கோயில் அருகே நடிகை பார்வதி மெல்டனின் ஆபாச போஸ்டர்.. போலீசில் புகார்!

Police Sent Notice Parvathy Melton

கோயில் அருகே நடிகை பார்வதி மெல்டனின் ஆபாச போஸ்டர் ஒட்டப்பட்டதைக் கண்டித்து, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகை பார்வதி மெல்டன். மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் முன்னணி நடிகை இவர்.

பிஸினஸ்மேன் படத்தின் தமிழ் டப்பிங்கில் இவரைப் பார்த்திருக்கலாம்.

இப்போது தெலுங்கில் தயாராகும் ‘யமஹோயமா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான போஸ்டர்கள் ஹைதராபாத் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. எம்மிகனூர் பகுதியில் உள்ள பிரபல கோவில் அருகிலும் ஓட்டப்பட்டுள்ளது. போஸ்டரில் பார்வதி மெல்டன் அரைகுறை ஆடையில் மகா கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போஸ்டர் ஒட்டியவர்கள் மீதும் ஆபாச போஸ் கொடுத்த பார்வதி மெல்டன் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி ராஜேந்திரபிரசாத் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

90 சதவீத நிர்வாண கோலத்தில் பார்வதி மெல்டன் தோன்றுவதை போஸ்டராக அடித்து, அதுவும் கோவில் அருகில் ஒட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

இந்த புகார் தொடர்பாக பார்வதி மெல்டனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஏற்கெனவே ஆபாசமாக தோன்றியதாக நடிகைகள் அனுஷ்கா, ப்ரியாமணி மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அலுவலகத்தில் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது ரூ 5 கோடி கேட்டு மணிரத்னம் வழக்கு!

Manirathnam Suhasini Sues On Mannan

சென்னை: கடல் பட விநியோகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் நஷ்ட ஈடு கேட்டு தன் அலுவலகத்துக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த மன்னன் பிலிம்ஸ் உரிமையாளர்கள் மீது ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தை விநியோகித்ததன் மூலம் தங்களுக்கு ரூ 17 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மன்னன் பிலிம்ஸ் சார்பில் தெரிவித்தனர். இந்த நஷ்டத்தை மணிரத்னம்தான் ஈடுகட்ட வேண்டும்.. அவர் படம் என்பதால்தான் வாங்ககி வெளியிட்டோம் என்று கோரி, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மணிரத்னம் மீது புகார் கொடுத்தனர்.

ஆனால் மணிரத்னமோ, கடல் படத்தை ஜெமினி நிறுவனத்துக்கு நாங்கள் விற்றுவிட்டோம். எனவே எனக்கும் அந்தப் பட வியாபாரத்துக்கும் சம்பந்தமில்லை. எதுவாக இருந்தாலும் ஜெமினி நிறுவனத்திடம்தான் பேச வேண்டும் என அறிக்கைவிடுத்தார்.

இது மிகப் பெரிய மோசடி என்று மன்னன் பிலிம்ஸ் உள்ளிட்டோர் மீண்டும் நஷ்ட ஈடு கோரி வந்தனர்.

இந்த நிலையில் மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர்களான மணிரத்னம், அவர் மனைவி சுகாசினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், "மன்னன் பிலிம்ஸ்காரர்கள் எங்களுக்கு யாரென்றே தெரியாது. ஆனால் அவர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தியதால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. சமூகத்திலும் திரைத்துறையிலும் எங்களுக்கு இருந்த நல்ல பெயருக்கு களங்கம் உண்டாகிவிட்டது. திட்டமிட்டு, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி இதனை மேற்கொண்ட மன்னன் மீது சட்ட நடவடிக்கை வேண்டும். எங்களுக்கு இழப்பீடாக ரூ 5 கோடியை தர வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

மணிரத்னம், சுகாசினி சார்பில் அவர்கள் வழக்கறிஞர் அபுடு குமார் இதனை தாக்கல் செய்தார். வழக்கை ஏற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடல் படத்தில் ரூ 17 கோடி நஷ்டம் என்று போராடியவர்களிடமே, ரூ 5 கோடியை மணிரத்னமும் அவர் மனைவி சுகாசினியும் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆன்ட்ரியாவைக் காதலிக்கும் ஃபாஸில் மகன்!

