புலி படத்தில் நடிக்க விஜய்யை சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா?

சிம்பு இயக்கும் புலி படத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலி கதையை நடிகர் விஜய் ஒப்புக்கொண்டது குறித்து சுவாரசியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

Why Vijay accepts to do Puli?

இயக்குநர் சிம்புதேவன் விஜய்யிடம் புலி கதையை முதலில் சொன்னபோது அது விஜய்க்கு சரியாகப் படவில்லை. வரலாற்றுக் கதாபாத்திரம் தனக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் இருந்ததால் உடனே ஓகே சொல்லவில்லை. இன்னொரு அவர் தனது முகத் தோற்றத்தையோ கெட்டப்பையோ இதுவரை மாற்றியதுமில்லை.

ஆனால் விஜய்யுடன் சேர்ந்து கதை கேட்ட அவர் மகன் சஞ்சய்க்கு கதை மிகவும் பிடித்துப்போனது. 'அப்பா இது நீங்கள் பண்ணவேண்டிய படம். கண்டிப்பாக ஹிட் ஆகும்.. உங்களுக்கு பெருமை தரும்,' என்று உற்சாகமாகப் பேசியுள்ளான்.

மகன் இவ்வளவு நம்பிக்கையுடன் சொன்னது மட்டுமில்லாமல், இந்தப் படம் பண்ணினால் நீங்கள் பெருமையடைவீர்கள் என்றும் சொன்னது விஜய்யை மனம் மாற வைத்து சிம்புதேவனுக்கு சம்மதம் சொல்ல வைத்ததாம்.

வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலில் இணைந்து ஆடியுள்ளான் சிறுவன் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... இன்றோடு ஓவர் ஓவர்!

சென்னை: ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பில் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றது. 2010 ம் ஆண்டில் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

இந்தப் படத்திற்குப் பின்னர் 5 வருடங்கள் கழித்து வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர் ஆர்யா சந்தானம் மற்றும் இயக்குநர் ராஜேஷ் இம்மூவரும்.

Arya’s VSOP Shooting  Finished

ஆர்யா ஜோடியாக முதல் முறையாக தமன்னா இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்கிறார் நடிகர் ஆர்யா. ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைத் தயாரித்த ஆர்யா, அழகுராஜா படத்தின் தோல்வியில் இருந்து இயக்குநர் ராஜேசைக் கைதூக்கி விட எண்ணி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தனக்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்ததற்கு, நன்றி காட்டும் விதமாக இந்த உதவிகளை இயக்குநர் ராஜேஷுக்கு செய்து கொடுத்திருக்கிறார் ஆர்யா.

படம் தற்போது இறுதிக் கட்ட வேலைகளில் இருக்கின்றது,விரைவில் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளனர் விஎஸ்ஓபி படக்குழுவினர்.

 

வேர் ஈஸ் வித்யாபாலன்- கிரைம் கலந்த காமெடி

ஹைதராபாத்: வேர் ஈஸ் வித்யா பாலன் அதாவது வித்யாபாலன் எங்கே என்னும் அர்த்தத்தில் வந்திருக்கும் தெலுங்குப் படம் இது. படத்தைப் பிரபலமாக்க இப்படி ஒரு தலைப்பை வைத்து விட்டு நாங்கள் வித்யா பாலனை தவறாக எதுவும் சித்தரிக்கவில்லை என்று பக்கம் பக்கமாக பேட்டி தட்டினார் படத்தின் இயக்குநர் ஸ்ரீநிவாஸ்.

ஆமாம் அவர் சொன்னதுபோல படத்தில் வித்யா பாலனைப் பற்றி ஒன்றும் இல்லை தான், அப்படியென்றால் படத்தின் கதை என்னவென்று கேட்கிறீர்களா படத்தின் நாயகன் காக்கிநாடா கிரண்(பிரின்ஸ்) பிடெக் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரிப் பையன் வருமானத்திற்காக ஒரு பீஸா கடையில் பீஸா டெலிவெரி செய்யும் பையனாக வேலை செய்கிறார்.

