'ரஜினியைச் சந்தித்தேன்... பேச்சே வரல.. லவ் யூ தலைவா!' - நடிகர் கலையரசன்

கடந்த இரண்டு தலைமுறை நடிகர்களுக்குள்ளும் ஒரு ரஜினி ரசிகன் உயிர்ப்போடு இருப்பான் என்பார்கள் கோடம்பாக்கத்தில்.

அதை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் கலையரசன். இரண்டு படங்கள்தான் நடித்திருப்பார். ஆனால் அதற்குள் ரஜினியுடன் கபாலியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டசாலிகளில் கலையும் ஒருவர்.

Actor Kalaiarasan flying; shocked by Rajinkanth

நேற்றைய கபாலி போட்டோ ஷூட்டில் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் கலையரசன்.

அந்த சந்திப்பு அனுபவத்தை சமூக வலைத்தளமான ட்விட்டரில் இப்படிக் கொண்டாடியுள்ளார் கலையரசன்.

Actor Kalaiarasan flying; shocked by Rajinkanth

"ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவரை (ரஜினி) இன்று சந்தித்தேன். இது எனக்கு மிகப் பெரிய நாள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உணர்ந்தேன். ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.. லவ்யூ தலைவா.. இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை. பறந்து கொண்டிருக்கிறேன்..."

இந்தப் படத்தில் கலையரசன், தினேஷ், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நாசர் என முற்றிலும் புதிய குழு ரஜினியுடன் கை கோர்க்கிறது. வரும் செப்டம்பர் 17-ம் தேதி மலேசியாவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

 

விஜய் சேதுபதி நடிக்கும் 'சேதுபதி'... மீண்டும் ஜோடி சேரும் ரம்யா நம்பீசன்!

பீட்சா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ரம்யா நம்பீசன். இந்தப் படத்துக்கு சேதுபதி என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி -ரம்யா நம்பீசன் நடித்து பெரும் வெற்றிப் பெற்றது பீட்சா. இதில் ரம்யா நம்பீசன் வேடம் மற்றும் அழகு ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.

Vijay Sethupathy - Ramya Nambeesan in Sethupathy

‘பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படத்தை இயக்கிய அருண் குமார், அடுத்து இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சேதுபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மதுரையில் நடக்கும் இந்தக் கதையில், விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். நேர்மையான போலீசாக நிலைத்திருக்க அவர்களின் அன்றாட பிரச்சனைகளையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும் உணர்த்தும் படமாக இது வெளிவர இருக்கிறது.

Vijay Sethupathy - Ramya Nambeesan in Sethupathy

ரம்யா நம்பீசன் இந்தப் படத்தின் அவரது கதாபாத்திரத்துக்காக எடையைக் குறைத்துள்ளார். இதில், அவரது கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு இணையாக வலுவானதாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Vijay Sethupathy - Ramya Nambeesan in Sethupathy

‘தெகிடி' படத்துக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். செப்டம்பரில் இந்தப் படம் தொடங்குகிறது.

 

ஹைதராபாதில் சிரஞ்சீவி பிறந்த நாள் விழாவில் ரஜினி!

இன்று தொடங்கும் சிரஞ்சீவியின் 60வது பிறந்த நாள் விழாவில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் , சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.

தெலுங்கு திரையுலகின் மிகப் பெரிய ஹீரோவாகத் திகழ்ந்த சிரஞ்சீவி, பின்னர் அரசியல் நுழைத்து தனிக் கட்சி தொடங்கி, அந்தக் கட்சியை பின்னர் காங்கிரஸில் இணைத்து, மத்திய மந்திரியாக சில ஆண்டுகள் பதவி வகித்து, காங்கிரஸ் ஆட்சி பறிபோன பிறகு அமைதியாக உள்ளார்.

Rajini at Chiranjeevi birthday

இப்போது மீண்டும் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று அவருக்கு 60 வயது பிறக்கிறது. இதனையொட்டி இன்று அவரது பிறந்த நாள் விழா ஹைதராபாதில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் அவருக்கு நெருக்கமான நண்பர்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சல்மான்கான், அம்பரீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர். இந்த விவிஐபிக்கள் ஏற்கெனவே ஹைதராபாதுக்கு சென்றுவிட்டனர்.

