காமெடி கதாபாத்திரமே பிடிக்கும்: டிவி நடிகை ஸ்ரீதுர்கா

Serial Actress Sri Durga Interview

சீரியலில் அமைதியாக வந்துபோகும் ஸ்ரீ துர்கா, சுசீந்தரன் இயக்கும் ‘ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் உறவுகள், தியாகம் முந்தானை முடிச்சு ஆகிய தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீ துர்காவிற்கு கிடைப்பதெல்லாம் அமைதியான கதாபாத்திரம் என்றாலும் அழுகைதான் அதிகம். சிறுவயதில் இருந்தே சினிமா, சீரியலில் நடித்துவரும் துர்கா தனது மீடியா வாழ்க்கையைப் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

நான் சிறுவயதிலிருந்தே நடித்துக் கொண்டிருக்கிறேன். சில காலம் மாடலிங் துறையில் இருந்தேன். தற்போது பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில்தான் இருக்கிறேன். எனக்கு அப்பா, அம்மா, இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.

சன் டி.வி.யில் மதியவேளையில் ஒளிபரப்பாகும் "உறவுகள்', தியாகம் தொடர்களிலும், மாலையில் முந்தானை முடிச்சு தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். கேப்டன் டி.வி.யில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்று தயாரித்து வழங்குகிறேன்.

இதுவரை நடித்த எல்லா கேரக்டருமே பிடிக்கும். "ஊஞ்சல்', "அலைகள்', "சிகரம்' என எல்லாமே. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் "ஊஞ்சல்' தொடரில் நடித்த வேடம். அதில் முதல் பாதியில் நெகடீவ் கேரக்டர் செய்திருந்தேன். இரண்டாம் பாதியில் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாஸிடீவான கேரக்டர். அது ரொம்ப பிடித்திருந்தது.

'உறவுகள்' சீரியல் சீக்கிரமே முடிவுக்கு வரப்போகுது. அதில் நான் பண்ணின 'கவிதா' கேரக்டரை மறக்கவே முடியாது. எந்த சூழ்நிலையிலும் கோபமே வராத குணவதி கேரக்டர். அந்த மாதிரி எல்லாரோட மனசுலயும் நிக்கற கேரக்டர்களா அமையணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்

ஜாலியாக மற்றவர்களை சிரிக்க வைத்து பார்க்கும் நகைச்சுவை கேரக்டர்கள் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி கேரக்டர்கள் நிறைய கிடைக்கவில்லையே என்று வருந்தியது உண்டு. ஜெயா டிவியில் "பொய் சொல்ல போறோம்' என்ற தொடரில் ஒரு டிராக் மட்டும் காமெடி செய்திருப்பேன். அதில் ரொம்பவே விரும்பி நடித்தேன்.

ஒரு சில படங்கள் நடித்திருக்கிறேன். எனக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். இப்போது சுசீந்திரன் இயக்கும் ஆதலால் காதல் செய்வீர் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து வருகிறேன்.

எனக்கு நடிப்பு தவிர பாடுவதும், ஆடுவதும் ரொம்ப பிடிக்கும். என் குடும்பமே ஒரு சங்கீத குடும்பம். நானும் முறைப்படி சங்கீதம் பயின்றிருக்கிறேன். அதனால் அந்தத் துறையில் வர வேண்டும் நினைப்பேன். அதுதவிர சின்ன வயதிலிருந்தே போட்டோகிராபி மேல் ஆசை உண்டு. அதனால் சினிமாடோகிராபராக வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. வருங்காலத்தில் இசைப்பள்ளி நடத்த வேண்டும் என்று ஆசை உண்டு. ஆர்வம் இருந்தும், படிக்க வசதியில்லாத குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை உண்டு என்று தனது லட்சியக்கனவு குறித்து ஆசையுடன் தெரிவித்தார் துர்கா.

 

செல்வராகவனின் உதவும் தன்மை

Selvaraghavan is ready to support youngster

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்ப்பு தேடி வரும் இளைஞர்களுக்கு செல்வராகவன் உதவ முன் வந்துள்ளாராம். ஆம், அடுத்த 2 வருடத்தில் 7 படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் செல்வராகவன். 'திறமையுள்ள, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எனக்கு மெயில் பண்ணுங்கள்' என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டாராம் செல்வராகவன். அவர் வெளியிட்ட 2 மணி நேரத்திலேயே 500க்கும் மேற்பட்ட மெயில்கள் வந்து சேர்ந்ததாம். அத்தனை மெயில்களையும் நிதனமாக படித்து பிறகு, அதில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்பு தரப் போகிறாராம் செல்வராகவன்.
 

நயன்தாராவுக்கு ரூ 2.5 கோடி ஆஃபர்? உண்மையா... கப்சாவா?

Nayan Declines Rs 2 Cr Offer For The Dirty Picture   

டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 2. 5 கோடி தருவதாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதனை நயன்தாரா தரப்பு மறுத்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைதான் இந்த டர்ட்டி பிக்சர். இந்தியில் சக்கைப் போடு போட்ட படம்.

இந்தப் படத்தில் சில்க் வேடத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.

இந்த படத்தை தமிழிலும் தெலுங்கிலும் எடுக்க பல மாதங்களாக முயற்சித்து வருகின்றனர்.

இதற்கான நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது, சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசினர். அவருக்கு ரூ. 2.5 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர் ஏக்தா கபூர் முன் வந்தார். தென்னிந்திய நடிகைகளில் இவ்வளவு தொகை நயன்தாராவுக்கு மட்டும்தான் பேசப்பட்டுள்ளது. ஆனால், இப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிக்கவில்லையாம்.

