இரண்டேகால் மணி நேர படத்தை இரண்டு மணிநேரத்தில் எடுத்து சாதனை!

Agadam Shooting Sets New Guinness R

இரண்டே கால் மணி நேரம் ஓடும் படத்தை இரண்டு மணி நேரத்தில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் அகடம் படக்குழுவினர்.

அதுமட்டுமல்ல, முழுப் படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்துள்ளார்களாம்.

இந்த விவரங்களை கின்னஸ் அமைப்புக்கு எழுதி, அங்கிருந்து அங்கீகாரக் கடிதமும் பெற்றுள்ளனர் அகடம் குழுவினர்.

தமிழகத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் புதுமுகம் சீனி அய்யர், பாஸ்கர், கலை, தமிழ் உள்பட முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

நௌஷத் ஒளிப்பதிவு செய்ய, ஷ்யாம் பெஞ்சமின் இசையமைத்துள்ளார்.

இஸட் முகமது இசாக் கதை திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு இதுதான் முதல்படம்.

ஸ்க்ரிப்ட், நடிகர்கள், ஷூட்டிங் ஸ்பாட் என அனைத்தையும் பக்காவாக ஏற்பாடு செய்தது கொண்ட இசாக், இரவில் இரண்டு மணிநேரத்தில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டாராம்!

லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் விரைவில் இந்தியிலும் தயாராகிறது.

 

திருமணப் புடவையை ஏலம் விடும் லிசா ரே: எதுக்கு தெரியுமா?

Lisa Ray Auction Her Wedding Sari

மும்பை: மாடலும், இந்தி நடிகையுமான லிசா ரே தான் திருமணத்தன்று அணிந்திருந்த புடவையை ஏலம் விட்டு அந்த பணத்தை தர்ம காரியங்களுக்கு பயன்படுத்த உள்ளார்.

மாடலும், பாலிவுட் நடிகையுமான லிசா ரே(40) கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி வங்கி அதிகாரியான ஜேசன் டெனி என்பவரை மணந்தார். திருமணத்தன்று சத்ய பால் டிசைனர் சேலையை அணிந்திருந்தார். இந்நிலையில் தான் திருமணத்தன்று அணிந்திருந்த புடவையை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை தர்மகாரியங்களுக்கு பயன்படுத்தப் போவதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த சேலை ஆன்லைனில் சத்ய பாலின் பேஸ்புக் பக்கத்தில் ஏலம் விடப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி லிசாவுக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதன் பிறகு அவர் உரிய சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லிசா இந்திய அப்பாவுக்கும், போலந்தைச் சேர்ந்த அம்மாவுக்கும் கனடாவில் பிறந்தவர்.

 

வேலை வெட்டி இல்லாதவங்க - தனக்கு கண்டனம் தெரிவித்தவர்கள் மீது குஷ்பு தாக்கு

Kushboo Attacks Her Critics As Job Less

சென்னை: ராமர் படம் போட்ட சேலை கட்டியதற்காக தன்னை விமர்சிப்பவர்கள், கண்டிப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று கூறியுள்ளார் குஷ்பு.

ஹைதராபாதில் நடிகை குஷ்பு கடவுள் படம் போட்ட சேலை உடுத்தி சினிமா விழாவில் பங்கேற்றார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்துக் கடவுள்களான ராமர், கிருஷ்ணர், அனுமன் போன்றோரின் படங்கள் அவர் அணிந்திருந்த சேலையின் பார்டரில் இடம் பெற்றிருந்தன.

இதனால் இந்துக் கடவுள்களை முஸ்லிம் பெண்ணான குஷ்பு அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குஷ்புவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து குஷ்புவிடம் கேட்ட போது, "இந்த பிரச்சினையை நான் கண்டு கொள்ளவே இல்லை. வேலை வெட்டி இல்லாதவர்கள் இதை பெரிதுப்படுத்துகிறார்கள். சிலர் என் மூலமாக விளம்பரம் தேட முயற்சிக்கின்றனர்," என்றார்.

நெசமாலுமா குஷ்பு?

 

ரஜினியின் அதிசய பிறந்த நாளில் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்த சத்தியநாராயணா!

Rajini S Former Asst Behaves Like Lunatic

சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது பிறந்த நாளில் நேரில் பார்த்த திருப்தியை அனுபவிக்க விடாமல் ரசிகர்களை துடிக்க வைத்துவிட்டது ஒருவரது செயல். அது, சத்தியநாராயணா எனும் ரஜினியின் முன்னாள் உதவியாளரின் அறுவறுக்கத்தக்க வார்த்தைகள்!

