தூங்காவனத்தில் கமலுக்கு ஜோடியான ஆஷா சரத்!

ஆஷா சரத்... பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து அழகு, நடிப்பு, கம்பீரம் என அனைத்திலும் கலக்கினாரே ஒரு பெண்... நினைவிருக்கிறதா?

அவர் இப்போது தூங்காவனம் பட நாயகி. ஆம்.. பாபநாசத்தில் கமலை போட்டு சித்திரவதை செய்யும் பாத்திரம் அவருக்கு. ஆனால் இப்போது அதே கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Asha Sarath is Kamal's new pair

பாபநாசம் படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் தூங்காவனம் படத்தை ஆரம்பித்தார். இந்தப் படத்தில் கமலுடன் த்ரிஷா, மது ஷாலினி, பிரகாஷ்ராஜ், கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படப்பிடிப்பு நடத்தும்போதே வெளியிட்டார் கமல்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஹைதராபாதிலும், 2-ம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றுள்ளது. இப்போதும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Asha Sarath is Kamal's new pair

இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடி முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது கமலுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆஷா சரத் என்று தெரியவந்துள்ளது.

 

சுதந்திர தினத்தன்று வெளியாகும் மூன்றாம் உலகப்போர்

சென்னை: தலைப்பைப் பார்த்ததும் ஷாக் ஆகிடாதிங்க...மூன்றாம் உலகப் போர் என்பது படத்தோட தலைப்புதான், தமிழ் சினிமாவில் முதல்முறையாக ஒரு படம் முழுவதும் போரைப் பற்றி எடுத்திருக்கிறார் இயக்குநர் சுகன் கார்த்தி.

பாலை படத்தில் நடித்த சுனில் குமார் நாயகனாகவும், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படப்புகழ் அகிலா கிஷோர் நாயகியாகவும் நடித்து இருக்கின்றனர். மூன்றாம் உலகப் போர் என்று தலைப்பு வைத்ததற்குக் காரணம் படம் முழுவதுமே யுத்த களத்தில் நடப்பது போன்று காட்சிகள் இருப்பதாலாம்.

Moondram Ulaga Por - Movie

படத்தின் கதை இதுதான் 2025 ம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஒரு சின்ன பிரச்சினையில் யுத்தம் மூளுகிறது, இந்த யுத்தம் பெரிதானால் மூன்றாம் உலகப் போர் வரும் அபாயம் உண்டு.

இந்திய ராணுவத்தில் வேலை செய்யும் ஒரு கடைநிலை ராணுவவீரன் இந்த யுத்தம் வராமல் எப்படித் தடுக்கிறான் என்பதே படத்தின் கதையாம். சென்சார் போர்டில் யூ சான்றிதழ் பெற்றிருக்கும் மூன்றாம் உலகப் போர் வரும் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

 

ஒரு வாரம் கழித்து வருவதால் மாரியை பாகுபலி பாதிக்காது! - தனுஷ்

ஒரு வாரம் கழித்து எனது மாரி படம் வெளியாவதால், பாகுபலியின் தாக்கம் மாரிக்கு இருக்காது என்றார் நடிகர் தனுஷ்.

மாரி படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. அதையொட்டி இன்று படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

Bahubali effect will not affect Maari, says Dhabush

இதில் படத்தின் நாயகன் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் பாலாஜி மோகன், தயாரிப்பாளர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தனுஷ் பேசுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையை என்னிடம் கொடுத்தார் இயக்குநர் பாலாஜி மோகன். எனக்கு ரொம்பப் பிடித்த கதை. மாஸ் மசாலா படம் இது. இந்தப் படத்துக்குப் பிறகு பாலாஜி மோகனுக்கு கமர்ஷியல் பட வாய்ப்புகள்தான் நிறைய வரும். படத்தின் டீசருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அந்த டீசரின் விரிவாக்கம்தான் மாரி.