தனது இமேஜ் (அப்படீன்னு ஒண்ணு இருக்கோ!!) பாதிக்கப்படும் என்பதால், இந்தப் படத்தில் நடிக்க மறுக்கிறாராம் நயன்!!

ஆனால் இன்னும் சிலரே, இதெல்லாம் நயன்தாரா கிளப்பிவிடும் வதந்தி என்கின்றனர்.

 

காஜல்தான் என்னோட ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட் - விஜய்

Vijay Hot Spicy Girl Friend Kajal Agarwal    | காஜல்  

சென்னை: பெயரிலேயே இனிப்பை வைத்திருக்கும் காஜல் அகர்வால்தான் என்னோட ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட், என்றார் நடிகர் விஜய்.

விஜய் கதாநாயகனாக நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இவ்வாறு விஜய் கூறினார்.

விஜய் பேசுகையில், "இந்தப் படம் அமைஞ்சதுக்காக எங்க அப்பாவுக்கு நான் நன்றி சொல்லணும். இந்த படத்துக்காக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் தாணு ஆகியோரை ஏற்பாடு செய்து கொடுத்தவர், எங்க அப்பாதான்.

ஏ.ஆர்.முருகதாசை, `குஷி' படத்தில் இருந்து எனக்கு தெரியும். அவர் டைரக்டு செய்த அத்தனை படங்களையும் பார்த்து இருக்கிறேன். அற்புதமாக கதை சொல்லக்கூடியவர். என்னை கவர்ந்த டைரக்டர். இந்த மாதிரி படமும், கதையும் இதுவரை என்னை `டச்' பண்ணலை. ஏ.ஆர்.முருகதாஸ் எனக்கு மிக சவுகரியமாக இருந்தார்.

காஜல் அகர்வால், பெயரிலேயே இனிப்பை வைத்திருக்கிறார். அகர்வால் ஸ்வீட். எனக்கு பிடித்த 'கேர்ள் ப்ரெண்ட்,' காஜல் அகர்வால். படத்துலதான்," என்றார்.

 

எக்ஸ்க்ளூசிவ் செய்திகளுடன் களமிறங்கியது லோட்டஸ் நியூஸ்

Lotus News Launched Today

லோட்டஸ் செய்திச் சேனல் இன்று காலை முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘லோட்டஸ் டிவி' இன்று முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. கோவையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாதா அமிர்தானந்தாமாயி அவர்களின் சிஷ்யை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

உண்மை மலரட்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கியுள்ள லோட்டஸ் சேனலில் செய்திகளுடன் பல்வேறு இளைஞர்களையும், ஆன்மீக ரசிகர்களையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் செய்திகள் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன. ஒரே நேரத்தில் 5 செய்திவாசிப்பாளர்கள் எக்ஸ்க்ளூசிவ் செய்திகளை செய்திகளை வாசித்தது புதுமையாக அமைந்திருந்தது.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை www.lotusnews.tv இணையத்தளத்தில் உடனுக்குடன் கண்டு ரசிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு என சேனலை தொடங்கியுள்ளனர். அதிமுகவிற்கு ஜெயா டிவி, திமுகவிற்கு கலைஞர் டிவி, தேமுதிகவிற்கு கேப்டன் டிவி என மதிமுகவிற்கு இமயம் டிவி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு புதிய தலைமுறை என ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளன. தற்போது பாஜகவிற்கும் லோட்டஸ் டிவி தொடங்கப்பட்டுள்ளது.

 

அதர்வாவின் "பரதேசி" கெட்டப்

Atharava's 'Paradesi' First Look

தேசிய விருது வென்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படம் 'பரதேசி'. அதர்வா ஹீரோவாக நடித்திருக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்தது. தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. இதனையடுத்து பாலா, படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம். இந்நிலையில் பட ஷூட்டிங் முடியும் வரை பட ஸ்டில்ஸை வெளியடாத பாலா, தற்போது ஸ்டில்களை வெளியிட்டுயிருக்கிறார். அதில் அதர்வா, சாக் பையை சட்டையாக போட்டுக் கொண்டு, ஒர விதமான முடி கட்டுடன் இருக்கிறார். முப்பொழுதும் உன் கற்பனை படத்தில் மிகவும் அழகாக இருந்த அதர்வா இது என்ற அளவுக்கு இருக்கிறது அவரது கெட்டப். கெட்டப் எப்படியிருந்தாலும்இ பாலா படத்தில் நடித்தால் நடிப்பு சூப்பராக வந்து விடும் என்பது தான் உண்மை.. இந்த படம் நிச்சியம் தமிழ் சினிமாவிற்கு நல்ல பெயரை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
 

விஷாலுக்கு ஜோடியாகும் அர்ஜூன் மகள்?

Arjun daughter opposite to vishal?

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடிக்கயிருக்கும் படம் 'பட்டத்து யானை'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நடிக்க கூடும் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. 21 வயதாகும் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் நடிக்க ஆசை இருப்பதாக தெரிகிறது. பூபதி பாண்டியன் சார்பில் ஐஸ்வர்யாவிடம் நடிக்க கேட்டதற்கு அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டாராம். இந்நிலையில், தற்அபாது 'வனயுத்தம்' படத்தில் படு பிசியாக இருக்கும் அர்ஜூன், இன்னும் இரு தினங்களில் வீடு திரும்புகிறார். அப்போது தான் ஐஸ்வர்யா நடிக்க வருவாரா என்பது தெரிய வரும்.
 

கனடாவில் தமிழ் திரைப்பட விழா: தமிழர்கள் புறக்கணிக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை!