கிட்டத்தட்ட 4 ஆண்டு காலம் இந்த சத்தியநாராயணா தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருந்து வந்தனர் ரசிகர்கள். 2009-ம் ஆண்டு அவரை மன்றப் பணிகள் உள்பட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் ஒதுக்கி வைத்தார் ரஜினி. காரணம் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் இந்த நடவடிக்கை என நாசூக்காக சொல்லிவிட்டார் ரஜினி.

உண்மையான காரணம், ரசிகர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் கொஞ்சமும் பொறுப்பற்று சத்தியநாராயணா நடந்து கொண்டதுதானாம். அவர் மீது புகார் பட்டியல் வாசிக்காத மாவட்ட நிர்வாகிகளே இல்லை எனும் அளவுக்கு நிலைமை கைமீறியதால்தான், சத்தியநாராயணாவுக்கு பதில் சுதாகரை நியமித்தார் ரஜினி.

கடந்த நான்கு ஆண்டுகளில் ரஜினி பிறந்த நாள் உள்பட எந்த விசேஷத்திலும் சத்தியநாராயணா தலை காட்டாமல் இருந்தார்.

இந்த நிலையில், நேற்று திடீரென ரஜினி பிறந்த நாள் விழாவில் அவர் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார். அவரை பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பார்த்த சில ரசிகர்கள், பழக்க தோஷத்தில், 'வணக்கம் சத்தி சார்' என்று ஆரம்பிக்க, 'போடா டேய்... போடா... ம..று' என்று சத்தியநாராயணா பதிலுக்கு வணக்கம் வைக்க, ஆடிப் போய்விட்டார்கள் ரசிகர்கள்.

அதுவும் ரஜினி மேடைக்கு வந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வத்தில் தலைவா என்று பெரும் குரல் எழுப்ப, அவர்களை சத்தியநாராயணா திட்டிய விதம் சொல்லத் தரமற்றது.

"இன்னும் என்னடா பண்றீங்க.. போங்கடா... போடா... போதும் பார்த்தது போடா... ம..று... கழுத்தைப் புடிச்சி தள்ளிடுவேன்... ங்...தா" என்று வெறிபிடித்தவர் போல கத்திக் கொண்டிருக்க, ரசிகர்கள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தனர்.

ஆனால் சில இளம் ரசிகர்கள், "யோவ் நாங்க தலைவருக்காக வந்திருக்கோம்.. உன்னை யாருய்யா உள்ள விட்டது... நீ போய்யா வெளியே," என்று திருப்பித் தரவும் தயங்கவில்லை!

 

இளையராஜாவின் 920-வது படம்!

Nep Is Ilayaraaja S 920th Movie

இசைஞானி இளையராஜாவின் 920வது படமாக வருகிறது நீதானே என் பொன்வசந்தம்.

இந்திய சினிமாவில் யாரும் தொடாத உச்சத்தைத் தொட்ட இசையமைப்பாளர் இளையராஜா. விருதுகளைத் தாண்டிய பெருமைக்குச் சொந்தக்காரராகத் திகழும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி மற்றும் ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். எண்பதுகளிலேயே ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த பெருமை அவருக்குண்டு.

அவரது முதல்படம் அன்னக்கிளி. 100வது படம் மூடுபணி. 300வது படம் உதயகீதம். 400வது படம் நாயகன்....

இப்போது ஆயிரம் படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார் இசைஞானி. இப்போது அவரது இசையில் வெளியாகும் நீதானே என் பொன்வசந்தம் அவரது 920வது படமாகும்.

எண்பதுகளில் ஒரே ஆண்டில் 50 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இந்த சாதனையை எந்த மொழியிலும் யாராலும் இதுவரை தாண்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் எண்ணிக்கை என்பதைத் தாண்டி, தனது அத்தனைப் படங்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் தன் முத்திரையைப் பதித்தவர் ராஜா என்றால் மிகையல்ல.

 

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் ஒளிப்பதிவாளர் - இயக்குநர் கர்ணன் மரணம்

Veteran Cinematographer Karnan Passes Away

சென்னை: காமிரா மேதை என்று அழைக்கப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கர்ணன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79.

அமரர் எம்ஜிஆரின் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், கற்பகம், கைகொடுத்த தெய்வம், ரஜினியின் பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட சுமார் 150 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கர்ணன்.

காலம் வெல்லும், எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, இரட்டைக்குழல் துப்பாக்கி உள்ளிட்ட 25 படங்களை இயக்கியும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக அளவு கௌபாய் படங்களை இயக்கியவர் கர்ணன்.

சண்டை, சாகசக் காட்சிகளைப் படமாக்குவதில் தனித் திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அமரர் எம்ஜிஆர் தனது நீதிக்குத் தலைவணங்கு படத்தின் சண்டை, சேஸிங் காட்சிகளை இவரை வைத்துதான் எடுத்தாராம்.

அதேபோ மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்தின் போர்க்கள காட்சி, குதிரையேற்றக் காட்சிகள் இவர் படமாக்கியதுதான். எம்ஜிஆருக்குப் பிடித்த ஒளிப்பதிவாளரும் கூட.

தானே சொந்தமாக படம் தயாரித்து இயக்க ஆரம்பித்த பிறகு, கர்ணன் 20 குதிரைகள் 10 கார்களை சொந்தமாக வாங்கி சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை எடுத்தாராம்.

அதேபோல தண்ணீருக்கடியில் படம் பிடிப்பதில் அந்தக் காலத்திலேயே அசத்தியவர் இவர்.

கர்ணன் தமிழக அரசின் 2003-ம் ஆண்டுக்கான 'ராஜா சாண்டோ வர்த்தக விருது' பெற்றவர்.

புகழ்பெற்ற நடிகைகளான கே.ஆர்.விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் கர்ணன்தான்.

இன்று (13-12-12) அன்று பிற்பகல் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

கர்ணனின் மனைவி பெயர் சகுந்தலா. இந்த தம்பதிகளுக்கு பாமா, தாரா என்று 2 மகள்கள்.

பொதுமக்கள் பார்வைக்காக 38, பெருமாள் கோவில் தெரு, சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை 14 ந் தேதி சேத்துப்பட்டு மைதானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு - கர்ணன் மருமகன் சந்திரனை தொடர்பு கொள்ளவும். எண்: 9443385180

 

அழகு சமந்தாவிற்கு அஞ்சலி ரொம்ப பிடிக்குமாம்…

I Love Anjali Says Samantha

நீதானே என் பொன் வசந்தம் நாயகி சமந்தா நடிகை அஞ்சலியின் ரசிகையாம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் எம்.ஏ, அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களில் அஞ்சலியின் நடிப்பு தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். அஞ்சலி ரொம்ப ஷார்ப். ரொம்ப திறமையான நடிகை. நான் அவரது ரசிகை என்று கிலாகித்துள்ளார் சமந்தா.

அஞ்சலியைத் தவிர நடிகை கஜோல் நடிப்பு ரொம்ப பிடிக்கும் என்று கூறும் சமந்தா, கஜோலின் எளிமை ரொம்ப பிடிக்கும். எனக்கு அவரை மாதிரி இருக்கணும்னு ஆசை என்கிறார்.

தன்னுடைய உயிர்தோழி காஜல் அகர்வால் என்று கூறும் சமந்தா, அவரை செல்லமாக காஜ் என்று அழைப்பாராம்.

அழகான சமந்தாவிடம் கொஞ்சம் கருணையும் நிரம்பியிருக்கிறது. அதனால்தான் ‘பிரதியுஷா' என்ற அறக்கட்டளை தொடங்கி ஹீமோபிலியா, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 600 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

 

'உம்மா' கொடுக்க மறுத்த நடிகையை டிஸ்மிஸ் செய்த டைரக்டர்!

பெங்களூர்: முத்தக் காட்சியில் நடிக்க மறுத்ததால் நடிகையை படத்திலிருந்து நீக்கி விட்டார் இயக்குநர். அத்தோடு அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவவே கடுப்பாகிப் போன நடிகை, தற்போது இயக்குநர் மீது வழக்குத் தொடரப் போவதாக மிரட்டியுள்ளார்.

