சைக்கோ கேரக்டர் இருந்தா கொடுங்களேன்: நடிகை பாரதி

I Like Psycho Character Ammuvakiy Naan

ஜெயா டி.வி. 'ருத்ரம்' தொடரில் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து வருபவர் அம்முவாகிய நான்' படத்தில் நடித்த நடிகை பாரதி.

திடீரென்று ரகசிய திருமணம் செய்து திருமதி பாரதி ஆனபிறகு மீடியாவை விட்டு ஒதுங்கிய அவர் இப்போது சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

திடீர் என்று டிவி பக்கம் ஒதுங்கிய காரணம் கேட்டால், ''கல்யாணம், குழந்தைனு செட்டில் ஆன பிறகு, சீரியல்தானே நமக்குச் சரி!?' என்று சிரிக்கிறார். ''வழக்கமா அழுகை சென்ட்டிமென்ட், பிளாக்மெயில் இல்லாத சீரியல் இது. இயல்பான காட்சிகள், ஷார்ப் வசனம், மிரட்டல் ட்விஸ்ட் இருந்ததாலதான் நடிக்கச் சம்மதிச்சேன். சினிமாவிலும் நெகட்டிவ் அல்லது சைக்கோ கேரக்டர் கிடைச்சா சூப்பரா பண்ணுவேன் என்றார். ( இயக்குநர்கள் கவனிக்கவும் )

அம்முவின் பையன் ஹரிக்கு கிரிக்கெட் என்றால் உயிராம். சச்சின் மாதிரி அவனை பெஸ்ட் ப்ளேயர் ஆக்கவேண்டும் என்பது பாரதியின் கனவாம்.

 

மனோஜும் மகத்தும் மோதிக்கொண்டதில் பலனடைந்த டாப்ஸி

Tapsee Gets 1 Crore   

கடந்த மாதம்வரை டாப்ஸி பற்றி அறியாதவர்கள் கூட நடிகர் மனோஜ் - மகத் அடிதடிக்குப் பிறகு டாப்ஸி பற்றி தெரிந்து கொண்டனர். அந்தளவிற்கு டாப் டூ பாட்டம் டாப்ஸிக்காக நடந்த அடிதடி பற்றிதான் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து செய்தி வெளியிட்டன. இந்த பப்ளிசிட்டியால் டாப்ஸிக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது.

சென்னையில் உள்ள பிரபலமான விளம்பர நிறுவனம் ஒன்று, தங்களது கம்பெனி விளம்பரத்தில் நடிக்க டாப்ஸியைக் கேட்டிருக்கிறது. படங்களை எதிர்பர்த்துக்கொண்டிருந்த டாப்ஸிக்கு இப்படி விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்ததும், கடுப்பாகிப் போனார். நிறைய சம்பளம் கேட்டால் போய் விடுவார்கள் என்று நினைத்து ஒரு கோடி வேண்டும் என்று குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். ஆனால் அந்த நிறுவனமோ 1 கோடி கொடுக்க நாங்கள் ரெடி என்று கூலாகக் கூறியிருக்கிறார்கள். ஆடுகளம்' படத்திற்குப்பின் தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த டாப்ஸிக்கு மஞ்சு மனோஜும், மகத்தும் ஓசியில் பப்ளிசிட்டி கொடுத்து தூக்கிவிட்டுவிட்டார்களே என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள். இதுகூட நல்ல விளம்பராமா இருக்கே நாமளும் முயற்சி செய்யலாமா என்று மார்க்கெட் இல்லாத நடிகைகள் யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

 

ஒரே டி ஷர்ட் அணிந்து விவகாரமாய் போஸ் கொடுத்த விவேக் ஓபராய் - மல்லிகா ஷெராவத்!

Vivek Mallika S Hot Pose Kismat Love Paisa Dilli

விளம்பரத்துக்காக என்ன வேணாலும் செய்யலாம் என்பது சினிமாவில் விதி. அதுவும் பாலிவுட்டில் கேட்கவே வேண்டாம்.

முன்பு பரபர நடிகராக இருந்து இப்போது டல்லடித்துக் கொண்டிருக்கும் விவேக் ஓபராயும், மல்லிகா ஷெராவத்தும் இப்போது புதிதாக ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு: 'கிஸ்மத், லவ், பைசா, டில்லி'.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் உள்ள ஆர் சிட்டி மாலில் நடந்தது.

போஸ்டர்களுக்கு இவர்கள் இருவரும் கொடுத்த போஸ்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. இருவரும் சிகப்பு நிற டி சர்ட் ஒன்றை சேர்ந்து அணிந்து கொண்டு நின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் உள்ளாடை கூட அணியாமல் அப்படியே இந்த டிஷர்ட்டை மாட்டிக் கொண்டிருப்பது போலத்தான் தோற்றமளித்தது.

இருவரையும் இப்படி செம செக்ஸியாகப் பார்த்ததில் கிக்கேறிவிட்ட ஒரு ரசிகர், 'ஆப் கா அன்டர்வேர் கஹா ஹை' என்று குரல் எழுப்ப, அடடா, என்னமா வரவேற்பு கிடைத்திருக்கிறது நம்ம படத்தின் புதுவித போஸ்டர்களுக்கு என்று புளகாங்கிதத்துடன் ட்வீட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் விவேக்கும் மல்லிகாவும்!

 

நடிகைகளின் 'சேவையில்' இளம் கட்டுமஸ்து நடிகர்!

நல்ல உயரம். கட்டான உடல்... எப்பவும் ஃபிட்டான தோற்றம். பிரபல நடிகர்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்தவர்தான் நடிகர். விளம்பரங்களில் கூட வந்திருக்கிறார்.

ஆனாலும் நினைத்த அளவு சம்பாதிக்க முடியவில்லை. பேஷன் ஷோக்களில் ஆண் மாடலாக வாய்ப்புக் கிடைத்தது. ஒரு ரவுண்ட் வந்து பார்த்தார். அட, ஏக வாய்ப்புகள் வந்துவிட்டன. ஆனால் சினிமா ஹீரோவாக அல்ல... அந்தரங்க ஹீரோவாக!

சில முக்கிய நடிகைகள் தங்களின் பர்சனல் மாடலாகக் கூப்பிட்டார்களாம், நடிகரின் கட்டுமஸ்து உடலைப் பார்த்ததும். கொஞ்சமும் யோசிக்கவில்லை நடிகர்.

சினிமாவில் கூட கிடைக்காத பணமும், 'வாய்ப்பும்' நேரில் கிடைக்கும் சந்தோஷத்தில் ஈசிஆர் பங்களாக்கள் அல்லது கெஸ்ட் அவுஸ்கள் அடிக்கடி போக ஆரம்பித்துவிட்டார்.

நடிகரின் இப்போதைய ஒரே இலக்கு, உடம்பை பிட்டாக வைத்துக் கொள்வதில் மட்டுமே.

சுவர் இருந்தாதானே... ம்ஹூம்... மட்டமான மேட்டருக்கு ஒஸ்தியான உதாரணம் எதுக்கு!

 

20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடிக்க வரும் அமலா!

Amala Is Back With Shekar Kammula Movie

எண்பதுகளில் ஆரம்பித்து, தொன்னூறுகளின் ஆரம்பம் வரை முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை அமலா.

1992-ல் நாகார்ஜூனாவைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கியவர், இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகாலமாக விலங்குகள் வதைக்கு எதிரான இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

இப்போது பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முல இயக்கும் ‘லைப் இஸ் பியூட்டிபுல்' என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற அமலா கணவர் நாகார்ஜுனா கூறுகையில், "அம்மா வேடத்தில் நடித்தாலும் அமலாவைப் பார்த்தால் அழகான அக்கா மாதிரிதான் தெரிகிறார்," என்றார்.

தனது மறுபிரவேசம் பற்றி அமலா கூறுகையில், "இத்தனை நாட்களும் எனது மகன் அகிலை வளர்ப்பதிலும் சமூக சேவைகளிலும் பிசியாகி விட்டேன். இப்போது அகில் வளர்ந்து விட்டான். அவன் பக்கத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். தொடர்ந்து படங்களில் நடிப்பதா? வேண்டமா? என்று இன்னும் முடிவு செய்யவில்லை.," என்றார்.

 

50க்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்துவிட்ட ஏ.வி.எம்

Avm Has Produced More Than 50 Serial

சினிமா தயாரிப்பு நிறுவனம் சின்னத்திரையில் சாதனை படைப்பது சாதாரண விசயமில்லை. ஆனால் 175 திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.எம் நிறுவனம் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் 50க்கும் மேற்பட்ட தொடர்களை இயக்கி சாதனை படைத்துள்ளது.

தொலைக்காட்சி மட்டும் இல்லையென்றால் ஏ.வி.எம் நிறுவனம் என்றோ இல்லாமல் போயிருக்கும் என்று ஏ.வி.எம். சரவணன் ஒருமுறை

தொலைக்காட்சியில் பேட்டியளித்தபோது கூறினார். தொலைக்காட்சி நிறுவனங்களின் வளர்ச்சியைப் போலவே ஏ.வி.எம் நிறுவனத்தின் தொடர்களும் வளர்ச்சியடைந்துள்ளன என்றால் மிகையாகாது.

1986 ம் ஆண்டு தூர்தர்சனில் ஒளிபரப்பான ‘ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரகுவரன், தேவிலலிதா நடித்த அந்த தொடரின் கதை சிவசங்கரியுடையது. ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இதனை தொடர்ந்து நேற்றைய மனிதர்கள், நாணயம், முத்துக்கள், எனக்காகவா ஆகிய குறுந்தொடர்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பானது.

சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சன் தொலைக்காட்சியில் நிம்மதி உங்கள் சாய்ஸ் என தொடங்கிய ஏ.வி.எம், ஆச்சி இண்டர்நேசனல், சொந்தம், கலாட்டா குடும்பம், வாழ்க்கை, என தொடர்ந்தது. பின்னர் சூர்யா, ஜெமினி, பத்துக்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்து வெளியிட்டது. கலைஞர் டிவி தொடங்கப்பட்ட பின்னர் வைரநெஞ்சம், வைராக்கியம் என தொடர்கிறது. மா டிவி, ராஜ் டிவியிலும் எ.வி.எம் தொடர்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏவிஎம் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் 7500 எபிசோடுகள்வரை ஒளிபரப்பாகியுள்ளன என்று அந்த நிறுவனம் பெருமை பொங்க புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி உத்தரவிட்டா போதும்... - ராஜமவுலி

Rajamouli Ready Direct Superstar Rajini

எந்த நடிகரும் இவர் பேச்சுக்கு கட்டுப்படுவார் எனும் அளவுக்கு இன்று ஏக மவுசுடன் திகழ்கிறார் தெலுங்கு இயக்குநர் எஸ் எஸ் ராஜமவுலி.

ஆனால் அந்த ராஜமவுலியையும் தன் அன்புப் பிடிக்குள் வைத்திருக்கும் à®'ரே நடிகர்... வேறு யார்.. ரஜினி தான்.

நான் ஈ பார்த்துவிட்டு, ரஜினி பாராட்டியதை பெரிய விருதுக்கு சமமாகக் கருதுகிறார் ராஜமவுலி.

அவர் சொல்கிறார், "இந்தப் படத்துக்கு கிடைத்த பாராட்டுகளில் முக்கியமானது, ரஜினி சாருடையதுதான். அவரைப் போன்ற உண்மையான ரசிகரைப் பார்க்க முடியாது. எனக்கு பெரிய விருது கிடைச்ச மாதிரி உணர்கிறேன்," என்றவரிடம்,

தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிச்சவர் யார்? யாரை இயக்க வேண்டும் என்பது உங்கள் கனவு? என்று கேட்டோம்.

