'பை பை கோலிவுட்!' - விடைபெற்ற ஷம்மு


காஞ்சிபுரம், தசாவதாரம் போன்ற படங்களில் நடித்த இளம் நடிகை ஷம்மு, நடிப்புக்கு குட் பை சொல்லி, அமெரிக்கா பறக்கவுள்ளார்.

'காஞ்சிவரம்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷம்மு. 'மலையன்', 'மாத்தி யோசி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.

அவர் நடித்துள்ள 'மயிலு', 'பாலை' படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந் நிலையில் சினிமாவில் நடிப்பதை இத்துடன் நிறுத்தப் போவதாகவும் மேற்கொண்டு மருத்துவம் படிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதற்காக அமெரிக்கா செல்கிறார் ஷம்மு.

இது குறித்து ஷம்முவிடம் கேட்டபோது, "அடிப்படையில் நான் ஒரு தமிழ்ப் பெண். அமெரிக்காவில்தான் படித்து வளர்ந்தேன். டாக்டர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து விட்டேன். அங்கு புளோரிடா மகாணத்தில் உள்ள 'யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா' பல்கலைக்கழகத்தில் மீண்டும் என் படிப்பைத் தொடரப் போகிறேன்.

அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்த நான், சினிமாவுக்கு வந்ததது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு. நல்ல பட வாய்ப்புகள் கிடைத்தன. தேசிய விருது பெற்ற 'காஞ்சிவரம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தது பெருமைக்குரியது.

கமல்ஹாசன் படத்தில் நடித்தாலும், ஜோடியாக நடிக்காமல் போனதுதான் வருத்தமாக உள்ளது. மீண்டும் சினிமாவுக்கு வருவேனா? என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்," என்றார்.
 

கடவுளுக்கு நிகரானவர் ரஜினி-ஜூம் டிவி புகழாரம்


ஜூம் சூப்பர் நோவா 2010 டாப் 50 பட்டியலில் ரஜினி-கடவுளுக்கு நிகரானவர் என புகழாரம்!

பாலிவுட்டின் டாப் 50 பிரபலங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது ஜூம் டிவி. இது டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் நடத்தும் பொழுதுபோக்கு சேனல்.

ஜூம் சூப்பர்நோவா பட்டியல் எனும் பெயரில் இந்த ஆண்டு முதல் 50 விவிஐபிகளைப் பட்டியலிட்டுள்ளது அந்த சேனல். இதில் டாப் 10 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதில் மூன்றாவது இடத்தில் அவர் பெயரை வைத்துள்ளது ஜூம் டிவி. 'ரஜினியைப் பொருத்தவரை அவர் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்' என்றும் குறிப்பிட்டுள்ளனர் ('Rajinikanth who is a demigod unto himself').

முதலிடத்தை சல்மானுக்கும் இரண்டாம் இடத்தை அமீர் கானுக்கும் வழங்கியுள்ளது இந்த பாலிவுட் சேனல். ஷாரூக் கான் 4வது இடத்திலும், ஏஆர் ரஹ்மான் 5வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில். இந்த டாப் 10 -பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் கத்ரீனா கைப். ஐஸ்வர்யா ராய்க்கு 14வது இடம் கிடைத்துள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து ரஜினியும் ரஹ்மானும் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளனர்.
 

சென்னையில் நடிப்புப் பயிற்சி நிறுவனம்-ராதிகாவுடன் தொடங்கினார் அனுபம் கெர்


பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்தி வரும் ஆக்டர் ப்ரிபேர்ஸ் என்ற நடிப்பு பயிற்சி நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ராடன் டி.வியும் இணைந்து சென்னையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை துவங்கியுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் சென்னையில் புதன்கிழமை கையெழுத்தானது. அதன் பின் நிருபர்களை சந்தித்தார்கள் அனுபம் கெர், ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர்.

