எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்... விநியோகஸ்தர் மீது வனிதா போலீசில் புகார்

சென்னை: எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்' படம் தொடர்பாக விநியோகஸ்தர் வெங்கடேஷ்ராஜா மீது நடிகை வனிதா விஜயகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Vanitha Vijayakumar files a complaint against distributor

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று மதியம் வந்திருந்தார் வனிதா விஜயகுமார் . அங்கு கமிஷனரிடம் திரைப்பட வினி யோகஸ்தரான வெங்கடேஷ் ராஜா என்பவர் மீது அவர் புகார் மனு அளித்தார்.

Vanitha Vijayakumar files a complaint against distributor

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் வனிதா. அப்போது அவர் கூறியதாவது:-

வனிதா பிலிம் புரொடக்சன் என்ற பெயரில் நான் திரைப்படம் தயாரித்து வருகிறேன்.

‘‘எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்'' என்ற பெயரில் நான் தயாரித்த படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வைபிரவன் மூவிஸ் நிறுவனத்தினர் வினியோகஸ்தரான வெங்கடேஷ்ராஜாவுக்கு வழங்கினேன். இது தொடர்பாக அவருடன் முறைப்படி நான் ஒப்பந்தமும் போட்டு உள்ளேன். அதில் 80 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வதாக கூறப்பட்டு உள்ளது.

Vanitha Vijayakumar files a complaint against distributor

ஆனால், ஒப்பந்தப்படி வெங்கடேஷ்ராஜா அந்த படத்தை வெளியிடவில்லை. குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் படத்தை வெளியிட்டு உள்ளார். இது திட்டமிட்ட மோசடி. படத்தயாரிப்பாளர் என்ற முறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். அவர்கள் இது தொடர்பாக போலீசில் புகார் செய்யுமாறு அறிவுறுத்தினர். அதன்படியே இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளேன்.

படத்துக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு தயாரிப்பாளரே பொறுப்பாகி வருகிறார். எனவே, என்னிடம் ஒப்பந்தம் போட்டு ஏமாற்றிய வெங்கடேஷ்ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

 

கபிலன் வைரமுத்து முதல் முறையாக வசனம் எழுதும் 'மீன்'!

கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் படம் "மீன்". இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதுகிறார். இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு புதுவிதமான 'ஃபர்ஸ்ட் லுக்' கோடு இம்மாத இறுதியில் படத்தின் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

Kabilan Vairamuthu turns dialogue writer

சில மாதங்களுக்கு முன் வெளியான கபிலன் வைரமுத்துவின் 'மெய்நிகரி' நாவலைப் படித்திருக்கிறார் இயக்குநர் ஹரிபாஸ்கர். அது பிடித்துப் போகவே கபிலன் வைரமுத்துவை வசனம் எழுதக் கேட்டிருக்கிறார்.

கதை தொடர்பான விவாதத்திற்கு பின் கபிலன் வைரமுத்து ஒப்புக்கொண்டார். உதயம் NH4 முதல் அநேகன் படத்தின் தலைப்புப் பாடல் வரை பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதிய கபிலன் வைரமுத்து தற்போது பேய்கள் ஜாக்கிரதை, களம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் இயக்குநர் கலாபிரபு இயக்கி கெளதம் கார்த்திக் நடிக்கும் இந்திரஜித் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கபிலன்வைரமுத்து எழுதுவது குறிப்பிடத்தக்கது.

 

செல்வராகவனுக்கு ஹீரோயின் கிடைச்சாச்சு... த்ரிஷாவுக்கு பதில் கேதரைன் தெரசா!

செல்வராகவன் படத்திலிருந்து திடீரென த்ரிஷா விலகிக் கொண்டார் அல்லவா... இப்போது வேக வேகமாக மாற்று ஹீரோயினைத் தேடிப் பிடித்துவிட்டார் செல்வா.

மெட்ராஜ் படத்தில் நடித்த கேதரைன் தெரசாதான் அவர்.

Catherine Tresa replaces Trisha

சிம்புவும், த்ரிஷாவும் ஏற்கெனவே ‘அலை', ‘விண்ணைத்தாண்டி வருவாயா' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால் செல்வராகவன் படக்குழுவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்தார் த்ரிஷா. போட்டோ ஷூட்டிலெல்லாம் கலந்து கொண்ட அவர், இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். வருண் மணியன் இந்த படத்தைத் தயாரிக்க திட்டமிட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

த்ரிஷா விலகிவிட்டதால், அவருக்கு பதிலாக வேறொரு நாயகியை நடிக்க வைக்க படக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கடைசியாக, ‘மெட்ராஸ்' பட நாயகி கேத்ரைன் தெரசாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்தில் டாப்சியும் இன்னொரு நடிகையாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றே இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

துள்ளுவதோ இளமை தொடங்கி, புதுப்பேட்டை வரை கலக்கிய கூட்டணியான செல்வராகவன், யுவன், அரவிந்த் மூவரும் மீண்டும் இணையும் படம் இதுதான்.

 

முடிந்தது உப்பு கருவாடு... டேஸ்ட் பார்க்க தயாராகுங்க!

மொழி, அபியும் நானும், பயணம், கவுரவம் போன்ற கவனிக்கத்தக்க படங்கள் தந்த ராதாமோகன் அடுத்து இயக்கும் படம் உப்பு கருவாடு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ், நைட் ஷோ சினிமா நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப் படத்தில், கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். முழுமையான பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள இப்படம் சினிமா வட்டாரத்தில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக அமைந்துள்ளது.

‘Uppu Karuvadu’ shoot  wrapped up

படம் குறித்து தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் கூறுகையில், "தேர்ந்த பல படங்களை தந்து வரும் இயக்குனர் ராதா மோகன், மீண்டும் ஒரு அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது திறமையான உழைப்பு படத்தை குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளனர்.

‘உப்பு கருவாடு' குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாய் நடந்து வருகின்றன. விரைவில் ரசிகர்கள் சுவைக்க தயாரிகிறது ‘உப்பு கருவாடு', என்றார்.

 

நயன்தாராவுக்குக் 'குரல் கொடுக்கும்' ஸ்ருதி ஹாஸன்!

முதல் முறையாக நயன்தாராவுக்குக் குரல் கொடுக்கிறார் ஸ்ருதிஹாஸன்... வேறொன்றுமில்லை... அவருக்காக ஒரு பாடலுக்குக் குரல் கொடுத்துள்ளாராம்.

எப்போதோ ஆரம்பித்து, இன்னும் இழுத்துக் கொண்டிருக்கும் சிம்பு - நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படத்துக்காக, இந்தப் பாடலைப் பாடியுள்ளாராம்.

Shruthi Hassan crooned for Nayan in Ithu Namma Aalu

இசையமைத்துள்ளவர் சிம்புவின் தம்பி குறளரசன்.

ஸ்ருதிஹாஸன் ஏற்கெனவே இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் தமிழில் பாடியுள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாஸனுடன் இணைந்து அந்த டூயட்டைப் பாடியுள்ளவர் குறளரசனேதான்.

சிம்பு, குறளரசனின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்தப் படத்தை விட்டுவிட்டு, சூர்யாவின் ஹைக்கூ என்று படத்தை இயக்கியே முடித்துவிட்டார் பாண்டிராஜ்.

இப்போது பிணக்குகள் தீர்ந்து, மீண்டும் படத்தை ரிலீஸ் பண்ணும் வேலைகளில் மும்முரமாகியுள்ளார்களாம்.

 

அட, அதுக்குள்ள 25 படங்கள் முடிச்சுட்டாரா கருணாகரன்!

இப்போதுதான் நடிக்க வந்த மாதிரி இருக்கிறது.. ஆனால் அதற்குள் 25 படங்களை முடித்துவிட்டாராம் கருணாகரன். இவற்றில் ரஜினிகாந்தின் லிங்கா படமும் ஒன்று!

25 படங்கள் முடித்ததையொட்டி முன்னணி காமெடியனாகிவிட்ட கருணாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது முதல் படமான கலகலப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. முதல் படத்திலேயே பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சுந்தர்.சி சார் என்னை நடிக்க வைத்தார். என்னை நடிக்க வைத்தது மட்டும் அல்லாமல் திரைக்கதை எழுதவும் வைத்தவர். அவரது ஆசிகளுடன் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.

Karunakaran completes 25 movies in just 3 years

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நலன் குமாரசாமி தனிப்பட்ட கதாபாத்திரத்திற்க்கு என்னை மனதில் வைத்தே திரைக்கதை எழுதினர். எனக்கும் ரசிகர்களுக்கும் மன நிறைவான கதாபாத்திரங்கள் அவை. என்னை செதுக்கிய இவர்களுக்கும், எனது சினிமா பாதையில் ஊன்றுகோலாக எனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் இத்தருணத்தில மனதார நான் நன்றி தெரிவிக்கிறேன்.

லிங்கா படத்தில் எனக்கு நடிக்க வாய்பளித்த கே.எஸ். ரவிகுமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் எதிர்பாராத மகிழ்ச்சியான வாய்ப்பு இது.

Karunakaran completes 25 movies in just 3 years

இந்த மூன்று வருடங்களில் நான் நடித்த இருபது படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனித்தன்மையுடனும் வித்தியாசமாகவும் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இதற்கு முதன்மை காரணமான அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எனது 25வது படத்தை நெருங்கும் இந்த நேரத்தில் எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளித்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நிறைகளை பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் என்னை வளர்த்ததற்கு நன்றி.

