நாலாவது முறையாக இணையும் சந்தானம் - ராஜேஷ்!

Santhanam Join With Director Rajesh
வழக்கமாக ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும்தான் இந்த கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பாட்டனி, ஜூவாலஜி எல்லாம் சூட் ஆகும். ஆனால் இயக்குநர் ராஜேஷுக்கும், காமெடியன் சந்தானத்துக்கும் கூட இது கரெக்டாகப் பொருந்தி வருகிறது போல. அதனால்தான் இருவரும் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இணைந்து பணியாற்றப் போகிறார்கள்.

இந்த இருவரும் முதன் முதலில் இணைந்த படம் சிவா மனசுல சக்தி. தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பட்டையைக் கிளப்பினர். அடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடித்தார். தற்போது நான்காவது முறையாக இணையவுள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பவர் கார்த்தி. படத்திற்குப் பெயர் அழகு ராஜா. ஏற்கனவே கார்த்தியுடன் சிறுத்தையில் பெடலெடுத்தவர்தான் சந்தானம். எனவே இந்த மூன்று பேரும் சேர்ந்து பணியாற்றவுள்ளதால் மறுபடியும் ஒரு காமெடி களியாட்டமாக இது அமையும் என்று நம்பலாம்.

ஆனால் படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லையாம், இன்னும் கொஞ்ச மாசமாகுமாம் ... ஆகட்டும், ஆகட்டும். படம் நல்லா வந்தா சரித்தான்..
 

குரு பாலசந்தர் வழியில் டிவிக்கு வந்த சிஷ்யர் சுரேஷ் கிருஷ்ணா!

Suresh Krishna Debuts Chinnathirai
பாலசந்தரின் பிரதம சிஷ்யரான சுரேஷ் கிருஷ்ணா ஆஹா என்ற நெடுந்தொடரின் மூலம் சின்னத்திரையில் கால் பதிக்கிறார். குரு பாலசந்தர் ரயில் சிநேகம் தொடர் மூலம் சின்னத்திரைக்கு முதன் முதலில் வந்தார். அவரது வழியில் இப்போது சுரேஷ் கிருஷ்ணாவும் வருகிறார். பாலச்சந்தர் சின்னத்திரையிலும் முத்திரை பதித்தவர். அவரைப் போலவே சின்னத்திரையில் சிஷ்யர் ஜெயிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த சத்யா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் கிருஷ்ணா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ளார். ரஜினியின் மெகாஹிட் படங்களான அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்களையும், கமல்ஹாசனின் ஆளவந்தான் போன்ற படங்களையும் இயக்கினார். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் இளைஞன் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைத்ததும், சின்னத்திரையில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறார். விஜய் டி.வியில் ‘ஆஹா’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்ததொடரின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தான். புதுமுகங்கள் நடிக்கும் இத்தொடருக்கு, பா.விஜய்யின் பாடல் வரிகளுக்கு, ஜீ.வி.பிரகாஷ்குமாரின் அற்புதமான இசையில் டைட்டில் சாங் உருவாகி இருக்கிறது. விரைவில் இத்தொடர் விஜய் டி.வி.யில் ஒளிப்பரபாக இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆஹா என்ற படத்தை சுரேஷ் கிருஷ்ணாதான் இயக்கினார். இப்போது அதே தலைப்பை வைத்து ஆஹா என்ற ‌தொடரை இயக்குகிறார். தொடரின் தலைப்பு மட்டும் தான் படத்தின் தலைப்பு. மற்றபடி ஆஹா தொடரின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருக்குமாம். தொலைக்காட்சித் தொடர்களில் புதுமையை புகுத்தியவர் குரு பாலசந்தர் அவர் வழியில் சிஷ்யரும் ஜெயிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
 

போட்டி போட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்கும் சன் டிவி- விஜய் டிவி!

Neengalum Vellalam Oru Kodi Vs Kayyil Oru Kodi
தமிழ்நாட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்க போட்டு போட்டுக்கொண்டு கோடீஸ்வர நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன சில தமிழ் தொலைக்காட்சிகள். இந்த நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளை விட நிகழ்ச்சி நடத்தப்படும் அரங்குகளே பிரம்மாண்டமாய் இருக்கின்றன என்கின்றனர் ரசிகர்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி’, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ போன்ற நிகழ்ச்சிகள் மக்களை சற்றே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் வாரம் முழுவதும் அழுகை தொடர்களை போட்டு ஒப்பேற்றுகின்றனர். வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதனை தொகுத்து வழங்குபவர் நடிகர் ரிஷி. இவர் ஏற்கனவே ‘டீலா நோ டீலா’ நிகழ்ச்சியின் மூலம் சன் டிவி நேயர்களுக்கு அறிமுகமானவர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமே ஒரு கோடி ரூபாயை விளையாடுபவர்களின் கையில் கொடுத்து விட்டு பின்னர் கேள்விகளை கேட்கின்றனர் என்பதே.

மொத்தமே ஏழு கேள்விகள்தான். ஒவ்வொரு சுற்றிலும் கேள்விகளுக்கான ஆப்சன்ஸ் கூறி அதிலிருந்து கேள்விகளைக் கேட்கின்றனர். பதில்களின் மேல் பணத்தை வைத்து விளையாட வைக்கின்றனர். ஏழாவது கேள்வி வரை வந்தவர்களுக்கு சன் தொலைக்காட்சியே ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்குகிறது. சுவாரஸ்யமாகத்தான் செல்கிறது. விளையாடுபவர்களையும், பார்ப்பவர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்கின்றனர்.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்குகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சூர்யாவுக்கு புதுசு. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ஒத்திகை எல்லாம் சூர்யா பார்த்திருக்கிறார். மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சியிடம் கேள்வி கேட்டு பதிலுக்கு எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்பது வரை ஒத்திகை நடைபெற்றுள்ளது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சில 'அறிவுப்பூர்வமான' கேள்விகள் இடம் பெற்றாலும் ( ஈ அடிச்சான் காப்பி, நாய் அடிச்சான் காப்பி) போகப் போக பிக் அப் ஆகிவிட்டது நிகழ்ச்சி, சூர்யாவும் தான்.