ராஜமவுலி கூறுகையில், "இரண்டு கேள்விக்குமே à®'ரே பதில்தான். எனக்குப் பிடிச்ச à®'ரே ஹீரோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரை இயக்க வேண்டும் என்பது என் கனவு.

ரஜினியை சந்திக்கும் அற்புதமான தருணம் எனக்கு வாய்த்தது. என் கனவு நாயகனே, நான் இயக்கிய படத்தை என்னுடன் பார்த்துப் பாராட்டியதை விட, எனக்கு என்ன பெருமை வேண்டும்?

என்னுடைய 'மகதீரா' பார்த்துட்டு என்னை போன்ல கூப்பிட்டு பாராட்டினார்.

இப்ப 'நான் ஈ' படத்தை என்னோடதான் பார்த்தார். 'நீங்க வானத்தைத் தொட்டுட்டீங்க'னு உற்சாகமா பாராட்டினார்.

நான் பார்த்துப் பார்த்து சிலிர்க்கும் அற்புதமான கலைஞர் ரஜினி சார். அவர் பாராட்டினதுல எனக்குத் தலைகால் புரியலை என்பதுதான் உண்மை,'' என்றார்.

அப்ப நீங்கதான் ரஜினியின் அடுத்த சாய்ஸா...?

அதை அவர்தான் சொல்ல வேண்டும். சொல்லக்கூட வேணாம்.. உத்தரவிட்டாலே போதும்... நான் ரெடி!!

 

தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது, ஜெ. மீதான மரியாதை குறைந்துவிட்டது: நடிகர் கார்த்திக்

Lost Faith Jayalalithaa Actor Karthik

நெல்லை: தமிழகத்தில் அராஜக ஆட்சி நடப்பதாக மறுகால்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலையின் குடும்பத்தாரை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

வானுமாமலையி்ன் மனைவி்க்கு ஆறுதல் கூறிய அவர் ரூ.50,000 நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் வானுமாமலை சுடப்பட்ட கோவில் முன்பு இருந்து டிராக்டரில் நின்றபடி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் ஒரு குடும்பம் தெருவில் நிற்கின்றது. முதல்வர் மீது மரியாதை வைத்திருந்தேன். தற்போது அது மங்கிவிட்டது. மணல் கொள்ளை என்று கூறுபவர்கள் கோடி, கோடியாகக் கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பதை பிடிக்க முடியுமா? இன்ஸ்பெக்டர் வெறும் அம்பு மட்டும்தான், அதனை எய்தவர்களின் விபரம் விரைவில் வெளிவரும்.

ரூ.3 லட்சமும், வேலையும் கொடுக்க முடிந்தவர்களுக்கு குழந்தைகளின் தந்தையை கொடுக்க முடியுமா? இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். வானுமாமலை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது. இதற்காகத்தான் ஓட்டு போட்டோமா என்று மக்கள் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றார்.

 

இவரோட அலப்பரைக்கு அளவே இல்லையா?

Vijay Adhiraj Struggling Shooting Spot

சன் டிவியில் தொகுப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகராக வலம் வந்த விஜய் ஆதிராஜ் இப்போது இயக்குநராகிவிட்டார். ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் புத்தகம் படத்தை இயக்கிவரும் விஜய் ஆதிராஜ் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அலப்பரைக்கு அளவே இல்லையாம். படப்பிடிப்பு தளமே பவர் ஸ்டாருக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறதாம்.

சின்னத்திரையில் நடிக்கும்போதே கேமிராவை விட்டால் ஏ.சி. ரூம். அதைவிட்டு வெளியே வந்தால் ஏ.சி கார் என்று எந்நேரமும் ஏ.சி.யிலேயே குடியிருப்பார். இயக்குநரானபின்னர் வெயிலியே காயவேண்டியிருக்கிறது. 'நம்மால ஆகாதுப்பா இதெல்லாம்' என்று முதல் நாளே அலுத்துக் கொண்ட விஜய் ஆதிராஜ், தனக்கென்று குடை பிடிக்க தனி ஆளையே போட்டுவிட்டார் அப்புறம்.

ஸ்பாட்டில் இவர் அங்கும் இங்கும் ஓடியாடி டைரக்ட் பண்ணிக் கொண்டிருக்க, குடை பிடிக்கிற ஆள் இவர் ஓடும் திசையெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறாராம். இந்த காட்சியை மட்டுமே தனியாக ஷூட்டிங் எடுத்து வெளியிட்டால் இந்த வருடத்தின் மெகா வசூல் காமெடிப்படமாக இருக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இதுதான் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்பதோ !

 

'உங்க பலான வீடியோக்களை நீக்க முடியுமா...?'; 'ம்ஹூம்.. என் சொத்தே அதான்!' - சன்னி லியோன்

Sunny Leon S Producer Urged Remove Her Porn Videos    | ஜிஸ்ம் 2  

மும்பை: சன்னி லியோனை கஷ்டப்பட்ட முழுக்கப் போத்தியும், அப்பப்போ கொஞ்சம் உரிச்சியும் காட்டி காசு பார்க்க பூஜா பட் முயற்சித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இணையதளங்களில் அவரது ஆபாசப் பட வீடியோக்கள் சக்கைப் போடு போடுகின்றன. காசும் குவிகிறதாம்.

சன்னி லியோனி அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரபல ஆபாசப் பட நடிகை. அவர் நடிக்காக ஆபாசப் படங்களே இல்லை எனும் அளவுக்கு இணையத்தில் பல ஆயிரம் வீடியோக்கள், படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இவரது பூர்வீகம் மும்பைதான். எனவே அங்கு நிர்வாணத்தை மட்டுமே அதிகம் அறிந்து அனுபவித்து வந்த சன்னி லியோனை, இழுத்துப் போர்த்தி மும்பையில் பாலிவுட் நாயகியாக அறிமுகம் செய்துள்ளார் பூஜா பட். சன்னி லியோனின் தொழில், அவரது ஆபாச வீடியோக்களின் ரேஞ்ச் எல்லாம் அறிந்த பிறகுதான் அவரை இங்கே அழைத்து வந்தார்கள்.

