அனேகன் ஷூட்டிங் முடிந்தது... ஆகஸ்டில் வெளியீடு?

தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தின் ஷூட்டிங் கிட்டத்த் முடிந்துவிட்டது. இந்தப் படம் ஆகஸ்டில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனுஷ் - அம்ரியா தஸ்துர் நடிக்கும் படம் அனேகன். கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

அனேகன் ஷூட்டிங் முடிந்தது... ஆகஸ்டில் வெளியீடு?

இந்தப் படத்தின் பெரும்பாலான பகுதிகள் எடுக்கப்பட்ட நிலையில், தனுஷ் தனது இரணடாவது இந்திப் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

படத்தின் பாடல் காட்சி மட்டும் பாக்கியிருந்த நிலையில், சமீபத்தில் மும்பையிலிருந்து சென்னை திரும்பிய தனு், அனேகன் ஷூட்டிங்கில் பங்கேற்று பாடல் காட்சியில் நடித்தார்.

இந்த வாரம் படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆகஸ்டில்தான் சூர்யாவின் அஞ்சான் படமும் வெளியாகிறது.

 

தீபாவளிக்கு ரிலீசாகுமா விஜய்யின் கத்தி?

ரஜினியின் லிங்கா படம் தீபாவளியைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வருவதால், விஜய்யின் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாகுமா.. தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கத்தி. இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

விஜய் இந்தப் படத்தில் மாறுபட்ட நாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் முதன்முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார்.

தீபாவளிக்கு ரிலீசாகுமா விஜய்யின் கத்தி?

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காரணம், அக்ஷய்குமார்-சோனாக்ஷி சின்ஹாவை வைத்து முருகதாஸ் இயக்கியுள்ள ‘துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்கான ‘ஹவுஸ்ஃபுல்' படம் வரும் ஜூன்-6ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துகொள்ள வேண்டியதால் இந்த தற்காலிக ஓய்வு.

ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

ஆனால் அதே தேதியில் ரஜினியின் லிங்கா படமும் வெளியாவதால், விஜய் படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினியின் சந்திரமுகியும், விஜய் நடித்த சச்சினும் ஒரே தேதியில் வெளியானது நினைவிருக்கலாம்.

 

நேரம் தான்: விமல் படத்தில் குத்தாட்டம் போட சன்னி லியோனுக்கு ரூ.35 லட்சமாம்!

சென்னை: ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.35 லட்சம் சம்பளமாம்.

வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோனை பாலிவுட்காரர்கள் அழைத்து வந்து இந்தி படத்தில் நடிக்க வைத்தனர், வைக்கின்றனர். சன்னி பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக உள்ளார். இந்நிலையில் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர்.

நேரம் தான்: விமல் படத்தில் குத்தாட்டம் போட சன்னி லியோனுக்கு ரூ.35 லட்சமாம்!

துரை தயாநிதி தயாரிக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட அழைத்து வந்தனர். ஆபாச பட நடிகையான அவரை தமிழ் படத்தில் ஆட வைத்ததற்கு கண்டன குரல்கள் எழுந்தன. ஆனால் அவர் அதை எல்லாம் காதில் வாங்காமல் குத்தாட்டம் போட்டுவிட்டு ரூ. 25 லட்சம் வாங்கிக் கொண்டி கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திலும் குத்தாட்டம் போட சன்னியை தான் அழைத்துள்ளனர். தனக்கு மவுசு அதிகமாவதை உணர்ந்த அவர் இந்த படத்தில் ஆட ரூ. 35 லட்சம் கேட்டுள்ளார். உடனே ஓகே சொல்லி அவர் கேட்ட தொகையை கொடுத்துள்ளனர்.

 

உத்தம வில்லனுக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2?

கமல் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படத்துக்குப் பிறகுதான் வெளியாகும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு பல பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது கமலின் விஸ்வரூபம். அந்தப் படம் நல்ல வசூலையும் பெற்றது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து, உடனடியாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார் கமல். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்ததது.

உத்தம வில்லனுக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2?

