விஜய் டிவி வசமான 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'...

Star Vijay Bagged Annakodiyum Kodiveeranum Tv Rights

பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

புதிய படங்களின் சேட்டிலைட் உரிமையை யார் கைப்பற்றுவது என்பதில் சேனல்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டியே நிலவுகிறது.

சன், கலைஞர், ஜெயா,ஜீ தமிழ், வேந்தர், விஜய் ஆகிய சேனல்கள் பலத்த போட்டிக்கிடையே படங்களை கைப்பற்றும். இதற்காகவே சன் டிவி சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை விநியோகம் செய்ததோடு சேட்டிலைட் உரிமையை எளிதாக கைப்பற்றியது.

ஆட்சி மாறிய உடன் ஜெயா டிவியின் வசம் பெரும்பாலான படங்கள் சாய்ந்தன. சமீபத்தில் ரிலீசான விஸ்வரூபம் பல கட்டங்களைத் தாண்டி விஜய் டிவி வசமானது.

இந்த நிலையில் பாராதிராஜா இயக்கியுள்ள அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

சன், விஜய்,ஜீ ஆகியவற்றிர்கிடையே ஏற்பட்ட போட்டியில் கடைசியில் விஜய் டிவி வென்றுள்ளது.

 

லட்சுமி ராயைப் பற்றி இனி எதுவும் எழுதக் கூடாது!- குமுதத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

Hc Orders Magazine Not Publish News On Lakshmi Rai

நடிகை லட்சுமி ராயைப் பற்றி இனி எதுவும் எழுதக் கூடாது என்று குமுதம் வாரப் பத்திரிகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழின் முன்னணி நடிகையான லட்சுமி ராய் சொன்னதாகக் கூறி, குமுதம் ஒரு பேட்டியை வெளியிட்டிருந்தது. அதில் ஒரே அறையில் ஹீரோவுடன் ஹீரோயின் தங்கினால் தவறில்லை என்று லட்சுமி ராய் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ஆட்சேபித்த லட்சுமி ராய், தான் சொல்லாத ஒன்றை குமுதம் தவறாக வெளிட்டிருந்ததாக குற்றம்சாட்டினார்.

இதற்காக அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இனி தன்னைப் பற்றி அந்தப் பத்திரிகை எதுவும் எழுதக் கூடாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, "குமுதம் பத்திரிகை லடசுமி ராயைப் பற்றிய செய்திகளை வெளியிட இடைக்காலத் தடை விதிப்பதாக" தீர்ப்பு வழங்கினார்.

 

அம்பிகா - ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலாகிறது!

Ambika Radha S Ars Studio Will Be Converted Star Hotel

சென்னை: நடிகை அம்பிகா-ராதாவுக்கு சொந்தமான ஏ.ஆர்.எஸ். கார்டன் ஸ்டூடியோ, நட்சத்திர ஓட்டலாக மாறுகிறது.

சென்னையின் பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்று ஏஆர்எஸ். அம்பிகா, ராதா, அவர்களின் அம்மா சரஸ்வதி பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ.

சென்னை வளசரவாக்கத்தில் ஓரளவு பெரிய நிலப்பரப்பில் இந்த ஸ்டுடியோ உள்ளது. தமிழின் பல முக்கிய படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிக முக்கிய இடமாகத் திகழ்ந்தது ஏஆர்எஸ்.

சென்னையில் பட ஸ்டுடியோக்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தபோதும், ஏவி.எம், பிரசாத் ஆகிய இரு ஸ்டுடியோக்கள் மட்டும் மூடப்படாமல் உள்ளன. இந்த லிஸ்டில் ஏஆர்எஸ் ஸ்டுடியோவையும் சொல்லலாம்.

1984-ம் வருடம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. ஏராளமான படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. ஆனால் இப்போது படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு மாறிவிட்டதால், டெலிவிஷன் தொடர்கள்தான் இந்த ஸ்டுடியோவை இயங்க வைத்துக் கொண்டிருந்தன.

எனவே ஏ.ஆர்.எஸ். கார்டனில் உள்ள படப்பிடிப்பு நிலையங்களை இடித்து விட்டு, அந்த இடத்தில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல் கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. நடிகை ராதாவின் கணவருக்கு சொந்தமாக மும்பையில் ஏற்கனவே ஒரு நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. நட்சத்திர ஓட்டல் தொழிலில் அவருக்கு அனுபவம் இருப்பதால், ஏ.ஆர்.எஸ். கார்டனையும் நட்சத்திர ஓட்டலாக மாற்ற ராதா முடிவு செய்துள்ளாராம்.

