கண்ணூர் ராணுவ முகாமில் மோகன்லாலுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

Mohanlal Attends Territorial Army Training Camp

கண்ணூர்: நடிகர் மோகன்லாலுக்கு கண்ணூர் ராணுவ முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பல படங்களில் ராணுவ வீரர் வேடத்தில் நடித்துள்ளார். இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக கடந்த 2009-ம் ஆண்டு மோகன்லாலுக்கு இந்திய எல்லைப்புற ராணுவத்தின் 122வது பட்டாலியனில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு கண்ணூரில் உள்ள ராணுவ முகாமில் மோகன்லாலுக்கு முதல் கட்டமாக ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்போது, நாட்டின் சிறந்த ராணுவப் பயிற்சி முகாமாக கண்ணூர் முகாம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கண்ணூரில் நடந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியிலும் மோகன்லால் கலந்து கொண்டார்.

தற்போது 2-வது முறையாக மோகன்லாலுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக நேற்று காலை கண்ணூர் ராணுவ முகாமுக்கு மோகன்லால் சென்றார்.

அங்கு ராணுவ கமாண்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் நடந்த ராணுவ வீரர்கள் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். காலை 6 மணிக்கு நடந்த மராத்தானில் பங்கேற்று ஓடினார். பின்னர் பல்வேறு உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.

இன்றைய நிகழ்ச்சியில், மோகன்லாலுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், "ராணுவ சீருடையை அணியும்போது பெருமிதமாக உள்ளது. கடவுளின் அருளாள் இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இங்கே இன்னும் சில தினங்கள் இருக்க ஆசைதான். ஆனால் என் தாயாருக்கு உடல்நலமில்லாததால் செல்ல வேண்டியிருக்கிறது," என்றார்.

 

சசிகலா அக்கா மகன் பாஸ்கரனுக்கு ஜோடி சனாகான்!

Sana Khan Be Paired Up With Bas Thalaivan

சசிகலா அக்கா மகன் பாஸ்கரன், தன் பெயரை பாஸ் என்று மாற்றிக் கொண்டு ஹீரோவாக அறிமுகமாகும் தலைவன் படத்தில், அவருக்கு ஜோடியாக சனா கான் நடிக்கிறார்.

இன்னொரு ஜோடியாக நிகாஷா படேல் அறிமுகமாகிறார்.

புளு ஓஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாஸ் நடிக்கும் தலைவன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.விஜய்காந்த நடித்த உளவுத்துறை படத்தை இய‌க்கிய ரமேஷ் செல்வன் இந்த படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

சந்தானம், சுமன், ஜெயபிரகாஷ், இளவரசன், வின்சன்ட் அசோகன், சுரேஷ் கிருஷ்னா, இளவரசு, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜாபர் கதை வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் 15 ம் தேதி சென்னையில் துவங்கி கோவா, ஹைதராபாத்,மூணார் மற்றும் சிக்கிம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

பிப்ரவரியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

ரஜினி உடல் நிலை குறித்து வீண் வதந்தி!

Rajini Is Fine Dont Belive Rumour

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நிலை குறித்து இன்று பிற்பகலிலிருந்து பரவிய வதந்திகளால் ரசிகர்கள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

ரஜினி நலமுடன் இருப்பதாகவும், அவர் பட வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் அவரது வீட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி, ராணா படப்பிடிப்பின்போது உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவர் டிஸ்சார்ஜ் ஆனாலும், அவர் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட, அடுத்தடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, கடைசியில் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, நலமுடன் வீடு திரும்பினார்.

அதன் பிறகு சில மாத ஓய்வுக்குப் பிறகு, வழக்கம் போல விழாக்களில் பங்கேற்று வருகிறார். கோச்சடையான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவனையில் சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஆனால் அது பொய்யான தகவல் என்று பின்னர் தெரிய வந்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் ரஜினி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டது.

இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகினர். தங்களுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

இதுகுறித்து ரஜினியின் வீட்டிலும், அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, "ரஜினி சார் நல்லா இருக்கார். வழக்கம்போல அவர் படவேலைகளில் பிஸியாக இருக்கிறார். வீண் வதந்தி. ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம்," என்றனர்.

இந்த பொய்யான செய்தி ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

 

ரீமிக்ஸ் என்பது கற்பழிப்புக்கு சமம் - எம்.எஸ்.வி. கடுப்பு

Msv Turns Against Remixing Old Hits

சென்னை: புகழ்பெற்ற பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கற்பழிப்புக்கு சமம் என்று மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வேதனை தெவித்துள்ளார்.

இன்றைக்கு புகழ்பெற்ற பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.

பெரும்பாலான ரசிகர்கள், மூத்த கலைஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ரீமிக்ஸ் மட்டும் நிற்கவே இல்லை.