Bahubali effect will not affect Maari, says Dhabush

இந்தப் படம் சோலோவாக ரிலீசாவது சந்தோஷம். இது தானாக அமைந்தது. இன்னொன்று ரிலீஸ் தேதியை மூன்றரை மாதங்களுக்கு முன்பே நான் சொல்லிவிட்டேன்.

பாகுபலி படத்தால் மாரி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்தப் படம் ஒரு வாரம் முன்பே வெளியாகிவிட்டது. என் படம் இப்போதுதான் வருகிறது. எனவே வசூல் பாதிக்காது," என்றார்.

 

கார்த்தி - துல்கர் - மணிரத்தினம் மற்றும் "கோமாளி"!

சென்னை: ஓ காதல் கண்மணி படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போன்று மீடியாக்களும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக மணிரத்னம் படத்தைப் பற்றி நாள் தவறாது செய்திகள் வெளியிட்டு வந்தன.

முதலில் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடிக்கிறார்கள் என்று செய்திகள் வந்தன, பின்பு கார்த்தியுடன் இணைந்து மம்முட்டி நடிக்கிறார் என்று கூறினார்கள். தற்போது இறுதியாக கார்த்தியுடன் இணைந்து துல்கர் சல்மான் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Mani Ratnam's Next Movie Titled 'Komaali'?

கார்த்தியும், சல்மானும் இணைந்து நடிப்பது உண்மைதான் என்று கூறுகிறார்கள், செப்டம்பரில் துவங்க இருக்கும் படத்தின் ஹீரோயின் சுருதிஹாசன் என்று கூறுகிறார்கள். இந்தப் படத்திற்காக கோமாளி என்னும் தலைப்பை தேர்வு செய்து இருக்கிறாராம் இயக்குநர் மணிரத்னம்.

வழக்கம் போல இந்தப் படத்திற்கும் இசையமைக்கப் போவது ஏ.ஆர். ரஹ்மான் தானாம், கார்த்தி மற்றும் துல்கர் என 2 இளம் நடிகர்கள் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

 

ஆகஸ்ட் 14-ல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ரிலீஸ்!

ஆர்யாவின் 'தி ஷோ பீப்பல்' தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'. ராஜேஷ் எம் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர்.

சுருக்கமாக 'விஎஸ்ஒபி' என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

Vaasuvum Saravananum Onna Padichavanga from Aug 14

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் மற்றும் ராஜேஷ் மூவரின் வெற்றி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி அமைத்த மகிழ்ச்சியை நம்மிடையே இப்படிப் பகிர்கிறார் ராஜேஷ் எம்..

"காதல், ஃப்ரெண்ட்ஷிப், காமெடிதான் நம்ம ஏரியா. மக்களும் நம்மிடம் இருந்து அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதையே செய்வதுதான் நமக்கும் உத்தமம்.

Vaasuvum Saravananum Onna Padichavanga from Aug 14

வாசுவும் சரவணனும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். இவர்கள் இடையே பெண்களால் ஏற்படும் விளைவுகளை மிக கலாட்டாவாக சொல்லியிருக்கிறோம். படம் முழுக்க இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் நிஜ வாழக்கையில் எப்படி கலாய்த்து கொள்வார்களோ அதே இயல்புடன் வருகிறார்கள் ஆர்யாவும் சந்தானமும் வருகிறார்கள்.

"ரசிகர்கள் அனைவரையும் டீசர் கவர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. படத்தின் ஒற்றை பாடல் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நிரவ் ஷா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு மேற்கொள்ள, டி இமானின் இசையமைப்பில் உருவாகியுள்ளது விஎஸ்ஓபி.

Vaasuvum Saravananum Onna Padichavanga from Aug 14

ஆகஸ்ட் 14ஆம் தேதி மக்கள் மகிழ்ந்திட திரையரங்குகளில் விஎஸ்ஓபி வெளியாகவுள்ளது. உங்கள் நண்பர்களோடு நீங்கள் கழித்த அந்த ஜாலியான நாட்களை இந்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' மீண்டும் நினைவில் நிறுத்தும்," என்றார்.

