1009 வாரங்களாக ஓடிய ஷாரூக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே இன்று நிறுத்தப்பட்டது!

இந்தி நடிகர் ஷாருக்கான்- கஜோல் நடித்து வெளியான 'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' படம் 1009 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.

இப்படம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

ஆதித்ய சோப்ரா இயக்கத்தில் நடிகர் ஷாருகான் -கஜோல் நடிப்பில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த படம் தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே.

1009 வாரங்களாக ஓடிய ஷாரூக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே இன்று நிறுத்தப்பட்டது!

இனிமையான காதல் கதை, அருமையான பாடல்கள் என்பதால் ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து குவிந்தது.

மும்பையில் உள்ள 'மராத்தா மந்திர்' தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் இன்றுடன் 1009 வாரங்கள் (அதாவது சுமார் 20 ஆண்டுகள்) தொடர்ந்து ஓடியுள்ளது.

இந்த படம் இன்றுடன் மராத்தா மந்திர் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 1000 வாரம் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

உலக சினிமாவில் இது புதிய சாதனையாகும்.

வழக்கமாக வெளியாகும் புதிய படங்கள் 3 காட்சிகள் ஓட வேண்டி இருப்பதால் தியேட்டர் நிர்வாகமும், யாஷ் சோப்ரா பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை நிறுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.

இன்று காலை 9.15 காட்சியுடன் இந்த படத்தின் சாதனை முடிவுக்கு வந்தது. கடைசி நாளான இன்று இந்த படத்தை 210 பேர் பார்த்துள்ளனர்.

 

இன்று பிரமாண்டமாய் வெளியாகிறது சண்டமாருதம்... அதிக அரங்குகளில் வெளியாகும் சரத்குமார் படம்!

அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் சரத்குமார் படம் என்ற பெருமையுடன் வெளியாகிறது இன்று பிரமாண்டமாய் வெளியாகிறது சண்டமாருதம்... அதிக அரங்குகளில் வெளியாகும் சரத்குமார் படம்!  

வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக வெற்றிபெற்று, பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த சரத்குமார், மீண்டும் ஹீரோவாக.. அதுவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் இந்த சண்டமாருதம். ஒன்றில் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

இன்று பிரமாண்டமாய் வெளியாகிறது சண்டமாருதம்... அதிக அரங்குகளில் வெளியாகும் சரத்குமார் படம்!

சரத்குமாரின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக அதிக அரங்குகளில் வெளியாகும் படம் இந்த சண்டமாருதம்தான்.

தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்திருந்தனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 40 அரங்குகள் வரை இந்தப் படம் வெளியாகிறது.

இன்று பிரமாண்டமாய் வெளியாகிறது சண்டமாருதம்... அதிக அரங்குகளில் வெளியாகும் சரத்குமார் படம்!

மகாராஷ்ட்ராவில் மும்பை, புனே போன்ற நகரங்களில் நூறு அரங்குகள் வரை இந்தப் படம் வெளியாகிறது.

 

தலை வாழை இலையில் சூடான பிரியாணி.... விருந்து வைத்த "தளபதி"!

சென்னை: 'புலி' படப்பிடிப்பில் 700 தொழிலாளர்களுக்கு நடிகர் விஜய் பிரியாணி விருந்து அளித்தார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நாயகியாக சுருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஸ்ரீதேவியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து இதன் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்துகின்றனர். விஜய், சுருதிஹாசனின் பாடல் காட்சி ஒன்று அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

தலை வாழை இலையில் சூடான பிரியாணி....  விருந்து வைத்த

பிரியாணி விருந்து...

இந்நிலையில், படப்பிடிப்பு முடிவடைவதை தொடர்ந்து படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து கொடுக்க விஜய் முடிவு செய்தார். அதன்படி, நேற்று இந்த தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

தன் கையாலேயே...

விஜய் படக்குழுவினர் 700 பேருக்கும் தனது கைப்பட பிரியாணி பரிமாறி சாப்பிட வைத்தார். லைட்மேன்கள், துணை நடிகர், நடிகைகள், ஸ்டண்ட் நடிகர்கள், டிரைவர்கள், உதவி இயக்குனர்கள் உள்பட பலரும் விருந்து சாப்பிட்டார்கள்.

போட்டோவும்...

பின்னர் அவர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக் கொண்டார். ஏற்கனவே கத்தி படப்பிடிப்பின் இறுதியிலும் விஜய் இதே போல் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார்.

ஸ்ரீதேவி தனியே...

முன்னதாக கடந்த வாரம் நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் தனது வீட்டில் விருந்தளித்தார் விஜய். புலி படத்தில் விஜய் மூன்று வித கெட்டப்புகளில் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

 

இனி கொஞ்ச காலம் சமந்தா ட்வீட் செய்ய மாட்டார்!

சென்னை: நடிகை சமந்தா ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

நடிகை சமந்தா தற்போது தெலுங்கை விட தமிழ் படங்களில் தான் பிசியாக உள்ளார். கை நிறைய படங்கள் வைத்துள்ளார். ஆனால் அண்மையில் தான் அவருக்கும் சித்தார்த்துக்கும் இடையேயான காதல் முறிந்தது. இந்நிலையில் சமந்தா ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

ட்விட்டரில் இருந்து சமந்தா திடீர் விலகல்: என்னாச்சு?

இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

ட்விட்டரில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க உள்ளேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மனதில் படுவதையும், தான் செய்யும் செயல்கள் பற்றியும் அவ்வப்போது ட்வீட் செய்யும் பழக்கம் உள்ளவர் சமந்தா. நல்ல விஷயங்களை ஆதரித்தும், கண்டிக்கத்தக்கதை கடுமையாக விமர்சித்தும் ட்வீட் செய்து வந்தார். காதல் முறிந்தபோது கூட சித்தார்த்தை பற்றி நல்லவிதமாகவே ட்வீட் செய்தார்.

இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டரில் இருந்து விலகியுள்ளது அவரின் உடல் நிலை எதுவும் பாதிக்கப்பட்டுள்ளதோ என்று ரசிகர்களை குழம்ப வைத்துள்ளது.

 

சினிமாக்காரன் சாலை-9: '…அதுவரை, திருட்டு விசிடியில தாராளமா படம் பாருங்க, தப்பில்ல!’

- முத்துராமலிங்கன்

Muthuramalingan

வருடம் 2025. நாள்.பிப்ரவரி 20.

‘லிங்கா' நஷ்ட ஈடு வட்டியுடன் எங்களுக்கு வந்து சேரும் வரை ஒரு வேளைவிட்டு ஒரு வேளை பிச்சை எடுத்து சாப்பிடுவோம்'.

'லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்டு லதா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாருக்கு தனது ‘சொந்த' லெட்டர் பேடில் அறிக்கை.

‘ரஜினி கையெழுத்துடன் அவரது லெட்டர் பேடை பிரிண்ட் செய்த சிவகாசி அச்சக அதிபருக்கு சிங்காரவேலன் பாராட்டு'.

'லிங்கா' தொடர்பாக நடக்கிற குழப்பங்களைப் பார்த்தால் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தும் இப்படி செய்திகள் வந்தாலும் ஆச்சரியமில்லை.

வருடத்துக்கு பத்து முறைகளாவது ‘நஷ்டமாச்சி' பிச்சை போடுங்க என்ற பஞ்சாயத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடக்கிறது.

சினிமாக்காரன் சாலை-9: '…அதுவரை, திருட்டு விசிடியில தாராளமா படம் பாருங்க, தப்பில்ல!’

நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கும் போதெல்லாம் ஒரு அநீதியை அநியாயமாக, அல்லது வசதியாக மறைத்து விட்டு தெருவில் இறங்கி பிச்சைக்காரர்கள் வேடம் கூட அணிய தயாராக இருந்து சண்டை போடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் திருட்டு விசிடி ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசுகையிலும் தங்களுக்கென்று வருகிறபோது கமிஷனர் ஆபிஸ் வரை சென்று புகார் கொடுத்து போஸ் கொடுக்கையிலும், சினிமாவுக்கு எதிராக நீண்டநெடுங்காலமாக நடந்து வரும் ஒரு பெரும் குற்றத்தை, வழிப்பறியை விட கீழத்தனமாக நடக்கும் ஒரு மோசடியை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

அது தியேட்டர் உரிமையாளர்கள் நீண்ட நெடுங்காலமாக நடத்தும் முதல் தரமான சினிமா அழிப்பு வேலைகள்!!

என்னைக் கேட்டால் இவர்களே சினிமாவின் முதல் எதிரிகள் என்பேன்.

சினிமாக்காரன் சாலை-9: '…அதுவரை, திருட்டு விசிடியில தாராளமா படம் பாருங்க, தப்பில்ல!’

அரசு விதித்திருக்கும் டிக்கெட் தொகை என்னவென்று எந்த தியேட்டர் உரிமையாளருக்காவது தெரியுமா என்றால் சத்தியமாக தெரியாது. அது அவர்களுக்குத் தேவையுமில்லை. ஏனெனில் அதை அவர்கள் அமல்படுத்தப் போவதில்லை.

டிக்கெட் ரேட்டில் தொடங்கி, கேண்டீன் ஸ்நாக்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் விலைகள், பார்க்கிங் என்று இவர்கள் அடிக்கிற கொள்ளை, ரோட்டில் செல்லும் பெண்களின் கழுத்தில் சங்கிலி அறுக்கிறார்களே அந்தக் கொள்ளைக்கு எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாதது.

அரசு விதிப்படி, சகல வசதிகளும் கொண்ட மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களே டிக்கட் விலையை அதிகபட்சமாக 120 ஆக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு புதுப்பட ரிலீஸ் அன்று முன்னணி நடிகர்களின் பட 10 ரூபாய், 35 ரூபாய், 50 ரூபாய் டிக்கட்டுகளை ‘சி' செண்டர் தியேட்டர்களில் கூட 200 ரூபாய்க்கு கம்மியாக வாங்க முடியாது (லிங்காவுக்கு முதல் வாரம் முழுக்க சி சென்டர் அரங்குகளில் கூட சராசரி டிக்கெட் விலை ரூ 250!). அப்படி 250 ரூபாய் கொடுத்து உள்ளே போனால் ஒழுங்கான டாய்லெட் வசதி இருக்காது. பார்க்கிங் சார்ஜ் 30 ரூபாயாக இருக்கும். உங்கள் வாகனம் காணாமல் போனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல' என்ற போர்டு கண்டிப்பாக இருக்கும். கேன்டீன்களில் பொருட்களின் விலையோ வாங்கிச் சாப்பிடும் வயிறு பற்றியெரியும் பெருங் கொள்ளையாக இருக்கும்.

சினிமாக்காரன் சாலை-9: '…அதுவரை, திருட்டு விசிடியில தாராளமா படம் பாருங்க, தப்பில்ல!’

தற்போது 'நான்ஸ்டாப் நான்சென்சாக' பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் ‘லிங்கா'வை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை தியேட்டர்களில் அதுவும் ரசிகர் மன்றங்களுக்கே டிக்கட் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது! .அடுத்து 500, 300,200 என்று குறைந்ததே தவிர ஒரிஜினல் விலைக்கு எங்கும் டிக்கட்டுகள் விற்கப்பட்டதாக தெரியவில்லை.

உண்மை இப்படியிருக்க, 40 லட்சம் பேர்தான் படம் பார்த்தார்கள் என்கிறவர்கள், ஒரே ஒரு டிக்கட் கூட ஆயிரம் ரூபாய்க்கு விற்கவில்லை என்று போலிக் கண்ணீர் வடிப்பது ஏன்?. விநியோகஸ்தருக்கும் போகாத, தியேட்டர் உரிமையாளருக்கும் போகாத அந்த எக்ஸ்ட்ரா தொகையை கவுண்டரில் டிக்கட் விற்றவர் எடுத்துக்கொண்டு போய் ரஜினியின் கல்யாண மண்டபத்தில் ரகசியமாக வைத்துவிட்டு வந்துவிட்டாரா?

'சாஃப்ட்வேர் துறையினர் காலாட்டிக் கொண்டே சினிமா விமரிசனம் எழுதுகிறார்கள்' என்று நான் கடந்த வாரம் எழுதியிருந்தபோது, ‘முதல்ல தியேட்டர்ல நடக்கிற அநியாயத்தை எழுதிட்டு அப்புறம் எங்ககிட்ட வாங்க பாஸ்' என்று பலர் அறச் சீற்றம் கொண்டு பொங்கியிருந்தார்கள். உண்மையிலேயே நியாயமான சீற்றம்தான் அது. இன்றைக்கு தியேட்டர்களுக்கு அவர்கள் வரவில்லை என்றால் சினிமாவின் கதி அதோகதிதான்.

சினிமாக்காரன் சாலை-9: '…அதுவரை, திருட்டு விசிடியில தாராளமா படம் பாருங்க, தப்பில்ல!’

இன்று ஒரு மல்டி ப்ளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க மூன்று பேர் சென்றாலே ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு இல்லாமல் செல்லமுடியாது. தியேட்டர்களுக்குள் நாம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு எவ்வளவோ காலமாகி விட்டது. கேண்டீனில் தண்ணீர் பாட்டிலைக் கூட 40 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்துவிட்டார்கள் எனும்போது மற்ற பொருட்களின் விலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

பார்க்கிங் கொடுமைதான் உச்ச பட்சம். மணிக்கு 20 ரூபாய் (சில மால்களில் இது 60 ரூபாய்) வார இறுதி நாட்கள் என்றால் இருமடங்கு. ஸோ நீங்கள் ‘என்னை அறிந்தால்' மாதிரி ஒரு மூணு மணி நேரப்படத்தை ஒரு மல்டி ப்ளக்ஸில் சனி, ஞாயிறில் பார்க்கச் சென்றீர்களானால் ஒரு டூ வீலருக்கு பார்க்கிங் கட்டணத்துக்கு மட்டும் 150 ரூபாய் வரை மொய் அழ வேண்டும். இந்தக் காசில் 30 ரூபாய் வீதம் ஐந்து 5.1 டிவிடி வாங்கிவிட முடியும் எனும்போது, ஒரு நடுத்தர வருமானமுள்ள, மானமுள்ள மனிதன் என்ன முடிவை எடுப்பான்?