இப்போது சன்னியின் செக்ஸி உடம்பு, அவர் ஜிஸ்ம் 3 படத்தில் காட்டியிருக்கும் எக்குத் தப்பான கவர்ச்சி ஆகியவற்றைப் பார்த்த சினிமா ரசிகர்கள், 'அட எதுக்கு எட்டி எட்டிப் பார்க்கணும்... ஒரு எட்டு கூகுளைத் தட்டினா, ஒரு பிட்டு துணி கூட இல்லாம மொத்தமா அம்மணியோட வீடியோ, கேலரியைக் கொட்டிடுமே' என இணையத்தை நோண்டி பரவசமடைய ஆரம்பித்துள்ளனர்.

சன்னி லியோனுக்கு சொந்தமாக ஏகப்பட்ட இணையதளங்கள் உள்ளன. ஆபாசப் பட கேலரி, ஆபாச வீடியோக்கள் என அவரே ஆபீஸெல்லாம் போட்டு தன் நிர்வாணத்தையும், படுக்கையறை சமாச்சாரங்களையும் அப்லோட் செய்து வருகிறார். இதற்கென ஏகப்பட்ட ரசிகர்கள். சந்தா பணமே டாலர்களில் கொட்டுகிறது.

இப்போது ஜிஸ்ம் 2 தயாரிப்பாளரின் பிரச்சினையும் இந்த ஆபாச வீடியோ, கேலரிகள்தான். தம்மாத்துண்டு துணி கூட இல்லாமல் சன்னி லியோனைத் தரிசிக்கும் வாய்ப்பு மிக மிக சுலபத்தில் கிடைக்கும்போது, அரை குறை ஆடையுடன், அல்லது சிவப்புச் சேலை போர்த்திக் கொண்டு ஜிஸ்ம் 2ல் அவர் வருவதை ரசிப்பார்களா என்ற கேள்வி அவருக்கு. அதுமட்டுமல்ல. சமீபத்தில் வெளியான ஜிஸ்ம் 2 ஸ்டில்களைக் கூட யாரும் பெரிதாக பார்க்கவே இல்லையாம்.

இதன் விளைவு, நேற்று முன்தினம் மும்பை வந்திறங்கிய சன்னி லியோனிடம் விஷயத்தைச் சொல்லி, 'யம்மா கண்ணு.. கொஞ்ச நாளைக்கு அந்த பலான மேட்டர் படங்கள், கேலரிகளை ப்ளாக் பண்ண முடியுமா... யாவாரம் பாதிக்குமேன்னு கவலையா இருக்கு!" என்று கேட்டுக் கொண்டாராம்.

உடனே பதறியடித்த சன்னி லியோன், "நோ நோ... என்னோட சொத்தே அதுதான். ஜிஸ்ம் படத்து சம்பளத்தை விட அதில் நான் அதிகமா சம்பாதிக்கிறேன். அது வேற, இது வேற...", என்று கண்களை அகல விரித்துப் பேச, 'பேசாம அந்தப் படங்களையே டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடலாம் போலிருக்கு' என முணுமுணுத்தபடி சென்றாராம்!

 

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா!

Rajesh Khanna The Only Super Star With 15 Hits

இந்தியத் திரையுலகம் எத்தனையோ சாதனை நடிகர்களைக் கண்டுள்ளது. அவர்களுக்கு நிகரான நடிகைகளையும் கண்டுள்ளது. ஆனால் ராஜேஷ் கன்னாவுக்கு நிகரான ஒருவர் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி பெரிய பெரிய ஸ்டார்கள் வந்தார்கள் இருந்தார்கள் என்றாலும் முதல் முத்திரையைப் பதித்த முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மட்டுமே.

1965ல் பாலிவுட்டில் நடிக்கப் புகுந்த ராஜேஷ் கன்னா, ஆரம்பத்தில் நடித்த 3 படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் யாருடைய பார்வையிலும் அவர் விழவில்லை. ஆனால் ஆராதனாதான் அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது. சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்படத் தொடங்கினார். பெண் ரசிகர்கள் இவருக்குப் போல எவரும் இல்லை. எங்கு போனாலும் துரத்தித் துரத்தி இவரை ரசித்துப் பார்த்தார்கள். இவரது காரைக் கூட விடாமல் துரத்தித் துரத்தி முத்தமிட்டு மகிழ்ந்தனர். கார் டயரில் ஒட்டியிருந்த மண்ணைக் கூட துடைத்து எடுத்துச் சென்றனர்.

ராஜேஷ் கன்னாவின் திரையுலக வாழ்க்கையே ஒரு சினிமாப் படம் போலத்தான் இருந்தது. மும்பையில் கஷ்டமான நிலையில் இருந்து வந்த கன்னா, பிலிம்பேர் இதழ் நடத்திய ஒரு திறமைப் போட்டியில் கலந்து கொண்டார். 1000 பேர் கலந்து கொண்ட அப்போட்டியில் வெற்றி பெற்றார்.

அதன் பிறகுதான் அவருக்கு நடிக்க வாய்ரப்பு கிடைத்தது. 1966ல் ஆக்ரி காட்டில் நடித்தார். பின்னர் காமோஷியில் நடித்தார். அதன் பிறகுதான் வரலாறு படைத்த ஆராதனா 1969ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் பாலிவுட்டைப் போலவே சென்னையிலும் தமிழகத்திலும் ஓடி பெரும் வசூல் மற்றும் சாதனை படைத்த படமாகும். அப்படத்தின் பாடல்கள் இன்று வரை புகழ் பெற்றவை. அக்காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஆராதனா பாடல்கள்தான்.

ஆராதனா படத்திற்குப் பிறகுதான் சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழியோடு அழைக்கப்பட்டார் ராஜேஷ் கன்னா. இந்தியத் திரையுலகிலேயே சூப்பர்ஸ்டார் என்ற பெயரைப் பெற்ற முதல் நடிகர் இவர்தான்.