 

பவர் ஸ்டார் சீனிவாசனின் பத்தரை கெட்-அப்!

Power Star Ten Half Getups

வரவிருக்கும் ஒரு படத்தில் பத்தரை கெட்டப்பில் நடிக்கிறாராம் சித்தா டாக்டர் சீனிவாசன்.

கிட்டத்தட்ட தன் பெயரையே பவர் ஸ்டார் என மாற்றிக் கொண்டுவிட்ட சீனிவாசன் இப்போது ஒரு டஜன் வெளிப்படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர, சொந்தத் தயாரிப்பாகவே 10 படங்களை வைத்துள்ளார். இந்தப் படங்கள் வருமோ வராதோ... ஆனால் வெளிப்படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலும் இவர் ஐட்டாம் பாட்டுக்கோ, காமெடி வேஷத்திலோதான் தோன்றுகிறார்.

அப்படி ஒரு படம்தான் 'சும்மா நச்சுன்னு இருக்கு'.

இந்தப் படத்தை ஏ வெங்கடேஷ் இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டறை படம் இயக்கிய சினேகா பிரிட்டோவின் பெற்றோர் விமலா ராணி மற்றும் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் டாக்டர் சீனிவாசன் பத்தரை கெட்டப்பில் நடிக்கிறாராம்.

அதென்ன பத்தரை கெட்டப்?

"மொத்தம் பத்து வேஷத்துல நடிக்கிறேன். ஒரு வேஷத்துல குழந்தையா தோன்றுகிறேன். அதாவது என்னுடைய தலை, குழந்தை உடம்பு. அதான் பத்தரை கெட்டப்", என்றார் சீனிவாசன்.

அடிக்கடி சொல்லாதீங்க, கமல் ரசிகர்கள் கோச்சுக்கப் போறாங்க!!

 

'லட்டு': பேசித் தீத்துக்கங்க - பாக்யராஜ், சந்தானத்துக்கு நீதிமன்றம் அட்வைஸ்!

Hc Advises Bagyaraj Santhanam Settle

சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதைத் திருட்டு விவகார வழக்கில் இரு தரப்பும் பேசி சமரச தீர்வு காணவேண்டும், என்று உயர்நீ்திமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சந்தானம், ‘பவர் ஸ்டார்' சீனிவாசன், நடிகை விசாகா ஆகியோர் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா'. இந்த படத்தின் கதை அப்படியே பாக்யராஜின் புகழ்பெற்ற படமான இன்று போய் நாளை வா படத்தின் கதையாகும். தன்னுடைய அனுமதி இல்லாமல் கதை கருவை திருடி படமெடுத்துவிட்டார்கள் என்று பாக்யராஜ் புகார் கூறினார்.

இதற்குக் காரணமான சந்தானம், ராமநாராயணன், புஷ்பா கந்தசாமி ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாக்யராஜ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் நடவடிக்கை கோரி மனு செய்தார் பாக்யராஜ்.

நீதிபதி கிருபாகரன் தலைமையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி, பாக்யராஜ் மற்றும் சந்தானம் ஆகிய இருதரப்பும் சமரச தீர்வு மையத்தை அணுகி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிட்டார். அப்படி சமரசமாகாவிட்டால் மார்ச் 6-ம் தேதி வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.

 

பாலிவுட் படங்களில் பிஸியாகும் தமன்னா... அடுத்து அக்ஷய் குமாருடன் ஜோடி போடுகிறார்!

Tamanna Signs Her Next Big Project

தமிழில் கொடி கட்டிப் பறந்து, ஒரு காதல் விவகாரத்தால் தெலுங்கு தேசத்துக்குப் போன தமன்னா, இப்போது இந்தியில் ஏக பிஸி.

தமன்னாவின் முதல் இந்திப் படம் ஹிம்மத்வாலா. இதில் அவருக்கு ஜோடி அஜய் தேவ்கன். சஜித் கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் தமன்னா கங்னம் ஸ்டைலில் நடனமாடி அசத்தியுள்ளார். கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளே மிரளும் அளவுக்கு தாராளம் காட்டியுள்ளாராம்.

இதன் விளைவு, தமன்னாவைத் தேடி மிகப் பெரிய அடுத்த வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி அக்ஷய் குமார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை டிப்ஸ் நிறுவனத்தின் ரமேஷ் தௌரானி தயாரிக்க, சஜித் - பர்ஹாத் இரட்டையர்கள் நடிக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் படம் தொடங்குகிறது.

இப்போதைக்கு தமன்னா தமிழில் ஒரே ஒரு படத்தில்தான் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடி அஜீத்!

