ரஜினியின் அடுத்த படம்... இயக்குநர் கேவி ஆனந்த்.. பெரும் தொகை அட்வான்ஸ்!

Ags Pays Hefty Advance Rajini Kv Aanand

சென்னை: ஒருவழியாக சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட இயக்குநர் குறித்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.

நாம் முன்பே கூறியபடி, இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் கேவி ஆனந்த் தானாம்.

கேவி ஆனந்த் கூறிய கதை ரஜினிக்குப் பிடித்துவிட்டதால், அவருக்கு மிகப் பெரிய சம்பளத்தைப் பேசி முடித்துள்ளதாம், ஏஜிஎஸ் நிறுவனம்.

வழக்கமாக எந்த நிறுவனத்திடமும் அட்வான்ஸ் வாங்குவதில்லை ரஜினி. படம் வெளியானதும் ஒரே செட்டில்மெண்டாக முடித்துக் கொள்வது அவர் வழக்கம். அதையும் மாற்றி, அவருக்கு பெரிய தொகையை அட்வான்ஸாகக் கொடுத்துள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.

மாற்றான் தோற்றாலும் கேவி ஆனந்தின் சம்பளத்தைக் குறைக்காமல், அவர் திருப்தி எனும் அளவுக்கு சம்பளம் பேசியுள்ளார்களாம்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம். இந்த புதுப்பட அறிவிப்பு வெளியான பிறகுதான் ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது!

 

16 வயது பெண்ணை முத்தக்காட்சியில் நடிக்க வைப்பதா? - மணிரத்னத்துக்கு பார்த்திபன் எதிர்ப்பு

Parthiban Opposes Manirathnam Lip Lock Scene With Teen   

சென்னை: காதல் என்ற பெயரில் 16 வயது மைனர் பெண், உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியில் நடிக்க வைத்திருப்பது தவறு என மணிரத்னத்துக்கு இயக்குநர் பார்த்திபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘கடல்' படத்தில் இளம் புதுமுகங்கள் கவுதமும் துளசியும் உதட்டோடு உதடு பதித்து முத்தக் காட்சியில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் மீடியாவில் வலம் வருகின்றன.

இதற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தக் காட்சி குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "உதட்டோடு உதடு முத்தக் காட்சி, இளம் வயதினரை தவறாக காட்டுவதோடு, குழந்தைகளிடத்தில் உண்டாகும் பகுத்தறிவுக்கு பொருந்தாத காதல் உணர்வை தோற்றுவித்துவிடும்.

உதாரணமாக, எனது ‘அழகி' படத்தில் 10 வயது குழந்தைகள் காதல் செய்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் கூட காட்சி இருந்தது.

குழந்தைகளை காதலர்களாக காட்டுகிற காட்சிகள் பரவாயில்லை. அவை அறியாமையுடன் கூடியவையாக இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் குழந்தைகளை அவ்விதம் காட்டுவதை நான் எதிர்க்கிறேன்," என்றார்.

ஆனால் சம்பந்தப்பட்ட 16 வயது ஹீரோயின் துளசியின் அம்மா, முன்னாள் நடிகை ராதாவோ, "காட்சிக்கு தேவையென்றால் ஹீரோயின்களை இயக்குநர்கள் கதைக்கேற்ப கவர்ச்சியாக காட்டுவதில் தவறில்லை," என்று கூறியுள்ளார்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சஞ்சய் தத் சந்திப்பு!

Sanjay Datt Meets Rajini At Poes Garden

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 'போலீஸ் கிரி' என்ற படத்தில் நடிக்கிறார் சஞ்சய் தத். இது தமிழில் ஹிட்டான 'சாமி' படத்தின் ரீமேக்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. பொங்கல் திருவிழா சென்னையில் தமிழ் முறைப்படி கொண்டாடினார் சஞ்சய் தத்.

இந்த நேரத்தில் தனது வீட்டுக்கு வரும்படி ரஜினியிடம் இருந்து சஞ்சய்தத்துக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு சஞ்சய்தத் சென்றார். அவருடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் சென்றிருந்தார்.

