கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை

கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை   

இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை அஞ்சலி புகார் தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த களஞ்சியம் அஞ்சலி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை பல முறை நடந்துள்ளது. ஆனால் அஞ்சலி ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தும் அவர் வரவில்லை.

அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்றார். இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து அஞ்சலி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்பது பற்றி அஞ்சலி ஹைதராபாத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரலாமா அல்லது மருத்துவ சான்றிதழ் அளிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறாராம்.

 

தாய்க்கு செய்து கொடுத்த 'அந்த' சத்தியத்தை நடிகர் மறந்துவிட்டாரோ?

சென்னை: இரட்டை அர்த்த வசனங்களை இனி பேச மாட்டேன் என்று தனது தாய்க்கு சர்ச்சையில் சிக்கியுள்ள காமெடி நடிகர் சத்தியம் செய்து கொடித்திருந்தார்.

சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் பெரிய அளவில் நகைச்சுவை நடிகராகிவிட்டார் அவர். காமெடி செய்து சம்பாதித்த பணத்தில் அவர் தளபதி வைத்திருக்கும் அதே பிராண்ட் காருக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதாக அவர் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இரட்டை அர்த்த வசனங்களை பேசி பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பெண்கள் அமைப்பு ஒன்று நடிகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சர்ச்சை எல்லாம் வெடிப்பதற்கு முன்பு தாய் சொல்லை தட்டாதவர் என்று கூறப்படும் அந்த நடிகர் தனது அம்மாவுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.

அதாவது இனி வரும் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் அருவெறுப்பான வசனங்களை பேச மாட்டேன் என்று. அந்த சத்தியத்தை ஒரு வேளை மறந்துவிட்டாரோ?

 

'தல' படத்தை பார்க்க டிக்கெட்டுக்கு அடிபோடும் வி.வி.ஐ.பி.க்கள்

சென்னை: நாளை ரிலீஸாகும் 'தல' நடிகரின் படத்தை பார்க்க டிக்கெட்டுக்கு விவிஐபிக்கள் போட்டி போடுகிறார்களாம்.

'தல' நடிகரின் துவக்கம் படம் நாளை ரிலீஸாகிறது. படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு துவங்கி டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்நிலையில் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு ஒரு பக்கம் இருந்தாலும் படத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர். இந்நிலையில் சென்னை நகரில் உள்ள மல்ட்டிபிளக்ஸ்களில் படத்தை பார்க்க விவிஐபிக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம்.

இதனால் அவர்கள் டிக்கெட் கேட்டு மல்ட்டிபிளக்ஸுகளுக்கு பிரஷர் மேல் பிரஷர் கொடுத்து வருகிறார்களாம்.

 

ஜோடியாக விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி வாங்கிய அபிஷேக், ஐஸ்வர்யா ராய்

மும்பை: சமையல் அறை சாதனங்கள் விளம்பரத்தில் ஜோடியாக நடிக்க நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும் ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து அண்மையில் பிரபல நிறுவனத்தின் சமையல் அறை சாதன விளம்பரங்களில் நடித்தார். அந்த விளம்பரத்தில் நடிக்க அவர்கள் ரூ.30 கோடி சம்பளம் கேட்டுள்ளனர். அந்த நிறுவனமும் சற்றும் யோசிக்காமல் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்துவிட்டதாம்.

ஜோடியாக விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி வாங்கிய அபிஷேக், ஐஸ்வர்யா ராய்

கணவனும், மனைவியும் தனித்தனியாக விளம்பரங்களில் நடிக்கவே பெரும் தொகையை கேட்பார்கள். அப்படி இருக்கையில் ஜோடியாக நடிக்க இவ்வளவு கேட்டதில் ஆச்சரியம் இல்லை என்று கூறப்படுகிறது.

அபி, ஐஸ் தவிர சைஃப்-கரீனா, அக்ஷய் குமார்-ட்விங்கிள் கன்னா ஆகிய ஜோடிகளும் விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

 

ஜோடியாக விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி வாங்கிய அபிஷேக், ஐஸ்வர்யா ராய்

மும்பை: சமையல் அறை சாதனங்கள் விளம்பரத்தில் ஜோடியாக நடிக்க நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும் ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து அண்மையில் பிரபல நிறுவனத்தின் சமையல் அறை சாதன விளம்பரங்களில் நடித்தார். அந்த விளம்பரத்தில் நடிக்க அவர்கள் ரூ.30 கோடி சம்பளம் கேட்டுள்ளனர். அந்த நிறுவனமும் சற்றும் யோசிக்காமல் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்துவிட்டதாம்.

ஜோடியாக விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி வாங்கிய அபிஷேக், ஐஸ்வர்யா ராய்

கணவனும், மனைவியும் தனித்தனியாக விளம்பரங்களில் நடிக்கவே பெரும் தொகையை கேட்பார்கள். அப்படி இருக்கையில் ஜோடியாக நடிக்க இவ்வளவு கேட்டதில் ஆச்சரியம் இல்லை என்று கூறப்படுகிறது.

அபி, ஐஸ் தவிர சைஃப்-கரீனா, அக்ஷய் குமார்-ட்விங்கிள் கன்னா ஆகிய ஜோடிகளும் விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

 

ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் ஆர்யா: ஓய்வில் இருக்கிறார்

ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் ஆர்யா: ஓய்வில் இருக்கிறார்

சென்னை: நடிகர் ஆர்யாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடியபோது காலில் அடிபட்டுள்ளது. அப்போது முதல் உதவி எடுத்துக் கொண்டவர் வழக்கம் போல படப்பிடிப்புகளுக்கு சென்றுள்ளார். நாள் ஆக ஆக காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது அவர் இரண்டாம் உலகம், ஆரம்பம் ஆகிய படங்களில் பிசியாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யவில்லை. தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டதையடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் படப்பிடிப்புகளுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

 

கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை

கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை   

இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை அஞ்சலி புகார் தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த களஞ்சியம் அஞ்சலி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை பல முறை நடந்துள்ளது. ஆனால் அஞ்சலி ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தும் அவர் வரவில்லை.

அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்றார். இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து அஞ்சலி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்பது பற்றி அஞ்சலி ஹைதராபாத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரலாமா அல்லது மருத்துவ சான்றிதழ் அளிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறாராம்.

 

'தல' படத்தை பார்க்க டிக்கெட்டுக்கு அடிபோடும் வி.வி.ஐ.பி.க்கள்

சென்னை: நாளை ரிலீஸாகும் 'தல' நடிகரின் படத்தை பார்க்க டிக்கெட்டுக்கு விவிஐபிக்கள் போட்டி போடுகிறார்களாம்.

'தல' நடிகரின் துவக்கம் படம் நாளை ரிலீஸாகிறது. படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு துவங்கி டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்நிலையில் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு ஒரு பக்கம் இருந்தாலும் படத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர். இந்நிலையில் சென்னை நகரில் உள்ள மல்ட்டிபிளக்ஸ்களில் படத்தை பார்க்க விவிஐபிக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம்.

இதனால் அவர்கள் டிக்கெட் கேட்டு மல்ட்டிபிளக்ஸுகளுக்கு பிரஷர் மேல் பிரஷர் கொடுத்து வருகிறார்களாம்.

 

ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் ஆர்யா: ஓய்வில் இருக்கிறார்

ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் ஆர்யா: ஓய்வில் இருக்கிறார்

சென்னை: நடிகர் ஆர்யாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடியபோது காலில் அடிபட்டுள்ளது. அப்போது முதல் உதவி எடுத்துக் கொண்டவர் வழக்கம் போல படப்பிடிப்புகளுக்கு சென்றுள்ளார். நாள் ஆக ஆக காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது அவர் இரண்டாம் உலகம், ஆரம்பம் ஆகிய படங்களில் பிசியாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யவில்லை. தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டதையடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் படப்பிடிப்புகளுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

 

நடிகை கஜோல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு: 2 பேர் கைது

நடிகை கஜோல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு: 2 பேர் கைது

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கஜோல் வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைக்களை திருடிய பணியாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

'பாசிகர்' இந்தி படத்தின் மூலம் பிரபல பாலிவுட் கதாநாயகியாக 1992-ல் அறிமுகமாகியவர் நடிகை கஜோல்.

'தில்வாலே துலன்யே லே ஜாயங்கே' மற்றும் 'குச் குச் ஹோத்தா ஹை' படங்களின் பிரபலமடைந்தார். 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்சார கனவு' படத்தில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சுமார் 40 படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்க்னை 5 ஆண்டுகளாக காதலித்து 1994-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்ற கஜோல், மும்பையின் புறநகர் பகுதியான ஜுகு-வில் உள்ள ஆடம்பர வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.

கடந்த 22-ம் தேதி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து கொண்ட கஜோல் தனது நகை பெட்டியில் இருந்து 17 வளையல்கள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது வீட்டின் உள்ளே சுதந்திரமாக நடமாடும் யாரோ செய்த வேலையாகதான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவர் இது தொடர்பாக ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது வீட்டில் வேலை செய்யும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் காயத்ரி (22) சந்தோஷ் பாண்டே ஆகிய இருவரை கைது செய்தனர்.

அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் விசாரணை காவலின்கீழ் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 

'ஆரம்பம்' படத்திற்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸ் ஆகுமா?

சென்னை: அஜீத்தின் 'ஆரம்பம்' படத்திற்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸ் ஆகுமா?  

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

‘இனி தான் ஆரம்பம்' என்ற தலைப்பில் தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். இப்படத்தின் பாடல் பதிவும் நடந்துவிட்டது.

இந்த பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி பதிவு செய்தேன். படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் ஸ்ரீசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் என்பவர் ‘ஆரம்பம்' என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வெளியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, நான் பதிவு செய்த பெயரை, விதிகளுக்கு முரணாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்த 'ஆரம்பம்' என்ற பெயரை திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

 

போலி நம்பர் பிளேட் வழக்கு: சிவகாசி நீதிமன்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் சரண்

போலி நம்பர் பிளேட் வழக்கு: சிவகாசி நீதிமன்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் சரண்

சிவகாசி: காரில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்திய வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சிவகாசி நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.

பவர்ஸ்டார் சீனிவாசன் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கமிஷன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பலர் மோசடி புகார் கொடுத்தனர். டெல்லி திகார் சிறையில் இருந்த பவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதன் பிறகு வழக்கம்போல் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டில் காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தி சிவகாசியில் பயணம் செய்ததாக பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் மீது சிவகாசி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது பவர்ஸ்டார் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பவர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை சிவகாசி நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட் உத்தரவை வாபஸ் பெறக் கோரி மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் அந்த மனுவை தாக்கல் செய்த தினமே பரிசீலனை செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பவர்ஸ்டார் இன்று காலை சிவகாசி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

 

குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து ரம்யா அதிரடி

பெங்களூர்: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என நடிகையும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் ரம்யா நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார்.இதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து  ரம்யா அதிரடி

ரம்யா கடைசியாக நடித்த 'நீர்டோஸ்' என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ.4 கோடியை திருப்பி தர வேண்டும் என்றும் ஜெகதீஷ் கூறியுள்ளார்.

இதற்கு ரம்யா அளித்துள்ள பதிலில், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை என்றார்.

அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா? என்னால் அப்படி செய்ய முடியாது என்றும் ரம்யா கூறியுள்ளார்.