ரஜினிக்கு ஜோடி ஆகிறார் த்ரிஷா...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினிக்கு ஜோடி ஆகிறார் த்ரிஷா…

1/11/2011 12:58:16 PM

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் தி வாரியர் தலைப்பு ஹரா என்று மாற்றப்பட்டுள்ளது. தன் மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இதனால், சுல்தான் என்கிற ஹராவின் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன.

ரஜினிக்கு ஜோடி த்ரிஷா

சவுந்தர்யா ரஜினி தயாரிக்கும் அனிமேஷன் படத்தில் ரஜினி நடிக்கும் நேரடி காட்சிகளை கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது. சில காட்சிகளில் நடிகை நடிக்க த்ரிஷாவை கேட்டுள்ளனர். டி.ராஜேந்தர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.


Source: Dinakaran
 

20 படமாவது நடிப்பேனா?கார்த்திகா ஆதங்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

20 படமாவது நடிப்பேனா? கார்த்திகா ஆதங்கம்

1/11/2011 12:18:29 PM

ராதாவின் மகள் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இயக்கும் 'கோ’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவர் கூறியது: எனது அம்மா பிரபல நடிகையாக இருந்தவர். நான் சினிமா வாசனையே படாமல் மும்பையில் வளர்ந்தேன். மேனேஜ்மென்ட் டிகிரி முடிப்பதில்தான் கவனமாக இருந்தேன். திடீரென்று நடிக்க வந்துவிட்டதால் படிப்பெல்லாம் அப்படியே நின்றுவிட்டது. நடிப்பில் முழு கவனம் செலுத்துகிறேன். 'கோÕ படத்தில் கே.வி.ஆனந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. துப்பறியும் பத்திரிகை நிருபர் ரேணுகா என்ற பாத்திரத்தில் நடிக்கிறேன். போட்டோகிராபராக ஜீவா நடிக்கிறார். இதன் பாடல் காட்சி ஒன்று நார்வேயில் படமானது.

'ஸ்லம்டாக் மில்லியனர்’ பட இயக்குனர் டேனி பாயல் தனது படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் என தகவல் வருகிறது. அது வெறும் புரளிதான். மலையாளத்தில் நான் நடித்த 'மகரமஞ்சு’ படத்தை பார்த்த டேனி பாயல், எனது நடிப்பை பாராட்டியதாக இயக்குனர் சந்தோஷ் சிவன் என்னிடம் தெரிவித்தார். எனது புதிய படங்கள் பற்றிய முடிவை அம்மாவிடமே விட்டிருக்கிறேன். அவர் 200 படங்கள் நடித்திருக்கிறார். இப்போதுள்ள போட்டியில் நான் 20 படம் கூட நடிப்பேனா என்பது தெரியாது. எனவே அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்.


Source: Dinakaran
 

தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது டைரக்டருடன் ஷோபனா காதலா?வெண்ணிற ஆடை மூர்த்தி பேட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது டைரக்டருடன் ஷோபனா காதலா? வெண்ணிற ஆடை மூர்த்தி பேட்டி

1/11/2011 1:05:14 PM

'நடிகை ஷோபனாவின் திடீர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. அவர் டைரக்டரை காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது' என்று கூறினார் காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. 'ஜெகன்மோகினி', 'சுறா' 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட ஏராளமான படங்கள் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் டி.வி. காமெடி தொடர்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகை ஷோபனா (32). இவர் நேற்று காலை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ஷோபனா தற்கொலை பற்றி அவரது அம்மா வைரம் ராணி கூறும்போது,  வங்கிக்கு போய் செக்கை போட்டுவிட்டு வருவதற்குள் வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டிருக்கிறாள். சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில்தான் குணம் அடைந்தாள். அதனால் சில நாட்கள் ஷூட்டிங் செல்லவில்லை. அவள் தற்கொலை செய்துகொண்டதற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஷோபனா ஒருவரை காதலித்து வந்தார். அந்த காதல் நிறைவேறவில்லை. இதனால் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை'' என்றார்.

காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இன்று அளித்த பேட்டியில் கூறியது:

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் என்பது மட்டுமல்ல.. தெளிவாக தமிழ் பேச தெரிந்தவர் ஷோபனா. நல்ல ஞாபக சக்தி உள்ளவர். எவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தாலும் தடங்கலின்றி பேசுவார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற விஷயம் நேற்று இரவுதான் தெரிந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தொலைக்காட்சியில் 11 வருடம் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன். 9 வருடம் எனது குழுவில் ஷோபனா நடித்திருக்கிறார். சினிமாவிலும் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இன்னும் 2 வருடம் அவர் நடித்திருந்தால் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகையாக உயர்ந்திருப்பார். அதற்குள் அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுத்தது வருத்தம் அளிக்கிறது'' என்றார்.

