நாடு விட்டு நாடு வந்து செல்லும் தொகுப்பாளினி பாவனா!

Super Singer Coordinator Bavana
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா திருமணமாகி சிங்கப்பூரில் செட்டில் ஆனாலும் பறந்து வந்து நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்கிறாராம்.

பாவனாவின் ஸ்டைலான பேச்சும் குரல் வளமும் பெரும்பான்மையான ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே இவர் சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் பறந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக பவனா இருந்தாலும் இஞ்சினியரிங் படித்திருக்கிறார். மீடியா ஆசை காரணமாகவே ரேடியோ ஜாக்கியாக களம் இறங்கி பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக மாறினாராம். அம்மணிக்கு சினிமாவில் டப்பிங் பேச வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம்.

யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா!
Close
 
 

6 ம் ஆண்டில் விஜய் டிவி அவார்ட்ஸ் : தமிழகத்தை வலம் வரும் ரசிகன் எக்ஸ்பிரஸ்

6th Annual Vijay Awards 2012 Vijay
விஜய் டிவியின் விஜய் விருதுகள் விழா 6ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது. இதற்கான தொடக்க விழா கடந்த 27ம் தொடங்கியது விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தை ஏவிஎம் சரவணன், நடிகர் சிவகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இந்த ஆண்டு ரசிகன் எக்ஸ்பிரஸ் முற்றிலும் மாறுபட்ட வடிவில் நடிகர் நடிகையர்களின் புகைப்படம் தாங்கி தமிழ்நாடு முழுவதும் வலம் வருகிறது.

கடந்த 2006 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, 6ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாகவும், புதுமாதிரியாகவும் நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் தொடக்கமாக ரசிகன் எக்ஸ்பிரஸ் வாக்குகளைத் தாங்கி தமிழகம் முழுவதும் வலம் வரத் தொடங்கியுள்ளது. இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தில் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட விருது வழங்கும் புகைப்படங்கள் மற்றும் பங்குகொண்ட கலைஞர்களில் படங்கள், படக்காட்சிகள் என்று மக்கள் விரும்பிப்பார்க்கும் அனைவரது விஷயங்களும் அடங்கியுள்ளனவாம். சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், குமரி வரை சென்று அங்குள்ள ரசிகர்களின் வாக்குகளை சேகரித்து திரும்பும்

மக்களின் விருப்பமான திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், பாடல் ஆகிய ஐந்து பிரிவுகளை நேயர்களே தேர்வு செய்வர். மீதமுள்ள பிரிபிரிவுகளுக்கான விருதுகளை விழா நடுவர்கள் தேர்வுசெய்வர்.

விஜய் விருதுகளைப் பொறுத்தவரையில் முக்கிய விருதுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவது வரவேற்கப்படும் விஷயமாகும். ஆறாம் ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவில் தமிழ்த்திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று ஏராளமான விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது விழாவில் தமிழ்த்திரைப்படத்துறையில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியின் விருது விழா கடந்த 2006 ம் ஆண்டு முதல் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்காக விஜய் விருதுகள் விழா பிரம்மாண்டமாக சென்னையில் ஜூன் 25ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று விஜய் டிவி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Close
 
 

ஓ.கே. ஓ.கே. டாட்டூ குத்திய உதயநிதி

Udhayanidhi S Latest Tattoo
உதயநிதி ஸ்டாலின் தனது முதல் படமான ஓ.கே. ஓ.கே. என்ற தலைப்பை தனது உடலில் பச்சை குத்தியுள்ளாராம்.

