அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்!

அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்!

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என்ற தலைப்பில் தயாராகும் படத்தில் அருள்நிதி நடிக்கிறார். இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார்.

அருள்நிதி இப்போது தகராறு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு பூர்ணா ஜோடியாக நடிக்கிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ள இந்தப் படத்தை, 'கிளவுட் நைன் மூவிஸ்' தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'இம்சை அரசன் 22-ம் புலிகேசி', 'இரும்புக் கோட்டை முரட்டு சிக்கம்' படங்களை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் அருள்நிதி.

வடிவேலு நடிக்க 'இம்சை அரசன் 22-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் அடுத்த இயக்க முடிவு செய்திருந்தார் சிம்புதேவன். ஆனால், இப்போதைக்கு அந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன் அருள்நிதியை வைத்து இயக்குகிறார். 'ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.

இப்படத்தினை அருள்நிதியின் அப்பாவான மு.க.தமிழரசு தனது மேனகா மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.

 

விஜய், பிரகாஷ்ராஜ் உதவியால் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த இயக்குநர் ரமணா.. குரலை இழந்தார்!

விஜய், பிரகாஷ்ராஜ் உதவியால் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த இயக்குநர் ரமணா.. குரலை இழந்தார்!

இயக்குநர் ரமணாவை நினைவிருக்கிறதா... திருமலை என்ற படத்தின் மூலம் துவண்டு கிடந்த விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியவர் மட்டுமல்ல, சினிமாவில் விஜய் தனக்கென ஒரு ரூட்டைப் பிடித்துப் பயணிக்க காரணமாகவும் அமைந்தவர்.

தொடர்ந்து ஆதி, தனுஷின் சுள்ளான் போன்ற படங்களை இயக்கியவர், குதிரை என்ற படத்தை ஆரம்பித்தார்.

ஆனால் அதன் பிறகு அவரைப் பற்றி தகவலே இல்லாமல் போனது. தமிழ் சினிமாவும் அவரை மறந்தே போனது.

இதோ... மீண்டும் வந்திருக்கிறார் ரமணா. ஆனால் முன்பு போல கணீரென அவரால் பேச முடியவில்லை. காரணம், தொண்டைப் புற்று நோய் தாக்கியதில் கஷ்டப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டவரால், குரலை காப்பாற்ற முடியவில்லை.

புற்று நோய்க்காக தீவிர சிகிச்சைப் பெற்று வந்த இவர், வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தார். தொண்டைக் குழி அருகே ஒரு பெரிய ஓட்டை போடப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இப்போது அவரது வாய்ஸ் பாக்ஸ் அகற்றப்பட்டுள்ளது. பூரண குணம் அடைந்திருக்கிறார். ஆனாலும், முன்புபோல பேச முடியவில்லை.

தொண்டை ஓட்டையை அடைத்துக் கொண்டால் கிகிசுவென அவர் பேசுவது கேட்கிறது.

ஆனால் நம்பிக்கையை மட்டும் அவர் இழக்கவில்லை. அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாகியுள்ளார். இவரது சிகிச்சைக்காக நடிகர் விஜய், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்தான் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

 

'விஜய் சினிமாத்தனம் இல்லாதவர்... தயாரிப்பாளர்களின் நடிகர்' - சந்திரபிரகாஷ் ஜெயின்

விஜய் சினிமாத்தனமில்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர், என்று புகழ்ந்துள்ளார் தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்.

விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா' படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார்.

சத்தியராஜ், சந்தானம், ராகிணி, உதயா, அபிமன்யுசிங், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ், மனோபாலா, சுப்பு, பஞ்சு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

'விஜய் சினிமாத்தனம் இல்லாதவர்... தயாரிப்பாளர்களின் நடிகர்' - சந்திரபிரகாஷ் ஜெயின்

இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் 9-ம் தேதி ‘தலைவா' படம் ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "தலைவா' படம் சிறப்பாக வந்துள்ளது. காதல், காமெடி, அதிரடி ஆக்ஷன் என மெகா பொழுதுபோக்குப் படமாக தலைவா இருக்கும்.

மும்பையில் அதிக செலவில் அரங்குகள் அமைத்து 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சண்டை காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன.

விஜய் சினிமாத்தனம் இல்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர். சிட்னியில் நிறைய பேரை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து சூட்டிங் நடத்தாமல் பணத்தை விரயம் செய்ததற்காக வருத்தப்பட்டார்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி ‘தலைவா' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்," என்றார்.