அவ்வப்போது சில பிரபலங்களும் விஜய் டிவி நிகழ்ச்சியில் சூர்யா உடன் பங்கேற்கின்றனர். இதை கிண்டலடிக்கும் விதமாக சன் டிவியில் புரோமோ போடப்பட்டது. எங்கள் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஜாக்கிசான் எல்லாம் வரமாட்டாங்க. இது மக்களுக்கான நிகழ்ச்சி என்றெல்லாம் போட்டு தாக்கினர்.

ஆனால், இதற்கெல்லாம் விஜய் டிவி தரப்பில் இருந்து பதிலடி இல்லை. அவர்கள் வழக்கம் போல சில லட்சாதிபதிகளை உருவாக்கி கொண்டுதான் இருக்கின்றனர்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, கையில் ஒரு கோடி.. இதில் யார் முந்துகிறார்கள் என்று போகப் போக பார்க்கலாம்.
 

'சவீதா பாபி'யாக மாறிய சன்னி லியோன்!

Sunny Leone Goes Partial Nude Fhm   
ஆபாசப் படப் பிரியர்களைக் கவர்ந்திழுத்த சவீதா பாபி கற்பனைக் கதாபாத்திரத்திற்கு கிட்டத்தட்ட உயிர் கொடுத்துள்ளார் கனடா நாட்டைச் சேர்ந்த கவர்ச்சிப் பாவை சன்னி லியோன்.

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட கற்பனை ஆபாசப் பட கேரக்டர் சவீதா பாபிதான். அதே பாணியில் தற்போது சன்னி லியோனும் கலக்கல் கவர்ச்சி போஸ் கொடுத்து அசரடித்துள்ளார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமடைந்தவர்தான் சன்னி. கனடாவைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான இவர் அங்கு ஆபாசப் படங்களில் பிரபலமானவர்.

இந்தித் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ள சன்னி லியோன் ஆடவருக்கான எப்எச்எம் பத்திரிகையின் கவர்ஸ்டோரிக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.

நெற்றியில் குங்குமம், கையில் வளையல், அப்படியே உடல் அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பச்சை நிற மெல்லிய டிரான்ஸபரன்ட் சேலையில் படு கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கிறார் சன்னி லியோன். ஜன்னலுக்கு அருகே நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் சன்னிலியோனின் உடல் பாகங்களை குறிப்பாக அவரது மார்பகங்களை அப்படியே காட்டுகிறது வெளியிலிருந்து உள்ளே வரும் சூரிய ஒளி. இந்தப் பாதி கவர்ச்சிக்கே படு தூக்கலாக காட்சி தரும் சன்னி முழுக் கவர்ச்சியில் எப்படி இருப்பார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இனிமேல் ஆபாசப் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று சன்னி கூறியிருந்தாலும் கூட இந்த 31 வயது அழகுப் பதுமையின் நோக்கம் என்ன என்பது இந்தப் படத்தின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

சமீபத்தில்தான் தான் ஜிஸ்ம் 2 படத்திற்காக ஒரு சூடான படுக்கை அறைக் காட்சியில் நடித்துக் கொடுத்திருந்தார் சன்னி. இந்த நிலையில் இப்படி ஒரு கவர்ச்சிகரமான போஸுடன் எப்எச்எம் இதழின் அட்டையில் காட்சி தருகிறார்.

நடிக்க வருகிறதோ இல்லையோ, நன்றாக கவர்ச்சி காட்ட வருகிறது சன்னிக்கு...!
 

என்னைப் பாருங்க முதல்ல!

Another Sona Arrives Tamil
தமிழுக்கு இன்னொரு சோனா கிடைத்துள்ளார். இவர் மூத்த சோனா போல பெரிதாக இல்லை, அளவாக, கச்சிதமாக இருக்கிறார், கஞ்சி போட்டு துவைத்த காட்டன் புடவை போல.

கொஞ்சம் சட்டுன்னு பார்த்தா சொர்ணமால்யாவையும், பிரியா மணியையும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்தது போலத் தெரிகிறார். அம்மணி கோலிவுட்டில் காலெடுத்து வைத்துள்ள முதல் படம் பெயர் துட்டு.

வழக்கம் போல இவரும் தமிழ்ப் பெண் அல்ல. ஏன் தமிழ் பேசத் தெரிந்த பெண் கூட அல்ல, ஆங்கிலத்தைத்தான் அழகாக பேசி வைக்கிறார். தமிழைப் பற்றிக் கேட்டால், இப்பத்தானே வந்திருக்கேன். அதுக்குள்ள என்ன அவசரம், மெதுவா கத்துக்கலாம் என்கிறார் படு கூலாக.

மும்பையிலிருந்து சென்னைக்கு சேபாக வந்து சேர்ந்துள்ள சோனா தனது முதல் படத்தில் ஆர்யன் ராஜேஷுடன் ஜோடி போடுகிறார். படத்தை இயக்குவது முரளி கிருஷ்ணா, இசையும் இவர்தான்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் நடிக்க வருகிறார் ஆர்யன். ஆல்பம்தான் இவர் கடைசியாக நடித்த படம்.

சரி, சோனா, முதல் படம் முடிவதற்குள்ளாகவே கொஞ்சம் தமிழைக் கத்துக்கோங்க, குறைந்தது 'தலைவி' நமீதா ரேஞ்சுக்காவது தமிழ்ல பேசப் பாருங்க...!
 

ஜீ தமிழில் கலக்கும் ரோஜாவின் 'லக்கா கிக்கா'..!

Roja Sizzle Zee Tamil S Luckka Kickka
லக்கா, கிக்கா எனப்படும் புதுமையான கேம் ஷோ மூலம் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் முன்னாள் கனவுக்கன்னி ரோஜா. அவருடைய அழகான உடை அலங்காரம், கேள்விகளை கேட்கும் மேனரிசம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளித்திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவது புதிய விசயமல்ல. சிலர் கதாநாயகியாக நடிப்பார்கள். சிலர் நிகழ்ச்சி நடத்துவார்கள். அந்த வரிசையில் ரோஜாவும் களம் இறங்கியுள்ளார். இவர் ஜீ தமிழ் டிவியில் ‘லக்கா, கிக்கா’ என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார்.

வழக்கமான ஜாக்பாட் நிகழ்ச்சி போன்று இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நான்கு சுற்றுக்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியை ரோஜா கேட்பார். அதற்கு பார்வையாளர்கள் வி‌டை சொன்னால் அப்போதே கையில் ரூ.5 ஆயிரம் பரிசு கிடைக்கும்.

