பொதுச் செயலர் அமீர்; துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி


சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அமீர் வெற்றிபெற்றார். திரைப்பட அமைப்பு ஒன்றில் அவர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை.

இந்த சங்கத்துக்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும், எஸ்.முரளியும் போட்டியிட்டனர். செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் 48பேர் போட்டியிட்டனர்.

ஆரம்பத்தில் பாரதிராஜா தலைமையில் ஒரு அணியாகவும் அமீர் தலைமையில் தனி அணியாகவும் நின்று மோத முடிவு செய்தனர். பின்னர் இயக்குநர்கள் பீ வாசு, கே எஸ் ரவிக்குமாரின் சமரசம் காரணமாக இருவரும் ஒரே அணியில் வெவ்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டனர்.

கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். மாலை வரை மொத்தம் 1,279 ஓட்டுகள் பதிவானது. இரவு 7 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் கருத்து தெரிவித்ததால் இரவில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

இன்று காலை ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பாரதிராஜா மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இயக்குனர் அமீர் செயலாளராக தேர்வானார். பொருளாளர் பதவிக்கு இயக்குநர் ஜனநாதன் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி ஆகியோரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வானார்கள்.

திரைப்பட இயக்குநர்கள் நலன், திரைத்துறையின் நலன் காக்க பாடுபடுவோம் என இயக்குநர் அமீர் தெரிவித்தார்.

 

ஹன்ஸிகாவின் தொழில் பக்தி!


தொடர்ந்து இரண்டு பிளாப் படங்களில் வந்தாலும், கொழுக் மொழுக்கென்ற தோற்றத்துக்காக ‘அடுத்த நமீதா’ என அடையாளம் காணப்பட்டு, ரசிகர் மன்றம் உருவாகும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளவர் நடிகை ஹன்ஸிகா மோத்வானி.

அடுத்து விஜய்யுடன் இவர் நடித்துள்ள வேலாயுதம் வரவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

தெலுங்கில் ஓ மை ப்ரண்ட் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடி சித்தார்த்.

இந்த மூன்று படங்களுக்காகவும் சென்னை, மதுரை, ஹைதராபாத் என மாறி மாறி பறந்துகொண்டிருக்கிறார். இப்படி ஓயாத பயணத்தால் அவருக்கு காய்ச்சலே வந்துவிட்டதாம்.

ஆனாலும் காய்ச்சலைக் கூட பொருட்படுத்தாமல் கண்டீரவா என்ற தெலுங்குப் படத்துக்காக சுவிட்ஸர்லாந்து போய் நடித்துக் கொடுத்துள்ளார் ஹன்ஸிகா.

“அந்தப் படத்துக்காக ஏற்கெனவே தேதி கொடுத்துவிட்டிருந்தேன். காய்ச்சலைக் காரணம் காட்டி நடிக்கப் போகாமல் நின்றுவிட்டால் தயாரிப்பாளருக்கு வீண் நஷ்டம். காய்ச்சல் என்னோடு போகட்டும் என்று கருதி, கஷ்டப்பட்டு நடித்துக் கொடுதேன்,” என்றார் ஹன்ஸிகா.

இந்த தொழில் பக்திதான் தொடர் தோல்விகளிலிருந்து அவரைக் காக்கிறது போலும்!

 

முகமூடியில் ஜீவா!


அடுத்தவர்கள் நடிக்க மறுத்த கதையில் நடிப்பது ஜீவாவுக்கு பெரிய ஹிட்களாக அமைந்திருக்கின்றன கடந்த காலத்தில்.

லேட்டஸ்ட் உதாரணம், கேவி ஆனந்த் இயக்கத்தில் வந்த கோ. இப்போது மீண்டும் அதேபோன்றதொரு வாய்ப்பு வந்துள்ளது ஜீவாவுக்கு.

அதுதான் முகமூடி. ஒரு சூப்பர் ஹீரோ கதை. இயக்குநர் மிஷ்கினின் கனவுப் படம் என்று நீண்ட நாட்களாகக் கூறப்பட்டு வரும் படம் இது!

இந்தப் படத்துக்காக முதலில் சூர்யாவை அணுகினார் மிஷ்கின். ஆனால் அவர் நடிக்க மறுக்க, அடுத்து ஆர்யா, விஷால் வரை போய்ப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. சிம்புவைக் கூட சந்தித்தார் சில தினங்களுக்கு முன்.

கடைசியாக ஜீவா 'செட் ' ஆகியிருக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஸ்பெஷல் எபெக்ட்ஸை லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவனம் கவனிக்கிறது. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இன்னும் வெளியாகவில்லை.

ஆகஸ்டில் படப்பிடிப்பைத் தொடங்கி, அடுத்த ஆண்டில் ரிலீஸ் பண்ணப் போகிறார்களாம்.
 

தமிழ் - தெலுங்கு சினிமாவை அவமானப்படுத்துவதா?- காஜல் அகர்வாலுக்கு எதிராக திரையுலகம் கொந்தளிப்பு


தமிழ், தெலுங்கு சினிமாவையும் நடிகர் நடிகைகளையும் அவமதிக்கும் விதத்தில் பேட்டி அளித்த நடிகை காஜல் அகர்வால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், என ஒட்டுமொத்த திரையுலகமும் கொந்தளித்துள்ளது.

ஏன்.... அப்படி என்ன பண்ணார் காஜல்?

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமா மூலம்தான் ஒரு நடிகையாக அடையாளம் காட்டப்பட்டார் வட இந்தியப் பெண்ணான காஜல்.

