கண்டுக்கினியா... 'டங்காமாரி'ன்னா இத்தான் அர்த்தமாம்!

சமீபத்தில் வெளியான பாடல்கள் படு சூப்பர் ஹிட்டானது அனேகன் படத்தில் இடம்பெற்ற 'டங்காமாரி ஊதாரி புட்டுக்கின நீ நாறி'...

மத்திய, வட சென்னைவாசிகளுக்கு டங்காமாரி பழக்கமான வார்த்தை. ஆனால் மற்றவர்கள் ஏதோ அதை கேவலமான வார்த்தைகளின் தொகுப்பாகப் பார்த்தார்கள். முகம் சுளிக்கவும் செய்தார்கள்.

கண்டுக்கினியா... 'டங்காமாரி'ன்னா இத்தான் அர்த்தமாம்!

ஆனால் டங்காமாரி என்பது கெட்ட வார்த்தை அல்ல. நல்ல வார்த்தைதான். அடங்காமாரி என்பதுதான் சற்று மருவி டங்காமாரியாக வந்துவிட்டது என்கிறார் கவிஞர் மகுடேஸ்வரன்.

இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதைப் படியுங்கள்:

டங்காமாரி, ஊதாரி' என்று ஒரு பாட்டு தொடங்குகிறது. ஊதாரிக்குப் பொருள் தெரியும். அதென்ன டங்காமாரி ? அடங்காமாரி, அடங்காப்பிடாரி' போன்ற வசவுச் சொற்களைப் பற்பல பகுதிகளில் கேட்கலாம். ‘அடங்காமாரி' என்பதன் சென்னை வழக்குத்தான் ‘டங்காமாரி'. அடங்காமாரியை விரைந்து நாவழுக்கும்படி சொன்னால் ‘டங்காமாரி' என்ற ஒலிப்பை அடையும்.

'அடங்காமாரி நாயி...' என்று வைவார்கள். அடங்காதவன், திமிர் பிடித்தவன், தான்தோன்றி என்பன பொருள்கள். மார்' என்பது பலர்பால் விகுதிகளில் ஒன்று. மாமன்மார், அத்தைமார் என்போம். பெரியோர்களே, தாய்மார்களே...' என்பது வழக்கமான மேடைவிளிப்பு. மார் என்னும் விகுதியின் திரிபே மாரி. அதனால், ‘அடங்காமாரி'தான் டங்காமாரி !

-எப்பூடி!

 

ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை... கனடாவில் பிறந்தது

பிரபல நடிகை ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை கனடாவில் பிறந்துள்ளது.

தொன்னூறுகளில், தொடையழகி என்ற பட்டத்தோடு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரம்பா.

ரஜினி, கமல் என முதல் நிலை நாயகர்களுடன் நடித்தார். பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை... கனடாவில் பிறந்தது

கடந்த 2010-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை மணந்து கொண்டு கனடாவில் குடியேறினார்.

இவர்களுக்கு 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லாண்யா என்று பெயரிட்டனர்.

இதையடுத்து, ரம்பா மீண்டும் கர்ப்பமானார். இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கனடாவில் வைத்து பிரசவம் நடந்தது.

 

'கொம்பன்' படத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு... திருச்சியில் புதிய தமிழகம் இன்று ஆர்ப்பாட்டம்

கார்த்திக் நடித்த 'கொம்பன்' படத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு... திருச்சியில் புதிய தமிழகம் இன்று ஆர்ப்பாட்டம்  

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணசாமிக்கு சென்னையில் பிரிவியூ ஷோ காட்டப்பட்டது.

படத்தைப் பார்த்த பின் கிருஷ்ணசாமி படம் வெளி வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தணிக்கை குழுவுக்கு புகார் மனுவை அளித்தார்.

மதுரை நீதிமன்றத்தில் ஒரு அவசர வழக்கும் தொடர்ந்துள்ளார். தங்கள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக படத்தை தடை செய்ய கோரி திருச்சியில் புதிய தமிழக கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை தடுத்து 34 பேரை கைது செய்து அருண் ஓட்டலில் உள்ள சுமங்கலி மகா ஹாலில் அடைத்து வைத்துள்ளனர்.

