கமல் மறுத்ததால் வேறு நடிகரை வைத்து மூன்றாம் பிறை 2-ம் பாகம் தயாரிக்க முடிவு!

A Sequel Moondram Pirai

கமல் நடிக்க மறுத்தாலும், மூன்றாம் இரண்டாம் பாகத்தை உருவாக்காமல் விடமாட்டோம் என்று சிலர் கிளம்பியுள்ளனர்.

கமலுக்கு பதில் வேறு ஹீரோ, அதே ஸ்ரீதேவியை வைத்து இந்தப் படத்தை உருவாக்கும் திட்டத்தில் மும்முரமாக உள்ளனர்.

கமல் - ஸ்ரீதேவி நடிப்பில், இளையராஜா இசையில் காலத்தால் அழியாத காவியமாக மூன்றாம் பிறையை உருவாக்கியிருந்தார் பாலு மகேந்திரா. இந்தப் படத்தில் நடித்ததற்காக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

படத்தின் பெரிய பலமாக நின்றது க்ளைமாக்ஸ். இதே பாணியில் அதன் பிறகு பல படங்களின் க்ளைமாக்ஸ் அமைய காரணமாக அமைந்தது.

இந்த படத்தின் 2-ம் பாகத்தை இந்தி, தமிழில் மீண்டும் எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. கிளைமாக்சில் கமலை விட்டு பிரியும் ஸ்ரீதேவி நீண்டநாட்களுக்கு பிறகு உண்மை தெரிந்து அவரிடமே திரும்பி வந்து சேர்வது போல் 2-ம் பாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கமலும், ஸ்ரீதேவியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவர்களை அணுகி பேசினர்.

ஆனால் கமல் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். முதல் பாகம் சோகமாக முடிந்ததுதான் அந்தப் படத்துக்கு காவிய அந்தஸ்தைத் தந்தது என்றும், அதை மீண்டும் எடுத்து மகிழ்ச்சியாக முடிப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த வயதில் அந்த கேரக்டருக்கு தான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்றும் கமல் தெரிவித்தார்.

கமல் ஒப்புக் கொள்ளாததால், அவருக்குப் பதில் வேறு இந்தி நடிகரை வைத்து எடுக்க முயற்சிக்கிறார்கள். ஸ்ரீதேவி பாத்திரத்தில் மீண்டும் அவரையே நடிக்க வைக்கும் முயற்சியும் தொடர்கிறது.

நமக்கென்னவோ கமல் சொல்வதுதான் சரியாகப் படுகிறது!

 

சென்னையில் நாளை மறுநாள் ரஹ்மானின் இசைமழை.. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்பு!

100 Plus Musicians Perform Ar Rahma

ஜெயா டிவிக்காக வரும் டிசம்பர் 29-ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.

தாய் மண்ணே வணக்கம் என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது.

ஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக உள்ளூரில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவே. இதற்கு முன் தரமணியில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ரஹ்மான். அதன் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் நடத்துகிறார்.

இந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரோஜா முதல் கடல் வரை தமிழ் பாடல்கள் மட்டுமே இடம் பெறும் என்று ரஹ்மானே அறிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகர்கள், 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா இது.

 

முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க கமல் சார்! - திரையரங்க உரிமையாளர்கள்

Kamal Reconsider His Dth Decision

சென்னை: விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பும் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலர் ஆர். பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியது:

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மூலம் தமிழ்நாடு சினிமாவில் இப்போது புதிதாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. வரும் ஜன. 10-ல் டி.டி.ஹெச். மூலம் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பிவிட்டு ஜன. 11-ஆம் தேதி திரையரங்குகளின் மூலம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பிவிட்டு அடுத்த நாள் திரையரங்குகளில் வெளியிட்டால் ரசிகர்கள் வரமாட்டார்கள். புதிய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாலும் திருட்டு சி.டி. அதிகமாக இருப்பதாலும் திரையரங்குகளுக்குக் கூட்டம் வருவதில்லை.

தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள்தான் உள்ளன. இந்த நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளே இல்லாமல் போகும்.

விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் வெளியிடும் தன் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி.ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்தத் திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படம் திரையிட அனுமதிக்க மாட்டோம்.

விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்.ல் வெளியிட்ட பின் வெளியிடும் சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்குத் தொழில் தொடர்பாக எந்த ஒத்துழைப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திடம் இருந்து கிடைக்காது," என்றார்.

 

தங்க மகன் தலைப்பு வேண்டாம்.. புதிய தலைப்பை யோசியுங்கள்- இயக்குநருக்கு விஜய் போட்ட உத்தரவு

Actor Vijay Stricltly Says No Old Titles

சென்னை: தனது அடுத்த படத்துக்கு எந்த பழைய படத்தின் தலைப்பும் வேண்டாம். புதிய தலைப்பை யோசித்து வையுங்கள் என்று இயக்குநர் விஜய்க்கு நடிகர் விஜய் கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.

இயக்குநர் விஜய்யும் நடிகர் விஜய்யும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. பொதுவாக விஜய் படங்கள் முதலில் தலைப்பு அறிவிக்கப்படும். அடுத்துதான் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்.

எனவே சீக்கிரமே தலைப்பை அறிவிக்கும் முயற்சியில், பல்வேறு தலைப்புகளை யோசித்து வந்தனர்.

முதலில் தலைவன் என்ற தலைப்பை அறிவித்தனர். ஆனால் அதை ஜெஜெ டிவி பாஸ்கரன் தன் படத்துக்கு வைத்து, துப்பாக்கியுடன் போஸெல்லாம் கொடுத்திருந்தார்.

இதனால் ரஜினியின் படத்தலைப்பான தங்கமகன் என்ற பெயரைச் சூட்ட முடிவு செய்தனர். ஆனால் இது அறிவிப்பாக வரும் முன்னரே ஏக எதிர்ப்பு. இந்தத் தலைப்புக்கு சொந்தக்காரரான சத்யா மூவீசும் முதலில் சம்மதித்து, பின் மறுத்துவிட்டது.

ரஜினியின் வேறு படத் தலைப்புகளை வைக்கலாமா... தர்மத்தின் தலைவன் தலைப்பை எடுக்க அனுமதி கோரலாமா என்றெல்லாம் யோசித்தனராம்.

ஆனால், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்பும் என்பதால், வேண்டாம் என விட்டுவிட்டார்களாம்.

'ஆனது ஆச்சு.. ஷூட்டிங் முடியறதுக்குள்ளவாவது ஒரிஜினல் தலைப்பு சொல்லுங்க, அது போதும்' என்று கூறிவிட்டாராம் விஜய்.