அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு விஷால்தான்... இளையதளபதியெல்லாம் சும்மா!- விக்ராந்த்

சென்னை: என் வாழ்க்கையில் அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு எனக்கு எல்லாமே என் நண்பன் விஷால்தான். இளையதளபதி அது இதெல்லாம் சும்மா, என்று கண்கலங்கினார் நடிகரும் விஜய்யின் தம்பியுமான விக்ராந்த்.

விக்ராந்த்... நடிகர் விஜய்யின் ரத்த சொந்தம். சித்தி மகன். அவர் கற்க கசடற படத்தில் அறிமுகமான போதே, விஜய்யின் தம்பி என்றுதான் தன்னை காட்டிக் கொண்டார். படத்திலும் விஜய்க்கு ஏக பில்டப் தரும் காட்சிகள் உண்டு.

அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு விஷால்தான்... இளையதளபதியெல்லாம் சும்மா!- விக்ராந்த்

அதன் பிறகு, எங்கள் ஆசான், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தார். நட்சத்திர கிரிக்கெட்டில் செஞ்சுரி அடிக்க முடிந்த அவரால், சினிமா நட்சத்திரமாக திரையில் ஜெயிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் விஷால் அவருக்குக் கைகொடுத்தார். தான் மிகுந்த நெருக்கடியில் இருந்த போதும், தன்னைவிட மிகவும் நெருக்கடியில், கிட்டத்தட்ட பூஜ்யத்திலிருந்த விக்ராந்துக்கு தன் சொந்தப் படமான பாண்டிய நாட்டில் சிறு வேடம் கொடுத்தார்.

அதன் விளைவு இன்று விக்ராந்துக்கு நல்ல பெயர். அத்துடன் நிற்கவில்லை விஷால். தன் சொந்தப் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் முழு ஹீரோவாக விக்ராந்தையே நடிக்க வைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார்.

இத்தனையும் சேர்த்து விக்ராந்தை நெக்குருக வைத்துவிட்டது.

உங்க சொந்த அண்ணன் இளையதளபதி செய்யாததை, இந்த அண்ணன் விஷால் செய்திருப்பது குறித்து? என கேட்டபோது, "நான் உண்மையிலேயே சொல்றேன். விஷால் என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றார்ங்கிறதுக்காக சொல்லல.

நானும் விஷாலும் 12 வருஷமா ப்ரெண்ட்டா இருக்கோம். என்னோட அப்பா, அம்மா, என்னோட மனைவி, குழந்தைக்கப்புறம் அவனுக்குத்தான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிருக்கு.

அதனால தான் என்னை வெச்சி படம் பண்றேன்னு சொல்றாப்ல. மத்தபடி ‘இளையதளபதி' அது இதெல்லாம் சும்மா... அதையெல்லாம் பேச விரும்பல," என்றார்.

 

நடிகன் தலையில கிரீடத்தை வைச்சு ஏத்திவிடாதீங்கப்பா.. அவனை அப்படியே விடுங்க- பாரதிராஜா

நடிகன் தலையில கிரீடத்தை வைச்சு ஏத்திவிடாதீங்கப்பா.. அவனை அப்படியே விடுங்க- பாரதிராஜா

சென்னை: நடிகன் தலையில் கிரீடத்தை வைத்து மீடியாக்கள் ஏற்றிவிடமால் இருந்தால் போதும். பத்திரிகைகள், கலைஞர்களை அப்படியே விட்டுவிடுவது நல்லது, என்றார் பாரதிராஜா.

பாண்டிய நாடு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகர் விஷாலிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில கேள்விகளின்போது இடைமறித்த பாரதிராஜா இப்படிக் கூறினார்.