ஆனால், சமீபத்தில் ஒரு பாலிவுட் சினிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், "என்னை தமிழ் அல்லது தெலுங்கு நடிகை என்று சொல்ல வேண்டாம். அதை நான் விரும்பவில்லை. நான் வட இந்தியப் பெண் என்பதுதான் எனக்குப் பெருமை", என்றார்.

அவரது இந்தப் பேட்டி வட இந்திய சேனல்களில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்து டென்ஷனாகிவிட்டார்கள் தென்னிந்திய நடிகர் நடிகைகள். இன ரீதியான அவமானமாக இதை அவர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக தெலுங்கு திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், காஜல் அகர்வால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"இந்தியில் சீண்டுவாரில்லை என்பதால்தானே, தமிழ் அல்லது தெலுங்குக்கு வந்தோம். இங்கே வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதையெல்லாம் யோசிக்கக் கூட மறுக்கிறார்கள் காஜல் அகர்வாலைப் போன்ற சிலர். காஜல் பேச்சு அநாகரீகமானது. தவறானது. இந்த ரோஷமும் உணர்வும் உள்ள அவர் எதற்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க வேண்டும்", என்று பொரிந்து தள்ளியுள்ளார் சக நடிகை ஒருவர்.

பதிலுக்கு பதில்...

இயக்குநர் ஸ்ரீதர் ரெட்டி கூறுகையில், "இரண்டு வாரத்துக்கு முன் ஹைதராபாதுக்கு வந்த காஜல் அகர்வால், இந்த ஊர் பிரியாணி, முத்துக்கள், ரசிகர்கள் எல்லாரையும் பிடிக்கும். ஐ லவ் ஹைதராபாத் என்றார். அடுத்த வாரம் சென்னையில் இருந்தார். அங்கே, ஒரு படத்துக்கு ஒப்பந்தமான அவர், ஐ லவ் சென்னை. இந்த ஊர் மாதிரி எதுவும் இல்லை, என்றெல்லாம் பேட்டியளித்தார். இது அவரது தொழில் நிர்ப்பந்தம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதேபோல ஐ லவ் மும்பை என்று சொல்லியிருக்கலாம்.

அதைவிட்டுவிட்டு, 'என்னை தென்னிந்திய நடிகை என்று சொல்வதில் பெருமையில்லை' என்று அவர் கூறியிருப்பது, அநாகரீகமானது. நம்மை அவமானப்படுத்தும் செயல். இதைவிட பெரிய அவமானத்தை அவர் பதிலுக்கு பெற வேண்டி வரும். நாங்களும் அவரை அப்படியே நடத்துவோம்," என்றார்.

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கூறுகையில், "காஜல் தனது இன வெறியைக் காட்டியுள்ளார். சினிமாவுக்கு இது நல்லதல்ல. அவர் இங்கே நடிப்பது யாருக்குமே நல்லதல்ல. காஜலுக்கு வாய்ப்பு மறுப்போம்," என்றார்.
 

சிக்கலில் பிரசாந்த் படம்!


பொன்னர் சங்கர் படம் எடுத்த போது, தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் இப்படி தலைகீழாக மாறிப் போகும் என படத்தின் இயக்குநர் தியாகராஜனோ அல்லது அவரது மகன் பிரசாந்தோ நி்னைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு இயக்குநராக தியாகராஜனுக்கு பொன்னர் சங்கர் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தாலும், பாக்ஸ் ஆபீஸில் படுத்துவிட்டது படம். காரணம், அது கருணாநிதி வசனம் எழுதியது என்பதுதான் என இப்போது மேடைபோட்டுக் கூவி வருகிறார்கள் சிலர். ஆனால் இவர்கள்தான் பொன்னர் சங்கர் மேடையில் கருணாநிதி கதை வசனத்தைப் புகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரசாந்த் நடித்து, தியாகராஜன் இயக்கியுள்ள மற்றொரு படமான மலையூர் மம்பட்டியான் ரிலீசுக்கு தயாராக நிற்கிறது.

இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியுமா என திரையுலகமே தியாகராஜனைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் முன்பு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து, கடந்த ஆட்சியின்போது கருணாநிதி முகாமுக்குப் போனவர் தியாகராஜன்.

ஆனால், அவரோ எது பற்றியும் கவலைப்படாமல் படத்தை வெளியிடுவதில் குறியாக உள்ளார். விஷயம் கேள்விப்பட்ட பிறகு, சில விநியோகஸ்தர்கள் தாங்களாக தியாகராஜனை தொடர்பு கொண்டு வியாபாரம் பேசினார்களாம்.

"எனக்கு எந்த பயமும் தயக்கமும் இல்லை. அரசியல் நிலைப்பாடு வேறு. ஒரு கலைஞனாய் ஆட்சியாளர்களின் தயவை நாடும் சினிமா உலகில் நானும் ஒருவன். ஆட்சிக் கெதிராக நான் எதிலும் ஈடுபடாத போது, என் படத்தை எதற்கு தடுக்கப் போகிரார்கள். படம் விரைவில் வெளியிடப்படும்," என்றார்.
 