2 வது சுற்று திறமைக்கான போட்டி. பாடத்தெரிந்தவர்கள் ஆடத்தெரிந்தவர்கள் மேடையேறி ஆடலாம். அப்போது கிளி ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டெடுக்கும். அந்த சீட்டில் வருகிற பரிசுத்தொகையை அப்போதே ரோஜா வழங்குகிறார்.

3வது சுற்று ஏலம் விடும் நிகழ்ச்சி. 4 வது இறுதி சுற்றை எட்டுபவர்களுக்காக 3 பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பொம்மையில் மட்டும் அதிக தொகை இருக்கும். இதில் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

முற்றிலும் வித்தியாசமான முறையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஜீ தமிழ் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜெயா டிவியில் சிம்ரன் நடத்தும் ஜாக் பாட் நிகழ்ச்சிக்கு பலத்த போட்டியாக உருவாகும் என்று நேயர்கள் மத்தியில் இப்போதே ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

அப்பட அடுத்த 'ஜாக்கெட்' சண்டை ரெடி... !
 

'நாலு பேரில் ஒருவனல்ல... இப்போ ஹீரோக்களின் நண்பன்!' – உற்சாகத்தில் காமெடியன் சூரி

Comedian Soori Is Cloud Nine
காலையில் ஒரு படப்பிடிப்பு, மாலையில் ஒரு படப்பிடிப்பு என்று படு பிஸியாக இருக்கிறார் நடிகர் சூரி. கூடுதலாக விருது வாங்கிய உற்சாகம் வேறு.

ஆமாம், இந்த ஆண்டு நார்வே நாட்டில் நடைபெற்ற திரைப்பட விருது விழாவில் 'போராளி’ படத்தின் சிறந்த காமெடியனுக்கான விருதை தட்டி வந்திருக்கிறார் நடிகர் சூரி.

இது தவிர அந்த விழாவில் பல பிரிவுகளில் விருதுகளை வாங்கிய 'அழகர்சாமியின் குதிரை’, ’வாகை சூடவா’ ஆகிய படங்களிலும் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு கூடுதல் சந்தோஷம் என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் சூரி.

தமிழர்களின் தலை சிறந்த பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை மையமாக் கொண்டு ரீலிஸ் ஆன 'வெண்ணிலா கபடி குழு’ படம் எந்தளவுக்கு ரசிகர்களி டையே பரபரப்பாக பேசப்பட்டதோ, அந்தளவுக்கு பேசப்பட்டது அந்தப் படத்தில் இடம்பெற்ற 'பரோட்டா’ காமெடி. குறிப்பாக அந்த அசத்தலான காமெடியில் நடித்த சூரியை யாராலும் மறக்க முடியாது.

"ஒரு கலைஞனுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவுதான் முதல் விருது. ரசிகர்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட இந்த விருதும் அப்படிப்பட்டது தான். என் காமெடி ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது என்பதற்கு இதுவே சாட்சி. இந்த இடத்தை நான் எப்போதும் தக்க வைத்துக் கொள்வேன்", என்று அடக்கமாக சொல்லும் சூரியின் கையில் இப்போது இயக்குனர் எழில் இயக்கத்தில் மனம் கொத்திப் பறவை, வின்சென்ட் செல்வா இயக்கத்தில் துள்ளி விளையாடு, ஜி.என்.ஆர் குமரவேலு இயக்கத்தில் ஹரிதாஸ், அஸ்லாம் இயக்கத்தில் பாகன், சசிக்குமாருடன் சுந்தரபாண்டியன், ஜெயம் ரவி, சமுத்திரக்கனி இணையும் ஒரு படம், சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம், சற்குணம் இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கும் ஒரு படம், ராசு மதுரவன் இயக்கத்தில் மைக் செட் பாண்டி, எஸ்.பி.ராஜ்குமார் டைரக்ஷனில் பாக்கணும் போல இருக்கு... என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள்.

"நான்கு பேர்களில் ஒருவராக வந்து காமெடி செய்யும் போது சில நேரங்களில் நமக்குள் இருக்கும் முழுத் திறமைகளும் வெளியே தெரியாமல் போய் விடுகிறது.

ஆனால் சமீபகாலமாக எனக்கு நான் நடிக்கும் எல்லா படங்களிலும் ஹீரோவுக்கு நண்பனாக படம் முழுவதும் வந்து காமெடி செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இதற்காக என் இயக்குனர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நான் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான வேடங்கள். அந்தந்த படங்கள் ரீலிஸ் ஆகும் போது அந்த வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம்," என்று உற்சாகமாக சிரிக்கிறார் சூரி.
 

அன்னையர் தினத்துக்காக 'ஆன்ட்டி' லட்சுமி ராமகிருஷ்ணன் பாட்டு!

Actress Lakshmi Ramakrishnan Tribute World Mothers Day
தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்த ஆன்ட்டி, இளம் அம்மா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சினிமா, டிவி சீரியல் என்று கலக்கியவர், அடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

அவரோகணம் என்ற பெயரில் தான் இயக்கும் முதல் படத்துக்காக சமீபத்தில் 6 பாடல்களை பதிவு செய்துள்ளார்கள். அதில் ஒரு பாட்டு அன்னையர் தினத்துக்காக எழுதப்பட்டதாம். இந்தப் பாடலை அறிமுக பாடலாசிரியர் சுப்பு எழுதியுள்ளார்.

பாடல் இப்படி ஆரம்பிக்கிறது...

இந்த வான்வெளி விடியாதோ
எந்தன் தாய்மொழி விளங்காதோ..?

புரிஞ்சுக்கத்தான் பாத்தேன்
உன் புதிர் காலம் தீராதோ..?

நாள் போக்குல தொலஞ்சேன்
நம் எதிர்காலம் மாறாதோ..?

இயற்பியலும் அறிவேன்
உன் இயல்பே அரியேன்

இன்று மே 8, உலக அன்னையர் தினத்தன்று உலக அன்னையருக்கு வணக்கம் செலுத்தும் விதமாக லட்சுமி ராமகிருஷ்ணா வெளியிடப் போகும் பாடல் இதுதான்.

இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணா கூறுகையில், "அம்மாவின் பாசத்தை, அவளது வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போன ஒரு மகன் பாடுவது போல அமைந்த இந்தப் பாடல் நிச்சயம் கேட்பவர்களைக் கட்டிப் போடும். எனது மூன்று பெண்குழந்தைகளும் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அழுது என்னைக் கட்டியணைத்துக் கொள்வார்கள்...," என்றார்.
 