Fahaad Fasil Declares His Love Affair With Andrea

நடிகை ஆன்ட்ரியாவை தீவிரமாகக் காதலிப்பதாக இயக்குநர் ஃபாஸில் மகனும் பிரபல மலையாள நடிகருமான பாஹாத் ஃபாஸில் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகை ஆன்ட்ரியாவின் காதல்கள் என தனியாக கட்டுரை எழும் அளவுக்கு பலருடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இசையமைப்பாளர் அனிருத்தும் அவரும் லிப் டு லிப் முத்தம் கொடுத்துக் கொண்ட படம் அண்மையில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் ஆன்ட்ரியா காதலிப்பதாகவலும் இருவரும் நெருங்கிப் பழகி வருவதாகவும் பிரபல மலையாள நடிகர் பாஹாத் ஃபாஸில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இவர் பிரபல தமிழ் - மலையாள இயக்குநர் ஃபாஸிலின் மகன். மலையாளத்தில் ஹாட்டஸ்ட் ஹீரோவாகப் பார்க்கப்படுகிறார்.

இவரும் ஆன்ட்ரியாவும் அன்னயும் ரசூலும் என்ற படத்தில் மிக நெருக்கமாக நடித்திருந்தனர்.

சமீபத்தில் ஒரு மலையாளப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நானும் ஆன்ட்ரியாவும் டேட்டிங் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக பழகி வருகிறோம். அவரை நான் தீவிரமாக காதலிக்கிறேன். அன்னயும் ரசூலும் படத்தில் நடிக்கும் போதே இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம்," என்றார்.

ஆனால் இதுகுறித்து ஆன்ட்ரியா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

திகில் படம் காந்தாரியில் பவர் ஸ்டார் சீனிவாசன்!

Power Star Srinivasan Kanthari

காந்தாரி எனும் புதிய திகில் படத்தில் நடிக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

ஓரியண்டல் பிக்சர்ஸ் மற்றும் ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படம் இது.

இதில் கதாநாயகனாக சாட்டை, கீரிபுள்ள, சொகுசு பேருந்து நிலையம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் யுவன், கதாநாயகியாக மும்பை வரவு புதுமுகம் இஷா, இன்னொரு நாயகியாக பிரிதிக்ஷா மைதிலி ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் நாசர், சந்தானபாரதி, காதல் தண்டபாணி, கலாபவன் மணி, வடிவுக்கரசி என பெரிய பட்டாளமே நடிக்கிறது.

இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு வழக்கம்போல ஒரு ஐட்டம் பாட்டும் உண்டு.

குடும்பமே தற்கொலை செய்துகொண்ட ஒரு வீடு. அங்கே யாருமே குடிவராத நிலையில் காதலர்கள் இருவர் எதிர்த்தவர்களிடம் இருந்து தப்பித்து இந்த வீட்டில் தஞ்சம் அடைகின்றனர். இறந்தவர்களில் காந்தாரி என்ற இளம்பெண், தன் குடும்பம் அழிவதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்க உடல் தேடி அலையும் போது கதாநாயகன் மாட்டிக்கொள்ள, அவன் உடம்பில் ஏறிக் கொள்கிறது காந்தாரி ஆவி.

காதலனின் உடம்பில் இருந்து காந்தாரி வெளியேறினாளா..? காதல் கைகூடியதா ..? என்பது தான் கதை.

இப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் எம்கே குமார். விஜய் ஆனந்த் இசையமைக்க மொத்தம் 4 பாடல்கள் படத்தில் இடம்பெறுகின்றன.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி காரைக்குடியில் முடிவடைகிறது.

 

விழுப்புரத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 வகை சீர்வரிசையுடன் இலவச திருமணம் நடத்தி வைத்த விஜய்

Thanks Vijay 11 Poor Pairs Got Married

விழுப்புரம்: விழுப்புரத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஜய் இலவசமாக திருமணம் நடத்தி வைத்தார்.

நடிகர் விஜயின் விழுப்புரம் மாவட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் சங்கராபுரம், முகையூர், சின்னசேலம், வானூர், ரிஷிவந்தியம், செஞ்சி, மேல்மலையனூர், திருநாவலூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இலவச திருமண விழா விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை நடந்தது.

திருமணத்தை நடத்தி வைக்க விஜய் நேற்று காலை 10.30 மணிக்கு விழுப்புரம் வந்தார். அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அதன் பின்னர் விஜய் 11 ஜோடிகளுக்கு திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து வாழ்த்தி அவர்களுக்கு 51 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.

அதன் பிறகு அவர் பேசியதாவது,

என்னடா இந்த விஜய் திடீர்னு விழுப்புரம் வந்து இலவச கல்யாணம் எல்லாம் செய்து வைக்கிறார். எதிர்காலத்தில் ஏதாவது திட்டம் இருக்குமோ என்று யாரும் தப்பா நினைத்து ஏதாவது கணக்கு போட வேண்டாம். இது போன்ற இலவச திருமணத்தை 2 மற்றும் 1 மாதத்திற்கு ஒரு முறை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி வருகிறேன். இதற்கு முன்பு ஓசூர், வேலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலும் இலவச திருமணம் நடத்தி வைத்துள்ளேன். இதற்கான ஏற்பாடுகளை என்னுடைய மாவட்ட நண்பர்கள் செய்கின்றனர்.

நான் சென்னையில் ஆண்டுதோறும் இலவச திருமணத்தை நடத்தி வைக்கிறேன். என் தங்கை வித்யா புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறாள். இங்குள்ள 11 ஜோடிகளும் 16 செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்றார்.

 

கேஸ் போடுவீங்களா கேஸு... என் அடுத்த படம் ருத்ரம்மாவை பாருங்க! - ஆவேச அனுஷ்கா

Anushka Priyamani Rule The Case On Them Baseless   

ஹைதராபாத்: அதிக கவர்ச்சி காட்டி நடிப்பதாக நடிகைகள் அனுஷ்கா, ப்ரியாமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இருவருமே கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

அனுஷ்காவும் பிரியாமணியும் அரை குறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கின்றனர் என்றும் அவர்கள் படங்களை பார்க்கும் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது என்றும் சமூக சேவகர் சுப்புடு என்பவர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார். இருவரும் ஆபாசமாக நடித்த படங்களை போலீசார் பார்த்து வருகின்றனர். எந்தெந்த படங்களில் ஆபாசமாக வருகிறார்கள் என்ற விவரங்களையும் காட்சிகளையும் சேகரிக்கிறார்கள். ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

அனுஷ்கா, ப்ரியா மணி இருவருக்கும் இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து அனுஷ்காவிடம் கேட்டபோது, "நான் ஆபாசமாக நடிப்பதாக வழக்கு போட்டிருப்பது பப்ளிசிட்டி ஸ்டன்ட். இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஏதோ ஒரு படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்ததை இப்படி பண்ணுவார்கள் என்று நினைக்கவில்லை. இது ஒரு வழக்கே அல்ல... என் மீது வழக்குப் போடுபவர்களை, நான் அடுத்து நடிக்கும் ‘ருத்ரம்மா' என்ற புராணப் படத்தைப் பார்க்கச் சொல்லுங்கள்," என்றார்.

பிரியாமணி கூறும்போது, "நான் ஆபாசமாக நடிக்கவில்லை. வழக்கு போட்டவர் குறிப்பிட்டுள்ள படத்தில் நான் சேலை உடுத்தி வருகிறேன். அரைகுறை ஆடை எதுவும் அணியவில்லை. புடவை கட்டி ஆடுவது ஆபாசமா?" என்றார் கோபத்துடன்.

 

‘சென்னையில் ஒரு நாள்’முதல்வர் ‘ஜெ’வுக்கு பதில் நடிகர் சூர்யா!