தொடர்ந்து விஷாலின் காதலி மற்றும் திருமண விவகாரங்கள் குறித்தே சிலர் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட பாரதிராஜா, 'ஏன்யா.. அதான் இது பர்சனல் விஷயம்னு சொல்றானே (விஷால்), அப்புறம் எதுக்கு அதையே நோண்டிக்கிட்டு.. உன் பர்சனல் விஷயம் குறித்து நாங்க கேக்குறோமா... பிரஸ்மீட்ல இந்தப் படத்தோட கதை, நடிப்பு, பிஸினஸ், அடுத்த படம் குறித்து கேளுங்கய்யான்னா.. நீங்க திரும்பத் திரும்ப அவன் காதல், காதலி பத்தி கேட்டா எப்படி?" என்றார்.

அடுத்து, 'புரட்சித் தளபதி'ங்கற பேரை நீங்க துறந்தது இப்போ வசதியா இருக்குன்னு உணர்கிறீர்களா? என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விஷால் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பாரதிராஜா இடைமறித்து, "அவன்தான் அந்தப் பட்டப் பெயரை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு முழுசா தன்னை சினிமாவில் ஒப்படைச்சிக்கிட்டிருக்கான். ஏன் திரும்பத் திரும்ப அதைப் பத்தியே கேட்கறீங்க..

ஒருவன் ஒரு தப்பிலிருந்து திருந்து வந்தாலும், விடாம அந்தத் தவறைப் பற்றியே கேட்டுக்கிட்டிருந்தா எப்படி? அவனுடைய பாஸிடிவ் விஷயங்களைப் பேசுவதுதானே இப்போது நல்லது... பொதுவா இந்த நடிகர்களை ஏத்தி விடறதே பத்திரிகை மீடியாக்கள்தான்... சும்மா இருக்கிறவனை உசுப்பிவிடாம, கலைஞர்களை அவர்களாகவே இருக்க விடுங்கப்பா," என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றவர்.. 'வேணாம் விடுங்க.. இதுக்கு மேல பேச விரும்பல', என்றார்.

 

அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு விஷால்தான்... இளையதளபதியெல்லாம் சும்மா!- விக்ராந்த்

சென்னை: என் வாழ்க்கையில் அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு எனக்கு எல்லாமே என் நண்பன் விஷால்தான். இளையதளபதி அது இதெல்லாம் சும்மா, என்று கண்கலங்கினார் நடிகரும் விஜய்யின் தம்பியுமான விக்ராந்த்.

விக்ராந்த்... நடிகர் விஜய்யின் ரத்த சொந்தம். சித்தி மகன். அவர் கற்க கசடற படத்தில் அறிமுகமான போதே, விஜய்யின் தம்பி என்றுதான் தன்னை காட்டிக் கொண்டார். படத்திலும் விஜய்க்கு ஏக பில்டப் தரும் காட்சிகள் உண்டு.

அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு விஷால்தான்... இளையதளபதியெல்லாம் சும்மா!- விக்ராந்த்

அதன் பிறகு, எங்கள் ஆசான், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தார். நட்சத்திர கிரிக்கெட்டில் செஞ்சுரி அடிக்க முடிந்த அவரால், சினிமா நட்சத்திரமாக திரையில் ஜெயிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் விஷால் அவருக்குக் கைகொடுத்தார். தான் மிகுந்த நெருக்கடியில் இருந்த போதும், தன்னைவிட மிகவும் நெருக்கடியில், கிட்டத்தட்ட பூஜ்யத்திலிருந்த விக்ராந்துக்கு தன் சொந்தப் படமான பாண்டிய நாட்டில் சிறு வேடம் கொடுத்தார்.

அதன் விளைவு இன்று விக்ராந்துக்கு நல்ல பெயர். அத்துடன் நிற்கவில்லை விஷால். தன் சொந்தப் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் முழு ஹீரோவாக விக்ராந்தையே நடிக்க வைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார்.

இத்தனையும் சேர்த்து விக்ராந்தை நெக்குருக வைத்துவிட்டது.

உங்க சொந்த அண்ணன் இளையதளபதி செய்யாததை, இந்த அண்ணன் விஷால் செய்திருப்பது குறித்து? என கேட்டபோது, "நான் உண்மையிலேயே சொல்றேன். விஷால் என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றார்ங்கிறதுக்காக சொல்லல.

