ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

சென்னை: இன்று ட்விட்டரில் சேர்ந்த நடிகர் சூர்யா ஒரேயொரு நிறுவனத்தை மட்டும் பின்தொடர்கிறார்.

இத்தனை நாட்களாக ட்விட்டர் பக்கம் வராத சூர்யா மகளிர் தினமான இன்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் சேர்ந்தார். @Suriya_offl என்பது தான் சூர்யாவின் ட்விட்டர் ஐடி ஆகும். அவர் ட்விட்டரில் இணைந்த ஒன்றரை மணிநேரத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த அன்றும் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் சூர்யாவை 25 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தாலும் அவர் ஒரேயொரு நிறுவனத்தை மட்டுமே பின்தொடர்கிறார்.

ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

அவரது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்டை தான் சூர்யா ட்விட்டரில் பின்தொடர்கிறார். சூர்யா மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் தனது செல்பி ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இனி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

சென்னை: இன்று ட்விட்டரில் சேர்ந்த நடிகர் சூர்யா ஒரேயொரு நிறுவனத்தை மட்டும் பின்தொடர்கிறார்.

இத்தனை நாட்களாக ட்விட்டர் பக்கம் வராத சூர்யா மகளிர் தினமான இன்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் சேர்ந்தார். @Suriya_offl என்பது தான் சூர்யாவின் ட்விட்டர் ஐடி ஆகும். அவர் ட்விட்டரில் இணைந்த ஒன்றரை மணிநேரத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த அன்றும் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் சூர்யாவை 25 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தாலும் அவர் ஒரேயொரு நிறுவனத்தை மட்டுமே பின்தொடர்கிறார்.

ட்விட்டரில் சூர்யா யாரை பின்தொடர்கிறார் தெரியுமா?

அவரது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்டை தான் சூர்யா ட்விட்டரில் பின்தொடர்கிறார். சூர்யா மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் தனது செல்பி ஒன்றையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இனி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

கனடா சென்றார் 'சூப்பர் சிங்கர்' ஜெசிக்கா... விமானநிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

டொராண்டோ : விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற ஜெசிக்காவிற்கு கனடாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவைச் சேர்ந்த ஈழ மாணவி ஜெசிக்காவும் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜெசிக்காவுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப் பட்டது.

கனடா சென்றார் 'சூப்பர் சிங்கர்' ஜெசிக்கா... விமானநிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

அந்த ஒரு கிலோ தங்கத்தையும் தமிழ்நாடு மற்றும் ஈழத்தில் வாழும் அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கினார் ஜெசிக்கா. ஏற்கனவே, தனது இனிமையான குரலால் தமிழ் மக்களைக் கவர்ந்த ஜெசிக்கா, இந்த நற்செயல் மூலம் அவர்களது மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில், கனடா திரும்பினார் ஜெசிக்கா. டொராண்டோ விமான நிலையத்தில் ஜெசிக்காவை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெசிக்காவை பாராட்டி அவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.

 

சமத்து, நம்பர் நடிகை இடையே சண்டையாமே!

சென்னை: சமத்து நடிகைக்கும், நம்பர் நடிகைக்கும் இடையே சண்டையாம்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நம்பர் நடிகை. கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை பல ஹீரோக்களும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறார்கள்.

இந்நிலையில் நம்பர் நடிகைக்கும் சமத்து நடிகைக்கும் இடையே சண்டை என்று கூறப்படுகிறது. இத்தனை காலமாக தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த சமத்து தற்போது தமிழ் திரை உலகில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

அம்மணி நம்பர் நடிகைக்கு வந்த சில பட வாய்ப்புகளை தட்டிப் பறித்துவிட்டாராம். இதனால் தான் நம்பர் நடிகைக்கும், சமத்து நடிகைக்கும் இடையே பிரச்சனையாம். சமத்து பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆவது போன்று இருந்தது. ஆனால் தற்போது அந்த படத்தில் நம்பர் அல்லது வாரிசு நடிகை நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது சமத்துவை விட நம்பர் நடிகையின் கையில் தான் அதிக படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ட்விட்டரில் சேர்ந்த சூர்யா: 1 மணிநேரத்தில் 21.5 ஆயிரம் ஃபாலோயர்கள்!

சென்னை: நடிகர் சூர்யா இன்று காலை ட்விட்டரில் சேர்ந்தார். அவர் ட்விட்டரில் இணைந்த 1 மணிநேரத்தில் 21.5 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், தனுஷ், சிம்பு என்று பலரும் ட்விட்டரில் உள்ளனர். அவர்கள் தங்களின் படங்கள் பற்றியும், பிற நிகழ்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஏதாவது சுபயோக சுபதினத்தை தேர்வு செய்து ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுகிறார்கள்.

