அமீஷா பட்டேலுடன் ஜோடி போடும் லியாண்டர்!

Leander Paes and Amisha Patel
ராஜதானி எக்ஸ்பிரஸ்… இது ரயில் அல்ல… பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் நடிக்கும் புதிய சினிமா.

இந்தியாவின் முதல் நிலை டென்னிஸ் வீரர் லியாண்டர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்தநிலையில் ராஜதானி எக்ஸ்பிரஸ் பட வாய்ப்பை ஒப்புக் கொண்ட லியாண்டர், முழு ஹீரோவாக அதில் அறிமுகமாகிறார்.

லியாண்டர் பெயஸ் ஜோடியாக நடிக்க நிறைய கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக அமீஷா படேல் தேர்வாகியுள்ளார். கஹோனா பியார் ஹை மூலம் இந்தியில் முன்னணி நடிகையானார். தமிழில் ‘புதிய கீதை’ என்ற தமிழ் படத்தில் விஜய்யுடன் நடித்தார்.

ராஜஸ்தானி எக்ஸ்பிரஸை இயக்குபவர் அசோக் கோஹ்லி.

இப்படத்தில் நடிப்பது லி்யாண்டர் கூறுகையில், “முதலில் சற்று யோசனையாகத்தான் இருந்தது. ஆனால் வாழ்க்கையில் ஒரு மாறுதலுக்காக இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன். இதன் கதையும் ரொம்ப வித்தியாசமாக இருந்தது” என்றார்.

நாயகி அமீஷா பட்டேல் கூறும்போது, “எனக்கு இதில் சவாலான வேடம். படத்தின் கதை ரொம்ப நாட்களுக்கு முன்பே எனக்கு தெரியும். ஆனால் கடந்த வாரம்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். லியாண்டர் பெயஸ் இந்தப் படத்தில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவார்,” என்றார்.



Source: One India

 

விக்ரம் -அனுஷ்கா ஜோடி சேரும் தெய்வ மகன்!

Anushka
மதராஸபட்டினம் புகழ் விஜய் இயக்க, விக்ரம் – அனுஷ்கா முதல்முறையாக ஜோடி சேரும் தெய்வ மகன் படப்பிடிப்பு துவஙகியது.

அனுஷ்காவின் உயரமும், வாளிப்பான உடலமைப்பும்தான் அவரது ப்ளஸ் என்பதால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தமிழிலோ அவரது உயரமே எதிரியாகிவிட்டது.

உயரம் குறைந்த நாயகர்கள், அரையடி ஸ்டூல் அளவுக்கு ஷூ போட்டுக் கொண்டு அவருடன் நடிக்கவேண்டிய நிலை உள்ளதால், ‘அனுஷ்காவா, வேண்டாம்… பக்கத்தில் நின்று பேசக் கூட முடியாது (?!)’ என்று ஓரங்கட்டுகிறார்களாம். இப்படி அனுஷ்கா இழந்த வாய்ப்புகள் நான்கைந்து இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் இயக்குநர் விஜய்க்கு அந்த கஷ்டமில்லை தெய்வமகன் படத்தில். இந்தப் பட நாயகன் விக்ரமுக்கு சரியான ஜோடி எனும் அளவு படுபாந்தமாக அமைந்துள்ளதாம் இருவரின் பொருத்தமும்.

இந்தப் படத்தில் 7 வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் விக்ரம். அவருக்கு உதவும் நேர்மையான வக்கீலாக வருகிறாராம் அனுஷ்கா. 2001-ல் வெளியான ‘ஐயாம் ஸாம்’ என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இது என்கிறார்கள்.


 

பையனூரில் டிவி நடிகர்களுக்கு வீடு...ராம நாராயணன் தொடங்கி வைத்தார்!

Rama Narayanan
டிவி நடிகர்களுக்கென வீடு கட்டும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன்.