Surya Replace Cm Chennayil Oru Naal Movie

சென்னையில் ஒருநாள் திரைப்படத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் வெளியான ட்ராஃபிக் படத்தை ராதிகாவின் ராடான் நிறுவனம் தமிழில் ‘சென்னையில் ஒருநாள்' என்ற பெய‌ரில் ‌ரீமேக் செய்துள்ளது. இப்படம் மூளைச்சாவு அடைந்த தமிழக இளைஞர் ஹிதேந்திரனின் இதயத்தை வேறொருவருக்கு தானம் செய்த உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தில் சரத்குமார், சேரன், பிரசன்னா, பார்வதி, இனியா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தில் உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தின் இறுதியில் தோன்றி பேசினால் நன்றாக இருக்கும் என சரத்குமார் விரும்பினார். இதற்காக ஜெயலலிதாவிற்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். ஆனால் படத்தில் தோன்ற முதல்வர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து தற்போது முதல்வர் நடிக்க திட்டமிருந்த வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.இதில் நடிகர் சூர்யாவாகவே படத்தில் தோன்றி உடல்தானத்தைப் பற்றி சொல்லும் விஷயங்கள் கடைசி 15 நிமிடங்கள் பேசுகிறாராம். இதுவும் படத்தை நகர்த்தி செல்வதாக அமைந்து இருக்கும் என சரத்குமார் தெ‌ரிவித்தார்.

ஆனால் மலையாலத்தில் வெளியான ட்ராஃபிக்கில் நடிகர் பேசும் காட்சி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

என் அடுத்த படைப்பு 'ஈழ காவியம்'.. அதற்காக இலங்கை போக விரும்புகிறேன்! - வைரமுத்து

Vairamuthu Wants Go Sri Lanka His Next Novel

மூன்றாவது உலகப் போர் என்ற நாவலைத் தொடர்ந்து, ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்குகிறார் வைரமுத்து.

வைரமுத்துவின் சமீபத்திய படைப்பான மூன்றாவது உலகப் போர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலுக்கு இலக்கியச் சிந்தனை விருதும் கிடைத்துள்ளது. இந்த நாவல் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை தஞ்சைப் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் என பகிர்ந்தளித்தார்.

இந்த நிலையில், இப்போதே தனது அடுத்த படைப்புக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார் வைரமுத்து.

இப்போது அவர் எழுதப் போவது தமிழ் ஈழம் தொடர்பான ஒரு நாவல். எனவே அதை தமிழகத்திலிருந்து எழுதாமல், இலங்கைக்கே போய் சில காலம் தங்கியிருந்து அந்த மண்ணையும் மனிதர்களையும் பார்த்து, பேசி, வாழ்ந்து எழுதப் போகிறாராம்.

இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், "எனது அடுத்த படைப்பு ஈழக் காவியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான களப் பணிகள் மிகப் பெரியவை என்பதால் இலங்கைக்கே சென்று சில காலம் இருக்க ஆசைப்படுகிறேன்.

அந்த மண்ணையும், காற்றையும், நிலத்தையும், நீரையும், மனிதர்களையும் தொட்டு உணராமல் படைத்தால், அது முழுமையான படைப்பாக இருக்காதே?," என்றார்.

 

கல்லால் அடிங்க, ஆசிட் வீசுங்க, துப்பாக்கியால் சுடுங்க… நீயா நானாவில் பெண்கள் ஆவேசம்!

Vijay Tv Neeya Naana Discussion About Insecurity Of Wom

தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பார்கள். பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு என்ன தண்டனை தரலாம் என்று விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பெண்கள் அனைவருமே குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லவேண்டும்... நடுரோட்டில் கல்லால் அடிக்க வேண்டும்... அவன் முகத்தில் ஆசிட் வீச வேண்டும்... தூக்கில் போடவேண்டும் என்று பொங்கினார்கள் பெண்கள்.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதுதான் இந்த வாரம் நீயா நானாவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. டெல்லியில் மருத்துவமாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறைக்கு பின்னர் இந்தியாவில் ஒட்டுமொத்த பெண்கள் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.

இந்த குற்றங்களுக்கு காரணம் யார்? எந்த சூழ்நிலையில் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். சென்னையில் எங்கெங்கு பாதுகாப்பாற்ற நிலை உள்ளது என்பது பற்றி விவாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தனர். வன் கொடுமைக்கு ஆளான பெண்கள் புகார் அளிக்கும் போது அங்கு அவர்கள் சந்திக்கும் கேள்விகள் கொடூரமானவை என்றார் கவின்மலர். கிராமத்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அது தொடர்பான வழக்கை சந்திக்கும் போது அந்த வழக்கறிஞர் கேட்ட கேள்விகளை பதிவு செய்தார்.

பாலியல் வன்முறையின் போது நீங்கள் உச்ச கட்டம் அடைந்தீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமலேயே அந்தப் பெண் ஆமாம் என்று கூறவே அந்த வழக்கே மாறிப்போனது என்றார் கவின் மலர். இதுபோன்ற கொடுமைகளுக்காகவே பல பெண்கள் தங்களின் கொடுமைகளைப் பற்றி வெளியே சொல்ல அஞ்சுகின்றனர் என்றார்.

பாலியல் கொடுமைக்கு மரணம் மட்டுமே தீர்வாகாது என்று சில பெண்ணியல் பேசும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். பெண்கள் மீதான வன்கொடுமைக்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல இந்த சமூகத்தின் கட்டமைப்பும் காரணம். ஆணும், பெண்ணும் சரிசமாக இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார் ஒருவர்.

கல்வித்துறையில் மாற்றம் வரவேண்டும். எப்படி படிக்கவேண்டும். பணம் சம்பாதிக்க என்ன படிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்படும் கல்வி நிலையங்களில் பெண்களை மதிப்பது குறித்தும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றார் ஒரு சமூக ஆர்வலர்.

பாதிக்கப்பட்டது பெண் இனம்தான். ஆனால் பெண்களுக்கு மட்டுமே அப்படி இருக்கவேண்டும். இப்படி உடுத்தவேண்டும்... ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றன. ஆண்களுக்கு அந்த அறிவுரைகளை கொடுக்கலாமே என்றார் பெண்ணிய பேச்சாளர் ஓவியா.

பெண்கள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்களோ அதனைப் பொருத்துதான் அவர்களுக்கான வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன. பெண்கள் தங்களை செக்ஸ் சிம்பலாக வெளிப்படுத்துவதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார் உளவியல் நிபுணர் ஷாலினி.

ஆண்கள் பாதுகாப்பு தரவேண்டும். நம்பிக்கையை தரவேண்டும். எங்கே தங்களின் அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினால்தான் பெண்களின் மீதான வன்முறையை அதிகரிக்கின்றனர் எனவே பெண்களின் மீதான பார்வையை ஆண்கள் சமூகத்தினர் மாற்றிக்கொள்ளவேண்டும் என்றார் கோபிநாத்.

 

நான் நல்ல நடிகன் இல்லை..!!!: கிஷோர்

Actor Kishore Journey From Fashion Designing To Cinema   

கிஷோர்... உங்களை மீட் பண்ணனுமே...

நீங்க எங்க இருக்கீங்க.. நானே வந்துர்றேன்...

அடுத்த ஒரு மணி நேரத்தில் மிலிட்டரி கிரீன் ராயல் என்பீல்டில் நமது அலுவலக வாசலில் வந்து இறங்கினார், பேக் பேக்கோடு.. ஒரு கல்லூரி மாணவன் மாதிரி.

ஒரு நடிகனுக்கு உரிய எந்த பந்தாவும், அடையாளமும் காட்டிக் கொள்ளாத 'டவுன் டு எர்த்' மனிதர் கிஷோர்.

காலேஜ் பையன் மாதிரி இருக்கீங்களே கிஷோர்..

இப்படித்தான் சார், எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்கேன்...!

பேச்சிலும் பாவனையிலும் அநியாயத்துக்கு அடக்கம் காட்டுகிறார். நடிப்பு என்று வந்துவிட்டால் உங்களுக்கே தெரியும் இவர் எப்படி என்று.

தெளிவான ஆங்கிலம், தெளிவான தமிழ் என இரு மொழிகளிலும் நல்ல கமாண்ட். ஹரிதாஸ் படத்துல தான் நான் முதல் முதலாக ஒழுங்கான தமிழ் பேசியதாக என் மனைவி சொன்னார் என்று சொல்லி சிரிக்கிறார்.