'உங்கள் குழுவில் உள்ள டைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே?' என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ''அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெண். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது'' என்றார்.
நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Source: Dinakaran
 

காமெடி நடிகை ஷோபனா தற்கொலை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காமெடி நடிகை ஷோபனா தற்கொலை

1/11/2011 10:06:37 AM

காமெடி நடிகை ஷோபனா சென்னையில் அவரது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
சில்லுனு ஒரு காதல், சுறா உட்பட பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி வேடத்தில் நடித்தவர் நடிகை ஷோபனா (32). இவர் சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியத்தில் எச் பிளாக்கில் தாயார் 'வைரம்' ராணியுடன் வசித்து வந்தார். நேற்று காலை 10.30 மணியளவில் தாயார் ராணி வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். 12 மணிக்கு அவர் வீட்டிற்கு திரும்பி வந்து கதவை வெகுநேரம் தட்டியும், ஷோபனா கதவை திறக்கவில்லை. பயந்து போன ராணி, கதவின் அருகே இருந்த இடைவெளி வழியாக கையை விட்டு கதவை திறந்தார். அப்போது வீட்டின் உத்திரத்தில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் ஷோபனா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஷோபனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தார். ஆனால் சிறிது நேரத்தில் ஷோபனா இறந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஷோபனாவுக்கு திருமணமாகவில்லை. 3 மாதத்துக்கு முன் சிக்குன் குனியா நோய் தாக்கியது. அப்போது வயிற்று வலியும் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து ராணி கொடுத்த புகாரில், வயிற்று வலியால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கல்யாண ஆசையே இல்லாமல் இருந்தார்:

ஷோபனாவின் தாயார் ராணி, வைரம் நாடக சபாவில் நடிகையாக இருந்துள்ளார். அவர் கூறியதாவது:
எங்களது சொந்த ஊர் திருச்சி. கணவர் மாவூர் ஜெயராமன். ஆனந்தி, ஷோபனா என்ற இரண்டு மகள்கள். ஷோபனாதான் இளையவள். அவளுக்கு வந்த செக்கைதான் வங்கியில் போடச் சென்றேன்.
திரும்பி வந்தபோது கதவு உள்பக்கம் சங்கிலியால் மட்டுமே பூட்டியிருந்தது. இதனால் நானே திறந்து விட்டு உள்ளே சென்றபோது அவள் தூக்கில் தொங்கி கொண்டிருந்தாள். என்ன செய்வது என்று நினைப்பதற்குள் துப்பட்டா அறுந்து அவள் கீழே விழுந்தாள். அப்போது உயிர் இருந்தது. போன் செய்து 45 நிமிடத்துக்கு பிறகுதான் ஆம்புலன்ஸ் வந்தது. அதற்குள் இறந்து விட்டாள்.

மூத்த மகள் ஆனந்தி கணவருடன் தி.நகரில் வசிக்கிறார். மருமகன் குருசங்கரும் திரைப்பட இயக்குனர் தான். எனக்காக ஷோபனா திருமணமே வேண்டாம் என்று இருந்தாள். ஷோபனா ஒருவனை காதலித்தார். அவனை திருமணம் செய்யவும் ஏற்பாடு நடந்தது.

ஆனால் சில காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை. அதன் பிறகு திருமணத்தில் ஆசையே இல்லை என்று என்னுடனே இருந்தாள். அவளுக்காக ஆப்பிள் வாங்கி வந்தேன். ஆனால் அவள் இறந்து விட்டாள் என்று கண்ணீர் விட்டார்.

வயிற்று வலிதான் காரணமா?

ஷோபனா 15 வயது முதலே நாடகங்களில் நடித்து வந்துள்ளார். தற்போதும் பல நாடகங்களில் நடித்து வந்துள்ளார். டிவிக்களில் சிரிப்பு நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார். பொங்கலுக்கு வெளிவரவுள்ள இளைஞன், சிறுத்தை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், சுமார் 100 படங்களிலும் அவர் நடித்துள்ளார். உடல் வலிக்காக ஒரு நடிகை தற்கொலை செய்திருக்க மாட்டார். வேறு காரணங்கள் இருக்கலாம். அல்லது சினிமாவில் யாராவது அவரை ஏமாற்றியிருக்கலாம் என்று சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.


Source: Dinakaran
 

படக் குழுவுக்கு மலைவாழ் மக்கள் கண்டிஷன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படக் குழுவுக்கு மலைவாழ் மக்கள் கண்டிஷன்

1/11/2011 12:31:37 PM

'உயிரின் எடை 21 அயிரிÕ படம் பற்றி இயக்குனரும் ஹீரோவுமான இந்திரஜித் கூறியது: 1907ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி மெக்டெகல் என்பவர், மரண தருவாயிலிருந்த 7 பேர்களின் நிலை பற்றி ஆராய்ச்சி செய்தார். அவர்கள் ஒவ்வொருவர் இறந்தபோதும் அவர்களின் ஒரிஜினல் எடையில் 21 கிராம் குறைந்திருந்தது. அந்த எடைதான் உயிரின் எடை என்று அவர் குறிப்பிட்டார். அதைக் குறிக்கும் வகையில் 'உயிரின் எடை 21 அயிரிÕ. ரவுடியிஸம் செய்பவர்கள், உயிர் பயம் இல்லாமல் மோதுகிறார்கள். அவர்களுக்கு உயிரின் அருமையை விளக்கும் கதை.

