"சூப்பர் சிங்கர்" ஜெசிக்காவை பாராட்டிய நடிகர் சூர்யா

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரிசாக வென்ற ஒரு கிலோ தங்கத்தை தானம் செய்து உலகத் தமிழர்களின் மனம் கவர்ந்த ஈழத்து மாணவி ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யா நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

விஜய் டி.வி. சார்பில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்கா இரண்டாவது இடம் பிடித்தார்.

இதற்காக அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை அந்த மேடையிலேயே தமிழகம் மற்றும் ஈழத்தில் ஆதரவற்று தவிக்கும் குழந்தைகள் நலனுக்காக வழங்குவதாக ஜெசிக்கா அறிவித்தார்.

ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் இதற்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யாவிடம் இருந்து நேரில சந்திக்க வருமாறு அழைப்பு வந்தது. இதையடுத்து நடிகர் சூர்யாவை சந்திக்க சென்ற ஜெசிக்காவை, போட்டியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

நடிகை ஜோதிகா கொடுத்தனுப்பிய சிறப்பு பரிசையும் ஜெசிக்காவுக்கு இந்த சந்திப்பின்போது சூர்யா வழங்கி பாராட்டினார்.

நடிகர் சூர்யாவை சந்தித்தது தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்று ஜெசிக்கா தெரிவித்தார்.

நடிகர் சூர்யாவும் தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப்பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

விருது விழாவில் போட்டி போட்டு கவர்ச்சி காட்டிய ராக்கி, பூனம் பாண்டே

மும்பை: மும்பையில் நடந்த மிர்ச்சி மியூசிக் விருது விழாவில் நடிகைகள் ராக்கி சாவந்த் மற்றும் பூனம் பாண்டேவுக்கு இடையே கவர்ச்சி போட்டி நடந்துள்ளது.

பாலிவுட்டில் நுழைந்து நடிப்பில் ஜொலிக்க முடியாமல் அரசியல் பக்கம் சென்று அங்கும் குட்டுபட்டவர் ராக்கி சாவந்த். அவர் உளறுவதால் பாலிவுட்காரர்கள் அவரை மோட்டார் வாய் என்று கூறுகிறார்கள். நானும் நடிகை தான், மாடல் தான் என்று கூறிக் கொண்டு அவ்வப்போது நிர்வாண, அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருபவர் பூனம் பாண்டே.

விருது விழாவில் போட்டி போட்டு கவர்ச்சி காட்டிய ராக்கி, பூனம்

இந்த இருவரும் கடந்த 26ம் தேதி மும்பையில் உள்ள யஷ்ராஜ் ஸ்டுடியோஸில் நடந்த மிர்ச்சி மியூஸிக் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவுக்கு ராக்கி சாவந்த் கருப்பு நிற ஸ்டாரப்லெஸ் உடையிலும், பூனம் சிவப்பு நிற கவுனிலும் வந்திருந்தனர்.

அம்மணிகள் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு செய்தியாளர்கள் முன்பு குனிந்து குனிந்து கவர்ச்சி காட்டினர். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த கவர்ச்சி போட்டியை கவனிக்க பிறர் தவறவில்லை.

ராக்கியும், பூனமும் பிறர் கவனத்தை கவர இதுபோன்று கவர்ச்சி காட்டுவது புதிது அல்ல.

 

ஓவர் இந்தி + ஆங்கிலம்.. "தலைவா"வுக்கு கேளிக்கை வரிவிலக்கு கிடையாது என அரசு அறிவிப்பு!

சென்னை: நடிகர் விஜய் நடித்து பெரும் இழுபறிக்குப் பிறகு வெளியான "தலைவா" படத்துக்கு வரி விலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் நடிகர் விஜய் மற்றும் தலைவா படத்தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் அமலாபால் நடித்த "தலைவா" படம் வெளியானது. படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து படம் திட்டமிட்டப்படி தமிழகத்தில் வெளியாகவில்லை. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.

ஓவர் இந்தி + ஆங்கிலம்..

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வெளியானது. தலைவா படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் அளிக்கப்பட்டதையடுத்து, கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரிவிலக்கு குழுவினருக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

அப்போது, படத்தில் உள்ள சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர் குழு உறுப்பினர்கள். கேளிக்கை வரிச்சலுகை பெற வேண்டுமானால் தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். இதுதவிர வேறுசில கூடுதல் தகுதி வரையறைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், "யு" சான்றிதழ் பெற்றிருந்தாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழி கலப்பு அதிக அளவில் உள்ளதாலும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்று உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட அரசு, தமிழ்நாடு கேளிக்கை வரிச்சட்டத்தின்படி தலைவா திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க இயலாது என தற்போது உத்தரவிட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தலைவா படத்தில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக இந்தி வார்த்தைகளும் நிறைய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ராஜ்கோட்: நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது. இதையடுத்து அவரை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடிகை சோனம்கபூர், சல்மான்கானுடன் ஒரு புதிய இந்திப் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதற்காக ராஜ்கோட்டில் முகாமிட்டுள்ளார் சோனம் கபூர்.

நடிகை சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

படப்பிடிப்புக்காக வந்தது முதலே தொடர்ந்து காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டார் சோனம் கபூர். இதையடுத்து அவருக்கு ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதித்து சோதனைகள் நடத்தப்பட்டன. ரத்தப் பரிசோதனையில் சோனம் கபூருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். சோனம் கபூர் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?)