நோ அப்ஜெக்சன் குடுக்க ‘நோ’ சொன்ன பவர் ஸ்டார்…

Power Star Tried Stop Sundarapandian Release

சுந்தரபாண்டியன் படத்தில் பவர் ஸ்டாரின் போஸ்டரை கிழிப்பது போல ஒரு காட்சி வரும். இதற்கு சென்சார் அதிகாரிகள் பவர்ஸ்டாரிடம் ‘நோ அப்ஜெக்சன்' சர்டிபிகேட் வாங்கி வரும்படி சுந்தரபாண்டியன் இயக்குநரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு நோ சொன்ன பவர், அரசியல் பிரபலத்தின் பேச்சை கேட்டு உடனே சர்ட்டிபிகேட் கொடுத்தாராம்.

உசிலம்பட்டி பகுதிகளில் கார்த்திக் நடித்த படத்தின் போஸ்டர்கள்தான் ஒட்டவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அந்த ஊரில் பவர்ஸ்டார் நடித்த லத்திகா படத்தின் போஸ்டரை ஒட்டியிருப்பார்கள்.

"ஏய் யாரு போட்டாவை எங்க வந்து ஒட்டியிருக்க"? என்று கூறியபடி உசிலம்பட்டியில் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டோவை கிழிப்பார் ஒருவர்.

இது சுந்தரபாண்டியன் படத்தில் வரும் ஒரு காட்சி.

படம் முழுவதும் பார்த்துவிட்டு டைரக்டரிடம் கை குலுக்கிய அதிகாரிகள் 'படம் சூப்பர். கண்டிப்பா ஹிட்டாகும்' என்றெல்லாம் நம்பிக்கை வார்த்தைகளை இறைத்துவிட்டு ஒரே ஒரு நிபந்தனை போட்டார்கள்.

'படத்தின் ஆரம்பத்தில் டாக்டர் சீனிவாசனின் போஸ்டரை கிழிக்கிற மாதிரி ஒரு ஷாட் வருது. அதனால் அவருகிட்ட ஒரு நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துருங்க!'என்று கூறிவிட்டனர்.

'இதுக்கு போய் டென்ஷன் எதுக்கு. நேராவே பவர் ஸ்டாரிடம் கேட்டால் கொடுத்துருவாரு' என்று சில நண்பர்களும், 'கொடுக்காட்டி என்ன பண்ணுவே?' என்று பல நண்பர்களும் குழப்ப... தனக்கும் பவருக்கும் பொதுவான நண்பர் ஒருவருக்கு போன் அடித்து குழப்பத்தை கொட்டினார் ஹீரோ சசிகுமார்.

அந்த நண்பர் பவரிடம் பேசவே, என் போஸ்டரை கிழிப்பாய்ங்க. நான் நோ-அப்ஜெக்ஷன் தரணுமா? தரவே முடியாது. அந்த படத்தை எப்படி ரிலீஸ் பண்றாங்கன்னு பார்க்குறேன்' என்று சவால் விட்டாராம் அவர்.

இதென்னடா வம்பா போச்சு என்று அதிர்ச்சியுற்ற நண்பர், அடுத்த வினாடியே விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு போன் அடிக்க, 'பிரச்சனைய விடுங்க. நான் அவருகிட்ட நம்ம வன்னியரசை பேச சொல்றேன்' என்றவர் அவரைவிட்டு பவருக்கு போன் அடிக்க... கொஞ்ச நேரத்திலேயே நண்பர் லைனுக்கு வந்தாராம் பவர்.

'இந்த சின்ன விஷயத்துக்கு அண்ணன் வரைக்கும் போயிட்டீங்களே... நேரா ஆபிஸ் போங்க. என் பி.ஏ. இருப்பார். கையெழுத்து போட்ட என் லெட்டர் பேட் ஒண்ணு கொடுப்பாரு. என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க. 'நோ-அப்ஜெக்சன் என்றாராம்.

அன்றைக்கு நோ அப்ஜெக்சன் சொன்ன பவர் ஸ்டார் இப்போது சசிகுமார் கூட நடிக்க ஆசைப்படுகிறாராம்.

போஸ்டரை கிழிச்சி ஹீரோவாக்கிட்டாங்களோ?

 

மீண்டும் முருகதாஸுடன் இணைகிறார் விஜய்.. ஆனால்..!

Murugadass Confirms His Next With Vijay

மீண்டும் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைகிறார் விஜய். ஆனால் இந்தப் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என உறுதியாக முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்துவிட்டதாக அவர்களே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்யப் போவதாக செய்திகள் கிளம்பின.

இதுகுறித்து இயக்குநர் முருகதாஸிடம் விசாரித்தபோது, "இருவரும் மீண்டும் இணையும் திட்டமிருக்கிறது. ஆனால் நிச்சயம் இது துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது," என்றார்.

முருகதாஸ் இப்போது துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார்.

விஜய் தலைவா, ஜில்லா என இரு படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கைவசமுள்ள படங்களை முடித்ததும் புதிய படத்தைத் துவங்கப்போகிறார்களாம்.

 

கடல் படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்!

Distributor Files Police Complaint On Manirathnam

சென்னை: மணிரத்னம் இயக்கி வெளியிட்ட கடல் படத்தால் ரூ 17 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் விநியோகஸ்தர் புகார் கொடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ‘கடல்' படம் கடந்த 1-ந்தேதி ரிலீசானது. இதில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் அறிமுகமாகியுள்ளனர்.

இந்த படத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் புகார் கூறினார். மணிரத்னம் அலுவலகத்திலும் முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்.

இன்று காலை விநியோகஸ்தர் மன்னன் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில், "‘கடல்' படத்தை வாங்கி விநியோகிப்பதற்கு முன்பு அதனை திரையிட்டு காட்டும்படி கோரினேன். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காண்பிக்க இயலாது என மணிரத்னம் மானேஜர் கூறிவிட்டார். மணிரத்னத்துக்காக படம் ஓடும் என்று நம்பி வாங்கலாம் என்று கிருஷ்ணா என்னிடம் கூறினார்.

இதனால் ரூ.20 கோடி கொடுத்து ‘கடல்' படத்தை வாங்கினேன். ஆனால் ரூ.3 கோடிதான் கிடைத்தது. மணிரத்னத்தை சந்தித்து நஷ்டம் பற்றி முறையிட பலதடவை முயற்சித்தோம். ஆனால் சந்திக்க முடியவில்லை. கிருஷ்ணா மிரட்டுகிறார். எனவே தொகையை வாங்கித்தர வேண்டும். கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

த்ரிஷாவுக்கு பெண் சாதனையாளர் விருது!

Big Honour Actress Trisha   

நடிகை த்ரிஷாவுக்கு பெண் சாதனையாளருக்கான விருதினை வழங்குகிறது ஒரு பேஷன் பத்திரிகை.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பத்தாண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா.

இப்போதும் ஜெயம் ரவி, ஜீவா என முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்து வருகிறார்.

த்ரிஷாவின் திரையுலக சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பெண் சாதனையாளர் விருதினை வழங்குகிறது ஜேஎப்டபிள்யூ பத்திரிகை.

மார்ச் 1-ம் தேதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருது த்ரிஷாவுக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்வையும் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது," என்றார்.

த்ரிஷாவுடன் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, பாடகி சுஜாதா உள்ளிட்டோரும் கவுரவிக்கப்படுகிறார்கள்.

 

நல்ல கதை இருந்தா வாங்க.. நான் தயார்!! - சினேகா

Sneha Wants Play Characters Like Amuthavalli   

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்த நடிக்க நான் தயார் என்று நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.

பிரசன்னாவைத் திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து விளம்பரங்களில் நடிப்பது, கடைகள் திறப்பது என்று பிஸியாக உள்ளார் சினேகா.

சமீபத்தில் சினேகா நடித்த ‘ஹரிதாஸ்' படம் ரிலீசாகி, அவருக்கு பாராட்டுகள் குவிகன்றன.

இது அவரது திரைவாழ்க்கையில் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்துள்ளது.

தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் நடிக்க தயாராக இருப்பதாக சினேகாவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து சினேகா கூறுகையில், "இந்தப் படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. திருமணம் உறுதியானபோது ஒப்புக் கொண்டேன். திருமணத்துக்குப் பிறகு வெளியானது.

இதில் நான் ஏற்ற அமுதவல்லி வேடம் ரொம்பப் பிடித்துவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல படமாக இது அமைந்துள்ளது.

ஹரிதாஸ் போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன். இதுபோன்ற படங்களுக்கே இனி முன்னுரிமை," என்றார்.

 

தனுஷ் நாயகி நஸ்ரியா நாசிம் நடிக்கும் புதிய படம் நேரம்!