முப்பத்தியேழு வருடங்களுக்கு முன் இதே ஜுலையில்தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு முயற்சியை ஆரம்பித்தேன். இன்று அதே ஜுலையில் சென்னையில் நடிப்பு பயிற்சி இன்ஸ்ட்டியூட் துவங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அனுபர்கெர்.

அகமதாபாத், சண்டிகர் என்ற இரு இடங்களில் இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வரும் இவர், சென்னையிலும் கிளை துவங்க காரணமாக இருந்திருக்கிறது ராடர்ன் டிவி.

மூன்று மாத பயிற்சி வகுப்புக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கட்டணம். இதில் பத்து நாட்கள் அனுபம் கெரெ வந்து வகுப்பெடுப்பாராம். ராதிகாவும் வகுப்புகள் நடத்துவார். அது போகட்டும்... முக்கியமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் ராதிகா.

ஏற்கெனவே கூத்துப் பட்டறை என்ற அமைப்பு வேறு இதே வேலையை செய்து கொண்டிருக்கிறதே என்று அனுபம் கெர் - ராதிகாவிடம் கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு ரொம்ப சிம்பிளாக சொன்னார்கள் பதிலை: இங்கே அனுபம் கெரும் ராதிகாவும் இருக்கிறார்கள். அங்கே இல்லை. அதான் வித்தியாசம் என்றனர்.

டிப்ளமா, சர்ட்டிபிகேட் மற்றும் குறிப்பிட்ட பிரிவுக்கு மட்டும் தனிப் பயிற்சி என மூன்று பிரிவுகளை இப்போதைக்கு வைத்துள்ளார்களாம்.
 

மங்காத்தா, வேலாயுதம்... குழப்பியடிக்கும் தயாரிப்பாளர்கள்!


அஜீத் நடிக்கும் மங்காத்தா, விஜய் நடிக்கும் வேலாயுதம் படங்களின் ரிலீஸ் தேதி எப்போது என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதமே இந்தப் படங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இறுதி தேதி குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆனால் கேரளாவில் இந்த இரு படங்களும் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மங்காத்தா படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும் என அதன் கேரள விநியோகஸ்தர் திவ்யா பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 100 திரையரங்குகளில் இந்தப் படத்துக்காக புக்கிங் நடந்து வருகிறது.

இன்னொரு பக்கம் விஜய்யின் வேலாயுதம் படத்துக்கும் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளைப் பிடித்துள்ளார் அந்தப் படத்தின் விநியோகஸ்தர். வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வேலாயுதம் கேரளாவில் வெளியாகும் என்று கூறி, தியேட்டர்காரர்களிடம் அட்வான்ஸும் வாங்கியுள்ளனர்.

இதனால் தமிழக விநியோகஸ்தர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆஜீத் மற்றும் விஜய்க்கு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் படங்கள் இவை என்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
 

சிம்புக்கு சிக்ஸ்பேக் அட்வைஸ் தரும் வில்லன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புக்கு சிக்ஸ்பேக் அட்வைஸ் தரும் வில்லன்!

7/28/2011 12:44:12 PM

சல்மான் கானின் 'தபாங்' படத்தின் தமிழ் ரீமேக்கில் (ஒஸ்தி) சிம்பு நடித்து வருகிறார். படத்தை கமர்ஷியல் ஹிட் இயக்குனர் தரணி இயக்கி வருகிறார். 'தபாங்' படத்தில் சிக்ஸ்பேக் உடம்புடன் சல்மான் வில்லனுடன் சண்டை போடும் காட்சி உள்ளது. தபாங்கின் தமிழ் ‌ரீமேக் ஒஸ்தியிலும் இந்தக் காட்சியை வைக்க சிம்பு ஆசைப்படுகிறார். குறைந்தபட்சம் சிக்ஸ்பேக்காவது இருந்தால்தான் சல்மான்கான் செய்ததில் பாதியாவது கொண்டுவர முடியும் என நினைத்த சிம்பு எப்படியும் சிக்ஸ்பேக் அவசியம் என உணர்ந்துள்ளார். முப்பதே நாளில் இந்தி மாதி‌ரி ஆறே நாளில் சிக்ஸ்பேக் அட்வைஸ் தருகிறவர் சோனு சூட். இந்தியில் நடித்தவரே இதிலும் வில்லன். சோனு சூட் சல்மானைவிடவும் கச்சிதமாக உடம்பை பேணுகிறவர். வில்லனை அடிக்க ஹீரோவுக்கு சிக்ஸ்பேக் அட்வைஸ் தருவதே வில்லன்தான்.