நானும் விஷாலும் 12 வருஷமா ப்ரெண்ட்டா இருக்கோம். என்னோட அப்பா, அம்மா, என்னோட மனைவி, குழந்தைக்கப்புறம் அவனுக்குத்தான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிருக்கு.

அதனால தான் என்னை வெச்சி படம் பண்றேன்னு சொல்றாப்ல. மத்தபடி ‘இளையதளபதி' அது இதெல்லாம் சும்மா... அதையெல்லாம் பேச விரும்பல," என்றார்.

 

நடிகன் தலையில கிரீடத்தை வைச்சு ஏத்திவிடாதீங்கப்பா.. அவனை அப்படியே விடுங்க- பாரதிராஜா

நடிகன் தலையில கிரீடத்தை வைச்சு ஏத்திவிடாதீங்கப்பா.. அவனை அப்படியே விடுங்க- பாரதிராஜா

சென்னை: நடிகன் தலையில் கிரீடத்தை வைத்து மீடியாக்கள் ஏற்றிவிடமால் இருந்தால் போதும். பத்திரிகைகள், கலைஞர்களை அப்படியே விட்டுவிடுவது நல்லது, என்றார் பாரதிராஜா.

பாண்டிய நாடு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகர் விஷாலிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில கேள்விகளின்போது இடைமறித்த பாரதிராஜா இப்படிக் கூறினார்.

தொடர்ந்து விஷாலின் காதலி மற்றும் திருமண விவகாரங்கள் குறித்தே சிலர் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட பாரதிராஜா, 'ஏன்யா.. அதான் இது பர்சனல் விஷயம்னு சொல்றானே (விஷால்), அப்புறம் எதுக்கு அதையே நோண்டிக்கிட்டு.. உன் பர்சனல் விஷயம் குறித்து நாங்க கேக்குறோமா... பிரஸ்மீட்ல இந்தப் படத்தோட கதை, நடிப்பு, பிஸினஸ், அடுத்த படம் குறித்து கேளுங்கய்யான்னா.. நீங்க திரும்பத் திரும்ப அவன் காதல், காதலி பத்தி கேட்டா எப்படி?" என்றார்.

அடுத்து, 'புரட்சித் தளபதி'ங்கற பேரை நீங்க துறந்தது இப்போ வசதியா இருக்குன்னு உணர்கிறீர்களா? என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விஷால் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பாரதிராஜா இடைமறித்து, "அவன்தான் அந்தப் பட்டப் பெயரை வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு முழுசா தன்னை சினிமாவில் ஒப்படைச்சிக்கிட்டிருக்கான். ஏன் திரும்பத் திரும்ப அதைப் பத்தியே கேட்கறீங்க..

ஒருவன் ஒரு தப்பிலிருந்து திருந்து வந்தாலும், விடாம அந்தத் தவறைப் பற்றியே கேட்டுக்கிட்டிருந்தா எப்படி? அவனுடைய பாஸிடிவ் விஷயங்களைப் பேசுவதுதானே இப்போது நல்லது... பொதுவா இந்த நடிகர்களை ஏத்தி விடறதே பத்திரிகை மீடியாக்கள்தான்... சும்மா இருக்கிறவனை உசுப்பிவிடாம, கலைஞர்களை அவர்களாகவே இருக்க விடுங்கப்பா," என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றவர்.. 'வேணாம் விடுங்க.. இதுக்கு மேல பேச விரும்பல', என்றார்.

 

ஒரு சுயசரிதை எழுதுவதால் இவ்ளோ பிரச்சனையா?: நடிகை புலம்பல்

சென்னை: கவர்ச்சி நடிகை ஒருவருக்கு அவர் எழுதும் சுயசரிதையால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் மலையாள திரையுலகை மிரள வைத்த நடிகை தற்போது சுயசரிதை எழுதி வருகிறார். இந்நிலையில் அவர் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறாராம். அவர் எந்த கம்பெனிக்கு சென்றாலும் அவர் கிளம்பிய பிறகு பல தொலைப்பேசி அழைப்புகள் வருகிறதாம்.