தனுஷுக்கு தம்பி நான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனுஷுக்கு தம்பி நான்

6/20/2011 12:38:41 PM

''தனுஷுக்கு தம்பி நான்…'' என்று ஒரு நடிகர் சொன்னால், 'ஓகோ… தனுஷ் படத்தில் அவருக்குத் தம்பியாக நடிக்கிறார் போலிருக்கிறது…' என்றுதான் அவரை நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த விஷயம் அப்படியில்லை. மேற்படி ஸ்டேட்மென்ட்டைத் தரும் வருண், தனுஷுக்குத் தம்பியேதான். விவரமாகச் சொன்னால் தனுஷின் கஸின் பிரதர். கஸ்தூரிராஜாவின் தம்பி சேதுராமின் மகனான வருண், இப்போது தி ஃபிலிம் கம்பெனியின் 'மல்லுக்கட்டு' படத்தில் ஹீரோ.

''அப்பாவும் சினிமாவிலதான் இருக்கிறார். ஆனா வியாபாரத்தின் பக்கம். ஓவர்ஸீஸ் டிஸ்ட்ரிபியூட்டரா இருக்கிற அவருக்கு என்னை ஹீரோவாக்கணும்னு ஐடியாவெல்லாம் இல்லை. நீ இதுவாதான் ஆகணும்னு அவர் என்னைக் கட்டாயப்படுத்தவும் இல்லை. நானும் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் படிச்சேன். காலேஜ்ல சேர்க்கும்போதே அப்பாவோட பிசினஸும், பேக்கிரவுண்டும் தெரிஞ்சு பிரின்சிபால் கேட்ட கேள்வி, 'நடுவில படிப்பை விட்டுட்டு பையன் சினிமாவுக்குப் போயிட மாட்டானே…'ங்கிறதுதான். ஆனா காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல என்னோட பங்களிப்பைப் பார்த்த அவரே ஒரு கட்டத்தில, 'காலேஜ் முடிஞ்சதும் வருணை சினிமாவுக்கு நீங்க அனுப்பலாம். நிறைய டேலன்ட்ஸ் அவன்கிட்ட இருக்கு…'ன்னு அப்பாகிட்ட சொன்னார். ஆக, நான் எந்தத் தடையும் இல்லாம, டிகிரியையும் வாங்கிட்டு சினிமாவுக்கு வந்துட்டேன்..!'' என்கிற வருண், நடிக்க முடிவெடுத்ததும் செய்த முதல் வேலை… சினிமாவை முறைப்படி கற்றுக்கொள்ள அசிஸ்டென்ட் டைரக்டர் ஆனது.

'''பூக்கடை ரவி' படத்தில அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்தேன். அந்தப் பயிற்சி சினிமாவையும், தயாரிப்பாளர்கள் பிரதாபன், நந்தகோபாலையும் அறிமுகப்படுத்த, அவங்க டைரக்டர் முருகானந்தத்தை அறிமுகப்படுத்தினாங்க.

விக்ரமன் சாரோட அசிஸ்டென்ட்டான அவர் கதை சொல்லக் கேட்டோம். கேட்ட யாருக்குமே அன்னைக்கு இரவு துக்கமில்லை. அதுக்காக துக்கமும் இல்லை. இரண்டரை மணிநேரப் படத்தில ரெண்டு மணி இருபது நிமிஷம் சிரிச்சுக்கிட்டே இருந்தோம். கடைசி பத்து நிமிஷம் நெகிழ்ச்சியோட எழுந்தோம். அப்படி ஒரு அட்டகாசமான கதை…'' என்ற வருண் தொடர்ந்தார்.
''பேசிக்கிட்டு இருக்கும்போதே அடிக்கிறவன் கோபக்காரன்னா, அடிச்சுட்டுதான் பேசவே ஆரம்பிக்கிறவனை என்னன்னு சொல்ல..? அப்படிப்பட்ட கேரக்டர்தான் எனக்கு. மூக்குக்கு மேல கோபத்தை வச்சுக்கிட்டு மல்லுக்கட்டிட்டு திரியறவனுக்கு, காதலும் எப்படிப்பட்ட மல்லுக்கட்டைக் கொடுக்குதுங்கிறதுதான் படத்தோட ப்ளாட். அதனால படத்தில நாலு ஃபைட் இருக்கு. காமெடி ட்ரீட்மென்ட்டில போற படம்ங்கிறதால மூணு சண்டை காமெடி கலந்தும், கடைசி சண்டை படு உக்கிரமாவும் இருக்கும். பாலா சார் படங்கள் போல சண்டைகள் உண்மையா தெரிய வேண்டி, ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் உண்மையாலுமே அடிக்க வச்சார்.

ஒவ்வொரு நாளும் உடல் முழுக்க காயங்கள்தான். ஒரு கட்டத்தில எனக்கு கைல மூட்டு டிஸ்லொகேஷன் ஆனது.

அதெல்லாம் என் பிரச்னைதானே தவிர, படத்தில என்கூட நடிச்சிருக்க சபேஷ் கார்த்தி காமெடியில பிச்சு உதறியிருக்கார். 'பசங்க' படத்தோட ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், 'வம்சம்' இசையமைப்பாளர் தாஜ்நூர், 'பருத்தி வீரனு'க்காக தேசிய விருது வாங்கிய எடிட்டர் ராஜாமுகமதுன்னு பக்காவா டீம் அமைஞ்சிருக்கு…''

''ஹீரோயின் ஹனிரோஸோட கெமிஸ்ட்ரி பத்தி சொல்லலையே..?''

''நல்லாவே இருந்தது. ஹனி, எனக்கு சீனியர்னாலும் எங்க ரெண்டு பேருக்கும் நடிப்பில நல்ல போட்டி இருந்தது. மத்தபடி காதலுக்கு மரியாதையான கதைங்கிறதால நெருக்கமான காதல் காட்சிகளெல்லாம் இல்லை..!''