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகரும் இவர்தான். இந்த நிமிடம் வரை இந்த சாதனையை இதுவரை இந்தியாவில் எந்த நடிகரும் முறியடிக்கவில்லை. முறியடிக்க முடியவில்லை.

காதி பதாங், சபர், இத்திபாக், ஆன் மிலோ சஜ்னா, ஹாத்தி மேரே சாத்தி ஆகியைவ ராஜேஷ் கன்னாவின் சூப்பர் ஸ்டார் பெருமையை மேலும் மேலும் வலுப்படுத்திய மெகா ஹிட் படங்களாகும்.

அதேபோல ராஜேஷ் கன்னாவுடன், அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ஆனந்த் படமும் இன்று வரை ராஜேஷ் கன்னாவின் மணிமகுடப் படங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூகர், ஆஷா பரேக், டிம்பிள் கபாடியா ஆகியோர் இணைந்து படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.

நிச்சயம், ராஜேஷ் கன்னாவின் மரணம்,பாலிவுட்டுக்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகுக்கே பெரும் இழப்புதான்...!

 

50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அமைதிப்படை -2

Manivannan Direct His 50th Movie

எண்பதுகளின் இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு படங்களை தனது இயக்கத்தில் வெளியிட்ட பெருமைக்குரியவர் மணிவண்ணன்.

முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, விடிஞ்சா கல்யாணம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற படங்களை அப்படித்தான் ஆரம்பித்தார்.

இவரது படங்கள் தரத்திலும், எள்ளலிலும் கொடிகட்டிப் பறந்தவை. கோபுரங்கள் சாய்வதில்லையாக இருந்தாலும் சரி, இளமைக்காலங்களானாலும் சரி... ரசித்துப் பார்த்துவிட்டு வரலாம்.

தமிழில் த்ரில்லர் படங்களுக்கு தனி மரியாதை தந்தது இவரது நூறாவது நாள் படம்தான்.

மணிவண்ணனின் அமைதிப்படை, நையாண்டி - நக்கலின் உச்சம் எனலாம். அரசியலை இவர் அளவுக்கு அறிவார்த்தமாக சினிமாவில் 'சடையர்' செய்தவர்கள் குறைவு.

இதுவரை 49 படங்களை இயக்கியுள்ளார் மணிவண்ணன். தோழர் பாண்டியன் படத்துக்குப் பிறகு படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். நடிப்பில் மட்டும் கலக்கி வந்தார். மேலும் தனது அரசியல் - தமிழுணர்வை நாம் தமிழர் கட்சியின் மேடைகளில் வெளிப்படுத்தி வந்தார்.

ஈழத் தமிழர் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவராகத் திகழ்கிறார் மணிவண்ணன். இன்றைய இயக்குநர்கள் சீமான், சுந்தர் சி என பெரிய பட்டாளமே மணிவண்ணனிடமிருந்து வந்தவர்கள்தான்!

உடல்நிலை காரணமாக நடிப்பையும் குறைத்துக் கொண்ட மணிவண்ணன், இப்போது மீண்டும் ஆரோக்கியத்துக்குத் திரும்பியுள்ளார்.

தனது 50வது படமாக அமைதிப் படையின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக இவரது ஆஸ்தான நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். படத்தின் தலைப்பை இப்போதைக்கு இருவரும் இணைந்து கலக்கிய அமைதிப்படை பார்ட்-2 என பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு மாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.

அமைதிப்படை படத்தில் உள்ளதுபோல், வழக்கமான கேலி, கிண்டலை கலந்து திரைக்கதை அமைக்கப்படடுள்ளதாக மணிவண்ணன் கூறியுள்ளார். தற்போதை அரசியலில் ஈழம் தொடங்கி, ஸ்பெக்ட்ரம் வரையிலான பல சம்பவங்களையும் கலந்து காமெடி படமாக உருவாக்கப் போகிறாராம்.

 

இங்கிலீஷ் விங்கிலீஷில் அஜீத் இல்லை... மாதவன்தான்!

Ajith Not English Winglish

ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்திருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் இந்திப் படத்தில் அஜீத் நடிப்பதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்றும், அந்த வேடத்தில் மாதவன்தான் நடிக்கிறார் என்றும் இன்று செய்தி வெளியாகியுள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம் இந்த இங்கிலீஷ் விங்கிலீஷ். இந்தப் படத்தில் தமிழ் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார். உடன் அடில் ஹூஸைன், மெஹ்தி நெபோ நடிக்கிறார்கள்.

பிரபல பாலிவுட் இயக்குநர் பால்கியின் மனைவி கவுரி ஷிண்டே இயக்கும் இந்தப் படத்தில், அஜீத் குமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிக்கவிருப்பது மாதவன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படம் இன்னும் வெளிவராத நிலையில், கனடாவின் புகழ்பெற்ற டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மர்லின் மன்ரோவுக்கு ஆண்களை விட் பெண்களையே பிடிக்கும்?

Did Marilyn Monroe Only Love Women

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான மர்லின் மன்ரோவைப் பிடிக்காத ஆண்களே இருக்க முடியாது. ஆனால் அவருக்கோ பெண்களை மட்டுமே பிடிக்குமாம். தன்னைப் போல அழகு படைத் பல பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவு கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார் மர்லின் மன்ரோ. அதைக் கேட்டு உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரைப் பற்றிய செய்திகள்தான் அன்று முழுவதும்.

உலகம் முழுவதும் மர்லின் மன்ரோவுக்கு கோடானு கோடி ரசிகர்கள் இருந்தனர்கள். இவர்களில் ஆண்கள்தான் அதிகம். ஆனால் மன்ரோவுக்கு ஆண்களை விட பெண்களையே அதிகம் பிடித்ததாம். பெண்களுடன்தான் அவர் நெருக்கமான நட்பையும் வைத்திருந்தாராம். இன்னும் ஒரு படி மேலே போய் சில பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவும் கொண்டிருந்தாராம்.