திருப்போரூரை அடுத்த பையனூரில் திரைப்பட துறையினருக்கு அரசு 96 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. இதில் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 ஏக்கர் இடமும் ஸ்டூடியோ கட்ட 15 ஏக்கரும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 10 ஏக்கரும், சின்னத்திரை கலைஞர்களுக்கு 8 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.வி. நடிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கரில் 600 சதுர அடி பரப்பு அளவில் 504 வீடுகளும் 800 சதுர அடிபரப்பில் 280 வீடுகளும் 1000 சதுர அடி பரப்பில் 364 வீடுகளும் ஒரு ஷாப்பிங் மாலும் கட்டப்படுகின்றன.

சின்னத்திரை கலைஞர்களுக்கான வீடு கட்டும் பணி துவக்க விழா பையனூரில் இன்று நடந்தது. விழாவுக்கு கண்மணி சுப்பு தலைமை தாங்கினார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை ஆகியோர் விழாவில் பங்கேற்று கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். ஷாப்பிங் மால் கட்டுமான பணியை நடிகை குஷ்பு தொடங்கிவைத்தார். கிளப் ஹவுஸை ராதாரவி தொடங்கி வைத்தார்.

விழாவில் ஆர்.கே.செல்வமணி, சத்யஜோதி தியாகராஜன், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் நவீன ஸ்டூடியோவை முதல்வர் கருணாநிதி ஜனவரி 14-ந்தேதி திறந்து வைப்பார் என்று ராமநாராயணன் தெரிவித்தார்.

சின்னத்திரை கலைஞர்களுக்கான வீடு கட்டும் செலவு உள்ளிட்டவற்றை சங்கமே ஏற்கிறது. அதே நேரம், திரைப்பட கலைஞர்களுக்கான வீடுகளுக்கு கணிசமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வீடுகளை வாங்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை திரைப்பட தொழிலாளர்கள்.


 

இனி அரசு நிர்ணயிக்கும் கட்டணம்தான்! - திருப்பூர் திரையரங்குகள் முடிவு

http://www.arnolfini.org.uk/img/imagecache/230x230_Untitled-4.jpg
திருப்பூர்: இனி அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே டிக்கெட்டுகளை விற்கப் போவதாக திருப்பூர் நகர திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டதும், ஆரம்ப நாட்களில் வரும் கூட்டத்தைப் பயன்படுத்தி பெரும் வசூலை எடுக்க அதிக கட்டணம் வைத்து டிக்கெட் விற்கப்படுகிறது.

சென்னை நகரில் பெரும்பாலும் இப்படி நடப்பதில்லை. ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இது எழுதப்படாத நடைமுறையாக உள்ளது.

ஆனால் இப்படி வசூலாகும் தொகை பெருமளவு விநியோகஸ்தர்களுக்கே போய் விடுவதாகவும், இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை எனவும கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் மக்களிடையே தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே , இனிமேல் எப்போதும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே டிக்கெட் விற்பனை செய்வது என திருப்பூரில் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

அட…!


 

நோ கால்ஷீ‌ட் :நயன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உதயநிதியை வைத்து எம்.ராஜேஷ் இயக்கப்போகும் படத்துக்கு நாயகியைத் தேடி வருகிறார்கள். தன் முந்தைய படமான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த நயன்தாராவையே போடலாம் என்று இயக்குநர் அணுகியபோது கையை விரித்துவிட்டாராம் நயன். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை, பிரச்சனைகளை முடித்துவிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்று விளக்கம் சென்னாராம். இருந்தாலும் நடிகையைச் சமாதானப்படுத்த முயன்று வருகிறார் இயக்குந‌ர்.




Source: Dinakaran
 

‘டைரக்டர் மட்டும் இல்லேன்னா… ‘-அதிர்ச்சியில் அஞ்சலி!