இங்கிருந்து போன அசின் உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடி வரும் நிலையில், போன வேகத்தில் அடுத்தடுத்து இரு பெரிய படங்களில் தமன்னா நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் பிறந்தது வட இந்தியாவில் என்பதால் இது எளிதில் சாத்தியமாகியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

 

'சிஎம்'-ஐ இயக்கும் ஆக்ஷன் கிங்!

Arjun Direct Cm

கொஞ்ச நாளாக தலைகாட்டாமலிருந்த இயக்குநர் அர்ஜூன், ஒரு இடைவெளிக்குப் பிறகு வெளியில் வருகிறார்... தனது பத்தாவது படத்தை இயக்குகிறார்!

நடிகராக மட்டுமல்ல... ஒரு இயக்குநராகவும் வெற்றி பெற்றவர் ஆக்ஷன் கிங் எனப்படும் அர்ஜூன். தேசபக்திப் படங்கள், காதல், குடும்பப் படங்கள் என விதவிதமாக ஆக்ஷன் கலந்து கொடுத்தவர்.

தனது கேரியர் டல்லடித்த நேரத்தில், அதை சரிசெய்ய 1992-ல் இவர் இயக்கிய முதல் படம் சேவகன். அதில் இவர்தான் ஹீரோ. படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதாப் படத்தை இயக்கினார். பரவாயில்லை எனும் அளவுக்குப் போனது.

1994-ல் இவர் இயக்கிய ஜெய் ஹிந்த் பெரும் வெற்றி பெற்றது. இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். 2006-ல் மதராஸி எனும் படத்தை தமிழ் - தெலுங்கில் இயக்கினார்.

அதன் பிறகு படங்கள் இயக்கவில்லை.

இப்போது ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக ஒரு படம் இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சிஎம் - காமன் மேன் எனத் தலைப்பு வைத்துள்ளார்.

இந்த ஆண்டு அர்ஜூன் நடித்த படங்கள் கடல் மற்றும் வனயுத்தம். வணிக ரீதியாக இவை சரியாகப் போகவில்லை. இப்போது மூன்றுபேர் மூன்று காதல் படத்தில் மூன்று ஹீரோக்களுள் ஒருவராக நடித்து வருகிறார்.

 

மணிவண்ணன் பட நாயகி கோமல் சர்மாவுடன் ஒரு சந்திப்பு...

A Meet With Manivannan S Heroine Komal Sharma

ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டில் 5வது இடம், சீனியர் ஸ்குவாஷ் தர வரிசையில் தேசிய அளவில் முதல் 8 இடங்களுக்குள், சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டாவது இடம்... என்று அசத்திய விளையாட்டு வீராங்கனை கோமல் ஷர்மா, இப்போது கோடம்பாக்கத்தையும் ஒரு கை பார்க்க களமிறங்கியுள்ளார்.

இயக்குனர் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ - அமைதிப்படை 2 படத்தில் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத் ஜுப்லி ஹில்ஸில் நடிகர் சுமனுக்கு மகளாக அனு என்கிற கதாபாத்திரத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தவரை படப்பிடிப்பின் இடைவேளையில் சந்தித்தோம்.

ஸ்போர்ட்ஸ் வுமனாக இருந்தவர் எப்படி நடிக்க வந்தீர்கள்... நாகராஜ சோழனில் உங்களது கதாபாத்திரம் என்ன..?

விளையாட்டைப் போலவே நடிப்பிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அதான் நடிக்க வந்துவிட்டேன்.

நாகராஜசோழனில் அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக நடிக்கிறேன். வீட்டில் அப்பா அம்மாவுக்கு மிகவும் அடங்கிய பெண்ணாக நடிக்கும் அதே வேளையில் அநீதி கண்டு பொங்கும் வீரத் தமிழ்ப் பெண்ணாக என் பாத்திரத்தை உருவாக்கியுள்ளனர்... படத்தைப் பார்க்கும் சகோதரிகள் தங்களையே கண்ணாடியில் பார்ப்பது போல உணருவார்கள்...

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம், இதில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் தமிழ்.....எனது தாய்மாமனாக இயக்குனர்- நடிகர் சீமான் நடித்திருக்கிறார்...

எனக்கு அவரைச் சிறந்த இயக்குனராகத்தான் தெரியும். ஆனால் படப்பிடிப்பின் போதுதான் தெரிந்தது அவர் அற்புதமான நடிகரும் கூட என்பது... அவருடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொண்டேன்...

இயக்குனர் மணிவண்ணனைப் பற்றி...