 

ஹவ்தா....??

பெங்களூரு: பாலிவுட் "பாடி ஸ்டார்" சல்மான் கான் கன்னடப் படத்தில் நடிக்கப் போவதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆனால் யாரும் பீதி அடையத் தேவையில்லை.. இது நேரடி கன்னடப் படம் இல்லை.. கன்னடப் படத்தின் ரீமேக்காம்.

இந்தியைத் தாண்டி திரும்பிக் கூடப் பார்க்காதவர் சல்மான் கான். இந்த நிலையில் அவரையும் கன்னடப் படம் ஒன்றையும் இணைத்து செய்தி கிளம்பியுள்ளது.

கோய்மோய் என்ற இணையதளம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், கன்னடத்தில் வெளியான சங்கொல்லி ராயண்ணா படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கவுள்ளாராம். கன்னடத்தில் தர்ஷன் நடித்த வேடத்தில் சல்மான் நடிப்பாராம்.

ஹவ்தா....??

ஏற்கனவே போக்கிரி, பாடிகார்ட் உள்ளிட்ட தமிழ் படங்களின் ரீமேக்கில் நடித்தவர் சல்மான் கான். இந்த நிலையில் கன்னட ரீமேக்கில் அவர் கை வைக்கவுள்ளார்.

தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சல்மான். அதை முடித்து விட்டு இந்த கன்னட ரீமேக்குக்கு வருவார் என்கிறார்கள்.

ஹவ்தா (அப்படியா) சல்மான்ஜி?!

 

தேனியில் 'நான் கடவுள்' பட நடிகை மானபங்கம்: 2 வாலிபர்களுக்கு வலை

தேனி: தேனியில் நான் கடவுள் படத்தில் பூஜாவுக்கு தோழியாக நடித்த முருகேஸ்வரி நடுரோட்டில் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பூஜாவின் தோழியாக நடித்தவர் தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகேஸ்வரி(38). தேவதானப்பட்டியில் வசித்து வரும் அவர் கடந்த சனிக்கிழமை அன்று வத்தலக்குண்டு சென்றுள்ளார்.

நடுத்தெருவில் ஆடையை கிழித்து 'நான் கடவுள்' பட நடிகை மானபங்கம்

வத்தலக்குண்டில் இருந்து பேருந்து மூலம் தேவதானப்பட்டி வந்தார். பேருந்தில் இருந்து இறங்கிய அவர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அவர் தனியாக செல்வதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் அவர் பின்னால் சென்றுள்ளனர்.

அந்த வாலிபர்கள் முருகேஸ்வரியை வழிமறித்து திடீர் என அவரது ஆடையை கிழித்து மானபங்கம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேஸ்வரி உதவி தேட்டு அலறினார். அந்த வாலிபர்களோ முருகேஸ்வரியை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து முருகேஸ்வரி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

 

வந்தது "மணப்பெண்" களை... பட்டுச் சேலையில் ஜொலித்த ஸ்ருதி....!

அழகான பட்டுப் புடவையில் அப்படியே அம்சமாய் ஜொலித்தார் ஸ்ருதி ஹாசன். மகளை சேலையில் பார்த்தாலோ என்னவோ தந்தை கமல்ஹாசனின் முகத்திலும் கூடுதல் பூரிப்பு + புன்னகை.

ஹைதரபாபாத்தில் நடந்த உத்தமவில்லன் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்த சுவாரஸ்ய காட்சி.

அரை குறை உடைகள், மாடர்ன் உடைகளிலேயே பார்த்துப் பழகிப் போன கண்களுக்கு ஸ்ருதி பட்டுச் சேலையில் அமெரிக்கையாக காட்சி அளித்தது வியப்பில் ஆழத்தி விட்டது.. அடடா, நம்ம ஸ்ருதியா இது என்று தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டனர் பலரும்.

