12/28/2010 11:37:08 AM
இதன்பிறகு பேசிய வனிதா, 'விஜயகுமார் பொய் சொல்கிறார். மகனை வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என்று கத்தினார். இந்த தகராறு அதிகாலை 4 மணி வரை நடந்ததால் போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், டில்லியில் உள்ள ஆகாஷிடம் போனில் பேசினர். அவர், 'நான்தான் ஹரியை விஜயகுமாரிடம் கொடுத்தேன்' என்றார். இதையும் வனிதா நம்பவில்லை. இதன்பிறகு ஆகாஷ் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபேக்ஸ் செய்தார். இதையும் வனிதா நம்பவில்லை. இதனால் ஹரியை போலீசாரே வைத்துக்கொண்டு மகேஸ்வரியிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டனர்.
இதுசம்பந்தமாக விஜயகுமாரும் வனிதாவும் தனித்தனியாக விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தனர். 'முதல் கணவரும் விஜயகுமாரும் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர். கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க சதி நடக்கிறது. இதுபற்றி போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுக்கப்போகிறேன்'என வனிதா கூறினார். உதவி கமிஷனர் குப்புசாமி கூறுகையில், ''விஜயகுமார், வனிதா இருவரும் ஒருவர் மீது ஒருவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இரண்டு புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளோம். முதல் கணவர் ஆகாஷ் கூறியபடி பாட்டி மகேஸ்வரியை வரவழைத்து ஹரியை ஒப்படைத்துவிட்டோம். ஒப்படைக்கும்போது கோர்ட் உத்தரவை நீங்கள் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்'' என்றார்.