அவரை திறமைகளின் சிகரம் எனலாம்...அவரது 50 வது படம் , இன்னும் முதல் படத்தை இயக்குவதைப் போல அவ்வளவு சிரத்தை.. அவ்வளவு சுறுசுறுப்பு..எல்லாவற்றுக்கும் மேல் ஜனரஞ்சகமாக யோசிக்கும் ஆற்றல் அபாரம்... செட்டுக்கு வெளியே அவர் மிகவும் இயல்பான ஜாலியான மனிதர்... செட்டுக்குள் வந்துவிட்டாலோ செம ஸ்டிரிக்ட்... அவரது செட் மிகவும் டிசிப்ளின் ஆக இருக்கும்... பெர்பெக்‌ஷன் வரும் வரை விடமாட்டார்... அதே நேரம் அவரவருக்கு என்ன கதாபாத்திரம் என்பதை அருமையாக விளக்கிச் சொல்லி அவர்களை அந்த கதாபாத்திரமாகவே மாற்றிவிடுவார்... திறமைசாலிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக வெளிக் கொணர்வதில் வாங்குவதில் அவருக்கு நிகர் அவரே..

படப்பிடிப்பின் போது ஏதாவது சுவையான அனுபவம்...

நான் சைவம்.... அசைவ உணவுகளைக் கண்டாலே அலர்ஜி... இதை அறிந்து கொண்ட இயக்குனர் மணிவண்ணன் படப்பிடிப்பின் போது அசைவ உணவுகள் வரும் இடங்களில் அதன் வாசனை என்னை அணுகாதவாறு பெர்பியூம் அடித்து விடுவார்... நான் ஒரு சாதாரண நடிகைதான். இருந்தாலும் அந்த வாசனையால் நான் சிறப்பாக நடிக்க முடியாமல் போய்விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவ்வாறு அவர் சிரத்தை எடுத்துக் கொண்டதை நிஜமாகவே மறக்க முடியாது...

நாகராஜ சோழன் ஸ்பெஷல் என்ன...

இயக்குனர் மணிவண்ணனின் படங்களை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.. அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லலாம்... அவரது அன்றைய டயலாக்குகள் இன்றும் இளமையாக இருக்கின்றன.. இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்திப் போகின்றன...

இந்தப் படத்தில் இதுவரை இருக்கும் அரசியலை அவருக்கு உரித்தான நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்... யாரையும் புண்படுத்தாமலும் யாரையும் சுட்டிக்காட்டாமலும் பொதுவான அரசியலைச் சொல்லியிருக்கிறார்.. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு முழு நீளப்பொழுது போக்கோடு அருமையான கருத்தையும் சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து சத்யராஜுடன் இரண்டு படங்கள்...?

முதலில் சத்யராஜ் சாரைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன்... ஒரு ஜூனியர் என்றும் பார்க்காமல் சகஜமாக அவர் என்னை நடத்தினார்... மேலும் அவரைப் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் போது தூர இருந்தே நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது. மற்றபடி அவரது திறமையைப் பற்றியோ டைமிங்கினைப் பற்றியோ நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை... அவரது 200 வது படமான நாகராஜ சோழன் படத்தில் அவருடன் நடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இரண்டு வருடத்தில் அவருடன் இரண்டு படங்கள் என்பது ஒரு தற்செயலான நிகழ்வுதான்.

இரண்டு ஆண்டுகளில் இரண்டே படங்கள்... ஏன் அதிகமாக ஒப்புக் கொள்ளவில்லை?

நான் நல்ல கதைகளில், கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்கிற முடிவில் இருக்கிறேன். எவ்வளவு பெரிய இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் எனபது முக்கியமில்லை... எனது கதாபாத்திரம் எந்த அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.. அது எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறதா என்பதைப் பொறுத்தே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.

சவாலான கதாபாத்திர அமைப்புடன் கூடிய முழு நீளக் கதாநாயகியாக நடிக்கும் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது... பார்க்கலாம்.

விளையாட்டு வீராங்கனை - நடிகை... என்ன வித்தியாசத்தை உணர்கிறார்கள்?

விளையாட்டு என்பது அதிமாக உடலுழைப்பைச் சார்ந்திருக்கிறது... மனதளவில் ஜெயிக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டும் போதுமானாது...

நடிப்பு என்பது முழுக்க முழுக்க வெளிக்காட்டும் பாவங்களைச் சார்ந்து இருக்கிறது... உடல்மொழியுடன் சிறந்த முகபாவனைகளையும் வெளிப்படுத்த வேண்டும்... மேலும் நடிக்கும் போது நம்மால் பலதரப்பட்ட கதாபாத்திரங்களாக வாழமுடியும்... அதற்கு நடிப்பு மட்டுமே வாய்ப்பு அளிக்கிறது...