 

சத்தியம் தொலைக்காட்சியில் சூப்பர் பாஸ்ட் செய்திகள்

சத்தியம் தொலைக்காட்சியில் சூப்பர் பாஸ்ட் செய்திகள்

சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணி முதல் 7.30 வரை சூப்பர் பாஸ்ட் செய்திகள் ஒளிபரப்பாகிறது. பரபரப்பான இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு முக்கியம்,கிடைக்கும் அந்த சில நொடிகளில் நம்மை சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகள், மக்கள் பிரச்சனைகள்,முக்கிய சம்பவங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக நடப்புகள், விளையாட்டு செய்திகள், சினிமா மற்றும் பலவற்றை விறுவிறுப்பான ஒரு செய்தித் தொகுப்பாக தருகிறது சத்தியம் டிவி.

ஒரு நாள் முழுவதும் செய்திகளை பார்க்கத் தவறியவர்களுக்கு "30 நிமிடங்களில் முழுமையான செய்தித்தொகுப்பாக அமைகிறதாம் இந்த சூப்பர் பாஸ்ட் செய்தித் தொகுப்பு.

 

அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?

அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு பறவை என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த பிறகும் கூட இன்னமும் அதன் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.

முதலில் இந்தப் படத்துக்கு வலை என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதனை இயக்குநர் விஷ்ணுவர்தன் மறுத்தார்.

எனவே தொடர்ந்து அஜீத் 53 என்றே இந்தப் படத்தைக் குறிப்பிட்டு வந்தனர் மீடியாவில்.

இதோ அதோ என தலைப்பு சூடும் படலம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் பறவை என அந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னமும் அதனை விஷ்ணுவர்தன் தரப்பு உறுதி செய்யவில்லை.

இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா - டாப்ஸி இன்னொரு ஜோடி. சந்தானமும் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பா விஜய் 5 பாடல்களை எழுதியுள்ளார்.

 

சேனல் யு.எஃப்.எக்ஸ் வழங்கும் ஃபுட் பவுல்

சேனல் யு.எஃப்.எக்ஸ் வழங்கும் ஃபுட் பவுல்

சேனல் யு.எஃப்.எக்ஸ் தொலைக்காட்சி வழங்கும் சமையல் சார்ந்த ஒர் அற்புதமான நிகழ்ச்சி ‘ஃபுட் பவுல்' .

இந்திய கலாச்சாரத்தில் உணவுக்கு முக்கியமான இடம் உண்டு. சர்வதேச அளவில் இந்திய சமையல் முறைகள் தனித்துவம் வாய்ந்தவையாகவே உள்ளது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அப்பகுதிகளின் உணவு முறைகளை கண்டறிந்து பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

சுவையான பாரம்பரிய உணவு வகைகளை வழங்கும் உள்நாட்டு உணவு விடுதிகளில் தொடங்கி பன்னாட்டு நட்சத்திர உணவு விடுதிகள் வரை இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. உணவு குறித்த சூட்சும தகவல்களை வழங்கும் நிகழ்ச்சியாக திகழ்கிறது ஃபுட் பவுல் அல்லது உணவுக் கிண்ணம்.

இந்நிகழ்ச்சியானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 9 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது . இதன் மறு ஒளிபரப்பை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை, காலை 11.00 முதல் 11.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 4.30 வரை மறு ஒளிபரப்பாகவும் பார்க்கலாம்.

 

ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க அசின் மறுப்பு

ஸ்ரீசாந்த் ஜோடியாக நடிக்க அசின் மறுப்பு

சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க அசின் மறுத்துவிட்டார். அவருக்குப் பதில் வேறு பாலிவுட் நடிகையை ஸ்ரீசாந்த் ஜோடியாக்க முயற்சித்து வருகின்றனர்.

ஊழல் புகாரில் கைதாகி, இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், இழந்த பாப்புலாரிட்டியை மீண்டும் பெற முயற்சித்து வருகிறார்.

அதில் முதல் முயற்சியாக, கிரிக்கெட்டை விட அதிக பாப்புலாரிட்டியை எளிதில் தரும் சினிமாவில் நடிக்கக் களமிறங்கியுள்ளார்.

பாலச்சந்திர குமார் என்பவர் இயக்கும் பிக் பிக்சர் எனும் மலையாளப் படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஸ்ரீசாந்த். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க மலையாளத்திலிருந்து இந்திக்குப் போய்விட்ட அசினைக் கேட்டுள்ளனர்.