கனடா: டொராண்டோவில் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி (கனடா கிளை) அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கனடாவில் செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழீழ ஈகர்களின் புனித மாதமான கார்த்திகை மாதத்தில், கனடா நாட்டில் டொரோண்டோ நகரில் நடைபெற உள்ள தமிழ் திரைப்படக் கலை விழாவை தமிழர்கள் கட்டாயம் புறக்கணிப்போம்.

தமிழர்களுக்கான களியாட்ட காலம் ஒவ்வொரு ஆண்டும் 10 மாதங்கள் தான் என்பது விதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. எல்லாம் இழந்து அனாதையாக்கப்பட்ட வைகாசி (May) மாதம். மற்றும் எங்களின் மானம் காக்க, தம் உயிரை இழந்த மாவீரர்களை நினைவு கூறும் கார்த்திகை (November) தவிர்த்து, மற்ற மாதங்களே களியாட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல.. அதிதிகள் - வைரமுத்து

Treat Sri Lankan Tamil S As Our Guests Vairamuthu

சென்னை: ஈழத்திலிருந்து ஏதிலிகளாக வந்துள்ள தமிழர்களை அகதிகளாக நடத்த வேண்டாம்... அதிதிகளாக (விருந்தாளிகளாக) நடத்த வேண்டும், என்றார் கவிஞர் வைரமுத்து.

இலங்கை அகதிகளின் அவலங்களைப் பின்னணியாகக் கொண்டு இயக்குநர் சீனு ராமசாமி உருவாக்கியுள்ள புதிய படம் ‘நீர்ப்பறவை'.

இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் கொடூரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடந்தது.

படத்தின் முழுப் பாடல்களையும் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசுகையில், "இந்த படம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டுப்போகிறது. இலங்கை கடலுக்குள் படகுக்குள் சுடப்பட்டுக் கிடந்த ஒரு உடலுக்கு பக்கத்தில் வீறிட்டுக்கிடக்கிற ஒரு சிறுவன் கடலிலேயே அனாதையாகிறான். பின்னர் அவன் தமிழ்நாட்டுக்கரையில் வளர்கிறான். இதுதான் கதை.

இப்படத்திற்கு நான் எழுதியிருக்கும் பாடலில்,

"மழைச்சொட்டு மண்ணில் விழுந்தால்
மண்ணகம் அதை மறுப்பதில்லை
இன்னொரு மனிதன் உள்ளவரைக்கும்
இங்கு யாரும் அகதியில்லை," என்று கூறியுள்ளேன்.

தமிழ்நாட்டு அரசாங்கமாகட்டும், தொண்டு நிறுவனங்களாகட்டும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர் களாகட்டும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தார்கள் என்று சொல்லவேண்டாம்... இடம்பெயர்ந்தவர்கள் என்று சொல்லுங்கள்.

அகதி என்ற வார்த்தைக்கும் அதிதி என்ற வார்த்தைக்கும் மிக மெல்லிய ஒலி வேறுபாடு உண்டு. அகதி என்றால் ஏதுமற்றவர். அதிதி என்றால் விருந்தாளி. நாம் அவர்களை விருந்தாளிகளாக நடத்தவேண்டும். திரும்பிப் போய்விடுபவர்கள் அவர்கள்.

எனவே இந்திய எல்லைக்குள் வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது. அவர்களை அதிதிகளாக அதாவது விருந்தாளிகளாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

இளம் டிவி நடிகை மர்மச்சாவு: கணவர் கைது

Kannada Tv Actress Hemashree Dies Husband Detained

பெங்களூரு:கன்னட டிவி நடிகை ஹேமஸ்ரீயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டிவி நடிகை ஹேமஸ்ரீ கடந்த 2011ம் ஆண்டு தொழில் அதிபர் சுரேந்திரபாபுவை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் வசித்து வருகிறார்.

சுரேந்திரபாபு ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவரவே தனது கணவர் மீதும், மாமியார், மாமனார் மீதும் போலீசில் மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கூறி போலீஸ் பாதுகாப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில் ஹேமஸ்ரீ- சுரேந்திரபாபுவுக்கு இடையே சமாதானம் எற்படவே இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

இதனையடுத்து செவ்வாய்கிழமையன்று ஆந்திர மாநிலம் ஆனந்தபூரில் நடைபெற்ற உறவினர் குடும்ப நிகழ்ச்சி செல்லும் போது ஹேமஸ்ரீக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே பெங்களூரு திரும்பிய சுரேந்திரபாபு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஹேமஸ்ரீயை பரிசோதனை செய்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே ஹேமஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் ஹேமஸ்ரீயின் பெற்றோர் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சுரேந்திரபாபு மீது போலீசில் புகார் அளித்தனர். ஹேமஸ்ரீயின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவருடைய ஆடையில் திரவ கரையும் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து ஹேமஸ்ரீ அணிந்திருந்த ஆடைகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேமஸ்ரீயின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் சுரேந்திபாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.

 

காசி குப்பம் பாடல் வெளியீடு

'Kaasi Kuppam' songs release

பாலமுருகன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், 'காசி குப்பம்'. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளுடன் ஹீரோவாக நடிக்கிறார் அருண். கீர்த்தி சாவ்லா, சவும்யா ஹீரோயின்கள். மற்றும் 'ஆடுகளம்' நரேன், லிவிங்ஸ்டன், ரமா, நெல்லை சிவா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பிஞ்சலா ஷாம். இசை, டி.பி.பாலாஜி. பாடல்கள்: தமிழமுதன், சுரேகா. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பிறகு படம் பற்றி நிருபர்களிடம் அருண் கூறும்போது, ''விளிம்புநிலைப் பகுதி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு தீமைகள் செய்கிறான் ஓர் அரசியல்வாதி. அவனுடைய முகத்திரையை காசி குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் எப்படி கிழித்தெறிகிறான் என்பது கதை" என்றார்.
 

