ஸ்ரேயா படத்துக்கு தடை கோரும் காங்கிரஸ்

Congress Wants Ban On Shriya Movie

சென்னை: நடிகை ஸ்ரேயா நடித்துள்ள ஆங்கிலப் படமான மிட்நைட் சில்ட்ரனை இந்தியாவில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இயக்குனர் தீபா மேத்தா பிரபல நாவல் ஆசிரியர் சல்மான் ருஷ்டியின் நாவலான தி மிட்நைட் சில்ட்ரன்ஸை ஆங்கிலத்தில் படமாக எடுத்துள்ளார். இதில் ஸ்ரேயா சரண், சித்தார்த், அனுபம் கேர், சபானா ஆஸ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டொரண்டோ திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படத்தைப் பார்த்தவர்கள் அருமையாக வந்திருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.

ஆனால் படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மோசமானவராகக் காட்டியுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் படத்தில் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இல்லாமல் காண்பிக்கப்பட்டுள்ளது அரசியல் தலைவர்களை காயப்படுத்தியுள்ளது என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் ரிலீஸ் செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

 

பாரதிராஜா விழாவுக்கு வர ரஜினி, கமல் சம்மதம்: அப்போ ஸ்ரீதேவி?

Rajini Kamal Sridevi Come Together For Bharathiraja

சென்னை: தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசையை ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியை வெளியிட வைக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. இந்த விழாவுக்கு வர ரஜினியும், கமலும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜா தனது மகன் மனோஜ், கார்த்திகா, இனியா உள்ளிட்டோரை வைத்து எடுத்துள்ள படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்த படத்திற்கு ஜி.வி, பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளார் பாரதிராஜா. யாரை வைத்து இசையை வெளியிடலாம் என்று யோசித்தவருக்கு தன்னுடைய 16 வயதினிலே படத்தில் நடித்த முக்கியமான 3 பேரின் நினைவு வந்தது. அந்த 3 பேர் வேறு யாருமில்லை ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி தான்.

உடனே இது குறித்து ரஜினி, கமலிடம் தெரிவிக்கவே அவர்களும் சந்தோஷமாக ஓ.கே. சொல்லிவிட்டனர். ஸ்ரீதேவி என்ன சொன்னார் என்று தெரியவில்லை. இருப்பினும் ரஜினி, கமல் வரும் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்றா சொல்லப் போகிறார் அவர்.

ஸ்ரீதேவி ரஜினி மற்றும் கமலுக்கு ஏற்ற ஜோடியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே லடாய்?

Cold War Between Aishwarya Rai Jaya Bachchan

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப், ஜெயா பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் மணந்ததில் இருந்து குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்று இதுவரை எந்த செய்தியும் வெளியானதில்லை. விழாக்களில் மாமனார், மாமியார், கணவருடன் ஐஸ்வர்யா கலந்து கொண்டு குடும்த்தோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்.

இந்நிலையில் ஐஸுக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் விளம்பர நிகழ்ச்சிக்காக குஜராத் சென்ற ஐஸ் அம்மாநிலத்தின் வளர்ச்சியையும், மோடியையும் புகழ்ந்து தள்ளிவிட்டு வந்தார். அமிதாப் குஜராத் மாநில சுற்றுலாத்துறை பிராண்ட் அம்பாசிடராக இருந்தாலும் ஜெயா மோடியை வெறுக்கும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர். ஐஸ் மோடியை புகழ்ந்துவிட்டு வந்தது தான் மாமியார், மருமகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படக் காரணம்.

இந்நிலையில் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் வந்திருந்தனர். ஆனால் ஜெயா பச்சனைக் காணவில்லை. இதன் மூலம் அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த துளசி நமக்கு போட்டியாக வந்துட்டாளே: கார்த்திகா

Karthika Considers Sister As Competitor

சென்னை: நடிகை கார்த்திகா தனது தங்கை துளசியை போட்டியாக நினைக்கிறாராம்.