இப்பொழுது வந்துவிட்டு சென்ற நடிகைக்கு நீங்கள் வாய்ப்பளிக்கக் கூடாது. மீறி வாய்ப்பு கொடுத்தால் நீங்கள் உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவோம் என்று மிரட்டுகிறார்களாம்.

இதற்கெல்லாம் காரணம் நடிகை எழுதும் சுயசரிதை தானாம். அவர் தனது வாழ்க்கையில் நடந்தவற்றை பளிச்சென்று எழுதுகிறாராம். அதில் சினிமாவில் உள்ள சில பெருந்தலைகளின் மற்றொரு முகங்களை பற்றி பல திடுக்கிடும் விஷயங்களை எழுதியுள்ளாராம். இது குறித்து அறிந்த பெருந்தலைகள் அவரை மிரட்டியும் மசியவில்லையாம். அதனால் தான் வாய்ப்புகளை கெடுத்து வருகிறார்களாம்.

இதை அந்த நடிகை தனது நலம் விரும்பிகளிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம்.

 

அஜீத், விஜய்யை வைத்து காமெடி பண்ணும் கூகுள் டிரான்ஸ்லேட்

சென்னை: கூகுள் டிரான்ஸ்லேட்டில் அஜீத் மற்றும் விஜய்யை வைத்து காமெடி நடக்கிறது.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அஜீத் மற்றும் விஜய். இந்நிலையில் கூகுள் டிரான்ஸ்லேட்டில் அவர்களை வைத்து காமெடி நடந்து வருகிறது. கூகுள் டிரான்ஸ்லேட்டில்(Google Translate) dont see idiots movie என்று டைப் செய்து தமிழாக்கம் கேட்டால் விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று வருகிறது.

அஜீத், விஜய்யை வைத்து காமெடி பண்ணும் கூகுள் டிரான்ஸ்லேட்

அதுவே dont see idiot's movie என்று டைப் செய்து தமிழாக்கம் கேட்டால் அஜீத் படம் பார்க்க வேண்டாம் என்று வருகிறது. மேலும் idiot அல்லது idiot's movie ஆகிய வார்த்தைகளின் தமிழாக்கமாக அஜீத் படம் என்று வருகிறது.

இரண்டு பெரிய ஹீரோக்களின் பெயர்களை வைத்து கூகுள் டிரான்ஸ்லேட்டில் வரும் கூத்தை பார்த்து அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

 

ராஜேஷ் படத்தில் சந்தானம் இருக்காரா... இல்லையா?

இயக்குநர் ராஜேஷ் படம் என்றதும்... அப்ப சந்தானம் கட்டாயம் இருப்பார் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயம்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே மற்றும் அழகுராஜா என தான் இயக்கிய நான்கு படங்களிலும், ஹீரோவைவிட காமெடியன் சந்தானத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் ராஜேஷ்.

ஆனால் அழகுராஜா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தவறிவிட்டதால், உடனடியாகத் தொடங்கும் தனது அடுத்த திரைப்படத்தில் சந்தானத்துக்கு பதில் வேறு ஒரு காமெடி நடிகரை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் ராஜேஷ் என பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

ராஜேஷ் படத்தில் சந்தானம் இருக்காரா... இல்லையா?

ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பரோட்டா சூரி நடிப்பார் என சிலர் கிளப்பிவிட ஆரம்பித்துள்ளனர். ஆனால் ராஜேஷ் தரப்பில் இதுபற்றி எதுவும் அதிகாரப்பூர்வமாகக் கூறவில்லை.