வழக்கு எண் 18/9: மீடியாவைக் கலங்க வைத்த பாலாஜி சக்திவேல்!

Balaji Sakthivel Prostrates Thanks
பட்ஜெட்டில் சின்ன படமாக இருந்தாலும், படைப்புத் தரத்தில் இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் பெரிய படமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9.

இத்தனைக்கும் இந்தப் படத்தில் நடித்தவர்களில் ஒருவர் கூட தெரிந்த முகமில்லை. பலருக்கு கோடம்பாக்கமே ரொம்ப புதுசு. சேலத்திலும் தர்மபுரியிலும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த கிராமத்தினரை அழைத்து வந்து வழக்கு எண்ணின் பாத்திரங்களாக உலவவிட்டிருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

படத்தைப் பார்த்த அத்தனைபேரும் தங்களையும் மறந்து எழுந்து நின்று கைத்தட்டி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக இந்த மாதிரி படங்களுக்கு பாராட்டுகள் குவியும். பாக்ஸ் ஆபீஸ் நிறையாது. ஆனால் விதிவிலக்காக பாக்ஸ் ஆபீஸிலும் படு திருப்தி. இந்த சந்தோஷத்தை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர் பாலாஜி சக்திவேலும் தயாரிப்பாளர் லிங்குசாமியும்.

இந்த சந்திப்புக்கு, படத்தில் நடித்த அத்தனை பேரையும் வரவழைத்து மேடையில் அமர வைத்தனர். பெரும்பாலும் மிக எளிய மனிதர்கள். சென்னையின் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றின் செய்தியாளர் சந்திப்புக்கு வந்ததே அவர்களுக்கு பெரும் கனவாகத்தான் இருந்திருக்கிறது, மைக் பிடித்து பேசிய பின்னும் கூட!

படத்தைப் போலவே, இந்த சந்திப்பும் உணர்வுப்பூர்வமானதாக, கண்கலங்க வைப்பதாக அமைந்துவிட்டது.

படக்குழுவினர் ஒவ்வொருவருமே "எங்களுக்கு புது வாழ்க்கை அமைத்து கொடுத்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு நன்றி" என்று கண்ணீர் விட, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் பாலாஜி சக்திவேல்.

தன் முறை வந்தபோது, "பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாம் நான் அவ்வளவாக பேசுவது இல்லை. படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம் . உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. இப்போது நான் நன்றி சொல்லும் விதம் தமிழ் மரபுக்கு முரணாகவே இருந்தாலும் கூட... " என்று சொல்லி நிறுத்தியவர்,

"லிங்குசாமி.. எழுந்து அங்கே போய் நில்" என்றார். லிங்குசாமி ஒன்றும் புரியாமல் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் வந்து நிற்க அனைவரது முன்னிலையில், பாலாஜி சக்திவேல் கீழே விழுந்து வணங்கினார். லிங்குசாமியும் பத்திரிகையாளர்களும் திகைத்து திக்குமுக்காடிவிட்டனர். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். " இதற்கு மேல் எனக்கு என்ன செய்வது, சொல்வதென்று தெரியவில்லை" என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டார் பாலாஜி சக்திவேல்.

அறைக்குள் ஒரு சில வினாடிகள் கனத்த மவுனம். சில செய்தியாளர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. மேடைக்குப் போய் அமர்ந்த லிங்குசாமியின் கண்களில் கண்ணீர் (ஒருவகையில் லிங்குசாமிக்கே குரு பாலாஜி சக்திவேல்தான். இவர்தான் லிங்குசாமியை இயக்குநர் வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்த்துவிட்டவர், உலக சினிமாவை அறிமுகப்படுத்தியவராம்!!).

இறுதியாக பேசிய லிங்குசாமி " படம் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்று இருக்கிறது என்றால் அதற்கு பத்திரிகையாளர்கள்தான் காரணம். இயக்குனர்களுக்கு என்று தனியாக ஒரு ஷோ போட்டோம். எல்லா இயக்குனர்களும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.

அவர்களை அடுத்து பத்திரிகையாளர்களாகிய நீங்கள் என்ன கூற போகிறீர்களோ என்ற பயந்து கொண்டே, உங்களுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே படத்தினை போட்டு காண்பித்தோம். படம் முடிந்த உடன் நீங்கள் எழுந்து நின்று கை தட்டினீர்கள்.. சிலர் என்னிடம் வரும்போதே அழுதுவிட்டார்கள். அப்போதே எனக்கு தெரிந்து விட்டது படம் கண்டிப்பாக வெற்றி என்று.

'வழக்கு எண் 18/9' படத்திற்கு கிடைத்த வரவேற்பு எனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை மேலும் மேலும் இது போன்ற பல படங்களை தயாரிக்க தூண்டியுள்ளது. கண்டிப்பாக தயாரிப்பேன்.

'வழக்கு எண் 18/9' திரைப்படம் கண்டிப்பாக பல்வேறு விருதுகளை வெல்லும். அதற்கு காரணம், பத்திரிகையாளர்கள் படம் பற்றி எழுதிய எழுத்துக்கள்தான். அத்தனை விமர்சனங்களும் ஒரே பேனாவால் எழுதப்பட்டதைப் போன்று அமைந்திருந்தன. என் வாழ்நாளில் இத்தனை உயர்வான விமர்சனங்களை வேறு எந்தப் படத்துக்கும் படித்ததில்லை. எத்தனை விருது வென்றாலும் அவை அனைத்தையும் நான் இந்த பத்திரிகையாளர்கள் மத்தியில்தான் பகிர்ந்து கொள்வேன்," என்றார்.

எத்தனையோ செய்தியாளர் சந்திப்புக்குப் போயிருக்கிறோம்... ஆனால் இந்த வழக்கு எண் சந்திப்பு, படத்தைப் போலவே 'எமோஷனல்!'
 