கடந்த ஜனவரியிலேயே படம் வெளியாகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில், 10 சதவீத படப்பிடிப்பு முடியாத நிலையில், கமல் தனது அடுத்தடுத்த படங்களுக்கு தேதி கொடுத்து நடிக்கப் போய்விட்டார்.

இப்போது உத்தம வில்லனில் நடிக்கும் கமல், அது முடிந்ததுமே, த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார். உத்தம வில்லன் செப்டம்பர் 10- ம் தேதி நிச்சய ரிலீஸ் என தயாரிப்பாளர் லிங்குசாமி கூறியுள்ளார்.

எனவே இந்தப் படத்துக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2 வெளியாக வேண்டும்.

விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நிதி நெருக்கியில் சிக்கியிருப்பதாலேயே இந்த நிலை என்கிறார்கள் ஆஸ்கர் பிலிம்ஸ் வட்டாரத்தில்.

 

விக்ரமுக்காக இந்தி வாய்ப்பைக் கூட உதறிய சமந்தா!

பத்து எண்ணுறதுக்குள்ள படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சமந்தா.

சமந்தா முதன்முறையாக விக்ரமுடன் இணைந்து நடிக்கவிருந்த படம் ஷங்கர் இயக்கி வரும் ஐ. ஆனால் சரும நோய்ப் பிரச்சினை காரணமாக அப்போது அவர் விலகிக் கொண்டார்.

ஆனால் விக்ரமுக்கு சமந்தாவுடன் சேர முடியாத மனக்குறை இருந்து கொண்டே இருந்ததாம்.

விக்ரமுக்காக இந்தி வாய்ப்பைக் கூட உதறிய சமந்தா!

இந்த நேரம் பார்த்து சமந்தாவின் சரும நோய்ப் பிரச்சினை தீர்ந்து, அவர் மீண்டும் பிஸியாக ஆரம்பித்தார்.

அதற்குள் விக்ரமின் ஐ படமும் முடிந்துவிட, தனது அடுத்த படத்தில் சமந்தாவை ஜோடியாக்கிக் கொண்டார் விக்ரம். இதற்காக முன்கூட்டியே சமந்தாவிடம் சொல்லி வைத்திருந்தாராம் விக்ரம். எனவே தனக்கு வந்த இந்தி வாய்ப்பைக் கூட உதறிவிட்டாராம் சமந்தா.

பத்து எண்ணுறதுக்குல்ல என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை கோலி சோடா இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்தப் படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை வேடம் ஏற்றிருக்கிறாராம்.

ஒரு கதாபாத்திரம் கிராமத்து பெண்ணாகவும், மற்றொன்றில் நகரத்து பெண்ணாகவும் வருகிறாராம்.

சமந்தா தற்பொழுது விஜய்யுடன் கத்தி படத்திலும், சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார்.

 

அக்கப்போரில் இருந்து அமைதியாக மாறிய இளம் ஹீரோ

சென்னை: அக்கப்போர் செய்வதற்கு பெயர் போன விரல் நடிகர் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்து அமைதியாகிவிட்டாராம்.

விரல் நடிகரிடம் சேட்டை செய்தால் அவர் சும்மா விட மாட்டார் என்பது கோலிவுட் அறிந்தது. அவரை காதலித்த பெண்கள் அவரை பிரிந்த பிறகு அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கசிந்தன. இது விரல் நடிகரின் வேலை தான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விரல் நடிகர் தற்போது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டி வருகிறாராம். முன்பெல்லாம் அவரிடம் இயக்குனர்கள் கதை கூறினால் அதை தன் ஸ்டைலுக்கு ஏற்ப மாற்றிவிடுவார். தற்போது ஆன்மீகவாதியாகிய பிறகு அவர் இயக்குனர்களின் கதையை ஒழுங்காக கேட்பதுடன் அவர்களின் கருத்துகளையும் மதிக்கிறாராம்.

அடடே வம்பு நடிகரா இவர் இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு சாந்தமாகிவிட்டாரே என்று கோலிவுட்டில் வியக்கிறார்களாம்.

 

கோச்சடையான் பாக்ஸ் ஆபீஸ்... 12 நாளில் ரூ 85 கோடி தியேட்டர் வசூல்!