சஞ்சய் தத்துக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார் ரஜினி. பின்னர் இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து சஞ்சய்தத் கூறும் போது, "ரஜினி சாரை அவரது வீட்டில் சந்தித்தேன். சில மணிநேரங்கள் பேசினோம். அரசியல், இந்தி சினிமா போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.

நாங்கள் புறப்பட்டபோது ரஜினி சாருடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். ரஜினியின் மனைவி எனது குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்," என்றார்.

 

விஸ்வரூபம் படத்திற்கு இன்னொரு சிக்கல்: தடை கோரும் சாய்மிரா பட நிறுவனம்

சென்னை: ரீஜென்ட் சாய்மிரா என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் விஸ்வரூபம் படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ரீஜென்ட் சாய்மிரா என்டர்டெயின்மென்ட் பட நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராஜேந்திர ஜெயின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நடிகர் கமல்ஹாசனை வைத்து 'மர்மயோகி' என்ற படத்தை எடுக்க ராஜ்கமல் பட நிறுவனத்துடன் கடந்த 2008ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பேரில் கமல்ஹாசனுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி 'மர்மயோகி' படம் தயாரித்து வெளியிடும் வரை நடிகர் கமல்ஹாசன் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது.

ஆனால் செய்து கொண்ட ஒப்பந்தப்படி 'மர்மயோகி' படம் எடுக்கப்படவில்லை. எனவே, கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்பக் கேட்டு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.

இதற்கிடையே, அவர் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை தயாரித்து வெளியிட்டார். அந்த படத்தை வெளியிடுவதற்கு தடைகேட்டு தொடரப்படட வழக்கீல் ராஜ்கமல் பட நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வங்கி உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே ராஜ்கமல் படநிறுவனம் சார்பில் தற்போது 'விஸ்வரூபம்' என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படம் வருகிற 25ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி டி.டி.எச்.சில் வெளியிடப்பட உள்ளது.

அந்த பட நிறுவனம் எங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.10.5 கோடி கடன் தொகையை திரும்ப தராதவரை 'விஸ்வரூபம்' படத்தை வெளியிட தடைவிதிக்க கேட்டு வழக்கு தொடர்ந்தோம். ஆனால், அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

அதை அவர் தள்ளுபடி செய்தது தவறு. எங்களது பணத்துக்கு உத்தரவாதம் கேட்டு 'விஸ்வரூபம்' படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். ஆனால் எங்களது வாதத்தை தனி நீதிபதி கருத்தில் கொள்ள தவறிவிட்டார். எனவே, தனி நீதிபதி உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். அப்பீல் வழக்கு முடியும் வரை 'விஸ்வரூபம்' படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் இது குறித்து ராஜ்கமல் நிறுவனமும், கமல்ஹாசனும் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

 

தொடரும் ஆபாச கமெண்ட்கள்... ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ஸ்ரேயா!

Shriya Quits Twitter   

எக்கச்சக்க ஆபாச கமெண்டுகள் வருவதால் இனி ட்விட்டர் தளத்தில் தொடரப் போவதில்லை என்று அறிவித்து வெளியேறிவிட்டார் ஸ்ரேயா.

நடிகை ஸ்ரேயா ட்விட்டரில் தனது படங்கள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார். ஆனால் அவருக்கு ரசிகர்களிடமிருந்து ஆபாச கமெண்டுகள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தன.

அவரால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை போய்விட்டது. இதுகுறித்து ஸ்ரேயா எழுதியுள்ள கடைசி ட்வீட்டில், "முட்டாள், பைத்தியக்காரர்கள் கண்ட கண்ட குப்பைகளை இங்கே கொட்டி வைக்கிறார்கள். அதை பொறுத்துக் கொள்ள முடியாது. நான் ட்விட்டரிலிருந்து வெளியேறுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக ட்விட்டருக்கு பல இளம் நடிகைகள் குட்பை சொல்லி வருகின்றனர். ஸ்வாதி, நந்தினி, இஷா போன்றவர்கள் ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.

