எப்படி 'பிக்கப்' பண்றார், எங்கு 'டிராப்' பண்றார்னே தெரியலையே...ஆர்யாவை வாரிய பார்த்தி!

Parthiban On Arya His Girl Friends

சென்னை: ஆர்யா, நடிகைளை எப்படி பிக்கப் பண்றார், எங்கு டிராப் பண்றார்னே தெரியவில்லை என்று நடிகர், இயக்குநர் பார்த்திபன் கலாய்க்க, பட விழாவே பயங்க சிரிப்பொலியில் மூழ்கிப் போனது.

டிவி நடிகராகவும், சினிமாவில் சின்னச் சின்னதாக தலையைக் காட்டியவருமான விஜய் ஆதிராஜ் இப்போது இயக்குநராகி விட்டார். புத்தகம் என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால், ஆர்யாவின் தம்பி சத்யாதான் இதில் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. எஸ்.பி.முத்துராமன் முதல் சிடியை வெளியிட, பி.வாசு வாங்கிக் கொண்டார்.

விழாவில் வழக்கம் போல பார்த்திபனின் பேச்சுதான் படு கலாய்ப்பாக இருந்தது. அவர் பேசுகையில், நடிகைகளை முத்தமிடும் கலாசாரத்தை கமல் சார் பரப்பினார். ஆர்யாவும் இப்போது நடிகைக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் நடிகைகளை எப்படி பிக்கப் பண்றார் எங்கு டிராப் பண்றார்னு தெரியல. இந்த புத்தகம் படம் தமிழ் திரையுலகை புரட்டிப்போடும் என்று பேசியபோது ஆர்யா உள்பட அனைவருமே விழுந்து விழுந்து சிரித்தனர்.

பதிலுக்கு ஆர்யா பேசுகையில், பார்த்திபன் நடிகைகளை நான் பிக்கப் செய்வது பற்றி பேசினார். நான் பிக்கப் செய்யும் நடிகைகளை டிராப் செய்வது இல்லை. டிராப் பண்ணினால் மற்றவர்கள் பிக்கப் செய்து விடுகிறார்கள் என்று பதிலுக்குக் கலாய்த்தார்.

ஹய்யோ, ஹய்யோ...!

 

எனக்கு நாந்தாங்க போட்டி, சந்தானமெல்லாம்... வடிவேலு 'பளிச்' பேட்டி!

Santhanam Is Not My Rival Says Vad

சென்னை: எனக்கு நாந்தாங்க போட்டி. சந்தானத்தையெல்லாம் போட்டியாக நினைக்கவில்லை. இது கடல் மாதிரிங்க, யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம்... என்று கூறியுள்ளார் நகைச்சுவைப் புயல் வடிவேலு.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறார் வடிவேலு. ஒரே சமயத்தில்ல பல படங்களில் அவர் புக் ஆகியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொண்டேன் என்று தத்துவார்த்தமாக பேசியுள்ளார் வடிவேலு.

இதுதொடர்பாக ஒரு பத்திரிகைக்கு வடிவேலு அளித்துள்ள பேட்டியில்,

நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்த துறையில்தான் இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.

சினிமாவில் நடிக்காமல் இருந்த இத்தனை நாட்களும் நிறைய படங்கள் பார்த்தேன். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று வந்தேன்.

என்னை சந்திக்கும் ரசிகர்கள் நான் படங்களில் நடிக்காமல் இருந்ததற்காக வருத்தப்பட்டனர். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் இதை பற்றியே கேட்டார்கள். நான் ஏன் படங்களில் நடிக்காமல் இருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஓய்வில் இருந்த நாட்களில் வாழ்க்கையை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். இயக்குனர்களிடமும் தொடர்பில் இருந்தேன். சில கதைகள் பற்றியும் விவாதித்தேன். தற்போது மீண்டும் கலக்க வந்துள்ளேன்.

சந்தானத்துடன் போட்டி என்பதெல்லாம் இல்லை. எனக்கு நானே தான் போட்டி. வேறு யாரும் அல்ல. சினிமா கடல் போன்றது. யாரும் இங்கு வரலாம். திறமையானவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும்.

பூபதிபாண்டியன் இயக்கும் பட்டத்து யானை படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அரசியல் நெருக்கடிகள் எதுவும் எனக்கு தற்போது இல்லை. சினிமாவில் மட்டுமே எனது முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் என்றார் வடிவேலு.

பட்டத்து யானை படத்தில் முதலில் வடிவேல நடிப்பதாக இருந்ததாகவும் பின்னர் சந்தானம் அந்த வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது என்பது நினைவிருக்கலாம்.

