இந்தியில் துப்பாக்கி

Thuppakki in Hindi தமிழில் வெற்றி பெற்ற துப்பாக்கியை இந்தியில் அக்சய் குமாரை வைத்து இயக்குகிறார் முருகதாஸ். விபுல் ஷா தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

துப்பாக்கியின் வசூல் சத்தம் பாலிவுட்டில் கடுமையாக எதிரொலிக்கிறது. நிச்சயம் படம் வெற்றி பெறும் என்பதால் நூறு கோடியை வசூலிக்கயிருக்கும் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முக்கியமான கத்ரினா, தீபிகா, சோனாக்‌‌சி.

தமிழில் நடித்த காஜல் அகர்வால் இந்திக்கு வேண்டாம் என்று அக்சய் குமாரும், விபுல் ஷாவும் தீர்மானமாக முடிவெடுத்திருக்கிறார்கள். ப்ரணித்தா நடிப்பதாக சொல்லப்பட்டதும் சும்மாவாம்.

காஜல் துப்பாக்கியில் ஒரேயொரு காட்சியில் குத்துச்சண்டை வீரர்களுக்கான உடை அணிந்து ஒரேயொரு குத்துவிடுவார். ஆனால் இந்தியில் இந்த கேரக்டரை இன்னும் போல்டாக காட்டயிருக்கிறாராம் முருகதாஸ். மேரி கோமை மனதில் வைத்து இந்த கேரக்டரை பட்டை தீட்டயிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாக்சராக நடிப்பதற்குரிய உடல்வாகு தீபிகா படுகோனுக்குதான் இயல்பாக அமைந்துள்ளது. மேலும் தமிழ் துப்பாக்கியில் நடிக்க முருகதாஸின் முதல் சாய்ஸ் தீபிகாதானாம். கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் ரேஸில் தீபிகா முன்னணியில் இருப்பதாக கூறுகிறார்கள்.

படத்தின் முக்கியமான இன்னொரு மாற்றம், வித்யும் ஜம்வால். துப்பாக்கியில் வில்லனாக நடித்த இவரை இந்தியில் பயன்படுத்தப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் விபுல் ஷா. காரணம் ஷா வின் கமாண்டோ படத்தில் வித்யுத் ஹீரோவாக நடிக்கிறார். வில்லனாக போட்டு அவரை வீணடிக்க விரும்பவில்லையாம் விபுல் ஷா.

அடுத்த மாதம் இந்த ‌ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 

ரஜினி நடிக்கும் தளபதி பார்ட்- 2 : மணிரத்னம் முடிவு

Rajinikanth starrer Thalapathi Part - 2: Mani Ratnam results மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் 'தளபதி'. மற்றொரு ஹீரோவாக மம்முட்டி நடித்திருந்தார். இப்படத்தின் 2 -வது பாகம் உருவாக்குவது பற்றி மணிரத்னம் யோசித்து வந்தார். சமீபத்தில் ரஜினியை சந்தித்து இதுபற்றி அவரிடம் கூறினார். ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது 'கடல்' படத்தை இயக்கி வரும் மணிரத்னம் படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய உள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் 'தளபதி 2' படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் மணிரத்னம் முழு கவனம் செலுத்த உள்ளார். 'கோச்சடையான்' பட ரிலீசில் தற்போது ரஜினி பிஸியாக இருக்கிறார். அப்படம் வெளியானதும் மீண்டும் மணிரத்னம் ரஜினியை சந்தித்து 'தளபதி பார்ட் 2' பற்றி ஆலோசிக்க உள்ளார்.
Rajinikanth starrer Thalapathi Part - 2: Mani Ratnam results
 

மீண்டும் தேதியை மாற்றினார் கமல்... 7-ம் தேதி விஸ்வரூபம் ஆடியோ!!

Kamal Haasan Viswaroopam Audio On Dec

விஸ்வரூபம் பட இசை வெளியீடு கடந்த நவம்பர் 7-ம் தேதி, கமல் பிறந்த நாளில் வெளியாகவிருந்தது. ஆனால் தட்பவெப்ப நிலை சரியில்லை என்று கூறி இந்த விழாவை அப்போது ரத்து செய்தார் கமல்.