விளையாட்டு வீரராக இருப்பதால் நமது உடல் ஆரோக்கியத்தையும் உடலமைப்பையும் சரியாக வைத்துக் கொள்ள முடிகிறது!

 

கடல் தெலுங்கில் ரூ 98 கோடி குவித்துவிட்டதாம்... - ஒரு சூப்பர் கப்சா!!

A Mega Lie On Kadali Box Office Collection

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படம் தமிழில் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. அந்தப் படத்தில் ரூ 17 கோடி நஷ்டம் என்று கூறி, மன்னன் பிலிம்ஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது.

இந்தப் புகாரால், மிரண்டு போன மணிரத்னம் தன் வீட்டுக்கு போலீஸ் காவலை பலப்படுத்துமாறு கோரியுள்ளார்.

இந்த நிலையில் தெலுங்கில் கடலி என்ற பெயரில் வெளியான இதே படம் வசூலைக் குவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் 27 நாட்களில் 98 கோடியை வசூலித்துள்ளதாக தெலுங்கு இணையதளங்களில் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம் தெலுங்கின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களான நான் ஈ ரூ 120 கோடியும், மகதீரா ரூ 90 கோடியும் குவித்துள்ளன. இந்த சாதனையை இதுவரை வேறு படங்கள் முறியடிக்கவில்லை என்பதுதான் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.

தமிழிலிருந்து தெலுங்குக்கு டப் செய்யப்பட்ட படமான ரோபோ ரூ 71 கோடியை ஈட்டியது டப்பிங் படங்களில் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் இவை எல்லாமே வெளியாகி கிட்டத்தட்ட 100 நாட்களில் நிகழ்ந்த வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடலி என்ற பெயரில் வெளியான ஒரு டப்பிங் படம் 27 நாட்களில் 98 கோடியை வசூலித்துவிட்டதாக செய்தி வெளியிட்டிருக்கின்றன சில இணையதளங்கள். கடலி தெலுங்கில் படு தோல்வியைத் தழுவியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த காமெடி அரங்கேறியிருப்பது கவனிக்கத்தக்கது.

பாத்துப்பா.. இப்படிப்பட்ட அதிர்ச்சியையெல்லாம் மணிரத்னம் தாங்கமாட்டார் என கமெண்ட் அடிக்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்!

 

நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Delhi Ganesh Suffers Heart Attack

சென்னை: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

நாடக நடிகராக இருந்து திரைப்பட நடிகராக உயர்ந்தவர் டெல்லி கணேஷ். தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த அட்டகாசமான நடிகர். ஆரம்பத்தில் நாயகனாக நடித்து வந்த இவர் பின்னர் குணச்சித்திரம், வில்லத்தனம், காமெடி என கலவையாக மாறி அதகளம் செய்தவர்.

எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக பரிமளிக்கும் அபாரமான நடிகர். இவர் குடும்பத்துடன் ஆழ்வார்ப்பேட்டையில் வசித்து வருகிறார்.

62 வயதான இவருக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை ஸ்திரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விஜய்க்கு இன்னும் ஒரு நாயகி... கடுப்பில் அமலா!

Ragini Nandwani Is The Second Heroine In Thalaivaa

இயக்குநர் விஜய் - நடிகர் விஜய் கை கைகோர்த்துள்ள தலைவா படத்தில் மேலும் ஒரு நாயகியை புதிதாக சேர்த்துள்ளனர். அவர் ராகினி நந்வானி. டேராடூன் டைரி படத்திலும் சில டிவி தொடர்களிலும் நடித்தவர். இந்த திடீர் சேர்க்கையால் படத்தின் முதல் நாயகி அமலா பால் டென்ஷனாகியுள்ளாராம்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் தலைவா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் நடந்து வருகிறது.

விஜய்யுடன் அமலாபால், பொன்வண்ணன் உள்பட பலர் முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்தக் கதையில் ஒரே ஒரு ஹீரோயின்தானாம். ஆனால் கதையில் லேசான மாற்றம் செய்து, மும்பை செல்லும் விஜய் அங்கும் ஒரு பெண்ணை காதலிப்பது போல மாற்றியுள்ளார்களாம்.

இந்த வேடத்துக்குதான் ராகினி நந்வானி என்ற மும்பை நாயகியை ஒப்பந்தம் செய்துள்ளனர். விஜய்க்குப் பிடித்த நாயகியாக இந்த ராகினி தேர்வாகியுள்ளது, அமலா பாலை டென்ஷனாக்கியுள்ளது. தமது காட்சிகள் குறைக்கப்பட்டு விடுமோ என்பதால் இந்த டென்ஷனாம்!