வந்தது

கெளரங் ஷா பட்டுச் சேலையில் பார்த்தவர்கள் குஷி அடையும் வகையில் தேவதை போல வந்திருந்தார் ஸ்ருதி ஹாசன். அவரை சேலையில் பார்த்த பலருக்கும், ஓகே, பொண்ணுக்கு மணப்பெண் களை வந்து விட்டது.. இனி அப்பா கமல் மாப்பிள்ளை தேட வேண்டியதுதான் என்று சிரித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கமல்ஹாசனும், ஸ்ருதியை சேலையில் பார்த்த சந்தோஷத்திலோ என்னவோ கூடுதல் பூரிப்புடன் காணப்பட்டார்.. அவர் மட்டும் என்னவாம்... அழகான சில்வர் கிரே கலர் சூட்டிலும், அதற்கேற்ற கருப்பு நிற கோட்டிலும் வழக்கம் போல டிரஸ்ஸிங் சென்ஸில் பட்டையைக் கிளப்பியிருந்தார்.

 

'முதுகுளத்தூர் கலவரத்தை நினைவூட்டும் காட்சிகள்... வேண்டாம் கொம்பன்!'- நாடார் சங்கம் அறிக்கை

சென்னை: கொம்பன் படத்தின் காட்சிகள் முதுகுளத்தூர் கலவரத்தை நினைவூட்டுவதாகவும், நிச்சயம் இதனால் சாதிக் கலவரம் ஏற்படும் என்றும் கூறியுள்ள நாடார் சங்கம், படத்துக்குத் தடை கோரியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வருக்கு அனுப்பிய மனு விபரம்:

"சுதந்திர போராட்ட தியாகி, வாய்ப்பூட்டு சட்ட வீரர், பேரையூர் வேலுச்சாமி நாடாரைக் களங்கப்படுத்தும் காட்சிகள் நடிகர் கார்த்தி நடித்து, முத்தையா இயக்கி வெளிவரவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் உள்ளதாகவும் முதுகுளத்தூர் கலவரப் பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைந்து உள்ளதாகவும் வார இருமுறை இதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

'முதுகுளத்தூர் கலவரத்தை நினைவூட்டும் காட்சிகள்... வேண்டாம் கொம்பன்!'- நாடார் சங்கம் அறிக்கை

[கொம்பன் படங்கள்]

தனது சமுதாயத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத ரேகைச் சட்டம் (எ) படுக்கை சட்டத்தின் கொடுமைக்கு ஆளான மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக தனது சமுதாய மக்கள் ஏழாயிரம் பேரைத் திரட்டி போராடி வாய்ப்பூட்டு சட்டத்திற்கு ஆளானவர் வீரர் வேலுச்சாமி நாடார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் முதுகுளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்க தேவருக்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது.

'கொம்பன்' பட இயக்குநர் வீரர் வேலுச்சாமி நாடாரின் தியாகத்தை புரிந்து கொள்ளாமல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு அவர்தான் காரணம் என்பது போல் காட்சிகள் வைத்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது. இது போன்ற காட்சிகளுடன் 'கொம்பன்' திரைப்படம் திரையிடப்பட்டால் தென் தமிழகத்தில் ஜாதிய மோதல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

படத்தின் தலைப்பே (ஆப்ப நாட்டு மறவன்) 'கொம்பன்' என்கின்ற பெயரில் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. நாடார், பள்ளர், பறையர், மறவர் சமுதாயங்களுக்கிடையே இது மிகப்பெரிய ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.

கடந்த 6 மாதங்களில் தென் மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் 'கொம்பன்' திரைப்படத்தை திரையிட்டால் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல கலவரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தூண்டும் 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்து அமைதியை நிலைநாட்டிட தமிழக அரசை தமிழ்நாடு நாடார் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

என்ன அவரா அப்படி? ... அலறடிக்கும் "ஆட்டோகிராப்" மல்லிகா!

சென்னை: இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள நடிகை மல்லிகா அவரது படத்தில் நடிகைகள் நடிக்கத் தயங்கும் துணை நடிகை கேரக்டரில் துணிச்சலாக நடித்து வருகின்றார்.