இந்த நிலையில் விஸ்வரூபம் ஆடியோவை சோனி நிறுவனம் வாங்கியதாக அறவித்து.

அதன் பிறகு, டிசம்பர் 2-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் விஸ்வரூபம் இசை வெளியிடப்படும் என்றார்கள். ஆனால் அந்தத் தேதியும் மாறிவிட்டது.

இப்போது டிசம்பர் 7-ம் தேதி இசை வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மதுரையில் வேலம்மாள் மைதானத்தில் காலையிலும், கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் பிற்பகலிலும், சென்னையில் மாலையிலும் நடக்கப் போகிறதாம்.

சென்னையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தைப் பற்றிய தகவலை மட்டும் இதுவரை தெரிவிக்கவில்லை கமல்.

 

கடல்... 'ஃபர்ஸ்ட் லுக்' வெளியானது!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் இன்று வெளியானது.

kadal first look released
நடிகர் கார்த்திக் மகன் கவுதம், நடிகை ராதாவின் இளையமகள் துளசி அறிமுகமாகும் படம் கடல். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். மீனவர் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படங்கள், நடிகர் நடிகையர் படங்கள் என எதையும் வெளியிடாமல் இருந்தார் மணிரத்னம் (அது அவர் ஸ்டைலாம்!).

இன்றுதான் முதல் முறையாக அதிகாரப்பூர்வ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதிலும் கூட நாயகன் நாயகி உள்ளிட்ட யாருடைய முகமும் இல்லை. கடலை ஒரு இளைஞன் திரும்பி நின்று பார்ப்பது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

 

பிரபு தேவாவை டென்ஷனாக்க இந்தியில் கால்பதிக்கும் நயன்தாரா?

Nayan Foray Bollywood Movies   

பிரபு தேவாவை டென்ஷனாக்க இந்திப் படங்களில் நடிக்க நயன்தாரா முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

அதற்கு முன்னோட்டமாக தனது தெலுங்குப் படமான 'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுமாறு தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொள்ள, அவர்களும் நயன் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் உள்ளனர்.

இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நட்சத்திர குழுவினருடன் மும்பையில் முகாமிட்டுள்ளார் நயன்.

ஏற்கெனவே ஹைதராபாத் வீட்டை காலி செய்துவிட்டு மும்பைக்குப் போய்விட்டார் பிரபு தேவா. இப்போது அவரது பாணியிலேயே, மும்பையில் தனக்கென தனி ப்ளாட் பார்க்கச் சொல்லியிருக்கிறாராம் நயன்.

தமிழ், தெலுங்கில் இன்னமும் முன்னணியில் உள்ள நயன், அதே மாதிரி ஒரு இடத்தை இந்தியில் பிடிக்காமல் திரும்பப் போவதில்லை என்று சபதமே போட்டிருக்கிறாராம்.

அங்கும் ஒரு சிம்புவோ, பிரபு தேவாவோ இல்லாமலா போய்விடுவார்கள்... பரபரவென ஆட்டத்தை ஆரம்பியுங்கள்!

 

மீண்டும் மீரா ஜாஸ்மின்... நதிகள் நனைவதில்லை படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்!

Meera Jasmine Starts Her Next Round

சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நதிகள் நனைவதில்லை படத்தில் நாயகியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.

தமிழில் கடைசியாக 'இளைஞன்', 'மம்பட்டியான்' படங்களில் நடித்தார் மீரா ஜாஸ்மின். அதன்பிறகு அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.

மீரா ஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைச் கலைஞர் ராஜேசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடுவார் என்றும் அவரைப் பற்றி செய்திகள் வந்தன.

இப்போது, அதைப் பொய்யாக்கும் விதத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார் மீரா.

தமிழில் நாஞ்சில் பி.சி. அன்பழகன் இயக்கும் 'நதிகள் நனைவதில்லை' படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார்.

