படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் ஹன்சிகா

Hansika Motwani Start Production House   

சென்னை: திரைப்பட நடிகை ஹன்சிகா எடுக்கப் போகிற புதிய அவதாரம் "தயாரிப்பாளர்"!

ஹன்சிகா இப்பொழுது 4 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. சேட்டை, வாலு, வேட்டை மன்னன் மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்கள் ஹன்சிகா வசம் !

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிற ஹன்சிகா, இந்த மூன்று மொழிகளிலும் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹன்சிகா, என்னுடைய நீண்டநாள் கனவு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது. இப்பொழுது மூன்று மொழிப் படங்களிலும் நடிப்பதால் இன்னும் வசதியாக இருக்கிறது என்கிறார்.

கொடி பறக்குற நேரத்துல பேஸ்மெண்ட்டை ஸ்டிராங்கா போட்டுக்கிறாங்களோ!

 

டீச்சர்கள் பெயரை இப்படியா கெடுப்பது.. 'ஸாரி டீச்சர்' படத்துக்கு செம டோஸ்!

Sorry Teacher Facing Wrath Teachers   

சென்னை: ஸாரி டீச்சர் என்ற பெயரில் தெலுங்கு, இந்தி, தமிழில் உருவாகியுள்ள படத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆசிரியர்கள், இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸாரி டீச்சர் என்ற பெயரில் ஸ்ரீசத்யா என்ற தெலுங்கு இயக்குநர் பலான படம் ஒன்றை எடுத்துள்ளார். இதில் ஆர்யமான், காவ்யா சிங் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இதில் டீச்சராக வருகிறாராம் காவ்யா சிங். ஆனால் படு ஆபாசமாக உடை அணிந்து அலங்கோலமாக நடித்துள்ளார் காவ்யா சிங். இதனால் ஆந்திராவில் இந்தப் படத்துக்கு ஆசிரியர்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும், சென்சார் போர்டிலும் ஆசிரியர்கள் புகார் கொடுத்துள்ளனர். இப்படத்தை தடை செய்ய வேண்டும், படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முதலில் இந்தப் படத்துக்கு ஐ லவ் யூ டீச்சர் என்று குசும்புத்தனமாக பெயர் வைத்திருந்தனர். இப்போது அதை விட மகா குறும்புத்தனமாக ஸாரி டீச்சர் என்று வைத்துள்ளனர்.

இது ஒரு ரொமான்டிக் திரில்லர் படமாம். ஆசிரியைக்கும், மாணவருக்கும் இடையே ஏற்படும் காதல் கதையாம். ஆனால் படம் முழுக்க ஆபாசத்தை வாரியிறைத்துள்ளது அதன் புகைப்படங்களைப் பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்தப் படத்தின் ஸ்டில்கள் இன்டர்நெட்டில் படு வேகமாக பரவி வருகின்றன.

ஆனால் ஆசிரியைகளை மிகவும் தரக்குறைவாக மாணவர்கள் பார்க்கும் நிலைக்கு இந்தப் படம் தள்ளி விடும், மிகவும் மோசமான முறையில் ஆசிரிய சமுதாயத்தை இயக்குநர் சித்தரித்துள்ளார். இது கேவலமான செயல் என்று ஆந்திர மாநில ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தெலுங்கு, இந்திப் பதிப்பின் பாடல்களை வெளியிட்டு விட்டநிலையில் இன்று தமிழ்ப் பதிப்பின் ஆடியோவை வெளியிடுகின்றனர் இப்படத்தின் தயாரிப்பாளர்கள்.

 

மெலடி, குத்து என வகைக்கு ஒரு பாட்டுடன் அன்பா, அழகா...!

Anba Azhaga Movie Launched

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். அன்பா அழகா சொன்னால் எந்தவித பிரச்சனையும் தீர்த்து வைக்க முடியும். நம் இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. இங்கு எத்தனையோ மதங்கள், மொழி, கலாச்சாரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் எல்லாருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு இருந்ததனால்தான் இருப்பதால்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது.

இரு மதம் சார்ந்த குடும்பத்தினர் இப்படி அன்பாக அழகாக இருக்கிறார்கள். அங்கே தோன்றிய காதலால் ஒரு பிரச்சனை முளைக்கிறது. அப்போது தீர்த்துக் கொள்கிறார்களா என்பதுதான் 'அன்பா...அழகா...' படத்தின் கதை.

ஃபுட் புரொடஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 3வது படம் இது. 'மறந்தேன் மெய் மறந்தேன்','சொல்லித் தரவா' படங்களைத் தொடர்ந்து எஸ்.சிவராமன் இயக்கும் படம்.

'மர்மதேசம்' டிவி தொடர் புகழ் இயங்குநர் நாகாவின் மகன் ஆகாஷ் பிரபு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் பைலட் பயிற்சி முடித்தவர்.

ப்ரீத்தி ஷங்கர் புதுமுக நாயகி இவர் ஒரு டென்டிஸ்ட். லாவண்யா இன்னொரு கதாநாயகி. இவர் 'பூவம்பட்டி','கலவரம்' படங்களைத் தொடர்ந்து நடிக்கும் 3வது படம்.

'இதுவரை ஓர் இளைஞனின் காதல் வெற்றிபெற 4 இளைஞர்கள் பாடுபடும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். இப்படத்தில் ஒருத்தியின் காதல் ஜெயிக்க இன்னொரு பெண் உதவி செய்வதைப் பார்க்கலாம்' என்கிறார் இயக்குநர்.

'ஒரு குடும்பத்தில் எல்லாரும் அன்பாக பற்றுதலோடு இருக்கும்போது யாரோ ஒருவர் சொல்வதை மட்டும் எல்லாருமே தட்டமாட்டார்கள். சொன்னால் கேட்பார்கள் அப்படி ஒருவன்தான் நம் நாயகன்.

இதில் இரு மதங்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க நல்லவிதமாக படத்தில் காட்டப்படும் ஒரு ப்ளாஷ் பேக் காட்சி மதங்கள் கடந்த அன்பையும் அழகையும் சொல்லும்படி இருக்கும்' என்று கூறுகிற இயக்குநர். தனக்கு வாய்த்த மதங்களாக கடந்து மனம் கவர்ந்த நண்பர்கள்தான் இப்படம் எடுக்க சிந்திக்க வைத்தவர்கள்' என்றார்.

முழுக்க முழுக்க புதுமுகங்களின் ஆதிக்கத்தில் உருவாகும்'அன்பா... அழகா...' படத்தின் ஒளிப்பதிவாளர் கவின் சுரேஷ். இசையமைபாளர் புதியவர் பெயர் அருள் முருகன். படத்தில் 5 பாடல்கள், 'வேணான்னு சொன்னடா' என்கிற ஒரு குத்துப்பாடலை சிம்பு பாடியதுடன் பாராட்டியுள்ளார். பாடல் பிடித்துப் போகவே சிம்பு பாடிக் கொடுத்துள்ளார்.

படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. பாடல்கள் மெலடி, குத்து, கிராமியம், தத்துவம் என்று வகைக்கு ஒன்று உண்டு.

 

'முறைமாமன்கள்' வர்றாங்க.. பார்க்கத் தவறாதீர்கள்!

Sun Tv Telecast Muraimaman Vaaram

செவ்வாய்க்கிழமை பாண்டியராஜன் இயக்கத்திலும், இளையராஜாவின் இசையிலும் ஹிட்டடித்த கன்னிராசி ஒளிபரப்பாகிறது. இதில் பிரபு, ரேவதி ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். காமெடிக்காகவும், கதைக்காகவும், பாடலுக்காகவும் ஓடிய படம் இது.

புதன்கிழமையன்று விஜயகாந்த், ரஞ்சிதா நடிப்பில் வெளியான பெரியமருது ஒளிபரப்பாகிறது. பாடல்களுக்காகவும், சண்டைக் காட்சிகளுக்காகவும் பேசப்பட்ட படம் இது.

வியாழக்கிழமை இரவு பிரபு, கனகா உள்ளிட்டோர் நடித்த பெரிய குடும்பம் வெளியாகிறது.

வெள்ளிக்கிழமையன்று சுந்தர்.சி, நமீதா, நதியா ஆகியோரது நடிப்பிலும், விவேக்கின் காமெடியிலும் உருவான சண்டை ஒளிபரப்பப்படுகிறது.

'முறைமாமன்'களைத் தரிசிக்க மக்களே தயாராகிக்கோங்க...!

 

ஷாருக்கானோட ஸ்மைல் இருக்கே...ம். சூப்பர்: தீபிகா படுகோனே சிலாகிப்பு

Shah Rukh S Smile Floors Deepika   

மும்பை: ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் புன்னகைக்கு ஈடு இணை ஏதுமே இல்லை என்று நடிகை தீபிகா படுகோனே புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தீபிகா, ஷாருக்கானின் புன்னகை இருக்கே.. அது வெறும் புன்னகை இல்லை.. ஒரு ஆத்ம பலம்... அப்படி ஒரு சக்தி இருக்குது. அவரோ புன்னகை மாதிரி இதுவரைக்கும் நான் எங்கும் பார்த்தது இல்லை" என்று சிலாகித்திருக்கிறார்.

இப்படி சொல்லும் தீபிகா, ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்குடன் ஜோடி போட்டவர். சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஷாருக்கின் அடுத்த படத்திலும் ஜோடி சேர இருக்கிறவர்!

அடேங்கப்பா புன்னகையிலும் ஒரு வசீகரமா?

 

நீலம் சஞ்சீவ ரெட்டி.. ஆந்திராவின் 'டான்'!!!

Sollunganne Sollunga

சென்னை: சன் டிவியின் சொல்லுங்கண்ணே சொல்லுங்க செம கலக்கு கலக்கி வருகிறது. இன்று காலை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கல்லூரிப் பிள்ளைகள் உதிர்த்த முத்துக்களைப் பார்த்தபோது உடம்பெல்லாம் புல்லரித்து செல்லரித்துப் போய் விட்டது போங்க.

இமான் அண்ணாச்சி நடத்தி வழங்கும் இந்த காமெடி களேபர கலாட்டா மற்றும் பொது அறிவு நிகழ்ச்சிக்கு மக்களிடையே செம கிரேஸ். கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள், பள்ளிச்சிறார்கள், பொதுமக்கள் என யாரையும் விடாமல் தனது கேள்விகளால் கலாய்த்து வரும் இமானிடம் இன்று சிக்கியவர்கள் சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியைச் சேர்ந்த மாணவியர்.

இமான் கேட்ட கேள்விகளுக்கு மாணவியர் அளித்த பதில்கள் இருக்கே... அடேங்கப்பா.. விக்கித்துப் போய் விட்டோம் போங்க..

இமான் கேட்ட ஒரு கேள்வி, நீலம் சஞ்சீவ ரெட்டி யார் என்பது. அதற்கு ஒவ்வொருவரும் குண்டக்க மண்டக்க பதிலளித்தனர். ஒரு மாணவி அவரை ரிசர்வ் வங்கி கவர்னர் என்றார், இன்னொருவரோ பாகிஸ்தான் ஜனாதிபதி என்று கூறி பயமுறுத்தினார்.

இன்னொருவரோ முதல் விமானி என்று கூறினார். அடுத்த மாணவி கூறியதுதான் பயங்கரமானது.. அதாவது ஆந்திராவின் டான் என்று அந்த மாணவி கூறியபோது கேள்வியைக் கேட்ட இமானே ஸ்டன் ஆகி விட்டார்.

கடைசியாக ஒரு மாணவி மிகச் சரியாக அவர் முன்னாள் ஜனாதிபதி அதுவும் 9வது ஜனாதிபதி என்று கூறி கல்லூரியின் மானத்தைக் காப்பாற்றினார்.

அதேபோல நாயை விட அதிக மோப்ப சக்தி கொண்ட விலங்கு எது என்ற கேள்விக்கு ஏகப்பட்ட பதில்கள்.. ஆனால் இன்னொரு நாய் என்று ஒரு மாணவி கூறியதுதான் செம ஹைலைட்...

முடிலயடா சாமி....!

 

சொந்தக் காசில் "சூனியம்" எடுத்த சமந்தா!

Samantha Special Pooja   

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்று முதுமொழி உள்ளது. ஆனால் காசு பணத்தை செலவிட்டு தனக்கு வைக்கப்பட்ட சூனியத்தை எடுத்துள்ளாராம் சமந்தா.

"பாணா காத்தாடி'யில் அறிமுகம் ஆகி "நான் ஈ" பட வெற்றி மூலம் மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆனவர் சமந்தா. ஆனால் திடீரென மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து அவர் விலக வேண்டிய நிலைக்கு ஆளானார்.

அதற்கு காரணம் சமந்தாவுக்கு வந்த தோல் நோய் அலர்ஜிதான்! ஆனால் தோல் நோய் அலர்ஜிக்கு கூட யாரோ சக நடிகை வைத்த பில்லி, சூனியம்தான் காரணம் என்று போட்டுக் கொடுத்திருக்கின்றனர் திரை உலக சகபாடிகள். அம்மணி ஆடிப் போய்விட்டாராம்!

மேலும், வினீத் என்ற கேரள மந்திரவாதி பற்றி சொல்லி அவரிடம் போய் பில்லி, சூனியம் எடுக்கலாம் என்று சொல்லியிருக்கின்றனர் நலம் விரும்பிகள்! இதை நம்பிய சமந்தாவும் சமர்த்தாக மந்திரவாதி வினீத்தை சந்தித்து சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறாராம்!

சூனியம் போயிருச்சா, போயிருச்சுன்னா எங்க போயிருச்சு, திரும்பக் கிரும்ப வருமா என்று தெரியவில்லை...!

 

10 ஹீரோக்களுக்கு ஒரே ஒரு வித்யா பாலன்!

Vidya Balan Pair With 10 Heroes   

மதுரை: 10 ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கப் போகிறார் வித்யா பாலன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படத்தை சுடப் போகிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கியவர்தான் வடிவுடையான். இப்போது கரணை வைத்து ஒரு புதுப் படத்தை இயக்கப் போகிறார். படத்திற்கு சொக்கநாதன் என்று பெயர்வைத்துள்ளார். இதை தமிழ், இந்தி, தெலுங்கில் எடுக்கிறாராம்.

இந்தப் படத்தில் பெரிய விசேஷம் என்னவென்றால் 10 ஹீரோக்கள் இருக்கிறார்களாம். அதேசமயம் ஹீரோயின் ஒரே ஒருவர்தான், அவர்தான் வித்யா பாலன்.

இது ஒரு அதிரடி சண்டைப் படம். ஹாலிவுட் பாணியில் படத்தை எடுக்கவிருக்கிறாராம் வடிவுடையான். இதற்காக கிராபிக்ஸ் காட்சிகளும் ஏகப்பட்டதைப் படத்தில் திணிக்கவுள்ளனர். இதை ஹாலிவுட்டில் வைத்தே சுடவும் உள்ளாராம் வடிவு.

முதலில் கரீனா கபூரைத்தான் இந்தப் படத்திற்காக பேசி வந்தார்களாம். இருப்பினும் தற்போது வித்யாவை புக் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தச் செய்தி உண்மையாக இருந்தால், வித்யா பாலன் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

'டர்ட்டி' வித்யாவை நல்ல 'வடிவாக' காட்டுங்க வடிவு...!

 

மறுபடியும் நீயும் பொம்மை... நானும் பொம்மை!

K J Jesudas Recreates Magic Neeyum Bommai Nanum Bommai

48 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் ஹிட்டடித்த நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற அட்டகாசமான பாடல் ரீமிக்ஸ் ஆகிறது. அந்தப் பாடலை பாடிய அதே கே.ஜே.ஜேசுதாஸ்தான் இப்பாடலையும் பாடியுள்ளாராம்.

மூடர் கூடம் என்ற படத்திற்காக இந்தப் பாடலை ஜேசுதாக் பாடியுள்ளார். அன்று பாடியதைப் போலவே இன்றும் இப்பாடலில் ஜீவனை வெளிப்படுத்தி அசத்தி விட்டாராம் ஜேசுதாஸ்.

1964ம் ஆண்டு வெளியான படம் பொம்மை. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்தான் இந்த நீயும் பொம்மை நானும் பொம்மை. பாடல். அந்தக் காலத்தில் இந்த அசாதாரணமான பாடல் பெரும் ஹிட்டானது.

அமானுஷ்யப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாடல் ஜேசுதாஸுக்கும் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. மேலும் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்தப் பாடல்தான் தமிழ் திரையுலகில் ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப் பாடல் என்பதாகும். எனவே இந்தப் பாடல் ஜேசுதாஸின் வாழ்க்கைப் பயணத்திலும் முக்கிய இடம் பிடித்த ஒன்று.

