்

வயசொப்பக் கண்டால்
வாலிபக் கவியே-நீ
பாட்டுப் பேரன்களுக்கெல்லாம்
பாட்டன்

அகவையில் தான்நீ
எண்பத்திரெண்டு!-ஆனால்
கொஞ்சிச் சிரித்துப் பேசும் எண்ணத்தில் ‘ரெண்டு'

நீரே முற்பிறவியில்
ஏழிசைத் தாண்டி
தாழிசைக் கண்ட
திருநாவுக்கரசர்!

இப்பிறவியில்
சொன்ன சொல் பொய்க்காது
கொடுத்த வாக்குத் தவறாது-வாழ்ந்த
ஒருநாவுக்கு அரசர்!

கையும் மலரடியும்
கண்ணும் கனிவாயும்
உண்ணும் தீ எனத் தெரிந்தும்
விட்டுவந்தோம்!

தமிழா-இதுவரை
நீ வாசித்த கவிதையை
தீ வாசிக்கட்டும் என்று-இன்று!

பிரபஞ்சமே பிரமிக்கிறது
பேராசானே!
பதினைந்தாயிரம் பாடல் எனும்
கணக்கைக் கேட்டு!

ஓ!இறைவா-எமது
தமிழ்ப்பெருங் கவிஞன்-உனை
நேரில் பாட வந்துவிட்டான்

அந்த அமர ஜோதி அமர-உன்
அகத்தின் அருகாமையில் ஓர்
இடத்தைக் காட்டு!

- பா.விஜய்

 

'சம்பாதிச்ச பணத்தை சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் கருணாஸும் கருப்பும்தான்!'

சென்னை: தமிழ் சினிமாவிலேயே, சம்பாதிச்ச பணத்தை மீண்டும் சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் கருணாஸும் கஞ்சா கருப்பும்தான் என்றார் நடிகர் மயில்சாமி.

நகைச்சுவை நடிகர் கருணாஸ் ரகளபுரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்துமுள்ளார்.

'சம்பாதிச்ச பணத்தை சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் கருணாஸும் கருப்பும்தான்!'

இதன் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி தாணு, இயக்குநர் நாராயணசாமி, நடிகர்கள் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலரும் பங்கேற்றனர்.

விழாவில் மயில்சாமி பேசுகையில், "கருணாசையும், கஞ்சா கருப்பையும் நான் பாராட்டுகிறேன். சினிமாவில் சம்பாதிச்ச பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து படங்கள் தயாரிக்கிற இரண்டே இரண்டு காமெடி நடிகர்கள் இந்த ரெண்டு பேரும்தான். இந்த காமெடி நடிகர்களால் திரையுலகில் உள்ள நூறு குடும்பங்கள் சந்தோஷமாக வாழ்கிறது. மற்றவர்கள் செலவழிக்காமல் பதுக்குகின்றனர்.

ஒரு குட்டிக்கதை சொல்றேன். ஒருத்தன் கோடி கோடியா சம்பாதித்து தானம் தர்மம் செய்யாமல் குழி தோண்டி பணத்தை புதைத்து வைத்தான். அப்பப்பப அந்த பணத்தை பார்த்துவிட்டு மூடி விடுவான். இதை கவனித்த ஒருவன் அந்த பணத்தை திருடிக் கொண்டு போய்விட்டான். பணத்தை காணாமல் அவன் வாயில் வயிற்றில் அடித்து அழுதான். அந்த வழியாக வந்த ஒருவர் அவனிடம் கேட்டார். ஏண்டா இந்த பணத்தை நீ யாருக்காவது கொடுத்திருப்பியா? இல்லை இல்லை கொடுக்க மாட்டேன்னான் அவன்.

'சம்பாதிச்ச பணத்தை சினிமாவுக்குள்ளேயே போடும் காமெடி நடிகர்கள் கருணாஸும் கருப்பும்தான்!'

தானதர்மம் பண்ணுவியா-ன்னு கேட்டார். இல்ல மாட்டவே மாட்டேன் என்றான் அவன். இதை எடுத்து உனக்கு தேவையானதை வாங்க செலவாவது செய்வியா? ன்னார். அதையும் செய்யமாட்டேன்னான்.

கடைசியா சொன்னார். செலவே செய்யாம இந்த பணத்தை வச்சிக்கிறதுக்கு இந்த பணம் காணாம போச்சுன்னு ஏன் நினைக்கிற இங்கதான் இருக்குன்னு நினைச்சுக்க வேண்டியது தானே என்றார். அப்படி பணத்தை வெட்டியா புதைச்சு வைக்காமல் சினிமாவுல முதலீடு செய்து குடும்பங்களை வாழ வைக்கும் கருணாசையும், கஞ்சா கருப்பையும் வாழ்த்துகிறேன்," என்றார் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே.