என்னம்மா கத்ரீனா, கார் ஓட்டச் சொன்னா இப்படி பண்ணீட்டீங்களேம்மா?

டெல்லி: ஃபித்தூர் படப்பிடிப்பில் கார் ஓட்டியபோது நடிகை கத்ரீனா கைப் வாகனத்தின் கதவை மூடாததால் அது சுவரின் மீது மோதியது.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைபும் காதலித்து வருகிறார்கள். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணம் செய்து கொள்ளப் போவதால் கத்ரீனா தன்னைத் தேடி வந்த 2 பட வாய்ப்புகளை கூட ஏற்க மறுத்துவிட்டாராம். ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் தான் நடித்து வருகிறாராம்.

என்னம்மா கத்ரீனா, கார் ஓட்டச் சொன்னா இப்படி பண்ணீட்டீங்களேம்மா?

அவர் தற்போது ஆதித்யா ராய் கபூருடன் சேர்ந்து ஃபித்தூர் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அண்மையில் டெல்லியில் நடந்தது. அப்போது கத்ரீனா காரை ஓட்டிச் செல்லும் காட்சியை படமாக்கியுள்ளனர்.

காருக்குள் ஏறி அமர்ந்த கத்ரீனா கதவை மூடாமலேயே ஸ்டார்ட் செய்துள்ளார். இதனால் திறந்திருந்த காரின் கதவு சுவரின் மீது வேகமாக மோதியது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் கத்ரீனாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

பிரபல ஆங்கில எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸின் கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் நாவலைத் தழுவி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

 

தமிழில் ரீமேக்காகிறது பெங்களூர் டேஸ்... ஆர்யா- ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கின்றனர்!

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கின்றனர்.

தமிழில் ராஜபாட்டை, நான் ஈ, இரண்டாம் உலகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களைத் தந்த பிவிபி சினிமாஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

தமிழில் ரீமேக்காகிறது பெங்களூர் டேஸ்... ஆர்யா- ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கின்றனர்!

ஏற்கெனவே நாகார்ஜுனா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்து வருகிறது இந்த நிறுவனம்.

இப்படம் தவிர அனுஷ்கா நடிப்பில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தையும் தயாரித்து வருகிறது. இதை அடுத்து தனது 11 ஆவது தயாரிப்பாக ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளது.

தமிழில் ரீமேக்காகிறது பெங்களூர் டேஸ்... ஆர்யா- ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கின்றனர்!

இப்படத்தில் ஆர்யா, ஸ்ரீதிவ்யாவுடன் பாபி சிம்ஹா, ராணா டக்குபதி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் 'பொம்மரிலு' பாஸ்கர்.

குகன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். பரம் வி பொட்லூரி தயாரிக்கிறார். படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் நடந்தது.

 

கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரானார் சுஹாசினி!

லக்சம்பர்க் நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நடிகை சுகாசினி நேற்று நியமிக்கப்பட்டார்.

'கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்' நாட்டின் தூதர் சாம் ஸ்ரீநர் முறைப்படி சுஹாசினிக்குகு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, விழாவில் அதிகாரப்பூர்வ தூதர்கள் மற்றும் கார்ப்பரேட் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டலில் இந்த பதவியேற்பு விழா நேற்று நடைப்பெற்றது.

கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரானார் சுஹாசினி!

விழாவை குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்த சாம் ஸ்ரீநர், சுஹாசினியை தங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராக நியமித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

'சுஹாசினி 350 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, அவர் பெண்கள் நலனிலும் ஆர்வம் கொண்ட பன்முக சிந்தனையாளர். சுஹாசினியை அதிகாரப்பூர்வ தூதராக நியமித்ததால் இந்தியா மற்றும் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டினுடனான உறவு மேலும் மேம்படும்' என்றும் சாம் ஸ்ரீநர் நம்பிக்கை தெரிவித்தார்.

பதவியேற்ற பின் பேசிய சுஹாசினி, தன்னை தூதராக நியமித்ததற்கு நன்றி கூறினார். தான் பிறந்த பரமக்குடி என்ற சிறிய ஊருடன் கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்கை ஒப்பிட்ட பேசிய சுஹாசினி மணிரத்னம், தனக்கு அளித்த பொறுப்பை செவ்வனே செய்வேன் என்று உறுதியளித்தார்.

ஒரு நடிகர் மற்றொரு நாட்டின் அதிகாரப்பூர்வ தூதராவது இதுவே முதல் முறை

என்பது குறிப்பிடதக்கது.

 

சூர்யா படத்திலிருந்து நீக்கப்பட்டாரா யுவன்?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா திடீரென மாற்றப்பட்டதாகவும், அவருக்கு பதில் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபுவின் முதல் படத்திலிருந்து அவர் படங்களுக்கு இசையமைப்பவர் யுவன் சங்கர் ராஜாதான். அத்தனைப் படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ளன.

சூர்யா படத்திலிருந்து நீக்கப்பட்டாரா யுவன்?

அதேபோல, சூர்யாவுக்கும் ராசியான இசையமைப்பாளர் யுவன்தான். சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் தொடங்கி பல படங்களுக்கு யுவன் இசை தந்துள்ளார்.

வெங்கட் பிரபு - சூர்யா கூட்டணியில் மாஸ் படம் ஆரம்பித்த போது, இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் சூர்யாவுக்கும் யுவனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். மே 1-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாடல்களை இன்னும் முடித்ததுத் தராமல் யுவன் தாமதம் செய்ததால் அவருக்குப் பதில் தமனை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் வெங்கட்பிரபுவைக் கேட்காமலேயே இந்த முடிவை சூர்யாவும் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீனும் மேற்கொண்டதாகவும், இதனால் வெங்கட்பிரபு கோபத்துடன் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இன்னொரு பக்கம், ஒரு பாடலுக்கு மட்டும் தமன் இசையமைப்பதாகவும், மற்றபடி யுவன் சங்கர்தான் இசையமைப்பாளர் என்றும் கூறுகிறார்கள். படத்தின் ஒரு பாடலுக்கு தமன் இசையமைத்ததால் இப்படி ஒரு செய்தி பரவியதாகவும் கூறப்படுகிறது.

உண்மை என்ன என்பதை யுவனோ ஸ்டுடியோ கிரீனோதான் விளக்க வேண்டும்!

 

விஜய், முருகதாஸ் மீதான கத்தி கதை வழக்கு: ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நடிகர் விஜய், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோர் மீதான கத்தி கதைத் திருட்டு வழக்கு வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

விஜய், முருகதாஸ் மீதான கத்தி கதை வழக்கு: ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையைத் திருடி கத்தி படத்தை எடுத்துவிட்டதாக திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் குற்றம்சாட்டினார்.

எனவே இதற்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும், வேறு எந்த மொழியிலும் கத்தி படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தஞ்சை மாவட்ட செசன்சு நீதிபதி முகமது அலி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(ஏப்ரல்) 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

 

சன்னிக்கு "ஸ்கின் அலர்ஜி" ... பாலில் சுடுநீரைக் கலந்ததால் வந்த வினை... இப்ப தேவலை!

மும்பை: "கவர்ச்சிப் பெருங்கடல்" சன்னி லியோனுக்கு ஸ்கின் பிரச்சினை ஏற்பட்டு இப்போது சரியாகி விட்டதாம். எல்லாம் இந்த ஏக் பஹேலி லீலா படப்பிடிப்பின்போது பாலில் குளியல் போட்டதால் வந்த வினையாம்.

ஏக் பஹேலி லீலா என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி. படத்தில் சனிக்கு மிக முக்கியப் பாத்திரம்.. கூடவே கவர்ச்சியும். ராஜஸ்தானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது அவருக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு அவதிப்பட்டு விட்டாராம்.

சன்னிக்கு

இந்த தடிப்புக்கு காரணம் பால்... காட்சிப்படி சன்னி லியோனை உட்கார வைத்து 100 லிட்டர் பாலால் அவரை குளிப்பாட்ட வேண்டுமாம். அப்போது செம குளிராக இருந்ததாம். ஜில் பாலை ஊற்றி, சன்னிக்கு ஜல்ப்பு வந்து விடுமே என்று பயந்துள்ளனர். இதையடுத்து பாலில் சுடுநீரைக் கலந்து அதை நீ்ர்க்க வைத்து பிறகு ஊற்றிக் குளிப்பாட்டியுள்ளனர்.

ஆனால் அது அவருக்கு அலர்ஜியாகி விட்டது. உடம்பெல்லம் தடிப்பு தடிப்பாக வந்து அவதிப்பட்டு விட்டாராம். உடம்பு முழுவதும் சிவப்பு நிறத்தில் தடிப்பு பரவவே, உடனே டாக்டரைக் கூப்பிட்டுள்ளனர். அவர் வந்து பார்த்து இது சாதாரண அலர்ஜிதான் என்று கூறி மருந்து கொடுத்துள்ளார். அதைப் போட்ட பின்னர் சன்னிக்கு தடிப்பு குறைந்து நார்மலானாராம். அதன் பிறகு தொடர்ந்து நடித்தாராம்.

படப்பிடிப்பின்போது சன்னியின் வீட்டுக்காரர் டேணியல் வெப்பரும் உடன் இருந்தாராம். படப்பிடிப்பை ரசித்து வேடிக்கை பார்த்தாராம்.