 

ஆக்க்ஷன் அவதாரம் எடுக்கும் "டார்லிங்" பிரகாஷ்

சென்னை: தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் ஆக்க்ஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.

பென்சில் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் பென்சில் வெளியாகாத நிலையில் அடுத்து வெளிவந்த, டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

G.V.Prakash Now Turns Action Hero

டார்லிங் படத்தின் மூலம் வெற்றி ஹீரோவாக மாறிய ஜி.வி.பிரகாஷின் கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கின்றன, ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் இசை என்று பயங்கர பிஸியாக இருக்கிறார் ஜி.வி.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் தற்போது ரிலீசிற்குத் தயார் நிலையில் உள்ளது, அதை அடுத்து பாட்ஷா என்கிற ஆண்டனி, கெட்ட பய சார் இந்த கார்த்தி போன்ற படங்கள் ஜி.வி. பிரகாஷின் கைகளில் உள்ளது.

இத்தனை நாட்கள் காதல் மற்றும் திரில்லர் கலந்த படங்களில் நடித்து வந்த ஜி.வி.பிரகாஷ், தற்போது பாண்டிராஜ் உதவியாளர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஆக்க்ஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.

ஆக்க்ஷன் கலந்து த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டெம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது.

எல்லாம் சரி, படத்தை யாரு பாக்குறது...

 

தயாரிப்பாளரின் ஹீரோ என்றால் அது விஷால்தான்! - தயாரிப்பாளர் டி சிவா

தயாரிப்பாளரின் ஹீரோ என்றால் இன்றைக்கு விஷாலைத்தான் சொல்ல முடியும் என்று தயாரிப்பாளர் டி சிவா பாராட்டினார்.

விஷால் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் பாயும் புலி படத்தின் ஒற்றைப் பாடல் வெளியீடு நேற்று நடந்தது.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் டி சிவா பேசுகையில், "சுசீந்திரன் நிச்சயமாக தயாரிப்பாளர்களின் இயக்குநர்தான். அவரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவே பாராட்டுகிறேன். 80 நாளில் முடிப்பதாகக் கூறிவிட்டு 74 நாளில் முடித்துள்ளார்.

T Siva and Madhan praised Vishal

தயாரிப்பாளர்களின் நடிகர்களாக பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்கள். இப்போது விஷால் இருக்கிறார். இந்தப் படக்குழுவே தயாரிப்பாளர்களின் படக் குழுதான்,'' என்றார்.

வேந்தர் மூவீஸ் தயாரிப்பாளர் மதன் பேசுகையில், "விஷாலுடன் நாங்கள் இணையும் 4 வது படம் இதுபடம் ஆரம்பித்த முதல்நாள் போனதுதான். அப்புறம் போகவில்லை. சொன்னபடி முடித்துக் கொடுத்து விட்டார் இயக்குநர்," என்றார்.

சமீப காலத்தில் தயாரிப்பாளர்களிடமிருந்து இவ்வளவு பாராட்டையும் வாழ்த்தையும் பெற்ற இயக்குநர், ஹீரோ சுசீந்திரனும் விஷாலும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹாங்காங்கில் பிறந்து இந்தியாவில் 32 வயதைக் கடந்த காத்ரீனா.. இன்று ஹேப்பி பர்த்டே!

மும்பை: பாலிவுட்டின் அழகுப் புயல் காத்ரீனா கைப் இன்று தனது 32 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 1983 ம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி ஹாங்காங்கில் பிறந்த காத்ரீனா இன்று தனது 32 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார்.

2003 ம் ஆண்டு பூம் என்ற ஹிந்திப் படத்தின் மூலம் அறிமுகமான காத்ரீனா ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளிலும் சுமார் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Katrina Kaif Turns 32

கிறிஸ்டியன் அம்மாவுக்கும் இசுலாமிய அப்பாவிற்கும் பிறந்தவர் காத்ரீனா, அதனால் இந்து, இசுலாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களில் உள்ள ஆலயங்களுக்கும் அவ்வப்போது சென்று வருகிறார்.