அதில் வருத்தமா வருண்..?

 

ஹீரோவான மயில்சாமி மகன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹீரோவான மயில்சாமி மகன்

6/20/2011 12:25:39 PM

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் உறவுகளின் மேன்மையை சொல்லும் ராசு.மதுரவன் 'மாயாண்டி குடும்பத்தார்', 'முத்துக்கு முத்தாக' படங்களுக்கு பிறகு இயக்கும் படம் 'பார்த்தோம் பழகினோம்'. இதில் நாயகனாக புதுமுகம் அன்பு நடிக்கிறார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன். "ஒரு அழகான குடும்பம். அந்தக் குடும்பத்தில் கடைசி மகனாக பிறக்கும் நாயகன். அவனுடைய குடும்பம்,  படிப்பு, காதல் என்று எல்லாம் கலந்த கலவையாக இந்தப் படம் இருக்கும். கவி பெரிய தம்பி இசையமைக்கிறார். தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதிகளில் 50 நாட்கள் தொடர்ந்து ஒரே கட்டமாக இந்தப் படத்தை எடுக்கவுள்ளேன்" என்கிறார் இயக்குனர் ராசு.மதுரவன்.

 

ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு ஒஸ்தி படக்குழு பரிசு


ப்ளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிம்பு நடிக்கும் ஒஸ்தி படக்குழு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ப்ளஸ் டூ மற்றும் எஸ்எஸ்எல்சி வகுப்புகளுக்கு நடந்த பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒஸ்தி படக் குழு சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்போவதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

இதற்கான விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் ப்ளஸி டூவில் அதிக மதிப்பெண் பெற்ற ஓசூர் மாணவி கே. ரேகாவுக்கு ரூ 1 லட்சம் பரிசளிக்கப்பட்டது. இவர் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்.

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி எம் நித்யா, கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ரம்யா, சேலம் சங்கீதா, திருவெற்றியூர் ஹரிணி ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

பரிசுகளை நடிகர் சிம்பு வழங்கினார். விழாவில் இயக்குநர் தரணி, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
 

இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு


தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக இயக்குநர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் பல்வேறு பதவிகளுக்காக நேற்று சென்னை வடபழனியில் தேர்தல் நடந்தது. இதில் 21 பதவிகளுக்காக மொத்தம் 48 வேட்பாளர்கள் ஒருங்கிணைந்த இயக்குநர்கள் அணி மற்றும் புதிய அலை என இரு பெயர்களில் போட்டியிட்டனர்.

நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதில் மொத்தம் பதிவான 1279 வாக்குகளில், பாரதிராஜா 1003 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் அமீர் 901 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இயக்குநர் சேரன், சமுத்திரக்கனி இருவரும் துணைத்தலைவர்களாகவும், இயக்குநர் எஸ்பி ஜனநாதன் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
 

அவன்-இவன் படத்தில் சொரிமுத்து அய்யனார் பற்றி அவதூறு-சிங்கம்பட்டி ஜமீன் புகார்


விஷால்-ஆர்யா நடித்து வெளியான அவன்-இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், சொரிமுத்து அய்யனார் கோவில் பறறியும் அவதூறாக வசனம் இருப்பதாக ஜமீன் குறறம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சிங்கம்பட்டி இளைய ஜமீன் தாயப்பராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜமீன்களில் சிங்கம் பட்டி ஜமீனும் ஓன்று. அம்பை தாலுகாவில் 1910ல் இலவச மருத்துவமனை, இலவச பள்ளி ஜமீன் தீர்த்தபதி ராஜா பெயரில் கட்டிகொடுக்கப்பட்டு இன்னும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் நெல்லை டவுன் நாலு ரதவீதியிலும் தேரோட்ட நேரத்தில் தண்ணீர் டேங்குகள் அமைத்து கொடுப்போம்.

காரையாறில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்கு உட்பட்டது. நெல்லை மாவட்ட மக்கள் அதை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் ஆடி, அமாவசை திருவிழாவின் போது 5 லட்சம் பேர் கூடுவார்கள். அன்று எனது மூத்த சகோதரரும், தற்போதைய ஜமீன்தாரருமான முருகதாஸ் தீர்த்தபதி ராஜா ராஜ உடையில் தரிசனம் வழங்குவார். இதுபோன்ற விழா தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடையாது.

இன்றும் பொதுமக்கள் எங்கள் மீது பாசத்தோடும், மரியாதையோடும் இருக்கிறார்கள். நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறோம். இப்படி இருக்கையில் புகழ் பெற்ற ஜமீனையும், பழமையான சொரி முத்து அய்யனார் கோவிலையும் அவன்-இவன் படத்தில் அவதூறாக காட்டியுள்ளனர்.

படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அங்கு தீர்த்தபதி என்று கேரக்டரை உருவாக்கி அவர் குடிப்பது போன்றும், சுற்றுலா விடுதியில் சண்டை போடுவது போன்றும், இறுதியில் அவரை நிர்வாணமாக்கி விட்டு பொது மக்கள் அடிப்பது போன்றும் உள்ளது.

மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற ஒரு கேரக்டரை உருவாக்கி இந்த கோயிலை நம்பிதான் நீங்கள் வாழ்ந்தி்ட்டு இருங்கிறீங்க என்ற வசனம் வருகிறது. இது எங்களை இழிவு படுத்துவது போல் உள்ளது. இந்த படத்தை இயங்கிய பாலாவை வன்மையாக கண்டிகிறோம்.

உடனடியாக அவதூறு காட்சிகளை நீக்கவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
 

தாயானார் மந்திரா பேடி-ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்!


தந்தையர் தினமான ஜூன் 19ம் தேதியான நேற்று நடிகை மந்திரா பேடி ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தாயானார்.

மந்திரா பேடிக்கு், ராஜ் கெளசலுக்கும் திருமணமாகி 11 ஆண்டுகளாகிறது. இந்த நிலையில், தற்போதுதான் கர்ப்பமடைந்தார் மந்திரா. ஜூன் 19ம் தேதியான நேற்று மும்பையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு வீர் என பெயரிட்டுள்ளனர் மந்திரா பேடி, கெளசல் தம்பதியினர்.

இதுகுறித்து ராஜ் கெளசல் வெளியிட்டுள்ள ட்விட்டர் தகவலில், மிகச் சிறந்த தந்தையர் தினமாக இது எனக்கு அமைந்துள்ளது. இதற்காக வீருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனது வாழ்க்கையில் சிறந்த பரிசைக் கொடுத்ததற்காக மந்திராவுக்கும் நன்றி சொல்கிறேன். தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

தான் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் தனது உடல் நிலை குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலம் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் மந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
 

கிசு கிசு - நடிகையின் திடீர் மாற்றம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நடிகையின் திடீர் மாற்றம்

6/20/2011 12:16:04 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

சதுரங்கமான படம் நடிச்சி அஞ்சு வருஷமா பெட்டில முடங்கிகிடக்கேனு ரோஸ் கூட்ட ஹீரோ வருத்தத்துல இருக்க¤றாராம்… இருக்க¤றாராம்… Ôஇந்த படம் வந்திருந்தா, என்னோட ரேஞ்சும் மாறி இருக்கும், டாப்புக்கும் போயிருப்பேன்Õனு புலம்புறாராம். அந்த படத்துக்கு திரும்ப உயிர் கொடுக்க முடியுமானு சினிமா நண்பர்களோடு தீவிரமா ஆலோசிக்கிறாராம்… ஆலோசிக்கிறாராம்…

பிசின் நடிகைக்கு பாலிவுட் ஹீரோயின்களோடு பனிப்போர் நடக்குதாம்… நடக்குதாம்… இதனால அவரைப் பற்றி ஏதாவது வம்பு கிளப்பி, சிக்கல்ல மாட்டி விடப்பாக்குறாங்களாம்… பாக்குறாங்களாம்… பிகினி டிரஸ் போட்டு நடிக்கிற கிசு கிசுவும் இப்படி கிளப்பிவிட்டதுதான்னு நடிகை சொல்றாராம். அப்படி நடிக்கலேனு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்கனு நடிகை விரக்தி அடைஞ¢சிருக்காராம்… அடைஞ்சிருக்காராம்…

ஜெனியான நடிகைகிட்ட மாற்றம் தெரியுதாம். விழாக்களுக்கு புடவையில வர்றாராம்… வர்றாராம்… காரணம் கேட்டா, எல்லாம் ஒரு சேஞ்ச்சுக்குத்தான்னு சொல்றாராம்… சொல்றாராம்… ஆனா, உண்மையான காரணத¢தை ஜக்கம்மா கண்டுபிடிச்சிட்டா. பாலிவுட் காதலரு, ஜெனிக்காகவே ஸ¢பெஷலா புடவைகளை வடிவமைக்க ஆர்டர் கொடுத்தாராம்… கொடுத்தாராம்… அந்த புடவைகளைத்தான் அவரு சமீபத்துல சில விழாக்களுக்கு கட்டிகிட்டு வந்தாராம்… வந்தாராம்…

 

கார்த்தி திருமணம் பற்றி காஜல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கார்த்தி திருமணம் பற்றி காஜல்

6/20/2011 12:15:01 PM

காஜல் அகர்வால் கூறியது: கார்த்தி எனது நண்பர். 'நான் மகான் அல்ல’ படத்தில் நடித்தபோது நட்பாக பழகினோம். நம்பிக்கைக்குரியவர். அவர் தனது வாழ்க்கை துணையாக பொருத்தமான பெண்ணை தேர்வு செய்திருக்கிறார். அந்த ஜோடிக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் 'மாற்றான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறேன். ஆனந்தின் படங்களும் அவர் பணியாற்றும் ஸ்டைலும் பிடிக்கும். 'மாற்றான்’ படத்தில் எனது கேரக்டர் பேசப்படும். இதற்குமுன் நடித்த கேரக்டர்களில் இருந்து இது மாறுபட்டது. கதை கேட்டபோதே அதை உணர்ந்தேன். தெலுங்கில் நடித்த 'மகதீரா’, தமிழில் 'மாவீரன்’ பெயரில் ரிலீஸ் ஆனது. இதில் இளவரசியாக நடித்த அனுபவம் பற்றி கேட்கிறார்கள். வரலாற்று படத்தில் நடிப்பதென்றால் நிறைய கவனம் தேவை என்பதை அந்த வேடத்தில் நடித்தபோது தெரிந்துகொண்டேன். இதற்காக  தனி நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். கமர்சியல் படத்தில் நடிப்பதைவிட அதிக ஈடுபாடு தேவை.

 

டி20 சாம்பியன்ஸ் லீக்: பிராண்ட் அம்பாஸடராக ஷாரூக்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

டி20 சாம்பியன்ஸ் லீக்: பிராண்ட் அம்பாஸடராக ஷாரூக்!