இப்பாடலை மீண்டும் அதன் பொலிவு மாறாமல் மூடர் கூடம் படத்தில் வைத்துள்ளனர். மீண்டும் இப்பாடலைப் பாடியபோது ஜேசுதாஸ் உணர்ச்சிவசப்பட்டுப் பாடினாராம்.

 

சொந்தக் காசில் "சூனியம்" எடுத்த சமந்தா!

Samantha Special Pooja   

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்று முதுமொழி உள்ளது. ஆனால் காசு பணத்தை செலவிட்டு தனக்கு வைக்கப்பட்ட சூனியத்தை எடுத்துள்ளாராம் சமந்தா.

"பாணா காத்தாடி'யில் அறிமுகம் ஆகி "நான் ஈ" பட வெற்றி மூலம் மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆனவர் சமந்தா. ஆனால் திடீரென மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து அவர் விலக வேண்டிய நிலைக்கு ஆளானார்.

அதற்கு காரணம் சமந்தாவுக்கு வந்த தோல் நோய் அலர்ஜிதான்! ஆனால் தோல் நோய் அலர்ஜிக்கு கூட யாரோ சக நடிகை வைத்த பில்லி, சூனியம்தான் காரணம் என்று போட்டுக் கொடுத்திருக்கின்றனர் திரை உலக சகபாடிகள். அம்மணி ஆடிப் போய்விட்டாராம்!

மேலும், வினீத் என்ற கேரள மந்திரவாதி பற்றி சொல்லி அவரிடம் போய் பில்லி, சூனியம் எடுக்கலாம் என்று சொல்லியிருக்கின்றனர் நலம் விரும்பிகள்! இதை நம்பிய சமந்தாவும் சமர்த்தாக மந்திரவாதி வினீத்தை சந்தித்து சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறாராம்!

சூனியம் போயிருச்சா, போயிருச்சுன்னா எங்க போயிருச்சு, திரும்பக் கிரும்ப வருமா என்று தெரியவில்லை...!

 

தங்கமே தங்கர்... உருக வைத்த அம்மாவின் கைபேசி!

Spl Programme On Ammavin Kaipesi Sun Tv   

சென்னை: தங்கர் பச்சனின் அம்மாவின் கைபேசி படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், அந்தப் படத்தின் அருமை எப்படி இருக்கப் போகிறது என்பதை சன் டிவியில் இன்று காலை ஒளிபரப்பான படம் குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு துளி வெட்ட வெளிச்சமாக்கி ஒரு நொடி அனைவரையும் உருக வைத்து விட்டது.

தங்கர்பச்சனின் அம்மாவின் கைபேசி படப்பிடிப்பின்போதே பலரையும் கவர்ந்திழுத்து விட்டது. படம் எப்ப வரும் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. இப்போது படம் திரைக்கு வரத் தயாராகி விட்டது. படம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சன் டிவியில் இன்று போட்டனர்.

ஹீரோ சாந்தனு, ஹீரோயின் இனியா, புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தங்கர் எப்படி ஷூட்டிங்கின்போது நடந்து கொள்வர் என்பதை நடித்துக் காட்டி கலாய்த்தனர்.

அதிலும் சாந்தனு, அப்படியே தங்கரைப் போல ஆக்ட் செய்து காட்டியபோது அத்தனை பேராலும் சிரிப்பை அடிக்க முடியவில்லை.. அப்படி ஒரு தத்ரூபம்.

இப்படி காமெடியும் களேபரமுமாககப் போய்க் கொண்டிருந்த ஷோவை, அப்படியே படு உருக்கமாக முடித்தனர்... சாந்தனுவின் அம்மாவாக நடித்த பழம்பெறும் நடிகை ரேவதிதான் அதற்குக் காரணம். படத்தில் இடம் பெறும் ஒரு வசனத்தை அவரிடம் சொல்லச் சொன்னபோது அழுதபடி அவர் பேசிய அந்த வசனத்தைப் பார்த்து நிச்சயம் பார்த்தவர்கள் கண் கலங்கியிருப்பார்கள்.

படத்தின் வீச்சும், கணமும் எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பதை இந்த ஒரு வசனம் உணர்த்தி விட்டது..சபாஷ் தங்கர்.