 

சந்தானமும், கார்த்தியும் எதிரிகளாமே?

Santhanam Karthi Are Enemies

சென்னை: அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியின் எதிரியாக வருகிறாராம் நம்ம காமெடி சந்தானம்.

சுராஜ் இயக்கத்தில் கார்த்தி-அனுஷ்கா ஜோடி நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தில் காமெடி நடிகரான சந்தானமும் உள்ளார். சந்தானம் இருக்கிறார் என்றால் ஏதாவது காமெடி பீஸாக வந்து கலாய்ப்பார் என்று தானே எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் அவர் இந்த படத்தில் புது ரோலில் வருகிறார்.

இது குறித்து சூரஜ் கூறுகையில்,

பிற படங்களுடன் ஒப்பிடுகையில் அலெக்ஸ் பாண்டியனில் சந்தானம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். சீரியஸான காட்சிகளுக்கு இடையே காமெடி சீன்கள் அருமையாக வந்துள்ளது என்றார்.

படத்தில் கார்த்தியின் எதிரியாக வருகிறாராம் சந்தானம். சந்தானம் எதிரியா நடித்தால் எப்பூடி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் அதுவும் காமெடியாகத் தான் இருக்கிறது.

அலெக்ஸ் பாண்டியன் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமந்தா விலகிய படத்தில் ஸ்ருதி ஹாசன்

Sruthi in the movie that rejected by Samantha சமந்தா விலகிய படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். தனுஷ் ஜோடியாக '3 படத்தில் நடித்த பிறகு தமிழில் புதிய படம் எதிலும் ஸ்ருதி ஹாசன் நடிக்கவில்லை. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இது பற்றி அவர் கூறியதாவது: பிரபு தேவா இயக்கும் புதிய இந்தி படத்தில் தற்போது நடித்து வருகிறேன். இதையடுத்து தெலுங்கில் 2 படம், இந்தியில் மேலும் ஒரு படம் என 4 படங்களில் நடிக்கிறேன். அர்ஜுன் ராம்பால் நடிக்க நிகில் அத்வானி இயக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது.

இந்த படத்தில் ஏற்றிருக்கும் வேடம் பற்றி மேலும் விரிவாக இப்போதைக்கு சொல்ல முடியாது. தெலுங்கில் 'காண்டிரீகா இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இதில் ராம் ஜோடியாக நடிக்கிறேன். சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். இதையடுத்து ராம் சரண் தேஜா ஜோடியாக 'எவடு என்ற படத்தில் நடிக்கிறேன் என்றார். 'எவடு படத்தில் முதலில் சமந்தா நடிப்பதாக இருந்தது பின்னர் அவர் அதிலிருந்து விலகினார். அந்த வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இரண்டு கெட்டப்பில் லட்சுமிராய்

Lakshmi in double role இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் லட்சுமிராய். 'ஒன்பதுல குரு படத்தை எழுதி இயக்கும் பி.டி.செல்வகுமார் கூறியதாவது: கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கும் 4 இளைஞர்கள் அதன்பிறகு இன்னொரு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்போது அந்த சூழல் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை நகைச்சுவை ததும்ப கதை கூறுகிறது. வினய், சத்யன், பிரேம்ஜி, அரவிந்த் நண்பர்களாக நடிக்கின்றனர். இதில் இருவித கெட்டப்பில் நடிக்கிறார் லட்சுமி ராய். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார் மந்த்ரா.

கீதா சிங், ரூபாஸ்ரீ, சோனா, மனோபாலா, ஷாம்ஸ், சித்ரா லட்சுமணன், சாமிநாதன், லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, படவா கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடமொன்றில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார். இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆகும் மந்த்ராவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதை கூறியபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். 'இப்படம் என்னை கோலிவுட்டில் இன்னொரு ரவுண்ட் வரவழைக்கும் என்று கூறினார். பி.செல்லத்துரை ஒளிப்பதிவு. 'முகமூடி' கே இசை. எஸ்.சிவகுமார், ஆர்.சிவகுமார் தயாரிப்பு. இவர்கள் விஜய் நடித்த 'நண்பன், 'துப்பாக்கி படங்களின் விநியோகஸ்தர்கள்.
 