இந்தியாவில் சொந்தக் குடியுரிமை காத்ரீனாவிற்கு கிடையாது, அதனால் சொந்த வீடு இங்கு இல்லை. அமெரிக்க விசாவில் அடிக்கடி வந்து நடித்துக் கொடுக்கும் காத்ரீனாவிற்கு லண்டனில் சொந்தமாக வீடு உள்ளது.

பாலிவுட்டின் மிக அதிகமான சம்பளம் வாங்கும் நடிகைகளில் காத்ரீனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்தியாவில் விளம்பர உலகின் முடிசூடா மகாராணியாக கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறார் காத்ரீனா கைப்.

இந்தியாவில் இருந்து எத்தனையோ நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர், ஆனால் விளம்பர உலகைப் பொறுத்தவரை தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது காத்ரீனா தான்.

இந்த வருடம் பிராண்ட் டிரஸ்ட் நடத்திய என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக அளவில் விளம்பரங்களில் நடித்து முதலிடத்தில் காத்ரீனா இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் இவர் நடித்த விளம்பரங்களின் மூலம் சந்தையில் அந்தப் பொருட்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் அந்த நிறுவன ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலே சொன்ன காரணங்களால் விளம்பர உலகில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் காத்ரீனா. பாலிவுட் நடிகர் ரன்பீரும் காத்ரீனாவும் காதலிப்பது உலகறிந்த ஒன்று, இதனால் இவர்கள் இருவரின் திருமணத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்த பிறந்தநாளில் பர்பி நடிகர் அழகுப் புயலுக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை, பார்க்கலாம்.

 

சகலகலா வல்லவன் ஆனது ஜெயம் ரவியின் அப்பாடக்கர்!

சகலகலா வல்லவன்.. தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்குப் படம். கமல் ஹாஸன் நடித்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு புதிய படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடித்துள்ள அப்பாடக்கர் படத்துக்குதான் இந்தத் தலைப்பைச் சூட்டியுள்ளார்கள்.

இந்தப் படத்தை தலைநகரம், மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கியுள்ளார்.

Appatakkar title changed now as Sagalakala Vallavan

காமெடி ஸ்பெஷலிஸ்டான சுராஜ், இந்தப் படத்தில் விவேக்கையும் சூரியையும் இணைத்து காமெடி செய்ய வைத்துள்ளார். தமன் இசையமைக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பழைய சகலகலா வல்லவன் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. அவர்களிடம் அனுமதி பெற்று இந்தத் தலைப்பை அப்பாடக்கர் படத்துக்குச் சூட்டியுள்ளனர்.

லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே முரளிதரன், கே சுவாமிநாதன், கே வேணுகோபால் தயாரித்துள்ளனர். விரைவில் திரைக்கு வருகிறது அப்பாடக்.. ஸாரி.. சகலகலா வல்லவன்!

 

நான் எல்லாத்திலும் சுமார்தான்… அடக்கம் காட்டும் தனுஷ்

எனக்கு உங்க அளவுக்கு ஆட வராது... பாட வராது... நான் நடுவராக வந்து மார்க் போட உட்கார்ந்திருக்கேன் என்று அதீத தன்னடக்கத்தோடு பேசியது வேறு யாருமல்ல நடிப்போ, தயாரிப்போ, பாட்டோ ஒவ்வொன்றிலும் சொல்லியடிக்கும் தனுஷ்தான்.

துள்ளுவதோ இளமை தொடங்கி அனேகன் வரை எத்தனையோ கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தன்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்திக்கொண்டுள்ள தனுஷ், பாடலாசிரியராக, தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார்.