 

ஏவிஎம்மில் கபாலி போட்டோஷூட்.. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நேற்று நடந்த கபாலி படத்தின் போட்டோஷூட்டில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார். முற்றும் புதிய குழுவினருடன் இணைந்து அவர் பணியாற்றுகிறார்.

Rajini attends photoshoot of Kabali

இந்தப் படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நாசர், கலை, தினேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் 18-ம் தேதி மலேஷியாவில் தொடங்குகிறது.

படத்தின் முதல் கட்டப் பணியான போட்டோஷூட் எனப்படும் நிழற்பட படப்பிடிப்பு நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் தாடியுடன் கலந்து கொண்டார் ரஜினி. இந்தப் படத்தில் அவர் சால்ட் அன்ட் பெப்பர் லுக் எனப்படும் பாதி நரைத்த தலைமுடி மற்றும் தாடியுடன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

என்பதுகளிலேயே சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடித்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

நிழற்பட படப்பிடிப்பு நடந்த இடத்தில் வெளியாட்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. படத்தின் முதல் தோற்ற டிசைன் வரும் செப் 18 அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

 

பாகுபலி 2: தெலுங்கு ஹீரோக்களை ஓரங்கட்டி சம்பளத்தில் முன்னணி வகிக்கும் பிரபாஸ்

ஹைதராபாத்: பாகுபலி திரைப்படம் வெற்றிகரமாக ஓடியதில் பிரபாஸின் புகழ் தற்போது நாளுக்குநாள் ஏறிக்கொண்டே செல்கிறது டோலிவுட்டில்.

Baahubali - The Beginning (Tamil) (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் சுமார் 560 கோடிகளை வசூல் செய்தது, இதனால் படத்தில் 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்த நாயகன் பிரபாசிற்கு இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Baahubali 2: Prabhas Became the Highest Paid Tollywood Actor

இந்தப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் தெரிந்த நாயகன் மற்றும் வசூல் நாயகன் போன்ற புகழ், பெருமைகளுடன் இன்னொரு மிகப்பெரிய நன்மையும் பிரபாசிற்கு கிடைத்துள்ளது.

அதாவது படத்தின் முதல் பாதியில் 3 வருட உழைப்பிற்காக சுமார் 24 கோடிகள் வரை சம்பளமாகப் பெற்றிருந்த பிரபாஸ்,தற்போது பாகுபலியின் 2 வது பாகத்தில் அதைவிட அதிகத் தொகையினை பெற இருக்கிறாராம்.

பிரபாஸின் உழைப்பைப் பார்த்த இயக்குநர் ராஜமௌலி 2 வது படத்தின் லாபத் தொகையில், ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பிரபாசிற்கு கொடுக்க ஏற்கனவே தீர்மானித்து விட்டாராம்.

தற்போது தயாரிப்பாளர்களும் இதனை உறுதி செய்திருக்கின்றனர், 2 வது பாகத்தினை சுமார் 950 கோடிகள் வரை செலவழித்து எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2 வது பாகத்தின் மூலம் போட்ட பணத்தை திரும்ப எடுத்தால் கூட மிகப்பெரிய தொகை பிரபாசிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மட்டுமின்றி அனுஷ்காவின் தரிசனமும் கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன் என்ற முக்கியமான கேள்விக்கு விடையும் 2 ம் பாகத்தில் இருப்பதால் படத்திற்கு உலகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே முதல் பாகத்தில் கிடைத்ததை விடவும் பல மடங்கு தொகையினை பிரபாஸ் பெறவிருக்கின்றார், இந்த சம்பளத்தைப் பெறும்போது டோலிவுட்டில் மட்டுமல்லாது இந்திய அளவில் மிகப்பெரிய சம்பளம் வாங்கும் நடிகராகவும் பிரபாஸ் உயர்ந்து விடுவார் என்று சொல்கின்றனர்.

இதனைக் கேட்டு பல முன்னணி தெலுங்கு நடிகர்களும் ஆடிப் போயிருக்கின்றனாராம்...என் உழைப்பு என் பணம்னு பிரபாஸ் சொல்லும் காலம் தொலைவில் இல்லை...