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவானார். ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இன்னும் சில நாட்களில் 50 நாட்களை தொடவிருக்கிறது. இந்த படத்தில் புதுமுக நாயகன் உதயநிதியின் நடிப்பு பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் நடித்த முதல் படம் அதுவும் ஹிட்டான படத்தின் நினைவு தனது வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்பதற்காக அவர் படத்தின் முதல் எழுத்துகளான ஓ.கே.ஓ.கே. வை தனது உடலில் பச்சை குத்தியுள்ளார். அவர் ஏற்கனவே தனது மகன் இன்பா மற்றும் மகள் தன்மயா ஆகியோரின் பெயர்களை பச்சை குத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக காதலன், காதலி பெயரை பச்சை குத்துவார்கள். ஏன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நாட்டுபற்று மிகுதியால் நம் தேசியக் கொடியை கையில் பச்சைக் குத்தியுள்ளார். இந்நிலையில் உதயநிதி சற்று வித்தியாசமாக படத்தின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.
Close
 
 

தங்கர் பச்சானின் 'தங்கக் கைக்கு' வந்து சேர்ந்த சாந்தனு, இனியா!

Shanthanu Iniya Pair Thankar S Amma
தமிழிலில் பிரேக்கே கிடைக்காமல் தவித்து வரும் பாக்யராஜ் மகன் சாந்தனுவும், பாரதிராஜாவின் கைக்குப் போயும், கடைசியில் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் கை நழுவிப் போன இனியாவும் இப்போது தங்கர் பச்சான் என்ற சிறந்த படைப்பாளியிடம் வந்து சேர்ந்துள்ளனர். இதனால் இருவரும் இப்போதே பெரும் வெற்றிப் புன்னகையுடன் காணப்படுகின்றனர்.

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த நல் முத்துக்களில் ஒருவர்தான் தங்கர். இவரது படத்தில் சின்ன வேடத்தில் நடித்தால் கூட போதும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் எத்தனையோ பேர். உணர்ச்சிகரமான இவரது படங்கள் அனைத்துமே வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவையே.

இப்போது அம்மாவி்ன் கைபேசி என்ற புதிய படத்தை இயக்கப் போகிறார் தங்கர். இதில் சாந்தனு நாயகனாக நடிக்கிறார். இனியா நாயகியாக வரப் போகிறார்.

பாக்யராஜின் மகன் என்ற பெருமையுடன்தான் இதுவரை இருக்கிறார் சாந்தனு. சாந்தனுவின் தந்தை பாக்யராஜ் என்று சொல்லும் நாள் இதுவரை அவருக்கு வரவில்லை. நல்ல பிரேக்குக்காக காத்திருக்கு்ம் அவருக்கு தங்கர் படம் கிடைத்திருப்பது பெரும் சந்தோஷம் தந்துள்ளதாம்.

அதேபோல வாகைசூட வா படம் மூலம் மிகச் சிறந்த நடிகையாக உருவெடுத்தவர் இனியா. அடுத்து பாரதிராஜாவின் படம் அவருக்கு கிடைத்தபோதும் கடைசியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையால் அந்த வாய்ப்பை நழுவ விட்டார் மலையாளத்தைச் சேர்ந்த இனியா.

இந்த நிலையில் இந்த இருவரும் தங்கரின் பொற் கரங்களுக்குள் வந்திருப்பதால் நிச்சயம் தங்களுக்கு இப்படம் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தைப் பெற்றுத் தரும் என்ற பெருத்த நம்பிக்கையுடன் உள்ளனராம்.
Close
 
 

கமலிடம் சபாஷ் வாங்கிய கள்ளத் துப்பாக்கி பாடகர்

Kamal Praises Debut Item Singer
கமல் தனது உதவியாளர் ரவிதேவனின் கள்ளத்துப்பாக்கி படத்தில் பெண் குரலில் குத்துப் பாட்டு பாடிய பாடகரை பாராட்டியுள்ளார்.

கமல் ஹாசனும் சரி, ரஜினிகாந்தும் சரி எந்த திறமைசாலிகளையும் பாராட்ட தயங்குவதில்லை. கமலின் உதவியாளர் ரவிதேவன் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை எடுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியும். அந்த படத்தில் மிட்நைட் கல்லூரி நான், என் கில்லாடி ஸ்டூடண்ட் யாரு என்ற குத்துப்பாடல் உள்ளது. அதை கேட்பவர்கள் ஆஹா யார் இந்த பாடகி இவ்வளவு அருமையாக பாடியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அதைப் பாடியது பாடகியல்ல புதுமுக பாடகர் கரந்தை பி. ராஜசேகரன்.

