இந்தி விண்ணைத் தாண்டி வருவாயா..டிராப்பா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்தி விண்ணைத் தாண்டி வருவாயா.. டிராப்பா?

12/22/2010 12:56:30 PM

கவுதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயாÕபடத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. கவுதமே இயக்க ஆரம்பித்தார். ஷூட்டிங் தொடங்கியதிலிருந்தே பிரச்னைகளும் தொடங்கிவிட்டது. திடீரென ஹீரோயின் த்ரிஷா விலகினார். ஹீரோ பிரதீக் பாப்பரும் விலகிவிட்டதாக தகவல் வெளியானது. த்ரிஷாவுக்கு பதிலாக தேர்வான 'மதராசபட்டினம்Õ பட ஹீரோயின் எமி ஜாக்ஸனும் இந்திய பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது கடினமாக இருப்பதாக கூறி லண்டனுக்கு சென்றுவிட்டதால் படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது.

இது குறித்து கவுதம் மேனன் கூறியது: இந்தி Ôவிண்ணைத் தாண்டி வருவாயாÕ டிராப் ஆகிவ¤ட்டதாக தகவல் வருக¤றது. ஹீரோ பிரதீக் பாப்பர் தற்போது ஆமிர் கான் தயாரிப்பில், கிரண் ராவ் இயக்கியுள்ள 'தோபி காட்Õ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றிருக்கிறார். வரும் ஜனவரி மாதம் அப்படம் ரிலீஸ். அந்த வேலை முடிந்த பிறகு என்னுடைய படத்தில் நடிக்க உள்ளார். எமி ஜாக்ஸன் சமீபத்தில் இந்தியா வந்து ஒரு மாதம் தங்கி இருந்தார். அப்போது ஸ்பெஷல் டியூஷன் மூலம் இந்தி கற்றுக் கொண்டார். அது முடிந்துவிட்டதால் புறப்பட்டு சென்றிருக்கிறார். ஷூட்டிங் எப்போது தொடங்குகிறதோ அப்போது சொன்னால் உடனே வருவதாக கூறி இருக்கிறார்.


Source: Dinakaran
 

படப்பிடிப்பில் விஷால் படுகாயம் தோள்பட்டை இறங்கியது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படப்பிடிப்பில் விஷால் படுகாயம் தோள்பட்டை இறங்கியது

12/22/2010 10:43:49 AM

'அவன் இவன்' படப்பிடிப்பில் நடந்த விபத்தில் விஷால் படுகாயமடைந்தார். பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர், மது ஷாலினி நடிக்கும் படம் 'அவன் இவன்'. இதில் ஆர்.கே. வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வத்தலகுண்டு அருகே நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. சூப்பர் சுப்பராயன் காட்சியை அமைத்தார். ஆர்.கே.வும் விஷாலும் மோதுவது போல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ரிஸ்க்கான காட்சியில் நடிக்க, டூப் போடலாம் என்று பாலா கூறினார். விஷால் மறுத்து, தானே நடிப்பதாக கூறினாராம். ஆர்.கே.வை நோக்கி குதிக்கும் போது, சம்பந்தப்பட்ட இடத்தை விட்டுவிட்டு தவறுதலாக வேறொரு இடத்தில் விழுந்தார் விஷால். இதில் அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழே விழுந்து கிடந்த விஷாலால் எழுந்துகொள்ள முடியவில்லை. இதையடுத்து படக்குழுவினர் அவரைத் தூக்கினர். அப்போது தோள்பட்டை இறங்கியிருப்பது தெரிந்தது. வலியால் துடித்த அவரை, அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


Source: Dinakaran
 

மன்மதன் அம்பு படத்தின் பாடலை நீக்க முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மன்மதன் அம்பு படத்தின் பாடலை நீக்க முடிவு

12/22/2010 10:51:11 AM

'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடலை நீக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தப் படத்துக்காக நான் எழுதிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை அறிவேன். இதை தணிக்கை செய்த குழு இப்பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால் அதை அனுமதித்தனர். இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால் கண்டிப்பாக அந்த வரிகள் ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தாது என்ற நம்பிக்கையுடன் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம் என்பதாலும் எல்லாரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்திலும் இப்பாடல் காட்சியை நாங்களே முன் வந்து நீக்குகிறோம். என் குடும்பத்தில் வைணவரும் சைவரும் இஸ்லாமியரும் கிறிஸ்துவரும் இருக்கின்றனர். அவர்களில் பலரும் என்னை போல் அல்ல. தெய்வ விசுவாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.
'மன்மதன் அம்பு' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடையூறுகள் எனக்குப் புதிதல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாது இருக்கவும் அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மற்றபடி பகுத்தறிவு பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு. இவ்வாறு கமல்ஹாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

டுவிட்டரில் ஜெனிலியாவும் ஹன்சிகாவும் அரட்டை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டுவிட்டரில் ஜெனிலியாவும் ஹன்சிகாவும் அரட்டை!