பல பிள்ளைகளைப் பெற்று கஷ்டப்படும் ஒவ்வொரு தாய்க்கும் இந்தப் படம் சமர்ப்பணமாக அமையும் என்று நம்பலாம் - அதேசமயம், தாயின் கண்ணீரைப் பார்த்து துடைக்காமல் வேடிக்கை பார்க்கும் பிள்ளைகளுக்கு நிச்சயம் பாடமாக அமையும்!

 

சின்னத் திரையில் இது ரொம்பப் புதுசு...!

A Novel Attempt Venthar Tv

சென்னை: அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் பிரபல டிவிகளுக்கு மத்தியில் புதிதாய்ப் பிறக்கப் போகும் வேந்தர் டிவி வித்தியாசமா ஒரு நிகழ்ச்சியை களம் இறக்கவுள்ளது.

அழுவாச்சி தொடர்கள், கள்ளக்காதல் தொடர்கள், கண்டக்க முண்டக்க வசனங்கள் நிறைந்த தொடர்கள் என்று தொடர்ந்து சளைக்காமல், சற்றும் சலிக்காமல் கொன்று குவித்து வரும் டிவிகளுக்கு மத்தியில் புதிதாய் பிறக்கப்போகும் வேந்தர் டிவி ஒரு வித்தியாசமான தொடருடன் களம் இறங்குகிறது.

முடிவல்ல ஆரம்பம் என்று இதற்குப் பெயரிட்டுள்ளனர். அதாவது ஒரு திரைப்படத்தின் முடிவில் சில காட்சிகளைப் பார்க்கும்போது, இதை வைத்தே ஒரு புதுப் படம் எடுக்கலாம் போலிருக்கே என்று நினைப்போம். அப்படிப்பட்ட படங்களை வைத்து அதன் தொடர்ச்சியாக இந்த சீரியலை உருவாக்குகின்றனராம். அதாவது ஒரு படத்தின் இறுதியில் வரும் காட்சிகளை கருவாக வைத்து இந்தத் தொடரின் எபிசோடுகள் இருக்குமாம்.

கிட்டத்தட்ட அப்படத்தின் 2ம் பாகம் போலத்தான் இதுவும். இருப்பினும் இதை சின்னத்திரையில் வித்தியாசமான முறையில் விறுவிறுப்பாக கொடுக்கப் போகிறார்கள். இதை இயக்கப் போவது சினிமா இயக்குநர் ரங்கராஜ். இவர் உதயகீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த சில்வர் ஜூப்ளி இயக்குநர்.

இந்தத் தொடரின் நாயகனாக மெட்டி ஒலி மூலம் புகழ் பெற்ற போஸ் வெங்கட் நடிக்கவுள்ளார். மெட்டி ஒலிக்குப் பிறகு சினிமாவுக்குப் போனவர். அங்கிருந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.

இந்தத் தொடருக்காக சில திரைப்படங்களை யோசித்து வைத்துள்ளனராம். அவை எது என்பதை இதுவரை ரங்கராஜ் தெரிவிக்கவில்லை.

புதிய தலைமுறை செய்தி சேனல் குழுமத்திலிருந்து பிறக்கும் சேனல்தான் இந்த வேந்தர் டிவி. சன் நியூஸுக்குக் கடும் போட்டியைக் கொடுத்து வரும் புதிய தலைமுறையைப் போல இப்போது சன் டிவிக்கு கிடுக்கிப் பிடி போடுவதற்காக வேந்தரை களம் இறக்குகிறார்களாம்.

 

மூத்த திரைப்பட இயக்குநர் ஏ. ஜெகநாதன் காலமானார்

Director Jaganathan Passes Away

சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய ஏ. ஜெகநாதன் உடல்நலக் குறைவால் திருப்பூரில் காலமானார்.

எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரது படங்களை இயக்கிய பெருமைக்குரிய ஏ. ஜெகநாதன் திருப்பூரில் உள்ள தமது மகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு திரும்பிய ஜெகநாதனுக்கு தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இன்று காலை திருப்பூரில் மகள் வீட்டிலேயே காலமானார்.

ஜெகன்னாதனின் பிரபல படங்களில் மூன்றுமுகம், தங்கமகன், காதல் பரிசு உள்ளிட்டவை சில. தமிழக அரசின் திரைப்பட விருதுக் குழு தலைவராகவும் இருந்தவர் ஜெகநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.