ஆட்டோகிராப் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மல்லிகா, அதன்பின்னர் பல படங்களில் தங்கை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் இயக்குனராக மாறியுள்ளார்.

என்ன அவரா அப்படி? ... அலறடிக்கும்

"பழனியிலே கனகம்" என்ற மலையாளப் படத்தில் இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கும் மல்லிகா, இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். நடிகை பாவனா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் மல்லிகா துணை நடிகையாக நடித்துள்ளார்.

சினிமா உலகில் நடிகைகளும், துணை நடிகைகளும் படக்குழுவினர்களால் என்னென்ன தொந்தரவுகள் அனுபவிக்கின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக படமாக்கியிருப்பதாக கூறியுள்ளார் மல்லிகா.

மேலும், இந்த படத்தின் துணை நடிகை வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகள் யாரும் சம்மதிக்காததால், துணிச்சலாக நானே இந்த கேரக்டரில் நடிக்க முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த படம் நடிகைகளின் மறுபக்கத்தை அப்பட்டமாக வெளிக்கொண்டு வரவிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தத் தடை!

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் ஆண்டு தோறும் கோடையில் சீஸன் தொடங்கிவிடும். ஏப்ரல் முதல் ஜூன் - ஜூலை வரை ஊட்டியில் மக்கள் குவிந்துவிடுவார்கள். கோடையைச் சமாளிக்க இங்கேயே மாதக்கணக்கில் தங்குவோரும் உண்டு.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தத் தடை!

இவர்களுக்காகவே ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியவை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே கோடை வெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த மார்ச்சில், அக்னி நட்சத்திரத்துக்கு இணையாக வெளியில் கொளுத்துகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை ஊட்டியில் அதிகரித்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிகளுக்கு பரீட்சை முடிந்ததும் விடுமுறை அறிவிக்கப்படும்.

அதன் பின்னர் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருப்பதற்காக வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தேவைகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சினிமாக்காரன் சாலை - 18: ‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

சற்றுமுன் ‘லிங்கா' கோஷ்டிகளிடமிருந்து மற்றுமொரு ஒப்பாரி மெயில்.

‘எட்டாவது கோஷ்டியும் பதினெட்டாவது கோஷ்டியும் கூட்டு சேர்ந்துக்கிட்டு எங்களை நாமம் போடப் பாக்குறாங்க'- இப்படிக்கு நாப்பத்தி எட்டாவது கோஷ்டி.

இந்த மெயில் 853 வது என்று நினைக்கிறேன். இந்த மெயில்கள் காகிதத்தில் அறிக்கைகளாக தரப்பட்டிருந்தால் அவைகளை எடைக்குப் போட்டே பத்திரிகையாளர்களெல்லாம் பணக்காரர்களாகியிருப்பார்கள் எனுமளவுக்கு நாளொரு கோஷ்டியும் பொழுதொரு அறிக்கையுமாய் நாறிக் கொண்டிருக்கிறது.

‘இனிமேல் அறிக்கைகளை மெயிலில் அனுப்பாமல் பேப்பரில் அனுப்பும் வரை சிங்காரவேலன் இல்லத்தின் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினால் என்ன? நாங்கல்லாம் எப்பதான்யா செட்டில் ஆகுறது?'

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் போய்விட்டு ‘லிங்காமாரி' கோஷ்டிகளின் பஞ்சாயத்து வருவோம்.

‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

‘பிதாமகன்' ரிலீஸான சமயம். அப்போது நான் 24 மணிநேரமும் பாலாவுடன் இருந்தேன். நண்பன், மேனேஜர், அன்புக்காக சமையல்காரன், மக்கள் தொடர்பாளர், செயின் ஸ்மோக்கரான அவரிடமிருந்து அவ்வப்போது சிகரட்டைப் பிடுங்கி டஸ்ட்பின்னில் போடுபவன், ஐந்தாவது ரவுண்டைத்தாண்டும்போது அதட்டுபவன் என்று பெப்ஸியின் 24 சங்கங்கள் செய்த அத்தனை வேலையையும் அவருக்காக செய்து வந்தேன்.

