அனுபவங்கள் மூலமே அனைத்தையும் கற்றுக் கொள்ளச் சொன்னார் அப்பா - ஸ்ருதி

Appa Insists Me Learn By Experience

சென்னை: எதையும் என் சொந்த அனுபவத்தில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பா கமல் விரும்புகிறார். அதனால் அவர் என் விஷயத்தில் தலையிடுவதில்லை, நானும் அவரிடம் எதையும் சொல்வதில்லை, என்கிறார் ஸ்ருதி ஹாஸன்.

தமிழில் ஏழாம் அறிவு மற்றும் 3 படங்களில் மட்டுமே நடித்துள்ள ஸ்ருதி, தெலுங்கு மற்றும் இந்தியில் படுபிஸியாக உள்ளார்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஸ்ருதியைக் கேட்டபோது, நடிக்க கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம். அந்த அளவுக்கு பிஸியாக உள்ளாராம்.

இதுகுறித்து சமீபத்தில் கேட்டபோது, "இந்தி மற்றும் தெலுங்கில் பிஸியாக உள்ளேன். இதுதான் அப்பா படத்தில் நடிக்க முடியவில்லை. இதற்காக அவர் வருத்தப்பட மாட்டார். மகள் பிசியாக இருக்கிறாளே என்று மகிழ்வார்.

என் வியத்தில் எதிலும் என் அப்பா தலையிடுவதில்லை. எதையும் அனுபவப் பூர்வமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே என் அப்பா விரும்புவார்.

அதனால் அவர் ஆரம்பத்திலிருந்து எந்த விஷயத்தையும் சொல்லித் தரவில்லை. எந்தப் பிரச்சினையையும் நானே தீர்த்துக் கொள்கிறேன்," என்றார்.

 

சன்னி லியோனின் முதல் குத்துப் பாட்டு...!

Sunny Leone Turns Up The Heat Debut   

டெல்லி: ஒரு வடிவேலு படத்தில் மதுரை சட்னிக்குத்தானடா பேமஸ் என்று கேட்பார். அதற்கு கருப்பா பயங்கரமா இருக்கும் இன்னொரு நடிகர் சொல்வார். மதுரை எல்லாத்துக்குமே பேமஸ்டா என்று... அதுபோல ஆகி விட்டது சன்னி லியோன் நிலை.

அவர் எதைச்செய்தாலும் பரபரப்புதான், ஒரு கிளுகிளுப்புதான். பாலிவுட்டில் நடிகையான அவர் தற்போது முதல் முறையாககுத்துப் பாட்டுக்கு ஆடியிருப்பது பரபரப்பாகியுள்ளது.

ஜிஸ்ம் படம்தான் சன்னியின் முதல் படம். ஹீரோயினாக அதில் நடித்திருந்தார். ஆனால் படம் ஊத்திக் கொண்டது. இதனால் புதிய பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இந்த நிலையில்தான் வந்தது குத்துப் பாட்டுக்கான வாய்ப்பு. லைலா படத்தில் அவர் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். இதுதான் அவர் ஆடிய முதல் குத்துப் பாட்டாகும்.

இந்தப் பாடலுக்கான ஷூட்டிங்கின்போது அனைவரையும் அதிர வைத்து விட்டதாம் சன்னியின் ஆட்டமும் கவர்ச்சியும். அதி வேகமான இசையுடன் கூடிய இந்தப் பாடலில் ஜான் ஆப்ரகாம், துஷார் கபூர் ஆகியோருடன் இணைந்து ஆடியுள்ளார் சன்னி.

இதுதொடர்பான ஒரு வீடியோ லிங்க்கையும் தனது டிவிட்ரில் தட்டிவிட்டுள்ளார் சன்னி. அதில் தன்னை விட ஜான் ஆப்ரகாமும், துஷாரும் சிறப்பாக ஆடியதாக புகழாரம் சூட்டியுள்ளார் சன்னி.

 

ரூ. 1 கோடி சம்பளம்.. 'வீரசேகரன்' அமலாவா இது?

