ஜெயம் ரவிக்கு மீசை வளரும் வரை ஷூட்டிங் கிடையாது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜெயம் ரவிக்கு மீசை வளரும் வரை ஷூட்டிங் கிடையாது!

12/14/2010 12:07:24 PM

ஒருகாலத்தில் ஹீரோவுக்கு மீசை இல்லை என்றால் கருப்பு மை வைத்து, ஹீரோவுக்கு மீசை வரைந்து நடிக்க வைத்தனர். ஆனால் தற்போது மீசை வளரும் வரை காத்திருக்கின்றனர் இன்றைய ஹீரோக்கள். தமிழ் சினிமாவில் சாக்லெட் ஹீரோவாக வலம் ஜெயம் ரவி, பேராண்மை படத்தை தவிர வேறு எந்த படத்திலும் மீசை வைத்து நடித்ததில்லை. பேராண்மை படத்திற்கு பிறகு மீசையுடன் அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் நடித்து வருகிறார். 'ஆதிபகவன்' படத்தில் மீசையுடன் நடித்துவந்த 'ஜெயம்' ரவி, 'எங்கேயும் காதல்' படத்துக்காக, மீசை மழித்தார். அவருக்கு மீசை வளரும் வரை, 'ஆதிபகவன்' 2வது கட்ட ஷூட்டிங்கை தள்ளி வைத்துள்ளார் அமீர்.


Source: Dinakaran
 

சில்க் ஊருக்கு போகிறார் :வித்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சில்க் ஊருக்கு போகிறார் : வித்யா

12/14/2010 11:52:28 AM

80-களில் கொடி கட்டி பறந்தவர் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தையடுத்து சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து 'தி டர்ட்டி பிக்சர்' என்ற படத்தை தமிழ், இந்தியில் இயக்குகிறார் மிலன் லுத்ரியா. சில்க் ரோலில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே வடநாட்டில் நடந்த இளம்பெண் மர்ம சாவு பற்றி உருவாகும் 'நோ ஒன் கில்ட் ஜெசிகா' என்ற நிஜ கதையில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்கும்முன் இறந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவரைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதேபோல் சில்க் வேடத்தில் நடிப்பதற்கு முன் அவரைப்பற்றிய விவரங்களையும், அவரது மேனரிசம் பற்றியும் தெரிந்துகொள்ள முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் சில்க் பிறந்த ஊரான எலுரு என்ற இடத்துக்கு வித்யாபாலன் விரைவில் செல்கிறார். அங்குள்ளவர்களிடம் ஸ்மிதாவை பற்றிய விவரங்களை கேட்டறிகிறார். பின்னர் சென்னை வரும் அவர், சில்க்கிடம் நட்பாகப் பழகியவர்களை சந்தித்து விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளார். அதன்பிறகே இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார்.


Source: Dinakaran
 

விஜய் இடத்தில் சூர்யா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய் இடத்தில் சூர்யா?

12/14/2010 2:16:35 PM

இம்மாதம் தொடங்கயிருந்த ’3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் நடிக்கவில்லை என்று முடிவு ஆனது பிறகு, அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என ஷங்கர் யோசித்து வருகிறார். அமீர் ரோலுக்கு ஒரு சீனியர் ஹீரோ நடித்தால் நல்லாயிருக்கும் என ஷங்கர் நினைக்கிறாராம். மேலும் சீயான் விக்ரம், அஜீத், சூர்யா இவர்களில் யாரை போடலாம் என தனது ஜூனியரிடம் கேட்டு வருகிறாராம் ஷங்கர். இந்த நிலையில், 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பார் என்றும், இதுகுறித்து அவரிடம் இயக்குநர் ஷங்கர் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பேசிய சூர்யா, “இந்தப் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது..” என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

விஜய் இடத்தில் சூர்யா?


Source: Dinakaran
 

சொந்தக் குரலில் பேசிய த்‌ரிஷா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சொந்தக் குரலில் பேசிய த்‌ரிஷா!

12/14/2010 2:58:58 PM

பெரும்பாலும் நடிகைகள் பார்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களது குரல் அழகாக இருக்காது. இதனை உடைக்கும் வகையில் த்ரிஷா புதிய முயிற்சியை மன்மதன் அம்பு படத்தில் செய்திருக்கிறார். கமலுடன் சொந்த குரலில் பாட்டு பாடிய த்ரிஷா, பட முழுக்க தனது சொந்த குரலில் பேசியுள்ளாராம். ஆனால் மன்மதன் அம்பின் தெலுங்குப் பதிப்புக்காக இவர் த்‌ரிஷாவுக்கு சின்மயி குரல் கொடுத்திருக்கிறார்.


Source: Dinakaran
 

இந்தியில் அறிமுகமாகும் ஸ்னிக்தா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்தியில் அறிமுகமாகும் ஸ்னிக்தா!

12/14/2010 12:19:18 PM

மிஷ்கனின் அஞ்சாதே படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடிய நடிகை ஸ்னிக்தா, மிஷ்கனின் 'நந்தலாலா' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தார். நந்தலாலா படத்திற்கு பிறகு நடிகை ஸ்னிக்தாவுக்கு ஏகப்பட்ட தமிழ் பட வாய்ப்புகள் தேடி வந்தன. அதுமட்டுமின்றி நடித்த ஸ்னிக்தாவுக்கு, 'லவ் யு மிஸ்டர் கலாகார்' படம் மூலம் இந்தியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.


Source: Dinakaran
 

எனக்கு பிடித்த படங்கள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எனக்கு பிடித்த படங்கள்!