 

அமலா பாலின் ஸ்வீட் வாய்ஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமலா பாலின் ஸ்வீட் வாய்ஸ்!

7/28/2011 12:43:17 PM

நடித்த 2வது படத்திலேயே சொந்தக்குரலில்தான் டப்பிங் பேசுகிறார் அமலா பால். தற்போது நடித்துவரும் வேட்டையிலும் இவர்தான் தனது கேரக்டருக்கு டப்பிங் பேசுகிறார். ஆளைப் போலவே அமலா பாலின் வாய்சும் ஸ்வீட்... தாராளமா டப்பிங் பேச வைக்கலாம் என்கிறார்கள் இயக்குனர்கள். வேட்டையை லிங்குசாமி இயக்குகிறார். மாதவன், சமீராரெட்டி, ஆர்யா நடிக்கும் இந்தப் படத்தில் அமலா பாலா சமீராவின் தங்கையாக நடிக்கிறார். கதைப்படி ஆர்யாவுக்கு ஜோடி.




 

சுகுமா‌ரி மருத்துவமனையில் அனுமதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சுகுமா‌ரி மருத்துவமனையில் அனுமதி

7/28/2011 12:42:03 PM

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுகுமா‌ரி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் சுகுமா‌ரி உடல்நலக் குறைவு காரணமாக திருச்சூ‌ரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பி‌ரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




 

அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா?

7/28/2011 12:40:57 PM

விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷான இயக்கம் பில்லா வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பில்லா இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்குவதாக இருந்து, கடைசி நேரத்தில் வாய்ப்பு சக்‌ரி டோலட்டி வசம் சென்றது. அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா? இருவரும் இணைய வாய்ப்புள்ளதா? பில்லா 2-விலிருந்து விஷ்ணுவர்தன் விலகியதும் எழுந்த கேள்வி இது. இதுவரை பதிலில் இல்லாமல் இருந்த இந்தக் கேள்விக்கு அ‌‌ஜீத் விளக்கம் தந்துள்ளார். பில்லா கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நேரம் ச‌ரியாக அமைந்தால் மீண்டும் விஷ்ணுவர்தனுடன் இணைந்து படம் செய்வேன் என்று தனக்கேயு‌ரிய ஷார்ட் அண்ட் ஷார்ப் பாணியில் பதிலளித்துள்ளார் அ‌‌ஜீத்.




 

அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா?

7/28/2011 12:40:57 PM

விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷான இயக்கம் பில்லா வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பில்லா இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்குவதாக இருந்து, கடைசி நேரத்தில் வாய்ப்பு சக்‌ரி டோலட்டி வசம் சென்றது. அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா? இருவரும் இணைய வாய்ப்புள்ளதா? பில்லா 2-விலிருந்து விஷ்ணுவர்தன் விலகியதும் எழுந்த கேள்வி இது. இதுவரை பதிலில் இல்லாமல் இருந்த இந்தக் கேள்விக்கு அ‌‌ஜீத் விளக்கம் தந்துள்ளார். பில்லா கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நேரம் ச‌ரியாக அமைந்தால் மீண்டும் விஷ்ணுவர்தனுடன் இணைந்து படம் செய்வேன் என்று தனக்கேயு‌ரிய ஷார்ட் அண்ட் ஷார்ப் பாணியில் பதிலளித்துள்ளார் அ‌‌ஜீத்.