தஞ்சையில் சந்தோஷ் இசைக்குழு வைத்துள்ள ராஜசேகரன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ராத்திரி நேரத்து பூஜையில் பாடலை பெண் குரலில் பாடி அசத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியைப் பார்த்த ரவிதேவன் அவரை தொடர்பு கொண்டு தனது படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்துள்ளார். பெண் குரலில் படத்தில் பாடுவதா என்று தயங்கிய அவரை அவரது குடும்பத்தினர் ஊக்கப்படுத்தி பாட வைத்துள்ளனர்.

அவரும் சரி என்று பாடினார். அந்த பாட்டை கேட்ட கமல் ஹாசனுக்கு குரல் பிடித்துப் போகவே ராஜசேகரனை அழைத்து மனதாரப் பாராட்டினாராம். ராஜசகேரனுக்கோ கமல் பாராட்டியவுடன் கையும் ஓடவில்லை, கால் ஓடவில்லை. இன்ப அதிர்ச்சியில் அப்படித் தான் இருக்கும்.
Close
 
 

கருணாநிதி பிறந்தநாளில் கே.டிவிக்கு போட்டியாக வரும் முரசு டிவி

Murasu Tv Go Official On Karunanidhi B Day
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த சேனலாக முரசு டிவி சேனல் வரவிருக்கிறது.

தமிழ் மக்களுக்கு அரசியல், சினிமா, விளையாட்டு, சமையல், நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, பாலிமர் டிவி, மக்கள் டிவி, கேப்டன் டிவி என பல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. இந்த நிலையில் சன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நாள் முழுக்க திரைப்படம் மட்டுமே ஒளிபரப்ப கே டிவியும், செய்திக்காக சன் நியூஸும், பாடல்களுக்காக சன் மியூசிக் சேனலும், நகைச்சுவைக்காக ஆதித்யா சேனலும், குழந்தைகளுக்காக சுட்டி டிவியும் துவங்கப்பட்டது.

அதே வழியில் கலைஞர் தொலைக்காட்சியும், இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள் போன்ற சேனல்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. இந்த வரிசையில் கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த சாதனையாக முரசு டிவி என்ற சேனலை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த சேனல் சோதனை அடிப்படையில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதன் பிரத்யேக ஒளிபரப்பு திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி துவங்க உள்ளதாம்.

முரசு டிவியில் கே.டிவியைப் போன்று முழுக்க முழுக்க திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். குறிப்பாக அந்த கால கருப்பு- வெள்ளை படங்களை அதிக அளவில் ஒளிப்பரப்ப உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் முரசு என்ற பெயர் தேமுதிக கட்சியின் சின்னத்தின் பெயராக உள்ளதால் ஒரு வேளை இந்த டிவி தேமுதிக டிவியோ என சிலர் ஐய்யபாடு தெரிவிக்கக் கூடாது என்பதற்காக முரசு பின்னணியில் உதய சூரியன் உதிப்பது போல லோகோ அமைத்துள்னர்.
Close
 
 

3 டியில் கலக்க வருகிறது 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' - ஜூன் 29-ல் இந்தியாவில் ரிலீஸ்!

Spider Man S Fourth Edition Hit India On June 29th
குழந்தைகளின் உலகில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டாரான ஸ்பைடர் மேன் வரிசையில் அடுத்த படம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகிறது.

'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' ன தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக, முன்பு சிறுவர்களாக இருந்து இப்போது பெரியவர்களாவிட்டவர்களும் காத்திருப்பதுதான் ஆச்சர்யம்!

கடந்த மூன்று படங்களில் பீட்டர் பார்க்கர் மற்றும் ஸ்பைடர்மேனாக கலக்கிய டோபே மாகுயர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் ஆண்ட்ரூ கார்பீல்டு (Andrew Garfeld) நாயகனாக நடித்துள்ளார். எம்மா ஸ்டோன் (Emma Stone) முக்கிய வேடமேற்றுள்ளார்.

அமேஸிங் ஸ்பைடர் மேனில் நம் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கியிருப்பவர் மார்க் வெப்.

உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருக்கும் ஒருவனுக்கு சூப்பர் சக்திகள் வருவதும் வளர்ச்சி பெற்று விஸ்வரூபம் எடுப்பபதைப் பற்றிய கதைதான். அமேஸிங் ஸ்பைடர் மேன்.

உயர்நிலைப் பள்ளியொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட பீட்டர் பார்க்கர் இளம் வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டவன். அவன் தனது அங்கிள் பென் மற்றும் ஆண்டி மேயுடன் வளர்கிறான். அவனது கடந்த கால வாழ்க்கை புதிராக இருக்கிறது. அவனுடைய நேசத்துக்குரியவள் க்வன் ஸ்டேசி. இரண்டையுமே தேடி மீட்க அவனுக்கு விருப்பம். இதற்காகவே நேரத்தைச் செலவிடுகிறான். அவனுக்கு ஒரு ஃப்ரீப் கேஸ்' அதாவது ஒரு சிறிய பெட்டி கிடைக்கிறது. அந்தப் பெட்டியில்தான் அவன் அப்பாவுடைய பல மர்மங்களும் அடங்கியுள்ளன.

அந்த பெட்டியின் மூலம் அப்பாவின் பழைய கூட்டாளியை அடைகிறான். அவர்தான் டாக்டர் கான்னரஸ். அப்பா பற்றிய ரகசியம் தெரிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு பீட்டர் பார்க்கரின் விதியே மாறிவிடுகிறது. அவன் ஸ்பைடர் மேனாக மாறுகிறான். அதற்குப் பிறகு அவன் எடுக்கும் அவதாரங்கள், அட்டகாசங்கள், சாகசங்கள்தான் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' படம்.

இப்படத்தின் ஷூட்டிங் லாஸ் ஏஞ்சல்ஸில் டிசம்பர் 2010ல் தொடங்கியது. ஏப்ரல் 2011ல் படப்பிடிப்பு முடித்து, படப்பிடிப்புக்கு பிந்தைய மெருகேற்றும் பணிகள் தொடங்கின.

'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' இந்தக் கோடைக்கால கொண்டாட்டமாக ஜூனில் வெளிவரவுள்ளது. அதுவும் 3டி பரிமாணத்தில்!

கொலம்பியா பிக்சர்ஸின் தயாரிப்பு இது. இப்படம் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று இந்திய மொழிகளில் வெளிவருகிறது. இந்தியா முழுவதும் 1000த்திற்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இந்தியாவில் உள்ள மார்க்கெட் மதிப்பைக் கருத்தில் கொண்டு, ஜூன் 29ம் தேதி, ஒரு வாரம் முன்பே ரிலீஸ் ஆகிறது. மற்ற நாடுகளில் ஜூலை 3 ல்தான் ஸ்பைடர்மேனைப் பார்க்க முடியும்!

Close
 
 

நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார், செயலராக ராதாரவி, பொருளாளராக சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு!!

Sarath Unanimously Elected Nadigar Sangam President
நடிகர் சங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் நடிகர் சரத்குமார்.

செயலாளராக ராதாரவியும், பொருளாளராக வாகை சந்திரசேகரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. இந்த ஆண்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் ஏற்கெனவே பதவியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அதே பதவிகளுக்குப் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி ஒருமனதாக அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய கவிஞர் பிறைசூடன் அறிவித்துள்ளார்.

அதன்படி, தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும், பொருளாளராக கவிஞர் பிறைசூடனும் பதவி ஏற்கின்றனர். உப தலைவர்களாக விஜயகுமாரும், கேஎன் காளையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிம்பு, குயிலி, பாத்திமா பாபு உள்பட 24 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Close
 
 

ஈகோ இல்லாதவர் "தல" : ஆர்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாரை வைத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் எடுக்கும் படத்தில் ஆர்யாவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க ஆர்யா ஆர்வமாக உள்ளார். 'எனக்கு அஜீத் படங்கள் மிகவும் பிடிக்கும். அவருக்கு ஈகோவே கிடையாது. மங்காத்தா நடிகர்களுடன் அவர் பழகிய விதத்தை பார்க்க வேண்டுமே. அவர் டெக்னீஷயன் முதல் சக நடிகர்கள் வரை அனைவரையும் சரிசமமாக பார்ப்பார். எனது பிறந்தநாளைக்கு எனக்கு வாழ்த்து கூறினார். நம் கூட்டணி சிறப்பாக இருக்கப் போகிறது என்று அவர் என்னிடம் தெரிவித்தார். விஷ்ணுவர்தன் எனக்கு நல்ல நண்பர். அவர் கேட்டால் நான் அவருக்காக துணை நடிகராகக் கூட நடிக்க தயங்கமாட்டேன்' என்று ஆர்யா கூறினார்.


 

நயன்தாரா வாய்ப்பு பாவனாவுக்கு போனது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நயன்தாரா பட வாய்ப்பு பாவனாவுக்கு போனது. சுதீப் நடிக்கும் கன்னட படம் 'பச்சன்'. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க  ஒப்புக்கொண்டிருந்தார்.  இதையடுத்து படவேலைகளை முடுக்கிவிட்டார் இயக்குனர் சஷாங்க். இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து படத்திலிருந்து வெளியேறினார். திடீரென்று நயன்தாரா வெளியேறியதால் ஷூட்டிங் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீரோயினாக பாவனா தேர்வு செய்யப்பட்டார். பருல் மற்றும் தீபா சன்னிதி என மேலும் 2 ஹீரோயின்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுபற்றி இயக்குனர் கூறும்போது,''தமிழில் அஜீத் படத்திற்கு நயன்தாரா தனது கால்ஷீட் கொடுத்திருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால்தான் அவர் படத்திலிருந்து வெளியேறினார். தற்போது பாவனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்பதால் ஹீரோயின் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தினோம். இவரைத்தவிர வேறு ஹீரோயினை இந்த வேடத்துக்கு பொருத்திப்பார்க்க முடியவில்லை. பாவனா எங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வார். ஏற்கனவே விஷ்ணுவர்த்தனா என்ற படத்தில் சுதீப், பாவனா இணைந்து நடித்திருக்கின்றனர். வெற்றி ஜோடி மீண்டும் இணைவது பிளஸ். இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்கு ஒத்துப்போகும்'' என்றார்.


 

என்னை விரட்ட யாராலும் முடியாது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'திரையுலகை விட்டு என்னை யாராலும் விரட்ட முடியாது' என்றார் ஹரிப்பிரியா. 'முரண்'. 'வல்லக்கோட்டை' படத்தில் நடித்திருப்பவர் ஹரிப்பிரியா. கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திராவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதையறிந்து கோபம் அடைந்த ஹரிப்பிரியா அதை மறுத்தார். இந்நிலையில் மலையாளத்தில் அவர் நடித்திருக்கும் பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்றார். அவரிடம் விஜயேந்திராவுடனான தொடர்பு பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

கர்நாடக திரையுலகில் என் மீது பொறாமையுடன் இருக்கும் ஒருசிலர்தான் இப்படி வதந்தி கிளப்புகிறார்கள். அங்கு எனக்கென ஒரு இடத்தை பிடித்து வருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 4 மொழிகளிலும் நான் நடிக்கிறேன். இதுவும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. திரையுலகில் இருந்து என்னை விரட்ட யாராலும் முடியாது. மற்ற மொழிகளில் எனக்கு கிடைக்கும் ஊக்கத்தைவிட கூடுதலான ஊக்கத்தை மலையாள ரசிகர்கள் தருகிறார்கள். என்னைப்பற்றிய வதந்திகள் படங்கள் ஹிட் ஆகும்போது தன்னால் மறைந்துவிடும். கன்னடத்தில் 'ஸ்ரீநகர் கிட்டி' என்ற படம் விரைவில் வருகிறது. சிக்கலான நேரத்தில் என் நண்பர்களும், குடும்பத்தினரும் உறுதுணையாக இருக்கிறார்கள். அதுதான் எனக்கு பலம். இவ்வாறு ஹரிப்பிரியா கூறினார்.


 

விஷாலுடன் ஜோடி; கார்த்திகா மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிப்பதற்கான முக்கியத்துவத்தை குறைத்து வெறும் கிளாமர் வேடமாக மாற்றியதுடன், 2 ஹீரோயின் கதையாக மாற்றியதாலும் விஷால் படத்தில் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் கார்த்திகா.
சுந்தர்.சி. இயக்கும் படம் 'மத கஜ ராஜா' (எம்ஜிஆர்). நகைச்சுவை கதை அம்சத்துடன் கூடிய இப்படத்தில் விஷால் 3 வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஹீரோயினாக கார்த்திகா நடிக்கவிருந்தார். இந்நிலையில் படத்தில் நடிக்க மறுத்து கார்த்திகா வெளியேறிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, ''மத கஜ ராஜா படத்துக்கு முதலில் ஒரு கதை சொல்லப்பட்டது. பின்னர் ஸ்கிரிப்ட் புதிதாக மாற்றப்பட்டது. அதை கேட்டபோது ஷாக் ஆனேன். எனது கதாபாத்திரம் வெறும் கிளாமர் வேடமாக மாற்றப்பட்டிருந்தது. முதலில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பதாக இருந்தது. அதுவும் மாற்றப்பட்டதுடன் இரண்டு ஹீரோயின்கள் கதையாகவும் மாறி இருக்கிறது. எனவே இப்படத்தில் நடிக்கவில்லை. எதிர்காலத்தில் சுந்தர்.சி இயக்கும் மற்றொரு படத்தில் நடிப்பேன்'' என்றார்.
முதலில் இப்படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாகத்தான் கார்த்திகா நடிக்க பேசப்பட்டது. இப்போது அவரும் வெளியேறி விட்டதால் வரலட்சுமி ஹீரோயினாக நடிப்பார் என்று தெரிகிறது.


 

கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பது குறித்துதான். இந்த செய்தியை தயாரிப்பாளர், இயக்குநர், ரஜினி என யாருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்குள் மேலும் ஒரு தகவல். 'ரஜினி - கேவி ஆனந்த் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. கேவி ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் 'சுபா', படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளில் தீவிரமாக உள்ளார்கள்' என்பதுதான். இந்தப் படத்துக்கு பெயர் கூட முடிவாகிவிட்டதாம். முன்பு தள்ளி வைக்கப்பட்ட சரித்திரப்படமான அதே ராணாதான் தலைப்பு. ஆனால் இது சரித்திரக் கதை அல்ல. அதிரடி ஆக்ஷன்- பொழுதுபோக்குப் படமாம்.


 

பிரபல பாடகர் ஜக்ஜித் சிங் மரணம்!

Gazal King Jagjith Singh Passes Away Aid0136
மும்பை: பிரபல கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் இன்று மும்பை மருத்துவமனையில் காலமானார். 70 வயதான அவர் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

'கஜல் கிங்' என்று போற்றப்பட்டவர் ஜக்ஜித் சிங். இந்தி, உருது, பஞ்சாபி மற்றும் நேபாளி மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

பொதுவாக கஜல் பாடுவதில் பாகிஸ்தான் பாடகர்களே முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்திய கஜல் பாடகர்கள் ஒரு மாற்றுக் குறைவாகவே கருதப்பட்டனர். மேலும் பாரசீக, உருது மொழிக்காரர்களால் மட்டுமே பாடப்படும் ஒரு உயர்தர இசை கஜல் என்ற மரபை வைத்திருந்தனர்.

ஆனால் இதனை தகர்த்தவர் ஜகஜித் சிங்தான். கஜல் என்றாலே ஜக்ஜித் என்று சொல்லும் நிலையை உருவாக்கினார் அவர். கஜல் இசையை நவீனமாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. முதன்முதலில் மல்டி ட்ராக்கில் கஜலை பதிவு செய்தவர் ஜக்ஜித் சிங்தான்.

சினிமா இசையிலும் தனி முத்திரை படைத்தவர் ஜக்ஜித் சிங். பிரேம் கீத், சாத் சாத், அர்த் என பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் பாடியுள்ளார்.

