மெரீனா பீச்சில் "ஒய் திஸ் கொல வெறி" பாடல் ஷூட்டிங்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ’3′. ’3′ படத்தின் ‘ஷ்லீஹ் tலீவீs ளீஷீறீணீஸ்மீக்ஷீவீ பீவீ’ என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளிப்பிக் கொண்டிருக்கிறது. பாட்டு ஹிட்டான அளவுக்கு பாடல் காட்சியும் ஹிட்டாக வேண்டும். இதற்காக டான்ஸ் மாஸ்டருடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து பாடல் ஒளிப்பதிவு சென்னை மெரீனா பீச்சில் நடக்கிறது.

 

கோவையில் "நண்பன்" ஆடியோ வெளியீட்டு விழா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமீர்கான், மாதவன் நடித்த `3 இடியட்ஸ்' இந்தி படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், `நண்பன்' என்ற பெயரில் `ரீமேக்' ஆகி உள்ளது. இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். விஜய்-க்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து படத்தின் பாடல் வெளியீடு விழா இந்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  இதுபற்றி ஷங்கர் கூறியதாவது:- `நண்பன்' படப்பிடிப்பு 100 சதவீதம் முடிந்துள்ளது. `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. `நண்பன்' படத்தின் பாடல் டிசம்பரில் 23ல் வெளியாகும் என்றார். பாடல் சி.டி. வெளியீட்டு விழாவிற்கு அமீர்கானை அழைக்க படக் குழு திட்டமிட்டுள்ளதாக எதரிகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோவை ஹிந்துஸ்தாக் காலேஜில் நடக்கிறது. அதுமட்டுமின்றி படத்தின் பாடல்களை விழா மேடையில் பாட இருக்கிறாராம் ஹாரிஸ் ஜெயராஜ்.


 

பிபாஷாவை காதலிக்கிறாரா ராணா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிபாஷா பாஷுவை காதலிக்கவில்லை என்று தெலுங்கு நடிகர் ராணா கூறினார். தெலுங்கு நடிகர் ராணாவும் இந்தி நடிகை பிபாஷா பாஷுவும் 'தம் மாரோ தம்' படத்தில் இணைந்து நடித்தனர். இதையடுத்து இவர்களுக்குள் காதல் என்று பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, வெற்றிமாறன் இயக்கும் இருக்கும் 'வடசென்னை' படம் மூலம் தமிழுக்கு வரும் ராணா, தனது காதல் பற்றி கூறியதாவது: ஹீரோயின்களுடன் இணைத்து பேசுவது சினிமாவில் ஒன்றும் புதிதில்லை. பிபாஷூவும் நானும் பிரண்ட்ஸ்தான். 'தம் மாரோ தம்' பட யூனிட்டில் பணியாற்றிய எல்லோருமே எனக்கு குடும்பம் மாதிரிதான். அப்படித்தான் பிபாஷாவும். மற்றபடி மீடியாதான் இதை காதல் என்று பெரிது படுத்துகிறது. தெலுங்கு, இந்தி படங்களைத் தொடர்ந்து இப்போது தமிழில் நடிக்க இருக்கிறேன். தமிழில் எப்போதோ நடித்திருக்க வேண்டியது. இந்திப் படம் கமிட் ஆகிவிட்டதால் தள்ளிப்போனது. அதுமட்டுமல்லாமல் நல்ல ஸ்கிரிப்டுக்காக, காத்திருந்தேன். தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் சொன்ன கதைப் பிடித்திருந்தது. இதில் சிம்பு ஹீரோ. எனது கேரக்டர் சிறியதா, பெரியதா என்பது பற்றி கவலையில்லை. ஆனால், சிறப்பான, ஸ்ட்ராங்கான கேரக்டர் என்பதை சொல்ல முடியும். இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்படலாம்.


 

நீ....ண்டு கொண்டே போகும் ஆதி பகவான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நீ....ண்டு கொண்டே போகும் ஆதி பகவான் படத்தை கண்ணில் காட்டப் போறீங்க என்று ஹீரோ ஜெயம் ரவியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இப்போதான் படம் 70 சதவீதம் முடிந்திருக்கிறது. 2012 ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு இரட்டை வேடம் என்கிறார்கள். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீது சந்திரா நடிக்கிறார். அமீரும் இந்த படத்தை மெதுவாகவும், சுவராசியமகவும் இயக்கி வருகிறாராம்.


 

நான்கு தலைமுறை கதையில் பிரபு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்ரீலஷ்மி பிரசன்னா பிக்சர்ஸ் வழங்க, மஞ்சு என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகன்பாபு மகள் லஷ்மி மஞ்சு தமிழ், தெலுங்கில் படம் தயாரிக்கிறார். அவரது தம்பி மனோஜ் ஹீரோ. தீக்ஷா சேத் ஹீரோயின். மற்றும் பிரபு, சுஹாசினி, பாண்டியராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ராஜசேகர். இசை, போபோ சாசி. வசனம், சோழன். சேகர்ராஜா இயக்குகிறார். சென்னையில் நடந்த இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபு, நிருபர்களிடம் கூறும்போது, ''இந்தப் படத்தில் அப்பா சிவாஜியும் வருகிறார் என்றார்கள். எப்படி என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். இது 4 தலைமுறைகள் கதை. என்.டி.ராமராவ், சிவாஜி, பாலகிருஷ்ணா என யாருமே எதிர்பாராத ஆச்சரியங்கள் படத்தில் இருப்பதாக டைரக்டர் சொன்னார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை'' என்றார். பேட்டியின்போது, மனோஜ், லஷ்மி மஞ்சு, ஆதி உட்பட பலர் இருந்தனர்.


 

தமிழில் டான் 2

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷாரூக் கான், பிரியங்கா சோப்ரா, போமன் இரானி நடித்த படம், 'டான்'. அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடிப்பில் 1978ல் வெளியான 'டான்' படத்தின் ரீமேக் இது. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் 'டான் 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஷாரூக், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, குணால் கபூர் நடிக்கும் இந்தப் படம் தமிழில் அதே பெயரில் டப் ஆகிறது. ரிதேஷ் சித்வானியுடன் இணைந்து தயாரிக்கும் பர்ஹான் அக்தர் இயக்குகிறார். ஷங்கர் எஹசான் லாய் இசை அமைக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜேசன் வெஸ்ட். வரும் 23ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. 'டான்' படத்தில் நடித்தவர்களில் அர்ஜுன் ராம்பால், இஷா கோபிகருக்குப் பதிலாக, இதில் லாரா தத்தாவும் குணால் கபூரும் நடித்துள்ளனர்.


 

த்ரிஷா பெயரில் ட்விட்டரில் மோசடி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ட்விட்டரில், தன் பெயரில் போலி கணக்கு தொடங்கியுள்ள மர்மநபர் பற்றி, த்ரிஷா புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் ட்விட்டர் பக்கத்தை இதுவரை 2 லட்சம் பேர் தொடர்கிறார்கள். ஒரு வகையில் இது சந்தோஷமென்றாலும் இன்னொரு வகையில் அதிர்ச்சியாக இருக்கிறது. எனது ட்விட்டர் ஐடி tக்ஷீவீsலீtக்ஷீணீsலீமீக்ஷீs. ஆனால் க்ஷீவீsலீணீtக்ஷீணீsலீமீக்ஷீs  என்ற ஐடியில் யாரோ ஒருவர் என்னை போலவே ட்விட்டர் பக்கம் தொடங்கி நடத்துகிறார். நான் என்னவெல்லாம் என் பக்கத்தில் எழுதுகிறேனோ, அதை அப்படியே காப்பி செய்து போடுகிறார். நான் பேசுவதுபோல ரசிகர்களிடம் பேசி, தவறான தகவல் அளிக்கிறார். சமீபகாலமாக இது தொந்தரவாக இருக்கிறது. 'ட்விட்டரில் இப்படி சொல்லியிருக்கிறாயே' என்று நெருங்கிய தோழிகள், உறவினர்கள் வட்டாரத்தில் கேட்கிறார்கள். நான் அது இல்லை என்று விளக்கம் அளிக்கிறேன். அந்த மர்ம நபர் இப்போது இன்னும் கொஞ்சம் ஓவராக சென்று, இரண்டு ட்விட்டர் பக்கமும் என்னுடையதுதான் என்று நானே சொல்வது போல தெரிவித்திருக்கிறார். இது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருக்கிறேன். இவ்வாறு த்ரிஷா கூறினார்.


 

மீண்டும் தமிழக்கு வரும் ராஜீவ் மேனன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ராஜீவ் மேனனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இந்தியா முழுவதும் உண்டு. இந்திய சினிமாவில் பி.சி.ஸ்ரீராம், பாலமகேந்திரா போன்ற ஒளிப்பதிவாளருக்கு தனி ரசிகர்கள் கூட்டம். அந்த வரிசையில் ரவி.கே.சந்திரனும், ராஜீவ் மேனன் இடம் பெறுவார்கள். தமிழில் 'மின்சார கனவு' மற்றும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்களை இயக்கினார். இந்த படங்களுக்கு பிறகு, பாலிவுட் சென்ற ராஜீவ் மேனன், 7 வருடங்கள் கழித்து மீண்டும் கோலிவுட் பக்கம் வருகிறார். அதுவும் மாஸ் படத்தில். ராஜீவ் மேனனுக்கு 2 பெரிய படங்கள் உள்ளன. ஒன்று, மணிரத்னம் இயக்கும் 'பூக்கதை' மற்றொன்று சூப்பர் ஸ்டாரின் 'கோச்சடையான்'.



 

தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரசாத் சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.வி.பிரசாத் தயாரிக்கும் படம், 'கொள்ளைக்காரன்'. விதார்த், சஞ்சிதா ரெட்டி ஜோடி. தமிழ் செல்வன் இயக்குகிறார். ஏ.எல்.ஜோஹன் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்து. கவிஞர் வைரமுத்து வெளியிட, இயக்குனர் அமீர் பெற்றார். பின்னர் வைரமுத்து பேசும்போது, 'இயக்குனரும் தயாரிப்பாளரும் உணர்ச்சி வசப்படக்கூடாத இடம் திரைப்பட முன்காட்சியும், பாடல் வெளியீட்டு விழாவும். காரணம், இங்குதான் அன்பினால் சொல்லப்படும் பொய்கள் இருக்கும். அக்கறையானவர்கள் சொல்கிற சின்ன சின்ன பொய்கள் வாழ்க்கைச் சக்கரத்திற்குத் தேவை. பெரிய படங்கள் மட்டுமல்ல, சிறிய படங்களும் கவனிக்கப்பட வேண்டும். காட்டில் குயில் மட்டும் கூவினால் காடு நிசப்தமாகிவிடும். எல்லா சத்தங்களாலும் நிறைந்திருந்தால்தான் காடாக இருக்கும்' என்றார்.

தங்கர்பச்சான் பேசும்போது, 'தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவது தமிழர்களும், தமிழ் சினிமாவும்தான். டெல்லியில் தமிழ் சினிமா கலைஞர்களுக்கு மரியாதை இல்லை. இப்போது தமிழகத்தில் நடக்கும் படவிழாவில் தேசிய விருது பெற்ற படத்துக்கு இடமில்லை' என்றார். ஆர்.கே.செல்வமணி பேசும்போது, 'தமிழ் சினிமாவை டெல்லிதான் மதிக்காமல் இருந்தது. இப்போது தமிழ் நாட்டிலும் மதிக்கவில்லை. தமிழர்களை தொடர்ந்து புறக்கணித்தால் தமிழ் நாட்டில் வாழும் மற்றவர்களை நாம் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை வரும்' என்றார். விழாவில் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், அமீர், பாண்டிராஜ், சீனு ராமசாமி, நமீதா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தயாரிப்பாளர் பிரசாத் வரவேற்றார். முடிவில் இயக்குனர் தமிழ் செல்வன் நன்றி கூறினார்.


 

பிபாஷாவை காதலிக்கிறாரா ராணா?

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பிபாஷா பாஷுவை காதலிக்கவில்லை என்று தெலுங்கு நடிகர் ராணா கூறினார். தெலுங்கு நடிகர் ராணாவும் இந்தி நடிகை பிபாஷா பாஷுவும் 'தம் மாரோ தம்' படத்தில் இணைந்து நடித்தனர். இதையடுத்து இவர்களுக்குள் காதல் என்று பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, வெற்றிமாறன் இயக்கும் இருக்கும் 'வடசென்னை' படம் மூலம் தமிழுக்கு வரும் ராணா, தனது காதல் பற்றி கூறியதாவது: ஹீரோயின்களுடன் இணைத்து பேசுவது சினிமாவில் ஒன்றும் புதிதில்லை. பிபாஷூவும் நானும் பிரண்ட்ஸ்தான். 'தம் மாரோ தம்' பட யூனிட்டில் பணியாற்றிய எல்லோருமே எனக்கு குடும்பம் மாதிரிதான். அப்படித்தான் பிபாஷாவும். மற்றபடி மீடியாதான் இதை காதல் என்று பெரிது படுத்துகிறது. தெலுங்கு, இந்தி படங்களைத் தொடர்ந்து இப்போது தமிழில் நடிக்க இருக்கிறேன். தமிழில் எப்போதோ நடித்திருக்க வேண்டியது. இந்திப் படம் கமிட் ஆகிவிட்டதால் தள்ளிப்போனது. அதுமட்டுமல்லாமல் நல்ல ஸ்கிரிப்டுக்காக, காத்திருந்தேன். தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் சொன்ன கதைப் பிடித்திருந்தது. இதில் சிம்பு ஹீரோ. எனது கேரக்டர் சிறியதா, பெரியதா என்பது பற்றி கவலையில்லை. ஆனால், சிறப்பான, ஸ்ட்ராங்கான கேரக்டர் என்பதை சொல்ல முடியும். இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்படலாம்.


 

யானையிடம் இருந்து தப்பித்த கிருஷ்ணா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டாக்கிங் டைம்ஸ் மூவீசுக்காக பட்டியல் சேகர், மதுபாலா தயாரிக்கும் படம், 'கழுகு'. சத்யா சிவா இயக்குகிறார். கிருஷ்ணா, பிந்து மாதவி ஜோடி. சமீபத்தில் மூணாறு மலையில் இதன் ஷூட்டிங் நடந்தது. இதுபற்றி கிருஷ்ணா கூறியதாவது: எங்கள் ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்த ரசிகர் ஒருவர், திடீரென்று எல்லோரையும் பாறைகளுக்கு இடையே மறைந்துகொள்ளச் சொல்லி கத்தினார். எல்லோரும் மறைந்திருந்தோம். அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மறுபடியும் அந்த ரசிகர் குரல் கொடுத்த பிறகு வெளியில் வந்தோம். 'படையப்பா' என்ற யானை, இதுவரை ஐந்துபேரை விரட்டிச்சென்று கொன்றிருக்கிறதாம்.  ஷூட்டிங் நடந்த இடத்துக்கு அருகே அந்த யானை சென்றுகொண்டிருந்ததாகவும் எங்களைப் பார்த்திருந்தால் விரட்டியிருக்கும் என்றும் சொன்னார்கள். பிறகு அங்கு ஷூட்டிங் நடத்தாமல், வேறு இடம் சென்றோம்.