 

விருது வாங்கிய சீனு ராமசாமிக்கு அடுத்த வாய்ப்பு இல்லை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விருது வாங்கிய சீனு ராமசாமிக்கு அடுத்த வாய்ப்பு இல்லை?

7/28/2011 12:39:07 PM

தேசிய விருது பெற்ற தென்மேற்குப் பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு அடுத்த வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. சீனுவின் முதல் படம் கூடல்நகர். சுமாராகவே போனது. அதன்பிறகு எடுத்ததுதான் தென்மேற்குப் பருவக்காற்று. பல விருதுகளைப் பெற்று சீனு ராமசாமிக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்தது. அடுத்தப் படத்தை தயா‌ரிக்கிறேன் என்று சொன்ன மைக்கேல் ராயப்பன் ஒரு வருடத்துக்கு படத்தயா‌ரிப்பை தள்ளி‌ப் போட்டிருக்கிறார். தேமுதிக எம்எல்ஏக்கள் ஒரு வருடம் தொகுதியில் தங்கி கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற விஜயகாந்தின் கட்டளைதான் இந்த ஒரு வருட தாமதத்துக்கு காரணம்.




 

என்னுடைய இயக்கத்தில் தான் என் மகன் குறளரசன் அறிமுகம் ஆக வேண்டும்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என்னுடைய இயக்கத்தில் தான் என் மகன் குறளரசன் அறிமுகம் ஆக வேண்டும்!

7/28/2011 12:36:14 PM

டி.ராஜேந்த‌ரின் இரண்டாவது மக‌ன் குறளரசன் ஹீரோவாகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் படம் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளதாக டி.ஆர். தெ‌ரிவித்தார். மகன்கள் பிறந்த உடனேயே படப்பிடிப்பு‌‌க்கு அழைத்து வந்தவர் டி.ஆர். சிம்பு, குறளரசன் மட்டுமின்றி அவரது மகள் இலக்கியாவும் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். சிம்பு இப்போது தமிழின் முன்னணி நாயகன். சிம்புவை கதாநாயகனாக வைத்து படம் தயா‌ரிக்க பலரும் தயாராக இருந்தனர். என்றாலும் மகனை டி.ஆரே அறிமுகப்படுத்தினார். அதேபோல் அவரது இரண்டாவது மகன் குறளரசனுக்கும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் மகனை தானே ஹீரோவாக அறிமுகப்படுத்த விரும்புகிறார் டி.ஆர்.

 

ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தா ஆடியோ!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தா ஆடியோ!

7/28/2011 12:35:25 PM

பல நாட்கள் காத்திருந்த தல ரசகரிகளுக்கு ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தாவின் ஆடியோ வெளியிடப்படுகிறது. அஜீத்தின் 50வது படமான மங்காத்தா நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டிருக்கிறது. யுவன் இசையமைத்திருக்கும் மங்காத்தா படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். பர்டல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ஒரு காரணம். சமீபத்தில் சோனி மியூஸிக் மங்காத்தா ஆடியோ ரைட்ஸை பெரும் தொகைக்கு வாங்கியது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. நேற்று சோனி நிறுவனம் மங்காத்தாவின் ஆடியோ வரும் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது. ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மங்காத்தா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தா ஆடியோ!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தா ஆடியோ!