சூர்யாவோ ட்விட்டர் பக்கமே வராமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் மகளிர் தினமான இன்று காலை 11.30 மணிக்கு ட்விட்டரில் இணைந்தார். முன்னதாக சூர்யா ட்விட்டரில் சேர உள்ளதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரை வரவேற்று ட்வீட் போட்டு வருகிறார்கள்.

ட்விட்டரில் சேர்ந்த சூர்யா: 1 மணிநேரத்தில் 21.5 ஆயிரம் ஃபாலோயர்கள்!

இதனால் #WelcomeSuriyaToTwitter என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருந்தது.

ட்விட்டரில் சேர்ந்த சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது,

லவ் யூ ஆல். மகளிர் தின வாழ்த்துக்கள். ரொம்ப நாளா வரணும் என்று நினைத்தேன் இன்று வந்தாச்சு. இன்று எதுக்கு என்று கேட்டால் நான் நினைத்ததை விட நீங்கள் அதிகமாக அன்புகாட்டுவதால் தான். என்னுடைய ட்விட்டர் ஐடி @Suriya_offl. நன்றி என்று தெரிவித்துள்ளார்.

 

சி2எச்சில் சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை... ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

வீடுகளுக்கு நேரடி சினிமா - சி2எச் - எனும் புதிய முறையில் டிவிடியாக வெளியாகியுள்ள இயக்குநர் சேரனின் புதிய படமான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்துக்கு தமிழகம் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் வைத்து இந்தப் படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு டிவிடி வடிவில் படத்தை வெளியிட்டார்.

படத்தை வெளியிட விரும்பும் திரையரங்குகளிலும் நிச்சயம் வெளியிடுவேன் என்று சேரன் கூறினார். ஆனால் தியேட்டர்கள் முன்வரவில்லை.

சி2எச்சில் சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை... ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

இதனால் இப்போதைக்கு டிவிடியாக மட்டும், 50 லட்சம் சின்னத் திரைகளில் படத்தை வெளியிடுகிறார் சேரன்.

ஒரு டிவிடியின் விலை, அதுவும் 5.1 ஒலித் தரத்தில் ஒரிஜினல் டிவிடி, ரூ 50 மட்டும்தான்.

இதனால் அது ஒரு பெரிய தொகை இல்லை என்று நினைத்து இந்த டிவிடியை மக்கள் வாங்கியுள்ளனர்.

டிவிடியை வாங்கிய பலரும் ஆர்வத்துடன் அதுகுறித்து சமூக இணையதளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மவுனம் காத்து வந்த திரையுலக பிரமுகர்கள் பலரும் இந்தப் படத்தை வாங்கியுள்ளதோடு, சேரனுக்கு வாழ்த்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது, சி2எச் திட்டத்தை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது.

 

தீயா பரவிய போட்டோவில் இருப்பது 'குட்டி தல' இல்லையா?: யார் பார்த்த வேலைடா இது?

சென்னை: சமூக வலைதளங்களில் மிகவும் பிரபமான புகைப்படத்தில் இருப்பது அஜீத்தின் மகனே அல்ல என்று கூறப்படுகிறது.

இரண்டாவது முறை கர்ப்பமான ஷாலினி அஜீத் கடந்த 2ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த சில மணிநேரங்களிலேயே குட்டி தல என்று ஒரு குழந்தையின் புகைப்படம் தீயாக பரவியது. சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு குட்டி தல என்று கூறி அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வந்தனர்.

போட்டோவில் இருப்பது 'குட்டி தல' இல்லையா?: யார் பார்த்த வேலைடா இது?

இந்நிலையில் அந்த புகைப்படத்தில் இருப்பது குட்டி தலயே இல்லை என்று தெரிய வந்துள்ளது. அது சீனாவைச் சேர்ந்த குழந்தையின் புகைப்படமாம். சீன குழந்தையின் புகைப்படம் எப்படி குட்டி தலயின் புகைப்படமானது என்று தெரியவில்லை.

குட்டி தலயின் புகைப்படத்தை வெளியிடும் ஆசையில் ஏதாவது ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் அந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம் இல்லை என்றால் அது விஷமிகளின் வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குட்டி தலயின் புகைப்படத்தை விரைவில் அஜீத் அல்லது அவரது குடும்பத்தார் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. யார் பார்த்த வேலைய்யா இது?