6/20/2011 12:10:51 PM

10 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் பிராண்ட் அம்பாஸடராக ஷாரூக்கான் அறிவிக்கப்பட உள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தப் போட்டிக்கு, அமிதாப் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு, போட்டியின் நடத்துநர்களான இஎஸ்பிஎன் ஸ்போர்ட்ஸ், ஷாரூக்கானை அணுகியுள்ளது. அவரும் இந்தப் புதிய பொறுப்பை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தப் போட்டியில் ஐபிஎல்லில் பங்கேற்ற அணிகளிலிருந்து மூன்று அணிகள் பங்கேற்கின்றன. இப்போது நான்காவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த அணியின் உரிமையாளர் ஷாரூக்கான்தான் என்பதால், அவர் நிச்சயம் விளம்பரத் தூதராக இருப்பார் என்று இஎஸ்பிஎன் தரப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

வித்யாபாலன் நடித்த குளியல் காட்சியில் குளறுபடி!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

வித்யாபாலன் நடித்த குளியல் காட்சியில் குளறுபடி!

6/20/2011 12:01:49 PM

இந்தியில் “தி டர்ட்டி பிக்சர்ஸ்” என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து வரும் வித்யாபாலனுக்கு ஒரு பெருத்த சோதனை. அம்மணி நடித்த குளியல் காட்சி ஒன்றில், அவர் குளித்த தண்ணீர் சரியில்லாததால் அவரது உடம்பில் தடிப்பு தடிப்பாக ஏற்பட்டது. 1980களில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கலக்கிய கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இந்தியில் படமாக உருவாகி வருகிறது. “தி டர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெயரில், ஏக்தா கபூர் தயாரிக்க, மிலன் லூதிரா இயக்கத்தில், பாலிவுட்டின் முன்னணி நாயகி வித்யாபாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்து வருகிறார். பொதுவாக சில்க் படம் என்றாலே குளியல் காட்சி இருக்கும். அதேபோல் இந்தபடத்திலும் குளியல் காட்சி ஒன்றை சமீபத்தில் படமாக்கினர்.
இந்த காட்சியில் வித்யாபாலன் நடித்து விட்டு வந்த சில நிமிடங்களில், அவரது உடம்பில் லேசான நமநமப்பு போன்று உணர்ந்தார். ஆரம்பத்தில் இதை சாதரணமாக எடுத்துக்கொண்டு வித்யாபாலனுக்கு கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பாக மாறியது. இதனால் பதறிப்போன வித்யா, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் காண்பித்துள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத சோப் அல்லது கெமிக்கல் கலந்த தண்ணீரால் தான் இந்த பிரச்சனை என்று கூறியிருக்கின்றனர். இதன்பின்னர் வித்யாபாலனுக்கு சிகிச்சை அளித்து அவரை அனுப்பி வைத்தனர். உடம்பில் ஏற்பட்ட இந்த திடீர் இன்பெக்ஷனால் சற்று கலங்கி போய் இருக்கும் வித்யபாலன், சில நாட்கள் ரெஸ்ட் எடுத்த பின்னர் மீண்டும் சூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறாராம். மேலும் படத்தில் இன்னும் சில குளியல் காட்சிகள் இருக்கிறதாம். ஆகையால் இனி எடுக்கப்போகும் குளியல் காட்சிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மினரல் வாட்டரை பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கின்றராம் படக்குழுவினர்.

 

கிராமத்துப் பெண்ணாகவே நடிப்பது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கிராமத்துப் பெண்ணாகவே நடிப்பது ஏன்?

6/20/2011 11:52:33 AM

நடிகை மீரா நந்தன் கூறியதாவது: மலையாளத்தில் நான் நடித்த 'சங்கரனும் மோகனனும்' இப்போது வெளிவந்திருக்கிறது. தமிழில் 'சூரியநகரம்' வெளி வர வேண்டி இருக்கிறது. இதில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். தொடர்ந்து கிராமத்து பெண் கேரக்டரிலேயே நடிக்கிறீர்களே என்கிறார்கள். மாடர்னான கேரக்டரில் நடிக்க எனக்கும் ஆசைதான். ஆனால் அதுபோல் கேரக்டர்கள் எனக்கு அமையவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. தற்போது வேறெந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. எனது பட்டப் படிப்பின் கடைசி வருடம் என்பதால் கதை கேட்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். இப்போது ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். இந்த இடைவெளியில் வேறு ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. அதனால் யோகா செல்லத் துவங்கினேன். இப்போது அதிலும் தேர்ச்சி பெற்று விட்டேன்.

 

குத்துச்சண்டை கற்கிறார் ஜெயம்ரவி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குத்துச்சண்டை கற்கிறார் ஜெயம்ரவி!

6/20/2011 11:46:00 AM

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் அசோசியேட் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படம் 'பூலோகம்'. இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் குத்துச் சண்டை கற்று வருகிறார். இதுபற்றி இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் கூறியதாவது: மதன் என்ற குத்துச்சண்டை வீரர் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்றவர். அவர் வாழ்க்கையின் பாதிப்பில்தான் இந்த படம் உருவாக்கப்படுகிறது. ஜெயம் ரவிக்கு பயிற்சி அளிப்பதும் அவர்தான். படத்தில் நிறைய குத்துச் சண்டையும், அந்த விளையாட்டு தொடர்பான நுணுக்கமான விஷயங்களும் இடம்பெறுகிறது. 'பேராண்மை'யில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் இதிலும் பணியாற்றுகிறார்கள்.