இவரது மனைவி சேலத்துக்காரராம். கிஷோருக்கு பூர்வீகம் பெங்களூர்.

படிக்கும்போதே காதல், படிப்பு முடித்தவுடன் கல்யாணம்.. ஒழுங்கான வேலை இல்லாததால் குடும்பம் நடத்த கஷ்டம்.. வீட்டில் வசதியானவர்கள் தான் என்றாலும் அவர்களது பணத்தில் வாழப் பிடிக்காமல் தனக்குத் தெரிந்த ஸ்கெட்ச் ஒர்க்களில் இறங்க, அதன் மூலம் பேஷன் டிசைனாராகியுள்ளார்.

சிறிது காலம் பேஷன் டிசைனிங், அப்படியே பெண்கள் கல்லூரியில் லெக்சரர் என்றிருந்தவருக்கு கல்லூரி நாட்களில் இருந்த நாடக ஆர்வம் சினிமா பக்கம் கொண்டு போயுள்ளது.

முதலில் கன்னடத்தில் சில படங்களில் தலைகாட்டியவரை, தமிழுக்கு இழுத்து வந்தவர் இயக்குனர் வெற்றி மாறன்.

வெற்றிமாறன் முதலில் இயக்க இருந்த ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நானா படேகரை நடிக்க வைக்க இருந்ததாம். ஆனால், தயாரிப்பாளர் மாறிவிட, பட்ஜெட் சுருங்கவே, நானா படேகருக்கு சம்பளம் தர முடியாது என்ற நிலையில் என்னைக் கூப்பிட்டார்கள் போலிருக்கிறது என்று சிரிக்கிறார் கிஷோர்.

வெற்றிமாறன் கிஷோரின் நடிப்பைப் பார்த்து அசந்தே கூப்பிட்டார் என்பது வேறு விஷயம்.

ஆனால், அந்தப் படம் தள்ளிப் போய்விட, தனது பொல்லாதவன் படம் மூலம் கிஷோரை தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார் வெற்றிமாறன். முதலில் வெற்றிமாறனும் தனுஷும் என்னுடன் போனில் பேசி, நீங்க நடிக்கிறீங்க என்று சொன்னபோது நான் நம்பவில்லை என்கிறார்.

இதையடுத்து ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடிக் குழு, தோரணை, முத்திரை, போர்க்களம், ஆடுகளம், ஹரிதாஸ் என கிஷோரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இரு குழந்தைகளுக்கு தந்தையான கிஷோருக்கு மது, சிகரெட் பழக்கம் இல்லை. ஒர்க் அவுட் செய்வீங்களா என்று கேட்டதற்கு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை மட்டும் தான் செய்வேன் என்கிறார். அவரது உடலைப் பார்த்தாலே அது தெரிகிறது.

படங்களில் காட்டும் கோப முகம் படத்துக்கு மட்டும் தான் போலிருக்கிறது. நேரில் சிரிப்பும், தோழமையும் இயற்கையாகவே அமைந்த மனிதர்.

பெங்களூரில் பண்ணரகட்டா அருகே உள்ள தனது குடும்ப நிலத்தில், இயற்கை விவசாயத்தில் (organic forming) ஈடுபடுவது இவருக்கு மிகப் பிடித்த வேலையாம். இயற்கை விவசாயம் தான் நிஜமான விவசாயம் என்கிறார். உரங்களும் வேதிப் பொருட்களும் நமது உணவை சீரழித்துவிட்டன என ஆதங்கப்படும் இவருக்கு இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க ஆசையாம். லாபம் இல்லாட்டியும் பரவாயில்லை, நஷ்டம் இல்லாத வித்தா போதும் என்கிறார்.

உர மானியம், விவசாயத் திட்டங்களில் நடக்கும் ஊழல், பன்னாட்டு உர நிறுவனங்களின் 'கார்டெல்' குறித்துப் பேசும்போது மட்டும் சினிமாவில் பார்க்கும் அந்த கோப முகத்தைக் காட்டுகிறார் கிஷோர். தமிழகத்தின் முன்னணி இயற்கை விவசாயியான நம்மாழ்வாரைப் பற்றி சிலாகிக்கிறார்.