கன்னடத்தில் கில்மாவான ரோல்களில் நடித்துப் பிரபலமானவர் பிரஜ்னா. தற்போது நல்ல பிரேக்குக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் சந்து என்ற இயக்குநரின் இயக்கத்தில் டோவ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அப்படத்தில் இவர் இல்லை.

suicide rumour irks actress prajna

மேலும் இயக்குநருக்கும், பிரஜ்னாவுக்கும் மோதல், தற்கொலைக்கு முயன்றார் பிரஜ்னா என்றெல்லாம் செய்திகள் வெளியாகவே கன்னடத் திரையுலகில் லைட்டாக பதட்டம் பற்றிக் கொண்டது. ஆனால் இதை மறுத்துள்ளார் பிரஜ்னா. சந்து கூறியபடி தான் நடிக்க மறுத்ததால் அவரே வதந்திகளைப் பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் பிரஜ்னா.

இதுகுறித்து அவர் கூறுகையில் படத்தில் ஒரு முத்தக் காட்சி இருந்தது. வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது போல அது இருந்தது. அதை நான் விரும்பவில்லை. நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டேன். இயக்குநரும் சரி என்று ஒப்புக் கொண்டார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கண்டிப்பாக முத்தமிட வேண்டும் என்றார். அதை நான் ஏற்கவில்லை. இதனால் என்னை நடிக்கக் கூப்பிடாமல் மற்ற காட்சிகளில் பிசியாக இருந்தார் இயக்குநர்.

இதையடுத்து நான் அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி கேட்டபோது, கண்டிப்பாக முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றார். அதற்கு நான் முடியாது என்றேன். பின்னர் அவரே என்னைக் கூப்பிட்டு நீ படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி விட்டார்.

இதுதான் நடந்தது. ஆனால் நான் தற்கொலை செய்ய முயற்சித்ததாக அவர்களே வதந்தி பரப்பி வருகின்றனர். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார் பிரஜ்னா.

ஒரு சாதாரண முத்தத்திற்கு இவ்வளவு சண்டையா...?

 

வல்லமை தாராயோ: பாலிமர் டிவியில் புதிய தொடர்

Vallamai Tharayo New Serial On Polimar Tv

பாலிமர் தொலைக்காட்சியில் டிசம்பர் 10 முதல் ‘வல்லமை தாராயோ' என்ற புதிய மெகாத் தொடர் ஒளிபரப்பாகிறது.

நேரடி தமிழ் தொடர்கள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும் சில தொலைக்காட்சிகளில் இந்தி தொடர்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகின்றன. நல்ல தொடர்களுக்கு தமிழ் ரசிகர்கள் வரவேற்பு தருகின்றனர் என்பதால் தமிழ் சேனல்களில் இந்தித் தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகின்றன. அதுபோல் ‘வல்லமை தாராயோ' தொடரும் இந்தி தொடரின் மொழிபெயர்ப்புதான்.

ஒரு பெண் வாழ்க்கையில் ஜெயிக்க அழகு முக்கியமல்ல திறமைதான் முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தும் தொடர் இது.

இந்த தொடரின் நாயகி சக்தி நல்ல மனம் படைத்தவர், திறமையானவள், வித்தியாசமானவள். கலகலப்பான நல்ல மனம் கொண்ட சக்தியைப் போல ஒருவள்தான் இருப்பாள். அவளை பார்க்க வேண்டுமெனில் பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு பாருங்கள் என்கின்றனர் தொடர் ஒளிபரப்பாளர்கள்.

 

மிராண்டாவின் மூன்று முடிச்சு!

Moondru Mudichu Inspires New Mirand

கமல்ஹாசன் நாயகனாக நடிக்க, வில்லனாக ரஜினிகாந்த் நடிக்க, நாயகியாக ஸ்ரீதேவி நடிக்க கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பெரும் சூப்பர் ஹிட் ஆன மூன்று முடிச்சு படத்தின் பாடல் வரியை வைத்து ஒரு விளம்பரத்தை உருவாக்கி கலக்கியுள்ளது மிராண்டா நிறுவனம்.

இந்த விளம்பரத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். டிவிகளில் இந்த விளம்பரம் இப்போது ஹிட்டாகியுள்ளது.

கே.பாலச்சந்தரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றுதான் கருப்பு வெள்ளையில் பரபரப்பாக ஓடிய மூன்று முடிச்சு. இப்படத்தின் அட்டகாசமான பாடல்களில் ஒன்று வசந்த கால நதிகளிலே.. ரஜினி படகோட்ட, கமலும், ஸ்ரீதேவியும் ரொமான்ஸ் செய்தபடி பயணிக்க, ஒரு கட்டத்தில் ரஜினி படகை உலுக்கி கமல்ஹாசனை தண்ணீரில் தள்ள, நீச்சல் தெரியாத கமல், தணணீரில் மூழ்கி இறந்து போவார்.