12/22/2010 1:40:40 PM

ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். 'வேலாயுதம்Õ படத்தில் நடிக்கும் ஜெனிலியாவும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர். ஒருவருக்கொருவர் டுவிட்டரில் அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர்.


Source: Dinakaran
 

காதலிப்பது உண்மைதான் :அனுஷ்கா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலிப்பது உண்மைதான் : அனுஷ்கா!

12/22/2010 10:49:20 AM

நான் காதலித்து வருவது உண்மைதான். அவர் யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை என்றார் அனுஷ்கா. இதுபற்றி அவர் கூறியதாவது:
என்னுடன் நடித்த பல தெலுங்கு ஹீரோக்களுடன் இணைத்து கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏன், ஐந்து ஹீரோக்களோடு திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள். அவை எல்லாம் வதந்திதான். ஆனால் நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் யாரென்று சொன்னால் பலரின் புருவங்கள் உயரலாம் என்பதால் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் என்னை அதிகமாக காதலித்து வருகிறார். இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களை முடித்துவிட்டு, இன்னும் இரண்டு வருடத்தில் எங்கள் திருமணம் நடக்கும். இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி!

12/22/2010 2:26:23 PM

தம்பி படத்தை அடுத்து வாழ்த்துகள் படத்தை இயக்கினார் சீமான். கடந்த ஓராண்டு காலமாகவே சூடான பேச்சு நாளொரு போராட்டமும், பொழுதொரு அறிக்கை என அலையும் சீமான். என்னுடைய படத்தில் விஜய் நடிப்பது உறுதி எனக் கூறியுள்ளார். .இதுகுறித்து இயக்குநர் சீமான், ''நானும் தம்பி விஜய்யும் இணைந்து புதிய படம் செய்வது உறுதியானதுதான். அண்ணன் தாணுவுக்காக இந்தப் படத்தை உருவாக்குகிறோம். தரத்தில் இரண்டு மடங்கு ‘தம்பி’யாக இந்தப் படம் அமையும்''என்று தெரிவித்துள்ளார்.தயாரிப்பாளர் தாணு, ''சச்சின் படத்திற்கு பிறகு தம்பி விஜய்யுடன் இணைந்து படம் செய்கிறேன். தம்பி சீமானைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய இயக்கத்தில் படம் செய்வது பெருமையாக உள்ளது. படம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார். இந்தப்படத்திற்கு பகலவன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்.


Source: Dinakaran
 

நடிகைகளை பாட வைப்பது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகைகளை பாட வைப்பது ஏன்?

12/23/2010 1:49:21 PM

நடிகைகள் ஆண்ட்ரியா, மம்தாவுக்கு தான் இசையமைக்கும் படங்களில் பாட வாய்ப்பு தருக¤றார் தேவிஸ்ரீ பிரசாத். இதனால் கிசு கிசுக்களிலும் சிக்கி வருகிறார். இது பற்றி அவர் கூறியது: புதிய குரல்களை பயன்படுத்துவதுதான் இப்போதைய டிரெண்ட். இசையை முறைப்படி கற்ற நடிகைகள், ஏற்கனவே பாடகிகளாக உள்ளனர். அவர்களைத்தான் எனது படங்களில் பாட வைத்திருக்கிறேன். அந்த விதத்தில் நான் இசையமைத்த சில படங்களில் மம்தாவும் 'மன்மதன் அம்பு' படத்தில் ஆண்ட்ரியாவும் பாடியுள்ளனர். இது போல் கிசு கிசுக்கள் பரவுவது சகஜம்தான். அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குத்து, டிஸ்கோ டைப் பாடல்களுக்கு இடையே மெலடி பாடல்களுக்கும் முக்கியத்துவம் தருகிறேன். எனது படத்தில் 2 மெலடியாவது இடம்பெறும் வகையில் பார்த்துக் கொள்கிறேன். இசை ஆல¢பம் வெளியிடும் திட்டம் உள்ளது. அடுத்த ஆண்டு அது பற்றி முடிவு எடுப்பேன்.


