இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் - ரசிகர்கள் தவம் கிடக்கும் அந்த எட்டுப் பாடல்கள் லிஸ்ட்!

Neethaane En Ponvasantham Audio T

சென்னை: எந்தப் படத்தின் பாடல்களுக்கும் இல்லாத பெரும் எதிர்ப்பார்ப்பு இளையராஜா இசையில் உருவான நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு எழுந்துள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் இசை வரும் செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. மேடையில் தனது குழுவினர் மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் மேடையேறி அனைத்துப் பாடல்களையும் வாசித்து அறிமுகப்படுத்தப் போகிறார் இளையராஜா.

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் என்னென்ன என்பது குறித்த ரசிகர்களின் ஆவலைப் போக்கும் விதத்தில், இயக்குநர் கவுதம் மேனனும், இளையராஜாவின் இளையமகன் யுவனும் பாடல்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

மொத்தம் எட்டுப் பாடல்கள். அவற்றின் விவரம்...

1. காற்றே கொஞ்சம்... (கார்த்திக்)
2.புடிக்கலே மாமு... (சுராஜ் ஜெகன், கார்த்திக்)
3.என்னோடு வாவா.. (கார்த்திக்)
4. சாய்ந்து சாய்ந்து.. (யுவன், ரம்யா என்எஸ்கே)
5. பெண்கள் என்றால்.. (யுவன்)
6.முதல் முறை.. (சுனிதி சௌஹான்)
7.சற்று முன்பு... (ரம்யா என்எஸ்கே)
8.வானம் மெல்ல... (இளையராஜா, பேலா ஷிண்டே)

இந்தப் பாடல்களில், சாய்ந்து சாய்ந்து, என்னோடு வாவா பாடல்களின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களைக் கிறங்கடித்துள்லது.

அடுத்து காற்றே கொஞ்சம் என்ற பாடலை ஆடியோ ரிலீசுக்கு இரு தினங்களுக்கு முன்பே வானொலிகளில் ஒலிபரப்பும் திட்டமுள்ளதாக கவுதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் ஆவல், டிமான்ட் காரணமாக, சிடிக்களுக்கு முன்பதிவையும் தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ரஜினி தவிர்த்து, பிற நடிகர்களின் பட இசை ஒன்றிற்கு இதுவரை தரப்படாத பெரும் விலையை சோனி நிறுவனம் தந்து, இசை உரிமையை வாங்கியுள்ளது.

 

விஜய்யுடன் யோஹன் படம் இல்லை.. கைவிடப்பட்டது - கவுதம் மேனன் அறிவிப்பு

Yohan Will Not Happen With Vijay

" 'துப்பாக்கி' முடித்தவுடன் 'யோஹன்' படத்தில்தான் விஜய் நடிப்பார் என்று இயக்குனர் கவுதம் மேனன் கூறி வந்தார்.

அந்த நேரம் பார்த்து... யோஹன் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஏஎல் விஜய்யின் படத்தில்தான் விஜய் நடிக்க ஆர்வமாக உள்ளதாகக் கூறப்பட்டது. இதனை விஜய்யோ, கவுதம் மேனனோ மறுக்கவில்லை அப்போது.

இந்த நிலையில், முதல் முறையாக இந்த செய்தி உண்மைதான் என ஒப்புக் கொண்டுள்ளார் கவுதம்மேனன்.

தனது அடுத்த படத்தில் விஜய் நடிக்கவில்லை என்று தனது டிவிட்டர் மூலம் அவர் அறிவித்துவிட்டார்.

அவரது ட்விட்டரில், " நீதானே என் பொன்வசந்தம் படத்தின் 8 பாடல்கள் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும். இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.

யோஹன் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய்யுடன் யோஹன் படம் தொடங்கவில்லை.

விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குவது இயக்குனர் விஜய்தான். 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை முடித்துவிட்டு எனது அடுத்த படத்தினை முடிவு செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

அழகை பளிச்சென்று காட்டாமல் ரசிகர்களை ஏமாற்றியதற்கு சாரி: சன்னி லியோன்

I M Sorry I Let Audiences Down Not   

மும்பை: ஜிஸ்ம் 2 படத்தில் அழகை வெளிப்படையாகக் காட்டாமல் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்ததற்கு நடிகை சன்னி லியோன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆபாசப் படங்களில் நடித்த சன்னி லியோன் ஜிஸ்ம் 2 இந்தி படத்தில் நடித்தார். அவரது படத்தில் கவர்ச்சி கரைபுரண்டோடும் என்று நினைத்துச் சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவ்வாறு ரசிகர்கள் ஏமாற்றம் அடையச் செய்ததற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சன்னி லியோனின் பேட்டி வருமாறு,

இந்தி சினிமாவில் நடிப்பது முற்றிலும் வி்த்தியாசமானதல்லவா?