படங்களில் எனது நடிப்பை பாராட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜெ. விடுதலை.... ரோட்டோர கோவிலில் தேங்காய் உடைத்த கவர்ச்சி நடிகை பபிதா!

சென்னை: முன்னால் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதை போயஸ் கார்டனில் உள்ள கோவில் முன்பு தேங்காய் உடைத்துக் கொண்டாடினார் மாஜி கவர்ச்சி நடிகை பபிதா.

தமிழ்நாடு முழுவதும் நேற்றில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Actress Babitha made a special prayer for Jaya's Verdict

தொண்டர்கள் மட்டும் அல்லாது அமைச்சர்கள் தரப்பில் இருந்தும் வேண்டுதல்கள் கோவில்களில் நிறைவேறிய வண்ணம் உள்ளன.

பபிதா

இதில் முன்னாள் கவர்ச்சி நடிகையும் அதிமுக தலைமைக் கழக பேச்சாளருமான நடிகை பபிதா நேற்று போயஸ் கார்டன் வந்து அங்கு உள்ள கோவிலில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினார் .

ஜெயலலிதா விடுதலை :

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னால் முதல்வர் ஜெயலலிதா நேற்று விடுதலை செய்யப் பட்டார். நேற்று காலையில் தீர்ப்பு வந்ததில் இருந்து போயஸ் கார்டன் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் கூடி நின்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிறைவேறிய வேண்டுதல்கள்:

தீர்ப்பு சாதகமாக வெளிவந்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய வண்ணம் உள்ளனர்.

கவர்ச்சி நடிகை பபிதா:

தமிழ்ப் பட உலகின் முன்னால் கவர்ச்சி நடிகை பபிதா இவர் அதிமுக தலைமைக் கழக பேச்சாளாராக இருந்து வருகிறார். ஜெயலலிதா நேற்று விடுதலை செய்யப் பட்ட செய்தியைக் கேள்விப் பட்ட இவர் நேற்று போயஸ் கார்டன் வந்தார்.

வேண்டுதலை நிறைவேற்றிய பபிதா :

போயஸ் கார்டன் ரோட்டோரத்தில் உள்ள கோவிலில் தேங்காயை உடைத்து ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதற்காக தனது நேர்த்திக் கடனை நேற்று செலுத்தினார்.

பபிதா உடைத்த தேங்காய்கள் சாலையோரமாக சிதறிக் கிடந்தன. இவற்றை பின்னர் அதே கோணிப் பையில் அள்ளிச் சென்று விட்டனர்.

 

வருண் மணியன் தொடர்பான படமா... வேணவே வேணாம்!- த்ரிஷா அதிரடி

வருண் மணியன் தொடர்பான எந்தப் படமாக இருந்தாலும் அதில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது நடிகை த்ரிஷா.

சமீபத்தில் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் நிச்சயமாகி, அதே வேகத்தில் முறிந்தும்போனது.

அவர் தயாரிப்பில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான படத்திலிருந்து விலகிக் கொண்டார் த்ரிஷா.

Trisha strongly rejects movies in connection with Varun Maniyan

அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அந்தப் படத்துக்கு வருண் மணியன்தான் நிதியுதவி செய்கிறார் என்பது தெரிந்ததும் அந்தப் படத்திலிருந்தும் திடீரென விலகுவதாக அறிவித்தார்.

ஷூட்டிங் போகும் நேரத்தில் இப்படி அறிவித்துவிட்டாரே என அதிர்ந்த செல்வராகவன், அடுத்த ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்.

இப்போதெல்லாம் புதிய படம் கமிட்டாகும்போதே, அந்தப் படத்தில் வருண் மணியனுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை என்பதை உறுதி செய்த பிறகே ஒப்புக் கொள்கிறார் என்கிறார்கள்.

 

குற்றம் கடிதல தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பனுக்கு கலைப்புலி தாணு பாராட்டு!

சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தின் தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பனுக்கு தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரவழைத்து, அதன் தலைவர் கலைப்புலி தாணு பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பன் கூறுகையில், "எங்களது அறிமுக படைப்பான ‘குற்றம் கடிதல்' சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றமைக்கு தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் கலைப்புலி எஸ் தாணு வாழ்த்தினார்.