ஆரம்பத்தில் ஆர்வத்துடன் ட்வீட்டிக் கொண்டிருந்த சௌந்தர்யா ரஜினி, ஐஸ்வர்யா, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்போது அமைதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

நய்யாண்டி ஆனது சொட்டவாளக்குட்டி!!

Sottavalakutty Changed As Nayyandi

தனுஷை வைத்து சற்குணம் இயக்கி வந்த சொட்டவாளக்குட்டி படத்தின் பெயரை நய்யாண்டி என மாற்றியுள்ளனர்.

களவாணி, வாகை சூட வா படங்களுக்குப் பிறகு சற்குணம் இயக்கும் படம் இது.

குத்துவிளக்கு கடை வைத்திருக்கும் பையனுக்கும், பல் டாக்டருக்குப் படிக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதல்தான் (நிஜத்துல சற்குணத்துக்கு வேண்டப்பட்டவர்கள் கதை மாதிரியே இருக்கே!) இந்தப் படத்தின் கதை.

எம் ஜிப்ரான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்த கதிரேசன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. பரோட்டா சூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், சத்யன் ஆகியோரும் நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் சொட்டவாளக்குட்டி என பெயர் சூட்டியிருந்தார் சற்குணம்.

இப்போது, நய்யாண்டி என மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

பாலாவின் படங்களிலேயே பரதேசிதான் பெஸ்ட்! - 'அப்பா' பாலு மகேந்திரா சர்ட்டிபிகேட்!

Balu Mahendra Praises Bala Paradesi

சென்னை: பாலா இதுவரை இயக்கிய படங்களிலேயே பரதேசிதான் பெஸ்ட் படம் என்று பாராட்டியுள்ளார், இயக்குநர் பாலு மகேந்திரா.

பாலாவை எந்த மேடையிலும் தன் மூத்த பிள்ளை என்று கூறி சிலிர்ப்பவர் பாலு மகேந்திரா. பாலா தற்போது இயக்கியுள்ள ‘பரதேசி' படத்தை சமீபத்தில் 4 ப்ரேம்ஸ் அரங்கில் பார்த்துள்ளார் பாலு மகேந்திரா.

படம் பார்த்துவிட்டு, தன்னுடைய சாலிகிராமம் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாலாவிடம் படம் குறித்துப் பேசினாராம் பாலு மகேந்திரா. பேசிவிட்டு, இதுவரை பாலா இயக்கிய படங்களில் ‘பரதேசி'தான் பெஸ்ட் என்பது என்னுடைய எண்ணம் என்று கூறியுள்ளார்.

பொதுவாக எந்தப் படத்துக்கும் எடுத்த எடுப்பில் பாராட்டு தெரிவிக்க மாட்டாராம் பாலு மகேந்திரா. பாலா இதற்கு முன் இயக்கிய படங்களின் போதும் அப்படித்தானாம்.

ஆனால் முதல்முறையாக, பரதேசியைப் பார்த்தவுடன் பாராட்டியுள்ளார்.

 

விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் - முஸ்லிம் தலைவர்கள் 30 பேர் போர்க்கொடி

Muslim Leaders Urged Ban Viswaroopam

சென்னை: முஸ்லீம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் கொண்ட விஸ்வரூபம் படத்தை திரையிட நிச்சயம் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர் அறிவித்துள்ளனர்.

இஸ்லாமிய சமூக மற்றும் அரசியல் கூட்டமைப்பு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா தலைமையில், 24-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் 30 பேர், நேற்று மாலை 3 மணி அளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் கூடுதல் கமிஷனர்களை சந்தித்து பேசினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. எம்.எச்.ஜவாஹிருல்லாவும் கலந்து கொண்டார்.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன், செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய தலைவர்கள் கூறுகையில், "நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்' படத்தை பார்த்தோம். அந்த படம் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் தீவிரவாதிகளைப்போல் சித்தரித்து அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு இந்திய அரசின் உளவு அமைப்பான ரா அமைப்பு அதிகாரி பயிற்சி கொடுப்பதுபோல காட்சிகள் உள்ளன. மேலும் இஸ்லாமிய மத கோட்பாடுகளையும் தவறாக அந்த படத்தில் காட்டியுள்ளார் கமல்.