மாநகராட்சிகளில் துவங்கி ஊராட்சிகள் வரை எங்காவது அரசு நியமித்த கட்டணங்கள் அமலில் உள்ளனவா என்றால், இல்லை என்று தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் யார் தலையில் வேண்டுமானாலும் அடித்துச் சத்தியம் செய்யலாம்.

அரசுக்கு சினிமா மூலம் வரவேண்டிய தொகையை ஈட்டித்தரவேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகளும், தியேட்டரில் அதிக டிக்கெட் விற்றால் நடவடிக்கை எடுக்கவேண்டிய பறக்கும் படையும் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பறந்து பறந்து பார்ப்பார்களே தவிர தியேட்டர்களில் நடக்கும் கொள்ளைகளை சற்றும் கண்டுகொள்வதேயில்லை.

இந்த மோசடிகள் போதாதென்று படம்பார்க்கும் ஆடியன்ஸ்களின் எண்ணிக்கையில் பாதியைக்கூட தயாரிப்பாளர்க்கு சொல்வதில்லை. 100 பேர் படம் பார்த்தால் அவர்கள் கணக்கில் அது நாற்பதாகவோ, நாற்பத்தைந்தாகவோதான் இருக்கும்.. புதிய தயாரிப்பாளர்களுக்கு இவற்றில் பாதி துயரங்கள் தெரியாமல் இருக்கலாம்.

மூத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்குமே இந்த தியேட்டர் தில்லுமுல்லுகள் குறித்து சகலமும் தெரியும். இதை விட்டுவிட்டு, ‘சின்னப் படங்களுக்கு ஆட்களே வருவதில்லை. தியேட்டர்களில் படம் பார்க்காமல் திருட்டு விசிடியில் படம் பார்க்கிறார்கள்' என்று புலம்பி ஒப்பாரி வைத்து என்ன பிரயோசனம்?. இதனாலேயே இன்று பல படங்களின் நிலை ‘வெள்ளிக்கிழமை விழும் பொணம் போலத்தான்.

என்னைக் கேட்டால் இவ்வளவு ஆபாசமான நடவடிக்கைகளிலிருந்து தியேட்டர்க்காரர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளமாட்டார்கள் என்றால்... அதுவரை திருட்டு விசியிலேயே படம் பாருங்கள் என்றுதான் சொல்லுவேன்.

ஏனெனில் திருட்டு விசிடிகாரர்களை திருடர்கள் என்று முத்திரை குத்தி, அவர்களை ஒழிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறோம், அது விரைவில் சாத்தியப்பட்டுவிடும்.ஆனால் தியேட்டர்க்காரர்களோ நல்லவர்கள் போல் வேடம் பூண்டு சினிமாவைக் காயடிக்கிறார்கள்.

திருட்டு விசிடிக்காரர்கள் எதிரிகள். தியேட்டர்க்காரர்கள் நம்பிக்கை துரோகிகள். எப்போதுமே எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்!!

குறிப்பு: நியாயமாக டிக்கெட் விற்று, சரியாக டிசிஆர் கணக்கு காட்டும் தியேட்டர், மல்டிப்ளெக்ஸ்காரர்கள் இந்தக் கட்டுரை குறித்து வருந்தத் தேவையில்லை!

muthuramalingam30@gmail.com

 

மீண்டும் இணையும் முருகாற்றுப்படை கூட்டணி

கடந்த ஆண்டு முருகானந்தம் இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளிவந்த 'முருகாற்றுப்படை' படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இயக்குனர் முருகானந்தம் மற்றும் நடிகர் சரவணன் இணைவுள்ளனர்.

மீண்டும் இணையும் முருகாற்றுப்படை கூட்டணி

தனது முதல் படத்தில் நகர வாழ்வியலைக் காண்பித்த இயக்குனர், இப்போது எதார்த்தமான கிராமத்து மண்வாசனையைப் படம்பிடிக்கவுள்ளார்.

கருணல் ஃப்லிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

மீண்டும் இணையும் முருகாற்றுப்படை கூட்டணி

பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.