Source: Dinakaran
 

நடிகை வனிதா வழக்கு ஐகோர்ட் நாளை தீர்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகை வனிதா வழக்கு ஐகோர்ட் நாளை தீர்ப்பு

12/22/2010 2:33:42 PM

முதல் கணவர் ஆகாஷிடம் இருக்கும் குழந்தை விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் நடிகை வனிதா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், அரிபரந்தாமன், குழந்தை விஜய் ஸ்ரீஹரியை நீதிமன்றத்தில் 21ம் தேதி ஆஜர்படுத்த ஆகாஷுக்கு உத்தரவிட்டனர். அதன்படி, இந்த வழக்கு மீண்டும் அதே நீதிபதிகள் முன்பு, நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் ஸ்ரீஹரி ஆஜராகவில்லை. இதுதொடார்பாக, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஆகாஷ் தரப்பு வக்கீல் இதயதுல்லா, "குழந்தை சார்பாக மூத்த வக்கீல் ஆஜராகி வாதாட உள்ளார். வழக்கை நாளைக்கு தள்ளி வைக்க வேண்டும்" என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், "வழக்கை நாளைக்கு தள்ளிவைக்க முடியாது. ஏற்கனவே இருதரப்பு வாதமும் முடிந்து விட்டது. மதியம் குழந்தையை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டனர். அதன்படி, மதியம் விஜய் ஸ்ரீஹரியுடன் ஆகாஷ் ஆஜரானார். ஆகாஷ் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.கிருஷணமூர்த்தி, வனிதா தரப்பில் வக்கீல் ஸ்ரீராம்பஞ்ச் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இந்த வழக்கில் நாளை மறுநாள் (நாளை) தீர்ப்பு கூறப்படும்" என்று அறிவித்தனர்.

விஜயகுமார் மஞ்சுளாவுக்கு முன் ஜாமீன்

நடிகர் விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விஜயகுமார் சார்பில் வக்கீல் நிர்மல், வனிதா சார்பில் வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு, போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சரவணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, "நடிகர் விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் 10,000 ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் தங்கியிருந்து போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். குழந்தை விஜய் ஸ்ரீஹரி விவகாரத்தில் தலையிடக் கூடாது" என உத்தரவிட்டார்.


Source: Dinakaran
 

நீச்சல் உடையில் நடிப்பது பிடிக்காது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நீச்சல் உடையில் நடிப்பது பிடிக்காது

12/23/2010 2:01:59 PM

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் டாப்சி. சமீபத்தில் ட்விட்டரில், தனது அடுத்த தெலுங்கு படம் மிஸ்டர் பர்ஃபக்ட் என குறிப்பிட்டிருந்தார் டாப்சி. தற்போது ‘வந்தான் வென்றான்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் டாப்சி. சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட டாப்சி தனக்கு கவர்ச்சியாக நடிப்பது பிடிக்காது என்று கூறினார். மேலும் ‘நீச்சல் உடையில் நடிப்பது தனக்கு சுத்தமாக பிடிக்காது’ என்கிறார் டாப்சி.


Source: Dinakaran
 

கமலின் கவிதைகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமலின் கவிதைகள்!

12/23/2010 1:55:54 PM

'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடலை நீக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ள நிலையில் தன்னுடைய கவிதைகளை நூலாக வெளியிட முடிவு செய்துள்ளார் கமல். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் கமலுக்கு கவிதை எழுவது வழக்கம், அப்படி தனது கவிதைகளை தொகுத்து வரும் கமல்ஹாசன், விரைவில் அதை நூலாக்கி வெளியிடுகிறார்.


Source: Dinakaran
 

இயக்குனர் ஆசை இருக்கிறது :ஆதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இயக்குனர் ஆசை இருக்கிறது : ஆதி

12/22/2010 10:46:15 AM

தெலுங்கு இயக்குனர் ரவிராஜா பினிஷெட்டியின் மகன் ஆதி. 'மிருகம்', 'ஈரம்', 'அய்யனார்' படங்களில் ஹீரோவாக நடித்தார். தமிழ் படங்களில் நடிப்பதற்காகவே சென்னையில் குடியேறியுள்ளார்.

'அரவான்' படத்துக்குதான் சிக்ஸ்பேக்கா?

'அரவான்' படத்தில் நடிப்பதற்கு முன், உடல் எடையை குறைக்கச் சொன்னார் வசந்தபாலன். அதன்படி குறைத்து, சிக்ஸ்பேக் வருமாறு பார்த்துக் கொண்டேன். தாடி, மீசை வளர்த்தேன். வசந்தபாலன் மனித உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி வெற்றிபெறும் இயக்குனர். சினிமாவில் எனக்கு நல்ல அடையாளம் ஏற்படுமேயானால், அதற்கு 'அரவான்' பலமாக இருக்கும்.