ஸ்ரீசாந்த் என்றதுமே அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். சம்பளம் எவ்வளவு கேட்டாலும் தருவதாகக் கூறியும் அசின் நடிக்க ஒப்புக் கொள்ளாததால், அவரை விட பிரபலமாக இருக்கும் பாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்கிறோம் எனக் கூறியுள்ளார் இயக்குநர் பாலச்சந்திர குமார்.

இந்தப் படத்தில் ஸ்ரீசாந்துடன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். சுரேஷ் கோபி உள்ளிட்ட சில முக்கிய நடிகர்களிடமும் பேசி வருகிறார்களாம்.

 

கார் மோதி சிறுமி மரணம் - காமெடி நடிகர் பாலா கைது

கார் மோதி சிறுமி மரணம் - காமெடி நடிகர் பாலா கைது

மதுரை: இளம் நகைச்சுவை நடிகர் பாலாவின் கார் மோதி மதுரை அருகே சிறுமி பலியானார். இந்த வழக்கில் பாலா கைது செய்யப்பட்டார்.

மதுரை அருகே உள்ள பரவையை சேர்ந்த ரங்கநாதன் மகன் பாலா என்ற பாலசரவணன். 'குட்டிப்புலி' படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் இவர். இப்போது 'பண்ணாயாரும் பத்மினியும்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை தனது காரில் அழகர்கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது செட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற ஏ.வல்லாளபட்டியைச் சேர்ந்த முருகன் மகள் உமாமகேஸ்வரி (4) மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த உமாமகேஸ்வரி மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து மேலவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் பாலசரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?

அஜீத் படத்துக்குப் பெயர் பறவை... இதுவாவது நிலைக்குமா?

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு பறவை என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏஎம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த பிறகும் கூட இன்னமும் அதன் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.

முதலில் இந்தப் படத்துக்கு வலை என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் அதனை இயக்குநர் விஷ்ணுவர்தன் மறுத்தார்.

எனவே தொடர்ந்து அஜீத் 53 என்றே இந்தப் படத்தைக் குறிப்பிட்டு வந்தனர் மீடியாவில்.

இதோ அதோ என தலைப்பு சூடும் படலம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் பறவை என அந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னமும் அதனை விஷ்ணுவர்தன் தரப்பு உறுதி செய்யவில்லை.

இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா - டாப்ஸி இன்னொரு ஜோடி. சந்தானமும் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பா விஜய் 5 பாடல்களை எழுதியுள்ளார்.

 

பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திக்கேயன்

பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிவகார்த்திக்கேயன்

நான் பாடப்போறேன்.... பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன்.

"ஊரைக் காக்க உண்டான சங்கம்...

உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை...இது இல்லை....

நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை".....

இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல்.யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் செம ஹிட் அடித்துள்ளதாம்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான சிவகார்த்திக்கேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் போன்ற படங்களில் நடித்து ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார்.

சிவகார்த்திக்கேயனின் காமெடி கலந்த நடிப்பு இளம் ரசிகர்களை குறிப்பாக ரசிகைகளை கவர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் சத்யராஜும் நடிக்கிறார். அவருக்கு ஜோடி பிந்து மாதவி.

இந்தப்படத்தின் இசையமைப்பாளர் இமான், முதன் முறையாக சிவகார்த்திக்கேயனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார். கிராமிய மனம் கமழும் இந்தப்பாடல் இப்போது யுடியூப் ஹிட் ஆகியுள்ளது. சினிமாவில் பின்னணி பாடிய அனுபவம் குறித்து பேசிய சிவகார்த்திக்கேயன், பள்ளி நாட்களில் நான் பாடும் போது என் குரலை கேட்டு நானே பயந்து இருக்கிறேன். இப்போது இமான் என்னிடம் பாடக் கேட்ட போது கூட அதைக் கூறி முதலில் மறுத்தேன். ஆனால் அவர் முயற்சி செய்யுங்கள் நன்றாக வரும் என்று ஊக்கப்படுத்தினார். அப்போது நான் கிராமிய பாடகர் அந்தோணிதாசன் பாடிய காசு பணம் துட்டு பாடலை மனதில் வைத்துக் கொண்டு பாட முயற்சி செய்தேன். இமான் கொடுத்த ஊக்கத்தால் சிறப்பாக பாட முடிந்தது என்றார். எப்படியோ ரஜினி, கமல்,விஜய், சிம்பு, தனுஷ் வரிசையில் நடிகராக இருந்து பாடகராகிவிட்டார் சிவகார்த்திக்கேயன்.