நான் நல்ல கேரக்டர் என்று நினைக்கும் ரோல்களை மட்டும் தான் செய்கிறேன் என்று சொல்லும் கிஷோருக்கு காமெடி ரோல் செய்யவும், வரலாற்றுப் பின்னணி கொண்ட பீரியட் பிலிம் செய்யவும் ஆசையாம்.

திப்பு சுல்தான் கேரக்டரை வைத்து ஒரு படம் எடுக்க சில நண்பர்களுடன் சேர்ந்து முயற்சித்து வருகிறாராம். அது தான் என் ட்ரீம் பிலிம் என்கிறார்.

நான் மிகவும் கூச்சத்தோடு நடித்த காட்சி, ஹரிதாஸ் படத்தில் ஸ்னேகாவை பெண் பார்க்கச் செல்லும் காட்சி தான். படத்தில் முதல் காட்சியாகவே இதைத் தான் எடுத்தார்கள். நான் ஹீரோயின்களோடு ஜோடி போட்டு நடித்தது ரொம்ப கம்மி. ஸ்னேகாவுடன் நடிக்க வேண்டும், அவரைப் பெண் பார்க்கச் செல்லும் வெட்கத்தை வேறு முகத்தில் காட்ட வேண்டும் என்றவுடன் உண்மையிலேயே ரொம்ப வெக்கமா இருந்தது என்று சொல்லி மனம் திறந்து சிரிக்கிறார் கிஷோர்.

சினிமாவுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும் என்று சொல்லும் கிஷோர், தமிழின் புதிய இயக்குனர்கள், புதிய சிந்தனைகள், வித்தியாசமான படங்களை பாராட்டித் தள்ளுகிறார். தொடர்ந்து நல்ல படங்களாக எடுத்து ரசிகர்களின் ரசிப்புத் தரப்த்தை புதிய இயக்குனர்கள் உயர்த்திவிட்டார்கள். இது இப்போதைய தமிழ் சினிமாவின் மாபெரும் சாதனை என்கிறார். கன்னடப் படங்களின் தரம் உயரவில்லை என்பதையும் கவலையோடு சுட்டிக் காட்டுகிறார்.

வனயுத்தம் படத்தில் வீரப்பனாக நடித்தது பெரிய சவாலான காரியமாக இருந்ததாம். வீரப்பன் வசித்த மாதேஸ்வரன் மலைப் பகுதியில் தான் முழு சூட்டிங்கும் நடந்தது. வீரப்பன் கேரக்டருக்காக எனது உடலை மேலும் மெலிய வைக்க வேண்டி வந்தது. படம் நன்றாக வந்ததில் எல்லோருக்குமே சந்தோஷம்.

அடுத்து அஜீத்தின் வலை படத்திலும் நடித்து வரும் கிஷோர், அஜீத்தை மிகச் சிறந்த ஜென்டில்மேன், மிக நேர்மையான மனிதர் என்கிறார். அதே போல உதயம் தேசிய நெடுஞ்சாலை 4. பரிமளா தியாகரங்கம், பொன்மாலைப் பொழுது ஆகிய தமிழ்ப் படங்களிலும் 2 தெலுங்கு, ஒரு கன்னடப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சரி பைக்ல சுத்துறீங்களே, ரசிகர்கள் தொல்லை எல்லாம் இல்லையா என்று கேட்டால், அது எல்லாம் ஸ்டார்களுக்குத் தான். நான் தான் ஸ்டார் இல்லையே, வெறும் நடிகன் தான். அதுவும் நல்ல நடிகன் கூட இல்லை!.. சென்னையில் ஆட்டோவில் தான் பெரும்பாலும் சுத்துவேன். என்னை யாரும் பெரிய நடிகரா எல்லாம் பார்ப்பது இல்லை. பார்த்தாலும் இவன் கிஷோரா இருக்க மாட்டான், அவனை மாதிரி இருக்கான் என்று நினைத்து சென்று விடுகிறார்கள் என்று சொல்லி மீண்டும் சிரிக்கிறார்.