'பிதாமகன்' ரிலீஸான மறுநாளிலிருந்தே அடுத்த படம் தங்களுக்கு இயக்கித்தரச்சொல்லி வந்த அழைப்புகள் மட்டும் சுமார் நூறு இருக்கும். பெரும்பாலும் பாலாவின் போனை நான் தான் எடுத்து பதில் சொல்வேன்.
அப்போது அடுத்த படம் அஜித்துடன் இணைந்து செய்யலாம் என்ற ஒரு எண்ணம் பாலாவுக்கு இருந்தது.

‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

வந்த அழைப்புகளில் ஒன்று அப்போது அஜீத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முன்னணி தயாரிப்பாளருடையது. ஒரு க்ளூ மட்டும் தருகிறேன். அஜீத்துடன் நெருக்கமாக இருந்தபோது நிக்'க நேரமில்லாமல் இருந்தவர்.

‘நேர்ல போய் பேசிட்டு வாங்க. நமக்கு நல்ல சம்பளம் தருவாருன்னா இவருக்கே அடுத்த படம் பண்ணிரலாம்' என்றார் பாலா.

என்னை அதற்கு முன் நூறுமுறையாவது சந்தித்திருந்தவர்தான் எனினும் புது அறிமுகம் போலவே எதிர்கொண்டார்.

சில சம்பிரதாய பேச்சுக்கு அப்புறம் சம்பளப் பேச்சு வந்தது.

‘அஜீத் இப்ப சம்பளத்தை டபுள் மடங்கா ஏத்திட்டார் (அப்போது அஜீத்துக்கு கால்ஷீட் பார்த்தவரே அந்தப் புண்னியவான்தான்) அதனால பாலா சம்பளத்தை பாத்து சொன்னீங்கன்னா நீங்க எப்ப ரெடியோ அப்ப படத்தை ஆரம்பிச்சிடலாம். பாலா எவ்வளவு எதிர்ப்பாக்குறானு சொல்லுங்க?' என்றார்.

அந்த சமயம் அஜீத் ஒரு கோடி அளவில் சம்பளம் வாங்க ஆரம்பித்திருந்தார். அதனால் பாலாவும் அதே சம்பளம் எதிர்ப்பார்த்தார்.

அதை அப்படியே சொல்லமுடியாது. ஈகோ வரும். எனவே நான் ‘எங்களுக்கு அப்படி தொகையா ஒரு ஐடியாவும் இல்ல. நீங்க சொல்லுங்க சார். பாலாவுக்கு என்ன தரலாம்னு?' என்றேன்.

‘ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரேன் ப்ரதர்' என்றபடி, ஆபிஸ் பையனிடம் ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டுவரச்சொல்லி என் எதிரிலேயே பட்ஜெட் போட ஆரம்பித்தார். கவனியுங்கள். அப்போது எங்கள் தரப்பில் கதை பற்றி ஒரு வரி கூட சொல்லப்படவில்லை.

அந்த பட்ஜெட்டில் அவர் முதன்முதலில் என்ன எழுதினார் தெரியுமா?

'வட்டி - 2 கோடி' என்றுதான்.

‘லிங்கா’மாரி ஊதாரி புட்டுக்கினே நீ நாறி...'

அடுத்துதான் அஜித் சம்பளம். அலுவலக செலவுகள். படப் பிடிப்புச் செலவுகள். இதர நட்சத்திரங்கள். இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று எழுத ஆரம்பித்தார். இறுதியில் பட்ஜெட்டை பக்காவாக பதினொன்றரை கோடியில் முடித்து விட்டு ‘அஜித் சாருக்கு 12 கோடிக்கு பிசினஸ் இருக்கு. எனக்கு லாபம்லாம் வேண்டாம். (அடேங்கப்பா) இப்ப பாலா சம்பளம் சொல்லுங்க ப்ரதர்' என்றார்.