இந்தப் பாடல் வரிகளையும், காட்சியையும் மையப்படுத்தி படு ஜாலியான ஒரு கமர்ஷியலாக உருவாக்கியுள்ளது மிராண்டா. அதில் ஸ்ரீதேவி வேடத்தில் ஆசின் நடிக்கிறார். படகின் நடுவில் அவர் உட்கார்ந்திருந்த கமல் கேரக்டரில் வரும் நபர் மவுத் ஆர்கன் வாசித்தபடி வருகிறார். அப்போது கையில் மிராண்டா பாட்டிலை எடுத்து ஆசினுக்குக் கொடுத்துக் குடிக்கிறார். அப்போது ரஜினி வேடத்தில் வரும் நபர் படகை உலுக்க கமல் வேடத்தில் வந்தவர் தண்ணீரில் விழுகிறார்.

இதைப் பார்த்து ஆசின் பெரிதாக குழம்பவில்லை. மாறாக, ரஜினி வேடத்தில் வருபவர் தன்னிடம் இருக்கும் இன்னொரு டைப் மிராண்டா பாட்டிலை எடுத்துத் தர அதை ஜாலியாக வாங்கி வாயில் வைக்கிறார் ஆசின். அப்போது உற்சாக மிகுதியில் எழுந்து நின்று அவர் ஆட படகு ஆட, ரஜினி வேடத்தில் வந்தவரும் தண்ணீரில் விழுகிறார்.

இப்படி இருவரும் அடுத்தடுத்து விழுந்தாலும் சற்றும் கவலைப்படாத ஆசின், தன்னிடமிருக்கும் மிராண்டா பாட்டில்களுடன் பயணத்தைத் தொடருகிறார். ஆனால் தண்ணீரில் விழுந்த கமலும், ரஜினியும் படகைப் பிடித்தபடி மேலே வர அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு மிராண்டாவைக் கொடுக்கிறார் ஜாலி ஆசின்.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் 2 மிராண்டா குளிர்பானங்களுக்கான விளம்பரம் இது. இப்போது டிவிகளில் இதுதான் பாப்புலராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் காட்சியை விளம்பரத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக உரியவர்களிடம் முறையாக அனுமதி வாங்கித்தான் பின்னர் படப்பிடிப்பை வைத்தார்களாம்.

 

எதையும் நேர்மறையாக அணுகுங்கள்! - ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி

Always Think Positive Rajini Birthday Message   

எந்த விஷயத்தையும் நேர்முகமாக அணுகுங்கள் என ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பிறந்த நாளில் செய்தி விடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அபூர்வ தேதியான 12.12.12-ல் ரஜினி பிறந்த தினம் அமைந்துள்ளது.

வழக்கமாக தனது பிறந்த நாளன்று வீட்டில் இல்லாத ரஜினி, இந்த ஆண்டு இந்த நாளின் சிறப்பைக் கருதியும், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றும் வீட்டில் இருந்தார். ரசிகர்களையும் சந்தித்தார்.

காலை 5 மணியிலிருந்தே ரசிகர்கள் அவரது வீட்டு முன் திரள ஆரம்பித்துவிட்டனர்.

ரஜினி வீட்டு வாசலிலிருந்து சில அடி தூரத்தில் ரசிகர்கள் நிறுத்தப்பட்டனர். 9 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்தார் ரஜினி. பட்டு வேட்டி சட்டையில் வந்த ரஜினி, வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் ஏறி நின்று ரசிகர்களைப் பார்த்து சிரிப்புடன் கையசைத்து வணக்கம் தெரிவித்தார் ரஜினி.

கூடியிருந்த கட்டுக்கடங்காத கூட்டம் அவரைப் பார்த்து தலைவா... ஹேப்பி பர்த்டே என்று சந்தோஷத்தில் பெருங்குரலில் வாழ்த்த, அதை புன்முறுவறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.

ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ரஜினி, குடும்பத்தை சிறப்பாக கவனிக்குமாறும், எந்த விஷயத்தையும் நேர்மறையாக அணுகும்படியும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சிறிது நேரம் நின்றபடி வாழ்த்துக்களைப் பெற்ற ரஜினி பின்னர் வீட்டுக்குள் சென்றார்.