7/28/2011 12:35:25 PM

பல நாட்கள் காத்திருந்த தல ரசகரிகளுக்கு ஆகஸ்ட் 10 முதல் மங்காத்தாவின் ஆடியோ வெளியிடப்படுகிறது. அஜீத்தின் 50வது படமான மங்காத்தா நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டிருக்கிறது. யுவன் இசையமைத்திருக்கும் மங்காத்தா படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். பர்டல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ஒரு காரணம். சமீபத்தில் சோனி மியூஸிக் மங்காத்தா ஆடியோ ரைட்ஸை பெரும் தொகைக்கு வாங்கியது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. நேற்று சோனி நிறுவனம் மங்காத்தாவின் ஆடியோ வரும் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது. ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மங்காத்தா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




 

எனக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது! - அமிதாப்


என் அப்பா உபி… அம்மா சீக்கியர்… மனைவி பெங்காலி… மருமகன் பஞ்சாபி….மருமகள் துளு…. என் வாழ்க்கையில் சாதி என்றால் என்னவென்றே தெரியாது. அப்படி ஒரு சூழலை நான் உணர்ந்ததும் இல்லை,” என்கிறார் பாலிவுட் லெஜன்ட் அமிதாப் பச்சன்.

சாதிவாரி இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைகளை அலசும் படம் ஒன்றில் நடித்துள்ளார் அமிதாப் பச்சன்.

‘அரக்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோதுதான் அமிதாப் இப்படிக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “என் தந்தை சாதி, இனம், மாநிலம் எதையும் பார்க்காமல் திருமணம் செய்தவர். சின்ன வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்தபோது, என் சாதியைக் குறிப்பிடவில்லை. பச்சன் என்று குடும்பப் பெயரை மட்டும் அப்பா கொடுத்தார். அதையே பெருமையாக நினைக்கிறேன். பச்சன் என்பது அப்பாவின் செல்லப் பெயர். அவ்வளவுதான்.

பின்னர் நான் ஒரு பெங்காலியை (ஜெயா) திருமணம் செய்தேன். என் சகோதரன் அஜிதாப் ஒரு சிந்திப் பெண்ணை திருமணம் செய்தார். மகள் ஸ்வேதா பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். என் மகன் ஒரு துளு பெண்ணை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்தார்.

எனவே இத்தனை நாள் வாழ்ககையில் எனக்கு சாதி பற்றிய சிந்தனையே வந்ததில்லை,” என்றார் அமிதாப்.

இந்தப் படத்தில் எல்லோரும் சமம்… எல்லோருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தும் ஒரு கல்லூரி முதல்வராக நடித்துள்ளாராம் அமிதாப். இல்லாத ஏழை மாணவர்களுக்கு தனது செலவில் படிப்பு சொல்லித் தரும் கண்ணியமான வேடமாம்.

சரி, இட ஒதுக்கீடு பற்றி அமிதாப் என்னதான் நினைக்கிறார்?

இந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு அமிதாப் அளித்த பதில் சாமர்த்தியமானது. “இந்தப் படத்தில் வருகிற பிரின்ஸிபால் கேரக்டருக்காக நான் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். இட ஒதுக்கீடு, சாதீய அமைப்புகள் பற்றி நிறைய படித்தேன். அதை வைத்து சொல்கிறேன். எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களை சம நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மிக அவசியம்,” என்றார்.

 

சக நடிகையுடன் காதல் தோல்வி: புது ஹீரோ தற்கொலை!


சக ஹீரோயினுடன் காதல் தோல்வி ஏற்பட்டதால் மனமுடைந்த இளம் நடிகர் அஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்புலி என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜய். இது 3டி படமாகும். ஓர் இரவு என்ற திகில் படத்தை எடுத்த இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர் -ஹரீஷ் நாராயணன் ஆகியோர் இயக்கியுள்ள படம் இது. படப்பிடிப்பு முடிந்து அம்புலி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் அஜய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சாவுக்கு காரணம் தெரியவில்லை.

அம்புலி படத்தில் அஜய் ஜோடியாக நடித்தவர் புதுமுக நடிகை சனம். இவரும் பெங்களூரை சேர்ந்தவர்தான். சனம் மீது அஜய் காதல் வயப்பட்டதாகவும் ஆனால் சனம் காதலை ஏற்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது.

போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜய் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.