'பாலா கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு ஒரு மணி நேரத்துல வரேன் சார்' என்றபடி கிளம்பியவன்தான். 'வட்டி சுட்டதடா. படம் கிட்டாதுடா' என்று பாடியபடி அவருக்குப் படம் பண்ணும் திட்டத்தை கைவிட்டோம்.

சினிமாவை விட்டு வெகு தூரம் இருப்பவர்களுக்கு இதை நம்ப கஷ்டமாக இருக்கும். சினிமாவைக் கரைத்துக் குடித்தவர்கள் பெரும்பாலும் சொந்தக் காசில் படம் பண்ணுவது இல்லை. இன்றும் பழைய தயாரிப்பாளர்கள் படம் துவங்கும்போது, பட்ஜெட்டில் முதல் கணக்காக வட்டியைத்தான் எழுதுகிறார்கள். பெரிய விநியோகஸ்தர்களும் அங்ஙனமேதான்.

இப்போது ‘லிங்கா' மேட்டருக்கு வருவோம். அய்யோ...நஷ்டம்,... துட்டு போச்சி.... பிச்சை எடுத்து பொழைக்கப் போறேன்...எலி மருந்து குடிக்கப் போறேன்... தூக்கு மாட்டி தொங்கப்போறேன்'...' என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்களே விநியோகஸ்தர்கள், அவர்கள் கணக்கிலும் 'லிங்கா'வை வாங்கிய வகையில் முதலில் வரப்போவது வட்டிக் கணக்குத்தான். அப்புறம் அலுவலக நிர்வாக செலவுகள். பூ, மலர், புஷ்பக் கணக்குகள் என்று நீளும்.

ஒரிஜினல் வசூலை ஒருநாளும் வெளியே சொல்ல மாட்டார்கள்.

இப்போது நடந்து வரும் அடிதடியை சற்றே கவனித்துப் பாருங்கள் சிங்காரவேலன் என்பவர் துவங்கி ஒருத்தராவது 'நான் இத்தனை தியேட்டரில் ரிலீஸ் செய்தேன். இவ்வளவு வசூலானது. இதான் நான் வசூலித்த கட்டணம்.. இந்தாருங்கள் வசூல் விபரம். இது எனக்கு ஏற்பட்ட நஷ்டம்' என்று கணக்குத் தந்திருக்கிறார்களா? தரமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வசமிருப்பது கள்ளக் கணக்கு பொய்க் கணக்கு.

இதனால்தான் ரஜினியிடமிருந்தும், ராக்லைன் வெங்கடேஷிடமிருந்தும் இவர்கள் கேட்ட பணம் வந்தும் முறையாக பிரித்துக் கொள்ள முடியவில்லை. திருடர்கள் பங்கு போடும்போது சண்டை வருவது சகஜம்தானே? அதுதான் இப்போது நடந்து வருகிறது.
நடுவில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகள் இதில் பங்கு கேட்கிறார்கள் என்ற புலம்பலும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு நீங்கள் நியாயமற்ற முறையில் ‘ஆட்டயப்போடுவது' தெரியுமென்பதால் உரிமையோடு எடுத்துக் கொள்ள நினைக்கிறார்கள். சுபகாரியம் நடக்கட்டும்.

இப்போது இருக்கிற நிலைமையைப் பார்த்தால் இந்த சண்டையும் அழுகுணி ஆட்டங்களும் இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது நடக்கும்போல் தெரிகிறது.

இந்தக் காட்சிகளை தொடர்ச்சியாக காணும்போது வடிவேலு படக் காமெடி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.

அல்வா வாசு ஒரு உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் தற்கொலை செய்ய முயன்று பயந்து உட்கார்ந்திருப்பார். அவர் எப்படா தற்கொலை செய்து கொள்வார் என்று ஒரு பெருங்கூட்டமே பந்தயம் கட்டி ஆர்வத்துடன் காத்திருக்க, ஆர்வக் கோளாறு வடிவேலு மட்டும் அவரை நெருங்கிப் போய்,' 'டேய்..டேய்... இப்ப என்ன பண்ணப்போறே?' என்பார்.

