தெய்வத் திருமகன் விக்ரமுக்கு தேசிய விருது பெற்றுத் தரும் :இயக்குனர் விஜய் நம்பிக்கை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெய்வத் திருமகன் விக்ரமுக்கு தேசிய விருது பெற்றுத் தரும் : இயக்குனர் விஜய் நம்பிக்கை

4/4/2011 1:47:12 PM

விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு 'தெய்வத் திருமகன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் இயக்குனர் விஜய் பேசியதாவது:

இந்த படத்தின் கதையை விக்ரமிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பே சொன்னேன். நடிக்க சம்மதித்தார். அவர் மறுத்திருந்தால் இந்தப் படத்தை இயக்கி இருக்க மாட்டேன். அவரைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாத கேரக்டர் அது. விக்ரமுக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளித் தரும் கேரக்டர். மனவளர்ச்சி குன்றியவராக நடிக்கிறார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட பயற்சி அதிகம். ஒவ்வொரு காட்சியும் பலமுறை ஒத்திகை செய்து பார்த்த பிறகே நடித்தார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் இசையும் படத்துக்கு பெரிய பலம். வரும் 14&ம் தேதி பாடலை வெளியிடுகிறோம். இவ்வாறு விஜய் கூறினார்.

விக்ரம் கூறும்போது, 'எனக்கு திருப்புமுனையைத் தரப்போகும் படம். உணர்வுப் பூர்வமாக நடித்த படம். நாசரும் நானும் போட்டிப் போட்டு நடித்திருக்கிறோம். நல்ல நடிகர்களோடு நடிக்கும்போது எனக்கு நடிப்பு நன்றாக வருகிறது. நிறைய கற்றுக் கொள்ளவும் முடிகிறது. அனுஷ்கா நடிப்பில் அசத்தியிருக்கிறார். அமலா பால் வேறு கோணத்தில் நடித்திருக்கிறார். நல்ல இயக்குனர்கள் அமைவது என் பாக்கியம். இந்தப் படத்தில் விஜய் அமைந்திருக்கிறார்' என்றார்.

நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் மோகன் நடராஜன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், எட்டிடர் ஆண்டனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Source: Dinakaran
 

ஒரே கேரக்டரில் நடிக்கிறேனா?ஜெனிலியா மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரே கேரக்டரில் நடிக்கிறேனா? ஜெனிலியா மறுப்பு

4/4/2011 1:44:15 PM

சென்னை: சில படங்களைத் தவிர, ஒரே மாதிரி கேரக்டரில் நடிக்கவில்லை என்றார் ஜெனிலியா.

இதுபற்றி அவர் கூறியதாவது:
தெலுங்கில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யும் போது, அங்கு நடித்த அதே கேரக்டரை இங்கும் செய்ய வேண்டிய நிலை வரும். அது தவிர்க்க முடியாதது. இதை வைத்துக்கொண்டு ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்கிறேன் என்று கூறுவதை ஏற்க முடியாது. இப்போது நடித்துள்ள 'உருமி' மலையாளத்தில் ரிலீஸ் ஆகிவிட்டது. இதில் என் நடிப்பை எல்லாரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்துக்காக களரி சண்டை கற்றேன். படத்தில் அதைப் பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. இதையடுத்து விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடித்து வருகிறேன். இதில் எனக்கு சீரியஸான கேரக்டர். இவ்வாறு ஜெனிலியா கூறினார்.


Source: Dinakaran
 

பரிமளா திரையரங்கம் என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பரிமளா திரையரங்கம் என்ன கதை?

4/4/2011 1:45:00 PM

சென்னை: வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், ஸ்ரீமன் தயாரிக்கும் படம் 'பரிமளா திரையரங்கம்'. ஜசரிவேலன் பேரன் விகாஸ் ஹீரோ. சனுஷா ஹீரோயின். மற்றும் விவேக், கிஷோர், இளவரசு உட்பட பலர் நடிக்கின்றனர்.

படத்தை இயக்கும் சரவணஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:
இது சினிமா தியேட்டர் சம்பந்தப்பட்ட கதை. ஆபரேட்டர் இளவரசுவின் மகன் விகாஸ், தியேட்டர் விலை பேசப்படுவதை அறிந்து கலங்குகிறார். பிறகு அத்தியேட்டரை நவீனப்படுத்தி, அதை எப்படி வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது கதை. தமிழகம் முழுவதும் தேடியதில், கதைக்கு பொருத்தமான தியேட்டர் வேடசந்தூரில் கிடைத்தது. பல லட்ச ரூபாய் செலவில் தியேட்டரை மாற்றி, படமாக்கினோம்.  காதல் காட்சிகளில் விகாஸ், சனுஷா கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசியப்படுத்தும்.


Source: Dinakaran
 

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரசிகர்களிடம் சிக்கிய ஆர்யா,சமீரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரசிகர்களிடம் சிக்கிய ஆர்யா, சமீரா

4/4/2011 1:46:36 PM

சென்னை: லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'வேட்டை'. ஆர்யா, சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் நடந்து வந்தது. திட்டமிட்ட நாளுக்கு முன்பே  முதல் ஷெட்யூல் முடிந்ததால் அங்கிருந்து வியாழக்கிழமை சென்னை திரும்பினர். ஆர்யாவுக்கும் சமீரா ரெட்டிக்கும் மதுரையில் இருந்து சென்னை வர விமான டிக்கெட் எடுத்திருந்தனர். முதல் நாள் ரயிலில் தயாரிப்பாளர் போஸ், லிங்குசாமி ஆகியோர் செல்ல முடிவு செய்திருந்தனர். தாங்களும் ரயிலில் வருகிறோம் என்று ஆர்யாவும் சமீராவும் கூறினார்

. இதையடுத்து காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் ஏறி வந்துகொண்டிருந்தனர். ரசிகர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருக்க ஆர்யா, தொப்பி அணிந்திருந்தார். சமீரா தலையில் ஒரு துணியை போட்டிருந்தார். காலையில் எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கினால் ரசிகர்கள் தொந்தரவு இருக்கும் என்று தாம்பரத்தில் இறங்க முடிவு செய்திருந்தனர். இதையடுத்து ஆர்யாவின் கார் தாம்பரத்தில் காத்திருந்தது. வெள்ளிக்கிழமை காலை 7.30&க்கு ரயிலில் இருந்து இருவரும் இறங்கினர். அப்போது திடீரென்று ரசிகர்கள்  அடையாளம் கண்டுகொண்டு சுற்றி வளைத்தனர்.

 அவர்களிடம் இருந்து வெளியேற இருவரும் சிரமப்பட்டனர். ஆர்யாவின் டிரைவரும் நண்பர் ஒருவரும் உள்ளே வந்து இருவரையும் ரசிகர்களிடம் இருந்து மீட்டனர். இச்சம்பவத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Source: Dinakaran