மலையாளத்தில் 'லிசமாயிடே வீடு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

ஷூட்டிங்கில் காயம் அடைந்த அஜீத்துக்கு ஆபரேஷன்

Operation to Ajith ஷூட்டிங்கில் காயம் அடைந்த அஜீத்துக்கு ஆபரேஷன் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜீத். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு கால் எலும்பில் அடிபட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அடிபட்ட இடத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினர். படத்தின் முக்கிய காட்சிகள் படமாகி வருவதால் ஆபரேஷனை தள்ளிப்போட்டார் அஜீத். கையில் ஸ்டிக் ஊன்றியபடி ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

விரைவில் அவருக்கு ஆபரேஷன் நடக்க உள்ளது. இது பற்றி பட யூனிட் தரப்பில் கூறும்போது, 'அஜீத்துக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். தற்போது ஒப்புக்கொண்டிருக்கும் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்துகொள்வார். வலியை பொறுத்துக்கொண்டு அவர் முழு அர்ப்பணிப்புடன் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதைக் கண்டு பலர் ஆச்சர்யம் அடைந்தனர். அவர் தொழில் ரீதியான நடிகர் என்பதை உணர்த்திவிட்டார் என்றனர். இதற்கிடையில் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் ஐதராபாத்தில் நடக்க உள்ள சிறுத்தை சிவா இயக்கும் பட ஷூட்டிங்கில் அவர் கலந்துகொள்கிறார்.
 

குழந்தை கடத்தல் கதையில் கேரள ஹீரோயின்

Kerala heroin the story of child trafficking குழந்தை கடத்தல் கதையில் மலையாள ஹீரோயின் அறிமுகமாகிறார். 'என்னவளே, 'ஜூனியர் சீனியர், 'வேலை போன்ற படங்களை இயக்கிய ஜே.சுரேஷ் அடுத்து 'பாரசீக மன்னன் என்ற படத்தை எழுதி இசை அமைத்து இயக்குவதுடன் ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சர்வதேச அளவில் அச்சப்பட வைக்கிற விஷயமாக குழந்தை கடத்தல் சம்பவம் நடக்கிறது. கடத்தப்படும் குழந்தைகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள்.

அதில் சம்பந்தப்பட்டவர்கள் பின்னணி என்ன? அவர்கள் பெறும் ஆதாயம் என்ன? என்பதை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், திலீப் போன்றவர்களுடன் நடித்த ஸ்ருதிலட்சுமி ஹீரோயின். ரமேஷ் கண்ணா, பாண்டு, பாலாஜி, ஆர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். நூதலப்பட்டி பிரகாஷ் ஒளிப்பதிவு. கே.ஜே.பாலகிருஷ்ணன், கே.ஜே.திலீப்குமார் தயாரிப்பு. இசை ஆலோசனை, யுவன் சங்கர்ராஜா. சென்னை, கோவை, கேரளா, மும்பை, புனே, பாங்காக், துபாய் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.
 

காதலனை பிரிந்தார் எமி ஜாக்ஸன்

Emi Jackson left her lover காதலன் பிரதீக்கை பிரிந்தார் எமி ஜாக்ஸன். தமிழில் ஆர்யா ஜோடியாக 'மதராசபட்டினம் படத்தில் அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த எமி ஜாக்ஸன். இதையடுத்து விக்ரம் ஜோடியாக 'தாண்டவம் படத்தில் நடித்தார். இதற்கிடையில் தமிழில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் இந்தியில் 'ஏக் திவானா தா என்ற பெயரில் இயக்கினார். இதில் பிரதீக் ஹீரோவாக நடித்தார். ஹீரோயினாக எமி நடித்தார். அப்போது பிரதீக், எமி இருவருக்கிடையே நட்பு மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் பார்ட்டிகளுக்கும், டேட்டிங் என்று பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றினர். நெருக்கமான காதலர்களான நிலையில் இருவரும் அதன் நினைவாக தங்கள் பெயர்களை பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்தனர். பிரதீக் லண்டன் சென்று எமி ஜாக்ஸன் பெயரை பச்சைக் குத்திக்கொண்டார். அங்கு வசிக்கும் எமியின் குடும்பத்தாரையும் சந்தித்து பேசினார். இவர்களின் காதலை எமியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். மும்பையில் உள்ள பிரபலமான பச்சை குத்தும் ஷாப்பிற்கு சென்று தனது கையில் பிரதீக் பெயரை பச்சைக் குத்திக்கொண்டார் எமி.