மூன்று முறை திருமணமாகி, மூன்று முறை விவகாரத்து செய்தவர் மர்லின் மன்ரோ. இதற்கு அவரது லெஸ்பியன் பழக்கம்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். அவருக்கு ஆண்களுடனான இயற்கையான செக்ஸ் உறவு பிடிக்கவில்லையாம். மாறாக, பெண்களுடன் செக்ஸ் இன்பம் காணவே அவர் பெரிதும் விரும்பினாராம். இதனால்தான் திருமண வாழக்கையில் அவரால் நிலைக்க முடியவில்லை என்கிறார்கள்.

அக்காலத்தில் பிரபலமான ஜோன் கிராபோர்ட், பார்பரா ஸ்டான்விக், மெர்லின் டயட்ரிச், எலிசபெத் டெய்லர் ஆகியோருடன் மன்ரோ லெஸ்பியன் உறவு வைத்திருந்ததாக அவரே ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். இவர்கள் போக நதாஷா லிடஸ், பாலா ஸ்டிராஸ்பெர்க் ஆகியோருடனும் அவருக்கு லெஸ்பியன் உறவு இருந்ததாம்.

இதுதொடர்பான தகவல்களை மிஷல் மார்கன் விரைவில் வெளியிடவுள்ள Marilyn Monroe: Private And Undisclosed என்ற நூலில் தெரிவித்துள்ளார்.

இந்த நூலில், மர்லின் மன்ரோ மீது மோகம் கொண்டு திரிந்தோர் எண்ணிக்கை எண்ணி மாள முடியாதது. ஆனால் அவருக்கோ ஆண்கள் மீது துளியும் ஈடுபாடு வரவில்லை. அவருக்கு ஆண்களுடன் உறவு கொள்வதில் பிடித்தமும் இல்லை, அதை அவரால் சரியாக செய்யவும் முடியவில்லை. மாறாக, அவர் உறவு வைத்திருந்த பெண்களிடம் பெரும் இன்பத்தை துகித்ததாக அவரே கூறியுள்ளார் என்று கூறியுள்ளார் மிஷல்.

புத்தகத்தில் இன்னும் என்னவெல்லாம் இருக்கப் போகிறதோ...

 

உங்கவீட்டுப் பிள்ளையா நினைச்சி என்னை மன்னிச்சிடுங்க - ஹன்ஸ்ராஜ் சக்சேனா!

Saxena Apologises His Past Behavior

சென்னை: 'இது சன் டிவி படம். இங்க வேற மீடியாவுக்கு என்ன வேலை? உங்களை எவன் கூப்பிட்டான்...' - சன் டிவி படங்கள் ரிலீஸின் போதெல்லாம் மீடியாக்காரர்கள் எதிர்நோக்கிய அவமானம் இது. அதிலும் எந்திரன் நேரத்தில் உதாசீனத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டவர் சக்சேனா.

ஆனாலும் மீடியாக்காரர்களில் பெரும்பாலானோர் இவரைப் போன்றவர்களுக்காக தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. பாரபட்சமில்லாமல்தான் எழுதி வருகின்றனர் இன்னமும்!

ஆனால் காலச் சக்கரம் சுழலாமலா போய்விடும்...

இப்போது யாரை உதாசீனப்படுத்தினாரோ அவர்களையெல்லாம் மீண்டும் தேடி வர வேண்டிய நிலை சக்ஸேனாவுக்கு. சன் பிக்சர்ஸிலிருந்து ராஜினாமா செய்த பின், சில மாதங்கள் அமைதியாக இருந்தவர், இப்போது தன் பெயரில் சாக்ஸ் பிக்சர்ஸ் என்று புது நிறுவனம் தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் சார்பில் ப்ரியாமணி நடித்த சாருலதா என்ற படத்தை வெளியிடுகிறார் (சூர்யாவின் மாற்றானுக்கு போட்டியாம்!!). அடுத்து தமிழ் - தெலுங்கு இருமொழிப் படமொன்றையும் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று சென்னை சத்யம் அரங்கில் நடந்த நான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சக்ஸேனாவும் வந்திருந்தார்.

அப்போது அவர் பேசுகையில், "கடந்த ஆண்டுகளில் நான் எப்படியெல்லாமோ நடந்து கொண்டேன். முன்பு நான் மீடியாவை நான் புறக்கணித்தது உண்மைதான். அதன் பின்னணி வேறு. நான் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க.. நான் உங்க வீட்டுப் பிள்ளை. ஆதரவு கொடுங்க," என்றார்!

இது எத்தனை நாளைக்கோ!

 

'பிறந்த நாள் விருந்தெல்லாம் ஓகே.. மனைவி எங்கேப்பா?'

http://tamil.oneindia.in/img/2012/07/28-dhanush-birthday-300.jpg
ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!

நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள்.

இருக்கட்டும்.

இன்று தனுஷுக்குப் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தமன்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர்.

சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!
 

சூர்யா - கார்த்தி பெயரைப் பயன்படுத்தி சோனா - சோனியா அகர்வாலிடம் தர்மஅடி வாங்கிய இளைஞர்!

http://tamil.oneindia.in/img/2012/07/28-sonia-sona21-300.jpg
தன்னை பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தம்பி என்று சொல்லிக் கொண்டு திரிந்த சரவணன் என்ற இளைஞருக்கு நடிகைகளிடம் தர்ம அடி கிடைத்துள்ளது.

நடிகைகள் சோனியா அகர்வால் மற்றும் சோனாவிடம்தான் இந்த இளைஞர் சிக்கி அடி வாங்கியுள்ளார்.