மனதளவில் இளமை பிரதாப் மகிழ்ச்சி

Young at heart : pradhap

உடல் வயதாகிவிட்டாலும் மனதளவில் இளமையாகவே இருக்கிறேன் என்று பிரதாப் போத்தன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இருபது வருட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில், '22 பீமேல் கோட்டயம்' என்ற படத்தில் நடித்துள்ளேன். ரீமா கல்லிங்கல், பகத் பாசில் போன்ற இன்றைய இளம் நடிகர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆஷிக், லால் ஜோஷ், டி.வி.ராஜீவ் குமார் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போது மகிழ்வாக உணர்கிறேன். உடலளவில் வயதாகிவிட்டாலும் மனதளவில் இளமையாகவே இருக்கிறேன். நான் இயக்கிய படங்களை பார்த்தால் அடுத்த காலகட்டத்து படமாகவே இருக்கும். அதனால் இன்றைய சினிமாவோடு நானும் ஒத்துப்போகிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீஎன்ட்ரி ஆகும்போது நெகட்டிவ் பாத்திரத்தில் ஏன் நடித்தீர்கள் என்கிறார்கள். நான் கேரக்டரைத்தான் பார்க்கிறேன். நல்லதா கெட்டதா என்பதை பார்ப்பதில்லை.
 

எகிறும் ஹீரோயின்களின் பேட்டா

Daily Beta for heroines worries producer

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் பேட்டா எகிறி வருவதால் தயாரிப்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். ஒரு படத்துக்கு முன்னணி ஹீரோயின்களை புக் பண்ணும்போது மானேஜர்கள் மூலம் சம்பளம் பேசி விடுவார்கள். பிறகு ஹீரோயின் இருக்கும் மும்பை, கேரளா அல்லது ஐதராபாத்தில் இருந்து வந்து போக, பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட், அவர்களுக்கான ஓட்டல் ரூம், காஸ்ட்லி கார் போன்ற செலவுகள் தனி. இது தவிர பேட்டா என்ற கணக்கில் ஒரு தொகை கொடுக்கப்படுகிறது. அது மேக்கப் மேன், ஹேர்டிரஸ்சர், காஸ்டியூமர், டச்சப் பாய், டிரைவர் சம்பளம் போன்றவற்றுக்கு நாளொன்றுக்கு ஆறாயிரத்தில் இருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை தயாரிப்பு தரப்பில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த தொகை இப்போது 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில், 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பில் அனுஷ்கா, பெப்சியில் உறுப்பினரல்லாத மும்பை மேக்கப் மேனை பயன்படுத்தியதாகக் கூறி பிரச்னை ஏற்பட்டது. மும்பை மேக்கப் மேன்களை பயன்படுத்தும்போது ஒரு நாள் சம்பளம் மட்டும் பத்தாயிரம் ரூபாய் மற்றும் பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட். மற்ற செலவுகள் தனி. ஹேர்டிரஸ்சருக்கும் இதே சம்பளம். முன்னணி நடிகைகளான த்ரிஷா, தமன்னா, காஜல் அகர்வால், ஹன்சிகா போன்றோர் மும்பை மேக்கப் மேனைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் தயாரிப்பாளர்கள் பேட்டாவை அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கிறது. சில நடிகைகள் மொத்தமாக பேட்டாவை வாங்கி அசிஸ்டென்ட்டுகள், டிரைவர் போன்றவர்களுக்கு மாத சம்பளம் கொடுத்துவிட்டு தாங்களே வைத்துக்கொள்ளும் சம்பவமும் நடக்கிறது.
''இந்த தொகை ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டுக்கான சம்பளம். இதை ஒரு நடிகையின் பேட்டாவாக கொடுத்தால் தயாரிப்பாளர் எப்படி படமெடுக்க முடியும்?'' என்கிறார்கள்.

''படத்தில் ஹீரோயின்களுக்கு அழகு முக்கியம். மும்பை மேக்கப் மேனை பயன்படுத்தினால் லுக் ஸ்டைலாக இருக்கிறது. அதனால்தான் அவர்களை நாடுகிறோம்" என்கிறார் முன்னணி ஹீரோயின் ஒருவர். ஆனால் மும்பை மேக்கப் மேனை பயன்படுத்தாத அஞ்சலி, நயன்தாரா போன்றோரின் லுக் அழகாக இல்லையா? என்ற விமர்சனமும் எழுகிறது. ஆரம்பகட்டத்தில் இருக்கும் நடிகைகள் மேக்கப் மேன்கள் பற்றி கவலைப்படுவதில்லை. வளர வளர முன்னணி ஹீரோயின்களாக தங்களை பாவித்துக்கொண்டு மும்பை மேக்கப் மேன் வேண்டும் என்கிறார்கள். சமீபத்தில் இப்படி கேட்பவர் அமலா பால்.
இதுமட்டுமில்லாமல் ஓட்டல் ரூம், வெளிநாட்டு ஷூட்டிங் போன்றவற்றுக்கும் அம்மா, அப்பா, உதவியாளர்கள், ஹேர்டிரஸ்சர், மேக்கப்மேனை அழைத்துவருதால் அனாவசியமாக பல லட்சம் ரூபாய் செலவாகிறது என்ற புகாரும் வைக்கப்படுகிறது.