காதல் மலர்ந்து ஒரு வருடம் மட்டுமே கடந்த நிலையில் இருவருக்குள்ளும் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரதீக்கை பிரிந்து லண்டன் புறப்பட்டு சென்றார் எமி. அவரது பிரிவை தாங்க முடியாமல் வருத்தம் அடைந்து வீட்டிலேயே முடங்கினார் பிரதீக். இனி எமியிடம் நெருங்குவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் மனதை தேற்றிக்கொண்டு வெளியில் வர ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து புது நடிகைகளிடம் அவர் நட்பு தேடத் தொடங்கி இருக்கிறார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
 

காதலனை பிரிந்தார் எமி ஜாக்ஸன்

Emi Jackson left her lover காதலன் பிரதீக்கை பிரிந்தார் எமி ஜாக்ஸன். தமிழில் ஆர்யா ஜோடியாக 'மதராசபட்டினம் படத்தில் அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த எமி ஜாக்ஸன். இதையடுத்து விக்ரம் ஜோடியாக 'தாண்டவம் படத்தில் நடித்தார். இதற்கிடையில் தமிழில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் இந்தியில் 'ஏக் திவானா தா என்ற பெயரில் இயக்கினார். இதில் பிரதீக் ஹீரோவாக நடித்தார். ஹீரோயினாக எமி நடித்தார். அப்போது பிரதீக், எமி இருவருக்கிடையே நட்பு மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் பார்ட்டிகளுக்கும், டேட்டிங் என்று பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றினர். நெருக்கமான காதலர்களான நிலையில் இருவரும் அதன் நினைவாக தங்கள் பெயர்களை பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்தனர். பிரதீக் லண்டன் சென்று எமி ஜாக்ஸன் பெயரை பச்சைக் குத்திக்கொண்டார். அங்கு வசிக்கும் எமியின் குடும்பத்தாரையும் சந்தித்து பேசினார். இவர்களின் காதலை எமியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். மும்பையில் உள்ள பிரபலமான பச்சை குத்தும் ஷாப்பிற்கு சென்று தனது கையில் பிரதீக் பெயரை பச்சைக் குத்திக்கொண்டார் எமி.

காதல் மலர்ந்து ஒரு வருடம் மட்டுமே கடந்த நிலையில் இருவருக்குள்ளும் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரதீக்கை பிரிந்து லண்டன் புறப்பட்டு சென்றார் எமி. அவரது பிரிவை தாங்க முடியாமல் வருத்தம் அடைந்து வீட்டிலேயே முடங்கினார் பிரதீக். இனி எமியிடம் நெருங்குவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் மனதை தேற்றிக்கொண்டு வெளியில் வர ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து புது நடிகைகளிடம் அவர் நட்பு தேடத் தொடங்கி இருக்கிறார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
 

குழந்தை கடத்தல் கதையில் கேரள ஹீரோயின்

Kerala heroin the story of child trafficking குழந்தை கடத்தல் கதையில் மலையாள ஹீரோயின் அறிமுகமாகிறார். 'என்னவளே, 'ஜூனியர் சீனியர், 'வேலை போன்ற படங்களை இயக்கிய ஜே.சுரேஷ் அடுத்து 'பாரசீக மன்னன் என்ற படத்தை எழுதி இசை அமைத்து இயக்குவதுடன் ஹீரோவாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சர்வதேச அளவில் அச்சப்பட வைக்கிற விஷயமாக குழந்தை கடத்தல் சம்பவம் நடக்கிறது. கடத்தப்படும் குழந்தைகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள்.