நிச்சயமாக. எனக்கு இந்தி பட வாயப்பு கிடைத்தபோது பாலிவுட் என்றால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது எனக்கு தெரியும். ரசிகர்கள் எனக்கு அளி்ததுள்ள வரவேற்பு பிரமிக்க வைக்கிறது.

இந்த புகழ் எதனால் கிடைத்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

என்னைப் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் பேராவலாக உள்ளனர். அவர்கள் பிக் பாஸ் ஷோவில் என்னை பார்த்துள்ளனர். அதனால் அவர்கள் என்னை நேரில் பார்க்க விரும்புகின்றனர். நேரில் நான் எப்படி இருப்பேன் என்பதை பார்க்க விரும்புகின்றனர். ஒரு சில அரசியல் அமைப்புகள் எனது படத்தின் போஸ்டர்களை அகற்ற விரும்பினர். அதே சமயம் ஒரு சில அரசியல் பிரிவினர் தங்கள் விழாக்களில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைத்து இடங்களிலும் இது போன்றவர்கள் உள்ளனர்.

படத்தில் நீங்கள் வெகுவாக ஆடைகுறைப்பு செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது பற்றி...

இந்தியாவில் பல விதிமுறைகள் உள்ளன. சென்சார் போர்டுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆபாசப் பட உலகம் எங்கும் உள்ளது. ஆனால் நான் இந்தி படத்தில் நடித்துள்ளேன். படத்தில் அழகை பளிச்சென்று காட்டாமல் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்ததற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எனது பட டிக்கெட்டை வாங்கியவர்களுக்கு நன்றி.

படத்தில் நடிக்கையில் உங்கள் பின்னணியும் வெளிப்படும் என்று மக்கள் எதிர்பார்ப்பது பற்றி...

நான் வேறு திரையுலகைச் சேர்ந்தவள். வேறு நாட்டில் இருந்து வந்துள்ளேன். ஜிஸ்ம் 2 தான் என் முதல் படம். என்னைப் பற்றிய நினைப்பு மாற காலம் எடுக்கும் என்று தெரியும். என்னால் நடிக்க முடியாத என்று நினைப்பவர்கள் முன்பு என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். எனது கடந்த காலத்தை விட்டுவிட்டு புதிய எதிர்காலத்தை நோக்கி வந்துள்ளேன் என்றார்.

 

'குண்டக்க மண்டக்க' படங்களை லீக் செய்த பாக்.நடிகை மதிரா!

Mathira Naked Pictures Leaked

கராச்சி: வீணா மாலிக்கின் காலம் முடிவடைவதைப் போலத் தோன்றுகிறது. அவர் புறப்பட்டு வந்த அதே பாகிஸ்தானிலிருந்து ஒரு புதிய கவர்ச்சிப் பிரளயம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் நடிகை மதிரா, தனது செல்போன் மூலம் எடுத்த கவர்ச்சிகரமான, நிர்வாணப் புகைப்படங்களை அவரே லீக் செய்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மதிரா. கவர்ச்சிப் புரட்சியில் புதிதாக இணைந்துள்ள கலக்கல் நடிகை. வீணா மாலிக்கை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார் போல. அந்த அளவுக்கு கவர்ச்சியில் புதிய புதிய கோணங்களைக் காட்டி வருகிறார்.

முன்பு ஒருமுறை பாகிஸ்தான் மாடல் வக்கால் பதானுடன் இணைந்து ஒரு பத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து பயமுறுத்தினார். இந்த இந்த நிலையில், தற்போது தனது ரூமில் சுதந்திரமாக இருந்தபோது எடுக்கப்பட்ட செல்போன் படங்களை லீக் செய்து பயமுறுத்தியுள்ளார்.