'தம்' அடிக்க மாட்டேன் என்று 2007-ல் கொடுத்த வாக்குறுதியை விஜய் காப்பாற்றுவாரா?- பசுமைத் தாயகம்

Pasumai Thaayagam Urges Vijay Keep His 2007 Promise   
இனி படங்களில் புகைப் பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்ற விஜய் 2007-ல் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா?, என பசுமைத் தாயகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் அருள் விடுத்துள்ள அறிக்கை:

தங்கள் நடிப்பில் வரவிருக்கும் துப்பாக்கி படத்தின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களில் தாங்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் ரசிகர்களாக உள்ள நிலையில், இந்தக் காட்சி அவர்களின் எதிர்காலத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

2010-ல் 5, 56, 400 பேர் கொடிய புற்று நோய்க்கு பலியாகியுள்ளனர் இந்தியாவில். இவர்களில் 42 சதவீத ஆண்கள் மற்றும் 18 சதவீத பெண்களுக்கு புற்று நோய் வரக் காரணம் புகையிலைப் பழக்கமே.

உங்கள் ரசிகர்களிலே கூட எத்தனையோ பேர் உரிய வயதுக்கு முன்பே உயிரிழக்க இந்த புகைப் பழக்கம் காரணமாகிறது.

இப்படிப்பட்ட கொடிய நோய் பரவ நீங்கள் துணை போகலாமா... என்று உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள்.

2007-ல் நீங்கள் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த போது, இனி வரும் படங்களில் புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்தீர்கள். அது அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது.

அதற்கேற்ப, அடுத்தடுத்து வந்த குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம், காவலன் போன்ற படங்களில் நீங்கள் புகைப் பிடிக்கவில்லை. இப்போது துப்பாக்கியில் புகைப்பிடிப்பது ஏன்?

இளையதளபதி தனது வாக்குறுதியை மீறலாமா?

நல்ல முன்னுதாரணம் ரஜினி - கமல்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நல்ல முன்னுதாரணங்களாகத் திகழும் திரு ரஜினிகாந்த், திரு கமல்ஹாஸன், திரு சூர்யா ஆகியோரைப் பின்பற்றி புகைக்கும் பழக்கத்தை நீங்களும் கைவிட்டிருந்தீர்கள். இப்போது மீண்டும் புகைக்க காரணம் என்ன?

தயவு செய்து உங்கள் வாக்குறுதியை மீற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்."

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து துப்பாக்கி படத்திலிருந்து விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. அக்காட்சி இடம்பெறும் போஸ்டரையும் ஒட்டப்போவதில்லை என இயக்குனர் முருகதாஸ் கூறினார். விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் துப்பாக்கி படத்தின் போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து தொண்டு நிறுவனம் ஒன்று, போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தது.

இது பற்றி பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், 'விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் துப்பாக்கி படத்துக்கு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது விளம்பரத்துக்காக மட்டுமே எடுக்கப்பட்ட புகைப்படம். அதுபோல் காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஒரு சிறு காட்சியில் மட்டும் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் இடம்பெற்றது. அதை கூட படத்திலிருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் சிகரெட் பிடிப்பதுபோன்ற எந்த காட்சியும் போஸ்டரில் பயன்படுத்தமாட்டோம் என்றார்.


 

தர்ஷன் படத்தில் மீண்டும் நிகிதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கன்னட நடிகர் தர்ஷன், நிகிதா மீண்டும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். இதனால் தர்ஷனின் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் என கூறப்படுகிறது. கன்னட நடிகர் தர்ஷன், விஜயலட்சுமி தம்பதிக்கு இடையே கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்டது. தன்னை தர்ஷன் கொடுமைப்படுத்துவதாகவும், இதற்கு நடிகை நிகிதாதான் காரணம் என்றும் கூறி தர்ஷன் மீது போலீசில் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கணவன், மனைவி பிரிய காரணமாக இருந்ததாக கூறி நிகிதாவை கன்னட படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதில் கோபம் அடைந்த நிகிதா 'எனக்கும் தர்ஷனுக்கும் எந்த உறவும் இல்லை. கணவன், மனைவி பிரிவதற்கு நான் காரணம் அல்ல. இனிமேல் கன்னட படத்தில் நடிக்க மாட்டேன். குறிப்பாக தர்ஷனுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்றார். திரையுலகினரின் சமாதான பேச்சுக்கு பிறகு விஜயலட்சுமி போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றார். நிகிதா மீதான குற்றச்சாட்டும். தடையும் வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும் கன்னட படங்களில் நடிக்காமல் தமிழ், தெலுங்கு படங்களில் கவனத்தை திருப்பினார் நிகிதா.

இந்நிலையில் விஜய், தருண் நடிக்கும் 'சினேகிதரு என்ற கன்னட படமொன்றில் நிகிதா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சமீபத்தில் அப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு பாடல் காட்சியில் நிகிதா நடித்தார். ராம் நாராயணன் இயக்குகிறார். இதேபடத்தில் தர்ஷனும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மனைவி புகாரால் பிரிந்த தர்ஷன்,நிகிதா, ஒரே படத்தில் மீண்டும் நடிப்பது கன்னட படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்ஷனின் குடும்பத்தில் மீண்டும் பிரச்னை எழலாம் என்றும் அவரது மனைவியால் இப்படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.


 

அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு : ரகுமான் பூரிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெள்ளை மாளிகைக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தது குறித்து ஏ.ஆர்.ரகுமான் பூரிப்புடன் கூறினார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்தது. அதையேற்று கடந்த சனிக்கிழமை அமெரிக்கா சென்றார் ரகுமான். பலத்த கரகோஷத்துக்கு இடையே டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபரும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர்.

இதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்தநேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். எனது தந்தை, தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்து தந்தனர். திரையுலகில் ரோஜா படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள். இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர். அதேபோன்று ஹாலிவுட்டிலும் என்னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.