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வடிவேலு ரீ என்ட்ரி

Vadivel re-entry இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் ஹீரோவாக ரீ என்ட்ரி ஆகிறார் வடிவேலு. நகைச்சுவை நடிகர் வடிவேலு தனக்கென ஒரு பாணி வகுத்துக்கொண்டு கோலிவுட்டில் வலம் வந்தார்.  இப்போது 1 வருட ஓய்வுக்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது பற்றி வடிவேலு கூறியதாவது: இன்னும் சினிமா களத்தில்தான் இருக்கிறேன். இண்டஸ்ரியைவிட்டு எங்கும் போய்விடவில்லை. படங்களில் நடிக்காமல் இருந்த ஓய்வு நாட்களில் எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் பொழுதை கழித்தேன். சினிமாவில் பிஸியாக இருந்தபோது பார்க்க முடியாமல்போன படங்களை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தேன். அப்போது என்னை சந்தித்து ரசிகர்கள் படங்களில் என்னை பார்க்காதது பற்றி தனது வருத்தத்தை தெரிவித்தார்கள். இப்போது நிலைமை சீரடைந்துவிட்டது.

சினிமாவை நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். இயக்குனர்களிடம் எப்போதும் தொடர்பிலேயே இருந்தேன். கே.எஸ்.ரவிகுமார் சமீபத்தில் 'ஆப்ரிகாவில் வடிவேலு என்ற ஸ்கிரிப்டை எனக்கு கூறினார். பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன். இது எனக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. எனது ரசிகர்களை ஏமாற்றமாட்டேன். ஆப்ரிகாவில் இதன் ஷூட்டிங் நடக்க உள்ளது. 'இம்சை அரசன் படத்தின் 2ம் பாகம் படத்திலும் நடிக்க உள்ளேன், சந்தானம் பற்றி கேட்கிறார்கள். சினிமா துறை ஒரு கடல். திறமையானவர்களுக்கு எப்போதும் திரையுலகில் இடம்மிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனக்கு போட்டி நான்தான். விஷால் நடிக்கும் 'பட்டத்து யானை படத்தில் நடிக்க மறுத்தீர்களா என கேட்கிறார்கள். அந்த படத¢தில் நடிப்பது தொடர்பாக யாரிடமும் நான் பேசவில்லை. இவ்வாறு வடிவேலு கூறினார்.
 

கிசு கிசு - சிஸ்டர்ஸ் போட்டி

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது...

ஒரு எழுத்து படத்துக்கப்பறம் வந்த படங்கள்ல எத ஏத்துக்கலாம்னு கார்த்திகை நடிகை யோசனை பண்ணிட்டிருந்தாராம்... இருந்தாராம்... பாரதிகிங் பட வாய்ப்பு வந்ததும் ஓகே சொல்லிட்டாராம். பிரச்னைல சிக்கி ஷூட்டிங் முடிய நாளாயிடுச்சாம். இதுக்கிடைல அவரோட சிஸ்டர், பெல் இயக்கம் படத்துல் அறிமுகறாரு. ஆரம்பத்துல சிஸ்டர போட்டியா நெனக்கலையாம். ஆனா புதுசா தேடி வர்ர வாய்ப்புகள் சிஸ்டருக்குத்தான் வருதாம். இதுல அப்செட்டான அக்கா நடிகை தன் கவனத்த மல்லுவுட்டுக்கு திருப்பிட்டாராம்... திருப்பிட்டாராம்...

வருஷாவருஷம் சபரி மலைக்கு போற த்ரி ஹீரோவுக்கு மல ஏறின பலன் கெடச்சிருக்காம்... கெடச்சிருக்காம்... மல்லுவுட்ல மூட்டி நடிகர் படத்துல கெஸ்ட் ரோல் நடிக்க வந்த அழைப்ப ஏத்துக்கிட்ட ஹீரோ சமீபத்துல நடிச்சி கொடுத்தாராம். அதே வேகத்தோட மலைக்கு போன ஹீரோ கூடிய சீக்கிரம் மல்லுவுட்ல ஹீரோவா நடிக்க அருள்புரிய வேண்டிகிட்டாராம்... வேண்டிகிட்டாராம்...

தீபாவளி ரேஸுக்கு தயாராயிட்டிருந்த சாலம இயக்கத்தோட யான படம் அந்த போட்டிலயிருந்து ஜகா வாங்கி டிசம்பருக்கு தள்ளிடுச்சாம்... தள்ளிடுச்சாம்... திருப்தி இல்லாத சீன்கள ரீ ஷூட் முடிச்சவரு கிராபிக்ஸ் வேலய முடிச்சிட்டு ரீ ரெக்கார்டிங்க ஆரம்பிச்சட்டாராம். தீபாவளி சென்டிமென்ட்டுக்காக பஞ்ச் ஹீரோ படத்துலயும், இனிஷியல் ஹீரோ படத்தோடவும் யான பட டிரைலர சேத்து ஓட்ட ஏற்பாடு பண்ணிருக்காராம்... இருக்காராம்...
 