பாஜி ஆன்லைன் என்ற டிவி ஷோவை தொகுத்து வழங்கி வரும் மதிரா, இந்தப் புகைப்படங்களில் நிர்வாணமாகவும் காணப்படுகிறார். கக்கூஸில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படமும் உள்ளது. மார்பழகைக் காட்டும் வகையிலான புகைப்படமும் உள்ளது. என்ன வளம் இல்லை என்னிடம் என்று அவர் கேட்பது போல உள்ளது அவரது கவர்ச்சிப் புகைப்படங்கள்.

மதிராவின் இந்தப் புகைப்படங்கள் புதிய புயலைக் கிளப்பியுள்ளன. வீணாவைப் போல இவரும் பாலிவுட் பக்கம் வந்தாலும் வரலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவேளை அவர் வந்தால்,வீணாவின் கதி அதோ கதிதான் என்றும் கூறுகிறார்கள்.

 

'திறந்த மனதுடன்' லேடி காகா... யூடியூபில் 'ரவுண்டுக்கு' விட்டார்!

லாஸ் ஏஞ்சலெஸ்: பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா செய்யாத சேட்டைகள் இல்லை. லேட்டஸ்டாக அவர் தனது வீட்டில் எடுத்த ஒரு ரகளை வீடியோவை யூடியூபில் ரவுண்டுக்கு விட்டுள்ளார். அந்த வீடியோல் ஆட்டம் பாட்டம் போடும் காகா, தனது மேலாடையைத் துறந்து மார்புகளை வெட்டவெளிச்சமாக்கும் காட்சிகள் உள்ளன.

லேடி காகா பாடுவதைத் தவிர வேறு பல வேலைகளையும் செய்வதில் கில்லாடி. நிர்வாணமாகப் போஸ் கொடுத்துள்ளார். கவர்ச்சிகரமான டிரஸ்ஸுடனும், மேக்கப்புடனும் வலம் வந்துள்ளர். இந்த நிலையில் புதிதாக ஒரு கலக்கல் வீடியோ யூடியூபில் வலம் வருகிறது.

அந்த வீடியோவை தனது வீட்டில் எடுத்துள்ளார் காகா. அதில் கேஷுவலான உடையில் இருக்கும் காகா, டான்ஸ் ஆடுகிறார், பாடுகிறார், சிரிக்கிறார், கூடவே தனது மேலாடையைத் துறந்து மார்புகளையும் பளிச்சென காட்டுகிறார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், தனது தங்கை நதாலி எடுத்ததாகவும் கூறியுள்ளார் காகா.

காகாவின் சேட்டைத்தனங்களைப் பார்த்து அவரது தங்கை நதாலி சிரிப்பதும் வீடியோல் உள்ளது. காகா ஆடும்போது கிச்சனில் இருந்து அவரது அம்மா சிந்தியாவும் வந்து தனது மகளின் சேட்டைகளைப் பார்த்து ரசிக்கிறார்.

 

ஸ்ரீகாந்தின் நகைச்சுவை நடிப்புக்காக பாகனை வாங்கியது வேந்தர் மூவீஸ்!

Vendhar Movie Gets The Rights Paagan   

ஸ்ரீகாந்த் - ஜனனி நடித்துள்ள பாகன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியது எஸ் மதனின் வேந்தர் மூவீஸ்.

ஸ்ரீகாந்த், ஜனனி, சூரி, பாண்டி, கோவை சரளா, ஏ வெங்கடேஷ் உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் பாகன்.

ஸ்ரீகாந்த் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிப்பில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் இந்தப் படத்தில். தமிழ் சினிமாவில் தனக்கு மிகப் பெரிய திருப்பு முனையை இந்தப் படம் தரும் என நம்புகிறார் ஸ்ரீகாந்த்.

அவருடன் பரோட்டா சூரி காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் அஸ்லம். விபி புரொடக்ஷன்ஸ் சார்பில் விஸ்வாய் யு லாட் மற்றும் வி புருஷோத்தமன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரிவியூ பார்த்த வேந்தர் மூவீஸ் எஸ் மதன், படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறி, அதன் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார். விரைவில் பாடல் வெளியீடு நடக்கிறது.

வரும் செப்டம்பரில் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசாகவிருக்கிறது பாகன்.

 

ஷங்கரின் 'ஐ' தெலுங்கில் 'ஹேன்ட்ஸம் கய்'!

Shankar Titles I As Handsome Guy Telugu

விக்ரம் - எமி நடிக்கும் தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ள இயக்குனர் ஷங்கர், தெலுங்கில் இதற்கு 'ஹேன்ட்ஸம் கய்' என்று தலைப்பு வைத்துள்ளார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில் மென் இன் பிளாக் சீரிஸ் படங்களில் பணிபுரிந்த மேரி வாட், கதாபாத்திரங்களுக்கு பிரத்யேகமான உடைகளை வடிவமைக்கிறார்.

ஹாரிபாட்டர் சீரிஸ் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரைசிங் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் பகுதிகளை அமைக்கிறது. ஹாலிவுட் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள்.

சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவைச் சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள். இந்த ரொமான்ட்டிக் த்ரில்லர் படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இந்தப் படத்தில் காமெடிக்கும் பஞ்சமில்லை. பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசனை வைத்து சில ஸ்பூப் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்!

 

6 பட பாடல் ஷூட்டிங்... பாங்காக்கில் ஷாம் - பூனம் கவுர்

Shaam Goes Bangkok 6

தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்காக தன் உடலை இந்த அளவு வருத்திக் கொண்ட நடிகரைப் பார்த்திருக்க முடியாது. அவர் ஷாம். படம் 6.

படத்தின் தலைப்பு மட்டுமல்ல.. கதையே ரொம்ப வித்தியாசமானது, புதுமையானது என்பதால், அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார் ஷாம்.

தெலுங்கு, தமிழில் வந்த வேறு வாய்ப்புகளையெல்லாம் கூட உதறிவிட்டு, இந்தப் படத்துக்காக மட்டுமே மெனக்கெட்டார். கிட்டத்தட்ட 20 கிலோவுக்கு மேல் எடையைக் குறைத்தார்.

ஹாலிவுட்டில் இதற்கு முன் பேட்மேன், மெஷினிஸ்ட் படங்களின் நாயகன் கிறிஸ்டியன் பாலேதான் இந்த அளவு கடுமையாகப் பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைத்தவர். கிட்டத்தட்ட அவரது சாதனையை நெருங்கும் அளவுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார் ஷாம் என்றால் மிகையல்ல. சொல்லப் போனால் அவரை முன்மாதிரியாக வைத்துதான் இந்த பயிற்சிகளில் இறங்கினாராம்.

தன் முகத்தை தானே அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றிக் கொண்டார். கண்களின் கீழிமைகளை வீங்க வைத்து, மருத்துவர்கள் அதிர்ந்து போய் திட்டுமளவுக்கு இறங்கினார். அத்தனையும், படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக.

அவரது முயற்சியைப் பாராட்டியவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ஜெயமோகன்.

ஷாம் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை. மிகச் சிறப்பாக வந்திருக்கிறது படம். கிட்டத்தட்டை அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. ஒரே ஒரு பாடல் சேர்த்தால் படம் வணிகரீதியாகவும் சிறப்பாக இருக்கும் என்பதால், இப்போது அந்தப் பாடலை ஷூட் செய்ய தாய்லாந்து தலைநகர் பாங்காக் போயி்ருக்கிறார்கள் ஹீரோ ஷாமும் இயக்குநர் விஇசட் துரையும்.

ஹீரோயின் பூனம் கவுட் உள்ளிட்ட படக்குழுவினரும் சென்றுள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு மதி. இசையை ஸ்ரீகாந்த் தேவாவும், எடிட்டிங்கை ஆண்டனியும் கவனிக்கிறார்கள்.

 

ஜெயா டிவியில் விசுவின் பெரியவர்!

Visu Directs New Serial Periyavar

சின்னத்திரையில் முதன்முறையாக பெரியவர் என்ற நெடுந்தொடரை இயக்க உள்ளார் நடிகரும் இயக்குநருமான விசு.

மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம், திருமதி ஒரு வெகுமதி, சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களை இயக்கியவர் விசு. சினிமாவில் இருந்து சின்னத்திரையில் அரட்டை அரங்கம் என்ற விவாத நிகழ்ச்சியை நடத்தி பிரபலமடைந்தார். சன் டிவியில் இருந்து ஜெயா டிவிக்கு சென்ற பின்னர் மக்கள் அரங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதுவரை சீரியல் பக்கம் போகாத விசு தற்போது முதன் முறையாக ஜெயா டிவிக்காக சீரியலை இயக்க இருக்கிறாராம். பெரியவர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியல் விரைவில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இயக்குநர் பாலச்சந்தரிடம் பணியாற்றி அவர் வழியில் திரைப்படங்களை இயக்கியவர் விசு. தற்போது குருவின் வழியில் தொடரை இயக்க இருக்கிறார். தற்போது பெரியவர் தொடருக்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பூனம் பாண்டேவின் அடுத்த ரிலீஸ்... பிரா போடாத புகைப்படம்!

