மணிரத்னத்தின் கடல் பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவை கலங்கடித்துவிட்டாராம்.
மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவாகிறார் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம். படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
படத்தில் நாயகன் அனாதை ஆனாலும் ஊர் மக்களின் உள்ளங்களில் வாழ்பவன். நாயகனை எடுத்து வளர்த்த பொன்வண்ணன் ஒரு நாள் அவர் அனாதை என்ற உண்மையை உடைக்கிறார். இதைக் கேட்ட நாயகன் குமுறி, குமுறி அழ வேண்டும். காட்சியை நாயகனிடம் மணிரத்னம் விவரிக்க கௌதம் இயக்குனர் எதிர்பார்த்த மாதிரியே அழுது உருகிவிட்டாராம். இதைப் பார்த்த படக்குழுவும் கலங்கிவிட்டதாம்.
புதுமுகமாக இருந்தாலும் அவர் நடிப்பை பார்த்து அசந்த படக்குழுவினர் நாயகனை மனதாரப் பாராட்டினார்களாம். நவரச நாயகனின் மகன் அதுவும் மணிரத்னத்தின் இயக்கத்தில் என்றால் கௌதம் நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும்.
இந்த படத்தில் தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சாமி இந்த படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.