Thaanu wishes Kutram Kadithal producer

பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் வெளீயீட்டு தேதிகளை நெறிமுறைப் படுத்தப்படும் என்ற தயாரிப்பாளர் கவுன்சிலின் அறிவிப்பிற்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இந்த அறிவிப்பு சிறிய படங்களை லாபகரமாக வெளியிடுவதற்கு எங்களை போன்ற சின்ன தயாரிப்பாளர்களுக்கும் பெரிதும் உதவும். அனைத்து சிறு தயாரிப்பாளர்கள் சார்பாகவும் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

முழு திரையுலகமே எங்களது முதல் படைப்பான ‘குற்றம் கடிதல்' திரைப்படத்திற்கு அளித்த ஆதரவும், வாழ்த்துக்களும் எங்களை மென்மேலும் நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஊக்கம் அளிக்கிறது," என்றார்.

 

நானும் ஹீரோயினாவேன்… சொல்வது லட்சுமிகரம்!

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் புடவை கட்டி தொகுப்பாளினியாய் வலம் வந்த அந்த லட்சுமிகரமானவருக்கு திடீரென்று நட்சத்திர சேனலில் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஒரே சேனலில் 2 சீரியல்களில் நடித்த அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. விளம்பர வாய்ப்பும் வரத் தொடங்கவே மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போனார் லட்சுமிகரம். அதிர்ஷ்டக்காற்று வீச பெரிய திரை வாய்ப்பும் சிக்கியது.

பெரியதிரை அழைப்பை மறுக்காமல் ஒத்துக்கொண்டார். இரண்டு படங்களிலும் தங்கை கதாபாத்திரம்தான் என்றாலும் சரி என்று சொல்ல காரணம் ஒருநாள் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தானாம். நம்பிக்கை அதானே எல்லாம்.

அடுத்த பாடகி ரெடி...

ஒரே நேரத்தில் 2 படங்கள் ரிலீஸ் ஆகி லக்கி ப்ரைஸ் அடித்த நித்யமான நாயகி சூரிய தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தபோது மணியான இயக்குநரை விட பேய் பட இயக்குநரைத்தான் அதிகம் புகழ்ந்தார். அந்த படத்தில் நடித்ததை விட பேய் படத்தில் நடித்ததே தனக்கு சவலாக இருந்தது என்று சொன்னார்.

மணியான இயக்குநர் படத்துக்கு லைவ் டப்பிங் என்பதால், வசனம் பேச முடியாமல் சிரமப்பட்டாராம். பிறகு இயக்குநரின் மனைவிதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து உதவி செய்தார் என்றும் கூறிய

நித்யமான நடிகை தனது, அழகான குரல் வளம் இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்க அசத்தலாய் ஒரு பாடலைப் பாடினார். நடிப்போடு பாடவும் தெரிகிறதே என்று இதைக் கேட்டு ரசிகர்கள் பாராட்டியிருக்கிறார்களாம். இசையமைப்பாளர்களே தயாரா? மல்லுவுட் பாடகி நடிகைகள் வரிசையில் இன்னொரு பாடகி இணையப்போகிறார் என்று கோலிவுட் பட்சி கூவிக்கொண்டு செல்கிறது.

 

உதவி இயக்குநர், கேமராமேன் குளத்தில் மூழ்கி பலி: ஆந்திராவுக்குப் போன இடத்தில் சோகம்!

சென்னை: ஆந்திராவிற்கு சுற்றுலா சென்ற தமிழ் சினிமா இயக்குநர், கேமராமேன் ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள சதாசிவ கோனேவில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. நீர்வீழ்ச்சி, இயற்கை எழிலுடன் உள்ள இந்த வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சினிமா குழுவினர் படப்பிடிப்பு நடத்துவார்கள்.

Cinema AD and cameraman drowned in pond

சென்னையைச் சேர்ந்த சினிமா குழு நண்பர்கள் 6 பேர் சதாசிவ கோனேவுக்கு சுற்றுலா சென்றனர். இவர்களில் போரூரைச் சேர்ந்த காமிராமேன் பிரேம், உதவி இயக்குனர் விக்னேஷ் (24), தீபன், மதன், நவீன், சுகுமார் ஆகியோருடன் சதாசிவ கேனேவுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள விடுதியில் அறை எடுத்து 2 நாள் தங்கினார்கள்.

திங்கட்கிழமையன்று அவர்கள் சென்னை திரும்ப முடிவு செய்து புறப்பட்டனர். வழியில் உள்ள குளத்தில் இறங்கி குளித்தனர். இதில் நீச்சல் தெரியாத பிரேம், விக்னேஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

வடமாலைபேட்டை காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு தண்ணீரில் மூழ்கிய பிரேம், விக்னேஷ் இருவரின் சடலத்தை மீட்டனர். அவர்களின் உடல் உடனடியாக புத்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா உதவி இயக்குநரும், கேமராமேனும் உயிரிழந்த சம்பவம், திரைப்பட துறை வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.