தமிழகத்தில் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் இந்த படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது. இந்த படம் வெளிவந்தால், தேசிய ஒருமைப்பாட்ட நாசமாகிவிடும். ஏற்கெனவே மோசமான நிலையை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

வருகிற 25-ந்தேதி அந்த படத்தை வெளியிடவிடாமல் தமிழக அரசும், மத்திய அரசும் தடை செய்ய வேண்டும். போலீஸ் கமிஷனரிடம் எங்கள் நிலையை எடுத்து கூறிவிட்டோம். அடுத்து உள்துறை செயலாளரை நாளை (இன்று) சந்திக்க உள்ளோம்.

உயிரைக் கொடுத்தாவது...

படத்தை அரசு தடை செய்யாவிட்டால், நாங்கள் உயிரை கொடுத்தாவது, படம் வெளிவரவிடாமல் தடுப்போம். இந்த படத்தை வெளியிட அனுமதி கொடுத்த தணிக்கை குழு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

25-ந் தேதிக்குள் இதற்கு ஒரு நல்ல முடிவு காண அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்," என்றனர்.

 

ஒய்.விஜயா மகளுக்கு சேலத்தில் இன்று 'டும் டும் டும்'!

Daughter Y Vijaya Tie The Knot Today

சேலம்: பழம்பெரும் நடிகை ஒய்.விஜயாவின் மகளுக்கு சேலத்தில் இன்று திருமணம் நடைபெறவுள்ளது.

ஒரு காலத்தில் வில்லத்தனமா, கவர்ச்சியா கூப்பிடு ஒய்.வி.யை என்று கூறும் அளவுக்குப் பிரபலமாக இருந்தவர் ஒய்.விஜயா. கமல்ஹாசனின் மன்மத லீலையில் அவரது ராங் நம்பர் கேரக்டர் வெகுவாகப் பேசப்பட்டது.

அதேபோல காக்கிச் சட்டையில் அவர் கமல்ஹாசனுன் போட்ட சிங்காரி சரக்கு ஆட்டமும் கிக்காக பேசப்பட்டது. பைரவி, ராஜாதிராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் 5 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

இவருக்கு அனுஷ்யா என்ற மகள் உள்ளார். பிஇ படித்துள்ளவரான இவருக்கும், சேலத்தைச் சேர்ந்த ராய் ஆண்டனி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இந்தத் திருமணம் சேலத்தில் உள்ள சர்ச்சில் இன்று நடைபெறுகிறது.

27ம் தேதி மாலை ஆறரை மணிக்கு சென்னை ஆந்திரா கிளப்பிலும், இன்று மாலை சேலத்திலும் வரவேற்பு நிழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 

கஷ்டமா இருக்கு, என்னால முடியாது: ராம்லீலா ஷூட்டிங்கில் 'ஓ'வென்று அழுத தீபிகா

When Deepika Padukone Broke Down On Ram Leela

மும்பை: ராம்லீலா இந்தி படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோனே கடினமாக காட்சி அளிக்கப்பட்டவுடன் அதில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறி அழுதுள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோனே ராம்லீலா என்ற படத்தில் நடித்து வருகிறார். செட்டுக்கு வந்த தீபிகாவிடம் பன்சாலி ஒரு காட்சியை விளக்கிக் கூறி அதில் நடிக்குமாறு தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட தீபிகா ஓவென்று அழுதுள்ளார்.

இந்த சீன் மிகவும் கஷ்டமாக உள்ளது. என்னால் நடிக்க முடியாது என்று கூறி அழுதுள்ளார். இதைப் பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பன்சாலி தீபிகாவை அழைத்து அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் ஷூட்டிங்கையும் தள்ளி வைத்துள்ளார். இயக்குனரின் அறிவுரைகளைக் கேட்ட தீபிகா வீட்டுக்கு கிளம்பினார்.

மறுநாள் வந்து அதுவும் ஒரே டேக்கில் அந்த காட்சியை நடித்துக் கொடுத்து சபாஷ் வாங்கியுள்ளார் தீப்ஸ். இந்த படத்தில் கரீனா கபூர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு திருமணம் ஆனதால் அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.