'ஆடு புலி' ரீ-டேக் அனுபவம்?

மூன்று தலைமுறையினர் இணையும் படம். குடும்ப உறவுகளின் உன்னதத்தை விவரிக்கும் கதை. பிரபு, அனுபமா மகனாக வருகிறேன். தாத்தா, பாட்டியாக ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா நடிக்கிறார்கள். அனுபவத்திலும், நடிப்பிலும் சீனியர்களான அவர்களுடன் நடிக்கும்போது ஏற்பட்ட நடுக்கம் காரணமாக, சில காட்சிகளில் ரீ-டேக் வாங்கினேன். அவர்கள் எனக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்ததை மறக்க முடியாது.

சாமியுடனான தகராறு தீர்ந்ததா?

'மிருகம்' படத்தில் அறிமுகம் செய்தார். 'சரித்திரம்' படத்தில் இணைந்தோம். எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து சமாதானமாகி விட்டோம். ஒரே துறையில் இருக்கிறோம். சண்டையோடு இருக்க முடியுமா என்ன?

திருமணம்?

கடந்த 14-ம் தேதி 29 பிறந்துள்ளது. அதற்குள் திருமணமா? எந்த பெண்ணையும் காதலித்தது இல்லை. ஒருவேளை, இனி யாரையாவது காதலிக்கலாம்.

அப்பா வழியில், படம் இயக்குவீர்களா?

தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் 58 படங்கள் இயக்கியுள்ளார் அப்பா ரவிராஜா பினிஷெட்டி. டைரக்ட் செய்யும் ஆசை கண்டிப்பாக உண்டு. முதலில் நன்றாக நடிப்பு கற்றுக்கொண்டு, பிறகு டைரக்ஷனில் ஈடுபடுவேன்.


Source: Dinakaran
 

பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதியில் தமன்னா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதியில் தமன்னா

12/22/2010 11:29:04 AM

பிறந்த நாளையொட்டி திருப்பதி கோயிலில் தமன்னா சாமி கும்பிட்டார். ஹரி இயக்கும் 'வேங்கை' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தமன்னா. இங்கு தனது 22-வது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார். இதுபற்றி அவர் கூறும்போது, 'பிறந்த நாளுக்காக மும்பையில் இருந்து எனது பெற்றோரும் சகோதரனும் சென்னை வந்தனர். அவர்களுடன் நேற்று முன்தினம் திருப்பதி சென்று சாமியை தரிசனம் செய்தேன். ஒவ்வொரு முறை திருப்பதி செல்ல நினைக்கும்போது நேரம் இருக்காது. இப்போது சிறப்பாக தரிசனம் செய்தேன். தமிழ், தெலுங்கில் இப்போது பிசியாக இருக்கிறேன். அடுத்த வருடமும் இந்த வருடம் போல் எனக்கு சிறப்பான தொடக்கமாக அமையும்' என்றார்.


Source: Dinakaran
 

நயன் நடிப்புக்கு பாராட்டு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நயன் நடிப்புக்கு பாராட்டு!

12/22/2010 1:00:59 PM

நயன்தாரா நடித்துள்ள மலையாள படம் ‘எலெக்ட்ரா’. இதில் நயன்தாராவின் அம்மா – அப்பாவாக மனிஷா கொய்ராலா-பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். ஷியாம் பிரசாத் இயக்கியுள்ளார். நயன்தாரா நடித்த 'எலெக்ட்ரா’ படம் கோவா சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டது. நயன் நடிப்பை கண்டு அசந்த ரசிகர்கள், படம் முடிந்த பின் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Source: Dinakaran
 

கிசு கிசு -ரியல் எஸ்டேட்டில் நடிகை மும்முரம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ரியல் எஸ்டேட்டில் நடிகை மும்முரம்

12/22/2010 1:45:10 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

காதல் நடிகரும் காட்டன் வீர ஹீரோயினும் நடிச்ச முருகர்பேரு கொண்ட படம், ஒரு வருஷத்துக்கு முன்னால தமிழ்ல ரிலீஸாயி புஸ்ஸாச்சு. அப்பவே தெலுங்குலயும் ரெடியா இருந்த இந்த படத்தை கப்சிப்ன்னு கிடப்புல போட்டுட்டாங்க… போட்டுட்டாங்க… இப்போ காட்டன் வீர ஹீரோயினுக்கு தெலுங்குல படங்கள் வருது. அதே சூட்டோடு அந்த படத்தையும் தூசி தட்டி ரிலீஸ் செய்றதுக்கு ரெடி பண்றாங்களாம்… பண்றாங்களாம்…