 

பச்சை குத்தியது அழிப்பா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை: பச்சை குத்திய பிரபுதேவா பெயரை நீக்க வெளிநாடு போக வேண்டிய அவசியம் இல்லை என்றார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதலை முறித்து கொண்ட நயன்தாரா, மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன் கையில் பச்சை குத்திக் கொண்டிருந்த பிரபுதேவா பெயரை லேசர் சிகிச்சை மூலம் அழிக்க பாங்காக் செல்ல நயன்தாரா முடிவு செய்தார் என்றும், அப்போது விமான நிலையத்தில் அவரிடம் அதிகாரிகள் 40 நிமிடம் சோதனை நடத்தியதாகவும் செய்தி வெளியானது. இதுகுறித்து நயன்தாரா கூறியதாவது: இது எந்த ஆதாரமும் இல்லாத செய்தி. இதற்காக யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை. என்னை பற்றி பத்திரிகைகளில் இப்படிதான் தவறாக செய்திகள் பரப்பப்படுகின்றன. என் கையில் குத்திக் கொண்ட பச்சையை நீக்குவதற்கு நான் ஏன் பாங்காக் செல்ல வேண்டும். அதை இந்தியாவிலேயே எங்கு வேண்டுமானாலும் எளிதாக அழித்துவிடுவேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பச்சை குத்தியதை அழித்து விட்டேனா என்பதை வந்து சோதித்து பாருங்கள். விமான நிலையத்தில் என்னை அதிகாரிகள் சோதித்தார்கள் என்பதை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு நயன்தாரா கூறினார். நயன்தாரா தற்போது கேரளாவில் தனது குடும்பத்தினருடன் தங்கி இருக்கிறார். அடுத்த வாரம் முதல் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
 

அண்ணன் மரணத்தால் பெயரை மாற்றிய ஹீரோயின்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அண்ணன் மரணம் அடைந்ததால் தன் பெயரை மாற்றிக்கொண்டார் பிந்து மாதவி. 'கழுகு படத்தில் நடித்திருப்பவர் பிந்து மாதவி. இவர் தனது பெயரை பிந்து சாகர் என்ற மாற்றிக்கொண்டார். பட வாய்ப்புகளுக்காக நியூமராலஜிபடி பெயரை மாற்றிக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு புதிய விளக்கம் அளித்துள்ளார் பிந்து. இது பற்றி அவர் உருக்கமாக கூறியதாவது: பெயர் மாற்றிக்கொண்டதற்கும் நியூமராலஜிக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. புதியபெயரை அதிகாரப்பூர்வமாகக்கூட மாற்றிக்கொள்ளவில்லை. எனது சகோதரர் மீது நான் மிகுந்த பாசம் கொண்டவள். அவர் ஐஏஎஸ் தேர்வுக்காக படிப்பில் மூழ்கி இருந்தார். இந்நிலையில் திடீரென்று மரணம் அடைந்துவிட்டார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் அவர் முகத்தை பார்க்க முடியாமல் வேதனைப்பட்டேன். அவரை என்கூடவே இருப்பதுபோல் உணர வேண்டும் என்பதற்காக சாகர் என்ற அவரது பெயரை என் பெயருடன் சேர்த்துக்கொண்டேன். எனது தோழிகள், நண்பர்களிடமும் என்னை பிந்து சாகர் என்று அழைக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களும் அப்படித்தான் அழைக்கிறார்கள். ஒவ்வொருமுறை அவர் பெயரை கேட்கும்போது அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதுபோல உணர்கிறேன்.


 

கோடம்பாக்கத்தில் அதிநவீன புதிய லேப் & மினி திரையரங்கம்!

Ravi Prasad Launches New Lab Theater Kodambakkam
திரும்பிய பக்கமெல்லாம் ஸ்டுடியோக்களும் லேப்களுமாக நிறைந்திருந்த கோடம்பாக்கத்தில் இன்று இரண்டு லேப்களும் மூன்று ஸ்டுடியோக்களும்தான் இயங்கும் நிலையில் உள்ளன. மற்றவை அடுக்குமாடி வளாகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர ஹோட்டல்கள் என்று மாறிவிட்டன.

இந்த நிலையில் இப்போதைய தேவைகளுக்கேற்ப ஒரு அதி நவீன ஸ்டுடியோவை திறந்திருக்கிறார்கள். திரைத்துறையில் பல ஆண்டுகள் அவுட்டோர் யூனிட்டை நடத்தி வரும் ரவி பிரசாத் நிறுவனம் இந்த லேபைத் தொடங்கியுள்ளது. லேபின் பெயர் ரவி பிரசாத் லேப்.

இந்த லேபை சமீபத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் ஏவி எம் சரவணன், கலைப்புலி தாணு, டி சிவா, முரளிதரன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். கோடக் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மண்டல அதிகாரி ஜெர்ரி வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து ரவி பிரசாத் லேப் நிர்வாக இயக்குநர் ரவி குமார் கூறுகையில், "1978-ம் ஆண்டு முதல் எங்கள் அவுட்டோர் யூனிட் இயங்கி வருகிறது. சினிமாவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இப்போது இந்த லேபை பிரமாண்டமாக தொடங்கியுள்ளோம்.

இங்கு சுற்றுச் சூழல் மாசு ஏற்படாத வகையில் யு எல் ப்ளீச் செய்யப்படுகிறது. ஒரு திரைப்படம் உருவாவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இங்கு தருகிறோம். ப்ரிவியூவுக்காக 50 இருக்கைகள் கொண்ட மினி திரையரங்கையும் உருவாக்கியுள்ளோம்," என்றார்.
 

தீபிகாவுடன் எனக்கு நெருக்கமான காட்சிகள் வேண்டாமே - மகளுக்கு ரஜினி அட்வைஸ்!

Why Rajinikanth Can T Romance Deepika
கோச்சடையான் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகாவுடன் காதல் காட்சிகளை மிக நெருக்கமாக இருக்கும்படி அமைக்க வேண்டாம். அது தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக ரஜினி தன் மகளுக்கு அட்வைஸ் பண்ணாராம்.

கோச்சடையான் 3 டி அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் தீபிகா ஜோடியாக நடித்து வருகிறார்.

படத்தின் ஷூட்டிங் வெகு வேகமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது பாடல் காட்சிகள் சென்னையில் படமாகி வருகின்றன.

ஒரு பாடல் காட்சியில் ரஜினியும் தீபிகாவும் மிக நெருக்கமாக காதல் செய்வது போல பாட்டுக்கு நடனம் அமைத்த சரோஜ்கான் நடன அசைவுகள் வைத்திருந்தாராம்.

இதனைக் கவனித்த ரஜினி, "இந்த அளவு நெருக்கம் வேண்டாமே," என்று இயக்குநரான தன் மகள் சௌந்தர்யாவிடமும், நடன இயக்குநரிடமும் கேட்டுக் கொண்டாராம்.

தன்னை விட மிக இளம் வயதான தீபிகாவுடன் அத்தனை நெருக்கமாக நடிப்பது சங்கடமாக உள்ளதாகவும், இந்தக் காட்சிகள் கண்ணியமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறும் ரஜினி கூறினாராம்.

இந்தப் பாடல் குறித்து தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறுகையில், "அது உண்மையிலேயே ஒரு பிரில்லியன்ட் பாடல். ரஹ்மான் அத்தனை அருமையாக ட்யூன் கொடுத்துள்ளார். பரத நாட்டியத்துடன் இணைந்த ரொமான்டிக் பாடல். பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் மிக இயல்பாக அமைக்கப்பட்டுள்ளது," என்றார்.
 

ஆர்யா - சந்தானம் - ஹன்ஸிகா - அஞ்சலியின் சேட்டை... தொடங்கியது ஷூட்டிங்!

Arya Santhanam Anjali Hansika Settai
டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக்குக்கு பொருத்தமான தலைப்பைக் கண்டுபிடித்துவிட்டார்கள் யுடிவி மற்றும் கண்ணன் குழு.

இந்தப் படத்துக்கு சேட்டை என்று தலைப்பிட்டுள்ளனர்.

தலைப்புக்கேற்ப, மகா சேட்டையான குழுதான் நடிக்கிறது.

ஹீரோவாக ஆர்யாவும், அவருக்கு இணையான முக்கியத்துவத்துடன் சந்தானம் மற்றும் பிரேம்ஜியும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி, ஹன்சிகா மற்றும் அஞ்சலி.

ஆர் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று காலை சத்தமின்றி தொடங்கியது. ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி மற்றும் அஞ்சலி பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னி மில்லில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தினர். முன்னதாக நடந்த பூஜையில் தயாரிப்பு நிர்வாகி தனஞ்செயன், தயாரிப்பாளர் சீனிவாசன், நடிகர்கள் ஆர்யா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி, நாசர், இயக்குநர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமன் இசையமைக்க, ஜான் மகேந்திரன் வசனமெழுத, பிஜி முத்தையா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரோனி ஸ்குருவாலா, சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
 

மேனேஜருடன் சேர்ந்து ரூ 20 லட்சம் கடத்தினாரா நயன்தாரா?

Nayan Takes Rs 20 Lakh Bangkok With Manager   
நயன்தாராவின் பாங்காக் பயணம் ஏகப்பட்ட வதந்திகளைக் கிளறிவிட்டுள்ளது. இந்தப் பயணம் தொடர்பாக வந்துள்ள மூன்றாவது வதந்தி இது...

இந்தப் பயணம் சாதாரணமாக நடந்ததல்ல... பல லட்சம் ரூபாய் பணம் கடத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வரும் செய்திகளுக்கு மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லி வருகிறார் நயன்தாரா.

நடிகை நயன்தாரா பாங்காங் சுற்றுப்பயணம் சென்று விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அவருடன் மானேஜர் ராஜேஷ், மேக்கப் மேன் ராஜு ஆகியோரும் வந்தனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நயன்தாராவை மடக்கி விசாரணை நடத்தியதாகவும், அவரது மேனேஜர் ராஜேஷ், மேக்கப்மேன் ராஜு ஆகியோரிடமும் தனித் தனியாக விசாரணை நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. காரணம் நயன் மேனேஜர் எனப்படும் ராஜேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராம். இவரை நயன்தாராவுக்கு பிரபுதேவாதான் மேனேஜராக்கினாராம்.

நயன்தாராவும் ராஜேஷும் பாங்காங் சென்ற போது ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாகவும், எனவேதான் அவர்கள் சென்னை திரும்பிய போது சுங்க அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் கூறப்பட்டது. அந்த ரூ 20 லட்சம் எடுத்துச் சென்றது எதற்காக என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்களாம் அதிகாரிகள்.

இந்த வதந்திக்கும் நயன்தாரா பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் பாங்காக் போய் வந்தது குறித்து வரும் மூன்றாவது வதந்தி இது.

பாங்காங் சென்ற போது ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துச் செல்லவில்லை. அவ்வளவு பெரிய தொகையை விமானத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள். விமான நிலையத்தில் எனக்கு நடந்தது சாதாரணமான பாதுகாப்பு சோதனைதான் என்றால் ஏன் யாரும் நம்ப மறுக்கிறீர்கள். இது உங்களுக்கும் கூட நடக்கலாம்," என்றார்.
 

கேரவனுக்குள் கலாட்டா... ஓவியாவுடன் சண்டை.. வெளிநடப்பு செய்தார் தீபா ஷா!

சென்னையில் நடந்த சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தின் ஷூட்டிங்கின்போது மெதுவாக பேசுங்களேன் என்று நடிகை ஓவியா கூறியதால் கோபமடைந்த தீபா ஷா அவரிடம் சண்டை பிடித்தார். பின்னர் ஸ்பாட்டை விட்டு வெளியேறிப் போய் விட்டார். இதனால் பரபரப்பாகி விட்டதாம்.

ஒரு படம் குறித்து வெளியாகும் செய்திகளை விட படப்பிடிப்பில் நடக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள்தான் இப்போதெல்லாம் நிறைய வருகிறது. இதில் இலவச பப்ளிசிட்டியும் அடங்கியுள்ளது என்பதால் இப்படிப்பட்ட செய்திகளை சம்பந்தப்பட்ட தரப்பினரும் கூட மறுப்பதில்லை.

அந்த வகையில் தமிழில் தற்போது ஹாட்டாகவும், பிசியாகவும் நடித்து வரும் ஓவியாவுக்கும், நடிகை தீபாஷாவுக்கும் இடையே முட்டிக் கொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது.

இருவரும் சேர்ந்து "சில்லுன்னு ஒரு சந்திப்பு" படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோவாக நடிப்பவர் விமல். இவர் ஏற்கனவே ஓவியாவோடு சில படஙக்ளில் ஜோடி போட்டவர். இப்போது 3வது முறையாக ஜோடி போட்டுள்ளார்.

இந்தநிலையில் இப்படத்தின் ஷூட்டிங் மாதவரம் பகுதியில் நடந்தது. கேரவனில் நடிகைகள் ஓவியாவும், தீபா ஷாவும் தங்களது ஷாட்டுக்கு காத்திருந்தனராம். அப்போது ஓவியா ஒரு செய்தியாளருக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தாராம். தீபா ஷா அருகில் இருந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். அவர் சத்தம் போட்டபடி பேசியதால் ஓவியாவுக்கு பேட்டி கொடுக்க கஷ்டமாகி விட்டதாம்.