இந்த இளைஞர் முதலில் பிரபல மால் ஒன்றில் வேலை பார்த்தவராம். எப்படியோ அவர் சூர்யா- கார்த்தி அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

சூர்யா, கார்த்தி பெயரைச் சொல்லி திரையுலகில் இருப்பவர்களின் கைபேசி எண், சமூக வலைதளங்களில் நட்பு எனப் பெற்று அதை தவறாக பயன்படுத்தி வந்தாராம்.

'என்ன பாக்கனும்னா என் அண்ணனுங்க அலுவலகத்துக்கு வாங்க. நான் அங்க தான் இருப்பேன்' என்று கூறி அனைவரையும் நம்ப வைத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சோனியா அகர்வாலை பார்ட்டியில் தற்செயலாக சந்தித்த சரவணன், அவரிடம் ஏதோ தவறாகக் கூறியிருக்கிறார். அவர் தமிழில் பேசியதால் புரிந்து கொள்ளாத சோனியா, அதை சக நடிகை சோனாவிடம் அதை அப்படியே ஒப்பிக்க, சோனாவோ டென்ஷனாகி சரவணனை போட்டு அடித்ததாகக் கூறப்படுகிறது.

சரவணன் கூறியதன் அர்த்தத்தை சோனா விளக்க சோனியா அகர்வாலும், அவரது தம்பியும் ஹோட்டலில் அனைவர் முன்னிலையிலும் சரவணனை புரட்டியெடுத்துவிட்டார்களாம்.

ஹோட்டல் ஊழியர்கள் வந்து தடுத்து சூர்யா, கார்த்திக்கு தகவல் சொன்ன பிறகு, கொஞ்ச நேரத்தில் சண்டை சமாதானமானதாம்.

சரி, யார் இந்த சரவணன்?
 

20 நிமிடங்களில் 20 செய்திகள்!

சின்னச் சின்ன செய்திகள் சுவாரஸ்யத்தை தரக்கூடியவை. அதுபோன்ற ஒரு செய்தி நிகழ்ச்சி சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. கிரிக்கெட்டில் மட்டும்தான் 20-20 இருக்க முடியுமா என்ன? நாங்களும் 20 நிமிடத்தில் 20 செய்திகளைத்தருவோம் என்று களம் இறங்கியிருக்கின்றனர் சத்தியம் தொலைக்காட்சியினர்.

"சத்தியம் 20-20 செய்திகள்'' திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் இடம்பெறும் சூடான 20 செய்திகளை 20 நிமிடங்களில் தொகுத்து ஒரு செய்திக் கதம்பமாக வழங்குகிறார்கள். சர்வதேச அளவில் தொடங்கி மாவட்டம் வரையிலான செய்திகளை இந்த 20-20 செய்திகளில் தெரிந்துகொள்ள முடியும்.
 

சிங்கப்பூரில் மாற்றான் இசை வெளியீடு - ஆகஸ்ட் 9-ம் தேதி நடக்கிறது!

http://tamil.oneindia.in/img/2012/07/28-maatran-300.jpg
சூர்யா நடித்துளள மாற்றான் படத்தின் இசை வெளியீட்டை சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.

கல்பாத்தி அகோரம் தயாரிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பெரிய படங்களின் இசை வெளியீட்டை வெளிநாடுகளில் பிரமாண்டமாக நடத்தி, அதன் ஒளிபரப்பு உரிமையை பெரிய விலைக்கு விற்பது இன்றைக்கு சகஜமாகிவிட்டது.

அந்த வகையில் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டையும் சிங்கப்பூரில் நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 9-ம் தேதி இந்த விழா நடக்கிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.

தமிழ் சினிமா நட்சத்திரங்கள், சாதனையாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
 

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வது தப்பா! - கேட்கிறார் மம்தா

http://tamil.oneindia.in/img/2012/07/28-mamta-mohnadas-300.jpg
சென்னை: நடிகைகள் திருமணமான பிறகும், நடிப்பைத் தொடர்வது தவறா என்று கேட்டுள்ளார் நடிகை மம்தா.

நடிகை மம்தாமோகன் தாஸ் கடந்த ஆண்டு தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் தற்போது நான்கு படங்கள் கைவசம் உள்ளன.

தமிழில் தடையறத் தாக்க படத்திலும் நடித்தார்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பது குறித்து அவரிடம் பேசியபோது, "திருமணத்துக்குப் பின் சினிமாவில் தொடரக் கூடாது என நடிகைகளுக்கு மட்டும் என்ன சட்டமா.. ஆண்கள் நடிக்கத்தானே செய்கிறார்கள். திருமணம் ஆன பிறகும் நடிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இனி ஆண்டுக்கு மூன்று படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்," என்றார்.
 

ஆன்மீகத்திற்கு 'ஷிப்ட்' ஆன தனுஸ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வந்தார்!

http://tamil.oneindia.in/img/2012/07/29-thanushree-dutta-300.jpg
பெங்களூர்: ஆன்மீகத்திற்கு மாறி விட்டதாக கூறப்பட்ட இளம் நடிகை தனுஸ்ரீ தத்தா மறுபடியும் நடிக்க வந்துள்ளார். இந்த முறை கன்னடத்தில் நடிக்க போயிருக்கிறார்.

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளைப் படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. அதில் ஆண்களை வெறுக்கும் பெண்ணாக நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் திடீரென ஆன்மீகத்திற்கு மாறினார். சினிமாவில் தான் பெரும் சிரமப்பட்டு விட்டதாகவும், இங்கு எல்லாமே போலி என்றும் அதிரடியாக கூறிய அவர் சினிமாவால் தான் இழந்தது அதிகம் என்றும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் மொட்டை போடவும் முடிவு செய்தார். ஆனால் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியதால் மொட்டையை மட்டும் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் மறுபடியும் நடிக்க வந்து விட்டார் தத்தா. கன்னடத்தில் உருவாகும் ஏனிது மனசல்லி என்ற படத்தில் நடிக்கிறாராம் தத்தா.