இதுபற்றி அம்புலி படத்தின் இயக்குனர் ஹரி சங்கர் கூறுகையில், “அம்புலி படத்தை முடித்து விட்டு அஜய் பெங்களூர் சென்று விட்டார். டப்பிங் பேசும் போது அழைக்கிறோம் என்று அவரிடம் சொல்லி அனுப்பினோம். அஜய்க்கு தமிழில் பேச தெரியும். எனவே குரல் பொருத்தமாக இருந்தால் அவரையே பேச வைக்கலாம் என முடிவு செய்தோம்.

ஆனால் திடீரென்று தூக்கில் தொங்கி அஜய் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக பெங்களூர் சென்றோம். அஜய் வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தோம். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

அம்புலி படத்தில் கதாநாயகியாக நடித்த சனத்தை அஜய் காதலித்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது. அஜய் பெற்றோர் எங்களிடம் விசாரித்தனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா என்று கேட்டனர். ‘எங்களுக்கு தெரிந்த வரை அப்படி எதுவும் இல்லை,’ என்றோம்.

அஜய் இறந்ததால் அம்புலி படத்தில் அவருக்கு வேறு ஆள் வைத்து டப்பிங் பேச வைத்தோம்,” என்றார்.

அம்புலி தவிர, உதிரம் என்ற படத்திலும் நடித்து வந்தார் அஜய். இதன் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. அஜய் மரணத்தால் படம் பாதியில் நிற்கிறது.

 

ஆபாச படங்களுக்கு வரி விலக்கு ரத்து! - ஜெவுக்கு திரையுலகம் பாராட்டு


வன்முறை, ஆபாச படங்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இயக்குநர் தங்கர் பச்சான், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

சினிமா என்னும் திரைப்படக் கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நமக்கான மரபுகலைகளையும், பழங்கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வையும் அது அழித்திருக்கிறது.

இன்று மக்களின் கலையாகவும், அவர்களின் வாழ்வையும் பிரதிபலிக்கிற கலையாகவும் மாறிவிட்ட திரைப்படக் கலையை மிகவும் பொறுப்புடனும், கவனமாகவும் கையாள வேண்டிய கடமை அதனை சார்ந்த உருவாக்குபவர்களுக்கு இருக்கிறது. நம் மொழியையோ, பண்பாட்டையோ, நம் மதிப்பீடுகளையோ பற்றி கவலைப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மக்கள் விரும்புகிறார்கள் எனச்சொல்லி திரைப்படத்தை உருவாக்குபவர்களும் சமூகத்தின் முன் குற்றவாளிகள்தான்.

தமிழ் படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் முந்தைய தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டோமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புரியும்.

இதே வரிவிலக்கு தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் நிபந்தனைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழில் பெயரை சூட்டி விட்டு மொழி, பண்பாட்டு, கலாசார கூறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிதைக்கலாம், யதார்த்தம் என்கிற பெயரில் ஆபாசம், வன்முறைக்காட்சிகளை கூசாமல் காட்டி வருங்கால தலைமுறைகளையும் சீரழிக்கலாம் என்கிற போக்குக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது.

தேவையில்லாமல் அயல் மொழிகளை புகுத்துபவர்களுக்கும், வன்முறை, ஆபாச காட்சிகளை உருவாக்கி பொழுதுபோக்கு என்கிற பெயரில் உருவாகிற திரைப்படங்களுக்கும் வரி விதிக்கப்படும், தமிழ்பண்பாடு, கலாசாரம், மொழியை போற்றுகின்ற படைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்கிற இத்தகைய அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புரட்சிகரமான அறிவிப்பாகும். இது பொறுப்புள்ள கலைஞர்களும், தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி, பண்பாடு அடையாளங்களை காப்பதற்கு மேற்கொண்டுள்ள தமிழக அரசு இவை முழுமையாக நிறைவேற வேறொரு நிபந்தனையையும் விதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பெயரிட்டாலும், சமஸ்கிருதத்தில் பெயரிட்டாலும் இரண்டுமே வேற்று மொழி தான். கடந்த காலங்களில் வரி விலக்கினைப் பெற்று பலனை அனுபவித்து வெளியான படங்களில் சமஸ்கிருதம் சொற்களை கலந்து வந்தவை ஏராளம்.