''மும்பை நடிகை அவர். சென்னையில் ஷூட்டிங். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சூட் ரூம் கேட்டார். பிறகு அம்மா, அப்பாவுக்கு ஒரு ரூம். மேக்கப் மேன், ஹேர்டிரஸ்சர், உதவியாளர் எல்லோருக்கும் தனி தனி ரூம் என்றார். இவ்வளவு ரூம் கொடுக்க முடியாது என்றதும், 'ஓ.கே' என்று நல்லப் பிள்ளையாகச் சொல்லிவிட்டார். மறுநாள் காலையில் ஷூட்டிங். வந்து சேர வேண்டிய ஹீரோயின் மாலை ஏழு மணிக்குத்தான் வந்தார். கேட்டால், 'மும்பையிலேயே லேட்டாகிவிட்டது, ஸாரி' என்று கூலாகச் சொன்னார். ஒரு நாள் ஷூட்டிங் நடக்காததால் தயாரிப்பாளருக்கான நஷ்டம் நான்கு லட்சம் ரூபாய். இந்த தொந்தரவுக்காகவே, 'போய் தொலையட்டும்' என்று சில தயாரிப்பாளர்கள் கொடுத்துவிடுகிறார்கள்" என்கிறார் மானேஜர் ஒருவர்.

தெலுங்கு படம் ஒன்றின் பாடல் காட்சி ஷூட்டிங். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். இலியானாவுக்கு பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட். அவரது அம்மா, உதவியாளர், காஷ்டியூமர், ஹேர்டிரஸ்சர் எல்லாரும் வந்தால்தான் வருவேன் என்று இலியானா அடம் பிடிக்க, தெலுங்கு பட உலகில் பெரும் பிரச்னையாக வெடித்தது இது. இதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் பர்சேஸ் என சென்றுவிட்டு அதற்கான பில்லையும் தயாரிப்பாளர் தலையில் கட்டும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

நடிகைகளை சொல்கிறீர்களே, ஹீரோக்கள் வாங்கவில்லையா என்றால், ''வாங்குகிறார்கள். ஆனால் நடிகைகள் வாங்கும் பேட்டாவில் கால்வாசிதானாம். அதையும் அவர்கள் வாங்குவதில்லை. அசிஸ்டென்டுகளே மானேஜர்களிடம் வாங்கிக்கொள்கிறார்கள்'' என்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் இப்போது மும்பையை போல புது டிரெண்ட் ஒன்றும் கோடம்பாக்கத்தில் உருவாகி இருக்கிறது. ஹீரோயின்களின் பாதுகாப்புக்கு பாடிகார்ட்டுகள் வர இருக்கிறார்களாம். இவர்களுக்கான சம்பளமும் தயாரிப்பாளர் தலையில் விழப்போகிறது என்பது அடுத்த ஷாக்.
 

இப்படி ஒரு படம் நடித்ததில்லை : விஜய்

Thuppakki is my best : vijay

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம், 'துப்பாக்கி', விஜய், காஜல் அகர்வால் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விஜய் வெளியிட மூத்த மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் பெற்றார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், பா.விஜய், விவேகா, மதன் கார்க்கி, நடிகர் சத்யன், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் விஜய் கூறியதாவது:

நான் நடித்த படங்களிலேயே இது வித்தியாசமானது. இதுவரை இப்படி ஒரு படம் நடித்ததில்லை. வழக்கமான கிளைமாக்சாக இல்லாமல் இதில் புதுமையான ஒரு விஷயம் வைக்கப்பட்டுள்ளது. அது பேசப்படுவதாக இருக்கும். எனது படங்களில் பாய்ந்து பாய்ந்து சண்டை போடுவேன். இதில் யதார்த்தமான சண்டை காட்சிகள் உள்ளது. எனது படங்களில் மேக்கிங்கிற்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. இதில் மேக்கிங்கில் கவனமாக இருந்தேன். முருகதாஸ் மாதிரி பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிப்பது அதுவாக அமைந்ததுதான். முருகதாஸ் என்னை இந்தி படத்தில் நடிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அது அவர் ஆசை. ஆனால் எனக்கு இந்திப் படம் மட்டுமல்ல; வேறு மொழியிலும் நடிக்கும் எண்ணம் இல்லை. எனக்கு தமிழ், தமிழ்தான். அது போதும்.
 

ஸ்வேதா பிரசவ காட்சி சி.டி.

shweta menon delivery CD

படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சிகள் அடங்கிய சி.டி.கள், சென்னையில் உள்ள இரண்டு வங்கிகளின் லாக்கர்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மலையாள இயக்குனர் பிளஸ்சி 'களிமண்' என்ற பெயரில் படம் இயக்குகிறார். கர்ப்பிணி பெண்ணுக்கும் வயிற்றில் உள்ள கருவுக்கும் இடையே உள்ள பந்தம்தான் படத்தின் கரு. ஸ்வேதா மேனன் ஹீரோயின். கர்ப்பமாக இருந்த அவரது பிரசவத்தை படமாக்க முடிவு செய்திருந்தார் பிளஸ்சி. கடந்த மாதம் 25-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்வேதா பெண்குழந்தையை பெற்றெடுத்தார். இதை மூன்று கேமரா உதவியுடன் பிளஸ்சி படம் பிடித்தார். பிரசவத்தின் போது ஸ்ரீவல்சன், பிளஸ்சி மற்றும் 3 கேமராமேன்கள் மட்டுமே இருந்தனர்.

படப்பிடிப்பு முடிந்ததும் எடிட்டிங் செய்வதற்காக பிளஸ்சி, சி.டி.களுடன் சென்னை சென்றார். அங்குள்ள எடிட்டிங் ஸ்டுடியோ ஒன்றில் ரகசியமாக எடிட்டிங் நடந்தது. பின்னர் ஷூட் செய்யப்பட்ட காட்சிகள் இரண்டு டிஸ்குகளில் பதிவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டன. பின்னர் சென்னையில் உள்ள இரண்டு வங்கிகளின் லாக்கரில் பலத்த பாதுகாப்புடன் அந்த சி.டி.கள் பத்திரமாக வைக்கப்பட்டன. படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. பிறகு இந்த சி.டி.கள் எடுக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட இருக்கிறது.
 