இருப்பினும் இப்படத்தில் தத்தாவின் தங்கச்சி இஷிதாதான் அறிமுகமாகிறாராம். முக்கிய வேடத்தில் தத்தாவும் நடிக்கவிருக்கிறார். ஏன் திடீரென மறுபடியும் வந்து விட்டீர்கள் என்று தத்தாவிடம் கேட்டால், என் தங்கச்சி இப்போதுதான் நடிக்க வந்துள்ளாள். அவளுக்கு இது புதுசு. எனவேதான் அவளுக்கு ஒத்தாசையாக இருக்கப் போகிறேன் என்றார்.

அது சரி, இவர் பட்ட கஷ்டத்தை, இவரது தங்கையும் படட்டும் என்ற நோக்கில் உதவிக்கு இருக்கிறாரோ என்னவோ...
 

கமல்ஹாசன் படத்தை மீண்டும் இயக்குகிறார் சக்ரி டோலட்டி?

http://tamil.oneindia.in/img/2012/07/29-kamal-chakri-toleti-300.jpg
கமல்ஹாசனை வைத்து உன்னைப் போல் ஒருவன் என்ற விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த சக்ரி டோலட்டி மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். தலைவன் இருக்கின்றான் படத்தை இவர்கள் இருவரும் இணைந்து கொடுக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

சக்ரி டோலட்டியின் லேட்டஸ்ட் படமான பில்லா 2 பாக்ஸ் ஆபீஸில் இரு வேறு விதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் தற்போது வசூல் குறைய ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ரசிகர்களுக்குப் பிடித்துப் போன இப்படம் மற்றவர்களைக் கவரத் தவறி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சக்ரி டோலட்டி அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள். அது கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்று கூறப்படுகிறது.

தலைவன் இருக்கின்றான் பட இயக்கம் தொடர்பா சக்ரியுடன் பேச்சு நடந்துள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசனுடன் நல்ல நட்பில் இருப்பதோடு, உன்னைப் போல் ஒருவனை ஹிட் படமாக்கியவர் என்பதாலும் சக்ரிக்கே தலைவன் இருக்கின்றான் படம் கிடைக்கும் என்று தெரிகிறது.

சக்ரி சலங்கை ஒலியில் கமல்ஹாசனை பாடாய்ப்படுத்திய குட்டிப் பையன் என்பது நினைவிருக்கலாம். இப்போது இயக்குநராகியுள்ள இவர் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

மறுபக்கம், தலைவன் இருக்கின்றான் படத்தை கமல்ஹாசனே இயக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. விஸ்வரூபம் படம் வெளியாகும் வரை இதுகுறித்து தெளிவு ஏற்படாது என்றே தெரிகிறது. இருப்பினும் இப்போதைக்கு சக்ரியின் பெயர்தான் முன்னணியில் உள்ளதாக கூறுகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான் படத்தைத் தயாரிப்பது ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதன் மூலம் தசாவதாரம் படத்திற்குப் பின்னர் கமலும், ஆஸ்கரும் மீண்டும் இணைகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான், ஊழல், கருப்புப் பணம் குறித்த கதை என்பதை கமல்ஹாசனே பூடகமாக ஏற்கனவே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
 

ஸ்ரீதேவி படத்தில் அஜீத்!

http://tamil.oneindia.in/img/2012/07/29-sridevi-ajith-300.jpg
ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் படத்தில் அஜீத் முக்கிய ரோலில் தலை காட்டவுள்ளாராம்.

இது கெஸ்ட் ரோல் என்றாலும் கூட முக்கியமான ரோலாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். பால்கி தயாரிப்பில், கெளரி ஷிண்டே இயக்கத்தில், ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது.

இதில் அஜீத் கெஸ்ட் ரோலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பகுதிகளை சமீபத்தில் படமாக்கியுள்ளனராம். ஸ்ரீதேவியின் ரசிகர் அஜீத் என்பதால் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் ஒத்துக் கொண்டாராம் அஜீத்.

தமிழ்ப் பதிப்பில் அஜீத் நடித்துள்ளாராம். இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பலில் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைக்கு வருகிறது.
 

அதுக்குள்ள ஏன் முத்திரை குத்துறீங்க... பார்வதி ஓமனக்குட்டன் விசனம்!

http://tamil.oneindia.in/img/2012/07/29-parvathy-omanakutan-300.jpg
நான் நடிச்சதே ஒரே ஒரு படம்தான். அதற்குள்ளாகவே என்னை ராசியில்லாத நடிகை என்று கூறுவது நியாயமா என்று விசனத்துடன் கேட்கிறார் பார்வதி ஓமனக்குட்டன்.

கேரளத்து பார்வதி தமிழில் பில்லா 2 படம் மூலம் நடிக்க வந்தார். நடிக்க வந்த முதல் படத்திலேயே அவருக்குக் கெட்ட பெயராகி விட்டது. பில்லா 2 படம் குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருவதோடு, பார்வதி நடிச்ச ராசிதான் படம் இப்படியாகிப் போச்சு என்றும் பேச ஆரம்பித்துள்ளனராம்.

இது பார்வதியின் காதுகளையும் எட்ட கடும் கவலைக்குள்ளாகியுள்ளாராம் பாரு. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நடித்ததே ஒரு படம்தான். அது சரியாகப் போகவில்லையென்றால் பல காரணங்கள் இருக்கலாம். அதற்காக என்னை ராசியில்லாத நடிகை என்று கூறினால் எப்படி, இது நியாயமே இல்லையே என்று விசனப்படுகிறாராம்.

மேலும், எனக்கு இந்த ராசி, சென்டிமென்ட் இதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. திறமையை மட்டுமே நம்புபவள் நான். எனவே ராசியில்லாத நடிகை என்று என்னைக் கூறாதீர்கள் ப்ளீஸ் என்று கையெடுத்துக் கும்பிடாத குறையாக கேட்டுக் கொள்கிறார் பார்வதி.

இன்னும் ரெண்டு படம் பார்த்துட்டுக் கருத்தைச் சொல்லுங்கப்பா ஜோசியர்களே...!