 

மம்பட்டியானுக்காக சின்ன பொண்ணு சேல ரீமிக்ஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மம்பட்டியானுக்காக சின்ன பொண்ணு சேல ரீமிக்ஸ்!

6/20/2011 11:42:36 AM

தியாகராஜன் தயாரித்து, இயக்கும் படம் 'மம்பட்டியான்'. இது, 25 வருடங்களுக்கு முன் தியாகராஜன் நடிப்பில் ரிலீசான 'மலையூர் மம்பட்டியான்' படத்தின் ரீமேக். பிரசாந்த், மீரா ஜாஸ்மின் ஜோடி. இளையராஜா பாடி இசையமைத்த 'காட்டுவழி போற' பாடல், இப்போது இருமுறை ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டைட்டிலில் இடம்பெறும் பாடலை தியாகராஜன் பாடியுள்ளார். அதே பாடலை சிம்பு வித்தியாசமான குரலில் பாடியிருக்கிறார். இதற்கு பிரசாந்த் மற்றும் நடனக் கலைஞர்கள் நடித்துள்ளனர். 'சின்ன பொண்ணு சேல' பாடலும் ஹரீஷ் ராகவேந்திரா, ஸ்ரேயா கோஷல் குரலில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

 

வெங்கடேஷ் இயக்கத்தில் விதார்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வெங்கடேஷ் இயக்கத்தில் விதார்த்

6/20/2011 11:40:40 AM

வெங்கடேஷ் இயக்கத்தில் விதார்த் நடிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இயக்கம்தான் என் முக்கிய பணி. 'இரவும் பகலும்', 'அழகன் அழகி' படங்களில் போலீஸ் வில்லனாக நடிக்கிறேன். 'பள்ளிக்கூடம் போகலாமா' படத்தில் ஹீரோவின் தந்தையாக நடிக்கிறேன். நிறைய படங்களில் குணசித்திர கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் நடிகனாக மட்டும் சுருங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். விதார்த் நடிக்க கமர்சியல் படம் ஒன்றை இயக்குகிறேன். ஏவி.எம் தயாரிக்கும் 'முதல் இடம்' படம் முடிந்த பிறகு இந்தப் படம் துவங்கும்.

 

கார்மென்ட் பிசினஸில் இறங்கினார் அபிநயஸ்ரீ!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கார்மென்ட் பிசினஸில் இறங்கினார் அபிநயஸ்ரீ!

6/20/2011 11:36:59 AM

முன்னாள் குத்தாட்ட நடிகை அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ. இவரும் பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். ஒரு பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். தெலுங்கு படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். தற்போது அவர் கார்மென்ட் பிசினஸில் இறங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் தேவையான அளவுக்கு நடித்து விட்டேன், ஆடிவிட்டேன். சினிமாவின் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடிட்டிங், கிராபிக்ஸ், சவுண்ட் என்ஜினீயரிங் கற்றேன். ரெக்கார்டிங் தியேட்டர் கட்ட வேண்டும் என்பது ஆசை. தற்போது பெரிய நிறுவனம் ஒன்றின் ரெடிமேட் ஆடைகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்றுள்ளேன். அண்ணாசாலையில் உள்ள ஷாப்பிங் மாலில் விரைவில் ஷோரூம் தொடங்க உள்ளேன். இதன் கிளைகளை மற்ற இடங்களிலும் தொடங்குவேன்.

 

உயர்கிறது சினிமா தொழிலாளர்கள் சம்பளம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உயர்கிறது சினிமா தொழிலாளர்கள் சம்பளம்!

6/20/2011 11:34:53 AM

இந்த ஆண்டு முதல் திரைப்பட தொழிலாளர்களின் சம்பளம் உயர இருப்பதால் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். திரைப்படத் துறையில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தவிர 23 தொழிலாளர் சங்கம் உள்ளது. இவை திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திரைப்படத் தொழிலாளர்களின் சம்பளத்தை எவ்வளவு உயர்த்துவது என்று ஒவ்வொரு சங்கத்துடனும் தயாரிப்பாளர் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதன் முடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அது அமுலில் இருக்கும். இது வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்த ஆண்டு இது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இதற்கு காரணம் முன் எப்போதையும் விட தற்போது திரைப்பட தொழிலாளர்கள் அதிகமாக சம்பள உயர்வு கேட்பதாகவும், சில சங்கங்கள் தங்கள் சம்பளத்தை மூன்று மடங்கு வரையும், அதற்கு கூடுதலாகவும் உயர்த்தி கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிந்து வருவதாகவும் தெரிகிறது. 'திரைப்பட தொழிலாளர்கள் ஒரே மாதிரியான சம்பளத்தை கொண்டவர்கள் அல்ல. தினக்கூலிகள் இருக்கிறார்கள், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி மாறுபட்ட சம்பள நிலையை கொண்டிருப்பதால் தனித்தனி பேச்சுவார்த்தைகள் மூலம்தான் அவர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ய முடியும். அதோடு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய விலைவாசி இப்போது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பை விட, இப்போது படத்தின் தயாரிப்பு செலவும் பல வழிகளில் உயர்ந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது தொழிலாளர்களின் சம்பளமும் உயர்வது இயற்கைதானே' என்கிறார் திரைப்பட தொழிலாளர் சங்கப் பிரமுகர் ஒருவர்.