இந்த நிலையில் ஜெயா டிவியின் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிக்காக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் ரீமிக்ஸ் குறித்து கேட்கப்பட்டது. அவர் பதிலளிக்கையில், "பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது ரொம்ப தப்பான காரியம். அதை பண்ண தைரியம் வேண்டும். ரீமிக்ஸ் என்றால் கற்பழிப்பு என்று அர்த்தம். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. புதுசா பண்ணுங்க. சொந்த கற்பனையை பயன்படுத்துங்க. ரீமிக்ஸ் பண்ண வேண்டாம். ரீமிக்ஸ் என்பது சில நேரம் தப்பாக போய்விடும். அவரவர் கற்பனையில் நல்லது செய்யுங்கள்," என்றார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி போன்றோரின் பாடல்களுக்கு இசையமைத்தது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், "நான் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினியை நினைத்து பாடல்களை உருவாக்கவில்லை. படத்தின் கேரக்டர்களுக்கு என்ன மெட்டு தேவையோ அதைப் போட்டு கொடுத்தேன். பொருத்தமான பாடல் வரிகளையும் அதில் சேர்த்தேன்.

அந்த காலத்து பாடல்களை போல் இப்போது இல்லையே என்று பலரும் கேட்கிறார்கல். அந்தக் காலத்துப் பாடல்களைப் போல இப்போதும் போட முடியும். ஆனால் அப்படி கேட்டு யாரும் பாட்டு வாங்குவதில்லையே.

முன்பெல்லாம் இசைக் கலைஞர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து பாடல்களை உருவாக்கினோம். இப்போது மிஷின் வந்துவிட்டது. மிஷினே பாட்டு வேலைகளையெல்லாம் செய்கிறது. மிஷினை வைத்து பாட்டுபோட எனக்கு தெரியாது," என்றார்.

 

தமிழ் பேசும் கதாநாயகிகளைத் தேடி ஒரு பயணம்

Raj Tv S Tamil Pesum Kadhanayagi

பாடகிகளை தேடி பயணம் செய்தாகிவிட்டது. நடனமாடுபவர்களை தேடி நாடு முழுவதும் சென்றாகிவிட்டது. இனி கதாநாயகிகளை தேடி புறப்பட்டுள்ளது தொலைக்காட்சிக்குழு ஒன்று. ராஜ் டிவியின் ரியாலிட்டி ஷோவான ‘தமிழ் பேசும் கதாநாயகி'க்காக தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் தேடல் தொடங்கியுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் தமிழ் பேசும் கதாநாயாகிகளை காண்பது அரிது. வடஇந்திய நடிகைகளும், மலையாள மங்கைகளும் கோலோச்சும் தமிழ் திரைப்பட உலகில் தமிழ் நாயகிகளுக்கு மேடை போட்டுத் தருகிறது ராஜ் தொலைக்காட்சி.

தமிழ் பேசும் நாயகிகளைத் தேடி பெங்களூர், மும்பை, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, பாலக்காடு மற்றும் மலேசியா வரை செல்கிறது ராஜ் டிவி குழு. ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ள இந்த கதாநாயகி தேடலில் ஒவ்வொரு ஊரிலிருந்தும் 16 முதல் 25 வயது வரை உள்ள இளம் அழகிய பெண்கள் தலா 10 பேர் வீதம் 70 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இரண்டாம் கட்டத்தில், மேடை மற்றும் திரை அனுபவம் பெற்ற எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரா, கிரேசி மோகன் ஆகியோர் நடிப்பு பயிற்சி முகாம் மூலம் இந்த அழகிய பெண்களுக்கு அடிப்படை நடிப்பு பயிற்சி அளிக்க உள்ளனர். முடிவில் நடிப்புத்திறமை அடிப்படையில் 40 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மூன்றாவது கட்டமாக தன்னம்பிக்கை அளிக்கும் பயிற்சி, நடிப்பு, நடனம், நேர மேலாண்மை ஆகியவற்றுக்கான பயிற்சியும் திரை பிரபலங்கள் மூலம் அளிக்கப்படும். இந்த கட்டத்தில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதை அடுத்து போலீஸ் பயிற்சி முகாம். இதில் அவர்கள் உடல் ஆரோக்கியத்தோடும் எந்நேரமும் புத்துணர்வோடு இருக்கவும் பழகுவார்கள். இதற்குப்பின் ஐந்தாம் கட்டம் செல்பவர்கள் 20 பேர் மட்டுமே. இந்த 20 பேரும் மலேசியா அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு வீடியோ ஆல்ப நடிப்பு பயிற்சியில் கேமரா பயம் நீங்கி அதற்கும் பழக்கப்படுவார்கள். பயிற்சிகளும் திரையுலக பிரபலங்கள் மூலம் சொல்லித்தரப்படும்.