இவரது இசைத் துறை சாதனைக்காக மத்திய அரசு பத்மபூஷன் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

ஜக்ஜித் சிங்கின் மனைவி பெயர் சித்ரா சிங். இவரும் ஒரு பாடகிதான். இருவரும் இணைந்து பல அற்புதமான ஆல்பங்களைக் கொடுத்துள்ளனர்.

ஜக்ஜித் சிங்கின் ஒரே மகன் 1990-ல் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.
Close
 
 

திருநாவுக்கரசர் மகன் திருமண வரவேற்பு.. ஆளுநர் ரோசய்யா, ரஜினி நேரில் வாழ்த்து!

Governor Rosayya Rajinikanth Attends Marriage Aid0136
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் தமிழக ஆளுநர் ரோசய்யா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் -தி.ஜெயந்தி தம்பதியின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும், சென்னை நொளம்பூரை சேர்ந்த தொழிலதிபர் சார்லஸ் மோகன்-சி.ஷீலா தம்பதியின் மகள் உதயா என்ற டாக்டர் சி.ராகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மணமக்களின் பெற்றோர் வரவேற்றனர். தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

திருநாவுக்கரசரின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதேபோல், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக இணை வேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, டி.ஆர்.பாலு எம்.பி, இயக்குநர் எஸ்பி முத்துராமன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
Close
 
 

இனி 'பார்ட்டி டான்ஸ்' தெரியவில்லை என யாரும் ஒதுக்க முடியாது - அசின்

Asin Learns Party Dance   
பாலிவுட்டில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் பாலிவுட் கலாச்சாரத்துக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இது நடிகைகளுக்கு பால பாடம்.

பின் மாலை நேர விருந்துகள், விருந்து முடிந்ததும் நடனங்கள் போன்ற அனைத்து விஷயங்களுக்கும் ஒத்துப் போனால்தான் அங்கே குப்பை கொட்ட முடியும்.

இங்கிருந்து போன நடிகைகள் அனைவருமே அத்தனைக்கும் தயாராகத்தான் போகிறார்கள். அசினும் அப்படிப் போனவர்தான். ஆரம்பத்தில் தன்னுடன் பெற்றோரையும் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இதனை பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் விரும்பவில்லை என்று தெரிந்ததும் தனி ப்ளாட் எடுத்தார்.

அடுத்து மாலை நேர விருந்துகளில் பங்கேற்க மறுத்து வந்தவர், லண்டன் ட்ரீம்ஸ் படுதோல்வியைத் தழுவியதும், அந்த பிடிவாதத்தையும் தளர்த்திக் கொண்டார்.

இப்போது மாலை நேர விருந்துக்குப் பிந்தைய நடனங்களில் பங்கேற்கவும் தயாராகி வருகிறார்.

இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் ஆடும் வால்ட்ஷ் என்ற நடனத்தையும் அசின் கற்க துவங்கியுள்ளார். மேற்கத்திய நடனத்தையும், கிராமிய நடனத்தையும் வைத்து இந்த வகை நடனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது சினிமாவுக்கானதல்ல. நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகளில் ஆண்களும், பெண்களும் இணைந்து ஆடுவது.

"இந்த நடனம் தெரியாததால்தான் என்னை பலரும் தனிமைப்படுத்தினர். இனி என்னை யாரும் ஒதுக்க முடியாது," என தன் தோழிகளிடம் சொல்லி வருகிறாராம்!
Close
 
 

ரஜினியுடன் '6லிருந்து 60 வரை' படத்தில் நடித்த எல்ஐசி நரசிம்மன் மரணம்!

சென்னை: பிரபல நடிகர் எல்ஐசி நரசிம்மன் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 71.

200- படங்களுக்கும் அதிகமாக நடித்தவர் நரசிம்மன். ரஜினியின் 6 லிருந்து 60 வரை படத்தில், அவருக்குத் தம்பியாக நடித்ததன் மூலம் கவனிக்கத் தக்க நடிகரானார்.

பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகள் ரொம்பப் பிரபலம். குறிப்பாக வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ளும் காட்சி. 'நின்னுக்கோரி வரணும...' என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லிக் கொடுப்பார்.

இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
Close