சூரிய சக்தி ஊழல் வழக்கில் கேரள நடிகை ஷாலு கைது!

சூரிய சக்தி ஊழல் வழக்கில் கேரள நடிகை ஷாலு கைது!

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சூரிய சக்தி ஊழல் வழக்கில் கேரள நடிகை ஷாலு மேனன் போலீசாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளை பொருத்தி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கான பண மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதாநாயர் என்ற பெண் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் முதல்வர் அலுவலக உதவியாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஊழல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு உதவியதாக கேரள நடிகை சாலுமேனன் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சாலுமேனன் மீது திருச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த ஊழல் விவகாரத்தில் நடிகை சாலுமேனனுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அவரையும் அவரது தாயாரும் சம்மன் அனுப்பி விசாரித்தனர் போலீசார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் அருகே செங்கனாஞ்சேரி வீட்டில் தங்கியிருந்த நடிகை சாலு மேனனை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் அருகில் உள்ள செங்கனூர் என்ற இடத்துக்குக் கொண்டு போய் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆர்யாவுக்கும் எனக்கும் இடையே ஒண்ணுமே இல்ல! - நயன்தாரா

எனக்கும் ஆர்யாவுக்கும் காதல் என்று வரும் கிசுகிசுக்கள் நிஜமல்ல, எங்களுக்கிடையில் அப்படி எந்த நெருக்கமும் இல்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

பாஸ் என்கிற பாஸ்கரனில் இருவரும் ஜோடியாக நடித்ததிலிருந்து நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போது ராஜா ராணி படத்திலும் இணைந்து நடிக்கின்றனர். நயன்தாராவும் ஆரியாவும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வருவதாக செய்திகள் வந்தன.

ஆர்யாவுக்கும் எனக்கும் இடையே ஒண்ணுமே இல்ல! - நயன்தாரா

சமீபத்தில் ராஜா ராணி பட விழாவுக்காக தயாரான அழைப்பிதழில் நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தையும் அச்சிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். இதனால் இருவரும் நிஜத்திலும் இணைவார்கள் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "ஆர்யாவையும், என்னையும் இணைத்து வதந்திகள் பரவுகின்றன. சினிமாவில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால் உண்மையில் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நாங்கள் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். அதனால் தான் இப்படி வதந்தி பரவியுள்ளது.

இருவரும் சேர்ந்து நடிப்பது தானாக நடந்தது. விரும்பி நடக்கவில்லை. காதல் போன்ற விஷயங்களிலிருந்து வெளியே வந்து விட்டேன். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். சில காலம் இதே நிலையில் இருக்க விரும்புகிறேன்.

ஆண்-பெண் பழகினால் காதலாகத்தான் இருக்க வேண்டுமா? நண்பர்களாக இருக்க கூடாதா? நடிகரும், நடிகையும் ஒருத்தருக்கு ஒருத்தர் டேட்டிங் இல்லாமல் நண்பர்களாக வாழ முடியும். நானும் ஆர்யாவும் சாதாரண நண்பர்களாகத்தான் இருக்கிறோம். அவர் வீட்டில் நடந்த விருந்து பற்றி பேசுகிறார்கள். அங்கு நான் மட்டுமே போகவில்லை. என்னைப் போல் நிறைய சினிமாக்காரர்கள் வந்து இருந்தார்கள். அவர்களை மறந்துவிட்டார்களே.

சில காலம் தனிமையில் இருப்பதே என் முடிவு. காதல் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. ஆர்யா எனக்கு நல்ல நண்பர். எப்போதும் அப்படியே இருப்பார்.

ராஜா ராணி பட அழைப்பிதழில் திருமணம் செய்து கொள்வது போன்று எங்கள் படங்களை அச்சிடப்பட்டு இருந்தது படத்தின் விளம்பரத்துக்காகத்தான்," என்றார்.

 

விஸ்வரூபம் 2 - முதல் போஸ்டர்கள் & டிசைன்களை வெளியிட்டார் கமல்!

சென்னை: நடிகர் கமல்ஹாஸன் நடிக்கும் விஸ்வரூபம் 2-ம் பாகத்தின் போஸ்டர்கள், டிசைன்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன.

கமல் தயாரித்து, இயக்கி, நடித்த படம் விஸ்வரூபம். பெரும் சர்ச்சைகளுக்கிடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்துக்காக எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து, இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் கமல்.

விஸ்வரூபம் 2 - முதல் போஸ்டர்கள் & டிசைன்களை வெளியிட்டார் கமல்!

முதல் பாகம் அமெரிக்காவிலும் ஆப்கானிஸ்தானிலும் நடப்பதாகக் காட்டியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகம் முழுக்க இந்தியாவிலேயே நடக்கிறது.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார் கமல்ஹாஸன். உடனுக்குடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடித்து வருகிறார். இதுவரை படம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த கமல், முதல் முறையாக படத்தின் தமிழ் மற்றும் இந்தி போஸ்டர்கள் மற்றும் டிசைன்களை வெளியிட்டுள்ளார்.

'இந்த இரண்டாம் பாகத்தை கமல் தயாரிக்கவில்லை. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும்', என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது கமலின் ராஜ்கமல் நிறுவனம் அளிக்கும் விஸ்வரூபம் 2 என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்பாகத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களே இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

 

படப்பிடிப்பிலிருந்து ஓட்டம்: நடிகை சந்தியா, இயக்குநர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

படப்பிடிப்பிலிருந்து ஓட்டம்: நடிகை சந்தியா, இயக்குநர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

படப்பிடிப்பிலிருந்து ஓட்டம்: நடிகை சந்தியா, இயக்குநர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

சென்னை: படப்பிடிப்பிலிருந்து ஓட்டம் பிடித்து தனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக நடிகை சந்தியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் எழில் இனியன் மாயை என்ற படத்தை தயாரித்தார். ஜே.ஆர்.கண்ணன் இயக்கினார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது, சந்தியா திடீரென காணாமல் போய்விட்டாராம். இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து எழில் இனியன் கூறுகையில், "சென்னை புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் ‘சை' என்ற படத்தை தயாரித்து கதாநாயகியின் தந்தையாகவும் நடித்தேன். பிறகு படத்தின் பெயர் ‘மாயை' என மாற்றப்பட்டது.

படப்பிடிப்பு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடிந்த பிறகு கதாநாயகி தனம் நன்றாக நடிக்கவில்லை என்று இயக்குனர் கண்ணன் கூறினார். அவருக்கு பதில் சந்தியாவை ஒப்பந்தம் செய்து மீண்டும் படப்பிடிப்பை துவக்கினார்.

ஊட்டியில் படப்படிப்பு தொடங்கியது. அங்கு வந்த சந்தியா தனக்கு கொடுத்த கவர்ச்சி உடையை அணிய மறுத்தார். இதுபோன்ற ஆடை உடுத்தி தன்னால் நடிக்க முடியாது என்று கூறி விட்டு கிளம்பி போய்விட்டார். முதலிலேயே சந்தியாவிடம் காஸ்ட்யூம் பற்றி சொல்லாமல் அழைத்து வந்தது டைரக்டர் செய்த தப்புதான். இதனால் படப்பிடிப்பு நின்று நஷ்டம் ஏற்பட்டது. நடிகை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருக்கலாம். அவர் கொஞ்சமும் யோசிக்காமல் ஓடிவிட்டார்.

இயக்குநருடன் தகராறு

எனக்கும் டைரக்டர் கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டதால் ரூ. 24 லட்சம் பெற்றுக் கொண்டு படத்தில் இருந்து விலகி விடும்படி டைரக்டர் கண்ணன் தெரிவித்தார். நான் சம்மதித்தேன். அட்வான்சாக ரூ. 2 லட்சம் தந்தார். மீதி பணத்தை படம் ரிலீசுக்கு முன் தருவதாக கூறினார். ஆனால் பணத்தை தராமலேயே படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன்," என்றார்.

 

ஆந்திராவின் பெரும் பணக்காரரை வளைத்த காஜலின் காதல்!!

ஹைதராபாத்: நடிகை காஜல் அகர்வாலுக்கும் ஆந்திராவின் பெரும் பணக்காரத் தொழிலதிபர் ஒருவருக்கும் தீவிர காதல் என்றும், இதனால் படங்களில் நடிப்பதைக் கூட காஜல் குறைத்துக் கொண்டுள்ளதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திராவில் மிகவும் பரபரப்புச் செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது.

ஆந்திராவின் பெரும் பணக்காரரை வளைத்த காஜலின் காதல்!!

தெலுங்கில் இப்போது முதல் நிலை நடிகையாக உள்ளார் காஜல். தமிழில் ராசியில்லாத நடிகை என்று சொல்லப்பட்ட அவர், நான் மகான் அல்ல, துப்பாக்கி படங்களுக்குப் பிறகு முன்னணி ஹீரோக்களுக்கு பிடித்த நாயகி ஆகிவிட்டார்.

கமல்ஹாஸன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அவர் கால்ஷீட் கேட்டு வருகிறார்கள். ஆனால் காஜலோ இப்போது எந்தப் படமும் வேண்டாம் என்கிறாராம்.

தெலுங்கில் பவன் கல்யாண் படத்தைக் கூட நிராகரித்துவிட்டாராம்.

தற்போது தமிழில் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, விஜய்யுடன் ஜில்லா படங்களுடன் நடிப்புக்கு முழுக்குப் போடும் முடிவில் உள்ளாராம் காஜல்.

இதற்குக் காரணம், ஆந்திராவின் பெரும் பணக்காரரான ஒரு தயாரிப்பாளர் காஜலின் காதலில் சிக்கிக் கிடப்பதுதானாம். நடித்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு, வசதி வாய்ப்புகள் என்பதால், தயாரிப்பாளருடன் செட்டிலாக முடிவு செய்துள்ளாராம் காஜல்.

 

சத்தியம் டிவியில் மயக்கமா? கலக்கமா?

சத்தியம் தொலைக்காட்சியில் உளவியல் பிரச்சினைகளில் சிக்கித்தவிப்பவர்களை மீட்கும் வகையில் மயக்கமா? கலக்கமா? என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

வாழ்வின் பயம்- வெளியில் அச்சம் தொடர் தோல்வி - அதன் துரத்தல்- மன பாரம் விரக்தி- ஏமாற்றம்- தன்னம்பிக்கையின்மை போன்ற குழப்பங்களில்தவிக்கும் யார் வேண்டுமானாலும் இந்நிகழ்ச்சியில் தொலைப்பேசியின் வாயிலாக நேரடியாக உரையாடலாம்.

சத்தியம் டிவியில் மயக்கமா? கலக்கமா?

மயக்கமா? கலக்கமா? நிகழ்ச்சியில் பிரபல மனோதத்துவ மருத்துவர் சுபா சார்லஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை சனி மற்றும் ஞாயிறு மாலை 4 மணி முதல் 5 மணி வரை மயக்கமா? கலக்கமா ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பை ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் காணலாம்.

 

இயற்கைக்கு மாறான உறவு- கணவர் மீது நடிகை யுக்தா முகி பரபர புகார்

மும்பை: இயற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை யுக்தா முகி.

1999-ல் உலக அழகி பட்டம் வென்றவர், பல இந்திப் படங்களில் நடித்தவர் யுக்தா முகி. தமிழில் அஜீத்துடன் பூவலெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்துள்ளார். நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரும், நிதி ஆலோசகருமான பிரின்ஸ் டுலி என்பவரை அவர் திருமணம் செய்து செட்டிலானார்.

இயற்கைக்கு மாறான உறவு- கணவர் மீது நடிகை யுக்தா முகி பரபர புகார்

இப்போது கணவர் மீது மும்பை அம்போலி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

தன் கணவர் பிரின்ஸ் தன்னை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் யுக்தா முகி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கொடுமை மற்றும் துன்புறுத்துதல், இயற்கைக்கு மாறான உறவு கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளில் பிரின்ஸ் டுலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. புகார் கொடுத்த யுக்தா முகிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

டுலி மீது ஏற்கனவே அம்போலி காவல் நிலையத்தில் யுக்தா முகி புகார்கள் அளித்திருந்தார். ஆனால், தண்டிக்க இயலாத குற்றத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ததால், நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது முதல் முறையாக டுலி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.