இதன்பின் இந்த 20 பேரும் ஒரு மாபெரும் மேடையில் வர, திரையுலக பிரபலங்கள் பார்வையிட்டு 5 பேரை தேர்ந்தெடுப்பார்கள். வென்றவர்களுக்கு வைர நகைகள், மற்றும் வீடியோ கேமரா போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த 5 பேருக்கும் சினிமா கதாநாயகி வாய்ப்பு மட்டுமின்றி விளம்பர மாடல், தொடர் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

கதாநாயகி தேடலில் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த், வெற்றி மாறன், ராஜேஷ். நடிகர்கள் ஜீவா, கார்த்தி, ஸ்ரீகாந்த், அருண்விஜய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஜான் விஜய் மற்றும் ராஜ் டிவியின் மாலா மணியன் ஆகியோர் தயாரித்து வழங்கும் இந்த ‘தமிழ் பேசும் கதாநாயகி' நிகழ்ச்சி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 முதல் 10.30 மணி வரை ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

 

கண்ணூர் ராணுவ முகாமில் மோகன்லாலுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

Mohanlal Attends Territorial Army Training Camp

கண்ணூர்: நடிகர் மோகன்லாலுக்கு கண்ணூர் ராணுவ முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பல படங்களில் ராணுவ வீரர் வேடத்தில் நடித்துள்ளார். இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக கடந்த 2009-ம் ஆண்டு மோகன்லாலுக்கு இந்திய எல்லைப்புற ராணுவத்தின் 122வது பட்டாலியனில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு கண்ணூரில் உள்ள ராணுவ முகாமில் மோகன்லாலுக்கு முதல் கட்டமாக ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்போது, நாட்டின் சிறந்த ராணுவப் பயிற்சி முகாமாக கண்ணூர் முகாம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கண்ணூரில் நடந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியிலும் மோகன்லால் கலந்து கொண்டார்.

தற்போது 2-வது முறையாக மோகன்லாலுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக நேற்று காலை கண்ணூர் ராணுவ முகாமுக்கு மோகன்லால் சென்றார்.

அங்கு ராணுவ கமாண்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் நடந்த ராணுவ வீரர்கள் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். காலை 6 மணிக்கு நடந்த மராத்தானில் பங்கேற்று ஓடினார். பின்னர் பல்வேறு உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.

இன்றைய நிகழ்ச்சியில், மோகன்லாலுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், "ராணுவ சீருடையை அணியும்போது பெருமிதமாக உள்ளது. கடவுளின் அருளாள் இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இங்கே இன்னும் சில தினங்கள் இருக்க ஆசைதான். ஆனால் என் தாயாருக்கு உடல்நலமில்லாததால் செல்ல வேண்டியிருக்கிறது," என்றார்.

 

கல்லூரி விழாக்களில் பங்கேற்க காசு கேட்பதா? - சினேகா, பரத்துக்கு கண்டனம்

Hindu Organisation Condemns Sneha Bharath   

சென்னை: கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வதற்குக் கூட பணம் கேட்கிறார்கள் சினேகா, பரத் ஆகியோர். இது கண்டிக்கத்தக்கது என்று இந்துமகா சபை என்ற அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்து மதம் பாரம்பரிய பெருமைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. சேவை மனப்பான்மையுடன் இந்து மக்களுக்காக ஏராளமான பொதுச்சேவைகள் செய்து வருகிறோம்.

அண்மையில் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த விழாவொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் பரத்தை மாணவர்கள் அழைத்தனர். ஆனால் அந்த விழாவில் பங்கேற்க பரத் ரூ.5 லட்சம் கேட்டாராம். அதிச்சியாகிவிட்டது.

பரத்தை டெலிபோனில் தொடர்பு கொண்டு, மாணவர்களாகிய ரசிகர்கள்தான் உங்களுக்கு அடையாளம் தந்து உயரத்தில் ஏற்றி வைத்துள்ளனர். கல்லூரி விழாவுக்கு வர பணம் கேட்கலாமா என கேட்டேன். போனை துண்டித்து விட்டார்.

பிறகு நடிகை சினேகாவை அழைத்தோம். அங்கும் இதே பதில்தான் கிடைத்தது. வேறு பல நடிகர்களையும் அழைத்தோம். அவர்களும் லட்சக்கணக்கில் பணம் கேட்டார்கள். நடிகர்களை பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளைஞர்கள் இனிமேல் விழிப்புணர்வுடன் செயல் படவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

ஆர்த்தி நடிக்க வந்த கதை தெரியுமா?

2 Comedy Actress Aarthi Ganeshkar Special Pages

ஆர்த்தி கணேஷ்கர் திரையில் வந்தாலே இயல்பாகவே உதடுகள் புன்னகை பூக்கும். சிறுவயதில் சினிமாவில் நடிக்கத்தொடங்கிய ஆர்த்தி இன்றைக்கு மிகச்சிறந்த காமெடி நடிகை என்ற பெயரை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இன்றைக்கு சென்னையில் செட்டில் ஆகிவிட்டாலும் ஆர்த்தியின் பிறந்த ஊர் ஊட்டி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஆர்த்தி தனது கணவர் கணேஷ்கருடன் சிறுவயதில் என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சினிமா வாய்ப்புகள் அதிகரிக்கவே குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். 63 படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆர்த்தி பொதிகை தொலைக்காட்சியில் வந்த கதையின் கதை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார்.

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் 10 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆர்த்தி சினிமாவில் 2004 ம் ஆண்டு முதல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சில சீன்களில் நடித்தாலும் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்படும் விதமாக அமைந்துள்ளது.

நடிகை மந்த்ரா வடபழனி ஜே. ஆர்.கே. ஸ்கூலில் ஆர்த்தியின் கூட படித்தவராம். இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் ஆகியோர் இவரின் ஸ்கூல் சீனியர்ஸ். முதலில் ஒல்லியாகத்தான் இருந்த ஆர்த்தி, மீனாட்சி கல்லூரியில் படிக்கும் போது அருகில் இருந்த பேக்கரியில் ஜூஸ், ஸ்நாக்ஸ் வாங்கி குடித்து குண்டாகி விட்டாராம்.

சினிமா, சின்னத்திரை என உற்சாகமாக நடித்து வரும் ஆர்த்தி தன்னுடன் சிறுவயதில் இருந்து நடித்த கணேஷ்கரை திருமணம் செய்து கொண்டார். கலைஞர் தொலைக்காட்சியில் மாயா மாயா, மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆர்த்தி கணேஷ்கர் ஜோடி தற்போது சிரிப்பொலி தொலைக்காட்சியில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற நிகழ்ச்சியினை இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.

 

'சிவாஜி 3டி' ட்ரெயிலர் - திங்கள் கிழமை வெளியீடு!

Sivaji 3 D Trailer Launch On Monday

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி - தி பாஸ் படத்தின் 3 டி பதிப்பின் ட்ரெயிலரை திங்கள்கிழமை வெளியிடுகிறது ஏவி எம் நிறுவனம்.

5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ரஜினியின் சிவாஜி தி பாஸ். 3 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடும் படமாக இருந்ததை, இரண்டே கால் மணி நேரமாக ட்ரிம் செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த ட்ரெயிலரை வரும் திங்களன்று மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் வெளியிடுகின்றனர்.

இதனை ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய பதிப்புக்கு 'சிவாஜி 3 டி' என தலைப்பிட்டுள்ளனர்.

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் 3 டி படம் எனும் பெருமையுடன் சிவாஜி 3 டி வெளியாகிறது. அவரது அசத்தல் ஸ்டைல் மக்களை ஈர்க்கும் தோற்றம், இதுவரை இல்லாத புதிய அனுபவத்தை சினிமா ரசிகர்களுக்குத் தரப்போகிறது," என்று குறிப்பிட்டுள்ளனர் ஏவிஎம் நிறுவனத்தினர்.

செப்டம்பர் மாதம் படம் வெளியாகிறது.

 

நீதானே என் பொன்வசந்தம் பாடல் உருவான விதம் - ரசிகர்களுக்குச் சொல்கிறார் இளையராஜா!

Ilayaraja Goutham Menan Discuss Jaya Tv

ஜெயா டிவியின் சுதந்திர சிறப்பு நிகழ்ச்சியில் இளையராஜாவும் கவுதம்மேனனும் இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்க உள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா - சமந்தா நடித்துள்ள படம் ‘நீதானே என் பொன்வசந்தம்'. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.

இதற்கான பாடல்களை லண்டனில் சென்று இசை அமைத்தார் இளையராஜா. ‘நீதானே என் பொன் வசந்தம்' படத்தின் தலைப்பைப் போலவே பாடல்களும் கவிதையாய், மெலடி மெட்டுக்களாய் அமைந்துள்ளன. அதனால்தான் இந்தப் படம் வெளியாகும் முன்பே பாடல்களைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தினைப் பற்றியும், பாடல்கள் உருவானவிதம், லண்டனில் அவை ஒலிப்பதிவு செய்யப்பட்ட விதம் பற்றியும் கவுதம் மேனனும், இளையராஜாவும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஜெயா டிவி'யில் ஆகஸ்ட் 15 ம் தேதி இரவு 9.30 மணிக்கு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.