Sun Tv 7up Up Starters‬ Grand Finale Dhanush, Puneeth Rajkumar And Amala Paul

சில நிறுவனங்களின் விளம்பர தூதுவராகவும் உள்ள தனுஷ், சில தினங்களுக்கு சன் டிவியில் ஒளிபரப்பான 7 அப் நடனப் போட்டி நிகழ்ச்சியின் சிறப்பு நடுவராகவும் பங்கேற்றார். தனுஷ் உடன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரும் வந்திருந்து போட்டியாளர்களின் நடனத்திற்கு மதிப்பெண் வழங்கியதோடு எந்த குறையும் சொல்லாமல் பாராட்டி தள்ளினார்கள்.

சினிமாவில் நடித்து வந்த அமலாபால், திருமணத்திற்குப் பின்னர் முதன் முறையாக சின்னத்திரைக்கு நடுவராக வந்த நிகழ்ச்சி இது. கடந்த எபிசோடுகள் வரை போட்டியாளர்களுடன் நடனமாடி உற்சாகத்தை ஏற்படுத்தினார். இது இறுதிச்சுற்று என்பதால் போட்டியாளர்களை ஆடவிட்டு வெறும் மதிப்பெண்கள் மட்டுமே போட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் அமலாபால்.

Sun Tv 7up Up Starters‬ Grand Finale Dhanush, Puneeth Rajkumar And Amala Paul

போட்டியாளர்கள் நடனமாடி முடித்த உடன், எப்படி இருந்தது டான்ஸ் சொல்லுங்க என்று தொகுப்பாளர் தீபக் கேட்க, அதற்கு தனுஷ், எனக்கு சரியா டான்ஸ் வராது, பாடவும் தெரியாது, ஆனா இங்க வந்திருக்கிற போட்டியாளர்கள் எல்லாரும் நன்றாக பாடி ஆடுகின்றனர் என்று புகழ்ந்து தள்ளினார். போட்டி முடிந்த உடன் பங்கேற்பாளர்களுக்கு பரிசு கொடுத்து விட்டு அமைதியாகவே கிளம்பினார்கள் சிறப்பு நடுவார்கள்.

 

சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததும் காரணம்! - பிரபல தயாரிப்பாளர்

சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததும் காரணம் என்று ஏ.எல்.எஸ்.புரொடக்வுன்ஸ் தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன் பேசினார்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு சூழலில் கிடைக்கும் தகவல் அவனது வாழ்க்கையையே மாற்றியமைக்கும். அதை மையப்படுத்திய கதைதான் 'தகவல் என்கிற படமாக உருவாகியுள்ளது.

Bad movies also reason for social evils, says popular producer

இப்படத்தை கே.சசீந்தரா இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் பரதன்,ஜோஷி போன்ற பல இயக்குநர்களிடம் பணிபுரிந்துள்ளார். மோஷன் கிராப்ட் புரொடக்ஷன் மற்றும் எப்விஎம்எஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

Bad movies also reason for social evils, says popular producer

'தகவல்' படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்தது .சுவாமி சச்சிதானந்தமாயி பாடல்களை வெளியிட்டார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணகி, ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் ஜெயந்தி கண்ணப்பன், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Bad movies also reason for social evils, says popular producer

விழாவில் ஏ.எல்.எஸ்.புரொடக்க்ஷன்ஸ் ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது, " நாங்கள் 60 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறோம். நான்கு முதல்வர்களுக்கு ஊதியம் கொடுத்த நிறுவனம் எங்களுடையது. கலைஞருக்கு 'பணம்', எம்.ஜி.ஆருக்கு' 'திருடாதே' ,புரட்சித்தலைவி அம்மாவுக்கு 'கந்தன் கருணை', என்டி. ராமராவுக்கு 'ராமாயணம்' படங்களை நாங்கள்தான் தயாரித்தோம்.

இப்போது படங்களில் பெண்களை மதிப்பது இல்லை. நாங்கள் பெண்களை மதித்து பெருமை சேர்க்கும் வகையில் 'சக்கரவர்த்தி திருமகள்', 'சாரதா', 'ஆனந்தி', 'சாந்தி' போன்ற படங்களை எடுத்தோம்.