Where is Vidya Balan?

இவருக்கு டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் ஸ்வாதியுடன் காதல் (ஜோதி செட்டி). எல்லாம் சீராகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு சுபயோக தினத்தில் ஒரு கொலை முடிச்சில் மாட்டிக் கொள்கிறார்கள் நாயகனும், நாயகியும்.

Where is Vidya Balan?

இருவரும் அதிலிருந்து மீண்டு வந்தார்களா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ், நல்ல ஒரு விறுவிறுப்பான திரைக்கதையைக் கொடுத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநிவாஸ். மேலும் பண மோசடி, உறுப்புகளைக் கடத்துவது மற்றும் திருநங்கைகள் பற்றிய பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு, அதனைச் சாதுரியமாகக் கையாண்டு இருக்கிறார்.

Where is Vidya Balan?

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது, அதனை ஈடு செய்யும் விதமாக இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று படத்தை சுவாரஸ்யமாக்கி விட்டனர்.

 

விபத்துக்கு பின் பொது நிகழ்ச்சியில் ஜெகதி... ஓடிச்சென்று முத்தமிட்ட 2வது மனைவியின் மகள்!

கார் விபத்தில் மரணத்தின் விளிம்புக்கே போய், சிகிச்சைப் பெற்று வந்த ஜெகதி ஸ்ரீகுமார் உடல் நலம் தேறியபிறகு முதல் முறையாக நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதில் அவரது இரண்டாவது மனைவியின் மகள் கண்ணீருடன் பங்கேற்று தந்தைக்கு முத்தமிட்டு வந்திருந்தவர்களை நெகிழ வைத்தார்.

கடந்த மார்ச் 2012-ம் ஆண்டு மிக மோசமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் ஜெகதி ஸ்ரீ குமார். அவரது வாழ்க்கையே இதில் ஸ்தம்பித்துப் போனது. மூன்றாண்டுகள் தீவிர சிகிச்சைக்குப் பிறது ஓரளவு உடல் நலம் தேறி வந்துள்ளார் ஜெகதி. அவருக்கு இன்னும் பேச்சுத் திறன் கூட முழுமையாகத் திரும்பவில்லை.

Daughter steals the show on Jagathy's comeback

இந்த நிலையில், கோட்டயத்தில் உள்ள ஒரு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஜெகதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு ஜெகதி பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவரது இரண்டாவது மனைவியின் மகள் ஸ்ரீலட்சுமி வந்திருந்தார்.

தன் தந்தையைப் பார்த்ததும் மேடைக்கு ஓடிச் சென்று, அவரை முத்துமிட்டு, கண்ணீர் விட்டார். ஜெகதியும் மகளை முத்தமிட்டார். இந்தக் காட்சியைப் படம்பிடிக்க கேமராக்காரர்கள் பாய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே அந்தப் பெண்ணை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். பின்னர் மேடையிலேயே தந்தையுடன் சில நிமிடங்கள் அமர வைக்கப்பட்டார் ஸ்ரீலட்சுமி.

ஜெகதியின் முதல் மனைவி மல்லிகா சுகுமாறன். இவர் பிரபல நடிகையும் கூட. 1974-ல் இவரைத் திருமணம் செய்த ஜெகதி, 1979ல் விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பிறகு கலா என்பவரைத் திருமணம் செய்தார். 1979-ல் திருமணம் செய்து, 1984-ல் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஸ்ரீலட்சுமி.

மூன்றாவதாக ஷோபாவைத் திருமணம் செய்து, அவருடன்தான் இதுவரை வாழ்ந்து வருகிறார் ஜெகதி.

ஜெகதி மருத்துவமனையிலிருந்தபோது, அவரைப் பார்க்க பல முறை முயன்றும், ஷோபாவும் அவர் பிள்ளைகளும் அனுமதி மறுத்ததால்தான், இந்த நிகழ்ச்சியில் போய் தன் அப்பாவைப் பார்த்தார் ஸ்ரீலட்சுமி என கலா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலட்சுமி கூறுகையில், " அப்பா என்னை அடையாளம் கண்டு கொண்டார். என் படிப்பு குறித்து விசாரித்தார். எனக்கு முத்தமிட்டு வாழ்த்தி அனுப்பினார்," என்றார்.

 

'நடிகர்களே, மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்பாதீர்கள்!' - யாரை எச்சரிக்கிறார் ராதிகா?

மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மீதுதான் விழும் என்பதை இளைய தலைமுறை நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நடிகை ராதிகா பங்கேற்ற சினிமா விழாவில் பேசினார்.

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா நடித்துள்ள ‘உயிரே உயிரே' படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா பேசுகையில், "இங்கு வந்துள்ள எல்லோரும் பல ஆண்டுகளாக பழகியிருக்கிறோம்.

எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்னையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷமாக பங்கேற்கிறோம்.

Is it Radhika's warning to Vishal & co?

ஆனால் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு மரியாதையோ, நட்பின் முக்கியத்துவமோ தெரிவதில்லை.

மல்லாந்து படுத்துக் கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். நாம் நடிகர்கள், ஒரே குடும்பம் மாதிரி என்பதை மனதில் கொள்ளுங்கள்,'' என்றார்.

நடிகர் சங்க கட்டட விவகாரமும், நடிகர் சங்க தேர்தல பிரச்னையும் தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகை ராதிகா இதுபோல பொடி வைத்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக தன் கணவர் சரத்குமார் மற்றும் சகோதரர் ராதாரவியுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் விஷாலை மனதில் வைத்துத்தான் ராதிகா இப்படி பேசியிருக்கிறார் என்பதே கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது!

 

நான் அழகான பெண்ணில்லை – உண்மையை ஒத்துக் கொள்ளும் சமந்தா

சென்னை: தமிழ்.தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாகத் திகழும் நடிகை சமந்தா, நான் ஒன்றும் அழகான பெண்ணில்லை என்று உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்.

என்னது சமந்தா அழகில்லையா என்று பொங்கி விடாமல் மேலே படியுங்கள் நான் ஒன்றும் பிறக்கும் போதே அழகான பெண்ணாக பிறந்து விடவில்லை, பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் யாருமே நம்மை சைட் அடிக்கவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன்.

I Am Not So Beautiful – Samantha Open Talk

ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை, இன்று உங்கள் கண்களுக்கு நான் அழகாகத் தெரிகிறேன் என்றால் அதற்குப் பின்னால் பல பேரின் உழைப்பு இருக்கின்றது.

மேலும் இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை நான் ஆசைப்பட்டு பெற்றது. அதனால் எனது உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி என்னை இன்னும் அழகாகக் காட்டுகிறது, என்று மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ஒரு முன்னணி நடிகையாக இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொண்டு இருக்கிறார் நடிகை சமந்தா.

 

அடுத்த ஹீரோ கிளம்பிட்டாருய்யா…

டிவியில் காமெடி நிகழ்ச்சியில் வந்தவர் தொகுப்பாளராகி சினிமாவில் சக்சஸ்ஃபுல் ஹீரோவாகி விட்டார். சிவமான ஹீரோவுக்கு முன்பிருந்தே சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டிருந்தவர்கள் சீரியலில் ஹீரோவானார்கள். இதில் ஏற்கனவே ஒருவர் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

என்னவாயிற்றோ ஏது ஆயிற்றோ போன வேகத்திலேயே திரும்ப சூர்ய தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார்.

அதே சூர்ய தொலைக்காட்சியில் செல்வமாக நடித்து இல்லத்தரசிகளின் செல்லமான ஹீரோ தற்போது சினிமாவில் ஹீரோவாகப் போகிறாராம். அதற்காக கதை கேட்டு வருகிறாராம்.