இதனால் தீபாஷாவை அழைத்து கொஞ்சம் அமைதியா இருங்க இல்லாட்டி அப்புறம் பேசுங்க என்று கூறியதாக தெரிகிறது. இதைக் கேட்டதும் தீபா ஷாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு விட்டதாம். ஓவியாவிடம் சத்தம் போட்டபடி அவர் வண்டியை விட்டு இறங்கி ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போயே விட்டாராம்.

அதன் பிறகு தயாரிப்பு நிர்வாகிகள் பி்ன்னாடியே ஓடி தீபாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனராம். ஆனால் ஓவியாவுக்கு அப்போது காட்சிகள் முடிந்து விட்டதால் அவர் கிளம்பிப் போய் விட்டார்.

அப்படிய ஓவியா, இப்படியா நடந்தது என்று அவரிடம் கேட்டால், நான் இதற்கு முன்பு அஞ்சலியுடன் நடித்துள்ளேன். நாங்கள் இருவருமே நல்ல தோழிகள். இந்த படப்பிடிப்பின்போது கூட நான் சண்டை போடவில்லை. தீபா ஷா சத்தமாக பேசிக் கொ்ண்டிருந்தார். அமைதியாக இருக்குமாறு மட்டும்தான் கூறினேன். சண்டையெல்லாம் நான் பிடிக்கவில்லை. இப்போது கூட எனக்கு அவர் மீது வருத்தம் இல்லை, தோழியாகத்தான் நினைக்கிறேன் என்றார்.

என்னவோ போங்கம்மா, சண்டை போட்டுக்காம சமத்தா வேலையைப் பாருங்க...!
 

குத்திய பச்சையை அழிக்க பாங்காக் போனேனா? - சீறும் நயன்

Nayanthara Fumes On Reports About Her Tattoo   
'தன் கையில் பிரபு தேவா என குத்தப்பட்டுள்ள பச்சை (டாட்டூ) யை அழிக்கத்தான் பாங்காக் போனார் நயன்தாரா' என்று வந்த செய்திகளைக் கண்டு கொதிப்பில் உள்ளார் நயன்தாரா.

நயன்தாராவும், பிரபு தேவாவும் காதலில் விழுந்து அடிபட்டு இப்போது முறிந்து பிரிந்து கிடக்கின்றனர். இருவரும் தங்கள் பக்க நியாயங்களை பேட்டிகளில் கொட்டி வருகின்றனர்.

இருவரும் பின்னிப் பிணைந்து கிடந்த போது, பிரபு தேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி தன் நெருக்கத்தை உலகுக்குக் காட்டினார் நயன். இப்போது பிரிந்த பின்பு அந்த பச்சை ரொம்ப படுத்துவதால் அதை அழிக்க நயன் முயற்சி செய்து வருவதாகவும் அறுவை சிகிச்சை செய்து அழிப்பதற்காக பாங்காக் சென்று வந்ததாகவும் செய்தி வெளியானது.

பாங்காக்கில் இருந்து திரும்பிய அவரை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 40 நிமிடம் சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவைக் கேட்டபோது, காட்டமாக மறுத்தார். அவர் கூறுகையில், "என்னைப் பற்றி தேவையற்ற வதந்திகள் வருவதே வழக்கமாகிவிட்டது. எனக்கு வேண்டாதவர்கள் இதை பரப்பி இருக்கிறார்கள். இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்த வதந்திகளால் நான் வருத்தப்படவும் இல்லை. இது போன்று வெறும் யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் செய்திகள் கோபத்தைதான் ஏற்படுத்துகின்றன. என்னை தொழில் ரீதியாக பார்க்க வேண்டும் தவிர சொந்த வாழ்க்கையை வைத்து பார்க்க கூடாது.

என் கையில் குத்தி இருந்த பச்சையை அழிக்க வேண்டுமானால் நான் ஏன் பாங்காக் போக வேண்டும். அதை இந்தியாவிலேயே எளிதாக அழித்து விட முடியும்.

உண்மையை விசாரித்து அறியாமல் என்னை பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். நான் பச்சை குத்தி இருந்ததை அழித்து இருக்கிறேனா என்று நேரில் வந்து பார்க்கலாம். விமான நிலையத்தில் பயணிகள் சோதனையிடப்படுவது வழக்கமான நடைமுறைதான். அப்படித்தான் என் விஷயத்தில் நடந்தது. வழக்கத்தை விட சற்று தாமதப்படுத்திவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை," என்றார்.

கொஞ்சநேரம் கூடுதலாக நிற்க வைத்துப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்களோ!!
 

படப்பிடிப்பில் 'குக்' ஆக மாறிய சீமான்!

Seeman Turns Cook Shooting Spot
அரசியல், சினிமா தாண்டி சமையல் கலையிலும் நிபுணர்தான் இயக்குனர் சீமான் என்பது அவருடன் பழகிய பலரும் சொல்வது.

தன் தலைவர் பிரபாகரன் மாதிரியே கோழிக் குழம்பு செய்வதில் இவரை மிஞ்ச முடியாது என்பார்கள், அவர் கையால் சாப்பிட்டவர்கள்.

இப்போது தன் சமையல் நிபுணத்துவத்தை படப்பிடிப்பில் பல சினிமா கலைஞர்களும் அனுபவிக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் சீமான்.

ஒரு படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்து வரும் சீமான், தேனியில் நடந்த படப்பிடிப்பின்போது தன் கையாலேயே சமைத்து படப்பிடிப்புக் குழுவை அசத்தினார்.

படப்பிடிப்பு நடந்த நாட்கள் முழுவதும் தினம் ஒரு மெனுவை சொல்லி அதற்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்வாராம். உடனே அசத்தலாக சமைக்க ஆரம்பித்துவிடுவாராம்.

உப்புக்கறி, பிரியாணி, மீன் குழம்பு, கோழி குழம்பு என சீமான் கையால் சாப்பிட்ட படத்தின் சக நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்டோர் அதன் சுவையில் அசந்து போனார்களாம்.

படப்பிடிப்பு மட்டுமல்லாது வீட்டிலும் நேரம் கிடைக்கும்போது தாமே முன்னின்று சத்தான உணவுகளை சமைத்து தன்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் உட்பட பலருக்கும் கொடுப்பது சீமானின் சிறப்பான குணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.