தூய தமிழ் சொற்களுடன் சமஸ்கிருதம் கலக்காத பெயர்களை சூட்டுபவர்களுக்கு தான் வரி விலக்கு என்பதை உடனே அறிவிக்க வேண்டும். இதனை தான் தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

வரிவிலக்கு தொடர்பான நிபந்தனைகளை செயல்படுத்தும் குழுவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இடம் பெறுவார்கள் என நம்புகிறோம்.

இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு கலைஞன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும், எனது அளவற்ற மகிழ்ச்சியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

அபிராமி ராமநாதன்

இது குறிதுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழில் பெயரிடப்பட்ட தமிழ் படங்களுக்கு சில நிபந்தனைகளுடன் முழு வரி விலக்கு அளித்தமைக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. தணிக்கைக் குழு அனுமதிக்கும் “யு” சான்றிதழ் பெற்ற, அனைவரும் பார்க்கலாம் என்ற தமிழர் பண்பாட்டிற்கேற்ப ஆபாசமற்ற மற்றும் வன்முறை காட்சிகளைத் தவிர்த்து எல்லோரும் குடும்பத்தோடு பார்க்க கூடிய தமிழ்ப் படங்கள் தயாராவதற்கு இதுமிகச் சிறந்த வழி வகுக்கும்.”

இவ்வாறு கூறியுள்ளார்.

அண்ணாமலை

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் எஸ். ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.ஹரிகோவிந்த் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்த் திரைப்படங்களுக்கு முழு கேளிக்கை வரி விலக்கு சான்றிதழ் பெறுவதற்கான சில புதிய நிபந்தனைகளை விதித்து வெளியிட்டமைக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய நிபந்தனைகள் தமிழ்த் திரையுலகின் தரத்தினை மேலும் உயர்த்தும். இதன் மூலம் தரமான தமிழ்த் திரைப்படங்கள் வெளிவரும். தமிழக அரசின் சார்பாக கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக ஒரு புதிய குழுவினை அரசு நியமிக்க இருப்பதை அரசாணையின் மூலம் தெரிந்து கொண்டோம்.

தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 1,500 திரையரங்குகளின் பிரதிநிதியாக விளங்கும் எங்களது சங்கத்திற்கும் அந்த புதிய குழுவில் உரிய பிரதிநிதித்துவம் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆபாசம், வன்முறை இல்லாத குடும்ப பாங்கான படங்களுக்கு வரி விலக்கு அளித்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்,” என்று கூறியுள்ளனர்.

 

தமிழ் ஈழம் மலர விஜய் பாடுபடுவார்-எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி


தமிழ் ஈழம் மலர விஜய் பாடுபடுவார் என இலங்கை இணையதளம் ஒன்றிற்கு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பேட்டியளித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விஜய்யிடம் கையெழுத்து வாங்கச் சென்றபோது, அவர் கையெழுத்திட மறுத்துவிட்டதாக செய்திகள் வந்தன.

இதுகுறித்து விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகரன் இலங்கை தமிழ் இணையதள வானொலிக்கு அளித்த பேட்டியில், “விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் யாரும் எங்களிடம் கையெழுத்து கேட்டகவில்லை. அரசியல் காரணங்களுக்காக பரப்பப்படும் செய்தி இது.

இளைய தளபதி விஜய் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக யாரும் சந்திக்கவில்லை. யாரிடமும் கையெழுத்துப் போடமாட்டேன் என விஜய் சொல்லவும் இல்லை.