Anjali
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படப்பிடிப்பில் நடந்த திடீர் தாக்குதலில் இயக்குநரால் காப்பாற்றப்பட்டார் நடிகை அஞ்சலி.
‘இயக்குநர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் தப்பித்திருக்கவே முடியாது’, என்கிறார் அஞ்சலி அதிர்ச்சி விலகாமல்.
அஞ்சலியும் கரணும் ஜோடியாக நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படப்பிடிப்பு குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியில் நடந்தது. நேற்று பகல் அஞ்சலி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது 7 பேர் அடங்கிய கும்பல ஆட்டோவில் வந்து இறங்கி, ‘குமரி மாவட்டத்துக்காரன் கதையை எப்படி சினிமாவாக எடுக்கலாம்’ என கேட்டு இயக்குனர் வடிவுடையானை அடித்து உதைத்தது. சட்டை கிழிக்கப்பட்டது. கார் உடைக்கப்பட்டது. படப்பிடிப்பு சாதனங்கள் உடைக்கப்பட்டன.
ஹீரோயின் அஞ்சலியையும் தாக்க தேடினார்கள். அப்போது அஞ்சலியை போர்வையால் போர்த்தி ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைக்கும்படி உதவி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டார் இயக்குநர். இதர துணை நடிகர், நடிகைகள் அலறியடித்து ஓடினார்கள்.
“தக்க சமயத்தில் இயக்குநரும் உதவி இயக்குநர்களும் என்னைக் காப்பாற்றினார்கள். அந்த கும்பல் கையில் கிடைத்திருந்தால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று பயமாக இருக்கிறது..” என்றார் அஞ்சலி.
 

அஞ்சலியை மர்ம கும்பல் துரத்தியதால் பரபரப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தயாராகும் படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’. இந்த படத்தில் கரண், அஞ்சலி, சரவணன், கஞ்சாகருப்பு நடிக்கின்றனர். வடிவுடையான் இயக்குகிறார். நேற்று பிற்பகல் குலசேகரத்தை அடுத்த மங்கலம் பகுதியில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அப்போது ஒரு கும்பல் காரில் அந்த இடத்துக்கு வந்தது. காரிலிருந்து இறங்கியவர்கள், இயக்குனர் வடிவுடையானை பார்த்து, Ôகுமரி மாவட்டத்தை இழிவுபடுத்தி படம் எடுக்கிறாயா?Õ எனக் கூறி சரமாரியாக அவரை தாக்கினர். இதில் வடிவுடையானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கும்பலில் சிலர், அஞ்சலியை நோக்கி வந்தனர். பயந்துபோன அஞ்சலி ஓட, அவரை அந்த கும்பல் துரத்தியது. அருகில் உள்ள வீட்டுக்குள் அஞ்சலி புகுந்தார். ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினரின் காரை தாக்கிவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அஞ்சலி கூறும்போது, ÔÔஷூட்டிங் நடக்கும்போது ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. அவர்கள் யார் என்றே தெரியாது. என்னை நோக்கி ஓடி வந்தனர். இதனால் பயந்து, அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்து
தப்பினேன். அதை இப்போது நினைத்தாலும் படபடப்பாக இருக்கிறதுÕÕ என்றார்.


Source: Dinakaran


Source: India Glitz
 

ஏழுமலையானுக்கு ரூ 15கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய காஞ்சனா!

Jayalalitha with Kanchana
திருப்பதி: திருமலை ஏழுலையான் கோயிலுக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை காஞ்சனா.
எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் நடித்தவர் நடிகை காஞ்சனா. தெலுங்கிலும் ஏராளமான படங்கள் நடித்துள்ள இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.
இந்த நிலையில், சென்னை ஜிஎன் செட்டி சாலையில் தனக்கு சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக அளித்து பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். இந்த இடத்தில் கல்யாண மண்டபம் அல்லது சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என்றும் அவர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு கூட காஞ்சனா மிகுந்த பணக்கஷ்டத்தில் இருப்பதாக செய்திகள் வந்தன. மனநிலை சரியில்லாததால் அவரை உறவினர்கள் கைவிட்டுவிட்டதாகவும், குடியிருக்க வீடு கூட இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை உடனடியாக மறுத்து விளக்கமளித்திருந்தார் காஞ்சனா.
அவரிடம் இவ்வளவு நிலம் இருப்பது பற்றி யாருக்கும் தெரியவும் இல்லை. அவரும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை!