ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு.. முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடாக வரும் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

49 ஆண்டுகளுக்கு முன் மக்கள் திலகம் எம்ஜிஆரும் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த இந்த படம், இப்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுகிறது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு.. முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

அந்த செய்தி:

திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வில் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

எனவே தான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆர்வலர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் 'வெறும்'பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் படங்கள் என்று போற்றுகின்றனர்.

புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்களை விடுதலை விரார்களாக மாற்றிக் கொல்கின்ற சம்பவன் க்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், தனி மனித நேமையையும் நிலைநாட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த மாபெரும் வெற்றிப் படத்தில் நான் முதன் முதலாக புரட்சித் தலைவரோடு இணைந்து நடிக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றேன்.

'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிடப்பட்ட பொது தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறையினர் அந்த எழுச்சியைப் பெறவும், நாளைய தலைமுறையும் அதனால் பயன் பெறவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் புது வடிவம் பெற்று வெளியாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல, இன்றளவிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிற்கும், திரை ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும்.

'ஆயிரத்தில் ஒருவன்' வெற்றித் திரைப்படத்தைப் புதுப்பித்து 14.03.201 முதல் தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த முயற்சிக்கு எனது இதயமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தங்களின் இந்தப் பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள்."

-இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பிறந்த பேறினை அடைந்தேன்

முதல்வரின் இந்த வாழ்த்து குறித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் கூறுகையில், "நமது தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள், என்னுடைய இந்த முயற்சியினைப் பாராட்டி மிகவும் ஊக்குவித்து, வாழ்த்துச் செய்தியினை இன்று எமக்கு அளித்துள்ளார்கள். இதை எனது வாழ்நாள் சாதனையாக, நான் பிறந்த பேறினை அடைந்ததாகக் கருதுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு.. முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடாக வரும் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

49 ஆண்டுகளுக்கு முன் மக்கள் திலகம் எம்ஜிஆரும் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த இந்த படம், இப்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுகிறது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு.. முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

அந்த செய்தி:

திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வில் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

எனவே தான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆர்வலர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் 'வெறும்'பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் படங்கள் என்று போற்றுகின்றனர்.

புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்களை விடுதலை விரார்களாக மாற்றிக் கொல்கின்ற சம்பவன் க்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், தனி மனித நேமையையும் நிலைநாட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த மாபெரும் வெற்றிப் படத்தில் நான் முதன் முதலாக புரட்சித் தலைவரோடு இணைந்து நடிக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றேன்.

'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிடப்பட்ட பொது தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறையினர் அந்த எழுச்சியைப் பெறவும், நாளைய தலைமுறையும் அதனால் பயன் பெறவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் புது வடிவம் பெற்று வெளியாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல, இன்றளவிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிற்கும், திரை ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும்.

'ஆயிரத்தில் ஒருவன்' வெற்றித் திரைப்படத்தைப் புதுப்பித்து 14.03.201 முதல் தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த முயற்சிக்கு எனது இதயமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தங்களின் இந்தப் பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள்."

-இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பிறந்த பேறினை அடைந்தேன்

முதல்வரின் இந்த வாழ்த்து குறித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் கூறுகையில், "நமது தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள், என்னுடைய இந்த முயற்சியினைப் பாராட்டி மிகவும் ஊக்குவித்து, வாழ்த்துச் செய்தியினை இன்று எமக்கு அளித்துள்ளார்கள். இதை எனது வாழ்நாள் சாதனையாக, நான் பிறந்த பேறினை அடைந்ததாகக் கருதுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கோச்சடையான் ட்ரைலர்.. 3 நாட்களில் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள்!

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் புதிய ட்ரைலருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று நாட்களுக்குள் 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் இந்த ட்ரைலரை.

இந்திய சினிமா ட்ரைலர் ஒன்று இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு பேரால் பார்க்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

கோச்சடையான் ட்ரைலர்.. 3 நாட்களில் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள்!  

சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியாவின் முதல் 'அசைவு பதிவாக்க தொழில்நுட்பப்' படமான கோச்சடையான் பாடல்களும் திரையரங்க முன்னோட்டக் காட்சியும் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வெளியாகின.

பாடல்கள் குறுந்தகடுகள் விற்பனையில் பெரிய சாதனையைப் படைத்துள்ளனண. இசைக் குறுந்தகடு விற்பனை என்பதே சுத்தமாக சரிந்து போய்விட்ட இந்த காலகட்டத்தில், கோச்சடையான் இசைத் தட்டு விற்பனை ஆடியோ மார்க்கெட்டுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

இன்னொரு பக்கம் படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அபார வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னோட்டக் காட்சி வெளியான மூன்று நாட்களுக்குள் இரண்டு மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த முன்னோட்டப் படம் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், பெரும்பாலானோர் இந்தியாவின் முதல் மாற்றுத் தொழில்நுட்ப சினிமா முயற்சி என்று பாராட்டி வரவேற்றுள்ளனர்.

ரூ 125 கோடியில் இரண்டு ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பது பெரிய சாதனை என திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

கவுண்டமணி நடிக்கும் 49ஓ அரசியல் படமா?

சென்னை: கவுண்டமணி நாயகனாக நடிக்கும் 49ஓ படம் அரசியல் படமல்ல.. விவசாயிகளுக்காகப் பேசும் படம் என்று படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் 49 -ஒ.

கவுண்டமணி நடிக்கும் 49ஓ அரசியல் படமா?

இதில் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். ஒரு இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்த படம் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைக் களத்தைக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைபடம் அடுத்த மாதம் ஏப்ரலில் திரைக்கு வர இருக்கிறது.

49 ஓ என்பது தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் படிவத்தின் பெயர். எனவே இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், "இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படம் இல்லை... இது ஒரு நகைச்சுவை கொண்ட பொழுபோக்கு கொண்ட படம்.

தற்போது நமது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளேன். கவுண்டமணி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளுக்காகப் பேசுகிறார். விவசாயிகள் நலன் கருதி எடுக்கபட்ட 49ஓவுக்கு தமிழக மக்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என நம்புகிறோம்.

இந்த படத்தில் விடிவி.கணேஷ் மற்றும் ஆரண்ய காண்டம் புகழ் சோமசுந்தரம், சத்தியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்," என்றார்.

 

சிவாவின் வசனகர்த்தா அவதாரம்!

ஆடாம ஜெயிச்சோமடா படம் மூலம் வசனகர்த்தாவாக மாறியுள்ளார் நடிகர் சிவா.

‘சென்னை 600 028' படம் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் சிவா.

சிவாவின் வசனகர்த்தா அவதாரம்!

சிவாவை வைத்து ரஜினியின் ‘தில்லு முல்லு' படத்தை ரீமேக் செய்த பத்ரி தற்போது ‘ஆடாம ஜெயிச்சோமடா' என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்துக்கு வசனம் எழுதுபவர் சிவா.

இப்படம் கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை பாத்திரங்கள் என எல்லாவற்றையும் சேர்ந்து காமெடியாக உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் பத்ரியிடம் கேட்ட சிவா, படத்துக்கான வசனங்களை தானே எழுதுவதாகக் கூறிவிட்டாராம்.

ஆனால் படத்தில் ஒரு காட்சியில்கூட அவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சீனாவில் தயாராகும் கோச்சடையான் மாஸ்டர் பிரின்ட்!

சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் மாஸ்டர் பிரிண்ட் சீனாவில் தயாராகிறது. இதனைப் பெற்று வர சவுந்தர்யா ரஜினிகாந்த் சீனாவுக்குச் சென்றுள்ளார்.

போட்டோ ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் 3 டி பணிகள் சீனாவில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளன.

இப்போது ட்ரைலரில் பார்த்ததை விட தத்ரூபமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக சவுந்தர்யா ரஜினி பிரஸ் மீட்டில் சொல்லியிருந்தார்.

சீனாவில் தயாராகும் கோச்சடையான் மாஸ்டர் பிரின்ட்!

ஹாலிவுட் படங்களுக்குப் பணியாற்றும் குழுவினர் சீனாவில் வைத்து கோச்சடையானின் இறுதிக்கட்டப் பணிகளைச் செய்துள்ளனர்.

இப்போது படத்தை சென்சாருக்கு அனுப்ப வேண்டியிருப்பதால், அதன் மாஸ்டர் பிரிண்டை வாங்கி வர சவுந்தர்யா நேற்று சீனாவுக்குப் பயணமானார்.

இம்மாத இறுதிக்குள் படத்தின் இன்னுமொரு ட்ரைலரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

 

கவுண்டமணி நடிக்கும் 49ஓ அரசியல் படமா?

சென்னை: கவுண்டமணி நாயகனாக நடிக்கும் 49ஓ படம் அரசியல் படமல்ல.. விவசாயிகளுக்காகப் பேசும் படம் என்று படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் 49 -ஒ.

கவுண்டமணி நடிக்கும் 49ஓ அரசியல் படமா?

இதில் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். ஒரு இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்த படம் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைக் களத்தைக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைபடம் அடுத்த மாதம் ஏப்ரலில் திரைக்கு வர இருக்கிறது.

49 ஓ என்பது தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் படிவத்தின் பெயர். எனவே இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், "இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படம் இல்லை... இது ஒரு நகைச்சுவை கொண்ட பொழுபோக்கு கொண்ட படம்.

தற்போது நமது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளேன். கவுண்டமணி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளுக்காகப் பேசுகிறார். விவசாயிகள் நலன் கருதி எடுக்கபட்ட 49ஓவுக்கு தமிழக மக்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என நம்புகிறோம்.

இந்த படத்தில் விடிவி.கணேஷ் மற்றும் ஆரண்ய காண்டம் புகழ் சோமசுந்தரம், சத்தியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்," என்றார்.

 

வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா! - கவுண்டமணியின் முதல் பேட்டி

49 ஓ அரசியல் படம்... அரசாங்கத்தை நான் குத்தம் சொல்றேன்னு ஏதும் வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா, என கவுண்டமணி கூறியுள்ளார்.

மீண்டும் நடிக்க வந்து வாய்மை, 49 ஓ என இரு படங்களில் நாயகனாக நடிக்கும் கவுண்டமணி, முதல் முறையாக ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்துள்ளார்.

வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா! - கவுண்டமணியின் முதல் பேட்டி

அந்தப் பேட்டியில், ரீ என்ட்ரியில் நகைச்சுவைக்கு பதில் சீரியஸாக நடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு கவுண்டமணி அளித்துள்ள பதிலில் அத்தனை எச்சரிக்கை. இதோ அவர் பதில், "நல்லா இருந்துச்சேனு போன தீபாவளிக்கு பண்ண அதிரசத்தை இன்னைக்குத் திங்க முடியுமா? அப்போ பண்ணது நல்லா இருந்தா, அதை ரசிச்சுக்கலாம். அதே மாதிரி திரும்ப நடிக்கணும்னு என்ன கட்டாயம்?

'49ஓ' படத்துல விவசாயம்தான் கதை. கதிர் அறுக்கலாம்னு நினைச்சா, மழை பெஞ்சி கெடுத்திருக்கும். நடவு நடலாம்னு நினைச்சா, வெயில் காய்ஞ்சு கெடுத்திருக்கும். வட்டிக்கு மேல வட்டி வாங்கிப் போட்ட காசை கடைசிவரைக்கும் எடுக்க முடியாமப்போனாலும், அவன் விவசாயத்தை விட மாட்டேங்கிறான். ஏன்? என்னைக்காவது நல்லது நடக்கும்னு காத்திருக்கான். ஆனா, நல்லது நடக்கிற சூழ்நிலையா இங்கே இருக்கு?''