Amala Joines Crorepati Club   

அமலா பால் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கியது வீரசேகரன் என்ற படு சிம்பிள் பட்ஜெட் படம் என்பது யாருக்காவது நினைவிருக்கிறதா..!

அந்தப் படத்தில் அமலாவுக்கு சம்பளமென்று எதுவும் கிடையாது. பேட்டா, சாப்பாடு இன்ன பிற சலுகைகளோடு சரி. தனி ஹீரோயினாக அறிமுகம் கிடைப்பதே பெரிய விஷயமென்று நடித்தார்.

அடுத்த படம் சிந்து சமவெளி. படு பச்சையான காட்சிகள். ஆனால் கரன்சி மட்டும் ரொம்ப வறட்சியாகவே இருந்தது அம்மணிக்கு.

மைனாவில் நடித்த போதுகூட அமலாவுக்கு சிறப்பான சம்பளம் என்று எதையும் தரவில்லையாம். ஒருசில லட்சங்கள்தான்.

ஆனால் அந்தப் படம் வந்த பிறகு வட்டியும் முதலுமாக உயர்த்தினார் சம்பளத்தை, அமலா.

தெய்வத் திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை போன்ற படங்களில் அவரது சம்பளம் ரூ 50 லட்சத்தைத் தொட்டது.

இப்போது நிழல்கள் ரவி, விஜய் ஜோடியாக நடித்து வரும் நிலையில், தனது சம்பளத்தை தானாகவே ஒரு கோடிக்கு உயர்த்திவிட்டாராம்.

தெலுங்கில் ராம்சரணுடன் நடிக்கும் படம் மற்றும் அல்லு அர்ஜூன் படங்களில் இதுதான் அவரது புதிய சம்பளமாம்.

தமிழில் அடுத்து யார் ஒப்பந்தம் செய்தாலும், லட்சங்களில் சிக்காது இந்த மைனா... கோடி கொடுத்தால்தான் உண்டு!

 

என்னது கர்ப்பமா... இல்லவே இல்லை! - மறுக்கிறார் ஜெனிலியா

Genelia Dismisses News Her Being Pregnant

முன்பெல்லாம் நடிகைகளுக்கு திருமணமான சில மாதங்களில் கர்ப்பம் என தகவல் வரும். அடுத்து இன்னாருக்கு குவா குவா என தலைப்பிட்டு செய்தி போடுவார்கள்.

இப்போது அதற்கு நேர் எதிர். கர்ப்பம் என செய்தி வெளியான அடுத்த சில தினங்களில் மறுப்பு அறிக்கை வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.

சில வாரங்களுக்கு முன்பு சினேகா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. அடுத்த சில தினங்களில் அவரது கணவர் பிரசன்னாவே பத்திரிகைகளை அழைத்து, சினேகா கர்ப்பமாக இல்லை. அவர் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளார் என்று விளக்கமளித்தார்.

இப்போது கிட்டத்தட்ட அதே போன்ற செய்தி. இந்த முறை ஜெனிலியா. கடந்த ஆண்டு ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியா, இப்போது கர்ப்பமாக உள்ளதாக செய்தி வெளியானது.

அதனை ஜெனிலியாவின் கணவர் ரிதேஷ், தன் பிஆர்ஓ மூலம் மறுத்துள்ளார்.

ஜெனிலியாவுக்கோ ரிதேஷுக்கோ இப்போது குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமில்லை என்றும், மேலும் பல படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் புதிய படத்தில் நடிக்கும் அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஜெனிலியாவும் உறுதிப்படுத்தியுள்ளார். நான்கைந்து இயக்குநர்கள் தமிழ் மற்றும் இந்திப் படங்களுக்காக அவரிடம் பேசிக் கொண்டுள்ளார்களாம்.

 

ஆஸ்திரேலியாவில் சூதாடிய அமலா பால்!