ஆனால் கூட்டம் தொடர்ந்து வந்தபடி இருந்ததால், மூன்று முறை வந்து ரசிகர்களைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

 

கட்டுமஸ்தான ஆண்களை சட்டையின்றி வர வைத்து இன்டர்வியூ செய்த பாடகி!

Courtney Stodden Auditions Shirtless

நியூயார்க்: வாட்டசாட்டமான ஆண்களை வரவழைத்து அவர்களை சட்டையைக் கழற்ற வைத்து நேரடியாக இன்டர்வியூ செய்தார் ஹாலிவுட் நடிகை கர்ட்னி ஸ்டோடன். இந்த நேரடி இன்டர்வியூவில் அவருக்கு உதவியாக கணவர் டோக் ஹட்சின்சனும் கூட உட்கார்ந்திருந்தார் என்பதுதான் விசேஷமானது.

பிரபல அமெரிக்க பாடகி ஸ்டோடன். டிவியிலும் தோன்றி வருகிறார். இவர் ஒரு புதிய இசை ஆல்பத்தை உருவாக்கவுள்ளார். வீடியோ ஆல்பமான இதில் நடிப்பதற்காக சில ஆண்கள் தேவைப்படுகிறார்கள். அந்த ஆண்களை தேர்வு செய்வதற்காக இவர் ஒரு நூதன நேர்முகத் தேர்வை வைத்தார். அதில் கலந்து கொண்ட ஆண்களுக்கு சட்டையைக் கழற்றி பாடி முழுவதும் தடவியும், உற்றும் பார்த்து தேர்வு செய்தார். இந்த பணியின்போது ஸ்டோடனின் கணவர் டோகும் அருகேயே இருந்து மனைவிக்கு கூட மாட உதவி செய்தார்.

சட்டையில்லாமல் வந்த ஆண்களின் கவர்ச்சியான, கட்டுமஸ்தான, வாட்டசாட்டமான உடல் அமைப்பை ரசித்தபடியும், கேலி செய்தபடியும், கமென்ட் அடித்தபடியும், எழுந்து போய் அருகில் நின்று போஸ் கொடுத்தபடியும், தடவிப் பார்த்தபடியும் கலாய்த்தாராம் ஸ்டோடன்.

ஸ்டோடன் நடத்திய இந்த இன்டர்வியூவில் நடிகர்கள், மாடல்கள், நடனக் கலைஞர்கள் என சகல தரப்பினரும் கலந்து கொண்டு பாடியைக் காட்டியுள்ளனர்.

ஸ்டோடனுக்கு 18 வயதுதான் ஆகிறது. அதேசமயம், அவரது கணவருக்கு 52 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்டர்வியூவின்போது ஸ்டோடனின் தாயார் கிறிஸ்டா கெல்லர், வீடியோ ஆல்பத்தின் இயக்குநர் மைக்கேல் செரட்டோ ஆகியோரும் இருந்தனராம்.

ஒவ்வொரு ஆம்பளையாக பார்த்து வந்த ஸ்டோடனுக்கு ஒருவரைப் பிடித்து விட்டதாகவும், அவரையே தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் யாரை ஸ்டோடன் தேர்வு செய்துள்ளார் என்பதை அவர் இதுவரை சொல்லவே இல்லை.

 

முதல் சந்திப்பிலேயே லதா மீது காதல் கொண்ட ரஜினிகாந்த்

Rajinikanth Proposes Latha Accepts

சென்னை: ரஜினி தன் காதலச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு லதா வெட்கப்பட்டுக் கொண்டு தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்டுமாறு கூறியுள்ளார்.

தில்லு முல்லு ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால் அவர்கள் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்தனர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது தான் அவரை முதன் முதலாக சந்தித்தார்.

அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா.

ரஜினி உதவியாளர் சத்யநாராயணா கூறுகையில்,

அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார். அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி வந்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்தது என்றார்.

ரஜினி சிறுவனாக இருந்தபோது கஷ்டப்பட்டது, குடும்பப் போராட்டம், இளம் வயதில் தாயை இழந்தது பற்றி லதா கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்து கொண்டார்.
அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன் என்றார் லதா. பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான் லதா வந்தார்.

லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை ஈசியாகிவிட்டது.

மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி சம்மதம் வாங்கினர். இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும் லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவி்த்தார். உடனே ரஜினி லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண் என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.

 

ரஜினிக்கு ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் வாழ்த்து!

Jayalalithaa Karunanidhi Wish Rajini

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் இன்று வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் அபூர்வ பிறந்த தினம் 12.12.12.

இந்த நாளில் அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், வெளிநாடு வாழ் இந்திய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காலையிலேயே தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் வாழ்த்துகளை ரஜினிக்கு தெரிவித்தார்.

கருணாநிதி

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுகுறித்து கருணாநிதி கூறுகையில், "சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 63 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை எனது வாழ்த்தினை தொலைப்பேசியில் தெரிவித்துக்கொண்டேன்," என்றார்.

முக அழகிரி

மத்திய அமைச்சர் முக அழகிரி ரஜினிக்கு போனில் வாழ்த்து தெரிவித்தார். சரித்திரப் புகழ்பெற்ற நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் ரஜினிக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.

முக ஸ்டாலின்

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான முக ஸ்டாலின் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் மத்திய நிதியமைச்சருமான ப சிதம்பரம் ரஜினிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திருநாவுக்கரசர், குமரி அனந்தன் ஆகியோரும் ரஜினியை வாழ்த்தினர்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரும் ரஜினிக்கு இன்று காலை வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜக தலைவர்கள் எல்கே அத்வானி, நிதின் கட்கரி, இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

என்றென்றும் சூப்பர் ஸ்டார் …. ரஜினிக்கு நடிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து!

Actors Greets Rajinikanth

தலைவாவாவாவாவா... ஹேப்பி பெர்த்டே.... இது ரஜினிகாந்த் பிறந்த நாளுக்காக ராகவா லாரன்ஸ் பாடிய பாடல். ரஜினியின் ஸ்டைல், ஸ்பீட், தூள் என அவரை புகழ்ந்து பாடியும், நடனமாடியும் இருக்கிறார் லாரன்ஸ். இன்று இரவு சன் டிவியின் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த பாடல் ஒளிபரப்பாகிறது.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பெரும்பாலான தொலைக்காட்சிகளில் ரஜினி பாடல்களும், அவர் நடித்த படங்களில் இருந்து பஞ்ச் வசனங்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.

சன் தொலைக்காட்சியில் காலை சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் லதா ரஜினிகாந்த் சிறப்பு பேட்டி ஒளிபரப்பானது. தனது கணவரின் பிறந்தநாள் தினத்தை உலகமே கொண்டாடுகிறது என்றும் அதற்குக் காரணமான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதேபோல் ஏற்கனவே விருந்தினர் பக்கத்தில் பங்கேற்ற நடிகர் சூர்யா, இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கூறிய கருத்துக்களை ஒளிபரப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து 9 மணிக்கு இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவின் சிறப்பு பேட்டி ஒளிபரப்பானது. அண்ணாமலை தொடங்கி பாட்ஷா வரை ரஜினி உடனான நெருக்கம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் இடையே நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

கோச்சடையான் வெற்றிபெற்றால், இலக்கியம் - இதிகாசங்களைப் படமாக்கும் முயற்சி வெற்றி பெறும் - ரஜினி

Rajini Speaks On Kochadaiyaan

சென்னை: கோச்சடையான் வெற்றி பெற்றால் இலக்கியங்கள், இதிகாசங்களைப் படமாக்கும் முயற்சி வெற்றி பெறும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தனது பிறந்த நாளையொட்டி இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ரஜினி.

அதற்கு முன் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த நாள் 12.12.12 ரொம்ப விசேஷமான நாள். இந்த நாளில் எனக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எல்லோருக்குமே என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் சீரும் சிறப்பும் நீண்ட ஆயுளும் பெற வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்...

நான் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் கோச்சடையான் படம் வெற்றியடைந்தால் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் இதேபோல் வெளிவந்து வெற்றியடையும். கோச்சடையான் படத்தின் வெற்றி இன்றைய சினிமா தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்," என்றார்.

 

தாய்மொழியில் ஒரு படத்தில் கூட நடிக்காத ரஜினி

Rajini Never Acted Marathi Films

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தாய்மொழியான மராத்தியில் இதுவரை ஒரு படம் கூட நடிக்கவில்லை.

இன்று பிறந்நாள் கொண்டாடும் ரஜினிகாந்தைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்களேன்.

