வாட்ஸ்ஆப்பில் பரவும் நடிகை சோனாக்ஷியின் (போலி) ஆபாச வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் போலி ஆபாச வீடியோ வாட்ஸ்ஆப்பில் வெளியாகியுள்ளது.

நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள், நிர்வாண செல்ஃபிக்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இதை பார்த்த சம்பந்தப்பட்ட நடிகைகள் பதறிப் போய் ஐயோ அந்த வீடியோவில், புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை, அது போலி என்று கூறி வருகின்றனர்.

வாட்ஸ்ஆப்பில் பரவும் நடிகை சோனாக்ஷியின் (போலி) ஆபாச வீடியோ

அண்மையில் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீதிவ்யாவின் நிர்வாண செல்ஃபிக்கள் வெளியாகின. ராதிகா ஆப்தே தனது நிர்வாண புகைப்படம் குறித்து மறுப்பு தெரிவித்தார். ஆனால் ஸ்ரீதிவ்யா எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் ஆபாச வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது. ஆனால் அந்த வீடியோ போலியானது என்று கூறப்படுகிறது. வீடியோவில் இருப்பது சோனாக்ஷியை போன்றே இருக்கும் ஆபாசப்பட நடிகையாம். ஆனால் மக்கள் அதை சோனாக்ஷி என்று கூறி அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்களாம்.

ஆபாச வீடியோ பற்றி சோனாக்ஷி சின்ஹா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

 

அஜீத் பிறந்தநாளில் "ரஜினி"யுடன் மோதும் சூர்யாவின் 'மாஸ்'?

சென்னை: அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'மாஸ்' திரைப்படம் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் மாஸ். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இது தவிர பிரணிதா, சமுத்திரக்கனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அஜீத் பிறந்தநாளில்

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர். இப்படத்தின் படப்பிடிப்புகள் துரித கதியில் நடந்து வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீடு தேதியே இன்னும் அறிவிக்கப் படாத நிலையில், இப்படத்தை மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதே நாளில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சூரி நடிக்கும்'ரஜினி முருகன்' படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே மே 1ம் தேதியில் தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வெளியாகி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்விரு படங்களில் இசை மற்றும், டீஸர், டிரெய்லர்கள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அனிருத்தைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் கர்ஜிக்க வரும்‘சிங்கம் 3’.. "பெண் சிங்கம்" அனுஷ்கா?

சென்னை: மீண்டும் சூர்யா - ஹரி இருவரும் இணைந்து உருவாக்கும் 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகத்தில் இசை அனிருத் எனக் கூறப்படுகிறது.

அஞ்சான் படத்தைத் தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கும் '24' படத்தில் நடிக்கவிருக்கிறார். விக்ரம் குமார் படத்தை சூர்யாவே தயாரிக்க இருக்கிறார்.

அனிருத்தைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் கர்ஜிக்க வரும்‘சிங்கம் 3’..

'24' படத்தில் நடித்துக் கொண்டே பாண்டிராஜ் இயக்கும் 'ஹைக்கூ' படத்திலும் சிறிய வேடத்தில் நடிக்க சூர்யா சம்மதித்திருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பார் எனக் கூறப்பட்டது.

ஏற்கனவே சிங்கம், சிங்கம் 2 படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்ததால், மீண்டும் அக்கூட்டணி சிங்கம் 3ஐ உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது சூர்யா - ஹரி இணையும் படம் 'சிங்கம் 3' என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும், சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் 'சிங்கம் 3' படத்திற்கு இசையமைக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக அனிருத் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் படம் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு கடைசியில், அல்லது தீபாவளிக்கு சிங்கம் 3 வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இரண்டு பாகங்களிலும் "பெண் சிங்கமாக" நடித்த அனுஷ்கா தான் இப்படத்திலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பாரா இல்லையா என்பதெல்லாம், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது தெரிய வரும்.

 

நட்பில் துவங்கி உறவாக மாறிய ஆர்.சி.சக்தி... கமல் துயரம்

சென்னை: கலைஞனாக, நண்பனாக, உறவாக இருந்த ஆர்.சி.சக்தியின் மறைவு தனக்கு பெரும் இழப்பு என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

‘ஸ்பரிசம்', ‘சிறை', ‘வரம்', ‘உண்மைகள்','கூட்டுப்புழுக்கள்', ‘பத்தினிப் பெண்', ‘தாலி தானம்' உட்பட பல படங்களை இயக் கியவர் ஆர்.சி.சக்தி. ரஜினிகாந்த் நடித்த ‘தர்மயுத்தம்', கமல்ஹாசன் நடித்த ‘உணர்ச்சிகள்', ‘மனிதரில் இத்தனை நிறங்களா?' விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட ‘சிறை' படம் ஆர்.சி.சக்திக்கு புகழை பெற்றுத் தந்தது.