நடிகை கார்த்திகா முதலில் தெலுங்கு, மலையாளம் என்று சுற்றிவி்ட்டு அதன் பிறகே கோலிவுட் வந்து சேர்ந்தார். பிற மொழிப் படங்களில் சோபிக்க முடியாமல் இருந்த நேரத்தில் தான் கார்த்திகாவுக்கு கோ படம் கிடைத்தது. படம் ஹிட்டாகவே கார்த்திகாவும் தமிழகத்தில் பிரபலமானார். இதையடுத்து அவர் நடித்த தெலுங்கு படமான தம்முவும் ஹிட்டடிக்க கார்த்திகா குஷியாகிவிட்டார்.

தற்போது அவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கார்த்திகாவின் தங்கை துளசி மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே இப்படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் துளசிக்கு யான் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

பார்ப்பதற்கு துளிசியும் கார்த்திகா போன்று தான் உள்ளார். இந்நிலையில் கார்த்திகா தனது தங்கையை போட்டியாக நினைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

சேலையில் சாமி படம்... குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட இந்து மக்கள் கட்சி

Hmk Protests Against Kushboo

சென்னை: சாமி படம் போட்ட சேலையை அணிந்து சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை குஷ்புவைக் கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியினர் முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சினிமா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட குஷ்பு, சாமி படம் போட்ட சேலையை அணிந்திருந்தார். இந்துக்கள் மதிக்கும் கடவுள்கள் படங்களைப் போட்ட சேலையை மார்பில் அணிந்து வந்து இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் குஷ்பு என உடனடியாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

ஆனால் தங்களது போராட்டம் நிற்காது என்றும், குஷ்பு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். ஆனால் வேலையில்லாத வெட்டிப் பயல்கள்தான் இப்படி எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள் என்ற ரீதியில் ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து குஷ்பு கருத்து தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

 

விளம்பரங்களில் கல்லா கட்டும் சினேகா, பிரசன்னா

Clever Sneha Prasanna

சென்னை: நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து விளம்பரப் படங்களில் நடிக்கிறார். இதற்காக அவர்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்குகின்றனர்.

திரைநட்சத்திரங்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடித்து பணம் பார்க்கின்றனர். அதற்கு சினேகா, பிரசன்னா மட்டும் என்ன விதிவிலக்கா. திருமணத்திற்கு பிறகு சினேகா, பிரசன்னாவை ஜோடியாக நடிக்க வைக்க பல விளம்பர நிறுவனங்கள் அழைக்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை சரியாக புரிந்து வைத்துள்ள இந்த ஜோடி விளம்பரப் படங்களில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கின்றனர்.

இந்த ஜோடி பிரபலமாக உள்ளதால் நிறுவனங்களும் அவர்கள் கேட்கும் தொகையைத் தருகின்றன. அவர்களுக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிகிறதாம். சினேகா படங்களில் நடித்து சம்பாதித்ததைவிட விளம்பரப் படங்களில் தான் அதிகம் சம்பாதித்துள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா படங்களை விட விளம்பரப் படங்களில் குறைவான நேரத்தில் ஷூட்டிங் முடித்து நிறைய பணமும் சம்பாதிக்கலாமே. நல்ல டெக்னிக் தான்.

 

பவர் ஸ்டாருக்கு வாய்ப்பூட்டு போட்ட ஷங்கர்

Shankar Seals Power Star Lips

சென்னை: பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஒரு ஓட்ட வாய் என்பதால் தனது ஐ படத்தின் கதையை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று இயக்குனர் ஷங்கர் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.

இயக்குனர் ஷங்கர் விக்ரமை வைத்து எடுக்கும் படம் ஐ. இதில் ஏமி ஜாக்சன் தான் நாயகி. காமெடிக்கு சந்தானம், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உள்ளனர். படத்தில் பவர் ஸ்டாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பவர் ஸ்டாருக்கு தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுவதில் அதிகப் பிரியம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இது குறித்து ஷங்கருக்கு தெரியாதா என்ன. இவரை விட்டால் நாம் படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு கதையை ஊருக்கெ சொல்லிவிடுவார் என்று அஞ்சினார் ஷங்கர். இதையடுத்து அவர் பவர் ஸ்டாரை அழைத்து யாராவது ஐ படத்தின் கதை குறித்து கேட்டால் மூச்சு விடக்கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.

ஷங்கர் போட்ட வாய்ப்பூட்டையும் மீறி பவர் ஸ்டார் ஏதாவது உளறுவாரா?