12/14/2010 12:13:43 PM

தமிழ் சினிமாவின் வெற்றி பட இயக்குநர்களின் வரிசைப் படுத்தினால், அதில் நிச்சியமாக கே.எஸ்.ரவிக்குமாருக்கு இடம் உண்டு. தயாரிப்பாளர்களின் இயக்குனராக வலம் வரும் கே.எஸ்.ரவிக்குமார், சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என்று மெகா ஸ்டார்களின் செல்லமான இயக்குனராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய அவர் தான் இயக்கிய படங்களில், நாட்டாமை, படையப்பா, அவ்வை சண்முகி, வரலாறு, தசாவதாரம் ஆகிய 5 படங்களும் என் மனதுக்கு மிக நெருக்கமானவை என கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்தார்.


Source: Dinakaran
 

அசினுக்கு இனி இந்தி பட வாய்ப்பும் கிடையாது!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அசினுக்கு இனி இந்தி பட வாய்ப்பும் கிடையாது!

12/14/2010 12:32:24 PM

2வது ஹீ«£யினாக நடிக்க மாட்டேன் என ஒத்த காலில் நின்ற அசினுக்கு இந்தி பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் பயற்த போன அசின் பிரியங்கா சோப்ரா படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க விருப்பும் தெரிவித்தார். எல்லாம் தன் கைக்கு வரும் நிலையில் 2வது ஹீ«£யினாக நடிக்க அதிக சம்பளம் கேட்டாராம் அசின், இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அசினுக்கு பதிலாக இலியானாவை ஒப்பந்தம் செய்துவிட்டார். மேலும் இதற்கு அந்த பட இயக்குனர் அனுராக் பாசு ஒப்புக் கொண்டுள்ளார்.


Source: Dinakaran
 

ராமராஜனை சந்திக்க மறுத்த நளினி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராமராஜனை சந்திக்க மறுத்த நளினி!

12/14/2010 1:38:36 PM

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் நடிகர் ராமராஜன் கார் விபத்தில் சிக்கியது. கார் ஓட்டிச் சென்ற சம்பவ இடத்திலேலே பலியானார். ராமராஜன்,மற்றும் அவரது உதவியாளர்  தாஸ்  காயத்துடன் உயிர் தப்பினர். மதுரை மருத்துவமனையில் கடும் போராட்டத்தை சந்தித்து வரும் நடிகர் ராமராஜனை சந்திக்க அவரது முன்னாள் மனைவி நளினி மறுத்து விட்டாராம். தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டார். ராமராஜனும், நளினியும் காதலித்து மணந்தவர்கள். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். காலப்போக்கில் இவர்களுக்குள் பிணக்கு ஏற்படவே பிரிந்து விட்டனர். நளினியுடன் அவரது இரு பிள்ளைகளும் வசித்து வருகின்றனர்.

தற்போது ராமராஜன் சாலை விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நளினிக்குத் தகவல் தெரிவித்த ராமராஜனின் உறவினர்கள், ராமராஜனை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வருமாறு கோரியுள்ளனர். ஆனால் நளினி முடியாது என்று கூறி விட்டாராம். மேலும் தனது மகளையும் அவர் அனுப்ப மறுத்து விட்டாராம்.

இருப்பினும் இன்று காலை மகன் அருண் வந்து தனது தந்தையைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு உடனே புறப்பட்டுப் போய் விட்டார்.


Source: Dinakaran
 

மன்மதன் அம்பு படத்துக்கு யு சான்றிதழ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மன்மதன் அம்பு படத்துக்கு யு சான்றிதழ்!

12/14/2010 1:44:49 PM

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த 'மன்மதன் அம்பு’ வருகிற டிசம்பர் 23ந் தேதி வெளிவர உள்ளது. முன்னதாக இந்தப் படம் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவி்க்கப்பட்டிருந்தது. அதே சமயம் தெலுங்கு டப்பிங் முடியாததால், மன்மதன் சொன்ன தேதியன்று  ரிலீஸ் செய்யாமல் போனதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மன்மதன் அம்பு படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.


Source: Dinakaran
 

வீட்டை விற்று விட்டார் விஜய்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வீட்டை விற்று விட்டார் விஜய்

12/14/2010 2:05:56 PM

சமீபத்தில் வெளியான விஜய் படங்கள் சரியாகப் போகாததால், அடுத்து ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய். மேலும் திரைத்துறையிலும் அவருக்கு திடீரென்று பிரச்சனைகள் முளைத்து வருகின்றன. இதனையடுத்து சாலிக்கிராமத்திலுள்ள தனது வீட்டை விஜய் விற்றதாக தெரிகிறது. சமீப காலமாக விஜய்யின் படங்கள் சரியாகப் போகாதது மற்றும் திரைத்துறையில் பிரச்சனை காரணமாக, விஜய் ஜோதிடரை அனுகியதாகவும், ஜோதிடர் அறிவுரை காரணமாகவே அவர் விற்றதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது நீலாங்கரையில் உள்ள பெரிய வீட்டில் வசித்து வருகிறார் விஜய்.


Source: Dinakaran
 

மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா!

12/14/2010 2:49:47 PM

படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதில் கவனமாக இருக்கும் நடிகர் சூர்யா, ஹ‌ரியின் இயக்கம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுக்கிறாராம். இதற்கு காரணம். படத்தை தொடங்கினால் மூன்றே மாதத்தில் முதல் பி‌ரிண்டை தயார் செய்துவிடுவார் ஹ‌ரி. இந்த வேகம்தான் சூர்யா ஹ‌ரிக்கு கால்ஷீட் தர முக்கிய காரணம். அதுமட்டுமின்றி, ஹ‌ரி இயக்கத்தில் நடித்த ஆறு, வேல், சிங்கம் என மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Dinakaran