அதில் சம்பந்தப்பட்டவர்கள் பின்னணி என்ன? அவர்கள் பெறும் ஆதாயம் என்ன? என்பதை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், திலீப் போன்றவர்களுடன் நடித்த ஸ்ருதிலட்சுமி ஹீரோயின். ரமேஷ் கண்ணா, பாண்டு, பாலாஜி, ஆர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். நூதலப்பட்டி பிரகாஷ் ஒளிப்பதிவு. கே.ஜே.பாலகிருஷ்ணன், கே.ஜே.திலீப்குமார் தயாரிப்பு. இசை ஆலோசனை, யுவன் சங்கர்ராஜா. சென்னை, கோவை, கேரளா, மும்பை, புனே, பாங்காக், துபாய் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.
 

ஷூட்டிங்கில் காயம் அடைந்த அஜீத்துக்கு ஆபரேஷன்

Operation to Ajith ஷூட்டிங்கில் காயம் அடைந்த அஜீத்துக்கு ஆபரேஷன் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜீத். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு கால் எலும்பில் அடிபட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அடிபட்ட இடத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினர். படத்தின் முக்கிய காட்சிகள் படமாகி வருவதால் ஆபரேஷனை தள்ளிப்போட்டார் அஜீத். கையில் ஸ்டிக் ஊன்றியபடி ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

விரைவில் அவருக்கு ஆபரேஷன் நடக்க உள்ளது. இது பற்றி பட யூனிட் தரப்பில் கூறும்போது, 'அஜீத்துக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். தற்போது ஒப்புக்கொண்டிருக்கும் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்துகொள்வார். வலியை பொறுத்துக்கொண்டு அவர் முழு அர்ப்பணிப்புடன் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதைக் கண்டு பலர் ஆச்சர்யம் அடைந்தனர். அவர் தொழில் ரீதியான நடிகர் என்பதை உணர்த்திவிட்டார் என்றனர். இதற்கிடையில் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் ஐதராபாத்தில் நடக்க உள்ள சிறுத்தை சிவா இயக்கும் பட ஷூட்டிங்கில் அவர் கலந்துகொள்கிறார்.
 

கிசு கிசு - நாயகியின் புது தோழி

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

ஹரிதாச பட பேரோட உருவாகுற பட நிகழ்ச்சில பாலுவான மகேந்திர இயக்கம் கலந்துகிட்டு இயக்கத்தை குறை சொன்னாராம்... சொன்னாராம்... 'படத்துல நடிச்ச பையன் சில சீன்ல தூங்கற மாதிரி தெரியுது. அத கவனிக்காம இயக்கம் படத்த எப்படி எடுத்தாருன்னு ரிவிட் அடிச்சாராம்... அடிச்சாராம்... இதுக்கு இன்னொரு நிகழ்ச்சில பதில் சொன்ன குமர இயக்கம், 'கதைப்படி பையனுக்கு ஒருவித நோய் இருக்கு. அதுக்காக அக்காட்சி படமாக்கப்பட்டது.  பாலு இயக்கத்துக்கு கதை தெரியாது. அதனால அப்படி பேசிட்டாரு. முழுசா படம் பாக்கறப்போ இது புரியும்னு பல்ல கடிச்சிட்டே சொன்னாராம்... சொன்னாராம்...

ஈர படத்துல நடிச்ச பூரண நடிகைக்கு கோலிவுட் கைகொடுக்கலயாம்... கைகொடுக்கலயாம்... இதனால வேற லாங்குவேஜ்ல கவனத்த திருப்பிட்டாராம். அவரோட தோற்றம் ஹோம்லியா இருக்க¤றதால கிளாமர் வேடங்கள் வரலயாம். நடிகையும் காத்திருந்து காத்திருந்து சொந்த மலையாள தேசத்துக்கே போயிட்டாராம்... போயிட்டாராம்...

