புதிய தலைமுறையினர் நம்பிக்கை அளிக்கிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புதிய தலைமுறையினர் நம்பிக்கை அளிக்கிறார்கள்

4/25/2011 12:12:33 PM

சுவாமி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'செங்காத்து பூமியிலே'. ரத்னகுமார் இயக்கி உள்ள இப் படத்தில் பவன், செந்தில், பிரியங்கா, சுனுலட்சுமி நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. பாடல்களை வெளியிட்டு இளையராஜா பேசியதாவது: ஒரு காலத்தில், பாடல் வெளியீட்டு விழா நடத்தப்படுவதில்லை. ஆனால் 'அண்ணக்கிளி', '16 வயதினிலே' பாடல் வெளியீட்டு விழா, இதே சேம்பர் தியேட்டரில்தான் நடந்தது. பல இனிய நினைவுகளோடு இருக்கும் இந்த தியேட்டர் இடிக்கப்பட இருக்கிறது. 908 படங்களுக்கு இசை அமைத்து விட்டேன். சுதீந்திரன், ரத்னகுமார் போன்ற இயக்குனர்களோடு பணியாற்றுகிறேன். இளம் தலைமுறை இயக்குனர்கள் சினிமாவுக்கு நம்பிக்கை தருபவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பட கதையை ரத்னகுமார் சொன்னபோது அதில் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தது. குறைக்கச் சொன்னேன். அதை அவர் செய்துள்ளார். இவ்வாறு இளையராஜா பேசினார். விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், சேம்பர் செயலாளர் ரவி கொட்டாரக்கரா, பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சுசீந்திரன், பாண்டிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தயாரிப்பாளர் துரைமுருகன் வரவேற்றார். முடிவில் ரத்னகுமார் நன்றி கூறினார்.





Source: Dinakaran
 

காதல் படங்களுக்கு முக்கியத்துவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதல் படங்களுக்கு முக்கியத்துவம்

4/25/2011 12:33:18 PM

காதல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஹரிப்பிரியா கூறினார். 'முரண்' படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து வரும் அவர் கூறியதாவது: 'முரண்' படம் தமிழில் எனக்கு திருப்புமுனை தரும் படமாக இருக்கும். அந்தப் படம் வெளிவந்த பிறகே வேறு தமிழ் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். கன்னடத்தில் ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறேன். மூன்றுமே காதல் படங்கள். இளமையும், அழகும் இருக்கும்போதே நிறைய காதல் படங்களில் நடித்து விட வேண்டும். அதனால் காதல் படங்கள் என்றால் உடனே ஒப்புக் கொள்வேன். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க இன்னும் கொஞ்சம் வயதாக வேண்டும். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஒரு இந்திப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்தேன். காரணம் அந்த ஒரு படத்துக்காக தென்னிந்தியாவில் நான் நான்கு படங்களை இழக்க வேண்டியது இருக்கும்.





Source: Dinakaran
 

ஸ்ரீசாந்துடன் காதலா? ரியா சென் மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்ரீசாந்துடன் காதலா? ரியா சென் மறுப்பு

4/25/2011 12:34:57 PM

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை காதலிப்பதாக வந்த தகவலில் உண்மை இல்லை என்றார் ரியா சென். தமிழில் 'தாஜ்மஹால்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரியா சென். பின்னர் பிரசாந்துடன் 'குட்லக்'படத்தில் நடித்த அவர் பிறகு இந்திக்கு சென்றுவிட்டார். சமீபத்தில் இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் சில விழாக்களில் கலந்துகொண்டனர். இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதை ஸ்ரீசாந்த் ஏற்கனவே மறுத்திருந்தார். இந்நிலையில் ரியா சென் தனது டிவிட்டர் இணையதளத்தில், 'கொச்சி ஐபிஎல் அணி பங்கேற்ற ஆட்டத்தில் நான் கலந்துகொண்டேன். இதற்காகவெல்லாம் காதல் வருமா என்ன? நான் ஸ்ரீசாந்தை காதலிக்கவில்லை. அது தவறான தகவல். இது தொடர்பான உங்கள் கற்பனைகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்' என்று கூறியுள்ளார்.





Source: Dinakaran
 

ஸ்டன்ட் காட்சிகள் தவிர்க்க முடியாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்டன்ட் காட்சிகள் தவிர்க்க முடியாது