சின்ன சின்ன வேஷமெல்லாம் வேணாம்... நடிச்சா ஹீரோதான் என்று கூறும் அந்த டிவி ஹீரோ தற்போது தொகுத்து வழங்கும் நடன நிகழ்ச்சி மன நிறைவுக்காக என்கிறார். வெற்றியான ஹீரோவுக்கு நண்பரான இந்த டிவி ஹீரோவுக்கு இனி பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம். வெள்ளித்திரையில் ஹீரோவான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார் செல்லமான செல்வம்.

 

ஒரு ஹிட் குடுத்துட்டா சிஎம் ஆகிலாம்னு கணக்கு போடறாங்க! - மோகன்பாபு

சென்னை: இப்போதெல்லாம் புதிதாக வரும் நடிகர்கள் ஒரு ஹிட் கொடுத்தாலே போதும் முதலமைச்சர் ஆகிடலாம் என கணக்குப் போடுகிறார்கள், என கிண்டலடித்தார் நடிகர் மோகன்பாபு.

உயிரே உயிரே படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்ற மோன்பாபு கூறுகையில், "திரையுலகில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை... நல்ல நட்பாட சூழல் இல்லை என்று ராதிகாவும் ஸ்ரீப்ரியாவும் பேசியதைக் கேட்டேன். நமது நட்பு, காலம் வேறு. அவர்கள் வேறு. அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து, நமது நட்பை எடுத்துச் சொல்லலாம். ஆனால் அறிவுரை சொல்லக் கூடாது.

Mohan Babu blasts young actors

இப்போதெல்லாம் சில நடிகர்கள் ஒரே ஒரு ஹிட் கொடுத்துவிட்டால்கூட உடனே முதலமைச்சர் பதவியைப் பிடித்துவிடலாம் என்று நினைத்து, அதற்கேற்ப வசனங்கள் காட்சிகள் வைக்கச் சொல்கிறார்கள்.

சிஎம் போஸ்ட்னா அவ்வளவு சீப்பா போயிடுச்சா... எப்பேர்ப்பட்ட பதவி அது? சினிமாவிலிருந்து சிஎம் ஆனவர்கள் அத்தனை சுலபத்தில் அந்த நிலைக்கு வந்துவிடவில்லை," என்றார்.

 

கெட்ட பையன்டா இந்த கார்த்தி – ஜிவி பிரகாஷின் புதிய தலைப்பு

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் தற்போது ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் இசை என்று காலில் சக்கரம் கட்டாத குறையாக சுற்றிச் சுழன்று வருகிறார்.

பென்சில் படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும் டார்லிங் படம் முந்திக் கொண்டதில் இன்று தமிழ் சினிமாவின் இளம் நாயகனாகி விட்டார் ஜிவி, தற்போது திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

GV Prakash’s  Select Some  interesting titles

இவருடன் ஹீரோயினாக கயல் ஆனந்தி மற்றும் சிம்ரன், பிரியா ஆனந்த் போன்றோரும் இந்தப் படத்தில் நடித்திருகின்றனர். இது போதாதென்று நடிகர் ஆர்யாவையும் சிறப்புத் தோற்றத்தில் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் ஜிவி.

அடுத்து ஜிவி பிரகாஷின் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா கெட்ட பையன்டா இந்த கார்த்தி, சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தின் மிகப் புகழ்பெற்ற வசனமான "கெட்ட பய சார்" இந்த காளி வசனத்தைத் தான் இப்படி மாற்றி வைத்திருக்கிறார்.

வெற்றிமாறன் திரைக்கதையும் , அட்லீ வசனமும் எழுத புதிய இயக்குனர்களான சங்கர்- குணா இயக்கத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் ஜிவி பிரகாஷ்.

இதெல்லாம் பரவாயில்லை இப்போது புதிதாக வெளியாகியிருக்கும் மற்றொரு தகவல் பாண்டிராஜின் உதவியாளர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜிவி பிரகாஷ், இந்தப் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? பாட்ஷா என்கிற ஆண்டனி இது எப்டி இருக்கு..