சந்தானமும் ராஜேஷும் மிக நெருக்கமான நண்பர்கள். சந்தானத்துக்காகவே கமல் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றுகிறார் ராஜேஷ். அப்படி இருக்கும்போது, எதற்காக அல்லது யாருக்காக சந்தானமும் ராஜேஷும் பிரிய வேண்டும்? என கேள்வி எழுப்புகின்றனர் ராஜேஷின் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

அதானே.. எதற்கு பிரியணும்.. இணைந்தே இருந்து இன்னொரு அசத்தல் காமெடியைத் தரலாமே!

 

ராம் லீலா படத்திற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ்: தவறு செய்துவிட்டதாக தெரிவித்த நீதிபதி

டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றம் ராம் லீலா படத்திற்கு தடை விதிக்க மறுத்த விஷயத்தை தனக்கு யாரும் தெரிவிக்காததால் அந்த படத்திற்கு தடை விதித்து தவறு செய்துவிட்டதாக நீதிபதி ஜெயசந்திரா தெரிவித்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள ராம் லீலா படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படம் இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி 6 பேர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரா படத்திற்கு தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

ராம் லீலா படத்திற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ்: தவறு செய்துவிட்டதாக தெரிவித்த நீதிபதி

முன்னதாக ராம் லீலா படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தான் ஜெயசந்திரா படத்திற்கு தடை விதித்தார். இதையடுத்து ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியாஸ் லிமிடெட்டின் சார்பில் வழக்கறிஞர் அமித் சிபல் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி ஜெயசந்திராவிடம் ராம் லீலா படத்திற்கு தடை விதிக்க மறுத்துடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை அவர் அளித்தார்.

மேலும் படத்தின் முழுதலைப்பு ராம் லீலா: கோலியான் கி ராஸ்லீலா என்பதையும் சிபல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி தனது தடை உத்தரவை வாபஸ் பெற்றார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ராம் லீலா படத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை மனுதாரர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை. அதனால் படத்திற்கு தடை விதித்து தவறு செய்துவிட்டேன் என்றார்.

 

மாமா ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் மாப்பிள்ளை தனுஷ்?

மும்பை: தனுஷ் தனது மாமனார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

தனுஷ் நடிக்க வந்ததில் இருந்து இதுவரை தனது மாமனார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்ததில்லை. ரஜினியின் ஸ்டைல், எளிமையை ரசிக்கும் தனுஷுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாமா ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் மாப்பிள்ளை தனுஷ்?

தனுஷை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல்.ராய் அடுத்ததாக தான் எடுக்கும் படத்தில் தனுஷையும், ரஜினியையும் நடிக்க வைக்கிறாராம்.

இது குறித்து பிரபல வினியோகஸ்தர் கிரிஷ் ஜோஹார் ட்விட்டரில் கூறுகையில்,

ஆனந்த் ராய் தனது அடுத்த படத்தில் நடிக்க மெகாஸ்டார் ரஜினிகாந்த் சர் மற்றும் தனுஷ் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளார் என்று செய்திகள் வருகின்றன... இது உண்மையாக இருக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

சினிமாவில் டாஸ்மாக் காட்சிகள்... நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம்!

சென்னை: சினிமாவில் டாஸ்மாக் காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் காட்சிகளும் அதிகரித்துவிட்டதற்கு நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மெய்யழகி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டிரெய்லரை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட, இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.

சினிமாவில் டாஸ்மாக் காட்சிகள்... நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம்!

விழாவில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியபோது, ‘‘இந்த மாதிரி தரமான கதையம்சம் கொண்ட படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது.

இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி-கிண்டல் செய்கிறார்கள். மச்சி, மச்சான் என்று வசனக் காட்சிகள் வருகின்றன. பெரும்பாலான படங்களில் குடிகாரர்களின் ‘டாஸ்மாக்' காட்சிகள் இடம் பெறுகின்றன. இதெல்லாம் வேதனையாக உள்ளது. கண்டிக்கத்தக்கது.