சென்னை: கோச்சடையான் படத்தின் தியேட்டர் வசூல் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்தப் படம் வெளியான 12 நாட்களில் ரூ 85 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

ரஜினி 3 வேடங்களில் தோன்றிய கோச்சடையான், அவரது நேரடிப் படமல்ல. அவரது உடல் அசைவுகளைப் படமாக்கி, அனிமேஷனில் பதிவு செய்து எடுக்கப்பட்ட முதல் இந்தியப் படம்.

கோச்சடையான் பாக்ஸ் ஆபீஸ்... 12 நாளில் ரூ 85 கோடி தியேட்டர் வசூல்!

இந்தப் படம் குறித்து ஏராளமான எதிர்மறைச் செய்திகள் மீடியாவை ஆக்கிரமித்திருந்தன. பொம்மைப் படம் என்ற கிண்டல்கள் இன்றுவரை ஓயவில்லை.

ஆனாலும் படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பொதுவான சினிமா விரும்பிகளும் படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக ரஜினியின் குரல், ரஹ்மான் இசை, கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதை இந்தப் படத்தை ரஜினியின் நேரடிப் படத்துக்கு இணையாக மாற்றிவிட்டது.

வசூலைப் பொருத்தவரை, இந்த மூன்றாவது வாரத்திலும் தமிழகத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது கோச்சடையான்.

தெலுங்கிலும் பரவாயில்லை எனும் அளவுக்கு இந்த மூன்றாவது வார வசூல் அமைந்துள்ளது. இந்திப் பதிப்பு மட்டும் சரியாகப் போகவில்லை என தயாரிப்பாளரே ஒப்புக் கொண்டது நினைவிருக்கலாம்.

கடந்த மே 23-ம் தேதி வெளியான இந்தப் படம், 12 நாட்களில் திரையரங்குகள் மூலம் மட்டுமே ரூ 85 கோடியைக் குவித்துள்ளது. மற்ற மொழி வருவாய், தொலைக்காட்சி உரிமைகள் மூலம் வந்த வருவாய் அனைத்தும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 145 கோடியை இந்தப் படம் ஈட்டியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 125 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திப் படத்துக்காக ஹாலிவுட் படத்தைத் தவிர்த்த ஏ ஆர் ரஹ்மான்!

விரைவில் வெளியாகும் லேகர் ஹம் தீவானா தில் என்ற இந்திப் படத்துக்காக, தனக்கு வந்த ஒரு ஹாலிவுட் வாய்ப்பையே மறுத்துவிட்டாராம் ஏ ஆர் ரஹ்மான்.

ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் லேகர் ஹம் தீவானா தில் (ஹம் கிஸிஸே கம் நஹி படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலின் முதல் வரி).

இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை ஆரிப் அலி இயக்குகிறார். அர்மான் ஜெய்ன், தீக்ஷா சேத் நடிக்கிறார்கள்.

இந்திப் படத்துக்காக ஹாலிவுட் படத்தைத் தவிர்த்த ஏ ஆர் ரஹ்மான்!

இந்தப் படம் வரும் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன் ஜூன் 12-ல் படத்தின் இசை வெளியாகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, தனக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பை மறுத்துவிட்டாராம் ரஹ்மான். ஆனால் ஹாலிவுட்காரர்களோ, 'நீங்க வந்தா மட்டும் போதும்..' என ரஹ்மானுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

ரஹ்மான் தற்போது இந்தி மற்றும் தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

லிங்கா.. அடுத்த ஷெட்யூலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்! - சோனாக்ஷி

ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் அடுத்த ஷெட்யூலில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் படம் கோச்சடையான். இதில் அவருக்கு சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, லாரன் இர்வின் என மூன்று ஜோடிகள்.

நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முதல் ஷெட்யூல் முடியப் போகிறது.

லிங்கா.. அடுத்த ஷெட்யூலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்! - சோனாக்ஷி

படத்தில் நடிக்கும் சோனாக்ஷி சின்ஹா, முதல் கட்டப் படப்பிடிப்பில் ஒரு வாரம் கலந்து கொண்டார். ரஜினியுடன் அவர் நடிக்கும் காதல் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட்டது. பின்னர் அவர் மும்பை கிளம்பிவிட்டார்.