Bad movies also reason for social evils, says popular producer

என் மாமனார் ஏ.எல். சீனிவாசன், பீம்சிங், மாதவன் போன்ற எவ்வளவோ பெரிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார்.

இன்று தென்னிந்தியப் படங்கள் தொழில் நுட்பத்தில் வட இந்தியப் படங்களுக்கே சவால் விடுகின்றன. ஹாலிவுட்டுக்கு சவால் விடுகின்றன. ஆனால் நல்ல படங்கள் எடுக்கப் படுகிறதா என்றால்.. இல்லை.

சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததும் காரணம். இன்று பெண்கள் நடந்து கொள்வதும் மாற வேண்டும். பெண்களுக்கு அறிவும் வேண்டும். அடக்கமும் வேண்டும். இந்தச் சூழலில் பெண்களைப்பற்றி அவர்களின் பிரச்சினையை மையப் படுத்தி எடுக்கப் பட்டுள்ள 'தகவல்' படம் பற்றி பெற வேண்டும்," என்றார்.

இவ்விழாவில் மூன்னாள் நீதிபதி கண்ணகி, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, மலையாள இயக்குநர் சந்திரமோகன், எழுத்தாளர் கோபால கிருஷ்ணன், சமூக ஆர்வலர் எம்.பி.சீனிவாசன், படத்தின் இயக்குநர் கே.சசீந்திரா, ஒளிப்பதிவாளர் ஜித்து ஜோஸ், நடிகை ரிஷா, இசையமைப்பாளர் சாஜித் தென்றல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

 

வாலு ரிலீஸ் தள்ளிப்போன விரக்தியில் ரசிகர் தற்கொலை முயற்சி! உடைந்துவிட்டேன் என்கிறார் சிம்பு

சென்னை: வாலு திரைப்படம் ரிலீசாவது தள்ளிப்போனதால், சிலம்பரசன் ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக சிலம்பரசனே தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாலு திரைப்பட பிரச்சினை, ஹனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்கிறது. ஒருவழியாக நாளைக்காவது படம் ரிலீசாகும் என்றிருந்த நிலையில், வழக்கு காரணமாக, நீதிமன்ற உத்தரவால், மீண்டும் தள்ளிப்போயுள்ளது வாலு ரிலீஸ்.

இதனிடையே, சிலம்பரசன் டிவிட்டர் மூலம் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது டிவிட்டில் "ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தி கேட்டு மனது உடைந்துவிட்டது. நான் கிட்டத்தட்ட கண்ணீர் மல்கவே உள்ளேன். ரசிகர்கள் தெம்பாக இருக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மனதை தளர விடாதீர்கள்" என்று கூறியுள்ளார்.

தனது மற்றொரு டிவிட்டில் "நான் ஏற்கனவே உடைந்துபோயுள்ளேன். என்னை உறுதியாக வைத்துக்கொள்ள முயன்று கொண்டுள்ளேன். இந்த நிலையில், இப்படி செய்யாதீர்கள். உங்கள் அன்பே எனக்கு போதும்" என்றும் கூறியுள்ளார் சிம்பு.

இதனிடையே, வாலு படம் ரிலீஸ் தள்ளிப்போவதும், அது தொடர்பான தற்கொலை முயற்சி போன்ற நிகழ்வுகளும், டிவிட்டர் நெட்டிசன்களால் கேலி செய்யப்படுகின்றன. அப்படி சில டிவிட்டுகளை இங்கே பாருங்க.

 

5 வருடங்கள் கழித்து பேஷன் ஷோவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராய்

மும்பை: டெல்லியில் விரைவில் தொடங்க இருக்கும் பேஷன் ஷோவில் இந்தியாவின் சிறந்த உடையமைப்பாளர், மனிஷ் மல்கோத்ராவுடன் இணைந்து மேடையில் ராம்ப் வாக் செய்ய இருக்கிறாராம் ஐஸ்.

டெல்லியில் வருடாவருடம் ஆடைகள் வடிவமைப்பில் புதிதாக வந்திருக்கும் உடைகளை அறிந்து கொள்ளும் விழா ஒன்று நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டு தங்கள் எண்ணத்தில் புதிதாக வந்திருக்கும் ஆடைகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவர்.

Aishwarya Rai to Return on the Ramp after 5 Years for Manish Malhotra?

பாலிவுட் நட்சத்திரங்கள் அதிகம் கலந்து கொள்ளும் ஒரு விழா என்றும் இதனைக் கூறலாம். இந்த வருடம் மிகவிரைவில் தொடங்கப் படவிருக்கும் இந்தக் கண்காட்சியில் 5 வருடங்கள் கழித்து நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளவிருக்கிறார்.

ஜூலை 29 ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நடிகை ஐஸ்வர்யா ராய், மனிஷ் மல்கோத்ராவின் உடைகளை அணிந்து மேடையில் ராம்ப் வாக் இருக்கிறாராம்.

2010 ம் ஆண்டிற்குப் பின் பேஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத ஐஸ்வர்யா ராய் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்தவர்களிடம் ஐஸ்வர்யா ராயை மீண்டும் மேடையில் காணும் ஆர்வம் அதிகரித்து உள்ளது.

 

ரன்வீர்- தீபிகா- பிரியங்கா நடிப்பில் உருவான பஜ்ரோ மஸ்தானி டீசர் வெளியானது

மும்பை: இந்தித் திரையுலகில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் பஜ்ரோ மஸ்தானி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

இன்று வெளியாகி இருக்கும் டீசர் மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர், மேலும் #BajiraoMastaniTeaser என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி அதனை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டடிக்க வைத்து இருக்கின்றனர் ரசிகர்கள்.

வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் காதலுக்கும் முக்கியமான இடத்தை இயக்குநர் வைத்திருக்கிறாராம். மராத்திய பீஷ்வா பாஜிரோவுக்கும் அவரது 2 வது மனைவியான மஸ்தானிக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பாஜிரோவாக ரன்வீரும், அவரது இரண்டாவது மனைவியாக தீபிகாவும் நடித்திருக்கின்றனர். ரன்வீரின் முதல் மனைவியாக பிரியங்கா சோப்ரா நடித்திருக்கிறார்.

'Bajirao Mastani' Teaser Released

படம் 70% முடிவடைந்து விட்டது, என்று படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியிருக்கிறார். வரும் டிசம்பர் மாத இறுதியில் (18) பஜ்ரோ மஸ்தானி திரைப்படம் உலகெங்கும் வெளியாக இருக்கிறது.

பஜ்ரோ மஸ்தானியின் டீசரைப் பார்த்தவர்கள் படம் ஜோதா அக்பரை நினைவூட்டுகிறது என்று கூறுகிறார்கள். படம் ஜோதா அக்பரைப் போல இருக்கிறதா இல்லை அதைவிடவும் சிறப்பாக இருக்கப்போகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

ஆர்யாவுடன் ரொமான்ஸ் செய்யப் பிடிக்கும் - த்ரிஷா

சென்னை: தமிழ் நடிகர்களில் பிளேபாய் என்ற பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் யார் என்று பார்த்தால் ஆர்யாதான், அவருக்குத் தான் அந்தப் பெயர் கரெக்ட்டாக இருக்கும் என்று அனைவரும் சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றவர் ஆர்யா.

I Love Romance with Arya – Trisha

ஆர்யாவின் படங்களில் நடித்த அத்தனை நடிகைகளுடனும் ஆர்யாவை இணைத்து கிசுகிசு வந்துவிட்டது, ஆனால் ஆர்யாவிடம் இதுபற்றிக் கேட்டால் நான் அவர்களுடன் நட்புடன் தான் பழகுகிறேன் என்று பதில் கூறுவார்.

ஆனாலும் மீடியாக்களில் ஆர்யாவின் செய்திகளுக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை, சரி நமக்கென்ன அதைப் பற்றி நேரடியாக விஷயத்திற்கு வருவோம். தற்போது நடிகை த்ரிஷா சர்வம் படத்தில் நடித்த போது ரொமான்ஸ் காட்சிகளில் ஆர்யாவுடன் என்ஜாய் பண்ணி நடித்ததாகக் கூறியிருக்கிறார்.

I Love Romance with Arya – Trisha

திரையில் ஆர்யாவின் கெமிஸ்ட்ரி மற்றும் ரொமான்ஸ் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நமக்கும் தெரியும், இருப்பினும் த்ரிஷா இப்படிக் கூறியிருப்பதால் திரைக்குப் பின்னால் இருவருக்குமிடையே வேறு ஏதேனும் இருக்குமோ? என்று (வழக்கம் போல) ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

 

சவரக்கத்தியில் ராமுக்கு வில்லனாகிறார் மிஷ்கின்!

இயக்குநர் மிஷ்கினின் லோன் வுல்ப் புரொடக்ஷன்ஸ் அடுத்த படத்தை அறிவித்துள்ளது.

சவரக்கத்தி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் ராம் நாயகனாக நடிக்கிறார். மிஷ்கினின் உதவி இயக்குநரான ஜிஆர் ஆதித்யா இயக்கும் இப்படம் இன்று தொடங்கப்பட்டது. இந்தப் படத்தில் கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று பரிணாமங்களை ஏற்றுள்ளார் மிஷ்கின்.

Mysskin's next Savarakkaththi

இப்படத்தை பற்றி மிஷ்கின் கூறுகையில், "நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் குழந்தையை மீண்டும் பெற்றெடுப்போம்.. அதுதான் இந்தப் படம்," என்றார்.

Mysskin's next Savarakkaththi

தங்க மீன்களுக்குப் பிறகு இயக்குநர் ராம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், தான் முன் ஏற்றிராத புதுமையான கதாப்பாத்திரத்தில் பூர்ணா நாயகியாக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் மிஷ்கின் தனது சிஷ்யருக்காக இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.

‘சவரக்கத்தி' படத்திற்கு பிசி ஸ்ரீராமின் உதவியாளர் விஐ கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிசாசு' புகழ் அரோல் குரோலி இசையமைக்கிறார்.

 

தயாரிப்பாளரானார் நடிகை அமலா பால்.. ப்ரியதர்ஷன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார்!

இயக்குநர் விஜய்யை திருமணம் செய்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள அமலா பால், அடுத்து தயாரிப்பாளராக மாறியுள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார்.

இயக்குநர் விஜய் தனது திங்க் பிக் ஸ்டுடியோஸ் மூலம் சைவம் படத்தைத் தயாரித்து இயக்கினார். திருமணத்துக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் உரிமையாளராக மனைவி அமலா பாலை நியமித்துவிட்டார் விஜய். அடுத்து 'நைட் ஷோ' திரைப்படத்தைத் தயாரித்தது இந்த நிறுவனம்.

Amala Paul Vijay turns producer with Priyadarshan's film

அடுத்து இந்த நிறுவனத்தின் படத்தை ப்ரியதர்ஷன் இயக்க, அமலா பாலும், ஏஎல் அழகப்பனும் தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.

Amala Paul Vijay turns producer with Priyadarshan's film

பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் இப்படத்தின் புரடக்ஷன் டிசைனராக பண்ணியாற்றவுள்ளார்

Amala Paul Vijay turns producer with Priyadarshan's film

இந்தப் படம் குறித்து அமலா பால் விஜய் கூறுகையில், "நான் தயாரிக்கும் முதல் படமே சர்வதேச ரசிகர்களுக்கான படமாய் தயாரகவுள்ளது. ப்ரியதர்ஷன், சந்தோஷ் சிவன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி என தரமான கலைஞர்கள் இருப்பது இப்படத்திற்கு பெரிய பலம். ஆகஸ்ட் மாதம் மத்தியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். எங்கள் திங்க் பிக் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனதிற்கு இப்படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும்," என்றார் நம்பிக்கையுடன்.