காஜல் ஹீரோயின் பாலிவுட்டுக்கு போறப்ப தோழி இல்லாம வெறும் கையோடு போனாராம்... போனாராம்... பிசின் நடிகயோட விளம்பர படத்துல நடிச்சாலும் அவர்கிட்ட நெருக்கம் குறைவாவே இருந்துச்சாம். சமீபத்துல கோவாவுல பிலிம் பெஸ்டிவல்ல டபு ஹீரோயினை பாத்தப்ப ரெண்டுபேரும் கட்டிபிடிச்சிட்டாங்களாம். டோலிவுட் படத்துல சேந்து நடிச்ச கதைய மணிக்கணக்குல பேச¤னாங்களாம்... பேசினாங்களாம்... அப்படியே, தெரிஞ்ச பாலிவுட் இயக்குனர்கள்கிட்ட அறிமுகப்படுத்தி வைய்யுங்களேன்னு டபு நடிகைக்கு காஜலானவரு கோரிக்கை வச்சாராம்... வச்சாராம்...
 

அஜீத்துடன் முதல் முறை ஜோடி சேரும் தமன்னா!

Tamanna Is Ajith New Lady Love    | தமன்னா  

அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்க, வெங்கட்ராம ரெட்டி வழங்கும் பெயிரிடப்படாத புதிய படம் விரைவில் தொடங்கவிருக்கிறது.

தன்னை அஜீத்தின் தீவிர ரசிகன் என்று கூறும் இயக்குனர் சிவா, "படத்துக்கு கதாநாயகி தேடல் முடிவடைந்துவிட்டது. விதார்த், பாலா, முனீஷ், சோஹில், என்று இளம் நாயகர்கள் சிலர் அஜீத்தோடு இணைந்து நடிக்கின்றனர். தமன்னா முதல் முறையாக அஜீத்துடன் ஜோடி சேருகிறார்.

ஜெயராம், சந்தானமும் இப்படத்தின் நகைச்சுவைக்கு உத்தரவாதம், ஜெயப்பிரகாஷ், இளவரசு என்று குணசித்திர நடிகர்களும் உண்டு," என்றார்.

மறைந்த நாகி ரெட்டியின் நூற்றாண்டு நிறைவு நாளான டிசம்பர் 2 ஆம் தேதி இந்தப் படத்தின் பாடல் பதிவு நடக்கிறது.

 

சினிமா பிரபலங்களில் டுவிட்டர் பக்கங்கள் … ஜெயா டிவியின் ‘சினிமா’வில் அறிமுகம்

Jaya Tv Telecast New Program Cinima

நாளிதழ், வாரஇதழ் என எதுவாக இருந்தாலும் சினிமா பற்றிய செய்திகளுக்கு இரண்டு பக்கங்களை ஒதுக்குவார்கள். அதேபோலத்தான் இணையதளங்களிலும் சினிமாவிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். இப்போது சின்னத்திரையிலும் சினிமா செய்திகளை எல்லோரும் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.

ஜெயா டிவியில் ‘சினிமா' என்ற புதிய நிகழ்ச்சியை சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகிறது. இதில் புதுமையாக சினிமா பிரபலங்களில் சமூகவலைதளப் பதிவுகளைப் பற்றிய செய்திகளை கூறுகின்றனர். இன்றைக்கு சினிமா செய்திகளை படிக்கவும், பார்க்கவும் தனி ரசிகர் வட்டம் உண்டு. அவர்களுக்காகவே ஜெயா டிவியில் சினிமா நிகழ்ச்சியை நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியுள்ளனர்

இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் சுய விவரங்கள், பழம்பெரும் நடிகர்கள் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள், தற்போது படப்பிடிப்பில் இருக்கும் புதிய திரைப்படங்கள் பற்றி இதுவரை அறிந்திராத செய்திகள், காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள் என அத்தனையையும் தொகுத்து தருகின்றனர்.

திரைக்கு வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் பிரத்தியேகமான காட்சிகளும் அந்தப் படக்குழுவினரின் அனுபவங்களும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. புதியதாக சினிமா பிரபலங்களின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள், அவர்களின் பதிவுகளும் இந்த சினிமா நிகழ்ச்சியில் இடம் பிடிப்பது சிறப்பு அம்சம். வாரந்தோறும் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

 

போராட்டம்தான் வாழ்க்கையில சுவாரஸ்யம்: ‘மிர்ச்சி’ சிவா

Struggling Life Gives Thrill Says Mirchi Siva

எனக்கு எந்த பின்னணியும் கிடையாது ஆனால் நான் இன்றைக்கு சினிமா உலகில் இருக்கிறேன். இதற்கு காரணம் போராட்டம்தான். அதுதான் என்னுடைய வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றியிருக்கிறது என்று நடிகர் சிவா கூறியுள்ளார்.

சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் பேசிய சிவா தன்னுடைய சினிமா, காதல், பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.

படிப்பதை விட தனக்கு நடிப்பதில் தான் ஆர்வம் அதிகம் என்று கூறிய சிவா, முதலில் நாடகத்தில் நடித்து பின்னர் எப்.எம், அப்புறம் சினிமா துறைக்கு வந்ததாக கூறினார்.

சினிமா துறைக்கு சென்றதற்கு தன்னுடைய வீட்டில் யாரும் விரும்பவில்லை என்று கூறிய சிவா, பின்னர் ரஜினி படத்தை வீட்டில் மாட்டிய பின்னர்தான் தனக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததாக கூறினார்.

நடிகர் அஜீத் தனக்கு அண்ணன் மாதிரி என்றும், நடிகர் விஜய்யின் ரசிகன் என்றும் கூறினார். தன்னுடைய படங்களைப் பார்த்து விஜய் பாராட்டியும், ஆலேசானைகளையும் கூறியுள்ளார் என்றார் சிவா.

சினிமா துறைக்கு வருவதற்கு எனக்கு எந்த பின்னணியும் இல்லை. அதுதான் தனக்கு ப்ளஸ் என்று கூறிய சிவா தன்னால் சுதந்திரமாக செயல்பட முடிவதற்கு அதுதான் காரணம் என்றார். சினிமாவில் நுழைவதற்கு நானும் போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அந்த நாட்களில் நான் மிகவும் சந்தோசமாக சிரித்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தேன் என்று கூறிய சிவா இப்போதைய வெற்றிக்கு அந்த நம்பிக்கைதான் காரணம் என்றார்.

 

பல லட்சத்திற்கு ஏலத்திற்கு வரும் மடோனாவின் 'புல்லட்' பிரா!

லண்டன்: பாப் பாடகி மடோனா ஒரு இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்த பிரா, தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. பல லட்சத்திற்கு இந்த பிரா ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15k madonna madonbra
புல்லட் பிரா என்று இந்த பிராவுக்குச் செல்லப் பெயரும் உண்டு. காரணம், புல்லட்டைப் போல படு ஷார்ப்பாக இதன் நுனிப்பகுதி இருக்கும். மடோனாவுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது இது. இந்த பிராவை அணிந்து 1990ல்நடந்த இசைச் சுற்றுப்பயணத்தில் ஆடிப் பாடினார் மடோனா. இந்த பிராதான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

இந்த பிராவைத் தயாரித்தது ஜீன் பால்கால்டியர் நிறுவனமாகும். இந்த பிராவை தற்போது பிரபல கிறிஸ்டி நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறைந்தது ரூ. 13லட்சத்திற்கு இந்த பிரா ஏலம் போகும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.

அடேங்கப்பா... ஒரு பிராவுக்கு இவ்ளோ கிராக்கியா...

 

எனக்கு திருமணமா? கவுரி முஞ்சால் கோபம்

gowri munjal angry தமிழில், 'தொட்டால் பூமலரும்', 'சிங்கக்குட்டி' படங்களில் நடித்தவர் கவுரி முஞ்சால். அவர் கூறியதாவது:தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவருகிறேன். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்தது பெருமைதான். என்றாலும் சமீபகாலமாக தமிழில் காண முடியவில்லையே என்கிறார்கள். நான் அமைதியானவள். எந்த பரபரப்பையும் விரும்பாதவள். அதனால் வாய்ப்புகளைத் தேடிப் போகவில்லை. வரும் படங்களில் நடிக்கிறேன். நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. கடந்த சில வருடங்களாக என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர்க¬ளை கவனித்துக்கொண்டேன் என்றாலும் திருமணத்துக்கு இப்போது அவசரம் இல்லை. உடல் எடையை பத்துகிலோ வரை குறைத்துள்ளேன். இப்போது அதிக வாய்ப்புகள் வருகிறது. எந்த மொழியாக இருந்தாலும் சிறந்த கதைகளில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன்.

