காதலரை ரகசிய திருமணம் செய்ய நடிகை திட்டம்?

சென்னை: தளபதியின் மாவட்ட பட நாயகி தனது தொழில் அதிபர் காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தளபதியுடன் சேர்ந்து கன், மாவட்டம் படங்களில் நடித்த அந்த நடிகை ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த தொழில் அதிபரின் வீட்டில் நடிகையை ஏற்க மறுக்கிறார்களாம். மேலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்களாம்.

எங்கே வேறு பெண்ணை கட்டி வைத்து விடுவார்களோ என்று அஞ்சிய தொழில் அதிபர் நடிகையிடம் நாம் ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினாராம். அதற்கு நடிகையோ எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனை அடங்கியதும் காதும் காதும் வைத்தது போன்று திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியிருக்கிறாராம்.

இதற்கு தொழில் அதிபர் சம்மதம் தெரிவித்தபோதிலும் தனது வீட்டாரை நினைத்து கலக்கத்திலேயே உள்ளாராம்.

 

நடிகர் சூர்யாவின் புது வீட்டில் தீ விபத்து

நடிகர் சூர்யாவின் புது வீட்டில் தீ விபத்து

சென்னை: நடிகர் சூர்யா தியாகராய நகரில் கட்டி வரும் புதிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு மற்றும் கட்டிடத் தொழிலாளர்களின் உடனடி நடவடிக்கையால் உரிய நேரத்தில் தீ அணைக்கப் பட்டு பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா. பிரபல நடிகரான இவரது மனைவி ஜோதிகாவும், தம்பி கார்த்தியும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களே.

நடிகர் சூர்யா, சென்னை தியாகராயநகர் சரவண முதலி தெருவில் புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். தனது பெற்றோர் மற்றும் தம்பி குடும்பத்தார் என அனைவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழும் வகையில் அந்த வீடு கட்டப் பட்டு வருகிறது.

அந்த வீட்டிற்கான கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்குவதற்கென புதிய கட்டிடம் அருகிலேயே ஒரு கழிவறை கட்டப்பட்டு, அதன் கூரை மீது ஓலைகள் போடப்பட்டு இருந்தன.

எதிர்பாராத விதமாக அந்தக் கூரையில் தீ பிடித்தது. உடனடியாக அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்கள்.

அதற்குள் தகவல் அறிந்து விரைந்து வந்த தியாகராயநகர் தீயணைப்பு படையினர் தீ விபத்துக் குறித்து விசாரணை நடத்தினார்கள். யாரோ கட்டிடப் பணியாள் குடித்து விட்டு வீசிய சிகரெட் துண்டே தீவிபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப் படுகிறது.

எனினும், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.