Amala Paul Wins Gambling Sydney

தலைவா படத்துக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள அமலா பால், அங்கு நடிகர் சுரேஷுடன் சேர்ந்து சூதாடி பணம் ஜெயித்தாராம்.

விஜய் நடிக்க, விஜய் இயக்கும் புதிய படம் தலைவா. சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு இரு ஜோடிகள். ஒருவர் அமலா. மற்றவர் ராகிணி நந்த்வனி.

இப்போது படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. விஜய்யுடன் இரு நாயகிகளும் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

போன இடத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் போரடித்ததாம் அமலாவுக்கு. அப்படியே சுற்றிப் பார்க்கக் கிளம்பியவர் சூதாட்ட கிளப்புக்குள் நுழைந்து, ஒரு ஆட்டம் ஆடினாராம்.

முதலில் ஆடியபோது சறுக்கினாலும், அடுத்து நடிகர் மொட்டை சுரேஷுடன் இணைந்து ஆடி கேமை வென்றாராம்.

இதனை பெருமையாக சொன்ன அமலா பால், சூதாட்டத்தில் எனக்கு ரொம்ப லக்கி ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று கூறியுள்ளார்.

 

அப்பா முன் கவர்ச்சி காட்சிகள்.. வெட்கத்தில் வெளியேறிய இனியா!

Iniya Embarrasses When Seen Her Glam Scenes With Father   

சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் பிரிவியூ காட்சியின்போது தந்தையுடன் படம் பார்த்த நடிகை இனியா, தான் நடித்த கவர்ச்சிக் காட்சிகள் வந்தபோது வெளியே வந்துவிட்டாராம், வெட்கம் தாளாமல்.

இரு வாரங்களுக்கு முன் வெளியான படம் கண்பேசும் வார்த்தைகள். செந்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருந்தார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

இந்தக் காட்சிக்கு தன் அப்பாவோடு வந்திருந்தார் இனியா. படம் பார்க்க அமர்ந்த இனியாவுக்கு தான் நடித்த சில கவர்ச்சிக் காட்சிகளை தன்னாலேயே பார்க்க முடியவில்லையாம். உடன் அப்பா வேறு இருந்ததால், வெட்கத்தில் நெளிந்தபடி வெளியேறிவிட்டாராம்.

இப்படி நான்கைந்து முறை நடந்ததை பக்கத்திலிருந்த மற்றவர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வெட்கம் நடிக்கும் போதே இருந்தால் இத்தனை சங்கடம் வராதே என்று கமெண்டும் அடித்தனர்.

என்ன பண்ணுவது.. நடிக்கும் போது பிகு பண்ணால் அந்த வேடத்துக்கு வர ஆயிரம் கவர்ச்சிக் கன்னிகள் தயாராக உள்ளார்களே!


 

பொசுக்குன்னு போயிடுச்சி தமன்னாவின் பாலிவுட் கனவு!

Himmatwalaa S Failure Is Big Setback For Tamanna   

தமன்னாவின் முதல் பாலிவுட் படமான ஹிம்மத்வாலா படுதோல்வியைத் தழுவியதால், இனி அவர் தொடர்ந்து அங்கே தாக்குப் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உண்மையில் தமன்னா அறிமுகமானதே இந்தியில்தான். பல ஆண்டுகளுக்கு முன் சாந்த் கா கேஷன் செஹ்ரா என்ற படத்தில்தான் அவர் அறிமுகமானார். அது தோல்வியடைந்ததால், தென் இந்திய சினிமாவில் நுழைந்து ஜெயித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் அஜய் தேவ்கன் ஜோடியாக தமன்னா நடித்த படம்தான் ஹிம்மத் வாலா. இந்தப் படத்தை சஜித் கான் இயக்கினார்.

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் எதிர்ப்பார்த்ததை விட ரொம்ப சுமாரான வசூலையே பெற்றுள்ளதாம்.