பொல்லாதவன், ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடிக் குழு, தோரணை, முத்திரை, போர்க்களம், ஆடுகளம், ஹரிதாஸ் என கிஷோரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நமது அலுவலத்தில் கிஷோர்

 

தொடங்கியது சூர்யாவின் சிங்கம் 2!

சூர்யா - அனுஷ்கா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.

singam 2 starts rolling   
இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் புதிய படங்களின் பூஜைகள் இன்று சென்டிமெண்டாக நடந்து வருகின்றன.

சூர்யா நடிப்பில் முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற சிங்கம் படத்தின் தொடர்ச்சி சிங்கம் 2 என்ற பெயரில் தயாராகிறது.

இதில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்காவும் ஹன்சிகாவும் நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார்.

எஸ் லட்சுமணன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்க ஏராளமான புதுமுகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.

நாயகன் சூர்யா, நாயகிகள் அனுஷ்கா, ஹன்ஸிகா, சூர்யாவின் தம்பி கார்த்தி, நடிகர் சிவகுமார், இயக்குநர் லிங்குசாமி உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

 

மோகன் பாபு மகள் தயாரிப்பில் சசிகுமார் - சந்தானம்... தலைப்பு 'பிரம்மன்!'

Sasi Kumar Teams Up With Santhanam

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படத்துக்கு பிரம்மன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். சந்தானம் அவருடன் முதல் முறையாக இணைகிறார்.

தயாரிப்பாளராக லட்சுமி மஞ்சு இதுதான் முதல் தமிழ்ப் படம் என்றாலும், அவர் பல்வேறு வெற்றிப் படங்களை தெலுங்கில் தயாரித்துள்ளார். தெலுங்கில் லட்சுமி மஞ்சு தயாரித்துள்ள குண்டெல்லோ கோடாரி என்ற படம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள இப்படம் தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்' என்ற பெயரில் விரைவில் வரவிருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த வெற்றி களிப்போடு தமிழில் நேரடிப் படம் பண்ணுகிறார் லட்சுமி. பிரம்மன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தினை கமல்ஹாஸன், மெளலி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாக்ரடீஸ் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

 

பிறந்த நாளன்றும் கூட பூனத்துக்கு 'அந்த' நினைப்புதான்...!

Poonam Pandey Links Her Birthday With Position 69

கவர்ச்சி மாடல் அழகி பூனம் பாண்டேவையும், செக்ஸையும் பிரித்துப் பார்க்க முடியாது போல... தனது பிறந்த நாளன்று கூட செக்ஸியாகத்தான் பேசியுள்ளார் பூனம்.

கவர்ச்சியால் மட்டுமே அறியப்பட்டவர் பூனம். அவர் என்ன செய்தாலும், பேசினாலும் அதில் செக்ஸ் கலந்திருக்குமாறு பார்த்துக் கொள்வதில் கவனமாக இருப்பார்.

கொடுக்கும் போஸிலும் செக்ஸி, பேச்சிலும் செக்ஸி, அசைவிலும் செக்ஸிதான். இப்போது தனது பிறந்த நாளின்போதும் கூட செக்ஸியான விஷயத்தைச் சொல்லியே டிவிட்டரில் ஒரு மெசேஜைத் தட்டி விட்டுள்ளார்.

அதாவது செக்ஸ் பொசிஷன்களில் ஒன்றான, எல்லோருக்கும் பிடித்த பேவரைட்டான 69 பொசிஷனைக் குறிப்பிட்டு நேற்று தனது பிறந்த நாள் செய்தியின்போது டிவிட்டரில் மெசேஜ் வெளியிட்டிருந்தார் பூனம்.

அந்த செய்தியில், இந்த வருடத்தின் 69வது நாளின்போது எனது பிறந்தநாள் வந்திருப்பது ரொம்ப அதிர்ஷ்டமானது. இப்ப தெரிகிறதா, நான் ஏன் நாட்டியாக இருக்கிறேன் என்று - என்று கூறியுள்ளார் பூனம்.

அடடா, ரொம்பத்தான் நாட்டி கேர்ள் பூனம்...!