இதன் ஷூட்டிங் நாகர்கோவில் பேச்சிப்பாறை அணை பின்புறம் உள்ள காட்டுப் பகுதியான மோதிரமலை வன விலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்டது. இங்கு 200 மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். படப்பிடிப்பு குழுவினருடன் அங்கு சென்றதும், அவர்கள் துருவித் துருவி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். பிறகு ஷூட்டிங் நடத்த வந்திருக்கிறோம் என்று தெரிந்து சமாதானம் அடைந்தனர். மேலும் தங்களில் சிலரை நடிக்க வைக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டனர். அதை ஏற்று சிலரை படத்தில் நடிக்க வைத்தோம். மாலை 6 மணிக்கு மேல் அந்த கிராமத்தில் யாரும் தங்கக் கூடாது என்பதால் நாங்கள் வாடகை வண்டியை எடுத்துக்கொண்டு நாகர்கோவில் வந்து தங்கினோம். மறுபடியும் காலையில் ஷூட்டிங்கிற்கு புறப்படுவோம். இதில் ஹீரோயினாக புதுமுகம் வினிதா நடிக்கிறார். இப்படத்தின் ரிலீசுக்கு முன் மோதிரமலை வாழ்மக்களுக்கு அப்பகுதியில் பிரத்யேகமாக தியேட்டர் வாடகைக்கு எடுத்து படத்தை திரையிட உள்ளோம்.


Source: Dinakaran
 

கிசு கிசு -இசை சொன்னதை கேட்ட இயக்குனர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

இசை சொன்னதை கேட்ட இயக்குனர்

1/11/2011 12:29:06 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

மவுன ராக நடிகரு மறுபடியும் நடிக்க வந்ததும் அவரை ஹீரோவா போட்டு படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியாம இருந்த தயாரிப்புங்க குஷியானாங்க. எப்படியாவது நடிகரோட ரெண்டு படம் வந்ததுன்னா, அதைக்காட்டி பெட்டில தூங்குற தங்களோட படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு கணக்கு போட்டாங்க… போட்டாங்க… ரிலீசான படங்கள் சரியா போகல. திரும்ப நடிகருக்கும் வாய்ப்பு வரல. இதனால கணக்கு போட்டவங்க கவலைய¤ல இருக்காங்களாம்… இருக்காங்களாம்…
 
திருநங்கைகளை பற்றிய நர்த்தகமான படத்துக்கு சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. இதை கேள்விப்பட்டதும் திருநங்கைகள் அமைப்பை சேர்ந்தவங்க உர்ராயிட்டாங்களாம்… உர்ராயிட்டாங்களாம்… இது பற்றி சென்சார் போர்டு அதிகாரியிடம் கேட்க, 10 திருநங்கைங்க கூட்டமா போனாங்களாம். உஷாரான அதிகாரிங்க, உதவியாளரை அனுப்பி 'அதிகாரி வெளியே போயிருக்காருÕன்னு  சொல்லி வந்தவங்களை திருப்பி அனுப்பிட்டாங்களாம். ஆனா திருநங்கைகளோ 'மறுபடியும் வருவோம்Õன்னு எச்சரிக்கை பண்ணியிருக்காங்களாம்… பண்ணியிருக்காங்களாம்…

செல்வமான இயக்கமும், இளைய இசையும் திரும்ப சேர்ந்து படம் பண்றாங்க.. பண்றாங்க.. அந்த படத்துக்கு ஏற்கனவே இன்ஷியல் இசை போட்ட பாடல் ஒண்ணு பெட்டியில இருக்காம்… இருக்காம்… அதை யூஸ் பண்ணலாம்னு இயக்கம் நினைச்சாராம். ஆனா, அது வேணாம்னு இசை சொன்னதால இயக்கமும் சரின்னு சொல்லிட்டாராம்… சொல்லிட்டாராம்…


Source: Dinakaran
 

வாகை சூட வா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வாகை சூட வா

1/11/2011 12:46:06 PM

தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை வெற்றி பாதையாக மாற்றிய இயக்குநர் சற்குணம்(களவாணி), தற்போது மீண்டும் விமலின் படத்தை இயக்க உள்ளார். படத்திற்கு 'வாகை சூட வாÕ எனப் பெயரிட்டுள்ளனர். தன்னுடைய முதல் படத்தை போல இந்த படத்திலும் கிராமம் வாசம் கலந்த காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என சற்குணம் தெரிவித்துள்ளார். மேலும் சமீபகலமாக தமிழ் சினிமாவில் 1960 முதல் 1985 வரை ஏற்படும் கதை சூழல்களை மையமாக கொண்டு படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த படமும் 1960களில் நடக்கும் கதையாம், படத்தில் 60களில் வாழ்ந்த இளைஞன்போல் நடிக்கிறார் ஹீரோ விமல்.


Source: Dinakaran