‘கீழ குதிக்கப் போறேன்'

'ஆமா அதுக்கு ஏன் உக்காந்திருக்க?'

‘நின்னு குதிக்க பயமாருக்கு. அதான்'

‘சரி இப்ப உனக்கு என்னடா பிரச்சினை?

‘எல் காதல் ஃபெயிலாயிடுச்சி. நான் லவ் பண்ண பொண்ணு திடீர்னு ஒருநா அவ புருஷன் கூட ஓடிப்போயிட்டா'

‘அட நன்னாரிப் பயலே.. சரி இப்ப நீ கீழ குதிச்சும் சாகலை. அப்ப என்ன செய்வ.. அப்ப என்ன செய்வ?'

'இந்தா இந்தக் கயிறுல தொங்குவேன்'

'அப்பயும் சாகலைன்னா?'

‘இந்த இந்தக் கத்தி எடுத்து கழுத்தை அறுத்துக்குவேன்'

‘அட அப்பயும் சாகலைன்னா?'

‘இருக்கவே இருக்கு வெடிகுண்டு'

‘அதெங்கடா இருக்கு? -வடிவேலு

‘அட போங்கண்ணே அதுமேலதான நீங்க உக்காந்திருக்கீங்க. எழுந்திச்சிராதீங்க வெடிச்சிரும்' என்று போகும் அந்தக் காமெடி.

எனக்கென்னவோ 'லிங்கா நஷ்ட ஈடு கோஷ்டிகள்' மொத்தமும் அந்த வெடிகுண்டு சாக்கின் மீது உட்கார்ந்திருப்பது போலவே தோணுகிறது!

(தொடர்வேன்)

 

விஜய்யுடன் முதல் முதலாக நடிக்கும் ராதிகா

விஜய் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் முதல் முறையாக அவருடன் நடிக்கிறார் சீனியர் நடிகை ராதிகா சரத்குமார்.

தற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக 'ராஜா ராணி' படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்கிறார். இவர் விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி படங்களை இவர் தான் தயாரித்திருந்தார்.

விஜய்யுடன் முதல் முதலாக நடிக்கும் ராதிகா

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்பதும், இப்படத்திற்கு அட்லியின் ‘ராஜா ராணி' படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாரே இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள ராதிகா சரத்குமார் இதுவரை விஜய்யுடன் மட்டும் நடிக்கவில்லை.

இப்போது அந்தக் குறை தீர்ந்த சந்தோஷத்தில் சமூக வலைத் தளங்களில் தகவலைப் பகிர்ந்து வருகிறார்.

 

எல்லாம் அறிந்தவர் கமல்... - எஸ்பி பாலசுப்பிரமணியன்

கமல் ஹாஸனுக்கு தெரியாத விஷயமே கிடையாது. அவர் எல்லாம் அறிந்தவர் என்று பாராட்டினார் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன்.

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் தெலுங்குப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாதில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் நடிகர் கமல் ஹாஸன், நாயகிகள் ஆன்ட்ரியா, பூஜா குமார், கமல் மகள் ஸ்ருதி ஹாஸன், நடிகை கவுதமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எல்லாம் அறிந்தவர் கமல்... - எஸ்பி பாலசுப்பிரமணியன்

விழாவில் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.

அவர் கூறுகையில், "சினிமாவில் என்னை அண்ணா என்று உரிமையுடன் அழைப்பவர்களில் ஒருவர் கமல்ஹாஸன். மகா அற்புதமான கலைஞர். அவருக்குத் தெரியாத வித்தைகளே கிடையாது. அவர் ஒரு கலைக்களஞ்சியம் மாதிரி.

எல்லாம் அறிந்தவர் கமல்... - எஸ்பி பாலசுப்பிரமணியன்

அவரிடமும் இயக்குநர் பாலச்சந்தரிடமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

தெலுங்கில் கமல் நடித்து சாதனைப் படைத்த சாகர சங்கமம், சுவாதி முத்யம் போன்ற படங்களின் வரிசையில் இந்த உத்தம வில்லனும் அமையும் என நம்புகிறேன்," என்றார்.