நட்பில் துவங்கி உறவாக மாறிய ஆர்.சி.சக்தி... கமல் துயரம்

இந்நிலையில், நோய்த் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சக்தி, சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார்.

நடிகர் கமலுக்கு மிகவும் நெருக்கமானவர் சக்தி. ‘என் நண்பர். என் குரு' என்று கமலால் அன்போடும் மரியாதையோடும் குறிப்பிடப்படுபவர்.

சக்தியின் மறைவு செய்தி கேட்டு, நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் கமல். அப்போது அவர் கூறியதாவது :-

‘‘கலைஞனாக, நண்பனாக, உறவாக ஆர்.சி.சக்தியின் மறைவு எனக்கு பெரும் இழப்பு. நட்பில் துவங்கி உறவாக மாறியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நல்ல நண்பன். ரசிகன். கடைசி வரை நல்ல நண்பராக இருந்தது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அவர் அப்படித்தான். முக்கியமாக, முதல் தர ரசிகராக இருந்த சக்தி அண்ணனின் இழப்பை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

ஆர்.சி.சக்தியின் பங்களிப்பு:

சக்தி மறைவு தொடர்பாக நடிகர் சிவக்குமார் கூறுகையில், "நல்ல இயக்குநர்களில் ஆர்.சி. சக்தி குறிப்பிடத்தக்கவர். நான் அவருடைய படங்களின் ரசிகன். அவரது படங்களில் வசனம் இயல்பாக அர்த்தமுள்ளதாக இருக்கும். சினிமாவை வித்தியாச மான கோணத்தில் அணுகிய படைப்பாளி. கமல்ஹாசனை ஒரு இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக வெளிக்கொண்டு வந்ததில் ஆர்.சி.சக்தியின் பங்களிப்பு பெரிது" எனத் தெரிவித்தார்.

நடிகை லட்சுமி கண்ணீர்:

சிறை உட்பட ஆர்.சி.சக்தியின் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லட்சுமி. சக்தியின் மறைவு தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘நடிகை, இயக்குநர் என்ற நிலையைத் தாண்டி என்னைத் தன் தங்கையாகவே கொண்டாடியவர் ஆர்.சி.சக்தி. பெண்களின் பார்வையை, அவர்களது மனதை, அவர்களது உள்ளக் கிடக்கையைத் தனது படைப்புகளில் முழுமையாக வெளிப்படுத்தியவர். சமரசம் செய்துகொள்ளாத நேர்மையான படைப்பாளி அவர். தனது கதாபாத்திரத்தை மிகையாக வெளிப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவரது மறைவை ஈடு செய்யமுடியாத இந்த நேரத்தில் நான் அவரது படங்களின் கதாநாயகி என்பதைப் பெருமையுடன் எண்ணிப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறேன்" என்றார்.

மறைந்த ஆர்.சி.சக்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

 

டால்பினுக்கு முத்தம்... குளியல் வீடியோ வலியை மறக்க ஐரோப்பிய நாடுகளில் ஹன்சிகா சுற்றுலா!

தனது குளியல் வீடியோ வெளியானதில் ஏகத்துக்கும் அப்செட் ஆன ஹன்சிகா, ஷூட்டிங்குக்கு கொஞ்ச நாள் பிரேக் விட்டார் அல்லவா..

இப்போதைக்கு இந்தியாவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் போயுள்ள ஹன்சிகா, குளியல் வீடியோ நினைப்பே வராத அளவுக்கு பல இடங்களையும் சுற்றிப் பார்த்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான ஹன்சிகா, ஒரு நட்சத்திர ஹோட்டலில் குளிக்கும்போது யாரோ நிர்வாணமாக படம்பிடித்துவிட்டனர்.

டால்பினுக்கு முத்தம்... குளியல் வீடியோ வலியை மறக்க ஐரோப்பிய நாடுகளில் ஹன்சிகா சுற்றுலா!

அதனை சமூக வலைத் தளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பிலும் பதிவேற்றிவிட, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில்தான் இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை ஹன்சிகா மறுக்கவுமில்லை, போலீசில் புகார் தரவும் இல்லை.

இந்த வீடியோ விவகாரத்தால் பெரிதும் விரக்தியடைந்த ஹன்சிகா, தற்காலிகமாக தனது படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் விடுமுறை எடுத்துக் கொண்டார்.