ஆனால் அப்படிக் கிளம்பியவர், தொடர்ந்து லிங்கா பற்றியும் ரஜினியுடன் தான் நடித்த அனுபவம் குறித்தும் புகழ்ந்து பேசி வருகிறார்.

அவர் கூறுகையில், "ரஜினி சார் ரொம்ப உயர்வான மனிதர். எனக்கு வசதியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். 1940-ல் நடப்பது போல வரும் காட்சிகளில்தான் நான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். மிக சுவாரஸ்யமான காட்சிகள். ரொம்ப அனுபவித்து நடித்தேன். இந்தப் படத்தில் நடிப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.

பொதுவாகவே, தென் இந்தியப் படங்கள் மிகவும் கற்பனை வளம் மிக்கவையாக உருவாகின்றன. ரஜினி சார் எனக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் மேடை, எனது தென்னிந்திய திரைப் பயணத்தை வெற்றிகரமாக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

அடுத்து சூர்யா, மகேஷ் பாபு போன்ற ஹீரோக்களுடனும் நடிப்பேன் என நம்புகிறேன். ஷங்கர் போன்ற இயக்குநர்கள் படங்களில் இடம்பெற வேண்டும். இப்போதே அவரிடம் அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்," என்றார்.

 

கவுதம் மேனன் படம் கைவிடப்படவில்லை! - சிம்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனன் - சிம்பு இணைந்து சட்டென்று மாறுது வானிலை என்ற தலைப்பில் படம் தொடங்கினர். ஆனால் அந்தத் தலைப்பு ஏற்கெனவே வேறு ஒருவர் பதிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது.

கவுதம் மேனன் படம் கைவிடப்படவில்லை! - சிம்பு

ஆனாலும் படத்துக்கான ஷூட்டிங் சில தினங்கள் நடந்தது. பின்னர் அதுபற்றி எந்த செய்தியும் இல்லை. கவுதம் மேனன் அடுத்து அஜீத்தின் படத்தை இயக்கப் போய்விட்டார்.

இதனால் அந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை மறுத்துள்ளார் சிம்பு. "இந்தப் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அஜீத் படத்தை முடித்துவிட்டு கவுதம் மேனன் வந்ததும் எனது படம் தொடங்கிவிடும்," என்று கூறியுள்ளார் சிம்பு.

 

உயர்ந்த ஹீரோவை பின்தொடரும் வாரிசு நடிகை: கடுப்பில் இயக்குனர்

சென்னை: வாரிசு நடிகை ஐ ஆம் ரெட் மேன் நடிகர் செல்லும் இடமெல்லாம் உடன் செல்கிறாராம்.

வாரிசு நடிகை ஒருவர் கோலிவுட்டில் நுழைந்த கையோடு ஐ ஆம் ரெட் மேன் நடிகருடன் கிசுகிசுக்கப்படுகிறார். இது குறித்து நடிகையிடம் கேட்டால் இந்த கிசுகிசுக்களை கேட்டு போரடித்துவிட்டது. எனக்கும், அந்த நடிகருக்கும் இடையே ஒன்றும் இல்லை என்கிறார்.

இந்நிலையில் ஐ ஆம் ரெட் மேன் நடிகர் நடிக்கும் பிரார்த்தனை படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நடிகை சென்றுவிடுகிறாராம். அங்கு அவர் கேரவனுக்குள் இருந்துகொள்ள ஷாட் முடிந்த கையோடு நடிகரும் கேரவனுக்குள் புகுந்துவிடுகிறாராம்.

ஷாட்டை ரெடியாக்கிவிட்டு கேரவனுக்குள் நடிகையுடன் இருக்கும் ரெட் மேனை அழைக்க உதவி இயக்குனர்கள் தயங்குகிறார்களாம். பரபரவென படப்பிடிப்பை நடத்தி முடிப்பதற்கு பெயர் போன இயக்குனர் நடிகையால் படப்பிடிப்பு தாமதமாவதை பார்த்து கடுப்பில் உள்ளாராம்.