''ஏய்ய்... இரப்பா! நான் சொன்னதை வெச்சு அரசாங்கத்தைக் குத்தம் சொல்ற படம்னு வம்பு கொளுத்திப்போட்டுராதீங்க. இயற்கை விவசாயத் துக்கு ஆதரவா நிறைய விஷயம் பேசும் படம். மத்தபடி அரசையோ, அரசியல்வாதியையோ குத்தம் சொல்றது கதையோட நோக்கம் கிடையாது. இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் படத்துல மரியாதை பண்ணியிருக்கோம்!''

-இப்படிப் போகிறது அந்தப் பேட்டி!

 

வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா! - கவுண்டமணியின் முதல் பேட்டி

49 ஓ அரசியல் படம்... அரசாங்கத்தை நான் குத்தம் சொல்றேன்னு ஏதும் வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா, என கவுண்டமணி கூறியுள்ளார்.

மீண்டும் நடிக்க வந்து வாய்மை, 49 ஓ என இரு படங்களில் நாயகனாக நடிக்கும் கவுண்டமணி, முதல் முறையாக ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்துள்ளார்.

வம்பு கொளுத்திப் போட்ராதீங்கப்பா! - கவுண்டமணியின் முதல் பேட்டி

அந்தப் பேட்டியில், ரீ என்ட்ரியில் நகைச்சுவைக்கு பதில் சீரியஸாக நடிப்பது ஏன்? என்ற கேள்விக்கு கவுண்டமணி அளித்துள்ள பதிலில் அத்தனை எச்சரிக்கை. இதோ அவர் பதில், "நல்லா இருந்துச்சேனு போன தீபாவளிக்கு பண்ண அதிரசத்தை இன்னைக்குத் திங்க முடியுமா? அப்போ பண்ணது நல்லா இருந்தா, அதை ரசிச்சுக்கலாம். அதே மாதிரி திரும்ப நடிக்கணும்னு என்ன கட்டாயம்?

'49ஓ' படத்துல விவசாயம்தான் கதை. கதிர் அறுக்கலாம்னு நினைச்சா, மழை பெஞ்சி கெடுத்திருக்கும். நடவு நடலாம்னு நினைச்சா, வெயில் காய்ஞ்சு கெடுத்திருக்கும். வட்டிக்கு மேல வட்டி வாங்கிப் போட்ட காசை கடைசிவரைக்கும் எடுக்க முடியாமப்போனாலும், அவன் விவசாயத்தை விட மாட்டேங்கிறான். ஏன்? என்னைக்காவது நல்லது நடக்கும்னு காத்திருக்கான். ஆனா, நல்லது நடக்கிற சூழ்நிலையா இங்கே இருக்கு?''

''ஏய்ய்... இரப்பா! நான் சொன்னதை வெச்சு அரசாங்கத்தைக் குத்தம் சொல்ற படம்னு வம்பு கொளுத்திப்போட்டுராதீங்க. இயற்கை விவசாயத் துக்கு ஆதரவா நிறைய விஷயம் பேசும் படம். மத்தபடி அரசையோ, அரசியல்வாதியையோ குத்தம் சொல்றது கதையோட நோக்கம் கிடையாது. இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் படத்துல மரியாதை பண்ணியிருக்கோம்!''

-இப்படிப் போகிறது அந்தப் பேட்டி!

 

நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவளாகவே நடிக்கிறது: தமன்னா

நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவளாகவே நடிக்கிறது: தமன்னா  

இதையடுத்து அம்மணிக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. இந்நிலையில் அவர் தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் நல்லவளாகவே நடித்து போரடிக்கிறது. ஏதாவது வில்லத்தனம் உள்ள கதாபாத்திரமாக இருந்தால் கூறுங்கள் நடிக்கிறேன் என்கிறாராம்.

முன்னதாக த்ரிஷா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்றார். இந்நிலையில் தமன்னாவுக்கும் அதே ஆசை வந்துள்ளது.

என்னாச்சு இந்த ஹீரோயின்களுக்கு. இப்படி வில்லத்தனமாக யோசிக்கிறாங்களே.