'துடைச்சுப் போடும்' பேப்பர்தான் ஆண்கள்... சோனாவுக்கு எதிராக ஆண்கள் கொந்தளிப்பு!

Tn Men Welfare Association Warns Sona

சென்னை: துடைத்துப் போடும் டிஷ்யூ பேப்பர் மாதிரிதான் ஆண்கள்.அவர்களைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதெல்லாம் வீணானது என்று பேசியுள்ள நடிகை சோனா வீட்டு முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 19ம் தேதி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாம். சோனா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ஆண்கள், டிஷ்யூ பேப்பர் போன்றவர்கள். திருமணம் என்பது முட்டாள்தனமானது; ஆண்களோடு சேர்ந்து வாழ்வது என்பது அதை விட முட்டாள்தனமானது என்று கூறியிருந்தார். இதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வாரப் பத்திரிகை ஒன்றிற்கு கவர்ச்சி நடிகை சோனா அளித்த பேட்டியில், ஆண்களை மிகவும் கேவலப்படுத்தும் விதமாக, கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக, கடைபிடிக்கும் திருமண முறையையும், இந்திய கலாச்சாரத்தையும் இழிவுப்படுத்தும் வகையில், அவரது கருத்து அமைந்துள்ளது.

அவர், தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்று, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், உலக ஆண்கள் தினமான, இம்மாதம், 19ம் தேதி, தமிழ் மக்களை ஒன்று திரட்டி, சோனாவின் வீடு முற்றுகையிடுவோம். நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சோனாவை நீக்கவும், ‌கோரிக்கை விடுப்போம் என்று எச்சரித்துள்ளனர்.

 

'அம்மாவின் கைப்பேசி' படத்துக்கு தடை நீங்கியது: தீபாவளிக்கு ரிலீஸ்

சென்னை: அம்மாவின் கைப்பேசி படத்திற்கு சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை.

ban issue solved ammavin kaipesi likely release
Close
 

தங்கர்பச்சான் இயக்கத்தில் சாந்தனு-இனியா ஜோடி நடித்துள்ள அம்மாவின் கைப்பேசி படத்திற்கு தடை விதிக்கக் கோரி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது மனைவி செல்வராணி ஆகியோர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு à®'ன்றை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

கடந்த மார்ச் மாதம் கடலூரில் உள்ள மேக்ஸ் புரோ மார்க்கெட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சண்முக சுந்தரம், உள்ளூர் "டிவி சேனலில், விளம்பரம் வெளியிட்டார். "à®'ரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஆறு மாதங்களில் ரூ.2.20 லட்சம் கிடைக்கும் என அதில் கூறப்பட்டது. இந்த விளம்பரத்தைப் பார்த்து நாங்கள், 10.10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். அதன்பின் உறுதியளித்தபடி, போனஸ் தொகை வழங்கப்படவில்லை. பின் தேதியிட்ட காசோலைகளை வழங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

மேக்ஸ் புரோ என்டர்டெய்னர்ஸ் என்னும் நிறுவனத்தை துவக்கினார். அம்மாவின் கைப்பேசி படத்தின், ஸ்டுடியோ உரிமையை, மேக்ஸ் புரோ என்டர்டெய்னர்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக விளம்பரங்கள் வெளிவந்தன. பொது மக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை, அம்மாவின் கைப்பேசி படத்தின் உரிமையை பெறுவதற்கு, பயன்படுத்தியுள்ளனர். தீபாவளி அன்று இந்தப் படம் திரையிடப்படும் என, பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எங்களுக்கு கொடுத்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் அம்மாவின் கைப்பேசி படத்தை வெளியிடக் கூடாது. நெகட்டிவ் மற்றும் படச் சுருள், ஜெமினி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வசம் உள்ளது. எனவே, அம்மாவின் கைப்பேசி படத்தின் நெகட்டிவ் மற்றும் படச் சுருளை வெளியிடக் கூடாது என மேக்ஸ் புரோ என்டர்டெய்னர்ஸ் நிறுவனம், தங்கர்பச்சன் உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதித்தது. இதை எதிர்த்து தங்கர்பச்சான் சார்பில் மேக்ஸ்புரோ மார்க்கெட்டர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ராமனாதன் சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு தடை விதி்ததார்.

இதையடுத்து அம்மாவின் கைப்பேசி தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று தெரிகிறது.