ரீமேக் ஆகிறது மரியாத ராமண்ணா

Maryada Ramanna remake in tamil

எஸ்.எஸ்.ராஜமவுலி தெலுங்கில் இயக்கி ஹிட்டான படம், 'மரியாத ராமண்ணா'. தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஹீரோவாகவும் சலோனி ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்த படம் இந்தியில் 'சன் ஆஃப் சர்தார்' என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. அஜய்தேவகன், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். கன்னடம், பெங்காலி மொழிகளிலும் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிவிபி நிறுவனம் வாங்கி உள்ளது. தமிழில் ஆர்.கண்ணன் இதை ரீமேக் செய்கிறார். சுனில் நடித்த கேரக்டரில் சந்தானம் நடிப்பார் என்று தெரிகிறது. மற்ற நடிகர், நடிகைகள் யாரும் முடிவாகவில்லை. ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.
 

தயாரிப்பாளர்களை சமநிலையில் பார்க்கிறேன்

i am in balance : SAC

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் வி.எஸ்.சசிகலா பழனிவேல் வழங்கும் படம், 'விஜயநகரம்'. தன்வீர் இயக்குகிறார். சிவன், ஹாசினி, பானுசந்தர், ஆர்யன் உட்பட பலர் நடிக்கின்றனர். இசை: அருணகிரி, ஆர்.ராகவன். பாடல்கள்: விவேகா, மதுரகவி, மரண கானா விஜீ, ஐசக். இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. கே.பாக்யராஜ், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது:

பெரிய பட்ஜெட் படம், சிறிய பட்ஜெட் படம் என்று நான் பார்ப்பதில்லை. 60 லட்சத்தில் படம் தயாரித்தாலும், 60 கோடியில் தயாரித்தாலும், தயாரிப்பாளர்கள் அனைவரையும் சம நிலையில்தான் பார்க்கிறேன். சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் சங்கமாக, தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதை புரிந்துகொள்ளாத சிலர், ஏதேதோ செய்கிறார்கள். விரைவில் அவர்களும் எங்களை புரிந்துகொண்டு இணைந்து பாடுபடுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். தன்வீர் நன்றி கூறினார்.
 

கிரிக்கெட் கதையா? மறுக்கிறார் மிஷ்கின்

i never involved in cricket script

கிரிக்கெட் பற்றிய கதையை இயக்குவதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று இயக்குனர் மிஷ்கின் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: 'முகமூடி'க்குப் பிறகு கிரிக்கெட் என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது. அதை நான் தயாரிக்கப்போவதாகவும் கூறுகிறார்கள். அது தவறு. எனது அடுத்த படம் கிரிக்கெட் இல்லை. அதை எப்போது தேவையோ அப்போது செய்வேன். இப்போதைக்கு கதை எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்து இயக்கும் படத்தில் பிரபலமான ஹீரோ நடிக்கலாம். தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவே இந்த விளக்கம். மற்றபடி அடுத்த படம் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு மிஷ்கின் கூறினார்.
 

கிசு கிசு - டாடிக்கு பஞ்ச் அட்வைஸ்

Kodampakkam Kodangi

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

தாடிக்கார டான்ஸ் மாஸ்டரை காதலிக்கும்போது கிளாமருக்கு குட்பை சொன்னாரு நயன நடிகை. இப்போ மாஸ்டரை பிரிஞ்சிட்டாரு. அதனால கொஞ்சம் கொஞ்சமா தனது பாலிசியை மாத்துறாராம்... மாத்துறாராம்... ராண தெலுங்கு நடிகரோடு ஒரு படத்துல நடிக்கிறாரு. இதுல மழை பாட்டுல நடிகரோடு நெருங்கி கவர்ச்சியா நடிச்சிருக¢காராம்... நடிச்சிருக்காராம்...

நாட்டாமை இயக்குனரு இந்தி பக்கம் போயிருக்காரு. கான் நடிகர்களை வச்சி சாமியான படத்தை ரீமேக் பண்ண பிளான் பண்ணினாரு. அது நடக்கல. கடைசியில மார்க்கெட் இழந்த தத் நடிகரை வச்சி படம் எடுத்துட்டு இருக்காரு. இதுக்கிடையே படத்துக்கு வச்ச டைட்டிலுக்கு அங்கே நாலு பேரு சொந்தம் கொண்டாடுறாங்களாம்... கொண்டாடுறாங்களாம்... எல்லா மொழிலேயும் டைட்டில் பிரச்னை, பெரிய பிரச்னையா இருக்கேன்னு தலையில அடிச்சிக்கிட்ட இயக்கம், வேற தலைப்பு யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...

பஞ்ச் ஹீரோவோட டாடி பத்தி சங்கத்துக்காரங்க கொஞ்சபேர் கோபமா பேசறாங்களாம்... பேசறாங்களாம்... ஆனாலும் யாராவது புதுசா படம் தொடங்குனா வரச்சொல்லி அழைப்பு விடுறாங்களாம். தன் மகன் நடிச்ச 'கன்Õ படத்தோட ஆடியோ ரிலீஸ் இருந்தப்பவும் வேற 2 பங்ஷ னுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்துச்சாம். போகலன்னா மறுபடியும் தப்பா பேசுவாங்கனு அந்த 2 பங்ஷன்லயும் முதல்ல கலந்துட்டு மகன் பங்கஷனுக்கு நிகழ்ச்சி முடியறப்போ டாடி வந்தாராம்... வந்தாராம்... யாரையும் பகைச்சிக்க வேணாம்னு டாடிக்கு பஞ்ச் நடிகரு அட்வைசும் பண்ணிருக்காராம்... பண்ணிருக்காராம்...
 