4/25/2011 12:45:09 PM

விக்ரம் கூறியது: சினிமாவில் ஸ்டன்ட், மர்டர் போன்ற வன்முறை காட்சிகளை தவிர்க்காதது ஏன்? என்கிறார்கள். சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களைத்தான் சினிமாவில் காட்சிகளாக வைக்கிறார்கள். அதை தவிர்க்க முடியாது. 'தெய்வத்திருமகன்Õ தலைப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி இயக்குனரும், தயாரிப்பாளரும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி வருகிறார்கள். சினிமாவை தாண்டி அரசியலுக்கு வருவேனா என்பது எனக்கு தெரியாது. நாளை என்ன நடக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது. ஹீரோக்கள் என்ன செய்கிறார்களோ அதை ரசிகர்களும் செய்கிறார்கள். ஒருவர் என் பெயரை பச்சை குத்தியிருந்தார். அவரிடம் மனைவி பெயரை பச்சை குத்த வேண்டியதுதானே என்றபோது அதற்கு மறுத்துவிட்டார். மொட்டை அடித்தால் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள், உடல்கட்டு ஏற்றினால் அவர்களும் அதை செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நல்வழியில் அழைத்து செல்வதுதான் எனது எண்ணம். ஐ.நா சபையின் மனித குடியேற்ற திட்ட பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதன் மூலம் உலகம் வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுவது உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொள்வேன். எனது ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய், அஜீத், சிம்பு உள்ளிட்ட எல்லா நடிகர்களிடமும் பேசி அவர்களின் ரசிகர்களையும் இந்த முயற்சியில் ஈடுபட வைப்பேன்.





Source: Dinakaran
 

பெயரில் காதல் வேண்டாம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெயரில் காதல் வேண்டாம்

4/25/2011 12:27:38 PM

'காதல்' படம் மூலம் அறிமுகமானவர் சரண்யா. 'பேராண்மை', 'விளையாட்டு' படங்களில் நடித்தார். தற்போது 'மழைக்காலம்' உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவரை 'காதல்' சரண்யா என்று அழைக்கிறார்கள். அப்படி அழைக்க வேண்டாம் என்கிறார் சரண்யா. இதுகுறித்து அவர் கூறியதாவது: 10ம் வகுப்பு படிக்கும்போது 'காதல்' படத்தில் நடித்தேன். இப்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டேன். இப்போதும் என்னை 'காதல்' சரண்யா என்று அழைக்கிறார்கள். இதை சிலர் கிண்டலாக குறிப்பிடுவதால் பெயரில் மாற்றம் செய்திருக்கிறேன். எங்கள் குடும்ப பெயரான நாக் என்பதை இணைத்து எனது பெயரை சரண்யா நாக் என்று மாற்றி இருக்கிறேன். 'மழைக்காலம்' படத்தில் ஓவிய கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். நான் ஓவியம் வரைவது மாதிரி நிறைய காட்சிகள் இருப்பதாக இயக்குனர் சொன்னதால் நிஜமாகவே ஓவிய ஆசிரியை ஒருவரிடம் ஓவியம் கற்றேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில், வந்த படங்களில் எல்லாம் ஒப்புக் கொண்டேன். அவற்றில் பல பாதியிலேயே நின்று விட்டது. அதனால் இப்போது படம் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்தாலும் நல்ல இயக்குனர் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.





Source: Dinakaran
 

போட்டோகிராபரை மணந்தார் பாக்யாஞ்சலி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
போட்டோகிராபரை மணந்தார் பாக்யாஞ்சலி

4/25/2011 12:26:15 PM

தமிழில் 'உன்னையே காதலிப்பேன்', 'நெல்லு', 'கோட்டி' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை பாக்யாஞ்சலி. 'உன்னையே காதலிப்பேன்' பட வில்லன் நடிகர் வேலு மீது புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் இவர். இவருக்கும் கேரளாவை சேர்ந்த புகைப்படக்காரர் அனிஸுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இவர்கள் திருமணம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நேற்று காலை நடந்தது. இதில் இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதுபற்றி பாக்யாஞ்சலியிடம் கேட்டபோது, 'திருமணம் நடந்தது உண்மைதான். நாளை (இன்று) எர்ணாகுளம் திருப்போனிக்கராவில் உள்ள நாயர் சமாஜ அரங்கில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொள்ளும் திருமண நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 29-ம் தேதி கோழிக்கோடில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்துகொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை' என்றார்.





Source: Dinakaran
 

நான் பிரபுதேவாவின் ரசிகை : ஹன்சிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நான் பிரபுதேவாவின் ரசிகை : ஹன்சிகா

4/25/2011 12:14:37 PM

'மாப்பிள்ளை'க்குப் பிறகு கோலிவுட்டின் டாப் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ஹன்சிகா. அம்மணியின் கால்ஷீட்டுக்கு இப்போது பெரிய லைன். 'மாப்பிள்ளை' படம் பார்த்தவர்கள் என் நடிப்பை பாராட்டுகிறார்கள். பட ரிலீஸ் வரை மனம் திக் திக் என்றே இருந்தது. பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் ரிலீசுக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை தங்கள் வீட்டுப் பெண் போல் ஏற்றுக்கொண்டதை நினைத்து பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து, நல்ல கேரக்டர்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது என் லட்சியம்' என்கிறார் ஹன்சிகா.

எங்கேயும் காதல்?

அழகான காதல் கதை. காதல் இல்லாம உந்த உலகத்துல எதுவும் இல்லை. காதல்தான் எல்லாத்துக்கும் முக்கியமானதா இருக்குது. இந்தப் படத்துல இந்தியாவுல இருந்து பாரிஸ் வர்ற ஜெயம் ரவி மேல, அங்கேயே இருக்கிற எனக்கு காதல் வருது. இந்த காதல் என்னாவாகுது? ஒண்ணு சேர்றோமா, இல்லையாங்கறதுதான் கதை. ஜாலியா, பரபரன்னு இருக்கும். ஜெயம் ரவி செட்ல எனக்கு நிறைய உதவி பண்ணினார். நல்ல நடிகர். அதிகமா ஜோக் சொல்லிட்டே இருப்பார். அவரோட நடிச்சது நல்ல அனுபவம்.

பிரபுதேவா இயக்கத்துல நடிச்சது எப்படியிருக்கு?

அவர் சிறந்த கோரியோகிராபர்னு எல்லாருக்கும் தெரியும். இந்தியில அவர் இயக்கிய 'வான்டட்' பெரிய ஹிட். அதுக்கு முன்னால அவரோட நடனங்களை பார்த்து பிரமிச்சிருக்கேன். நான் அவரோட ரசிகை. அவர் இயக்கத்துல நடிக்க வாய்ப்பு வந்திருப்பது எனக்கு கிடைச்ச லக்குனு சொல்வேன். 

படத்தோட மொத்த ஷூட்டிங்கும் பாரிஸ்ல நடந்திருக்கு?

ஆமா. இதுவரை படமாக்கப்படாத புது லொகேஷன்கள்ல பிரபுதேவா ஷூட் பண்ணியிருக்கார். ஒவ்வொரு இடமும் பளிச்சுனு இருக்கும். இந்தப் பட ரிலீசுக்குப் பிறகு, 'அந்த லொகேஷன் எங்க இருக்கு; இந்த லொகேஷன் எங்க இருக்கு'ன்னு கேட்டு நிறைய டைரக்டர்கள், தங்களோட படத்தை கண்டிப்பா இங்க ஷூட் பண்ணுவாங்க. அந்தளவுக்கு ரிச்.

தொடர்ந்து 15 மணிநேரம் ஷூட்டிங்ல கலந்துக்கிட்டீங்களாமே?

பாரிஸ்ல தொடர்ந்து சில நாட்களா மழை பெய்துட்டே இருந்தது. ஷூட் பண்ண முடியலை. ஏற்கனவே போட்ட ஷெட்யூல்படி எங்களுக்கு தாமதம் ஆச்சு. உடனே, மழை விட்டு லேசா மேகம் மறைஞ்சதும் தொடர்ந்து 15 மணி நேரம் ஷூட்டிங் நடத்தி 3 நாள் இடைவெளியை சரி கட்டினோம். அது வித்தியாசமான அனுபவமா இருந்தது. 

அடுத்து?

உதயநிதி ஸ்டாலின் ஜோடியா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', விஜய் ஜோடியா 'வேலாயுதம்' படங்கள்ல மதுரை கிராமத்து பெண்ணா நடிக்கிறேன். இது தவிர இரண்டு தெலுங்கு படங்கள்ல நடிச்சிட்டிருக்கிறேன்.




Source: Dinakaran
 

கிசு கிசு - நடிகைக்கு தடை போட்ட டைரக்டர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நடிகைக்கு தடை போட்ட டைரக்டர்

4/25/2011 12:46:42 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சோன நடிகை நாளுக்கு நாள் குண்டாயிட்டே போறாராம்... போறாராம்... படம் தயாரிச்சு முடிச்ச கையோடு நடிக்கலாம்ன்னு முடிவெடுத்தவருக்கு குண்டான உடல் தடையா இருக்காம்... இருக்காம்... இப்படியே விட்டா சரியா வராது. முதல்ல உடம்பை இளைக்க பாருங்கன்னு சிலர் அட்வைஸ் பண்றதால சீக்கிரமே வெளிநாட்டுக்கு போய் சிகிச்சை எடுக்கப்போறாராம்... எடுக்கப்போறாராம்...

விளம்பர படங்கள்ல நடிச்ச ஜனனியான நடிகையை மில்க் டைரக்டரு தன் படத்துல நடிக்க வச்சாரு... வச்சாரு... பட ஷூட்டிங் வரை எந்த விழாவுலேயும் கலந்துக்கக் கூடாது, விளம்பரத்துலேயும் நடிக்கக்கூடாதுன்னு நடிகைக்கு தடை போட்டாரு. ஷூட்டிங் முடிஞ்சு போச்சு. இப்போ ரிலீஸ் வரைக்கும் அந்த தடையை நீட்டிக்க¤றதா டைரக்டரு சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... இதனால நடிகை வருத்தமா இருக்காராம்... இருக்காராம்... 

பிரியமான இயக்குனரோட மலையாள படத்துல லட்சுமியான ராய் நடிகை நடிக்கிறாரு. இயக்குனரோடு நடிகை நட்பா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... மலையாள படத்தோடு பிரியமானவரின் இந்தி படத்துலேயும் வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். இயக்குனரும் ஓகே சொல்லியிருக்கிறாராம்... சொல்லியிருக்கிறாராம்...




Source: Dinakaran