பெரிய படம் சின்ன படம் என்று வேறுபாடு பார்க்கக்கூடாது. தரமான கதையம்சம் கொண்ட படங்களே பெரிய படங்கள்''என்றார்.

சோனா

அடுத்து பேச வந்த நடிகை சோனா, ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. ‘டாஸ்மாக்' காட்சிகள் இல்லாத படங்களே இல்லை'' என்றார்.

 

'விஷால்... இளம் தலைமுறை நடிகர்களில் ஒரு ஜென்டில்மேன்!'

இப்படித்தான் இன்றைக்கு தமிழ்த் திரையுலகம் நடிகர் விஷாலைக் கொண்டாடுகிறது. அதற்குத் தகுதியானவராக இந்த பத்தாண்டுகளில் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார் விஷால் என்பதே மிகையில்லாத உண்மை.

அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த விஷால், செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சண்டைக் கோழியில் ஆக்ஷன் அவதாரம் எடுத்தவர், தோரணை வரை நிறுத்தவே இல்லை. கையை ஓங்கினால் முப்பது பேர் தெறித்து விழுவார்கள்.

இது என் வித்தியாசமான முயற்சி என்று ஒவ்வொரு படத்தின்போதும் சொல்வார்... ஆனால் ஒரே மாதிரி ஆக்ஷன் கதைகளாகவே இருக்கும்.

'விஷால்... இளம் தலைமுறை நடிகர்களில் ஒரு ஜென்டில்மேன்!'

ஆனால் சமர் படத்தில் தன் தவறுகளை ஓரளவு தானே சரி செய்து கொள்ள முயன்றார். ஆனால் அந்தப் படத்தின் ரிலீஸ் நேரம் மற்றும் விளம்பரமின்மை எதிர்மறையாக அமைந்துவிட்டன. ஆனால் இப்போது பார்த்தாலும், விஷால் நடித்த நல்ல படங்களில் சமரும் ஒன்று என்பார்கள் விமர்சகர்கள்.

விஷால் நடிக்க வந்து பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை நாட்களில் தான் செய்த தவறுகள், தன் படங்கள் எதனால் மக்கள் மத்தியில் எடுபடாமல் போயின என்பதையெல்லாம் அலசிப் பார்த்த விஷால் எடுத்த புதிய முடிவுதான் விஷால் பிலிம் பேக்டரி.

'இனியும் அடுத்தவர் பேனரில் பரிசோதனை செய்து பார்க்கவோ, வழக்கமான ஆக்ஷன் படம் தரவோ எனக்கு விருப்பமில்லை. என் தந்தையின் பேனர், அல்லது அண்ணனின் பேனரில்கூட நான் படம் செய்ய விரும்பவில்லை. அதனால்தான் இந்த விஷால் பிலிம் பேக்டரியை ஆரம்பித்தேன். சொந்தக் கம்பெனி ஆரம்பித்ததைக் கூட
நான் பெரிதாக விளம்பரப்படுத்த விரும்பவில்லை. ஒரு நல்ல படம் தருவதின் மூலம் அதை நிரூபிக்க விரும்பினேன்.

அடுத்து, எனக்காக கதை என்றில்லாமல், கதைக்காகத்தான் நான் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னை முழுமையாக இயக்குநரிடம் கொடுத்துவிட்டேன். எந்தக் காட்சியிலும் என் தலையீடு இருக்கவில்லை. ஒரு தயாரிப்பாளராக என் எல்லையையும் நடிகராக அதற்கான எல்லையையும் உணர்ந்து நடந்து கொண்டேன்.

இப்போது நான் விரும்பிய அத்தனையும் எனக்கு நடந்திருக்கிறது," என்கிறார் விஷால் அடக்கத்துடன்.

பட்டப் பெயர்கள்...

இதற்கு முன் புரட்சித் தளபதி என்பதை விஷாலுக்கு பட்டப் பெயராகப் பயன்படுத்தினர். ஆனால் சமர் படத்தோடு அதை தூக்கி எறிந்தார். பட்டத்து யானை, பாண்டிய நாடு ஆகியவற்றிலும் அந்தப் பெயர் இல்லை. ஏன்?