Poonam Pandey Flaunts Braless Pic On Twitter

மும்பை: அடுத்தடுத்து மசாலாப் படங்களாக வெளியிட்டு தன் அழகைத் தானே தாலாட்டிக் கொண்டிருக்கும் பூனம் பாண்டே இன்னும் ஒரு மிரட்டல் படத்தை வெளியிட்டுள்ளார் டிவிட்டர் மூலம்.

இந்த முறை அவர் வெளியிட்டுள்ளது 'பிரா' போடாமல் எடுத்துக் கொண்ட படத்தை. முன்னழகின் இரு முனைகளும் படு தெளிவாகத் தெரிகின்றன இந்தப் படத்தில்.

தனது நிர்வாணம் மற்றும் அறைகுறை நிர்வாணப்ப படங்களை நூற்றுக்கணக்கில் டிவிட்டர் மூலமும், தனது இணையதளம் மூலமும் தொடர்ந்து அப்லோட் செய்து வரும் பூனம் பாண்டே சமீபத்தில் தனது குளியல் படங்களை வெளியிட்டு அனைவரையும் சூடாக்கினார். இந்த நிலையில் பிரா போடாத தனது புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டியுள்ளார்.

இந்தப் படத்தில் பிரா போடவில்லை பூனம், பச்சை, வெள்ளை பட்டையுடன் கூடிய டி சர்ட் போட்டபடி காட்சி தருகிறார். அவரது மார்புகளின் இரு முனைப் பகுதிகளும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படத்தைப் போட்டு அவர் கொடுத்திருக்கும் கமெண்ட்டைப் பாருங்க... எனது பிரா போடாத படத்தைப் பார்த்து நான் ஏதோ புதிய பேஷனை அறிமுகப்படுத்தியிருப்பதாக மக்கள் நினைக்கலாம் என்று கூறியுள்ளார் பூனம்.

மேலும் அவர் கூறுகையில், நான் பிரா போடுவதையே விட்டு விட்டேன். ஒரு வருடமாச்சு நான் பிராவை விட்டு. அது எனக்கு அசவுகரியமாக இருப்பதால் விட்டு விட்டேன். எனக்கு பிரா என்றாலே இப்போது பிடிப்பதில்லை என்று கூறியுள்ளார் பூனம்.

பிரா குறித்து பூனம் மேலும் உதிர்த்துள்ள வார்த்தைகளையும் படித்து வையுங்கள்...

எனது பிராவை எரிக்க நான் ஆசைப்படுகிறேன். ஆனால் அதை அணைக்க தீயணைப்புத் துறையினருக்கு நான்கு நாட்கள் ஆகும்.

பூனத்தோடு பெரிய 'பிரா'ப்ளமா இருக்கே...!

 

தில்லு முல்லு ரீமேக் குழுவுக்கு ரஜினி - கமல் வாழ்த்து!

Superstar Ulaganayagan Wish Thillu Mullu Remake Team

தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்யவிருக்கும் குழுவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாஸன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வேந்தர் மூவீஸ் தயாரிக்க, வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இயக்க, 'சென்னை 28' சிவா - இஷா தல்வார் நடிக்கும் படம் இது. தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பார் என்று தெரிகிறது. சவுகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா நடிக்கிறார். பிரபல காமெடி நடிகர் பிரமானந்தம் முக்கிய வேடமேற்றுள்ளார்.

இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா இருவரும் முதன் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள்.

படம் தொடங்கும் முன், தில்லுமுல்லுவின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் படத்தின் இயக்குநர் பத்ரியும், ஹீரோவாக நடிக்கும் சிவாவும்.