தமன்னா பார்க்க அழகாக இருந்தாலும், அவருக்கு நடிப்பு அவ்வளவாக வரவில்லை என்று பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே மேலும் இரண்டு இந்திப் படங்களுக்கு தமன்னா ஒப்பந்தமாகி இருந்தாலும், இந்த முதல் தோல்வி, அவருக்கு பெரிய பின்னடைவாக உள்ளது.

இந்தியில் தாக்குப் பிடிப்பாரா... அல்லது போன வேகத்தில் முழுசாக தமிழ் - தெலுங்குக்கே திரும்புவாரா... பார்க்கலாம்!

 

சூப்பர் ஸ்டாரின் இமயமலைப் பயணம் தொடருமா?

What About Super Star S Annual Himalayan Trip

புகை, மது போன்றவற்றை அறவே விட்டுவிட்டு முன்னிலும் ஆரோக்கியமாகவும் இளமையோடும் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அவற்றைத் தொட வேண்டாம் என தன் ரசிகர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.

இப்போது அவர் தனது அடுத்த இமயமலைப் பயணத்துக்கு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பயணத்தை தள்ளிப் போட வேண்டுமென்று வீட்டில் சொல்கிறார்களாம். ஆனால் நண்பர்களுடன் வேண்டுமானால் போய் வரட்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்களாம். எனவே கோச்சடையான் ரிலீசுக்கு முன் அல்லது பின் இந்தப் பயணம் குறித்து செய்திகள் வரலாம்.

இப்போதைக்கு ரஜினி பெரும்பாலும் தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில்தான் நேரத்தைச் செலவிடுகிறார். முன்னெப்போதையும்விட அதிக அளவு நண்பர்களைச் சந்திக்கிறார். பேசிக் கொண்டிருக்கிறார்.

சமயத்தில் மண்டபத்தில் நடக்கும் ரசிகர்களின் திருமணங்களுக்கு சர்ப்ரைஸ் விசிட்டும் பரிசும் கொடுத்து திக்குமுக்காட வைக்கிறார். ரொம்ப பிரயத்தனப்பட்டு தன்னைச் சந்திக்த ஆர்வம் காட்டும் ரசிகர்களையும் அவர் தவிர்ப்பதில்லை.

எப்போதாவது ஒரு முறை கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கும் சென்று கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறாராம்!

அடுத்த படம் குறித்த யோசனை தீவிரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம் அவர் மனதில். கேவி ஆனந்த், கேஎஸ் ரவிக்குமார் ஆகிய இருவர்தான் இப்போதைக்கு ரேஸில் இருக்கிறார்கள். ரஜினியே சொல்லும் வரை இந்த ரேஸ் தொடரும்!

 

இன்றைய ரிலீஸ்... சேட்டை!

Today S Release Settai   

ஆர்யா, பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள சேட்டை இன்று வெளியாகிறது.

இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்தான் சேட்டை. இந்தப் படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

யுடிவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தமன் இசையமைத்துள்ளார். தனஞ்செயனின் ஆஸ்தான இயக்குநர் எனும் அளவுக்கு மாறிவிட்ட ஆர் கண்ணன் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் ஆர்யாவுக்கு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அவர் நடித்து வெளியான ஒரே படம் வேட்டை. அதையும் இந்த யுடிவிதான் தயாரித்திருந்தது. ஒன்றும் சொல்லிக் கொள்கிறமாதிரி வெற்றி பெறவில்லை.

இப்போது ஆர்யா ரூ 5 கோடி சம்பளமாகப் பெறுகிறார். சேட்டையின் வெற்றியைப் பொருத்துதான் அந்த 5 கோடி தொடருமா குறையுமா என்பது தெரியும்.

பிரேம்ஜிக்கு கிட்டத்தட்ட ஆர்யாவுக்கு இணையான வேடம். உடன் சந்தானம் வேறு நடித்திருப்பதால், நகைச்சுவை அடிப்படையில் படம் பாக்ஸ் ஆபீஸில் வென்றுவிடும் என நம்புகிறது கோலிவுட்.

தமிழகம் முழுவதும் 510 அரங்குகளில் வெளியாகிறது.