"பட்டப் பெயரெல்லாம் எனக்கு எதற்கு? பட்டப் பெயர் வைத்துக் கொண்டு, அதன் மூலம் அரசியல் பண்ண அல்லது வேறு ஆதாயம் தேடும் அளவுக்கு நான் புத்திசாலி அல்ல. எனக்கு அது தேவையுமில்லை. ஒரு சினிமாக்காரனுக்கு எதற்கு இதெல்லாம். நமது நோக்கம் மக்களை மகிழ்விப்பது, அதன் மூலம் ஆதாயம் பெறுவதுதான். அதற்கு மேல் தலையில் ஒரு தனி கிரீடத்தை நாமே சுமந்து கொண்டு ஏன் திரிய வேண்டும்... எனவேதான் நான் வெறும் விஷாலாக, ஒரு கலைஞனாக மட்டும் இருக்கிறேன்," என்கிறார் விஷால்.

அடுத்தவருக்கு உதவி...

எவ்வளவோ முயன்றும் எடுபடாமல் போன இளம் நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். அவருக்கு தன் படத்தில் ஒரு கவுரவ வேடம் கொடுத்து நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததோடு, தன் சொந்தப் பட நிறுவனத்தின் மூலம் அவருக்கு பெரிய வாய்ப்பைத் தரும் முயற்சியில் உள்ளார் விஷால். அதுமட்டுமல்ல, திறமையுள்ள இளம் கலைஞர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளார்.

தன் தொழில் சார்ந்த அத்தனை நடவடிக்கைகளிலும் நியாயம் என்னவோ அதை உணர்ந்து செயல்படுவராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பல பொறுக்கித்தனங்கள் செய்து பின் தன்னை உத்தமராகக் காட்டிக் கொள்வார்கள் சில நடிகர்கள்.

"ஆனால் விஷாலைப் பொறுத்தவரை, ஆரம்பத்திலிருந்தே ஒரு நல்ல குடும்பத்துப் பிள்ளை என்ற இமேஜை முடிந்தவரைக் காப்பாற்றி வருகிறார். நடத்தை ரீதியாக அவரிடம் யாரும் குற்றம் காண முடியாது. தொழில் ரீதியிலான தன் தவறுகளை திருத்திக் கொண்டு, இன்று வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், நல்ல நடிகராகவும் மாறியிருக்கிறார். இந்தப் பிள்ளையின் தலையில் புதிய கிரீடம் எதையும் சுமத்தாமல், அவரை அவராகவே இருக்க விடுவது தமிழ் சினிமாவுக்கு பல நன்மைகளைத் தரும். விஷால் ஈஸ் எ ட்ரூ ஜென்டில்மேன்!", என புகழாரம் சூட்டுகிறார் இயக்குநர் பாரதிராஜா.

வெரிகுட்!

 

இதப் பார்ரா... ஐஸ் மகள் பெயர் ஆராத்யா, சிவகார்த்திகேயன் மகளின் பெயர் ஆரா...!

சென்னை: சிவகார்த்திகேயன் தனது மகளுக்கு ஆராதனா என்று பெயர் வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் மனைவி கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி மதுரையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தைக்கு ஆராதனா என்று பெயர் வைத்துள்ளனர்.

இதப் பார்ரா... ஐஸ் மகள் பெயர் ஆராத்யா, சிவகார்த்திகேயன் மகளின் பெயர் ஆரா...!

சிவகார்த்திகேயன் தற்போது திருக்குமரன் இயக்கத்தில் ஹன்சிகாவுடன் சேர்ந்து மான் கராத்தே படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் டணா என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

மான் கராத்தே படப்பிடிப்பில் சிவா ஹன்சிகாவை ஹன்சிகாஜி என்று மரியாதையோடு அழைக்கிறாராம்.