தமிழில் நடிக்க மறுத்தார் சரிகா

Sarika rejects tamil film

இந்தி படத்தில் நடிக்க ஓகே சொன்ன சரிகா, அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க மறுத்துவிட்டார். கமல்ஹாசனை பிரிந்த பின் மும்பையில் வசித்து வருகிறார் சரிகா. இவரது மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மற்றொரு மகள் அக்ஷரா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரிகாவை மீண்டும் நடிக்க கேட்டபோது மறுத்துவந்தார். இடையில் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். இந்தியில் 'பேஜா ஃப்ரை', 'பர்சானியா' படங்களில் நடித்தார்.

இப்போது 'சொஸைட்டி' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தமிழ், இந்தியில் விக்ரம் நடிக்கும் 'டேவிட்' என்ற படத்தில் அவரை நடிக்க கேட்டார் இயக்குனர் பிஜய் நம்பியார். முதலில் நடிக்க மறுத்தார். கதையை கேட்டுவிட்டு பிடித்திருந்தால் நடியுங்கள் என்றார் இயக்குனர். இதையடுத்து தனது கதாபாத்திரம் பற்றி கேட்டார். அது பிடித்துவிடவே நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் தமிழ் ரீமேக்கில் நடிக்க மறுத்துவிட்டார்.

இதுபற்றி இயக்குனர் பிஜாய் கூறும்போது, 'Ôதமிழ், இந்தியில் விக்ரம் நடிக்கும் 'டேவிட்' படத்தில் ஸ்பெஷல் நடன காட்சியொன்றில் சரிகாவிடம் நடிக்க கேட்டபோது ஏற்க மறுத்தார். ஸ்கிரிப்ட் கேட்டபிறகு ஒப்புக்கொண்டார். அவர் நடித்தகாட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழில் அவரது காட்சிகள் இடம்பெறாது. கோலிவுட் பிரபல ஹீரோயின் ஒருவர் நடிக்க உள்ளார். அவர் யார் என்பதை பிறகு அறிவிப்பேன்" என்றார்.
 

"துப்பாக்கி" ஒரு ஃபுல் மிலிட்டரி மீல்ஸ்

Thuppakki is good treat all for fans

மொழி தெரியாத நடிகைகளிடம் தமிழ் வசனம் பேச வைப்பது கடினம் என்றார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய், காஜல் அகர் வால் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்திலேயே விஜய் படத்தை இயக்குவது பற்றி அவரிடம் பேசி வந்தேன். அந்த வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது. விஜய்யின் இமேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் பணியாற்றியபோது அவரது டைமிங் வசனம், காட்சியை மெருக்கேற்றும்விதம் பிடித்திருந்தது.

இதில் இந்தி, ஆங்கில வசனங்களும் பேசி இருக்கிறார். வடநாட்டுக்காரர்கள் பேசுவதுபோல் அவர் இந்தி பேசியபோது அவரை வைத்து இந்தி படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தோன்றி இருக்கிறது. அது நிறைவேறும் என்று எண்ணுகிறேன். இப்படத்தில் 6 வருஷத்துக்கு பிறகு சொந்த குரலில் பாடி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிலிட்டரி மீல்ஸ் போல் இருக்கும். அவரது படங்களில் வருவதுபோல் தத்துவ பாட்டு எதுவும் இதில் கிடையாது. நடிகைகளை பொறுத்தவரை, மொழி தெரியாத ஹீரோயின்களிடம் தமிழ் வசனம் பேச வைப்பது கடினம்.

பேசுகிற வரை பேசட்டும் டப்பிங்கில் வேறு ஆளை பேச வைத்துகொள்ளலாம் என்று விட்டுவிடுவேன்.  தமிழ் தெரியாவிட்டாலும் இதில் காஜல் அந்த கஷ்டத்தை தரவில்லை. மனப்பாடம் செய்து வசனம் பேசினார். தீபாவளிக்கு 3 நாள் முன்பாகவே இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம். இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.
 

காணாமல் போன நடிகை... அதிமுக பிரமுகர் கஸ்டடியிலிருந்து மீட்பு!

சற்றேறக்குறைய ஒரு மாதம் முன்பு, காதலில் சொதப்பிய நடிகை ஒருநாள் திடீரென காணாமல் போய்விட்டாராம். பதறிப் போனார்கள் வீட்டில்... லட்சம் கோடிகளைக் கொட்டும் மகராசி காணாமல் போனால் சும்மா இருக்க முடியாதல்லவா!

தொடர்ந்து போலீஸ் துணையுடன் வலை வீசித் தேடியதில், ஒரு அதிமுக முக்கியப் பிரமுகர் வீட்டில் நடிகை அமுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அத்தனை சுளுவாக போலீஸ் நெருங்கமுடியாத இடம். அதிகாரத்தில் இருப்பவர் வேறு.

பின்னர் போலீசார், ரொம்ப ரொம்ப இறங்கிப் போய் பிரமுகரை கெஞ்சிக் கூத்தாடி நடிகையை விடுவித்து ஒப்படைத்தார்களாம்.

இந்தத் தகவல் மேலிடத்துக்குப் போன அடுத்த கணம், பலிபீடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டார் அந்த முக்கியப் பிரமுகர்! இதானாய்யா உன் 'உயர் கல்வி' லட்சணம் என வறுத்தெடுத்ததோடு ப்யூஸைப் பிடுங்கிவிட்டார்கள்.