ரஜினிகாந்தின் சொந்த பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவரது பெற்றோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். கர்நாடக தலைநகர் பெங்களூரில் வளர்ந்த ரஜினியின் தாய் மொழி மராத்தி ஆகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்க மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இத்தனை மொழிப் படங்களில் நடித்த அவர் தனது தாய்மொழியில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

கர்நாடகா போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராகும் முன்பு அவர் பல்வேறு சின்ன சின்ன வேலைகளை செய்துள்ளார். ஊரெல்லாம் கொண்டாடும் ரஜினிக்கு பிடித்த ஹீரோ கமல் தான். சிவாஜி பட வெற்றிக்கு பிறகு ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானை அடுத்து ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி.

ரஜினி பெரிய நடிகரான பிறகு கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்துள்ள படங்களில் அவர் இறந்துபோகும் காட்சி கிடையாது. அவர் இறப்பது போன்று காட்சி வைத்தால் அவரது ரசிகர்களின் மனம் புண்படும் என்று இயக்குனர்கள் நினைக்கின்றனர்.

 

11.11.11ல் நிச்சயதார்த்தம், 12.12.12.ல் விவாகரத்தை அறிவித்தார் மம்தா மோகன்தாஸ்

Mamta Mohandas Part Ways With Husband Pregith   

திருவனந்தபுரம்: திருமணமான ஓராண்டுக்குள் கணவனை விவாகரத்து செய்கிறார் நடிகை மம்தா மோகன்தாஸ்.

குரு என் ஆளு, சிவப்பதிகாரம் மற்றும் தடையறத் தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் மமதா மோகன்தாஸ். பாடகியும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்த அவருக்கும், அவரது சிறு வயது நண்பரும், தொழில் அதிபருமான பிரஜித் பத்மநாபனுக்கும் 11-11-11 அன்று நிச்சயதார்த்தம் நடந்து 28.12.11 அன்று திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் அவர் தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நானும், என் கணவரும் பிரிவது என்று முடிவு செய்துள்ளோம். இனியும் எங்களால் ஒன்றாக இருக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம். நான் நடிப்பு மற்றும் பாட்டில் கவனம் செலுத்துவேன் என்றார்.

மமதா மலையாளத்தில் மோகன்லால், பிரித்விராஜ் மற்றும் இந்திரஜித்துடன் நடித்து வருவதுடன் இசை ஆல்பம் ஒன்றிலும் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா தியேட்டர் ரகளை வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு ஜாமீன்

Bail Actress Buvaneswari

சென்னை: சினிமா தியேட்டரில் ரகளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரிக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள டிரைவ்-இன் தியேட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை புவனேஸ்வரி, படம் பார்க்கச் சென்றார். தியேட்டர் வாசலில் புவனேஸ்வரியின் கார் நுழைந்தபோது, முன்னால் சென்ற கார் மீது மோதியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த காரில் சென்ற குமார் என்ற வாலிபருடன் திடீரென மோதலில் ஈடுபட்டார்.

அப்போது புவனேஸ்வரியுடன் காரில் சென்றவர்கள் குமாரை சரமாரியாக தாக்கி, தியேட்டரை சூறையாடி ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.

புவனேஸ்வரியுடன் வந்தவர்கள் போலீசாரின் ஜீப் சாவியை எடுத்துக் கொண்டு காரில் தப்பினர்.இதுதொடர்பான வழக்கில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த ரூ.1 1/2 கோடி மோசடி புகாரிலும் புவனேஸ்வரி கைதானார். கார் மோசடி வழக்கிலும் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தியேட்டரில் ரகளையில் ஈடுபட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு புவனேஸ்வரி மற்றும் அவருடன் கைதான 6 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.

மனுவை விசாரித்த நீதிபதி சிவானந்த ஜோதி, புவனேஸ்வரிக்கும் அவருடன் கைதான 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடிதடி வழக்கில் ஜாமீன் பெற்றிருந்தாலும் மற்ற 2 வழக்குகளிலும் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் புவனேஸ்வரி தொடர்ந்து புழல் சிறையிலேயே இருப்பார்.

அடுத்தடுத்து வழக்குகள்

இதற்கிடையே புவனேஸ்வரி மீது மற்றுமொரு சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் அளித்த புகாரின் மீது போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது. எனவே அடுத்தடுத்து மேலும் சில வழக்குகளில் அவர் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.