Nazriya Nazim Make Her Debut Neram

சற்குணம் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துவரும் நஸ்ரியா நாசிம், அந்தப் படம் வெளியாகும் முன்பே இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார். அது 'நேரம்.' தனுஷ் படத்துக்கு முன்பே இந்தப் படம் வெளியாகிறது.

வின்னர் புல்ஸ்ஃபிலிம்ஸ் மற்றும் கோரல் க்ரூப் விஸ்வநாதன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை, டிஎப்டி முடித்து ஐந்துக்கும் மேற்ப்பட்ட குறும்படங்கள், விளம்பரப்படங்கள் மற்றும் மியூசிக் வீடியோ ஆல்பம் செய்த அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்குகிறார்.

சென்ற வருடம் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கிய யுவ் என்னும் மலையாள மியூசிக் விடியோ ஆல்பம் ஊடகங்கள், இனணயதளங்களில் மிகபெரிய வரவேற்பைப் பெற்றதும், சோனி நிறுவனம் வெளியிட்ட முதல் மலையாள மியூசிக் விடியோ ஆல்பம் யுவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நிவின் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் முன்னனி கதாநாயகர்களில் ஒருவர். சென்ற வருடம் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த 'தட்டத்தின் மரியத்தில்' என்னும் படம் மூலம் மலையாள திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நிவின், நேரம் படம் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகிறார்.

அல்ஃபோன்ஸ் புத்திரனின் மியூசிக் விடியோ ஆல்பத்தில் நடித்த நஸ்ரியா நாசிம்தான், நேரம் படத்தின் நாயகி.

இந்த மியூசிக் விடியோ ஆல்பம் பார்த்துதான் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படத்திலும், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்திலும் இவரை நாயகியாக்கினார்களாம்.

நேரம் இரண்டு வகைப்படும். ஒன்று நல்ல நேரம், இன்னோன்று கேட்ட நேரம். நல்ல நேரம் வந்தால் ஆண்டியும் அரசனாவான். கெட்ட நேரம் வந்தால் அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழியை அடிப்படையாக வைத்து கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன்.

சென்னை மந்தைவெளி பகுதியை சுற்றி கதைகளம் அமைந்திருப்பதால், அந்தந்த பகுதிகளிலே படத்தை எடுத்திருப்பது சிறப்பம்சமாகும்.

இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ஆனந்த் சி சந்திரன். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

 

என்ன, விஜயின் துப்பாக்கி வசூல் ரூ.180 கோடியா?!

Vijay S Thuppakki Makes 180 Crore

சென்னை: விஜய் நடித்த துப்பாக்கி படம் இந்தியாவில் மட்டும் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக ஈராஸ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படம் ரிலீஸாகி 100 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி படம் இந்தியாவில் மட்டும் ரூ.180 கோடி வசூலித்துள்ளதாக ஈராஸ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த நான்காவது தமிழ் படம் என்ற பெருமையை துப்பாக்கி பெற்றுள்ளது.

துப்பாக்கி படம் நவம்பர் மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் 1,500 திரைகளில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் படம் ரிலீஸான அன்றே ரூ.9.25 கோடி வசூலித்தது. ரிலீஸான முதல் வாரம் உலகம் முழுவதும் ரூ.65.32 கோடி வசூல் செய்தது என்று செய்திகள் வெளியாகின.

துப்பாக்கி ரூ.100 கோடி வசூல் செய்தது என்பதையே நம்ப முடியாத நிலையில் பலர் இருக்க, அந்த படம் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஸ்வரூபம் ரூ.200 கோடி வசூலிச்சிருச்சாமே!!!

Kamal Haasan Starts 200 Crore Club

நியூ ஜெர்சி: கமல் ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த படத்தின் நாயகி பூஜா குமார் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ரிலீஸான கதை உலகம் அறிந்ததே. ஆனால் அத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு ரிலீஸான விஸ்வரூபம் நல்ல வசூல் செய்து வருகிறது. இங்கிலாந்தில் இன்னும் விஸ்வரூபத்திற்கு அதிக கிராக்கி உள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபத்தில் கமல் மனைவியாக நடித்த பூஜா குமார் நியூ ஜெர்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் விஸ்வரூபம் படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

கமல் ஹாசன் விஸ்வரூபம்-2 வேலையில் மும்முரமாக உள்ளார். இந்த ஆண்டே விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்ய அவர் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.