பிரமுகருக்கு கட்சி, பதவி ரீதியாக தண்டனை கிடைத்தாலும், நடிகையை எந்த நேரமும் தூக்கிப் போக ஆட்கள் தயார்தானாம்!

 

நார்வேயில் முதல் முறையாக பிரமாண்டமாக வெளியாகிறது சூர்யாவின் மாற்றான் - ஒன்இந்தியா ஸ்பெஷல்!

Maattrraan First Mega Release Norway   

ஆஸ்லோ: நார்வேயில் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் ஒரு தமிழ்ப் படம் வெளியாகிறது. அது சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளிவரும் மாற்றான்!

கேவி ஆனந்த் இயக்கத்தில், சூர்யா - காஜல் அகர்வால் நடித்துள்ள படம் இது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட படமும் இந்த மாற்றான்தான்.

இந்தியா மற்றும் உலகெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

நார்வேயைப் பொறுத்தவரை இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல். காரணம் படத்தில் இடம்பெறும் நாணி கோணி.. என்ற பாடல் காட்சி முழுக்க முழுக்க நார்வேயில்தான் படமாக்கப்பட்டது. இதுவரை உலக மொழிகளில் எந்த சினிமாவும் படமாக்கப்படாத மிக அழகிய லொகேஷன்களில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நார்வேயின் மொத்த அழகையும் இலவசமாக உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளதாக கே.வி.ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

ஷூட்டிங்குக்காக நார்வேக்கு சூர்யா வந்திருந்தபோது, இங்கு வாழும் தமிழ் மக்கள் காட்டிய வரவேற்பும் அன்பும் அவரை திக்குமுக்காட வைத்தது. நிச்சயம் நான் இன்னொரு முறை நார்வேக்கு வந்து உங்கள் விருந்தினராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று தானாகவே அறிவித்தார் சூர்யா என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நார்வேயில் இந்தப் படத்தை வசீகரன் இசைக்கனவுகள்(V.N.Music Dreams) நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து நாளை வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்கள்.

உலகளாவிய ரீதியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இத்திரைப்படம் நோர்வே நாட்டில் உள்ள பல ஊடகங்களில் பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. நார்வீஜியன் மொழி ஊடகங்களும் கூட இந்த தமிழ்ப் படம் குறித்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் நார்வே நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுடன் இணைந்து இப்படத்தைப் பார்பதற்கு அந்த நாட்டு மக்களும் மிகவும் ஆர்வமாக உள்ளதாக, இந்தப் படத்தை அங்கு வெளியீடு செய்யும் வசீகரன் சிவலிங்கம் தெரிவித்தார்.

நார்வேயில் படம் பிடிக்கணுமா...?

அதுமட்டுமல்ல, இனி நார்வே நாட்டில் படப்பிடிப்பு செய்ய விரும்புகின்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால் அதற்கான வசதிகளை செய்து தர தாம் தயாராக இருப்பதாகவும் வசீகரன் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோ, லில்ஸ்த்ராம் (Lillestrøm), சாண்ட்விகா (Sandvika), பேர்கன் (Bergen), சந்ட்னேஷ்(Sandnes), ட்ரான்டெய்ம் (Trondheim) போன்ற நகரங்களில் மாற்றான் திரைப்படம் வெளியிடப்படுகிறது. இவற்றில் ஆஸ்லோ தவிர, பிற நகரங்களில் வெளியாகும் புதிய தமிழ்ப் படம் அநேகமாக மாற்றானாகத்தான் இருக்கும்.


நார்வே - அரங்குகள் மற்றும் காட்சி நேரங்கள் (Norway Showtimes):

Maattrraan- Tamil Film: Fredag den 12.10.12
Symra sal 1 Kl 20:15 (Oslo)

Lillestrømkino sal 1 Kl 21:00(Lillestrøm)
Sandnes SF Kino sal 3 Kl 18:45(Sandnes)
Bergen Kino MB 2 KL 17:30(Bergen)

Maattrraan- Tamil Film: Lørdag den 13.10.12
Symra sal 1 Kl 20:15(Oslo)

Lillestrømkino sal 1 Kl 21:00(Lillestrøm)
SF Kino Sandvika, Sal 5 Jupiter Kl 21:00(Sandvika)
Bergen Kino MB 2 KL 17:30(Bergen)

Maattrraan- Tamil Film: Søndag den 14.10.12
Symra sal 1 Kl 20:15(Oslo)
Lillestrømkino sal 1 Kl 21:00(Lillestrøm)
Bergen Kino MB 2 KL 17:30(Bergen)
Maattrraan- Tamil Film: Mandag den 15.10.12
Symra sal 1 Kl 20:15(Oslo)
Bergen Kino MB 2 KL 17:30(Bergen)
Maattrraan- Tamil Film: Tirsdag den 16.10.12
Symra sal 1 Kl 20:15(Oslo)
Bergen Kino KF 12 KL 17:30(Bergen)
Maattrraan- Tamil Film: Søndag den 17.10.12
Symra sal 1 Kl 20:15(Oslo)
Maattrraan- Tamil Film: Søndag den 18.10.12
Symra sal 1 Kl 20:15(Oslo)
Maattrraan- Tamil Film: Søndag den 18.10.12
Trondheim Kino Nova sal 7 Kl 18:00

En av musikkvideoene er filmet på Vestlandet. Se NRK-reportasje:

விவரங்களுக்கு:
www.vnmusicdreams.com
http://tv.nrk.no/serie/distriktsnyheter-vestlandsrevyen/dkho99082312/23-08-2012#t=11m