 

அஜீத் ஜோடி ஆனார் தமன்னா

thaamana விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இதற்கிடையே விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிக்கிறார். இதை 'சிறுத்தை' சிவா இயக்குகிறார். இதில் அஜீத் ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடி வந்தனர். இப்போது தமன்னா ஒப்பந்தமாகி உள்ளதாக இயக்குனர் சிவா தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, 'படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது கமர்சியல் படம். விதார்த், பாலா, முனீஷ், சோஹைல் ஆகிய இளம் ஹீரோக்களும் அஜீத்துடன் நடிக்க உள்ளனர். காமெடிக்கு ஜெயராமும், சந்தானமும் இணைகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மார்ச் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது' என்றார்.

 

நீர்ப்பறவை நெஞ்சைத் தொட்ட கதை

neerparavarai  விஷ்ணு, சுனேனா, நந்திதா தாஸ் நடித்துள்ள 'நீர்ப்பறவை' படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் நடித்துள்ளது பற்றி நந்திதா தாஸ் கூறியதாவது:கடந்த இரண்டு வருடமாக என் மகனை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்தேன். 'நீர்ப்பறவை' கதையை கேட்டதும் எனக்குப் பிடித்திருந்தது. இதில் மீனவரின் மனைவியாக நடித்துள்ளேன். சர்வதேச கடல் எல்லையை அறியாமல் தாண்டிச் செல்கிற மீனவர்களை மற்ற நாட்டு ராணுவம் சுட்டுக்கொல்வது, பிடித்துச்செல்வது பற்றியான கதைதான் 'நீர்ப்பறவை'. தனிபட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் இது நெஞ்சைத் தொடுகிற விஷயம். இதில் அநீதிக்கு எதிராக கேள்விகளை கேட்கும் வேடத்தில் நடித்துள்ளேன். இதையடுத்து இன்னும் சில சுவாரஸ்யமான கதைகளில் நடிக்க இருக்கிறேன். நாடகங்களிலும் பங்குபெற இருக்கிறேன். நடிப்பது, படம் இயக்குவது, நாடகம் என்று சொல்கிறீர்களே அடுத்து என்ன என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் மகிழ்ச்சியாக ஈடுபடுகிறேன். இப்போது இதழ் ஒன்றில் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.இவ்வாறு நந்திதா தாஸ் கூறினார்.
 

3 படத்தால் ஸ்ருதிக்கு கிடைத்த இந்தி வாய்ப்பு

shruthi '3' படத்தில் சிறப்பாக நடித்திருந்ததால் ஸ்ருதி ஹாசனுக்கு இந்திப் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த படம், '3'. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கொலவெறி' பாடல் பரவலாக பேசப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்த இந்தி பட இயக்குனர் நிகில் அத்வானி, தனது இந்தி படத்துக்கு ஸ்ருதியை தேர்வு செய்துள்ளார். இந்தியில் ஏற்கனவே 'லக்', 'தில் தோ பச்சா ஹை ஜி' படங்களில் நடித்திருந்தாலும் '3' படம் தான் அவரை பாதித்ததாக நிகில் தெரிவித்துள்ளார்.
'ஹீரோயின் தேடிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக தமிழ்ப் படமான '3' ஐ பார்க்க நேரிட்டது. இதில் ஸ்ருதியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. நிகில் இயக்கும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. இந்த காட்சிகள் நம்பும்படியாக இருக்க, ஸ்ருதி பொருத்தமாக இருப்பார் என்று நிகில் நினைத்தார். இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்தோம்' என்று நிகில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிகில் அத்வானி படத்தில் அர்ஜுன் ராம்பால், இர்பான் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோயினாக ஹுமா குரேஸி நடிக்கிறார்.