இலங்கை மக்களை மிகவும் நேசிப்பவர் விஜய். தமிழ் ஈழம் மலரவும் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழவும் அவர் வழி செய்வார்,” என்று கூறியுள்ளார்.

 

பிறந்த நாளில்... மனைவி இயக்கத்தில் தனுஷ்!


தேசிய விருது பெற்ற சந்தோஷம், மாமனார் ரஜினி நலம் பெற்று வீடு திரும்பிய உற்சாகம், கூடவே ரஜினி குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பாளர் எனும் அளவுக்கு அதிகப்படி உரிமை கிடைத்த மகிழ்ச்சியிலிருக்கும் தனுஷுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த 28வது பிறந்த நாளில் ரஜினியை சந்தோஷப்படுத்தும் இன்னொரு காரியத்தையும் செய்கிறார்… மனைவி ஐஸ்வர்யாவை இயக்குநராக புரமோட் செய்துள்ளார் தனுஷ்.

ஆம்… ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ். தனுஷ் பிறந்த நாளான இன்றே இந்தப் புதுப்படமும் துவங்குகிறது.

இந்தப் படத்தில் தனுஷும் ஸ்ருதி ஹாஸனும் ஜோடி சேர்கிறார்கள். புதுமுகம் ஒருவர் இசையமைக்கிறார். இன்னும் பெயரை அறிவிக்கவில்லை ஐஸ்வர்யாவும் தனுஷும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்துக்காக ஒரு பாடல் கூட பதிவு செய்யப்பட்டுவிட்டது. விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மேனன் பாடியுள்ளனர். இந்தப் பாடலைத்தான் இன்று ஷூட் செய்கிறார்கள். படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகரிலேயே இருக்குமாம்.

இந்தப் படப்பிடிப்பு காரணமாக, ரசிகர்களை நாளை சந்திக்கிறாராம் தனுஷ்.

 

அடுத்த 'ஜேம்ஸ்பாண்ட்' நாயகி ரஷ்யாவின் மார்கரிட்டா லெவிவா?


ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பட கதாநாயகி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல ரஷ்ய நடிகை மார்கரிட்டா லெவிவா(31). அவர் ஸ்பிரட், லிங்கன் லாயர் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கதாநாயகி தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் இப்போது லெவிவாவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

அடுத்து வரவிருக்கும் 23-வது ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரெய்க்குக்கு ஜோடியாக லெவிவா நடிப்பார்.

பாண்ட் நாயகி என்றால் அழகாகவும், நம்பிக்கையுடனும் அதே சமயம் புதிரான தோற்றம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மார்கரிட்டாவுக்கு இந்த தகுதிகள் அனைத்தும் உள்ளன என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய பாண்ட் படத்தின் தயாரிப்பு பணிகள் வரும் அக்டோபர் மாதம் துவங்கவிருக்கிறது. எனவே அதற்குள் லெவிவாவை இறுதி செய்துவிடுவார்கள் என தெரிகிறது.

 

வரதட்சணை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் ஜெயிலில் அடைப்பு


ஹைதராபாத்: வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் சிரிஷ் பரத்வாஜ்.

நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறிது காலம் சந்தோஷமாக நீடித்த அவர்களது திருமண வாழ்க்கையில் வரதட்சணையால் பிரச்சினை ஏற்பட்டது.

கணவன் மற்றும் மாமியார் சர்வமங்களா ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி ஸ்ரீஜா தனது குழந்தையுடன் தந்தையான நடிகர் சிரஞ்சீவி வீட்டுக்கு வந்து விட்டார்.

மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மற்றும் மாமியார் மீது போலீசில் ஸ்ரீஜா புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து அரசு ஊழியரான அவரது மாமியார் சர்வ மங்களா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் ஆனால் சிரிஷ் பரத்வாஜ் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரை வரும் 8-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சஞ்சல்குடா என்ற ஜெயிலில் சிரிஷ் பரத்வாஜ் அடைக்கப்பட்டார்.