இப்போது ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள ஹன்சிகா,
ஒரு பொழுதுபோக்குப் பூங்காவில் டால்பினுக்கு முத்தம் கொடுப்பது போன்ற படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

'எட்டு மாத தொடர் ஷூட்டிங்குக்கு விடுமுறை... ஜாலியா இருக்கு. டால்பினை முத்தமிட்டது மறக்க முடியாதது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹன்சிகா நடிப்பில் வாலு, ரோமியோ ஜூலியட், புலி உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

 

ஒருவரது ஆளுமையைக் காப்பியடிப்பது மகா தவறு!- தீபிகா படுகோன்

ஒருவரது ஆளுமையை காப்பியடிப்பது மகா பெரிய தவறு என்று கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோன்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், தமிழில் ரஜினியுடன் மோஷன் கேப்சர் தொழில் நுட்பப் படமான கோச்சடையானில் நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஒருவரது ஆளுமையைக் காப்பியடிப்பது மகா தவறு!- தீபிகா படுகோன்

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், தனக்குப் பிடித்த நடிகராக ரஜினியை மட்டும் குறிப்பிட்டதோடு, அவரது அடக்கமும் எளிமையும் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து அவரிடம், ஒருவரிடமிருந்து எதை காப்பியடிக்கக் கூடாது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், 'ஒருவரது ஆளுமையை காப்பியடிப்பது எனக்குப் பிடிக்காது. அதி பெரிய தவறும் கூட', என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மனித வெடிகுண்டாக நடித்த ப்ளோராவுக்கு கொலை மிரட்டல்

தமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த ப்ளோராவுக்கு கொலை தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.

கவர்ச்சி நடிகையான ப்ளோரா, தமிழில் குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ரிலீசான சர்ச்சைக்குரிய மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் மனித வெடி குண்டாக நடித்திருந்தார் ப்ளோரா. மதங்களை விமர்சிக்கும் இந்தப் படத்தில் பெண் தீவிரவாதியைப் போல் அவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

மனித வெடிகுண்டாக நடித்த ப்ளோராவுக்கு கொலை மிரட்டல்

இந்த கேரக்டரில் ப்ளோரா நடித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மத அமைப்புகளை சேர்ந்த சிலர் இணைய தளங்களில் புளோராவை கண்டித்திருந்தனர்.

தற்போது அவருக்கு மொபைல் போனில் அழைப்புகளாகவும், குறுஞ்செய்திகளாகவும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றனவாம்.

இதனால் பயந்துபோன ப்ளோரா போலீசில் புகார் செய்துள்ளார். தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அந்த படத்தில் நடிக்கவில்லை. எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

 

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு நேற்று வளைகாப்பு நடைபெற்றது.

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தொழிலதிபர் அஸ்வினை மணந்த அவர், அதன் பிறகு ரஜினியை வைத்து கோச்சடையான் படத்தை மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கினார்.

இந்தப் படம் மூலம் இந்தியாவின் முதல் மோஷன் கேப்டரிங் 3 டி படத்தை இயக்கியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு

திரையுலகில் சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக குழந்தைப் பெறுவதை தள்ளிப் போட்டு வந்தார் சவுந்தர்யா. கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் இதனைக் குறிப்பிட்ட தந்தை ரஜினி, முதலில் குழந்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களை வளர்த்து ஆளாக்கிய பிறகு என்ன சாதனைகள் வேண்டுமானாலும் செய்யலாம் என அறிவுரை கூறினார்.

இப்போது சவுந்தர்யா தாய்மைப் பேறு அடைந்துள்ளார். அவருக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு, சவுந்தர்யாவை ஆசீர்வதித்தனர்.

 

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா- கலைப்புலி தாணு

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு விரைவில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார்.

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா- கலைப்புலி தாணு

இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு பேசுகையில், "

இவ்விழாவிற்கு விழாவிற்கு வருமாறு இளையராஜா அவர்களை அன்புடன் நான் அழைக்கும்போது, இளையராஜா அவருடைய தாய், தந்தை இடத்தில் பூஜை நடத்திக் கொண்டிருந்தார். நான் கூறியதும் உடனடியாக கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.

இப்ராகிம் ராவுத்தர் 95 சதவீத தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளார்கள் என்று கூறினார். தயாரிப்பாளர்களாக இருக்கும் 500 பேருக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அவர்களது இல்லம் தேடி செல்லும் அளவுக்கு எங்களுடைய உழைப்பு இருக்கும்.

இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் மெட்டமைத்திருக்கிறார். ஆனால், எந்த பாடலும் மற்றொரு பாடலை தொடாமல் இருக்கும். அவர் ஒரு அட்சயப் பாத்திரம், அமுத ஊற்று.

1000 படங்களைத் தொட்ட அவரது சாதனையைப் பாராட்டும் விதமாக அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் சார்பில் மிகப்பெரிய விழாவாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தியாவில் இதுபோன்ற ஒரு விழா நடத்தியிருக்க முடியாது என்கிற அளவுக்கு அது பிரம்மாண்டமாக இருக்கும்," என்றார்.