படத்தின் à®'ரிஜினல் இயக்குநர் கே பாலச்சந்தர், உலகநாயகன் கமல் ஹாஸன் ஆகியோரும் இந்த ரீமேக் குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தில்லுமுல்லுவில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விளம்பரத்தில் நடிக்க ஆசை – அருள்செல்வி

Valagam Anchor Arulselvi

மக்கள் டிவியின் வளாகம் நிகழ்ச்சியில் பங்குச்சந்தை விபரங்களை அசராமல் சொல்லும் அருள்செல்வி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வருவதற்கு முன்பு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்தவராம். திருமணத்திற்குப்பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் பங்குச்சந்தை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையை செய்து வருகிறார்.

வளாகம் நிகழ்ச்சியோடு இப்பொழுது வேளாண் சந்தை, ​​ ஏற்றுமதி இறக்குமதி,​​ வேலைவாய்ப்பு தகவல் போன்ற ​ நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்ல கைவினைப் பொருட்கள் செய்வதில்,​​ ஓவியம் வரைவதில்,​​ தஞ்சாவூர் ஓவியங்கள் வரைதல் போன்ற கலைநயம் மிக்க வேலைகள் மீது அருள் செல்விக்கு ஈடுபாடு அதிகம்.​ அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார். யோகா முறைப்படி கற்றுள்ளதால்​ அதனால் பயிற்சியும் அளித்து வருகிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளாராக மட்டுமல்ல சாதாரணமாக பேசும் போதே ஆங்கிலம் கலப்பில்லாமல்தான் பேசுவாரம் அருட்செல்வி. சீரியலில் நடிக்க விருப்பமில்லை என்றாலும் விளம்பரப்படங்களில் நடிக்க ஆர்வம் அதிகமாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இன்னமும் அமையவில்லை என்கிறார் அருள்செல்வி. ஒரு தயாரிப்பாளராக நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசையும் அருள்செல்விக்கு இருக்கிறது.

 

திருச்செல்வத்தின் பொக்கிஷமான நினைவுகள்!

Thiruselvam Theatres Pokkisham

மெட்டி ஒலி தொடரில் அலட்டல் மாப்பிள்ளையாக நடித்து கோலங்கள் இயக்கிய திருச்செல்வத்தை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. வெற்றிகரமான அந்த தொடருக்குப் பின்னர் மாதவியை ஆரம்பித்த வேகத்தில் பாதியிலேயே அதிலிருந்து விலகிவிட்டார். இப்பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் பொக்கிஷம் தொடரை தயாரித்து இயக்கிவருகிறார். தனது இனிய பயணங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்காவிலுள்ள 'நாடியம்' தான் எனக்கு சொந்த ஊர், எங்களது விவசாயக் குடும்பம், அப்பா வேலுச்சாமி, அம்மா சரஸ்வதி, இரண்டு அக்கா செல்வி, மாதவி. நான் தான் கடைக்குட்டி, என் மனைவி பெயர் பாரதி. ஒரே மகள் பிரியதர்ஷினி. வீட்டில் மகளை 'அபி' என்று செல்லமாக அழைக்கிறேன். அழகான அன்பான சிறிய குடும்பம்.

தஞ்சை பூண்டி கல்லூரி பி.எஸ்.சி., பிசிக்ஸ் படித்தேன். 1988ல் சென்னை திரைப்படப் பயிற்சி கல்லூரி சேர்ந்து, 1991ல் படிப்பை முடித்து வெளியே வந்து சவுண்ட் என்ஜினியராக ஐந்தாண்டு பணியாற்றினேன். நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் திருமுருகன் என்னுடன் கூடப் படித்தவர். இருவரும் ஒரேசெட். அப்போது திருமுருகன் 'காவேரி' என்றொரு சீரியலை இயக்கினார் அவருடன் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.

அடுத்து திருமுருகன் இயக்கிய மெகா சீரியலான 'மெட்டிஒலி'யிலும் நான் அசோஸியேட் டைரக்டராக என் பணியை தொடர்ந்தேன். அசோஸியேட் வேலையோடு 'மெட்டிஒலி'யில் மாப்பிள்ளை சந்தோஷ் கதாபாத்திரத்தில் என்னை நடிக்கும்படி சொன்னார். அதனால் நடிப்பிலும் நல்ல பெயரும் கிடைத்தது. எனக்கும் நடிப்பு வரும் என்கிற நம்பிக்கை எனக்குள் ஏற்படுத்தியது. இயக்குநர் பயிற்சியோடு நடிப்பும் தெரிந்துகொண்டேன். பின்னர் 'கோலங்கள்' மெகா தொடர் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'கோலங்கள்' நெடுந்தொடர் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பானது.

இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் பொக்கிஷம் தொடர் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. என்னைப் பொருத்தவரை நல்ல மனித நேயம் உள்ள மனிதர்களின் குணத்தை தான் பொக்கிஷம் என்பேன். கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் நடிப்பு என இதில் எனக்கு பல வேலைகள் இருக்கின்றன. அதனால் ரொம்ப பிஸியாக இருக்கிறேன். இந்த தொடரின் நாயகி மீரா கிருஷ்ணா. மலையாளத்தில் ரெண்டு படங்கள் நடிச்சிருக்காங்க. மலையாள தொடர்களிலும் நடிச்சிருக்காங்க. இந்தக் கதைக்கு புதுசா யாராவது இருந்தால் நல்லா இருக்கும்னு தேடினோம். அப்ப நடிகை வனிதா மேடம்தான் மீராவை பற்றி சொன்னாங்க. சரின்னு வரச் சொல்லி பார்த்தோம். கதைக்கு பொருத்தமா இருந்தாங்க. அவங்களையே செலக்ட் பண்ணிட்டோம்.

பொக்கிஷம்ங்கிற வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தையும் கூட, கோலங்கள் தொடரில் கூட நிறைய இடத்தில் நட்பை பற்றி சொல்லும் போது பொக்கிஷம்ங்கிற வார்த்தையை உபயோகப்படுத்தியிருப்பேன்.

அப்போதே அடுத்த தொடர் பண்ணும்போது பொக்கிஷம்னு தான் டைட்டில் வைக்கணும்னு நினைத்திருந்தேன். இந்த தொடரின் கதையும் அதற்கு பொருத்தமா அமைந்ததால் அந்த தலைப்பையே வைத்துவிட்டேன்.

ஒரு தாய்க்கு மகன் பொக்கிஷம், ஒரு மனிதனுக்கு நல்ல நண்பன் ஒரு பொக்கிஷம். இப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நல்ல கேரக்டர்கள் வருவார்கள். அதை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால். உங்கள் பொக்கிஷத்தை இழந்து விடுவீர்கள் ஆனால் அதன்பிறகு நீங்கள் தேடி அடைகிற பொக்கிஷம் என்பது உயிரற்ற வெறும் பொருட்களாக தான் இருக்கும் அதில் முழுமையான சந்தோஷம் கிடைக்காது எனவே நமக்கு கிடைத்த பொக்கிஷத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்பினார் திருச்செல்வம்.

 

ஜெயித்த பணத்தை பரிசாக கொடுத்த பவர்ஸ்டார் !

Power Star Luckka Kickka

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கேம் ஷோ ஒன்றில் பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் போட்டியில் தான் ஜெயித்த பணத்தை தோல்வியடைந்த பெண்களுக்கு பரிசாகக் கொடுத்தார்.

திரைப்பட நடிகை ரோஜா நடத்தும் கேம்ஷோ லக்கா, கிக்கா. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்று பரிசினை பெற்றுச் செல்கின்றனர். கடந்த வார நிகழ்ச்சியில் திரைப்பட நடன பெண்மணிகள் செந்தாமரை, மைனா நாகு ஆகியோருடன் பவர்ஸ்டார் சீனிவாசன் பங்கேற்றார்.

ஒவ்வொரு சுற்றிலும் பவர் ஸ்டாரின் கையே ஓங்கியது. அவருக்கு லக் அதிகம் என்பதைப்போல 36000 ரூபாய் வரை போட்டியில் ஜெயித்தார் சீனிவாசன். போட்டியில் கலந்து கொண்ட பிற பங்கேற்பாளர்களுக்கு 4000, 7000 ரூபாய்கள் மட்டுமே கிடைத்தன.

இறுதியில் 36000 ரூபாய் ஜெயித்த சீனிவாசன் நிகழ்ச்சியின் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பரிசுத் தொகைக்கான செக் வழங்கப்பட்டது. ஆனால் பெருந்தன்மையாக தன்னுடைய பரிசுப்பணத்தை போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்த செந்தாமரை, மைனா நாகு ஆகியோருக்கு வழங்கி தான் பவர்ஸ்டார்தான் என்பதை மீண்டும் நிரூபித்தார் சீனிவாசன்.