ஈஷா தியோல் திருமணத்தில் சல்மான்கான் 'பாடிகார்ட்!'

Salman Khan S Bodyguard Esha Deol   

மும்பையில் நடக்கும் நடிகை ஈஷா தியோலின் திருமணத்துக்கு செக்யூரிட்டி யார் தெரியமா... சல்மான் கானுக்கு சொந்தமான டைகர்ஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனம்தான்.

தனக்கு நெருக்கமானவர்கள், நண்பர்களுக்கு உதவுவதில் என்றுமே முதலிடத்தில் நிற்பவர் சல்மான்.

ஈஷா தியோலின் திருமணத்தில் விவிஐபிக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒரு நல்ல தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை இந்தப் பணியில் அமர்த்த திட்டமிட்டனர்.

இதுகுறித்து அறிந்ததும், சல்மான் கான் தனக்கு பாடிகார்டாக உள்ள ஷேரா என்பவரை அனுப்பியதோடு, தனது டைகர்ஸ் செக்யூரிட்டி நிறுவனத்தை இந்தப் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டாராம்.

இதைத் தொடர்ந்து ஷேராவும் அவரது தலைமையிலான செக்யூரிட்டிகளும் நேற்று நடந்த ஈஷாவின் சங்கீத் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அழைப்பு இல்லாத ஒருவரையும் உள்ளே விடவில்லை. வந்திருந்த அத்தனை விவிஐபிக்களுக்கும் கோட் நம்பர் கொடுத்து, கவனித்துக் கொண்டார்களாம். சங்கீத் நிகழ்ச்சிக்கு மட்டும் 40 செக்யூரிட்டிகள் வந்திருந்தனர். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு இன்னும் அதிக செக்யூரிட்டிகளை இறக்கப் போகிறார்களாம்!

 

ஹீரோயின் பிரச்சனையில் எம்.ஜி.ஆர்.

Sundar C S Mgr Need Heroine    | வரலக்ஷ்மி சரத்குமார்  

சுந்தர். சி.யின் மதகஜராஜா படத்தில் இருந்து டாப்ஸி நீக்கப்பட்டு வரலக்ஷ்மி சரத்குமார் சேர்க்கப்பட்டுள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார்.

கலகலப்பு வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுந்தர்.சி. விஷாலை வைத்து எடுக்கும் படம் மதகஜராஜா சுருக்கமாக எம்.ஜி.ஆர். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஹீரோயின் பிரச்சனையாக உள்ளது. முதலில் ராதா மகள் கார்த்திகா தான் ஒப்பந்தம் ஆனார். ஆனால் சுந்தர்.சி. தன்னிடம் தெரிவிக்காமல் திரைக்கதையை 2 நாயகிகள் இருக்குமாறு மாற்றியதால் அவர் படத்தை விட்டு விலகினார்.

இதையடுத்து 2 நாயகிகளாக டாப்ஸியும், வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் முதலில் டாப்ஸியை மட்டும் தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன் பிறகு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ தெரியவில்லை படத்தில் இருந்து டாப்ஸியை தூக்கிவிட்டு வரலக்ஷ்மியை சேர்த்துள்ளதாக இயக்குனரின் மனைவி குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.

இன்னும் எத்தனை ஹீரோயின்கள் வந்து, போகப் போகிறார்களோ தெரியலையே...

 

கடலில் விழுந்த சினேகாவைக் காப்பாற்றிய மீனவர்கள்!

Sneha Caught Boat Accident During   

ஹரிதாஸ் படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து கடலில் விழுந்த நடிகை சினேகாவை மீனவர்கள் காப்பாற்றினர்.

சினேகா, கிஷோர் நடிக்க 'ஹரிதாஸ்' என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. குமரவேலு இப்படத்தை இயக்குகிறார்.

ராமேஸ்வரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நேற்று தனுஷ்கோடி அருகே கடலில் தீவு போல் உள்ள சிறிய மணல் மேட்டில் பாடல் காட்சியொன்றை படமாக்கினர். இதற்காக சினேகா, கிஷோர், இயக்குனர் குமரவேலு, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு உள்ளிட்டோர் படகில் மணல் தீவுக்கு சென்றனர்.

கிஷோர், சினேகா பாடல் காட்சியை படமாக்கி விட்டு அனைவரும் படகில் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது சினேகா வந்த படகு அலையில் சிக்கி கவிழ்ந்தது.

அனைவரும் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடினார்கள். இதை கண்ட மீனவர்கள் விரைந்து சென்று காப்பாற்றினார்கள்.

இதுகுறித்து இயக்குநர் குமாரவேலு கூறுகையில், "அலைகள் அதிகம் இருப்பதாகவும் மணல் திட்டில் படப்பிடிப்பு நடத்த போக வேண்டாம் என்றும் பலர் எச்சரித்தனர். அதை கேட்காமல் போய் சிக்கி கொண்டோம்.

படத்தில் நடிக்கும் சிறுவன் பிருதிவிராஜையும் நீரில் மூழ்காமல் காப்பாற்ற போராடினேன். மீனவர்கள் வந்து அனைவரையும் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சினேகாதான் இதில் ரொம்பவே அதிர்ச்சியடைந்துவி்ட்டார்," என்றார்.

 

பிரேம்ஜியை நான் காதலிக்கவில்லை.. அவர்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார்! - நடிகை பியா

Actress Pia Denies Any Affair With Premgi   

நடிகர் பிரேம்ஜியை நான் காதலிக்கவே இல்லை. அவராகவே என்னைக் காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டு, பேஸ்புக்கிலெல்லாம் எழுதி வருகிறார், என்று புகார் கூறியுள்ளார் நடிகை பியா.

'கோவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பியா. இந்தப் படத்தில் பியாவுடன் பிரேம்ஜியும் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கிசுகிசு பரவியது.

பியாவை காதலிப்பதாக பிரேம்ஜி வெளிப்படையாகவும் அறிவித்தார். நானும் பியாவும் காதலிக்கிறோம் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த காதல் சர்ச்சையால் பியாவுக்கு படவாய்ப்புகள் குறைந்தன.

தனக்கு வாய்ப்பு போக பிரேம்ஜியின் இந்த அறிவிப்புதான் காரணம் என்று கருதிய பியா, இப்போது மறுப்பு வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், "எனக்கும் பிரேம்ஜிக்கும் காதல் என்பதெல்லாம் பொய். இதுபோன்ற கிசுகிசுக்கள் பரவுவதற்கு பிரேம்ஜிதான் காரணம். இண்டர்நெட்டில் என்னைக் காதலிப்பதாக அவர் செய்தி வெளியிட்டதால் எனக்குத்தான் பிரச்சினையாகிவிட்டது.

அந்த செய்தியை நீக்கும்படி பிரேம்ஜியிடம் வற்புறுத்தினேன். அதற்குள் அந்த வதந்தி பரவி விட்டது. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளானேன். பிரேம்ஜி பற்றி வெங்கட்பிரபுவிடம் கூட புகார் கூறினேன். பிரேம்ஜியை நான் காதலிக்கவே இல்லை.

நல்ல கதையாக தேடி வருகிறேன். இப்போதைக்கு சட்டம் ஒரு இருட்டறை படத்தில் மட்டும் நடிக்கிறேன்," என்றார்.

 

ஏதாவது புதுமையா செய்யணும் ...'சிரிப்பொலி' ராஜி

Siripoli Top 10 Comedy Anchor Raji

கலைஞர் சிரிப்பொலி டிவியில் ஞாயிறுதோறும் டாப் டென் காமெடியை தொகுத்து வழங்கும் ராஜி எம்.ஏ., மாஸ்கம்யூனிகேசன் படித்தவராம். "எதை செஞ்சாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும். உறுதியான முடிவோடு உழைத்தால் நினைச்சது நடக்கும்', என்று சொல்லும் ராஜியின் பொறுப்பான பேட்டியை படியுங்களேன்.

எம்.ஏ., ஜர்னலிசம் மாஸ் கம்யூனிக்கேஷன் கோர்ஸ் படிச்சிருக்கேன். படிப்பு முடிச்சதும் "டிவி' மீடியாவுக்கு போகணுன்னு ஆசை வந்தது. நினைச்ச பீல்டுக்கே வந்துவிட்டேன்.

டிவி பீல்டுக்கு வருவதற்கு என் அப்பாவும் ஒரு காரணம். நான் "பிளஸ் 2' படிச்சிட்டிருந்தப்ப அப்பா சந்திரமோகன் சென்னை தொலைகாட்சியில் சீரியல்களை இயக்கி வந்தார். அவரது சீரியலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக மெசேஜ் நிறைய இருந்தது. எய்ட்ஸ், குடி பழக்கம், புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பு என பல தகவல்கள் இடம் பெற்றிருந்தன. நானும் அப்பாவுடன் உதவி இயக்குனராக வேலை பார்த்தேன்.

பிறகு ராஜ் "டிவி'யில் "பரதம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். இப்ப கலைஞர் "டிவி'யில் "வண்ணத்திரை' சிரிப்பொலியில் "ஜாலியா தமாஸ் டாப் டென் காமெடி' நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். கலைஞர் நியுஸ்ல "உங்கள் மாவட்ட செய்தி'யிலும் வேலை பார்த்திருக்கேன்.

நிகழ்ச்சி நடத்த போவதற்கு முன்பாக ஒரு முறை வீட்டில் எனக்கு நானே ரிகர்சல் பார்த்துக் கொள்வேன். நிகழ்ச்சிகளை எந்தெந்த தருணங்களில் எந்த விதமாக தொகுத்து வழங்கினால் ரசிகர்களை ஈர்க்கலாமென்றும் நினைப்பேன். காம்பியரிங் போது அழகான உச்சரிப்பு, மேனரிஸம், ஸ்டைல் என கவனம் செலுத்தும் போது நிகழ்ச்சி மெருகேறும். ரசிகர்களிடம் வரவேற்பை பெறும்.

ரேடியோ எப்.எம். ,மில் "மும்பை சுந்தரி, திக்... திக்... தீபா' நிகழ்ச்சிகளுக்கு காம்பியரிங் செய்தேன். நிகழ்ச்சி எப்படியிருந்தால் ரசிப்பாங்கன்னும் அப்சர்வ் பண்ண முடிந்தது. "உங்களுக்காக 'நிகழ்ச்சிக்கு காம்பியரிங் செய்தபோது நிறைய ரசிகர்களோட எண்ணங்களை புரிந்து கொள்ள முடிந்தது. ரசிகர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களை ஈர்க்கும் வகையில் என்னோட காம்பியரிங் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

இன்றைக்கு பெண்கள் எல்லாத்துறையிலும் பயமின்றி கால் பதிக்க முடிகிறது. எந்தப் போட்டியையும் அறிவு பூர்வமாக சமாளித்து ஜெயிக்க கூடிய நிலையும் உள்ளது. எந்தத் துறையில் விருப்பம் இருக்கோ அதற்கு செல்ல வழியை தேட வேண்டும். மாதம் ஆனா சம்பளம் வருதுன்னு இல்லாம பார்க்கிற பணியில மேலும் , மேலும் வளர்வதற்கான வழிகளில் கவனம் செலுத்தினால் போட்டிகளை சமாளித்து நினைத்த இலக்கை எட்டலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்

 

ரசிகர்கள் ரகளை, கைகலப்பு... கோபத்தில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பிய அஜீத்!

Ajith Cancels Shooting Due Fans Disturbance    | பில்லா 2  

பெங்களூரில் நடந்த படப்பிடிப்பின்போது ரசிகர்களின் ரகளையால் கடுப்பான அஜீத், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார் அஜீத். இதில் அவருக்கு ஜோடி நயன்தாரா. உடன் ஆர்யா - டாப்ஸி, சுமன் ரங்கநாதன் நடிக்கின்றனர்.

ஆரம்பத்தில் மும்பையில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் பின்னர் பெங்களூருவுக்கு மாற்றினர். அங்கு கடந்த 18-ம் தேதியிலிருந்து முகாமிட்டுள்ள படக்குழு, பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கைகலப்பு

பெங்களூரு கருடா மால் அருகே, ஒரு வீட்டில் படப்பிடிப்பு துவங்கியது. அஜித், நயன்தாரா வந்த தகவல் பரவியது. இதனால், அவர்களை பார்க்க ரசிகர்கள் கூடினர். படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள், ரசிகர்கள் செல்ல முற்பட்டனர். இதனால், செக்யூரிட்டிகளுக்கும், ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த ரசிகர்கள் அங்கிருந்த இரண்டு கார் கண்ணாடிகளை, ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.

படப்பிடிப்பு முடிந்து, தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற போது, அஜித்தின் காருக்கு, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதனால், மறு நாள் லொக்கேஷன், பெங்களூரு வெளிப்பகுதியான ஹெண்ணூருக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பழமை வாய்ந்த சர்ச்சில், படப்பிடிப்பு ஆரம்பமானது. அங்கும், ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனாலும் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது.

அஜித்தை பார்க்க விடாத போலீசாருடன், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விபத்து தவிர்ப்பு

நேற்று முன்தினம், படப்பிடிப்பு முடிந்த அஜித், காரில் வரும் போது, அவரை பார்க்க வேண்டுமென, அவரது ரசிகர்கள் இருவர், பைக்கில் துரத்தி வந்தனர். ரிங்ரோட்டில் வரும் போது, அஜித்தின் காரை, "ஓவர் டேக்' செய்து, அவரை பார்க்க முற்பட்ட ரசிகர்கள், நிலை தடுமாறி, அஜித் கார் முன், பைக்குடன் விழுந்தனர். அஜித் கார், உடனடியாக பிரேக் போட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால், கோபமடைந்த அஜித், 'பெங்களூருவில் படப்பிடிப்பு வேண்டாம். வேறு இடம் பார்த்து கூறுங்கள்; வருகிறேன்' என கூறி, சென்னை சென்று விட்டார்.

 

சகுனியில் ரஜினி, கமல் பெயரைப் பயன்படுத்தியது பெரிய வெற்றியைத் தந்துள்ளது! - கார்த்தி

Rajini Kamal S Name Help Us Lot Saguni Success Karthi    | சகுனி  

கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள படம் சகுனி. அரசியல் பொழுதுபோக்குப் படமான சகுனி, தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியானது.

இரண்டு மொழிகளிலுமே படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், வசூல் சாதனை புரிந்துள்ளதாகவும் அறிவித்து, அந்த வெற்றியைக் கொண்டாட நேற்று பிரஸ் மீட் வைத்திருந்தனர்.

நேற்று காலை ஹைதராபாதில் வெற்றிச் சந்திப்பை நடத்தியவர்கள், மாலையில் சென்னையிலும் நடத்தினர். இரண்டு இடங்களிலும் ஹீரோ கார்த்தி, ஹீரோயின் ப்ரணீதா பங்கேற்றனர்.

சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் கார்த்தி - ப்ரணீதாவுடன், நாசர், மனோபாலா, விநியோகஸ்தர் கலைப்புலி சேகரன், இயக்குநர் சங்கர் தயாள், ஆல்பர்ட் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படத்தின் வெற்றி குறித்து கலைப்புலி சேகரன் பேசுகையில், "தம்பி கார்த்தி இப்போது வசூல் ராஜாவாகிவிட்டார். சகுனியில் வெற்றி வீரனாகத் திகழ்கிறார். இந்தப் படம் பெரிய ஓபனிங்கை தந்துள்ளது. விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மகிழும் அளவுக்கு வசூல் நன்றாக உள்ளது," என்றார்.

ஆல்பர்ட் மாரியப்பன் பேசுகையில், "சகுனி படத்தின் ஓபனிங் பிரமாதம். இதன் மூலம் கார்த்தி ஒரு மாஸ் ஹீரோவாகிவிட்டார்," என்றார்.

ஹீரோ கார்த்தி கூறுகையில், "இந்தப் படம் உண்மையிலேயே நல்ல பொழுதுபோக்குப் படமாக வெற்றி பெற்றுள்ளது. எனக்கு கிடைத்த பீட்பேக்கும் அதுதான். படத்துக்குப் போனா ஜாலியா இரண்டே முக்கால் மணிநேரம் இருந்துவிட்டு வரலாம் என்ற பேச்சை இந்தப் படம் கிளப்பியுள்ளது.

இந்தப் படத்தில் சந்தானமும் நானும் ரஜினி - கமலாக வருகிறோம். ரஜினி - கமல் பெயரை எங்கள் பாத்திரங்களுக்கு வைத்தது ரசிகர்களிடம் நன்றாக எடுபட்டுள்ளது. பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

அதிக அரங்குகளில் வெளியிட்டிருப்பதால் நல்ல வசூலும் குவிகிறது," என்றார்.

 

வேற்றுகிரகவாசிகள் உண்மையா? அறிவியல் பூர்வமான விளக்கம்!

Makkal Tv S Andam Decoding The U

மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `அண்டம்.' நிகழ்ச்சியில் பூமியைப் பற்றியும், வேற்றுகிரகவாசிகளைப் பற்றிய அரிய தகவல்களைப் பற்றியும் அறிவியல் பூர்வமாக விளக்குகின்றனர்

கடந்த சில வாரங்களாக `2012-ல் உலகம் அழியுமா?' என்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களோடு உரிய பதில்கள் இடம் பெற்றன. தொடர்ந்து கோள்கள் பற்றிய அரிய தகவல்களுடன் பூமியை தவிர வேறு எங்கேனும் உயிரினங்கள் உள்ளதா? அவற்றை கண்டுபிடிப்பதற்காக மனிதன் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? பல ஆண்டுகள் கழித்து மனிதனுக்கு கிடைத்த வேற்றுகிரக வாசிகள் குறித்த சமிக்ஞைகள் உண்மை தானா? இதற்கான பதிலை சரிவர ஆராய்ந்து, தக்க ஒரு தகவலை விளக்கமாக கூற வருகிறது இந்த வார அண்டம்.

அழுகை சீரியல்களைப் பார்ப்பதற்கு பதிலாக குழந்தைகளோடூ அமர்ந்து இது போன்ற அறிய தகவல்களைத் தரும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

 

எந்த மொழியிலயும் எனக்குப் பிடிக்காத வார்த்தை 'ஐட்டம்'! - அசின்

Asin Hates The Word Item

ஐட்டம் என்ற வார்தையே எனக்குப் பிடிக்காது என்கிறார் நடிகை அசின்.

பக்கா இந்தி நடிகையாகவே மாறிவிட்டார் அசின். அவரது அடுத்த படம் அக்ஷய் குமாருடன் கிலாடி 786.

படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. அசினும் பேச ஆரம்பித்துள்ளார். விளம்பரம் வேணுமில்லையா!

தென்னிந்திய படங்களைப் பற்றி பேச்செடுத்தாலே எரிந்து விழுகிறார் அசின். ஏன் இந்த கோபம்..? வளர்த்துவிட்ட படவுலகை வறுத்தெடுப்பது ஏனோ? என நிருபர்கள் அவரிடம் கேட்டனர்.

"அப்படி எந்த கோபமும் இல்லை. ஆனால் நான் இந்த அளவு பெரிய நடிகை ஆன பிறகும், என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் ரொம்ப சில்லியான ஸ்கிரிப்டுகளோடுதான் வருகிறார்கள். அல்லது நான் ஏற்கெனவே நடித்த பாத்திரங்களை ரிபீட் செய்வது போல கதைகளோடு வருகிறார்கள். அதான் எரிச்சலாக உள்ளது," என்றவரிடம், பெரிய படங்களில் ஐட்டம் நம்பர் வந்தால் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டனர்.

உடனே கடுப்பான அசின், "எனக்கு பிடிக்காத வார்த்தை இந்த ஐட்டம். இந்தியில் என்றல்ல, எந்த மொழியிலும் இப்படி நடிக்க எனக்குப் பிடிக்காது," என்றார்.

 

ரஜினி, கமல், விஜய் குரலில் மோசடி

Youth Cheats Using Rajini Kamal Vo

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் குரலில் பேசி பணம் பறித்த தினேஷ் குமார் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் ஆகியோரின் குரல்களிலும் பேசி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் குரலில் பேசி பணம் பறித்து வந்த தினேஷ்குமார்(21) என்பவரையும், அவரது நண்பர் மணியையும் போலீசார் கைது செய்தனர். தினேஷ் குமார் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திமுக மாவட்ட மகளிர் அணி செயலாளரின் தூண்டுதலின்பேரிலேயே தான் பல குரல்களில் பேச மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல குரல்களில் பேசி 6 முன்னாள் அமைச்சர்களிடம் வேலைவாய்ப்பு உள்பட பல காரியங்களை அந்த மகளிர் அணி நிர்வாகி சாதித்துக் கொண்டதாகவும், இந்த மோசடி 2 ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா இணை இயக்குனரான குமரேசன் என்பவரை தொடர்பு கொண்ட தினேஷ்குமார் தான் கிருத்திகா உதயநிதியின் தம்பி என்று கூறி அவருக்கு உதவி இயக்குனர் பணி வாங்கித் தருவதாக உறுதியளித்து ரூ.1 லட்சம் கேட்டு அதில் ரூ50,000 பெற்று ஏமாற்றினார். மீதமுள்ள ரூ. 50,000த்தை பெற வந்தபோது தான் அவர் போலீசில் சிக்கினார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், நடிகைகள் த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ரேயா ஆகியோரின் குரல்களிலும் பேசி நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பலரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இன்னும் எத்தனை பேரிடம் அவர் மோசடி செய்துள்ளார் என்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே அவருக்கு மாத சம்பளம் கொடுத்து மோசடி செய்ய வைத்த திருச்சியைச் சேர்ந்த திமுக மகளிர் அணி செயலாளர் நூர்ஜகான் பேகத்தைப் பிடிக்க தனிப்படை திருச்சி விரைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எந்த பயமும் இல்லை... என் வாழ்க்கையின் இருட்டறை ரகசியங்களை வெளியில் சொல்வேன் - சோனா

Sona Reveal Her Dirty Pages   

ஒருவழியாக நடிகை சோனா தன் வாழ்க்கைக் கதையை படமாக்குவதில் களமிறங்கிவிட்டார்.

அதற்கான நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் பிஸியாக உள்ளார்.

இதுகுறித்து சோனா கூறுகையில், "என்னை ரசிகர்கள் கவர்ச்சி நடிகையாகவும் குத்தாட்டம் ஆடுபவராகவும்தான் பார்க்கிறார்கள். உண்மையில் நான் யார்... என் கேரக்டர் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. அதை தெரிய வைக்கப் போகிறேன்.

என்படம் ‘த டர்டி பிக்சர்' போல் ஒருபோதும் இருக்காது. அந்தப் படம் கோழைத்தனத்தை பிரதிபலித்தது. அதன் நாயகி தற்கொலை செய்து கொள்வார். ஆனால் நான் அப்படி இல்லை துணிச்சலான பெண். எனது திரையுலக அனுபவங்கள், நான் சந்தித்த நபர்கள், என்னை தவறாக பயன்படுத்த முயன்றவர்கள் பற்றியெல்லாம் படத்தில் சொல்வேன். சில இருட்டு ரகசியங்கள் படத்தில் இருக்கும்.

என்னைப் பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். உண்மையில் நான் யார்? என்பதை இப்படம் வெளிப்படுத்தும். இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் கதை இருக்கும். ஆங்கிலத்தில்தான் படத்தை எடுக்கிறேன். வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய காட்சிகள் இடம் பெறும் என்பதால் இங்குள்ள தணிக்கை குழுவிடம் போராட வேண்டியிருக்கும்.

ஆங்கிலத்தில் எடுத்தால் இந்த பிரச்சினைகள் ஏற்படாது. எனவே ஆங்கிலத்தில் படத்தை எடுக்கிறேன். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை பற்றிய விவரங்களை வெளியிடுவேன்," என்றார்.

 

24 மணி நேர "கேப்டன் செய்திகள்" – ஆகஸ்டில் தொடக்கம்

24 Hours Captain News Channel

கேப்டன் டிவியில் இருந்து புதிதாக ஒரு சேனல் ஆகஸ்ட் முதல் தொடங்கப்பட உள்ளது. 24 மணிநேர செய்திகளை ஒளிபரப்ப உள்ளதாக கேப்டன் டிவி நிர்வாகிகளில் ஒருவரான எல்.கே.சுதீஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்திற்கு சொந்தமான கேப்டன் மீடியா நிறுவனத்தின் 2வது சேனல், அடுத்த இரண்டு மாதங்களில் அதன் முதல் 24 மணி நேர செய்தி சேனலாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது

கேப்டன் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆகஸ்ட் 29 முதல் தனது 24 மணி நேர செய்தி சேனல் "கேப்டன் செய்திகள்" அதன் ஒளிபரப்பை துவக்க உள்ளது என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சேனல் நடுநிலையான மற்றும் தரமான செய்திகளை ஒளிபரப்பும், என்றும் அவர் கூறினார்.

"கேப்டன்", கேப்டன் மீடியாவின் நிலையான முதல் 24 மணி நேர தொலைக்காட்சி சேனல் தனது மூன்றாம் ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ளது எனவும் திரு.எல்.கே. சுதீஷ் கூறினார்.

 

மறைந்த நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் வீட்டை ஆக்கிரமிக்க முயன்ற திமுகவினர்

Attempt Grab Tr Mahalingam S House

மதுரை: மறைந்த நடிகர், பாடகர் டி.ஆர். மகாலிங்கத்தின் வீட்டை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த டி.ஆர். மகாலிங்கம் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும், பாடவும் செய்தார். அவர் ஒரு நாடகத்தில் நடித்தபோது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போன ஏ. வி. மெய்யப்ப செட்டியார் தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏ.வி.எம்.-ன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்பு பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார். திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு இப்படம் பெரிதும் காரணமாய் அமைந்தது. இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான டி.ஆர்.மகாலிங்கத்தின் பூர்வீக வீடு சோழவந்தான் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ளது.

அவர் 1978 ல் இறந்ததை தொடர்ந்து அவரது மகன் சுகுமாறனின் பராமரிப்பில் இந்த வீடு இருந்து வந்துள்ளது. பின்பு இந்த வீட்டை சுகுமாறன் மின்வாரியத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார். சுகுமாறனையடுத்து அவரது மகன் ராஜேஷ் மகாலிங்கம் இந்த வீட்டை பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வீட்டை மின்வாரியத்துறையினர் காலி செய்துவிட்டனர். இதை அறிந்த திமுக நிர்வாகிகள் சிலர் இந்த வீட்டை ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து ராஜேஷ் மகாலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீட்டை மீட்டுக் கொடுத்துள்ளனர்.

கடந்த 1972ம் ஆண்டு சோழவந்தானில் 'பட்டிகாடா பட்டணமா' படப்பிடிப்பு நடைபெற்ற போது, இந்த வீட்டில் தான் முதல்வர் ஜெயலலிதா 45 நாட்கள் தங்கி ஷூட்டிங் சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது.

 

விக்ரம் - ஜீவா இணையும் டேவிட்!

Jeeva Joins With Vikram David    | ஜீவா  

'டேவிட்' என்ற இந்திப் படத்தில் விக்ரம் நடிப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தப் படம் குறித்து இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமும் நடிகர் ஜீவாவும் இணைந்து நடிக்கின்றனர். இரண்டு தனிக் கதைகளைக் கொண்டதாக படம் உருவாகியுள்ளது.

இந்த இரண்டு கதைகளையும் இரண்டு கேமிரா மேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
கதைப்படி இரு டேவிட்கள். ஒருவர் விக்ரம், மற்றொருவர் ஜீவா. ஒரு டேவிட் மீனவராகவும் மற்றொரு டேவிட் இசைக் கலைஞராகவும் வருகிறார்கள்.

இருவரும் ஒரு சிக்கலை சந்திக்கின்றனர். அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதுதான் இப்படத்தின் கதை. விக்ரம்,ஜீவா ஆகியோரோடு நாசர், தபு, ரோகினி ஹட்டங்காடி, லாரா தத்தா, இஷா ஷெர்வானி, கே.பி.நிஷான், ஜான் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மீனவர் கதையை ரத்னவேலுவும் இசை கலைஞர் கதையை ஸ்ரீஜல் ஷாவும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

ஜுலை 7-ந் தேதி நடிகர் சங்க பொதுக்குழு - முக்கிய முடிவுகளை எடுக்கிறார்களாம்!!

Nadigar Sangam S General Body Meet On July 7th

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம், சென்னையில் ஜுலை 7-ந் தேதி நடக்கிறது. அன்று சில முக்கிய முடிவுகளை அறிவிக்கப் போவதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், ஏற்கனவே இரண்டு முறை சங்கத்தின் தலைவராக இருக்கும் சரத்குமார் மூன்றாவது முறையாக, நடிகர் சங்க தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத்தலைவர்களாக விஜயகுமார், கே.என்.காளை, பொதுச் செயலாளராக ராதாரவி, பொருளாளராக வாகை சந்திரசேகர் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்கள்.

தேர்தலுக்குப்பின், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், ஜுலை 7-ந் தேதி மாலை 6 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெர்மன் அரங்கில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில், சங்கம் தொடர்பான மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

சுத்தக்காரி ஜெனீபர் லோபஸ்... அப்படியே 'உட்கார' மாட்டாராம்!

Jennifer Lopez Makes Bum Rider Deal

பாப் தேவதை ஜெனீபர் லோபஸ் ரொம்ப சுத்தக்காரியாக மாறியுள்ளார். எங்கு போனாலும் அங்குள்ள டாய்லெட்களை அவர் அப்படியே பயன்படுத்த மாட்டாராம். மாறாக, தன்னுடன் கூடவே கொண்டு போகும் குஷன் பொருத்தப்பட்ட இருக்கையை தூக்கி டாய்லெட் மீது வைத்து அதன் பிறகுதான் உட்காருவாராம்.

இங்கிலாந்து ராணிக்கு அடுத்து லோபஸ்தான் இப்படி ரொம்ப சுத்தம் பார்ப்பதாக அந்தப் பக்கத்தில் பேச ஆரம்பித்துள்ளனர். வழக்கமாக இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் இப்படித்தான். அவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்குள்ள டாய்லெட்களில் நேரடியாக அவர் உட்கார மாட்டார். அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள குஷன் பொருத்தப்பட்ட மேல் இருக்கையை டாய்லெட் மீது வைத்து அதன் மேல்தான் அவர் உட்காருவார்.

தேவையில்லாத கிருமிகள், பாக்டீரியா உள்ளிட்டவை தாக்கி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இப்படிச் செய்வது ராணியின் வழக்கம். தற்போது இதே பாணியை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளாராம் லோபஸ்.

இதுகுறித்து அவருக்கு நெருக்கமான ஒரு தரப்பு கூறுகையில் தனது பின்னழகின் மீது கவனம் கொண்டுள்ளார் லோபஸ். அதில் கிருமி பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு பாழ்பட்டு விடாமல் தடுப்பதற்காக தற்போது குஷன் பொருத்தப்பட்ட இருக்கை ஒன்றை தயாரித்துள்ளார். அதை டாய்லெட் மீது வைத்து அதன் மேல்தான் அமர்கிறார் அவர் என்று அத்தகவல் கூறுகிறது.

இந்த குஷன் ரெடிமேட் டாய்லெட் இருக்கையானது, அனைத்து விதமான வெஸ்டர்ன் டாய்லெட்களுக்கும் பொருந்துவது போல அமைக்கப்பட்டுள்ளதுதான் அதன் விசேஷமே...

ஒரு வேளை முண்டுவேலம் பட்டி பக்கமோ அல்லது சுண்டக்காய் பட்டி பக்கமோ லோபஸ் டூர் வந்தால் என்ன செயவார்....??

 

தீபிகாவால் தாமதமாகிறதா கோச்சடையான்?

Deepika S Dull Market Delays Rajini

பொதுவாக ரஜினி படம் வந்தால், அதற்கு போட்டியாக இருக்க வேண்டாமே என்று மற்ற படங்களைத் தள்ளி வைத்துத்தான் பார்த்திருக்கிறோம்.

இந்த முறை ரஜினி படமே கொஞ்சம் தள்ளிப் போகிறது, வேறொரு படத்துக்காக. அது கோச்சடையான்.

தமிழில் இந்தப் படத்துக்கு எந்தப் போட்டியும் இல்லை. எப்போது ரிலீசானாலும், தங்கள் படத்தை தள்ளி வைத்துக் கொள்ள அனைவரும் விரும்புவர்.

ஆனால் பாலிவுட்டில் நிலைமை வேறு. கோச்சடையான் படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனேவுக்கு இப்போது பாலிவுட்டில் கொஞ்சம் டல்லான சூழல்.

அவருக்கு இப்போது தொழில் போட்டியாளரான சோனாக்ஷி நடித்த 'சன் ஆப் சர்தார்' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தோடு கோச்சடையான் வெளியானால், தீபிகாவுக்குள்ள டல் மார்க்கெட் காரணமாக வசூல் பாதிக்குமோ என தயாரிப்பாளர் நினைக்கிறாராம். அதனால் படம் தள்ளிப் போகும் என்கிறார்கள்.

ஆனால் சன் ஆப் சர்தார் குழுவினரோ, நாங்கள் சூப்பர் ஸ்டார் படத்தோடு போட்டிபோடவில்லை. காரணம் அந்தப் பட வசூல் பெரும்பாலும் தென்னிந்தியாவைத்தான் மையப்படுத்தியுள்ளது. அங்கெல்லாம் எங்கள் படம் ஒரு பொருட்டே இல்லையே, என்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா!

 

கவர்ச்சியும், கசமுசாவாகவும் போகும் வீணா மாலிக்கும், 3வது காதலும்...!

Veena Malik 3d Love Life

வீணா மாலிக் என்றாலே கவர்ச்சி, கசமுசா என்றாகி விட்டது. இப்போது அவரது காதலும் கூட அப்படித்தான் கண்டக்க முண்டக்க போய்க் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கிறார் வீணா மாலிக் - தவறான காரணங்களுக்கா. இதை விட யாரும் கவர்ச்சி காட்ட முடியாது என்று கூறும் அளவுக்கு எல்லையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்.

படங்களில் கவர்ச்சி காட்டுவதைப் போலவே நிஜத்திலும் பல்வேறு சச்சரவுகள், சலசலப்புகளுடன் போய்க் கொண்டிருக்கிறது அவரது வாழ்க்கை. ஆரம்பத்தில் பாகிஸ்தான் காதலர் முகம்மது ஆசிப்புடன் சுற்றிக் கொண்டிருந்தார். பிறகு அவரை விட்டு விட்டு இந்தியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது அங்கு தங்கியிருந்த அஷ்மித் படேலுடன் படு நெருக்கமாக பழகினார். பிக் பாஸ் வீட்டுக்குள் 'அதைத் தவிர' இருவருக்கும் இடையே மற்ற எல்லா வகையான நெருக்கமும் இருந்தது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு படேலைத்தூக்கிப் போட்டு விட்டார். இப்போது இயக்குநர் ஹேமந்த் மதுகருடன் படு நெருக்கமாக உலா வருகிறார். இருவருக்கும் இடையிலான காதல், மகா நெருக்கமாக, டைட்டாகி விட்டதாம். அடிக்கடி ஜோடி போட்டுக்கொண்டு எங்கெங்கோ சுற்றுகிறார்களாம்.

ஏற்கனவே இருவரும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இப்போது இன்னொரு செட் படத்தை வெளியிட்டுள்ளனர் - இப்படங்களை வெளியிடுவதும் கூட வீணா மாலிக்தான் போலிருக்கிறது - இப்படத்திலும் இருவரும் நெருக்கமாக, அன்னியோன்யமாக காணப்படுகின்றனர்.

மும்பை 125 கிலோமீட்டர் என்ற படத்தை இயக்கி வருபவர்தான் இந்த மதுகர். இவரும், வீணாவும் சேர்ந்து இப்போது காதல் வீணையை மீட்டிக் கொண்டிருக்கிந்றனர். படப்பிடிப்பின்போதே இருவருக்கும் இடையே பிணைப்பு ஏற்பட்டு விட்டதாம்.

தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களும் கூட இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை, டைட்னஸை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. ஒரு படத்தில் வீணா பிரா கடையில் பிராக்களை பார்ப்பதையும், அதை வாங்க மதுகர் உதவுவது போலவும் உள்ளது.

இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல...

 

'ரஜினியும் கமலும் என் வழிகாட்டிகள்... அவர்கள் வழியில் கேரக்டருக்காக எதையும் செய்வான் இந்த ஷாம்!'

Rajini Kamal My Inspiration I M

சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு காரியத்தை செய்திருக்கிறார் நடிகர் ஷாம்.

படத்தின் கேரக்டருக்காக சில ஹீரோக்கள் தாடியும் நீண்ட தலை முடியும் வளர்த்து வித்தியாசம் காட்டுவார்கள். அல்லது, மொட்டை அடிப்பார்கள். உடம்பை ஏத்துவதும் இறக்குவதும் தவிர, சில சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் கூட எடுப்பார்கள்.

ஆனால் இதிலிருந்து வித்தியாசப்பட்டு நடிகர் ஷாம், கட்டையால் கண்ணுக்கு கீழே ஓங்கி அடித்தால் கண்கள் எப்படி வீங்குமோ அவ்வளவு பெரிதாக வீங்க வைத்து நடித்திருக்கிறார். '6' என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக தமிழ் சினிமாவில் யாரு எடுத்திராத ரிஸ்கை எடுத்திருக்கிறார் ஷாம்.

'கிட்டத்தட்ட பத்து நாட்கள் தூங்காமல் இருந்து அந்த தோற்றத்தை கொண்டு வந்தேன்.. வி இசட். துரை இயக்கத்தில் இப்போது ''6 '' என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

ஆறு கெட் அப், ஆறு மாநிலங்கள், ஆறு மெழுகுவர்த்திகள் என்று ஆறு அர்த்தம் கொண்ட சம்பவங்கள் இடம்பெறும்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக 89 கிலோ எடையிலிருந்து 72கிலோவாக எடையைக் குறைத்தேன். கிட்டத்தட்ட ஒருவருடம் தாடியும் நீண்ட முடியுமாக ஆறு மாநிலங்களில் சுற்றித்திரிந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இதையும் தாண்டி படத்திற்கு இன்னும் எபெக்ட் தேவை என டைரக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் இயக்குனர் துரையிடம், நான் கண்களை இப்படி வீங்க வைத்து வருகிறேன். அதற்கு ஒரு பத்து நாள் தூங்காமல் இருக்கவேண்டும் என்றேன். அவர், அது முடியுமா? ஆபத்தாச்சே? மற்ற இடமென்றால் பரவாயில்லை.. கண்ணில் போய் ரிஸ்க் எடுக்க வேண்டுமா? வீக்கம் குறையாவிட்டால் வாழ்க்கை பூரா கண்தெரியாமல் போக நேரிடும். தவிர நீ ஒரு நடிகன். நடிகனுக்கு முகம் தான் முக்கியம் . அந்த அழகு இந்த படத்துக்கு பிறகும் வேண்டும். வேண்டாம் ஷாம் ரிஸ்க் என்றார்.

இருந்தாலும் இந்த படத்தில் என் முழு அர்ப்பணிப்பையும் காட்டி இருக்கேன். இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்.

இடையில் ஒருநாள் இயக்குனருக்கு போன் செய்து இன்னும் நான்கு நாட்கள் கழித்து ஷூட்டிங் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்துவிட்டேன்..

எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாராக காத்திருக்க நான் போய் இறங்கினேன். என் கண்ணைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி. சில மணி நேரத்துக்கு என் கண்களைப் பார்க்கவே பயந்தார்கள்.

கடவுள் புண்ணியம் மீண்டும் என் கண்கள் பழைய நிலைக்கு ஒரு வாரம் கழித்து திரும்பியது. இல்லையென்றால் நினைத்துப்பார்க்கவே விபரீதமாக இருக்கிறது. இதில் ஒரு துளி மேக் அப் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை. சினிமாதான் எனக்கு எல்லாம். அதற்காக ஷாம் எதையும் செய்வான் என்பதை இந்த 6 படம் உலகிற்கு சொல்லும்.

கேரக்டருக்காக மெனக்கெடும் விஷயத்தில் ரஜினி சார், கமல் சார் இருவருமே என் வழிகாட்டிகள். எந்திரனில் ரஜினி சார் பட்ட கஷ்டங்களைப் பார்த்து பிரமித்தேன். அதே போல, கமல் சார் தன் கேரக்டருக்காக எத்தனையோ ரிஸ்குகளை எடுத்தவர். அவர்கள் வழியில் பயணிக்க முயற்சிக்கிறேன்," என்றார்.

படத்திற்காக தாடியும் மீசையுமாக உடல் மெலிந்து காணப்பட்ட அவரை காண அவர்கள் அம்மாவுக்கும் மனைவிக்கும் தாங்க முடியவில்லை. அம்மா பல நேரம் அழுதே விட்டார்கள் என்பதால் ஆறு மாதம் யாரையும் பார்க்காமல் இருந்துள்ளார். மனைவியும் அம்மாவையும் பெங்களூருக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் சென்னைக்கும் ஷூட்டிங்குக்கும் நடுவே மாதங்களை ஓட்டியுள்ளார்.

 

நடிகை ஈஷா தியோல் திருமணம் - தமிழக வழக்கப்படி மும்பையில் நடக்கிறது!

{image-25-esha-deol-bharat-takhtani-3.jpg tamil.oneindia.in}
தர்மேந்திரா-ஹேமமாலினி மகள் ஈஷா தியோல் திருமணம் தமிழக கலாச்சாரப்படி நடக்கிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஹேமமாலினி. தமிழ்ப் பெண்ணான இவர் இந்திப்பட உலகில் கனவுக் கன்னியாக கொடிகட்டிப் பறந்தார்.

நடிகர் தர்மேந்திராவுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தார். பின்னர் தர்மேந்திராவையே ஹேமமாலினி திருமணம் செய்து கொண்டார்.

தர்மேந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர். சன்னி தியோல், பாபி தியோல் என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சன்னி தியோல் சில இந்திப் படங்களில் நடித்தார்.

தர்மேந்திரா - ஹேமமாலினி தம்பதிக்கு ஈஷா தியோல், அகானா என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஈஷா தியோல். சிறந்த பரதநாட்டிய கலைஞர். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மணமகன் பரத் தக்தானி. மும்பை தொழில் அதிபர். 5 நட்சத்திர ஓட்டல் உள்பட பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். பரத்-ஆஷா தியோல் திருமணம் வருகிற 29-ந் தேதி காலை 7.30 மணிக்கு மும்பையில் உள்ள ஒரு கோவிலில் நடக்கிறது.

தமிழக கலாச்சாரப்படி புரோகிதர்கள் மூலம் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது. இதில் குடும்பத்தினர் தவிர மற்ற யாருக்கும் அழைப்பு இல்லை. ஹேமமாலினி சென்னை வந்து மணமகளுக்கு தமிழக கலாச்சாரப்படி காஞ்சீபுரம் பட்டுப்புடவை, நகைகள், ஆபரணங்கள் வாங்கிச் சென்றார்.

மும்பை கலாச்சாரப்படி 4 நாள் திருமண விழா நடக்கிறது. இன்று மும்பை நட்சத்திர ஓட்டலில் சங்கீத் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரபல இந்தி நட்சத்திரங்கள் தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வருகிற 28-ந் தேதி மெகந்தி நிகழ்ச்சி ஜூகுவில் உள்ள ஹேமமாலினி பங்களாவில் நடக்கிறது. தமிழக கலாச்சாரப்படி வாழைமரம், தோரணம் பூக்களால் வீட்டை அலங்கரித்துள்ளனர்.

30-ந் தேதி மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
 

இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!

Michael Jackson S Spirit Seen At Hi

வாஷிங்டன்: மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும், பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம்.

மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது.