வை ராஜா வை நாயகியாக ப்ரியா ஆனந்த்

Priya Anand Is Aishwarya Dhanush Heroine   

ஐஸ்வர்யா தனுஷின் புதிய படமான வை ராஜா வை-யில் நாயகியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கடல் ஹீரோ கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடந்து வந்தது. எதிர் நீச்சல் படத்தில் ப்ரியா ஆனந்தின் நடிப்பு மற்றும் அந்தப் படம் அடைந்துள்ள வெற்றி காரணமாக, வை ராஜா வை படத்திலும் அவரையே நாயகியாக்க முடிவு செய்தார் ஐஸ்வர்யா.

கடந்த ஆண்டு வரை ராசியில்லாத நாயகி பட்டியலில் இருந்தவர் ப்ரியா ஆனந்த். பக்கா தமிழ்ப் பெண்ணான இவர் கைவசம் இப்போது எக்கச்சக்க படங்கள்.

சிவாவுடன் வணக்கம் சென்னை, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படம், கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் என எல்லாமே பெரிய படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.

 

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி வீட்டில் திருடிய கொள்ளையர்கள் 3 பேர் கைது!

3 Dacoities Arrested Rb Choudhary House Burglary Case

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி வீட்டில் திருடிய மூன்று கொள்ளையர்களை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தி.நகர் வடக்கு போக்ரோட்டில் உள்ளது ஆர்.பி.சவுத்திரி வீடு. கடந்த 29-ந் தேதி இவரது வீட்டில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்தனர்.

வீட்டில் இருந்த ஐபேட் மற்றும் வெள்ளி பூஜை பொருட்களை அவர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் ஆர்பி சவுத்ரி புகார் செய்தார்.

உதவி கமிஷனர் சிவ பாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர் போலீசார்.

இந்த கொள்ளை தொடர்பாக தி.நகர் எம்.கே. ராதா நகரைச் சேர்ந்த முருகன் (19), தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ராஜா (19), ஆயிரம் விளக்கு ஆழகிரி நகரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகப்படும் வகையில் திரிந்த அவர்களை ரோந்து போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் ஆர்.பி.சவுத்திரி வீட்டில் கொள்ளையடித்தது தாங்கள்தான் என தெரிய வந்தது. உருட்டு கட்டையால் கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்ததாக அவர்கள் கூறினார்கள்.

கொள்ளையடித்த பொருள்களை விற்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். அந்தப் பொருள்களை மீட்கும் முயற்சியில் உள்ளனர் போலீசார்.

 

ராம் கோபால் வர்மாவின் 'நான்தான்டா'!

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள நான்தான்டா படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

சமூகத்தின் ஒழுங்கு குறைந்து குற்றங்கள் அதிகரிக்கக் காரணம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான். இந்த விஷச் சூழல் வெவ்வேறு ரூபங்களில் வெளிப்பட்டு கொண்டே தான் இருக்கும்.

இன்றைய சமுதாயத்தின் பிரதிநிதியான நாயகன் 'நான்தான்டா' என்று தன்னை முன்னிலைப்படுத்துவதையே தலைப்பாக்கிவிட்டார்களாம்.

ramgopal varma s naanthanda   

இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் வர்மா இயக்கி வெளிவந்த சத்யா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் சக்ரவர்த்தி நடித்திருந்தார். இந்த இரண்டாம் பாகத்தில் சர்வானந்த் நடிக்கிறார்.

வர்மாவின் மாஸ்டர் பீஸ் என்று வர்ணிக்கப்படும் படம் இந்த சத்யா. இரண்டாம் பாகத்தை இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் எடுக்கிறார்.

தமிழ், தெலுங்கில் நடிப்பது சர்வானந்த். இந்தியில் படத்தின் பெயர் சத்யா 2. தமிழில், நான்தான்டா... என்று வைத்திருக்கிறார்.

இதற்கு முன் தான் இயக்கிய சிவா படத்தை தமிழில் உதயம் என வெளியிட்டு பெரும் வெற்றி பெற்றார். ஆனால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த போது வர்மா சறுக்கியது நினைவிருக்கலாம்.

 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் கல்யாணம் படத்தில் ஹீரோவாக கரு பழனியப்பன்!

Karu Pazhaniyappan Plays Key Role Mrs Kalyanam

ஒரு பக்கம் படங்கள் இயக்கினாலும், தனி ஹீரோவாக நடிப்பதிலும் உறுதியாக இருக்கிறார் இயக்குநர் கரு பழனியப்பன்.

பார்த்திபன், எஸ் எழில் ஆகியோரிடம் பணியாற்றி, பார்த்திபன் கனவு மூலம் வித்தியாசமான இயக்குநராக வெளிவந்தவர் கரு பழனியப்பன்.

தொடர்ந்து சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை போன்ற படங்களை இயக்கினார். இவற்றில் மந்திரப் புன்னகையை இயக்கி ஹீரோவாகவும் நடித்தார்.

இப்போது பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா நடிக்கும் ஜன்னல் ஓரம் படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் கல்யாணம் என்ற படத்தில் ஹீரோவாக மட்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கரு பழனியப்பன். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அமல் ராஜ் இயக்குகிறார். லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார்.

மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கல்யாணம் படத்தின் மற்ற நடிகை, நடிகர்கள் குறித்த விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வாக அறிவிக்க உள்ளனர்.