வீர மரணம் அடைந்த முகுந்த் வீட்டுக்கு சென்ற விஜய்

சென்னை: தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீட்டுக்கு நடிகர் விஜய் சென்று அவரது குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார்.

கடந்த மாதம் 25ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

வீர மரணம் அடைந்த முகுந்த் வீட்டுக்கு சென்ற விஜய்

இந்நிலையில் இளையதளபதி விஜய் முகுந்த் வீட்டுக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கு அவர் முகுந்தின் மகளுடன் இரண்டு மணிநேரம் செலவிட்டார். தந்தையை பறிகொடுத்துவிட்டு நிற்கும் சிறுமியுடன் விளையாடி மகிழ்ந்தார்.

சிறுமியின் முகத்தில் சிரிப்பை வரவழைத்த விஜய் அவளின் எதிர்கால ஆசையை கேட்டறிந்தார். மேலும் முகுந்தின் குடும்பத்தாருக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

விஜய் மடியில் முகுந்தின் மகள் அமர்ந்து புன்னகை சிந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

 

தமிழர்களின் உணர்வை மதித்து ராஜபக்சே வருகையை மோடி ரத்து செய்ய வேண்டும்: பாரதிராஜா

சென்னை: எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உடனடியாக ராஜபக்சேயின் வருகையை ரத்து செய்ய வேண்டும். அதுவே மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு செய்யும் முதல் நற்செயலாகும். மேலும் மத்தியில் புதிதாக அமையவிற்கும் அரசிற்கும் தமிழகத்திற்கும் நல்லுறவை வலுப்படுத்தும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உணர்வை மதித்து ராஜபக்சே வருகையை மோடி ரத்து செய்ய வேண்டும்: பாரதிராஜா

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய பெருநாட்டின் 15-வது பிரதம மந்திரியாக பதவியேற்கும் நரேந்திர மோடி இந்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பதவியேற்கும் இந்நிகழ்வில் எங்களின் மகிழ்வை குழைக்கும் வகையிலும் இந்த அரசின் மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையிலும் லட்சக்கணக்கான எங்கள் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த ராஜபக்சேவை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது கண்டனத்திற்குறியது.

புதிதாக அமையவிருக்கும் அரசின் அதிகாரப்பூர்வமான முதல்நாள் நிகழ்விலேயே ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை உதாசினப்படுத்தியும் அவமதிக்கும் வகையிலும் சர்வதேச விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் ஒரு போர் குற்றவாளியை அழைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக 37 உறுப்பினர்களை கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் தன் எதிர்ப்பையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார். அதேபோல் அனைத்து தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களும், வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்ற தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் கட்சி வேறுபாடுகளின்றி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். மேலும் வைகோ அவர்கள் டெல்லியில் ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இவ்வனைத்து எதிர்ப்புகளுக்கும் மேலாக ராஜபக்சே இந்நிகழ்வில் கலந்துகொள்வது என்பது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பல தீர்மானங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது.

எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உடனடியாக ராஜபக்சேயின் வருகையை ரத்து செய்ய வேண்டும். அதுவே மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு செய்யும் முதல் நற்செயலாகும். மேலும் மத்தியில் புதிதாக அமையவிற்கும் அரசிற்கும் தமிழகத்திற்கும் நல்லுறவை வலுப்படுத்தும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

விரல் நடிகரால் மகளுக்கு பாதுகாப்பாக 2 பேரை அனுப்பி வைத்த நடிகையின் அம்மா

சென்னை: விரல் நடிகருடன் டூயட் பாட சென்ற புஸு புஸு நடிகைக்கு பாதுகாப்பாக அவரது சகோதரரும், பயில்வான் ஒருவரும் சென்றார்களாம்.

புஸு புஸு நடிகை விரல் நடிகருடன் சேர்ந்து இரண்டு எழுத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிக்கையில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது.

இதையடுத்து பிரிந்து சென்ற அவர்களை தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு அழைத்து வந்து டூயட் பாடல்களை படமாக்கியுள்ளார். டூயட் பாட அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றபோது விரல் நடிகர் மீது நம்பிக்கையில்லாத நடிகையின் அம்மா தனது மகளுக்கு பாதுகாப்பாக இருவரை அனுப்பியுள்ளார். ஒருவர் நடிகையின் சகோதரர், மற்றொருவர் பயில்வான்.

எங்கே விரல் நடிகர் டூயட் பாடும் சாக்கில் நடிகையின் மனதை மாற்றிவிடுவாரோ என்று பயந்த தாய்குலம் இப்படி இரண்டு பேரை பாதுகாப்பு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.