பஞ்ச் நடிகரோட சொந¢தக்கார நடிகரை கண்டுக்காம இருந்தாரு பஞ்ச்சோட அப்பா இயக்கம். அதுக்கு குடும்ப பிரச்னைதான் காரணமாம்… காரணமாம்… இப்போ பிரச்னை தீர்ந்ததால சொந்தக்கார நடிகரை வச்சு படம் இயக்குறாராம்… இயக்குறாராம்…

இந்தியில டாப்புக்கு வரலாமுங்கிற மூணுஷாவோட கனவு தகர்ந்து போயிடுச்சு. ஆனாலும் நடிகை அடிக்கடி மும்பைக்கு படையெடுக்கிறாராம்… படையெடுக்கிறாராம்… காரணம், அங்கேயும் ரியல் எஸ்டேட்ல நடிகை மும்முரமா ஈடுபட்டிருக்கிறாராம்… ஈடுபட்டிருக்க¤றாராம்…


Source: Dinakaran
 

இயக்குனராகும் கமல் மகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இயக்குனராகும் கமல் மகள்!

12/23/2010 2:16:36 PM

'சினிமாவுக்கு வருவேன். திரைக்கு பின்னால்தான் பணியாற்றுவேன். நடிக்க மாட்டேன்' என்று கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா கூறினார்.நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். 'உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு இசை அமைத்ததுடன் 'லக்' படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். '7ம் அறிவு' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கையும், கமலின் இரண்டாவது மகளுமான அக்ஷரா, நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதனையடுத்து 2 ஆண்டுகள் கழித்து பட டைரக்ஷனில் ஈடுபடப்போவதாக அக்ஷரா தெரிவித்துள்ளார்.


Source: Dinakaran
 

ஏமாந்து போன நாயகி ஸ்னிக்தா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏமாந்து போன நாயகி ஸ்னிக்தா

12/23/2010 2:04:50 PM

மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் ‘கத்தால கண்ணால’ பாட்டுக்கு மட்டும் ஆடிய ஸ்னிக்தா. மிஷ்கினின் ‘நந்தலாலா’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். தனக்கு நடிப்பு பற்றி கற்றுக் கொடுத்த இந்த படத்திற்கு நன்றி தெரிவித்த அவர் ‘நந்தலாலா’ ரிலீசுக்கு பின் தனக்கு பிரேக் கிடைக்கும் என நம்பி இருந்தார். ஆனால் புதுப்பட வாய்ப்புகள் வராததால் மீண்டும் அவர் மும்பைக்கு திரும்பியுள்ளார்.


Source: Dinakaran
 

பிக்பாக்கெட் திருடனாக நடிக்கும் கார்த்தி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிக்பாக்கெட் திருடனாக நடிக்கும் கார்த்தி

12/23/2010 2:13:42 PM

தெலுங்கில் ஹிட்டான 'விக்ரமார்க்குடு' படம் தமிழில் 'சிறுத்தை' என ரீமேக் ஆகிறது. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ ஸ்கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில், கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவர் ஜோடி, தமன்னா. சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ‘சிறுத்தை’ படத்தில் பிக்பாக்கெட் திருடனாக கார்த்தி, சந்தானம் நடிக்கின்றனர். மற்றொரு வேடத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கிறார். பிக்பாக்கெட் கதாபாத்திரத்தில் வரும் கார்த்தி, சந்தானம் காம்பினேஷன் செம காமெடியாக அமைத்துள்ளதாக சிறுத்தை படத்தின் இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.


Source: Dinakaran
 

போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்

12/23/2010 2:25:25 PM

சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த ஐஸ்வர்யா ராய், சென்னை விமான நிலையத்தில் தன்னுடைய சூட்கேஸ் தொலைத்து விட்டாராம். இதனால் மிகவும் அப்செட் ஆன ஐஸ், நிகழ்ச்சி அமைப்பாளருக்கு போன் செய்தார். மேலும் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவிப்புக்குள்ளானார் ஐஸ். சூட்கேஷில் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்வதற்கான விசேஷ உடை இருந்ததாம். நிகழ்ச்சி அமைப்பாளரும் அவசரம் அவசரமாக ஒரு புதிய டிசைனர் டிரஸ்ஸையும், அதற்கேற்ற ஷூவையும் தயார் செய்து ஐஸ்வர்யாவிடம் வழங்கி நிலைமையை சமாளித்தனர். அவசரம் அவசரமாக கிடைத்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வந்தாலும், படு அட்டகாசமான அழகுடன் காட்சி அளித்தார் ஐஸ்வர்யா.


Source: Dinakaran