'திரைப்படத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நியாயமானது என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அதை தாங்க கூடிய சக்தி தயாரிப்பாளர்களுக்கு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. பெரிய தயாரிப்பாளர்களுக்கு பத்து கோடி ரூபாய் செலவு என்பதில் 11 கோடி என்று போய்விடும். ஆனால் ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாயில் படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களின் நிலை மோசமானது. இப்போது ஒரு நாள் படப்பிடிப்பு செலவு குறைந்த பட்சம் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை ஆகிறது. இனி அது, இரண்டு லட்சத்திலிருந்து மூன்று லட்சமாக உயரும். இது படத்தின் பட்ஜெட்டை 25 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதம் வரை உயர்த்தும். இதை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கலக்கத்தில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் குழப்பமான சூழ்நிலையால் தீர்க்கமான எந்த முடிவும் எடுக்க முடியாமல் இருக்கிறோம்' என்றார் சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர் ஒருவர்.

திரைப்படத் தொழிலாளர்களின் நியாயம் ஒரு பக்கம், தயாரிப்பாளர்களின் கலக்கம் இன்னொரு பக்கம், இதை திரைப்படத் துறை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது திரைப்படத் துறையை நம்பியிருப்பவர்களின் கவலையாக உள்ளது.

 

என் தங்கை நடிக்கவில்லை : டாப்ஸி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
என் தங்கை நடிக்கவில்லை : டாப்ஸி!

6/20/2011 11:31:13 AM

'ஆடுகளம்' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவரது தங்கை ஷாகன், தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்றும் அதற்கு டாப்ஸி உதவி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி டாப்ஸியிடம் கேட்டபோது கூறியதாவது: என் தங்கை ஷாகன் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இப்போது இல்லை. ஐதராபாத்தில் நடந்த விருது விழா ஒன்றுக்காக, எனக்கு துணைக்காக அவரை அழைத்திருந்தேன். அதற்காக வந்திருந்தார். இந்த வதந்தியால் அவர் நடிக்க வந்திருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இதையடுத்து எனது தங்கை பயத்தில் உள்ளார். இப்போது அவளுக்கு நடிக்கும் எண்ணமில்லை. இவ்வாறு டாப்ஸி கூறினார்.




 

15 நாட்களில் ரஜினி சென்னை திரும்புவார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
15 நாட்களில் ரஜினி சென்னை திரும்புவார்!

6/20/2011 10:31:59 AM

"பதினைந்து நாட்களில் ரஜினி, சென்னை திரும்புவார்" என்று நடிகர் தனுஷ்  கூறினார். ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நடிகர் தனுஷ் நேற்று அதிகாலை திருமலை வந்தார். அதிகாலை 3 மணிக்கு ரூ.300 டிக்கெட் மூலம் தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'ரஜினி பூரணமாக குணமடைந்து விட்டார். இன்னும் 15 நாட்களில் அவர் சென்னைக்கு திரும்புவார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'ராணா' படத்தை, அவர் நல்ல முறையில் நடித்து கொடுப்பார்" என்றார். திருமலைக்கு திடீரென வந்தது பற்றி கேட்டபோது, தனது அக்காவின் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு மொட்டை போட வந்ததாக கூறினார். அவருடன் தந்தை கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் மற்றும் அக்கா குடும்பத்தினர் வந்திருந்தனர்.




 

இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்!


சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை திடீர் என்று நிறுத்தப்பட்டது. முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல் நேற்று காலை நடந்தது. இயக்குநர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எஸ்.முரளி போட்டியிட்டார்.

ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்தால் மாலை 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்திவைத்தார்.

மொத்தம் 1,279 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஓட்டு எண்ணிக்கை இரவு 7 மணிக்கு தொடங்கியது. இரவு 8.45 மணிவரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய அனைத்து பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்கவேண்டும் என்று பெரும்பான்மையான இயக்குநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை திடீர் என்று நிறுத்தப்பட்டது. முடிவுகள் அனைத்தையும் இன்று (திங்கட்கிழமை) அறிவிப்பதாக தேர்தல் அதிகாரி பிறைசூடன் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் பொருளாளர் பதவிக்கு இயக்குநர் ஜனநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல துணை தலைவர்கள் பதவிக்கு டைரக்டர்கள் சேரன், சமுத்திரக்கனி ஆகியோரும் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 

ஜூலை முதல் வாரம் சென்னை திரும்புவார் ரஜினி! - தனுஷ்


திருமலை: ரஜினி தனது வழக்கமான உற்சாகத்துக்குத் திரும்பிவிட்டார். அவர் வரும் ஜூலை மாதம் சென்னை திரும்புகிறார். இன்னும் 15 நாட்களில் அவர் வந்துவிடுவார், என்றார் நடிகர் தனுஷ்.

கடந்த ஏப்ரல் 29 முதல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ரஜினி, சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தார். ஆனாலும் சிறுநீரகப் பிரச்சினை மட்டும் தொடர்ந்ததால், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் டிஸ்சார்ஜ் ஆனால். ஆனால் வழக்கமான சில பரிசோதனைகளுக்காக அவர் சிங்கப்பூரிலேயே ஒரு மாதம் தங்கியிருப்பதாக அறிவித்தார்.

ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரம் அவர் சென்னை திரும்பக் கூடும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் மூத்த மருமகனும் நடிகருமான தனுஷ், "சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் ஆரோக்கியத்துடன் உள்ளார். வீட்டில் உடற்பயிற்சி செய்கிறார். யோகாவைத் தொடர்கிறார்.

சிங்கப்பூரில் உள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இன்னும் 15 நாளில் அவர் சென்னை திரும்பிவிடுவார். விரைவில் நானும் சிங்கப்பூர் செல்வேன்," என்றார்.