 

வை ராஜா வை படத்தில் 'கொக்கி குமாரு' தனுஷை மீண்டும் பார்க்கலாம்!

கொக்கி குமாரு... இது புதுப்பேட்டை படத்தில் வை ராஜா வை படத்தில் 'கொக்கி குமாரு' தனுஷை மீண்டும் பார்க்கலாம்!  

இப்போது அவர் ஆசை நிறைவேறியிருக்கிறது. அந்த கொக்கி குமார் வேடத்தில் மீண்டும் நடித்திருக்கிறார் தனுஷ்.

மனைவி ஐஸ்வர்யா இயக்கிவரும் வை ராஜா வை படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அந்த கொக்கி குமார் வேடத்தைத் தொடர்கிறாராம் தனுஷ்.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொக்கி குமாரை பார்க்கப் போகிறீர்கள். என் கணவர் நடித்ததிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த வேடம் கொக்கி குமார்தான். வை ராஜா வை படத்தில் தனுஷை அந்த வேடத்தில் பார்த்து ஆச்சர்யப்படுவீர்கள். நான் சொல்வதைவிட, அதை திரையில் நீங்கள் பார்க்க வேண்டும்...," என்றார்.

வரும் ஏப்ரல் 24-ம் தேதி வை ராஜா வை திரைக்கு வருகிறது. கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

மியா ஜார்ஜ் - தினேஷின் 'ஒரு நாள் கூத்து'

"திருடன் போலீஸ்" வெற்றியை தொடர்ந்து கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படம் "ஒரு நாள் கூத்து".

இந்தப் படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார்.

மியா ஜார்ஜ் - தினேஷின் 'ஒரு நாள் கூத்து'

மற்றும் கருணாகரன், பாலசரவணன், முண்டாசுபட்டி ராமதாஸ், ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இவர் பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்தவர். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். நெல்சன் இப்படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு நாளை சென்னையில் ஆரம்பமாகிறது.

படம் குறித்து இயக்குநர் நெல்சன் கூறுகையில், "இது ஒரு இளமை ததும்பும் வண்ணமயமான கதை அமைப்பை கொண்ட படமாக இருக்கும். தற்போதுள்ள இளைஞர்களை வெகுவாக கவரும். அவர்களின் வாழ்க்கை பிரதிபலிப்பை உருவாக்கும். இதனால் இப்படத்தில் ஈசியாக ஒன்றிப்போய் விடுவார்கள்," என்றார்.

 

சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!

கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகலுக்குப் பிறகு படத்துக்கு தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!

வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.

சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!

அரசு தரப்பு வழக்கறிஞரோ, "அப்படி எதுவும் நிகழாது'' என்றார்.

உடனே நீதிபதி தமிழ் வாணன், "சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா?'' என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இதற்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகலில் பதில் வந்தபிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார்.

இன்று மதியம் நீதிபதியின் தீர்ப்பில், திட்டமிட்டபடி ‘கொம்பன் ரிலீசாகுமா? இல்லை தடை செய்யப்படுமா? என்பது தெரியவரும்.

 

நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ருதிஹாஸன் மீது மோசடி வழக்கு

ஹைதராபாத்: நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பி்விபி சினிமா நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத தமிழ், தெலுங்கு படத்தில் நாகார்ஜுன்- கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். படப்பிடிப்புக்கு தேதிகளை ஒதுக்கி தருவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகிக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இது தொடர்பாக ஸ்ருதிஹாசனுக்கு எதிராக ஐதராபாத் 25-வது கூடுதல் தலைமை சிட்டி சிவில் கோர்ட்டில் பட நிறுவனம் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ருதிஹாஸன் மீது மோசடி வழக்கு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடுத்துள்ள நிறுவன படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு (ஏப்ரல் 8-ந்தேதி வரை) நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு ஜூபிளி ஹில்ஸ் போலீஸ் நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதால் அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.